ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ௭வ்விதமான பனிப்போரும் கிடையாது. வரலாற்றில் ௭ப்போதும் இல்லாதவாறான நெருக்கமான உறவு தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலவுகின்றது ௭ன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பனிப்போருக்கு பதிலாக குளிர் காதலே உள்ளது ௭ன்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இரண்டு நாடுகளுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுவருவதாக வெளிவரும் செய்திகள் குறித்து தகவல் வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை கூறினார். இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான முறுகல் நிலைமை காரணமாக இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உயர்மட்டக் குழுவினர் மேற்கொள்ளவிருந்த விஜயமும் ஒத்திவைக்கப்…
-
- 4 replies
- 414 views
-
-
நெடுங்கேணியில் பறிபோயுள்ள மற்றுமொரு தமிழ்க்கிராமம் -அரியகுண்டான் - அதாவெட்டுவெவ ஆக மாறிய அநியாயம் இதுதான் நல்லிணக்கமா? – சிவசக்தி ஆனந்தன் வவுனியா வடக்கு (நெடுங்கேணி) பிரதேச செயலாளர் பிரிவின் பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட தமிழர் பூர்வீகக் கிராமமான அரியகுண்டான், அதாவெட்டுவெவ என்று சிங்களப் பெயரிடப்பட்டு வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் தமது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: அனுராதபுரம் மாவட்டச் செயலகத்தின்கீழ் இயங்கிய வெலிஓயா, புதிதாக …
-
- 0 replies
- 682 views
-
-
[size=4]தமிழர்கள் தனிநாடு கோராமல், ஜக்கிய இலங்கைக்குள் ஒன்றிணைந்து வாழ நினைத்திருந்த முப்பது வருடகால ஜனநாயக வழிமுறையிலான போராட்ட காலத்திலும், எங்கள் இனம் படுகொலை செய்யப்பட்டது. எங்கள் இனத்தின் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதனை எவரும் மறைத்து விட முடியாதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]சிறைச்சாலை படுகொலைகளை கண்டித்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தினில் கலந்து கொண்டு இன்று உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.[/size] [size=4]மேலும் அவர் தனதுரையினில் தெரிவிக்கையில்,[/size] [size=4]உ…
-
- 0 replies
- 525 views
-
-
ஈழத் தமிழர் மண்ணில் வாழ்வுரிமைக்கான குரல் பேரெழுச்சி ஒன்றுகூடல் 2012 செப்ரெம்பர் 22ம் நாள் சனிக்கிழமை நேரம் 14.00 – 18.30 மணி. ஈகைப் பேரொளி முருகதாஸ் திடல், ஐ.நா வளாகம் ஜெனிவா. “நாம் ஒரு தேசிய விடுதலை இயக்கம். இனவாதக் கொடுமைக்கு எதிராக, அரச பயங்கரவாத வன்முறைக்கு எதிராக நாம் விடுதலை வேண்டிப் போராடி வருகிறோம். எமது போராட்டம் ஒரு தீர்க்கமான, நியாயபூர்வமான அரசியல் குறிக்கோளைக் கொண்டது. ஐநா சாசனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சுய நிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் எமது போராட்டம் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது.” - தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் - ** – ஐநா நிபுணர் குழு அறிக்கையில் அடையாளம் காட்டப்பட்ட குற்றாவாளிகள் மீது அனைத்துலக குற்றவியல் நீதி மன்ற …
-
- 0 replies
- 780 views
-
-
சிங்களர்களுக்கு சமமான உரிமைகளை இலங்கைத் தமிழர்கள் பெறுவதற்கு இனிமேலாவது இலங்கை அரசை வலியுறுத்தி வழிவகை செய்து அவர்களின் துயரை நீக்க வேண்டும் என இந்தத் தருணத்தில் மத்திய அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்' என தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இந்திய சுதந்திர தின உரையில் வலியுறுத்தி உள்ளார். "இலங்கை முகாம்களில் வாழும் நம் உறவுகளாகிய, தமிழர்கள் அனைவரும் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கும்,தமது வாழ்வை வழம்படுத்திக் கொள்வதற்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்" எனவும் முதல்வர் ஜெயலலிதா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். http://youtu.be/tPy9eLGqlU4 இலங்கையில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீண்டும் சொந்த இடங்களி…
