Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (கெலும் பண்டார) நவம்பரில் நடக்கவுள்ள அனைத்துலக மனித உரிமை ஆவர்த்தன மதிப்பீட்டில் சமர்பிப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை மதிப்பீடு செய்து அறிக்கை தயாரிப்பதற்கு இந்தியா, ஸ்பெய்ன், பெனின் ஆகிய நாடுகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நியமித்துள்ளார். இந்த நாடுகள் இலங்கை மீது கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நாடுகள் என்பதனால் நவநீதம்பிள்ளையின் தீர்மானத்தையிட்டு இலங்கை அரசாங்கம் கிலேசமடைந்துள்ளது. இந்த நாடுகள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸில் இலங்கை பற்றி அறிக்கை தயாரித்து நவநீதம்பிள்ளையிடம் வழங்கும். பிரதானமாக ஐ.நா. தீர்மானத்தில் கூறப்பட்டபடி இலங்கையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும்…

  2. ஐக்கிய நாடுகள் சபையால் (ஐ.நா.) இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது என்று இலங்கையில் உள்ள இடதுசாரிக் கட்சியான நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாஹு கருணரத்ன தெரிவித்தார். டெசோ மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசியது: இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண ஐ.நா.வை கேட்டுக் கொள்ளும் தீர்மானங்கள் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஐ.நா. சபையால் இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. அதனால் எந்தப் பலனும் ஏற்படாது. வெறும் விளம்பரம் மட்டுமே கிடைக்கும். உலகெங்கும் உள்ள தமிழர்களைக் குறிப்பாக தமிழகத்தில் உள்ளவர்களைத் திரட்டி எழுச்சி ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண முடிய…

  3. புலம்பெயர்ந்து வாழுகின்ற எங்கள் உறவுகளில் கணிசமான அளவினர் தாய்மண்ணுக்கு வந்திருப்பதைக் காண்பது மட்டற்ற மகிழ்ச்சி. தாய் மண்ணை மறக்காத- யுத்தத்தின்போது எங்கள் உயிர்ப்புக்காகக் குரல் கொடுத்த இரத்த உறவுகளைச் சந்திக்கும்போது ஆனந்தமடையாமல் இருக்க முடியாது. நல்லூர்க் கந்தனின் மகோற்சவத்தைக் கண்டுகளிக்கும் நோக்கமும், தாய்மண்ணைத் தரிசிக்கும் ஆவலும், பெற்றோரை, சகோதரங்களை, உறவுகளைச் சந்திக்கும் ஆனந்தமுமாக இங்கு வருகின்ற எங்கள் புலம்பெயர் உறவுகள் தங்கள் ஆடைக் கலாசாரத்தை - அலங்காரத்தை எங்கள் மண்ணின் பண்பாட்டிற்கும் - வாழுமிடத்திற்கும் அமைவாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அனைவரதும் விருப்பமாகும். வெளிநாடுகளில் இருந்து வருகின்ற எங்கள் உறவுகளின் தாய் தந்தையர்கள் இந்த மண்ணில் வித…

  4. [size=2] [size=5]சென்னையில் நடைபெற்ற தமிழீழ ஆதரவு முழக்கப் போராட்டம்![/size][/size] தமிழீழ ஆதரவு முழக்கப் போராட்டம் என்ற தலைப்பில், மே பதினேழு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (11.08.2012) மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலண்டன் ஒலிம்பிக் போட்டித் திடலுக்கு முன், உண்ணாப் போராட்டம் நடத்தி வரும் திரு. சிவந்தன் கோபி அவர்களுக்கு ஆதரவுத் தெரிவித்தும், தமிழீழ மண்ணை ஆக்கிரமித்துள்ள இலங்கை அரசுடன் இணைந்து வணிக முன்னெடுப்புகளை நடத்தும் இந்திய பெருமுதலாளிகளைக் கண்டித்தும், தமிழீழம் தான் ஈழத்தமிழர்களின் அரசியல் சிக்கலுக்குத் தீர்வு, எனவே, அதை பெறுவதற்கான பொது வாக்கெடுப்பும், போர்க்குற்றம் புரிந்த இராசபக்சே கும்பல் மீதான அனைத்துலக விசாரணையும் தான் தமிழர்க…

