ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
[size=4]முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் இராணுவம் அபகரித்து வைத்துள்ள சுமார் 2 ஆயிரத்து 282 ஏக்கர் காணிக்குரிய அனுமதிப் பத்திரத்தை வழங்குமாறு இராணுவத்தினர் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் வளமான விவசாயக் கிராமமாகக் காணப்பட்ட கேப்பாபுலவுக் கிராமத்தில் சுமார் 700 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. [/size] [size=4]தற்போது மக்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவத்தினர் அபகரித்து வைத்துள்ளனர்.மேற்படி பகுதிகளை இலங்கை இராணுவத்தின் 591ஆவது படைப்பிரிவு ஆக்கிரமித்து வைத்துள்ளதுடன் அவற்றைத் தமக்கு வழங்குமாறு அரச அதிகாரிகளைத் தொடர்ந்தும் வற்புறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]அத்துடன் இந்தப் பகுதியிலுள்ள …
-
- 0 replies
- 300 views
-
-
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடல் ஆமைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த குழுவினரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு நேற்றுக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸ் நிலைய சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவு இவர்களைக் கைதுசெய்தது. மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சர் லால் செனவிரட்னவின் ஆலோசனையில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் கிங்ஸ்லி குணரெட்ணவின் வழிகாட்டலின் கீழ் சென்ற சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஜயசுந்தர தலைமையிலான பொலிஸ் குழுவினரே இவர்களைக் கைதுசெய்துள்ளனர். கடலில் அருகிவரும் உயிரினமாகவுள்ள இந்தக் கடலாமைகளைப் பிடிப்பது …
-
- 0 replies
- 414 views
-
-
உலகத்தில் எந்த இடத்தில் ஈழ தொடர்பான மாநாடுகளை நடத்தினாலும் இலங்கையில் ஈழ நாட்டை உருவாக்குவது என்பது வெறும் கனவு மாத்திரமே எனவும் இதற்கு உந்து சக்தியை வழங்கும் நாட்டின் துரதிஷ்டத்திற்கு உருவாகியுள்ள தேசத்துரோகிகள் இதனை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு துரோகம் இழைக்கும் இவ்வாறான தேசத்துரோகிகளை நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் மேதானந்த தேரர் கூறியுள்ளார். செல்வநாயகத்தின் 50க்கு 50 என்ற கோரிக்கை பிரபாகரனின் பயங்கரவாதம் வரை வளர்ச்சியடைந்தது. இதனால் இலங்கை மக்கள் மாத்திரமல்லாது வெளிநாட்டு மக்களும் பாதிப்புகளை அனுபவித்தனர். பயங்கரவாதம் காரணமாக நாட்டின் ஆயிரக்கணக்கான உயிர்கள் அழிந்தன. பொரு…
-
- 0 replies
- 587 views
-
-
மன்னார் நகரப்பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின் போது நேற்று மாலை இந்தியர்கள் நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். -குறித்த நால்வரும் மன்னார் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்தியர்களில் இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.இவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து ஒரு மாதம் எனவும் மன்னாருக்கு வந்து நான்கு நாட்கள் எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. குறித்த நால்வரதும் நடத்தைகளில் ஏற்பட்ட சந்தேகங்களின் காரணமாகவே நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரி…
-
- 0 replies
- 357 views
-
-
[size=4]முஸ்லிம் சமாதான நீதிவான் ஒருவரை கடுமையாகத் தாக்கி, புத்தர் சிலையை கட்டாயப்படுத்தி வழிபட வைத்துள்ளார் சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர். மாடு திருடியதான குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்கா காவல்துறையினர் சமாதான நீதிவான் என்.எம்.ஜுனைதீனை கைது செய்திருந்தனர். அவரை ஹிந்தோகம காவல்நிலைய பொறுப்பதிகாரி மோசமாக தாக்கியதுடன் தனது அறைக்கு இழுத்துச் சென்று அங்கிருந்த புத்தர்சிலையை வழிபட வைத்துள்ளார். தாக்குவதை நிறுத்துவதானால், புத்தர் சிலையை வழிபட வேண்டும் என்று சிறிலங்கா காவல்துறை அதிகாரி கூறியதால், வேறுவழியின்றி தான் புத்தர் சிலையை வழிபட்டதாக அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அடுத்து, வடமத்திய மாகாண …
-
- 2 replies
- 480 views