-
- 0 replies
- 747 views
-
-
தம்புள்ள புனிதபூமியின் நிர்மாணிப்பு பணிகள் ஆரம்பம் -முஸ்லீம் பள்ளிவாசல் நிரந்தரமாக அகற்றபடும் அபாயம் 15 ஆகஸ்ட் 2012 பல வீடுகள் பலாத்காரமாக உடைப்பு – ஊடகவியலாளர்கள் செல்ல தடை – குளொபல் தமிழ்ச் செய்தியாளர்:- ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய நிர்மாணிக்கப்பட உள்ள தம்புள்ள புனித பூமியின் நிர்மாணிப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்காக கண்டலம சந்தியில் உள்ள வீடுகள் பெக்கோ இயந்திரங்கள் மூலம் உடைக்கப்பட்டு வருகின்றன. வீட்டு உரிமையாளர்களுக்கு மாற்று வீடுகளை வழங்காது, வீடுகளை உடைத்து, காணிகள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. அத்துடன் இந்தப்பிரதேசத்தில் நூற்றாண்டுக்கும் மேலாக முஸ்லீம் மக்களால் பேணப்பட்டு வரும்…
-
- 1 reply
- 858 views
-
-
விழுப்புரத்தில் நடத்த விதை போட்டு, பிறகு சென்னைக்கு இடம் மாற்றி, முதலில் தனி ஈழம் கேட்டு கோரிக்கை வைத்து, அதன் பிறகு அதற்கும் தற்காலிகத் தடை போட்டுக் கொண்டு, வெளியுறவுத் துறை 'ஈழம்’ வார்த்தையைக் கட் செய்து, உள்துறை அதற்கு அனுமதி கொடுத்து, பொலிஸ் அனுமதி மறுத்து, நீதிமன்றத்தில் போராடி,... ...இடம் கிடைக்காவிட்டால் அறிவாலயத்தில் நடத்துவேன் என்று சமாதானம் அடைந்து... கடைசியில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தே முடிந்து விட்டது கருணாநிதி ஏற்பாடு செய்த ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு. ஒவ்வொருவராகக் கழன்று கொண்டனர் உலகம் முழுக்க இருந்து இந்த மாநாட்டுக்கு வருகிறார்கள் என்று முதலில் அறிவித்தார் கருணாநிதி. அகில இந்தியத் தலைவர்கள் வருவதாகவும் சொன்னார். ஈழத்து தமிழ் எம்.பி-…
-
- 4 replies
- 1.1k views
-
-
டெசோ மாநாடும் - தி.மு.க.வின் அரசியல் எழுச்சியும்..?! ஈழதேசம் பார்வையில்.. ! ஒருவழியாக டெசோ மாநாடு பலப் பல திருப்பங்களுடன் கடந்த ஞாயிற்று கிழமை திட்டமிட்டபடி ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்து முடிந்து விட்டது. லோக் ஜனசக்தி, சமாஜ்வாடி கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் ஏனைய இந்திய கட்சிகளும் உலக அளவில் மனித உரிமை ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். மாநாட்டின் தீர்மானம் இயற்றுவதற்கு முன்னர் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் 11 தீர்மானங்கள் என்று இருந்த நிலையில் கடும் விவாதங்களுக்குப் பிறகு 14 தீர்மானங்கள் என்று முடிவு செய்யப்பட்டன. குறிப்பாக அந்த பத்தாவது தீர்மானம் குறிப்பிட்டு சொல்லும்படியான தீர்மானம் என்றால் மிகையில்லை. இலங்கைத் தமிழர்களிடம் ஐ.நா.மன்றத்தின் மூலம் பொது வ…
-
- 0 replies
- 761 views
-
-
முறிகண்டிப் பிள்ளையாரின் வழக்கு தமிழ் பேசும் நீதியரசர்கள் முன்னிலையில் விவாதிக்கப்படும் முறிகண்டிப் பிள்ளையார் கோயில் உரிமை பிரச்சினை தொடர்பான வழக்கின் மேல் விசாரணைகளை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தின் தமிழ் பேசும் நீதியரசர்கள் முன்னிலையில் விவாதிக்கப்படுவதற்கு உயர் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. கோயிலின் பரம்பரை தர்மகர்த்தாவான ஜி.மணிவண்ணன் என்பவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை தொடர்பான நீதியரசர்கள் ஷிராணி திலக்கவர்தன, எஸ்.ஐ.இமாம் மற்றும் பிரியசாத் டெப் ஆகியவர்களின் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதியரசர்கள் மேற்கண்ட பணிப்புரையை வழங்கினர். மு…
-
- 2 replies
- 513 views
-
-
