Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'தமிழர்களை பொருளாதார ரீதியாக நசுக்கி அவர்களை சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றுகின்ற வேலைத்திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது' என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டினார். இன்று ஞாயிற்றிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'தமிழ் மக்களை பொறுத்தவரையில் அவர்களின் பொருளாதாரம் கடற்தொழிலையும் கமத்தொழிலையும் அடிப்படையாகக் கொண்டது. தமிழ் மக்களின் பொருளாதார வழிமுறைகளை நசுக்கி அவர்களின் இருப்பை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் அரசு தற்போது இறங்கியுள்ளது. குறிப்பாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட முல்லைத்தீவு மற்றும் வடமரா…

    • 0 replies
    • 472 views
  2. சிறிலங்காவுக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள் புத்தர் சிலைகளுக்கு முன்னால் ஒளிப்படம் எடுக்க வேண்டாம்: - பிரித்தானியா அறிவுரை [sunday, 2012-08-26 10:52:20] சிறிலங்கா செல்லும் தமது சுற்றுலா பயணிகளுக்கு பிரித்தானியா வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை ஏனைய நாடுகளும் பின்பற்றலாம் என்று சிறிலங்கா அரசாங்கம் அச்சம் வெளியிட்டுள்ளது. இது நாட்டுக்கு பாதிப்பை தரும் என்று சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய நாட்டின உண்மையான நிலவரம் குறித்து உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கும் முயற்சிகளில் ஈடுபடப் போவதாக சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் தற்போது பாதுகாப்பான சூழல் காணப்படுவதால், ச…

    • 4 replies
    • 643 views
  3. [size=4]உதகையில் இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ள எதிர்ப்பைப் பரிசீலிப்போம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் இலங்கை இராணுவ அதிகாரிகள் இரண்டு பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.[/size] [size=4]டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ரஞ்சன் மத்தாயிடம் இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "வெலிங்கடன் இராணுவ பயிற்சி மையத்தில் இலங்கை இராணுவ அதிகாரிகள் இரண்டு பேருக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என்ற ஜெயலலிதாவின் கோரிக…

  4. கனகராயன்குளத்தில் சிறிலங்கா இராணுவத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய பௌத்த வழிபாட்டு இடம் கடந்த திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் 56வது டிவிசன் தளபதி பிரிகேடியர் ரணவக்கவின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள இந்த பௌத்த வழிபாட்டு இடத்தில் புத்தர்சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளதுடன் அதன்பின்பறமாக போதி மரம் (அரசு) ஒன்றும் நாட்டப்பட்டுள்ளது. சிறி சம்புத்தரஜ விகாரை என்ற பெயரில் இங்கு பாரிய பௌத்த விகாரை ஒன்றைக் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்முதற்கட்டமாகவே புத்தர் சிலையுடன் கூடிய வழிபாட்டு அறை மற்றும் போதி மரத்துக்கு அமைக்கப்பட்ட வேலி ஆகியன கடந்த திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டன. வடமத்திய மாகாண பிரதி சங்க நாயக்கர் வண எட்டம்பகஸ்கட கல்யாண திஸ…

  5. சீன அரசாங்கம் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவ தங்குமிடங்களைஅமைக்கத் தீர்மானித்துள்ளது. இராணுவ நலன்புரித் திட்டமொன்றை சீனா ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்புஅமைச்சு அறிவித்துள்ளது. இந்த நல்ன்புரி; திட்டத்திற்காக 100 மில்லியன் அமெரிக்கடொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உட்கட்டுமான வசதிகள் மற்றும் தங்குமிட வசதிகள் ஆகியவற்றைஏற்படுத்திக் கொடுப்பதற்காக நஇ;தப் பணம் செலவிடப்பட உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. மன்னார், பலாலி, ஆணையிறவு, பூணகரி, தல்லாடி,காரைநகர் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இராணுவ முகாம்களின் உட்கட்டுமான மற்றும் தங்குமிடவசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. சீன பாதுகாப்பு அமைச்சர் லியான் குவான்கில் எதிர்வரும் 29ம் திகதிஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு …

