Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=4]மக்கள் கொடுத்த ஆணையையும் முஸ்லிம் மக்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்த விடயத்தினையும் முஸ்லிம் காங்கிரஸ் உதறித் தள்ளியிருக்கிறது. இதன்மூலம் முஸ்லிம் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கூறினார். முஸ்லிம் காங்கிரஸ் இன்று எடுத்த முடிவு தொடர்பாக தமிழ்மிரருக்கு பிரத்தியேகமாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்படி கூறினார். தொடர்ந்தும் அவர் கூறுகையில்... கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும், மக்கள் வழங்கிய ஆணையினையும் முஸ்லிம் காங்கிரஸ் உதாசீனம் செய்து சுயநலமாக செயற்பட்டுள்ளது. தேர்தல் முடிவடைந்த பின்னரும் முஸ்லிம் மக்கள் பல விடயங்களை வலியுறுத்தி வந்தனர். அந்த மக்களின் ஆணைக்கு …

  2. [size=4]இந்திய இராணுவ ரகசியங்கள் அடங்கிய சீ.டி.யுடன் (இறு[/size]வட்டு) இலங்கைக்கு தப்பிவர முயன்றதாகக் கூறப்படும் நபரொருவர் திருச்சி விமான நிலையத்தில் வைத்து இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். [size=4]தஞ்சாவூர்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளிநாட்டுப் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வரும் மேற்படி நபரிடம் இந்திய இராணுவ ரகசியங்கள் அடங்கிய சீ.டி இருப்பதாக க்யூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்தே அவர் விமான நிலையத்தில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளுடன் தனக்கு தொடர்பிருப்பதாகவும் இலங்கையில் உள்ள பாகிஸ்தா…

  3. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் (IUSF) சஞ்சீவ பண்டார கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். http://links.lankasri.com/virakesari

  4. "செய்தி"யில் கணப்படும் இந்த உதயனின் கருத்தை படித்த பின்னர் தீர்மானித்துக்கொள்ளுங்கள். தமிழர்களின் மாகாணத்தில் சிங்கள கூட்டமைப்பின் விருப்பத்தின்படி ஆட்சியொன்று அமைகின்றது: [Wednesday, 2012-09-19 11:16:31] இலங்கையின் கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களுடைய மாகாணம் என்றே கணிக்கப்பட்டு வந்துள்ளது. அங்கு தமிழர்களும் முஸ்லிம்களும் கலந்த வாழும் கிராமங்களும் பெருமளவில் உண்டு. சில இடங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் "பிட்டும் தேங்காய்ப் பூவும்" போல வாழ்கின்றார்கள் என்றும் இலக்கிய நயம் கொண்ட பார்வையில் நோக்கப்படுகின்றார்கள். திருகோணமலை தொடக்கம் அம்பாறை வரை உள்ள வளி மண்டலத்தில் உள்ள காற்றில் தமிழின் அளவே எப்போதும் அலை …

  5. [size=4] [/size] [size=4]கமநல மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார். அவரது சகோதரரான மாகாண சபை உறுப்பினர் எஸ்.எம்.ரஞ்சிதிற்கு வட மத்திய மாகாண முதலமைச்சர் பதவியினை வழங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தமையினாலும், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் அமைச்சுப் பதவிகளை ஒரே காலப்பகுதியில் வகிக்க முடியாது என்ற காரணத்தினாலுமே இவர் இம்முடிவை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகின்றது.[/size] [size=4]http://www.virakesari.lk/article/local.php?vid=722[/size]

  6. [size=4]வன்னியில் இறுதிப் போர் நடைபெற்ற பகுதிகளான முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம் பகுதிகளுக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர் ஐ.நா. குழுவினர். [/size] [size=4] [/size] [size=4]கிளிநொச்சி மாவட்டத்தின் மீளக்குடியமர்வு, கண்ணி வெடி அகற்றல் நடவடிக்கைகள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை குறித்தும் கிளிநொச்சி மாவட்ட இராணுவத்தளபதி முன்னிலையில் அரச அதிபரிடம் அவர்கள் கேட்டறிந்து கொண்டனர்.[/size] [size=4] [/size] [size=4]ஒருவாரகாலம் பயணம் மேற்கொண்டு கொழும்பு வந்துள்ள ஐ.நா. உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக், மத்திய கிழக்கு வட அமெரிக்க பிரிவுக்குப் பொறுப்பான ஹன்னி மெஹாலி மற்றும் சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகத் தெரிவுக்கான மனித உரிமைகள் அதிகாரி ஒஸ்கார் சோலர்ஸ் அடங்கி…