-
-
[size=4]இலங்கைக்கு பயணம் செய்யும் தமது நாட்டுக் குடிமக்களுக்கு பிரித்தானியா, மிகவும் அவதானமாக இருக்கும்படி புதிய பயண எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்தப் பயண எச்சரிக்கைக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,[/size] [size=4]விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 மே மாதம் முடிவுற்றாலும், இலங்கயில் தேசியவாதம் எழுச்சி கண்டுள்ளது. இதன்விளைவாக, மேற்குலக எதிர்ப்பு- குறிப்பாக பிரித்தானிய எதிர்ப்பு வாதம் வலுவடைந்துள்ளது.[/size] [size=4]இது பிரித்தானியத் தூதரகம் மற்றும் ஏனைய இராஜதந்திர சுற்றுப்புறங்களில் எதிர்ப்பு வன்முறை போராட்டங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்தப் போராட்டங்கள் பொதுவான பிரித்தானிய சமூகத்தை நோக்கியதாக இருந்தாலும், நீங்கள் மிகவும் அவ…
-
- 7 replies
- 925 views
-
-
கூடங்குளம்..?! 2000 மெகா வாட் உற்பத்தி விரைவில் ..! 2000 பேர் மீது வழக்கு...! மெட்ராஸ் உயர்நீதி மன்றம் கண்டனம்..! ஈழதேசம் பார்வையில்..! மக்களை ..யிர் அளவுக்கு மதிக்கும் காங்கிரஸ் அரசு. அதுவும் தமிழ் மக்களை பன்றியின் ...யிர் அளவிற்கு கூட மதிப்பதில்லை என்று கூறினால் யாரவது மறுக்க முடியுமா என்ன...? மத்திய நாடாளுமன்ற இணை அமைச்சர் வே.நாராயணசாமி அவர்களின் விமான நிலைய பேட்டியைப் பார்த்தால், சாதாரண அப்பாவி மக்கள் என்ன நினைப்பார்கள்..? சரி இந்த அமைச்சர் தான் நாடாளுமன்றம் மற்றும் மத்திய அரசை தனது தோளில் வைத்து தாங்குகிறார் என்று நினைத்து விடமாட்டார்களா..? அப்படி ஒரு பேட்டி எப்பொழுது பார்த்தாலும். கிடக்கட்டும் அது அவர் ஸ்டைல் ஆக இருக்கலாம். ஆனால் இந்த அமைச்சர் என்ன நினைத்து…
-
- 0 replies
- 393 views
-
-
[size=4]தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி உதவிப் பாதுகாப்பு அமைச்சராக. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விக்ரம் சிங்கை அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய சந்தித்துப் பேசியுள்ளார். வொசிங்டனில் கடந்த திங்கட்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. [/size] [size=4] [/size] [size=4]அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுவாக கட்டியெழுப்புவதற்கு உகந்த தருணம் இதுவே என்று இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாக வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் கூறியுள்ளது. இந்தச் சந்தி…
-
- 5 replies
- 736 views
-
-
தமிழ்நாடு காஞ்சி மாவட்டத்தில் வீதியோரம் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் விளம்பரங்கள் வழக்கறிஞர் செ.இராசன்,பள்ளிகரணை ஜனார்த்தனன்,சித்தாலப்பாக்கம் லோகு,தீபன் குமார்,மா.செ.இராசன் மற்றும் நவீன் பொன்ராஜ் ஆகியோரால் இப் புறக்கணிப்பு போராட்டம் நடை பெற்றது. http://thaaitamil.com/?p=29003
-
- 5 replies
- 672 views
-
-
[size=3] சீன உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகளின் மிகப்பெரிய குழு சிறிலங்காவில் – (படங்கள் இணைப்பு) [/size][size=3] [/size][size=3] [size=3] சீனாவின் பாதுகாப்புத்துறை உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட மிகப்பெரிய குழு ஒன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.[/size][size=3] இருபது உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவுக்கு சீனாவின் உதவி அமைச்சருக்கு நிகரான – சீன தேசிய பாதுகாப்பு அமைச்சின் விஞ்ஞான, தொழில்நுட்ப, கைத்தொழில் நிர்வாகப் பணிப்பாளர் சென் குய்பா தலைமை வகிக்கிறார்.[/size][size=3] இந்தக் குழுவினர் நேற்றுமுன்தினம் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான உயர்மட்டக் குழுவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.[/size…
-
- 4 replies
- 502 views
-
-
