Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=5]இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பயணம் குறித்து அறிவிக்கப்படவில்லை - வெளியுறவு அமைச்சு[/size] [size=4]இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்ஷங்கர் மேனன் இந்த மாதத்தின் இறுதியில் இலங்கைக்குப் பயணம் செய்வாரென்பது குறித்துத் தமக்கு உத்தியோகபூ[/size][size=4]ர்வமாக அறிவிக்கப்படவில்லையென இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.[/size] [size=4]ஷிவ்ஷங்கர் மேனன் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வாரெனவும், நில ஆக்கிரமிப்பு உட்பட்ட விடயங்கள் குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் அவர் பேச்சு நடத்துவாரெனவும் கடந்த வாரம் செய்தி வெளியாகியிருந்தது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் இந்தச் செய்தியை தற்போது உறுதி செய்துள்ளது. ஜெனிவா மனித உரிமைச் சபை மகாநாட்டின் தொடர்ச்சியாக இந்தப் பயண…

    • 0 replies
    • 477 views
  2. இலங்கையில் சிறுவர்கள், பெண்கள் அதிகம் பாலியல் கடத்தலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அதிலும் பெண்களைவிட சிறுவர்கள் பலாத்காரமாக கடலோரா சுற்றுலா தள பகுதிகளில் பாலியல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும் ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் நேற்று (19) வெளியிட்டுள்ள மனித கடத்தல் தொடர்பான வருடாந்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தோட்ட உலர் மண்டல விவசாயத்துறை, மீன்-உலர்த்தி தொழில் துறை மற்றும் மீன் பிடித்துறையில் சிறுவர்கள் பலாத்காரமாக தொழிலுக்குச் சேர்க்கப்படுவதாக ஐக்கிய அமெரிக்காவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேயிலை தோட்டப்புற தமிழ் சிறுவர்கள் சிலர் கொழும்பில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுவதாகவும் …

  3. கியூபாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கியூபாவின் முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ரோவைச் சந்திக்க முயன்ற போதும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கியூபாவின் முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ரோ, உலகில் மதிப்புக்குரிய தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். தற்போது ஓய்வில் உள்ள அவர், கியூபாவில் இப்போதும் செல்வாக்குமிக்க ஒருவராகவே இருந்து வருகிறார். இவரைச் சந்தித்துப் பேச சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் ஊடாக முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆனால் அவரது கியூப பயணத்தின் போது பிடெல் காஸ்ரோவை சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. கியூபா சென்ற பல வெளிநாட்டுத் தலைவர்களை பிடெல் காஸ்ரோ …

    • 2 replies
    • 836 views
  4. சிறீலங்காவில் குடியிருக்கும் சிங்களவர்கள் மனித நேயத்தை மட்டுமன்றி, மதங்களையும் அவமதிக்கும் தன்மை கொண்டவர்கள் என்பது பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டுள்ள பின்புலத்தில், தற்பொழுதும் அது தமிழ் மக்களை எந்த அளவில் பாதித்துள்ளது என்பதற்கு மற்றொரு ஆதாரம் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர், கீரிமலை நைநாதீவு நாகபூசணி மற்றும் தொண்டமனாறு செல்வச்சன்னிதி என்று நீளும் மத ஆக்கிரமிப்பு பட்டியலுக்கு அடுத்த கட்டமாக கிறிஸ்தவ மக்களின் அருள்மிக்க புனித தலமாக போற்றப்படும் மடு ஆலயத்தில் அண்மையில் நிறுவப்பட்டுள்ள அறிவித்தல் பலகை ஒன்று அங்கு எந்த அளவில் மத அவமதிப்பு இடம்பெற்றுள்ளது என்பதற்கு எடுத்துக் காட்டாக உள்ளது. ஆக்கிரமிப்பு போர்க்காலத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆதரவு வழங்கியபோது…

    • 0 replies
    • 677 views
  5. குவைத்தில் நீண்ட காலம் பணியாற்றிய பின்னர் இலங்கை திரும்பத் தயாராக இருந்த பெண்ணொருவரை பலாத்காரமாகக் கடத்திச் சென்று அவர் மீது மூன்று இளைஞர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த மூன்று இளைஞர்களும் குவைத் நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.தன்னை வாகனம் ஒன்றில் கடத்திச் சென்ற மூன்று இளைஞர்களும் பிரமாண்டமான கட்டடம் ஒன்றுக்குப் பின்புறமாகக் கொண்டு சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர் என பாதிக்கப்பட்ட பெண் குவைத் பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார் http://thaaitamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E…

    • 0 replies
    • 932 views
  6. ஹம்பாந்தோட்டையில் தமது கட்சி அங்கத்தவர் இருவரின் கொலைக்கு அரசியல் பின்னணி உள்ளதாகவும் இந்த இரு மரணங்களுக்குமான பொறுப்பை மஹிந்த ராஜபக்ஷ அரசே ஏற்க வேண்டும் என்றும் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். நேற்று (19) கொழும்பு கோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், தற்போது மக்களுக்குரிய பொறுப்பு மனிதப் படுகொலை புரியும் மஹிந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதே. ஹம்பாந்தோட்டை கொலையுடன் தொடர்புடைய அமரே என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தமையானது, அரச தரப்பைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதியின் ஆலோசனை காரணமாகவே. அதுவும் அவர் பழைய குற்றம் ஒன்றுக்காகவே நீதிமன்றில் சரணடைந்தார். இதனை அவரே பகிரங்கமாகக் கூறியுள்ளார் என்றும் …