  7. செப் 19, 2012 பெரும்பான்மை இனத்தவர்களால் வல்வெட்டித்துறை ஆதி கோயிலடிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு ஹெரவப் பொத்தானை வரை கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவ்வாறான கடத்தல்கள் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் அ.அனந்தராஜ் தெரிவித்தார். வல்வெட்டித்துறை ஆதி கோயிலடிப் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜா ஜனார்த்தன் என்ற இளைஞன் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டுள்ளார். இவர் வேலை செய்யும் காப்புறுதி நிறுவனத்தை விட்டு பணத்துடன் வெளியே வந்தபோது ஊர்தி ஒன்றில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். ஊர்தி வைத்து அவருக்கு குடிப்பதற்கு ஒரு வகைப் பா…

  8. [size=4][/size] [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலண்டனுக்கு விஜயங்களை மேற்கொள்வதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்டு விடாது. மாறாக அரசாங்கத்துடனும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனுமே பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். அதற்காக அழைப்பு விடுக்கின்றோம் ௭ன சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்றையதினம் சபையில் தெரிவித்தார்.[/size] [size=4]வட மாகாண தேர்தல் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியினால் பாராளுமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.[/size] [size=4]அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அங்கு மேலும் கூறுகையில்..[/size] …

  9. [size=4]பெண்களையும், குழந்தைகளையும் தற்போது தமது நாட்டுக்கள் குடியமர்த்த முடியாது என்று நௌரு வெளிவிவகார அமைச்சர் கீரன் கெகே தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்த சிறிலங்கா அகதிகளை நௌருவில் தற்காலிகமாக குடியெற்றி வருகிறது அவுஸ்ரேலிய அரசாங்கம். இரண்டு கட்டங்களாக சிறிலங்காவைச் சேர்ந்த 66 அகதிகள் கிறிஸ்மஸ்தீவில் இருந்து சுமார் 7000 கி.மீ தொலைவில் உள்ள நௌரு தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நௌருவில் சுமார் 1500 அகதிகளை குடியேற்ற அவுஸ்ரேலியா திட்டமிட்டுள்ளது. ஆனால் அங்கு அகதிகளுக்கான எந்த அடிப்படை வசதிகளும் இதுவரை செய்யப்படவில்லை. தற்காலிக கூடாரங்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நௌரு, பெண்கள…

  10. கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 11 மணியளவில் யாழில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இன்று காலை யாழ். பஸ் நிலையம் முன்பாக ஒன்று கூடிய ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள் பொலிஸாரும், இராணுவப் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டிருந்த நிலையில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சற்று நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடந்தல் மற்றும் கொலைகளை உடனே நிறுத்து, ஜனநாயகத்தை பாதுகாக்க முன்வருவோம், மக்கள் உரிமையினை பாதுகாக்க சிங்கள தமிழ் முஸ்லீம் ஒன்றுமையினை கட்டியொழுப்புவோம், லலித் குகன் எங்கே? ,லலித் குகனை உடனே விடுதலை செய்!,வடபுல மக்களின் பாதுகாப்பை உறுதி செய், போன்ற கோசங்கள…

  11. இந்திய அரசு எங்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று அகில இந்தியத் தமிழ் இலக்கிய அமைப்புகள் மாநாட்டில் பங்கேற்ற இலங்கை அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுடில்லியில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் அகில இந்தியத் தமிழ் அமைப்புகள் நடத்திய மாநாட்டில், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம், காண்டியபுரம் அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கை அகதிகள் ஐக்கிய முன்னணி அமைப்பில் இருந்து அதன் தலைவர் எஸ்.ஆர். அந்தோனி, செயலர் பாலகிருஷ்ணன், பொருளாளர் பாஸ்கர் என்கிற யேசுதாஸ்,…