[size=4]நாட்டில் மழையை பொழியச் செய்ய முடிந்தால் அதனையும் மக்களுக்காக செய்வேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பெருந்தெருக்கள், வாவிகள் போன்ற அடிப்படை உட்கட்டுமான வசதிகளை செய்து கொடுக்க முடியும். எனினும் மழையை பெற்றுக்கொடுக்க என்னால் முடியாது. தெரிவித்துள்ளார். பெருந்தெருக்கள், வாவிகள் போன்ற அடிப்படை உட்கட்டுமான வசதிகளை செய்து கொடுக்க முடியும். எனினும் மழையை பெற்றுக்கொடுக்க என்னால் முடியாது.[/size] [size=4]மழை பெய்யச்செய்ய நான் மந்திரவாதி அல்ல அவ்வாறு மழை பொழியச் செய்ய முடிந்தால் அதனையும் மக்களுக்காக செய்வேன். மக்கள் நலனுக்காக செய்யப்படும் எந்தவொரு செயற் திட்டமும் கைவிடப்பட மாட்டாது.[/size] [size=4]மழை இல்லாத காலத்தில் நாடு முழுவதிலும் பௌ…
-
- 1 reply
- 429 views
-
-
[size=4]ஜெனிவா தீர்மான அழுத்தங்களில் இருந்து தப்பிக்க சிறிலங்கா அரசாங்கம் கிழக்கு மாகாணசபைத் தேர்தலைப் பயன்படுத்தப் பார்க்கிறது. அதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை, ஆனந்தபுரியில் நேற்றுமாலை நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். “கிழக்கு மாகாணசபைக்கான இந்தத் தேர்தல் கடவுளால் எமக்குத் தரப்பட்ட சந்தர்ப்பம். நீதியும், நியாயமும் வெற்றி பெற வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். இதனை சரியாக எதிர்கொள்ள வேண்டியது எம் அனைவரினதும் கடமை. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, அந்த ஐன…
-
- 0 replies
- 420 views
-
-
[size=4][/size] [size=4]நீதவான்களுக்கான பற்றாக்குறையே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் தாமதமடையக் காரணம் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குறிப்பாக உயர் நீதிமன்ற நீதவான்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையே வழக்கு விசாரணைகளை துரித படுத்த முடியாமைக்கான பிரதான ஏதுவெனக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]உயர் நீதிமன்ற நீதவான்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக விரைவில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 75 ஆக இருக்கும் நீதவான்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்த்தப்பட உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]நீதிமன்றங்களின் எண்ணிக்கையையும் நீதவான்களின் எண்ணிக்கையையும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படு…
-
- 0 replies
- 608 views
-
-
[size=2][/size] தமிழ்க் கடவுள் நல்லூர்க் கந்தனுக்கு இன்று தீர்த்தத் திருவிழா.தன்னை வழிபட்டோருக்கு அருளை வாரி வழங்கும் பெருநாள். இந்நாளில் நமக்கு அவன் தரவேண்டியது எது என்று சிந்திப்பது அவசியம். உலகெல்லாம் வாழும் இனங்களின் தலை மைகள் மனிதர்களிடம் இருந்தபோது, தமிழ் இனம் மட்டும் தமிழ்த் தலைவனாக- தமிழ்க் கடவுளாக முருகனைக் கண்டனர். முருகனும் தமிழ் மீது கொண்ட காதலால் நாவற் கனியினூடு ஔவையோடு தர்க்கம் புரிந் ததும் அருணகிரிநாதர் சுவாமிகளுக்கு சந்தத் துடன் திருப்புகழ் பாட அடியயடுத்துக் கொடுத்த தும் நடந்தேறியது. இஃது வேறு எந்தமொழி யிலும் இனத்திலும் இல்லாச் சிறப்புமாகும். இவ்வண்ணம் தமிழ்க் கடவுளாக இருக்கும் கந்தப் பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் உண்டு. முருகன் சூரனை சங்காரம் செய்த வீர…
-
- 0 replies
- 1.4k views
-
-
[size=4]இலங்கையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிந்த பிறகு, தமிழர்கள் பலர் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.தமிழர்கள் வசிக்கும் பகுதியில், பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். [/size] [size=4]இதற்கிடையே, யாழ்பாணத்தில் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், இந்தியர்கள் 53 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள், ஜவுளித் தொழில் மற்றும் குறி சொல்லுதல் போன்ற தொழிலில் ஈடுபட்டு வந்தனர். சட்ட விரோதமாகதங்கியிருந்ததற்காக இவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட உள்…
-
- 4 replies
- 962 views
-
-
வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ர மகாவித்தியாலயத்தில் நான்கு வகுப்பறைகளைக் கொண்ட தற்காலிக கொட்டில் தீயில் எரிந்துள்ளது. நேற்று வியாழன் பிற்பகல் 2.30 மணியளவில் இந்த பாடசாலைக்கு அருகாமையில் இருந்தவர்கள் தமது காணியை துப்பரவு செய்து குப்பைகளை எரித்துள்ளனர.; அதிகமாக காற்று காரணமாக தீப் பொறி பாடசாலை வளாகத்திற்குள் இருந்த தற்காலிக கொட்டிலில் வீழ்ந்து முற்றுமுழுதாக தீக்கிரையாகியுள்ளது. வகுப்பறைகளில் இருந்த கரும்பலலை, வெண்பலகை மற்றும் பாடசாலை தளபாடங்களும் தீக்கிரையாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராமவாசிகள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். http://thaaitamil.com/?p=29075