  5. இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் எந்தப் பள்ளிவாயலுக்கும் ஆபத்தில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். ஏம். அஸ்வர் கூறும் அதே வேளை இந்த ஆட்சியில் பெண்களுக்கு தமது வீட்டில் கூட தொழ முடியவில்லை என அரசாங்க அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறுகிறார். இதில் எது உண்மை என்பதை ஹக்கீமினால் பாராளுமன்றத்தில் தெளிவு படுத்த முடியுமா என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஏ. எச். ஏம். அஸ்வர் இந்த ஆட்சியில் முஸ்லிம்களின் எந்தவொரு பள்ளி வாயலும் தாக்கப்படவில்லை என உரையாற்றினார். இதேவேளை கிழக்கில் தேர்தல் பிரசாரம் செய்யும் மு.கா தலைவரோ இந்த அரசாங்கத்தில் மத சுதந்திரம் இல்லை என்றும் நோன்பு காலத்த…

  6. [size=5]தமிழர் விவகாரத்தில் அடுத்தது என்ன என்ற தமிழர்களின் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று இலங்கை வெளியுறவு அமைச்சரிடம் கேட்டதால், தன்னை பதவியில் இருந்து அரசாங்கம் மீள அழைத்துள்ளதாக மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் கல்யாணந்த கொடஹே அவர்கள் கூறியுள்ளார்.[/size] [size=4]இது குறித்து பிபிசியிடம் பேசிய தூதுவர் கொடஹே அவர்கள், '' ஜே.ஆரின் அனைத்துக் கட்சிக் கூட்டம், திம்பு பேச்சுவார்த்தை, பிரேமதாஸ- புலிகள் பேச்சுவார்த்தை, சந்திரிகா மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் அமைதி முயற்சிகள் ஆகியவற்றை தொடர்ந்து, தற்போதைய அரசாங்கம் அனைத்துக் கட்சிக் குழு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகியவற்றை காண்பித்தது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் நாடாளுமன்றதில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. இந்…

  7. சிறிலங்காவை உண்மையான குடியரசு நாடாக கட்டியெழுப்புதல் எவ்வாறு ? [ சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 08:22 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவானது உண்மையான குடியரசு நாடாக திகழவேண்டுமாயின், நிறைவேற்று அதிபர் முறைமையை ஒழித்தல் மற்றும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணுதல் என்பன முக்கியமானவையாகும். இவ்வாறு சிறிலங்காவின் அரசியல் யாப்பு மற்றும் சட்ட நிபுணரான Jayampathy Wickramaratne* இணைய ஊடகமான Lanka News Webக்கு எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்கா, குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவுற்றுள்ள நிலையில், இரண்டு குடியரசு அரசியல் யாப்புகள் தொ…

    • 2 replies
    • 823 views
  8. மகர சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஆணைக்குழு நியமித்தல் குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடிதத்தின் முழு வடிவம் கீழே தரப்படுகிறது. மாண்புமிகு மகிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி, அலரிமாளிகை, கொழும்பு 3. மேதகு ஜனாதிபதி அவர்களே! மகர சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஆணைக்குழு நியமித்தல். வேறு சிலரின் சிந்தனைகளை மகிந்த சிந்தனையாக மாற்றப்படுவது சம்பந்தமாக மீண்டும் ஒரு தடவை தங்களுக்கு நினைவூட்டுவதே இக்கடிதத்தின் நோக்கமாகும். பல பாரதூரமான விடயங்கள் சம்பந்தமான முழு விபரங்கள் கூட மகிந்த சிந்தனையின் பெயரால் மறைக்கப்பட்டு அவை காலப்போக்கில் மறக…