  6. வடக்கு கிழக்கு இணைந்த பிராந்தியம் தமிழர்களின் தாயகபூமி, அதனை யாரும் இல்லை என மறுக்க முடியாது: - ஸ்ரீகாந்தா [sunday, 2012-08-26 12:31:09] வடக்கு கிழக்கு இணைந்த பிராந்தியம் தமிழர்களின் தாயகபூமி, அதனை யாரும் இல்லை என மறுக்க முடியாது. வடக்கு கிழக்கை பிரித்து சிங்கள மயப்படுத்த நினைக்கும் பேரினவாத சக்திகளுக்கும் அவர்களுக்கு பின்னால் திரிபவர்களுக்கும் தமிழ் மக்கள் தங்கள் வாக்குசீட்டை ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவர்களில் ஒருவருமான சட்டத்தரணி ஸ்ரீகாந்தா தெரிவித்தார். நேற்று மட்டக்களப்பு தேற்றாத்தீவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை வேட்பாளர் கோவிந்தன் கரணாகரம் …

  7. முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிலங்கா படையினரால் கசிப்பு உற்பத்தி அமோகமான முறையில் நடைபெற்று வருகின்றாதா அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றது. இரு குழுக்காளாக செய்ற்பட்டு உற்பத்தி செய்து வரும் இக் கசிப்பு உற்பத்தியில் இரு குழுக்களுக்கும் இடையில் விற்பனை ரீதியில் முரண்பாடுகளும் அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற முரண்பாடு அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைஅடுத்து மக்கள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில்இரண்டு கசிப்பு உற்பத்தி நிலையங்களும் முற்றுகையிடப்பட்டுள்ளது.இருப்பினும்அங்கு கூடிய மக்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் நிலமையினை அமைதிக்குக் கொண்டுவர முடியாது போனதில் சம்பவ இடத்திற்கு சிறிலங்கா காவல் துறையின…

  8. நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் எம்.ஆர்.சி. என்ற ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இங்கு கடந்த மாதம் நடைபெற்ற கருத்தரங்கில் இலங்கை ராணுவத்தை சேர்ந்த சிலர் கலந்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இலங்கை ராணுவத்தினர் வெலிங்டனிலிருந்து வெளியேறினார்கள். இந்த நிலையில் கடந்த ஜுலை மாதம் இலங்கை ராணுவத்தின் விமானப்படை வீரர்கள் சென்னை தாம்பரத்தில் பயிற்சி பெற்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர்களும் அங்கிருந்து கிளம்பி பெங்களூர் சென்றனர். இதற்கிடையில் இலங்கை ராணுவ அதிகாரிகள் 2 பேருக்கு வெலிங்டன் ராணுவ மையத்தில் கடந்த 3 மாதமாக பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த தகவல் 25.08.2012 அன்றுதான் வெளியே தெரிந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும…

    • 0 replies
    • 363 views
  9. முள்ளிவாய்க்கால் மண் குரூரமான யுத்தத்தின் சாட்சியாக, பூலோக நரகத்தின் நிதர்சனமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. எங்கு பார்த்தாலும் தூர்ந்துபோன பதுங்குகுழிகளும், சிந்திக்கிடக்கும் பொருட்களும், துருப்பிடித்த வாகனங்களும், எச்சங்களாய் வீடுகளும், புதர் மண்டிய வீதிகளும், தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டுமானால் பார்வைப் பொருளாகலாம். தமிழருக்கு அவ்வாறிருக்க முடியாது. மனங்களில் வெறுமையினையும், எங்கள் இனம் கண்ட அவலத்தையும் மட்டுமே அந்தக் காட்சிகள் எமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன. கடந்த 30 வருடங்கள் இடம்பெற்ற விடுதலைப் போராட்டம் 2009ம் ஆண்டு இந்த மண்ணில்தான் மௌனித்துப்போனதாகச் சொல்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பரந்தன் – முல்லைத்தீவு வீதி திறக்கப்பட்டது…

  10. வடக்கு மாகாண சபைத் தேர்தல்களை ஏன் நடத்த முடியாது? � இலங்கை அரசிடம் ஜி ரி எப் கேள்வி: [sunday, 2012-08-26 11:24:38] வடக்கு மாகாண சபைத் தேர்தல்களை ஏன் நடத்த முடியாது என க்ளோபல்தமிழ் போரம் அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. யுத்தத்தின் பின்னர் வடக்கு மக்கள் மூன்று தேர்தல்களில் வாக்களித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கில் ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும்உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள், தொழிற்சங்கப் போராட்டங்கள்உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் க்ளோபல் தமிழ் போராம் கருத்து வெளியிட்டுள்ளது. நாட்டின் அனைத்து பல்கலைக்கழ…