-
- 0 replies
- 438 views
-
-
[size=4]இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்து மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்தவர்களில் தற்போது 800 குடும்பங்களளவிலேயே இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.[/size] [size=3][size=4]மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் 3 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்.[/size][/size] [size=3][size=4]மனிக்பாம் முகாமில் தற்போது 800 குடும்பங்களே இருக்கின்றன. இந்தக் குடும்பங்கள் விரைவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவிடுவார்கள்.[/size][/size] [size=3][size=4]அவ்வாறு அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டதும் மனிக்பாம் முகாம் வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கிடையில் மூடப்பட்டுவிடும் என்று மீள்குடி…
-
- 1 reply
- 486 views
-
-
[size=4]டெல்றொக்ஷன் மற்றும் நிமலரூபன் படுகொலை செய்யப்பட்டது வெள்ளை வானில் கடத்தியோ அல்லது வீதியில் வைத்து சுட்டோ படுகொலை செய்யப்படவில்லை அதன்படி இந்த அரசு வழமையாக கூறுவதனைப் போன்று விசாரணை நடாத்துகின்றோம், கொலையாளிகளைக் கண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றோம், கண்டு பிடித்துவிடுவோம். இது தான் கொலையாளி என்று கூறி சமாளித்து விட முடியாது.[/size] [size=4]ஏனெனில் இக் கொலை அரசின் கண்காணிப்பில் உள்ள சிறைச்சாலை வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது. அரசிற்கு கொலையாளி யார் என்று நன்றாகத் தெரியும். இது அரசினால் ஏவிவிடப்பட்ட கொலைப்படை தான் செய்தது. இக் கொலைக்கு பொறுப்பு அரசாங்கம் என்பதை யாழ். மண்ணில் வைத்து உறுதியாகக் கூறுகின்றேன் இதனை அரசு முடியுமானால் இந்த இடத்தில் வைத்து மறுப…
-
- 3 replies
- 1.6k views
-
-
[size=4]சிறிலங்கா அரசாங்கத்தின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பூகோள ஆய்வு என்ற வகைக்குள் எதிர்வரும் நவம்பர்மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நடைபெறவுள்ளன.இந்த மீளாய்வுக்குப் பொறுப்பாக இந்தியா, பெனின், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து மஹிந்த குழாமிற்கு சிறிது கலக்கம் ஏற்பட்டுள்ளது.[/size] [size=4]இந்த மீளாய்வுக்குப் பொறுப்பாக இந்த மூன்று நாடுகளையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்திருந்தார். இந்த மூன்று நாடுகளும் மஹிந்த அரசுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்தமை நினைவிருக்கலாம்.[/size] [size=4]ஆனால் இம்முறை மீளாய்வு கலந்துரையாடலில் இந்தியா கடந்த முறை போன்று செயற்படாமல் சிறிலங்காவின் செயற்பாடுகளை பா…
-
- 3 replies
- 672 views
-
-
peech: Sri Lanka 15 Aug 2012 | Lee Rhiannon Foreign Affairs / Human Rights Adjournment speech, Tuesday 15 August 2012 Senator RHIANNON: Tonight I would like to share with members information about Sri Lanka. I recently received some distressing information in my email inbox, which paints a disturbing picture of the day to-day realities for Tamils in Sri Lanka. I commend the Commission for Justice and Peace of the Catholic Diocese of Jaffna in Sri Lanka for taking the brave decision to author and release their statement. I imagine that their honesty and integrity will put them in grave danger at the hands of a brutal regime that has so far tolerated no d…
-
- 0 replies
- 491 views
-
-