போர் நிறைவடைந்துள்ள போதிலும் தேசிய இனப்பிரச்சினைக்கு இதுவரையில் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். போர் இடம்பெற்ற காலத்தில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் ஐந்து தீர்வுத் திட்டங்களை முன்வைத்துள்ளன. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டியதில்லை எனவும் தற்போதைய அரசாங்கம் தெரிவிக்கின்றது. இது மிகவும் ஓர் பயங்கரமான நிலைமை. தேசிய இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வுத் திட்டம் எதனையும் வழங்காவிட்டாலும், தெற்கு மக்கள் தீர்வுத் திட்டங்களை முன்வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சிங்கள மக்கள் தமிழ் பிரச்சினைகளுக்கு தீ…
-
- 0 replies
- 533 views
-
-
கொடூரமான கொலைகள் உள்ளிட்ட பயங்கரவ குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அந்த தண்டனையை நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மரண தண்டனையை அமுல்படுத்துவது, முதலில் யாருக்கு அந்த தண்டனையை நிறைவேற்றுவது, அதற்கான நேரம், திகதி என்பவற்றை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது. ஜனாதிபதி தண்டனை நிறைவேற்ற உத்தரவிடும் நேரத்தில், அந்த தண்டனையை நிறைவேற்றுவதற்காக தூக்கு மரணம் தயார் நிலையில் இருப்பதாக சிறைச்சாலை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படாத காரணத்தில், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், அச்சமின்றி பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது அண்மைய கால சம்பவங்கள்…
-
- 13 replies
- 1.7k views
-
-
கருணா, கே.பி, பிள்ளையான் போன்றோருக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ள அரசாங்கம் அவர்களால் போரில் ஈடுபடுத்தப்பட்ட அப்பாவிப் போராளிகளை ஏன் படுகொலை செய்கிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்த இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது கேள்வியெழுப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலையைக் கண்டித்தும், சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, நவசமசமாஜக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, உள்ளிட்ட தென்னிலங்கை முற்போக்குக் கட்சிகளும் கலந்து கொண்டிருந்தன. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கும், பொலிஸாருக்கும் எதிரான கோசங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வ…
-
- 1 reply
- 473 views
-
-
இன்றுகாலை நடைபெற்ற உயர்தர விஞ்ஞானப்பிரிவின் புதிய பாடத்திட்டத்திற்கான இரசாயனவியல் பாடத்தின் முதலாம் பகுதி வினாப் பத்திரத்தில் ஆவர்த்தன அட்டவணை தரப்படும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ள போதும் ஆவர்த்தன அட்டவணை தரப்படவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதே வேளை இந்தப் பிரிவில் சிங்கள மொழிமூல வினாப் பத்திரத்தில் ஆவர்த்தன அட்டவணை தரப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். http://virakesari.lk...cal.php?vid=175
-
- 1 reply
- 720 views
-
-
பொன்னாலையில் விஷமிகள் குடிதண்ணீர் கிணற்றை மாசுபடுத்தினர் பொன்னாலைப் பகுதியில் வயல் வெளியில் அமைந்திருந்த நன்நீர் கிணற்றுக்குள் கழிவு ஓயில்,குப்பைகளைக் கொட்டி விஷமிகள் குடிதண்ணீரை மாசுபடுத்தியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு விஷமிகள் இந்த நாச வேலையைச் செய்துள்ளதால் அந்த கிணற்றில் குடிதண்ணீரைப் பெற்றுவந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். பொன்னாலை குளத்துக்கு அருகில் இருந்த கிணறும் தற்போது பாவனைக்கு உதவாத தண்ணீராக மாறியுள்ளது. குறிப்பாக இந்த கிணற்றுக்கு மேலாக சூரிய ஒளி படாத வகையில் சிமெந்தால் மூடிக்கட்டப்பட்டு சிறிய துவாரம் மட்டும் விடப்பட்டுள்ளது. இதனால் கிணற்றுக்குள் வௌவால்கள் குடிகொண்டு தண்ணீரை அசுத்தப்படுத்துகின்றன. குறித்…
-
- 0 replies
- 446 views
-
-