    • 0 replies
    • 436 views
  11. [size=5]கருணாநிதியின் டெசோ மாநாட்டின் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும்[/size] யதீந்திரா 17 வருடங்களுக்கு பின்னர் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி டெசோ மாநாட்டை மீண்டும் கூட்டியிருக்கின்றார். 1985 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மேற்படி டெசோ - தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு (Tamil Eelam Supporters Organization (TESO) தமிழ் ஈழத்திற்கான வலுவான ஒரேயொரு குரலாக இருந்த விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் மீண்டும் அரங்கிற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. 85இல் இது உருவாக்கப்பட்டபோது கருணாநிதியுடன் வீரமணியும் நெடுமாறனும் உடனிருந்தனர். இலங்கையின் வடகிழக்கில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கென ஒரு சுதந்திர தமிழீழத்தை உருவாக்குவதே அப்போதைய டெசோவ…

  12. ஹோட்டலில் விபச்சார விடுதி வைத்து நடத்திய, முன்னாள் மிஸ் ஸ்ரீலங்கா அழகி கைது! மொறாட்டுவா: கடந்த 1995ம் ஆண்டு மிஸ் ஸ்ரீலங்கா அழகி பட்டம் வென்ற சுமுந்திரா, தனது ஹோட்டலில் ரகசியமாக விபச்சார விடுதி நடத்தி வந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த 1995ம் ஆண்டு மிஸ் ஸ்ரீலங்கா அழகி பட்டம் வென்றவர் சுமுந்திரா லியானாகே. இவர் தற்போது சினிமா மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். இலங்கையில் உள்ள மொறாட்டுவா பகுதியில் சொகுசு ஹோட்டல் ஒன்றை சுமுந்திரா நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் விபச்சார தொழில் நடைபெறுவதாக கின்ந்தார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த விபச்சார கும்பலை கையும், களவுமாக கைது செய்ய போலீசார் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றனர். …

  13. வடக்கு,கிழக்கில் சிறிலங்கா இராணுவத்தினருக்கான வீடமைப்புக்கு சீனா 100 மில்லியன் டொலர் நிதியுதவியை அறிவித்துள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும், இராணுவ நலன்புரித் திட்டங்களுக்கே இந்த நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் நிதியுதவியுடன் வடக்கு,கிழக்கில் உள்ள சிறிலங்கா படைமுகாம்களில் வதிவிட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவுள்ளன. அதேவேளை கொழும்பிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரியை நவீனமயப்படுத்துவதற்கு சீனா 1.5 மில்லியன் டொலரை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. சீனப்பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங்லி அடுத்த புதன்கிழமை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக, சிறிலங்கா இராணுவத்துக்கான இந்த நிதியுதவிகளை சீனா அறிவித்துள்ளது. வடக்கு கி…

    • 0 replies
    • 409 views
  14. மிகவும் மனவருத்தத்துடன் இம் மடலை எழுதுகிறோம் ஐயா. கிழக்கு மாகாணசபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களைப்பற்றி நீங்கள் அறிவீர்களா? இவர்களில் எத்தனைபேர் தமிழ் அரசுக்கட்சி 14வது மகாநாட்டுக்கு வந்தவர்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டமைப்பினை தோற்கடிப்பதற்கு உள்ளிருந்தே செயற்படுகின்ற சதியை நீங்கள் அறிவீர்களா? குறிப்பாக தமிழரசிக் கட்சி வேட்பாளர்களை தெரிவுசெய்தது யார்? இவர்கள் 10 பேரில் எத்தனைபேர் உத்தமர்கள்? பிரசன்னாவும் தமிழரசிக்கட்சி வேட்பாளர் என்றுதான் பிரச்சாரம் செய்கிறார். அதனால்தான் 10 பேர் என்கின்றோம். களுதாவளை குணம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிலையில் போட்டியிட்டவர். தமிழ் தேசியத்தினை மிகவும் கீழ்த்தரமாக தூற்றியவர். இவரது ஈரம் காயம…

    • 0 replies
    • 600 views
  15. பூந்தமல்லி முகாமில் உண்ணாவிரதம் இருந்த செந்தூரன் வைத்தியசாலையில் அனுமதி! [sunday, 2012-08-26 11:46:08] பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமில் உண்ணாவிரதம் இருந்து வந்த செந்தூரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டுக்கு உரிய ஆவணங்கள் இன்றி கடல் வழியாக வந்த இலங்கை அகதிகளை பொலிசார் கைது செய்து செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமில் அடைத்து வைத்தனர். அங்கு ஏற்பட்ட ஒரு பிரச்சினையால் செந்தூரன் என்பவரை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமிற்கு மாற்றினார்கள். சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று செந்தூரன் கடந்த 6-ந் திகதி முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். கடந்த சில தினங்களாக தண்ணீர் கூட பருகாமல் உண்ணாவிரதம் இரு…