[size=4]இராணுவ ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், மீள் குடியமர் நடவடிக்கை தடைப்பட்டுள்ளமை உட்பட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து, எதிர்வரும் புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது. வடக்கு, கிழக்கில் தற்போது நிலவும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டும் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டு வரவுள்ளது. கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது விடயம் தொடர்பாக ஆராயப்பட்டு விவாதம் நடத்துவதற்கு திகதி ஒதுக்கப்பட்டது. இனப்பரம்பல் விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கில் வடக்கு, கிழக்கில் சிங்கள குடியேற்றம் இடம்பெற்று வருகின்றமை, சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்துள்ளமை ஆகியவற்றின் மீத கவனத்…
-
- 0 replies
- 291 views
-
-
- அமுதன் - "தெய்வீக சுக அனுபவம்' என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் தமிழக கலைஞர்களின் மூன்று நாள் கலாசார நிகழ்ச்சி நேற்று துவங்கியது. உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு, மறுவாழ்வு விடுதிகளில் தங்கியிருக்கும் ஏராளமான சிறுமியர் இந்த நிகழ்ச்சியில் உற்சாகமாக பங்கேற்றனர். கலை நிகழ்ச்சி: யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரகம் துவங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இலங்கை-இந்திய உறவு தொடர்பாக பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக தமிழக - யாழ்ப்பாண மக்களின் கலை உறவை மேம்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மூன்று நாள் கலாசார நிகழ்ச்சி நேற்று துவங்கியது. இந்த நிகழ்ச்சி வழக்கத்துக்கு மாறான அமைப்புடன் திட்டமிடப் பட்டிருந்தது. யாழ் பல்கலைக்கழகத்தில் நுண்கலை படி…
-
- 1 reply
- 811 views
-
-
[size=3][size=4][size=5]தெய்வீக சுக அனுபவம் என்ற பெயரில் [/size]யாழ்ப்பாணத்தில் தமிழக கலைஞர்களின் மூன்று நாள் கலாசார நிகழ்ச்சி நேற்று துவங்கியது. உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு, மறுவாழ்வு விடுதிகளில் தங்கியிருக்கும் ஏராளமான சிறுமியர் இந்த நிகழ்ச்சியில் உற்சாகமாக பங்கேற்றனர்.[/size][/size] [size=3][size=4]கலை நிகழ்ச்சி: யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரகம் துவங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இலங்கை-இந்திய உறவு தொடர்பாக பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக தமிழக - யாழ்ப்பாண மக்களின் கலை உறவை மேம்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மூன்று நாள் கலாசார நிகழ்ச்சி நேற்று துவங்கியது. இந்த நிகழ்ச்சி வழக்கத்துக்கு மாறான அமைப்புடன் திட்டமிடப் …
-
- 0 replies
- 689 views
-
-
13 இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துகிறது சிறிலங்கா 13 இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் சிறிலங்கா அரசாங்கம் புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தவுள்ளது. சிறிலங்கா அமைச்சரவை இதற்கு அனுமதி அளித்துள்ளதாக சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கௌதமாலா, பெலிஸ், நிக்கரகுவா, பார்படோஸ், கிரெனடா, சென்.கிட்ஸ் அன்ட் நெவிஸ், சென்.வின்சென்ட் அன் கிரெனடின்ஸ், சூரினாம், ஹொண்ரடூராஸ், அன்டிகுவா அன் பர்புடா, டொமினிக்கா, ஹெய்டி, சென்.லூசியா ஆகிய நாடுகளுடனேயே சிறிலங்கா அரசாங்கம் புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தவுள்ளது. இலத்தீன் அமெரிக்காவில் உள்ள 33 நாடுகள் ஐ.நாவில் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் 20 நாடுகளுடன் ச…
-
- 2 replies
- 531 views
-
-
எல்லோரும் நினைக்கிறார்கள் எங்களுடைய போராட்டம் முள்ளிவாய்க்காலுடன் முடிந்து விட்டது என்று ஆனால் அது தவறானது சர்வதேசத்தை நம்பி ஏமாந்து விட்டோம். அதனால் தமிழினம் இன்று யாருமற்ற அநாதைகளாக இருக்கின்றோம் எனவே எம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது எனவே தமிழினம் அனைவரும் திரண்டெழுந்து போராடுவோண்டும் இல்லையேல் இலங்கையில் தமிழினம் என்ற ஓர் இனம் இல்லாது போய்விடும் என யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ.இராசகுமாரன் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலையைக் கண்டித்து தமிழ் கட்சிகள் இணைந்து யாழ்.நகரில் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தமிழ் மக்கள் அன்று தொடக்…
-
- 3 replies
- 624 views
-