  9. அமெரிக்கா, சீனா, இந்தியாவுடனான புவிசார் அரசியல் விளையாட்டில் சிறிலங்கா – அமெரிக்க இராஜதந்திரி [ வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 06:17 GMT ] [ கார்வண்ணன் ] மூலோபாய ரீதியாக சிறிலங்கா எப்போதுமே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இந்து சமுத்திரத்தின் தற்போதைய நிலைமைகள் இந்தியாவை கவலை கொள்ள வைத்துள்ளது என்றும் பேராசிரியர் பற்றிக் மென்டிஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் அமெரிக்க இராஜதந்திரியும், நேட்டோ மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பசுபிக் கட்டளைப் பீடம் ஆகியவற்றின் [size=3]இராணுவப் பேராசிரியருமான பற்றிக் மென்டிஸ், சிறிலங்கா[/size]வைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொத்தலாவல பாதுகாப்பு…

    • 0 replies
    • 1.4k views
  10. மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் நான்கு பேர் தமக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்கள். மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டியில் அமைந்துள்ள மன்னார் ஜோசப்வாஸ் நகர் மீனவர்களுடைய வாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் மற்றும் மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் ஆகிவற்றின் எதிரொலியாக மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் 4 பேரூக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை மன்னார் காவல்துறை நிலையத்திற்கு சென்ற குறித்த ஊடகவியலாளர்கள் மன்னார் தலைமையக காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி துஸார தலு…

    • 0 replies
    • 528 views
  11. மக்களின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய முதலமைச்சரே கிழக்கில் தேவை: சம்பந்தன் [size=2] (சி.குருநாதன்) [size=4]ஜனாதிபதியின் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயற்படும் முதலமைச்சர் கிழக்கு மாகாண சபைக்கு தேவையில்லை. மக்களின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய முதலமைச்சரே கிழக்கு மாகாண சபைக்கு தேவையாகும். அதன் காரணமாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திருகோணமலை பிரதேசத்தில் உள்ள பொதுநல மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் உரையாற்றும்போதே…

    • 0 replies
    • 370 views
  12. இடையில் நிறுத்தப்பட்டுள்ள, இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க நடு நிலையாளராக செயற்பட தென்னாப்பிரிக்கா தயாராகி வருகிறது என சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர்களான இப்ராஹிம் இப்ராஹிம், ரொப்ல் மேயர் ஆகியோர் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்தனர். அவர்கள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அரசியல் பேச்சுவார்த்தைக்கான அணுசரனையாளராக தென்னாப்ப…

  13. தமிழ் உறவுகள் கூட்டமைப்பின் வெற்றிக்காக உதவ முன்வரவேண்டும் சுரேஷ். க. பிரேமச்சந்திரன் வேண்டுகோள் …

  14. (ஹனீக் அஹமட்) அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை இரவு ஏழு மணியளவில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்தர கூட்டமைப்பின் வேட்பாளரின் தேர்தல் காரியாலயமொன்று இன்று இரவு எதிர்க்கட்சி காரர்களினால் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டதோடு, மற்றொரு காரியாலயம் தீ வைத்துக் கொழுத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் அதாவுல்லா சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்தர கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பையின் தேர்தல் காரியாலங்களே இவ்வாறு சேதமாக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து இக்காரியாலயத்தினைத் தாக்கி தளபாடங்களை சேதமாக்கியதோடு, அங்கிருந்த இரண்டு வாகனங்களையும் சேதப்…

  15. (சி.குருநாதன்) "மாகாண சபை முறைமையை சரியான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் நீண்ட கால அபிலாiஷகளுக்கு நிரந்தரமானதும் நியாயமானதும் நிலைத்து நிற்கக்கூடியதமான அரசியல் தீர்வு ஒன்றை காணுவது தொடர்பான நடவடிக்கை நாட்டின் எல்லையை தாண்டி சர்வதேசத்தின் பார்வைக்கு சென்று விட்டது" என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். முறையான அரசியல் தீர்வு ஒன்றை காண வேண்டிய பொறுப்பிலிருந்து இலங்கை அரசாங்கம் தப்பிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். திருகோணமலை, உவர்மலை குமணன் விளையாட்டு கழக மைதானத்தில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் த…