  16. பாடசாலைகளிலும் திருட்டு ஆரம்பம்; யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தகவல் இதே வேளை தெல்லிப்பழையில் வீடு உடைத்து உள்நுழைந்த திருடர்கள் சுமார் 22 ஆயிரம் ரூபா பெறுமதியான ரீ.வி, பிளேயர் என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். உடுவில் மத்தியிலுள்ள வீட்டில் இரவு நேரம் அங்கிருந்த 75 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருள்களைத் திருடிச் சென்றுள்ளனர். இடைக்குறிச்சி மேற்கு, வரணியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை ஒருவர் திருடிச்சென்றுள்ளார். அது பற்றிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட தையடுத்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்ப்பட்டார். உடுவில் உதய சூரின் வீதியால் தனியால் சென்ற பெண்ணிடமிருந்து 63 ஆயிரம் ரூபா பெற…

  17. நீர் நிலைகளை தேடிவரும் கட்டாக்காலி கால்நடைகளைப் பிடித்து இறைச்சிக்காக வெட்டப்படும் அதிர்ச்சியான சம்பவங்கள் தென்மராட்சி கிழக்குப்பகுதியில் அண்மைக்காலமாக அடிக்கடி இடம்பெற்று வருகின்றன. இங்கு வெட்டப்படும் கால்நடைகளின் இறைச்சிகள் மீன்கொண்டு வருவோர் மூலம் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எழுதுமட்டுவாழ் தெற்குப்பகுதியில் கட்டாக்காலியாக அலையும் கால்நடைகள் அந்தப்பகுதியில் குளங்கள் நீரின்றி வற்றியதால் கழிங்கரை என்னும் இடத்துக்கு கூட்டம் கூட்டமாக தண்ணீர் குடிக்க வருகின்றன. இந்தப்பகுதி பெரும் பற்றைகள் என்பதால் அந்த இடங்களில் தடங்கல் வைத்து மாடுகளைப் பிடித்து இறைச்சிக்காக வெட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தப்பகுதியில் உள்ள பற்றை மறைவுகள…

  18. னப் பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு அடுத்த வாரநடுப்பகுதியில் கொழும்பு வருகிறது. இலங்கைஇராணுவத்தினருக்கான பெருமளவு உதவிகளை இந்தக் குழுவினர் வழங்க உள்ளனர். சீனப் பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங் இல் எதிர்வரும் 29ஆம் திகதி வருகிறார். முதலாம் திகதி வரையில் மூன்று நாள்கள் இங்கு தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் உட்பட அரசின் முக்கிய தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். சீனக் குழுவினரின் இந்தப் பயணத்தின் போது இலங்கை இராணுவத்தினருக்கான ஏராளம் உதவிகள் சீனாவிடம் இருந்து அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இராணுவத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள், இராணுவ முகாம்களின் தரத்தை உயர்த்துவதற்கும் புதிய முகாம்களை அமைப…

  19. [size=4]முஸ்லிம்களின் தனித்துவமான தேசியத்தை ஒளித்து மறைத்துப் பேசுகின்ற கபடத்தனத்தினை தமிழ்த் தேசியம் கைவிட வேண்டும் என்று மு.காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார். கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான மு.காங்கிரஸின் பிரசாரக் கூட்டமொன்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு – அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட பாலமுனையில் இடம்பெற்றது. மு.காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளருமான எம்.ஏ. அன்சில் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மு.கா. தலைவர் ஹக்கீம் மேற்கண்ட வேண்டுகோளினை முன்வைத்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், "[size=5]முஸ்லிம்களின் தேசிய உணர்வு தொடர்பான…