மன்னார் மடுமாதா தேவாலயத்தின் ஆவணித் திருவிழா இன்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது. திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூபப் பவனியும் திருச்சொரூப ஆசீர்வாதமும் நடைபெற்றது. ஆவணி 15ஆம் நாள் மரியன்னை விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாளாகும். மடுமாதா தேவாலயத்தின் ஆவணித் திருவிழா இந்த மாதம் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதுடன் தினமும் ஆராதனைகள் நடைபெற்று வந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://www.globaltam...IN/article.aspx
-
- 0 replies
- 428 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையால் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்று இலங்கையில் உள்ள இடதுசாரிக் கட்சியான நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். டெசோ மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் நேற்று திங்கட்கிழமை தெரிவித்ததாவது:இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஐ.நா.வை கேட்டுக் கொள்ளும் தீர்மானங்கள் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஐ.நா. சபையால் இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. அதனால் எந்தப் பலனும் ஏற்படாது. வெறும் விளம்பரம் மட்டுமே கிடைக்கும். உலகெங்கும் உள்ள தமிழர்களைக் குறிப்பாக தமிழகத்தில் உள்ளவர்களைத் திரட்டி எழுச்சி ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். …
-
- 1 reply
- 549 views
-
-
சிறிலங்கா படைகளுக்குத் தொடர்ந்தும் ஆயுத தளபாட உதவிகளை பாகிஸ்தான் வழங்கி வருவதாக பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலர் லெப்.ஜெனரல் ஆசிவ் யாசின் மாலிக் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த அவர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். “பாகிஸ்தான் சிறிலங்கா பாதுகாப்புப் படைகளுக்கு இடையில் நெருக்கிய ஒத்துழைப்பு 1980களின் தொடக்கத்தில் ஆரம்பமானது. பயிற்சி, கருவிகள், உதிரிப்பாகங்கள் என்று எமது உதவிகள் வழங்கப்பட்டன. நாம் தனியே தளபாட உதவிகளை மட்டும் வழங்கவில்லை. விநியோக, பயிற்சி உதவிகளையும் சிறிலங்கா இராணுவத்துக்கு வழங்கினோம். மென் தீவிர யுத்தம் மற்றும் சிறிலங்காவில் …
-
- 2 replies
- 384 views
-
-
யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட லலித், குகன் ஆகிய இருவரும் இராணுவ முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என முன்னிலை சோசலிசக்கட்சி தெரிவித்துள்ளது. லலித் மற்றும் குகன் உயிருடன் உள்ளனர். அவர்கள் இராணுவ முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சில் இராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக நேற்றிரவு இணையத்தளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குகன் மற்றும் லலித் பற்றி உயர் அதிகாரிகள் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியமை உறுதியாகியுள்ளதாக, கொழும்பில் இன்று எதிர்க்கட்சிகள் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடப்பட்டுள…
-
- 0 replies
- 716 views
-
-
சிறிலங்காவில் இருந்து தமிழர்களை திட்டமிட்ட முறையில் அவுஸ்ரேலியாவிற்கு அனுப்பும் பின்னணியில் உள்ளவர்கள் பலர் உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து ஆட்கள் அவுஸ்திரேலியா நாட்டிற்கு அனுப்பப்படுவதன் பின்னணியினில் அரச அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பை சேர்ந்தோர் இருப்பதாக தமக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழர்களின் பரம்பலை குறைந்த அவர்களது அடுத்தடுத்த தலைமுறையினரை நாட்டில் இருந்து அனுப்புவதே அவர்களுடைய இலக்காக உள்ளது. இதனால் இளைஞர்கள் உயிரைப் பறிக்கும் கடல் பயணத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தமிழினம் வாழ்வதற்கு அனைவரும் ஒன்றினைந்து …
-
- 0 replies
- 379 views
-
-