  16. தேசியப் பிரச்சினை தீர்வு விடயம் தொடர்பில் மூத்த அரசியல்வாதி ஒருவர் அமெரிக்க பிரதிநிதி ரொபட் ஓ பிளேக்கிடம் விளக்கமளிக்கவுள்ளதாகக் கூறியிருப்பது சிறுபிள்ளை ஒன்று அப்பாவிடம் கூறிவிடுவேன் ௭ன்று கூறுவதனைப் போன்று காணப்படுகின்றது ௭ன்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.௭ல். பீரிஸ் தெரிவித்தார். பல வருடங்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற மூத்த அரசியல்வாதியிடம் இருந்து இதனைவிட ஆரோக்கியமான பங்களிப்பை ௭திர்பார்க்கின்றோம் ௭ன்றும் அமைச்சர் குறிப்பிட்டார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் ௭ழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தீர்வு விவகாரம் குறித்து அமெரிக்க பிரதிந…

    • 8 replies
    • 739 views
  17. போர்க் குற்றங்களை சுதந்திரமான ஓர் அமைப்பின் மூலம் விசாரணை செய்ய வேண்டும்; பிருந்தா காரத் [size=4]விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை சுதந்திரமான ஓர் அமைப்பின் மூலம் விசாரணை செய்ய வேண்டும் என இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் பெரும் சித்திரவதைக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களின் உரிமைகள் நிலை நாட்டப்பட வேண்டும். போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை இலங்கை அரசு கண்டறிந்து தண்டிக்க வேண்டும் அத்துடன் சுதந்திரமான ஓர் அமைப்பின் மூலம் விசாரணை நடத்தி அவர…

    • 0 replies
    • 327 views
  18. டெசோ மாநாடு - கருணாநிதிக்கு ஈழத்திலிருந்து ஒரு அகதியின் கடிதம்... மதிப்பிற்குரிய கருணாநிதி அவர்கட்கு, ... எங்கள் மீது தாங்கள் கொண்டிருக்கும் பேரன்பு எங்களைச் சிலிர்க்க வைக்கிறது. எங்கள் துன்பத்திலும், துயரத்திலும் நீங்கள் காட்டும் அக்கறையின் தீவிரம் எம்மை வியக்கவைக்கிறது. எப்படி உங்களால் மட்டும் இது முடிகிறது? தள்ளாத வயதிலும் தார்மீக உணர்வோடு தமிழீழம் காணப் புறப்பட்டிருக்கும் புதிய புறநானூறு வீரத்தலைவனே! தங்களுக்கு நிகர் தாங்களே தான். கந்தக வெடிப்பில் உடல் சிதற, செங்கழுநீர் வன்னி மண்ணில் காட்டாறாக ஓட, எம்மவர் உயிர்கள் இடம்பெயர்ந்து பறக்க - இந்த அவலங்கள் கண்டு துடிதுடித்தெழுந்து நீங்கள் சுழற்றிய வாளின் வீச்சு கண்டு திகைத்துத்தான் போய்விட்டோம…

  19. “திராவிடர் விடுதலைக் கழகம்” இது புதிய பெயரல்ல, புதிய முன்னெடுப்பு Published By பெரியார்தளம் On Monday, August 13th 2012. Under திராவிடர் விடுதலைக் கழகம் 12-08-2012 ஞாயிறு அன்று காலை 10-00 மணிக்கு, ஈரோடு செல்லாயம்மாள் திருமண மண்டபத்தில், “இலக்கு நோக்கிய இலட்சியப் பாதையில் இணையும் தோழர்களின் சந்திப்பு”, கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முன்னதாக, கழகத் தலைவர் தலைமையில் தோழர்கள் திரளாக சென்று, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் 82 தலைமை செயற்குழு உறுப்பினர்கள…

    • 1 reply
    • 2.9k views
  20. [size=2][size=3]யாழில் அண்மைக்காலமாக விபச்சாரம் கோலோச்சுவதாக பத்திரிகைகளும் இணையத்தளங்களும் செய்தி வெளியிடுகின்றன.[/size] [size=3][/size][/size] [size=2][size=3]உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த தொழில்களில் ஒன்று விபச்சாரம் எனப்படும் பாலியல் தொழில். எமது இலங்கை இந்தியாபோன்ற நாடுகளை பொறுத்தவரையில் பெரும்பாலும் 99% பாலியல் தொழில் என்றாலே பெண்களால் ஆண்களின் பாலியல் தேவைகளை நிவர்த்திசெய்ய நடத்தப்படுவதாகவே உள்ளது. ஆனால் மேற்குலகை பொறுத்தவரையில் பெண்களின் பாலியல் தேவைகளை பூர்த்திசெய்ய ஆண்களும் பாலியல் தொழில் செய்ய ஆரம்பித்து பலவருடங்கள் ஆகிறது. இந்த இடத்தில் கட்டாயம் ஒருவிடயம் சொல்லவேணும். 1982- 83 ஆண்டு காலப்பகுதியிலேயே பாரிசில் வசித்த எனது நண்பர்கள் சிலர் மாலை வே…