  12. யாழ். குடாநாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக மரக்கறிப் பயிர்ச் செய்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். குடாநாட்டில் கடந்த சில வாரங்களாகக் கடுமையான வெப்பநிலை நீடித்து வருகிறது. இந்த வெப்பநிலை காரணமாகத் தண்ணீருக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகள் அனைத்தும் வற்றி வறண்டு போயுள்ளன. மக்கள் குடி தண்ணீரைப் பெறுவதற்குக் கூட முடியாமல் அலைந்து திரிகின்றனர். குடிதண்ணீர் இல்லாமையால் கால் நடைகளும் ஆங்காங்கே உயிரிழக்கும் சம்பவங்களும் இடம் பெறுகின்றன. இந்த வறட்சியினால் விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குடா நாட்டில் தற்போது மேற் கொள்ளப்பட்டுள்ள மரக்கறிப் பயிர்ச் செய்கை அந்த…

  13. முஸ்லிம் காங்கிரஸின் முடிவு குறித்து உயர்பீட உறுப்பினர்கள் பலர் அதிருப்தி கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க முன்வந்தமை தொடர்பில் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலர் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். தன்னிச்சையாக செயற்படும் தலைமைத்துவத்தினால் கட்சியின் ௭திர்காலமும், முஸ்லிம் சமூக ௭திர்பார்ப்புகளும் கேள்விக்குறியாகிவிட்டுள்ளன ௭ன்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில், அரசியல் தீர்மானங்களை மேற்கொள்கையில் அண்மைக்காலமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் முரண்பட்ட செயற்பாடுகளே ௭ழுந்துள்ளன. குறிப்பாக கிழக்கு மாகாண சபைத்…

  14. [size=4]காஷ்மீரில் இருக்கும் இந்தியாவின் முகமூடிகளைக் கிழிக்கிறீர்கள். இலங்கையில் ராஜபக்சேவின் முகமூடியைக் கிழிக்க நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? அங்கு நடந்த இனப்படுகொலை பற்றி உங்கள் கருத்து என்ன?ஆரம்பத்திலேயே இதைப் பற்றி எழுதிய வெகுசிலரில் நானும் ஒருத்தி என நினைக்கிறேன்.[/size] [size=4]போரின்போது, அது நடந்துகொண்டிருந்தபோது நான் இதைப் பற்றி எழுதியிருக்கிறேன். ஆனால் நீங்கள் உங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி:நான் என்ன சொன்னேன் என்பதல்ல, நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதுதான்.[/size] [size=4]தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் என்ன சொன்னார்கள்? அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாதத்துடன் செயல்பட்டார்கள்? இலங்கை அகதிகளின் முகாம்கள் பற்றி இங்கிருக்கும் மக்கள் என்ன செ…

  15. [size=4]அணுஉலைக்கெதிரான போராட்டம் தொடர்பான இலங்கைத்தமிழ் அரசியலாளர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மதப்பிரதிநிதிகள் கூட்டாகவிடுத்துள்ள கூட்டறிக்கை.[/size] [size=4]கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கெதிராக கடந்த பல வருடங்களாகவே எதிர்ப்புணர்வுகள் இருந்து வரும் சூழலில், அணுமின் நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருவதைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடமாகவே இடிந்தகரையில் தன்னெழுச்சியாக உருவான அறவழிப் போராட்டங்கள் தற்பொழுது உச்சநிலையை அடைந்துள்ளன.[/size] [size=4]அணு மின்நிலையத்திற்கெதிரான எதிர்ப்புணர்வு இடிந்தகரையையும் அதனையண்டிய பிரதேசங்களையும் கடந்து பெரும்பாலான தமிழகத் மக்களிடமிருப்பதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. தமது வாழ்விடங்கள…