    • 7 replies
    • 986 views
  20. எனதருமை உடன் பிறப்புகளுக்கு அன்பு வணக்கம். தீராத துன்பத்தை தங்கள் தலைவிதியாகக் கொண்ட ஈழத் தமிழ்ச் சகோதரர்கள் எழுதும் கடிதம் இது. மிகப் பெரும் சூறாவளியின் தாக்குதலுக்கு உட்பட்ட விருட்சம் எங்ஙனம் இலையுதிர்ந்து கிளை ஒடிந்து தன் அங்கங்களில் கீறலும் கிழிசலுமாக நின்று கொள்ளுமோ அத்தகையதொரு அவலத்தில் இருக்கக்கூடிய நாம் கடிதம் எழுதும் சக்தியையும் உரிமையையும் கொண்டவர்கள் அல்ல. இருந்தும் எங்கள் உடன் பிறப்புகள் ஆகிய நீங்கள் கடற்றொழில் ஈடுபடும் போதெல்லாம் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுகின்றீர்கள் என்ற செய்தியை அறியும்போது எங்கள் உள்ளத்து வெம்பல் இதயத்தை மேலும் இறுக்கிக் கொள்கிறது. நாங்கள்தான் அடிபட்டு உதைபட்டு மிதிபட்டு வாழ்கிறோம் என்றால் உங்களுக்கும் அதேகதி தானா என…

  21. [size=4]விமானசேவை பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, சிறிலங்காவின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் விமானி அறையில் பெண்கள் இருவர் பயணம் செய்துள்ளனர். கொழும்பில் இருந்து பெங்களூருக்கு நேற்றிரவு புறப்பட்டுச் சென்ற யுஎல்-172 விமானத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 9.15 மணியளவில் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது, அதில் பயணம் செய்த இரு பெண்கள் விமானியின் அறைக்குள் சென்றனர். பெங்களூர் வரை அவர்கள் விமானியின் அறையிலேயே இருந்துள்ளனர். இதனால் தமது பாதுகாப்புக் குறித்து கலக்கமடைந்த ஏனைய பயணிகள், அவர்களை வெளியே வரும்படி கோரிய போதும் அவர்கள் வெளியே வரவில்லை. கையில…

  22. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்கள் பயன்படுத்தியதாக சிங்கள மக்களை ஏமாற்ற ஜீப் ஒன்றின் புகைப்படங்களை இலங்கையின் அரச படையினர் வெளியிட்டுள்ளனர். இந்த ஜீப் நவீன தொழிநுட்பத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்ததாக படையினர் கூறுகின்றனர். அந்த படங்களில் இருந்து சில காட்சிகள். http://thaaitamil.com/?p=30021

    • 0 replies
    • 1.1k views
  23. இலங்கை இராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி தருவதை நிறுத்த வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் இலங்கை இராணுவத்தினருக்கு மத்தியரசு பயிற்சி வழங்கி வருகிறது. இந்த பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் திசநாயகா, மேஜர் ஹேவாவசம் ஆகியோருக்கு இந்தயா சார்பில், வெலிங்டனில் கடந்த 4 மாத காலமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை இராணுவம் மாநில அரசுக்கு தெரிவிக்கவே இல்லை, என்று ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தமிழக மக்களின் உணர்வுகளை, மத்தியரசு மதிக்கவ…

    • 2 replies
    • 530 views
  24. இன்னும் சில வாரங்களுக்குள் வவுனியா செட்டிகுளம் நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்பட்டு விடுவர் என்று மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோன் அறிவித்திருக்கின்றார். இதேபோன்று மீள்குடியேற்றம் தொடர்பிலான செய்திகள் நாளாந்தம் ஊடகங்களை ஆக்கிரமித்தாலும் மீள்குடியேற்றத்தின் பின்னர் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் வெளித்தெரியாத பல்வேறு விடயங்கள் குறித்து தமிழ்லீடர் அம்பலப்படுத்துகின்றது. [size=4]அண்மையில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தை அண்மித்த கிராமங்களில் மீள்குடியேற்றம் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகியிருந்த போதிலும் அவ்வாறு மீள்குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள் தொடர்பிலான தகவல்கள் …

  25. மீனவர்கள் மீது இனியும் தாக்குதல் நடத்தினால் இலங்கை தூதரகம் இருக்காது – வேல்முருகன் Saturday, August 25, 2012, 4:51இந்தியா தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இனியும் தாக்குதல் நடத்தினால் தமிழ்நாட்டில் இலங்கைத் தூதரகம் அப்புறப்படுத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பதை நாள்தோறும் மேற்கொள்ளும் ரோந்து நடவடிக்கையைப் போல் செய்து வருகிறது சிங்களக் கடற்படை. இந்த ஒரு வாரத்தில் 3 முறை தமிழக மீனவர்களைத் தாக்கி அரிவாளால் வெட்டி விரட்டியடித்துள்ளனர் சிங்களக் காடையர்கள். பறிபோன உரிமை தமிழக மீனவர்கள் தங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.