ஈழப் போராட்ட வரலாற்றில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முக்கியமான மாதமாகும். யாழ். குடாநாட்டைக் கைப்பற்றுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் பல முனைத் தாக்குதல்களை மேற்கொண்டு குடாநாட்டிற்குள் பிரவேசித்த மாதம் இது. ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி முகமாலை முன்னரங்கில் தொடங்கிய சமர் பல முனைகளில் விரிவாக்கம் பெற்றது. சிங்களப் படையினருக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியதாக அமைந்த இந்தத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் ஆற்றல்களை வெளிப்படுத்திய தாக்குதலாகவும் அமைந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சமர் 2006 ஆகஸ்ட் 11 ஆம் திகதி தொடக்கம் சில நாட்கள் தொடர்ந்து இடம்பெற்றது. இந்த தாக்குதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் பல தரையிறக்கங்களை மேற்கொண்டனர். பல முனைகளில…
-
- 0 replies
- 287 views
-
-
வடபகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள இராணுவத்தினருக்கான வீடுகளை அமைக்கும் பணியில் சீனா! இந்திய மத்திய அரசாங்கம் விசனம். [Wednesday, 2012-08-15 10:43:39] வடபகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள இராணுவத்தினருக்கான வீடுகளை அமைக்கும் திட்டத்தை அரசாங்கம் சீனாவிடம் கையளித்திருப்பது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் விசனமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இப் பிரச்சினை காரணமாக ௭திர்வரும் 24 ஆம் திகதி இந்தியாவுக்கு மேற்கொள்ளவிருந்த இலங்கையின் உயர்மட்ட குழுவின் விஜயமும் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. இது விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைப்பதற்கான ஒப்பந்தம் சீனாவுக்கு வழங்கப்பட்ட போதும் இந்தியா தனது ௭திர்ப்பை வெளியிட்டிருந்தது. இதற்கு மத…
-
- 0 replies
- 465 views
-
-
தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும். முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது. பேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் மிலேச…
-
- 3 replies
- 1.7k views
-
-
நியுயோர்க் செல்கிறார் சிறிலங்கா அதிபர் [ புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 02:29 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க அடுத்தமாதம் நியுயோர்க் செல்லவுள்ளார். ஐ.நா பொதுச்சபையில் ஆண்டுதோறும் இடம்பெறும் உலகத் தலைவர்களின் கூட்டம் வரும் செப்ரெம்பர் 25ம் நாள் ஆரம்பமாகவுள்ளது. இதில் இரண்டாம் நாள் பிற்பகல் அமர்வில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார். அவரது உரை வரும் செப்ரெம்பர் 26ம் நாள் இடம்பெறவுள்ளதாக ஐ.நாவின் அதிகாரபூர்வ நிகழச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.puthinappalakai.com/view.php?20120815106805
-
- 0 replies
- 587 views
-
-
[size=4] இந்திய சென்னையில் நடைபெறும் டெசோ மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகரின் வாசாஸ்தலத்திற்கு முன்னால் தேசிய இயக்கங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன்போது தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியேரின் உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டன. (படங்கள்: குஸான் பத்திராஜ) http://www.tamilmirr...2-09-43-00.html[/size]
-
- 22 replies
- 1.3k views
- 1 follower
-
-
[size=2] Aug 12, 2012[/size] சிவந்தன் தமிழ் தேடித்திரியும் பிள்ளைகளில் ஒருவன்! இருபத்தோராம் நூற்றாண்டில் பரிதாப இனமொன்றின் வாரிசுகள் நாம். பூமி வெளியில் ஆடை இழந்து அம்மணமாய் போன பாவி மனிதர்கள் நாம். இரண்டாயிரத்து பன்னிரெண்டில் தமிழும் தமிழரும் இப்படித்தான் அடையாளம் பெறுகின்றோம். இதற்கு முன்பு நாம் யார்? நம் அடையாளம் என்ன? இந்த பூமியின் மூத்த குடி! நம் மொழியே மூத்த மொழி! நம் இனமே உலகப் பண்பாட்டின் பிரம்மா! தமிழ் மூதாதையரே ஆதி விஞ்ஞானிகள்! வெளியில் நிற்கும் எவருக்கும் தெரியாது கடலின் மூலம். உலக கடலின் மூல ஊற்றே தமிழ்தான். அது அலைகளுக்கு கீழே அமிழ்ந்து போனது சோகம். எங்கள் வரலாறுதான் என்…
-
- 32 replies
- 2.1k views
-