  16. சிங்களப் பயங்கரவாததின் தமிழின அழிப்பிற்கெதிராகக் குரலெழுப்பியதற்காகக் கொலை அச்சுருத்தலுக்கு உள்ளாகி புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் மூன்று ஊடகவியலாளர்களின் அனுபவப் பகிர்வை ஒரு திரைப்படமாக ஆவணப்படுத்திய நோர்வேயின் பெண் இயக்குனர் பியெட்டே ஆனெஸ்ட்டின் உருவாக்கம் நேற்று மாலை சிட்னி பரமட்டா நதியோரச் சினிமா கொட்டகையில் திரையிடப்பட்டது. மாலை ஆறுமணிக்கு அரங்கு முழுமைபெற ஆரம்பமாகிய அன்றைய நிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ் பெண்களின் பரத நாட்டிய நிகழ்வொன்றும் இடம்பெற்றது. அதன் பின்னர் எல்லோரும் எதிர்பார்த்து வந்த "மெளனிக்கப்பட்ட குரல்கள்" திரையேறியது. ஏ 9 நெடுஞ்சாலையில் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கும் பியெட்டேயிற்கும் அவரது உள்ளூர் தொடர்பாடல் உதவியாளருக்கும் இடையிலான சம்பாஷணையுடன் வ…

  17. பிரதேச ஊடகவியலாளர்கள் ஏன் அனுமதிக்கபடவில்லை? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சிக்கு நேற்று (18) விஜயம் மேற்கொண்ட ஜக்கிய நாடுகள் சபையின் மனி உரிமைகள் ஆனைணகத்தின் பிரதிநிதிகள் காலை ஒனபது மணிக்கு கிளிநொச்சி மாவட்ட அரச செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்லரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்ற நிலைமைகள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார் உண்மை நிலைமைகளை கண்டறியும் வகையில் மேற்கொள்ளப்படும் அவர்களின் பயணத்தின் போது வெறுமனே அரசாங்க அதிகாரிகளை…

  18. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (19) இந்திய பயணமாகவுள்ளார். இந்த விஜயத்தின் போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்த எண்ணியுள்ள ஜனாதிபதி, இந்திய ஜனாதிபத பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து இரு தரப்பு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் நாளைய தினம் (20) நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார். அதேவேளை எதிர்வரும் 21 ஆம் திகதி சாஞ்சி சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளார். இலங்கை ஜனாதிபதியின் இந்திய வருகையை …

  19. திருகோணமலையில் இந்தியாவின் விசேட பொருளாதார வலயம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. இந்த விசேட பொருளாதார வலயத்தில் இந்தியத் தயாரிப்பு வாகனங்களின் உதிரிப்பாகங்கள் மற்றும் வேறு ரக உதிரிப்பாகங்களும் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ஆனந்த சர்மா அண்மையில் இலங்கை வந்திருந்த போது தெரிவித்திருந்தஆலோசனையின் பேரிலேயே இந்தப் பொருளாதார வலயம் திருமலையில் உருவாக்கப்படவுள்ளது. இந்த விசேட பொருளாதார வலயத்தில் இந்தியாவின் தனியார் நிறுவனங்களும் பங்கேற்பதுடன் இங்கு கைத்தொழில் பயிற்சி நிலையம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. http://thaaitamil.com/?p=32671

  20. (படங்கள் உள்ளே) அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ள திரைப்படம் ஒன்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கரைப்பற்று, அம்பாறை, மற்றும் அட்டாளச்சேனை ஆகிய பகுதிகளில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதற்கான அழைப்பினை அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் விடுத்திருந்தது. இன் நடவடிக்கையால் வங்கிகள், பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், அரசஅலுவலகங்களும் செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் "அமெரிக்கா ஒழிக, நபியை இழிவுபடுத்தும் வீடியோவை உடனடியாக தடைசெய், இஸ்லாத்துக்கு எதிரான வன்முறைகளை நிறுத்து" போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பாவியை அ…

    • 3 replies
    • 1.2k views
  21. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பாளரும் அக்கட்சியின் சார்பில் கிழக்கு மாகாண சபை வேட்பாளராகக் களமிறங்கி தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்டவருமான ருத்திரமலர் ஞானபாஸ்கரனுக்கு கிழக்கு மாகாண சபையில் போனஸ் ஆசனம் ஒன்றினை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்தையர் நிராகரித்துள்ளார். தனது சகோதரியான ருத்திரமலர் ஞானபாஸ்கரனுக்கு கிழக்கு மாகாண சபையில் போனஸ் ஆசனம் ஒன்றினை வழங்குவதன் மூலம் இந்த மாகாணத்தின் தமிழர் பிரதேசங்களுக்கு அதிகளவில் சேவையாற்ற முடியும் என பிரதி மீள்குடியேற்ற அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் விடுத்திருந்த வேண்டுகோளே இவ்வாறு நிராகரிக்கபட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. http://thaaitamil.com/?p=32680