  21. காத்தான்குடி பள்ளிவாயல்களில் கடந்த 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி கொலை செய்யப்பட்ட 103 முஸ்லிம்களினதும் 22வது ஆண்டு நினைவு தினம் இன்று காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு நகரங்களில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தின் போது காத்தான்குடி மீரா ஜூம்ஆ பள்ளிவாயில் மற்றும் ஹூஸைனயா பள்ளிவாயில் ஆகிய இரு பள்ளிவாயல்களில் புனித இரவுநேரத்தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது நடாத்திய துப்பாக்கித்தாக்குதல்களினால் 103 பேர் ஸ்தலத்திலேலேயே படுகொலை செய்யப்பட்டனர். சம்பவத்தில் தொழுகையிலிருந்த 265பேர் படுகாயமடைந்து அங்கவீனர்களாக்கப்பட்டனர். இச்சம்பவத்தின் 22ஆவது நினைவு தினமான இன்று காத்தான்குடி நகரில் பூரண துக்கதினம் அனுஷ்டிக்கப்படுவதுடன் கடைகள் வங்கிகள் மூடப்பட்டிரு…

    • 31 replies
    • 2.9k views
  22. சென்னையில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டை நடத்துவதற்கு அனுமதி அளித்ததற்கு, சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவிடம் கவலை தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் ஊடாக இந்திய அரசாங்கத்துக்கு சிறிலங்காவின் கவலை தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். “சிறிலங்கா அரசாங்கம் அமைதியாக இருக்கிறது என்று அர்த்தமில்லை. மிகவும் பொருத்தமான இராஜதந்திர வழிமுறை மூலம் இந்தியாவுக்கு எமது கவலையைத் தெரியப்படுத்தியுள்ளோம். சிறிலங்காவின் இறையாண்மைக்கு எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்காது. டெசோ மாநாடு திமுக தலைவர் கருணாநி…

  23. [size=5]அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு மன்னார் நீதிமன்றம் அழைப்பாணை[/size] [size=5]அமைச்சர் ரிஷாத் பதியுதீனை இம்மாதம் 27ஆம் திகதி மன்னார் நீதிமன்றில் ஆஜராகுமாறு மன்னார் நீதவான் ஆர்.திஸ்ஸநாயக்க அழைப்பாணை விடுத்துள்ளார். மன்னார் நீதிபதியை தொலைபேசியில் மிரட்டியதாக கூறப்படுகின்றமை தொடர்பில் விளக்கமளிக்கவே அமைச்சரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருக்கிறது.[/size] http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/46594-2012-08-13-10-41-11.html

  24. மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசமான வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளியால் பலவீடுகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனைகட்டியவெளியில் 8வீடுகள் முற்றாக அழிந்துள்ளதுடன் பாலையடிவெட்டையில் 16 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. http://www.virakesari.lk/article/local.php?vid=153

  25. இலங்கையில் பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடியதில் நியாயமுள்ளது. அமைதி வழியில் போராடி பலனளிக்காது போகவே அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். என இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர் பிரச்சினை தீர தமிழீழமே தீர்வு எனவும் அதனைப் பெற இந்திய மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் அவர் உரைத்துள்ளார். நேற்று தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தலைமையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்படி தெரிவித்துள்ளார். அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில், இலங்கையில் தமிழீழம் என்ற தனி நாடு கேட்டு நடக்கும் போராட்டத்துக்கு நீங்கள் ஆதரவு அளிக்கிறீர்களே என…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.