  22. அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவினால் தாக்குதலுக்கு இலக்காகி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்த மேஜரான சந்தன பிரதீப் சுசேன என்பவரை இராணுவ சேவையிலிருந்து உடனடியாக நீக்கி விடும்படி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோதபாய ராஜபக்ஷ இராணுவத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. அத்துடன் தாக்குதலுக்கு இலக்கான இந்த மேஜர், நாலக்க மீதான வழக்கை வாபஸ் பெற முயற்சிப்பதற்கும் அவர் மீது பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதே காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் மேர்வினின் மகன் நாலகவும் ஏனைய நபரொருவரும் தன்னைத் தாக்கவில்லை என குறித்த இராணுவ மேஜர் தற்போது தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது…

  23. ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி கட்சியின் மணல் கொள்ளை தற்போது தீவுப்பகுதிகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்த முயற்சிப்பவர்களுக்கு கொலை மிரட்டலும் விடப்படுகின்றது. எவராலும் கட்டுப்படுத்த முடியாத அளவு வடமராச்சி குடத்தனை மற்றும் பெற்பதிப் பகுதிகளில் ஈ.பி.டி.பி கட்சியினரால் மணல் அகழ்ந்தொடுக்கப்பட்டு வருகின்றது. அப்பகுதியில் அளவுக்கு அதிகமாக மண் அகழப்படுவதால் கடல் நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்து. இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் தீவுப் பகுதியில் குறிப்பாக மண்கும்பான் பகுதியில் தற்போது ஈ.பி.டி.பியினரால் மணல் அகழப்படுகின்றது. அரசியல் அதிகாரத்தினைப் பயன்படுத்தி மணல் அகழ்விற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. எனினும் அனுமதி பெறப்பட்ட பகுதிகளுக்கு அதிகமான நிலப்பரப்பில் …

  24. கிழக்கு மாகாண சபையின் புதிய முதல்வராக நஜீப் ஏ .மஜீத் சத்தியப் பிரமாணம் செய்யும் நிகழ்வு நேற்று (19) மகிந்தரின் தலைமையில் நடைபெற்ற போது அந்த நிகழ்வில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன், தேசிய காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் ஆகியோர் பங்கேற்கவில்லை. தங்களது இரு கட்சிகள் சார்பிலும் சிபார்சு செய்யப்பட்ட அமீர் அலியை கிழக்கின் முதல்வராக நியமிக்குமாறு விடுத்த வேண்டுகோளை மஹிந்தையர் நிராகரித்ததன் காரணமாகவே இந்தப் பதிவியேற்பு நிகழ்வை இவர்கள் புறக்கணித்தனர் என இணையத்துக்குக் கிடைத்த நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரையோ அல்லது தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரையோ முதலமைச்சராக நியமிப்பத…

    • 2 replies
    • 1.3k views
  25. [size=5]நான் தோற்கடிக்கப்பட்டமை திட்டமிடப்பட்ட செயல்: நிஜாமுதீன் [/size] [size=4]நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் எனக்கான வாக்கெண்ணும் முகவர்களைத் திட்டமிட்டுப் புறக்கணித்தமையால் திட்டமிடப்பட்டே எனது வாக்குகள் குறைக்கப்பட்டு வெற்றிவாய்ப்பு இல்லாமல் போயிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது என்று கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரும் முன்னாள் பிரதி அமைச்ருமான எஸ்.நிஜாமுதீன் குற்றம் சாட்டியுள்ளார். இந்தவிடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: நான் முறையாக வாக்கெண்ணும் முகவர்களை நியமிப்பதற்காக விண்ணப்பித்தும் இறுதி வேளையில் அவர்களுக்கான அனுமதி வழங்கப்படவில்லை. இதனூடாக எனக்குப் பெரும் அந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.