    • 0 replies
    • 1.1k views
  7. ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகள் குழுவை சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்க மறுத்தால், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை அடுத்தகட்டமாக கடும் நடவடிக்கைகளில் இறங்கக் கூடும் என்று ஜெனிவா தகவல்கள தெரிவிக்கின்றன. சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளத் தயாராகி வருவதாக ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை ஏற்கனவே சிறிலங்கா அரசுக்குத் தகவல் அனுப்பியிருந்தார். அத்துடன் சிறப்புக் குழுவொன்றையும் அனுப்பப் போவதாகவும் அவர் சிறிலங்கா அரசுக்கு அறிவித்திருந்தார். ஆனால், நவிபிள்ளையின் கடிதத்துக்குப் பதில் அனுப்புவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், இந்த விவகாரம் குறித்து மௌனத்தை கடைப்பிடிக்கவும் முடிவு செய்துள்ளது. இருந்தாலும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவ…

    • 0 replies
    • 692 views
  8. 2012ம் ஆண்டிற்கான மாவீரர் நினைவு காற்பந்தாட்டச் சுற்றுப் போட்டி Zeist-Oost எனும் இடத்தில் 16.06.2012 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.இப்போட்டி நெதர்லாந்தைச் சேர்ந்த ஏழு கழகங்களிற்கிடையில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து நெதர்லாந்துத் தேசியக் கொடி, தமிழீழத் தேசியக் கொடி என்பன ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் போட்டி ஆரம்பமானது. போட்டியினிறுதியில் Roermond/Amsterdam விளையாட்டுக்கழகம் முதலிடத்தையும் TFC Brabant விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தையும் Denhelder விளையாட்டுக் கழகம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன. இவ்வாண்டிற்கான சுழல் கிண்ணத்தை Roermond/Amsterdam விளையாட்டுக்கழகம் தட்டிச் சென்றது. போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக…

    • 0 replies
    • 509 views
  9. உலகிலேயே மிக மோசமான மனித குல அழிவில் ஈடுபட்டு சர்வதேச அரங்கில் போர்க் குற்றவாளியாக உள்ள சிறிலங்கா இராணுவத்தினர் லெபனானிலும் ஹெய்ட்டியிலும் அமைதிகாக்கும் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளனர். சிறிலங்காவிலிருந்து 150 இராணுவத்தினர் இவ்வாறு லெபனானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் 25 ஆம் திகதி அனுப்பி வைக்கப்படவுள்ள இந்தக் குழுவில் 10 இராணுவ அதிகாரிகள் அடங்குவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்தார். ஹெய்ட்டியின் அமைதிகாக்கும் பணிகளுக்கு 7 அதிகாரிகளும், 111 இராணுவத்தினரும் அடுத்தமாதம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக…

    • 0 replies
    • 432 views
  10. [size=3] [size=4]நாட்டில் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவே இருந்து வருகின்றது. [/size] [size=4]கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தத்தின் போது தமிழ் மொழி மூலம் கல்வி கற்ற மாணவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து யுத்தத்தில் ஈடுபட்டதாலும் கல்வி கற்ற சமூகத்தினர் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்தமையினாலும் தமிழ் சமூகம் கல்வியில் பின்னடைந்துள்ளனர். இதனால் தான் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பதில் பெரும் குறைபாடுகள் நிலவி வருவதாகக் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறியுள்ளார். [/size] [size=4]பம்பலப்பிட்டியிலுள்ள முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தின் வருடாந்த கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து…

  11. அரசின் திட்டமிட்ட நில அபகரிப்பினை எதிர்த்தும் மக்களை முழுமையாக மீள்குடியேற்றம் செய்யக் கோரியும் வலி. வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் காவற்றுறையினரால் தடுக்கப்பட்ட போதிலும் இறுதியில் குறிப்பிட்ட அளவு மக்கள் தெல்லிப்பளை பிரதேச செயலாளரிடம் சென்று மகஜர் கையளித்தனர். வலி. வடக்குப் பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன் தலைமையில் இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் இருநூற்றைம்பது பேர் வரையான மக்கள் கலந்து கொண்டனர். தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தில் பூசை வழிபாடுகளை மேற்கொண்ட பினனர் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக தெல்லிப்பளை பிரதேச செயலரிடம் மகஜர் கையளிக்கச் சென்ற மக்களைத் தடுத்த காவற்றுறையினர் ஆலய வாசலில் மறித்து மேலும் செல்லவிடாது தடுத்தனர். இதனையடுத்து, ஆப்பாட்டக்காரர…

  12. [size=4]'கியூபெக்கில் மனிதவுரிமைகளைப் பேணாத கனேடிய அரசு, ஏனைய நாடுகளை குற்றம் சுமத்தக் கூடாது! - சிறிலங்கா எச்சரிக்கை!![/size] [size=4] [/size] [size=4]கியூபெக்கில் மனிதவுரிமைகளைப் பேணாத கனேடிய அரசு, மனிதவுரிமை விவகாரங்கள் தொடர்பில் ஏனைய நாடுகளை குற்றம் சுமத்தக் கூடாது என சிறிலங்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.[/size] [size=4] [/size] [size=4]ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 20வது அமர்வில் ஆரம்ப உரை நிகழ்த்திய மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறாத நாடுகளின் பட்டியலில் கியூபெக் மனிதவுரிமை விவகாரங்கள் தொடர்பிலும் உள்ளடக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.[/size] [size=4] [/size] [size=4]நவநீதம்பிள்…

  13. கடந்த 3 மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் காணாமல் போன தனது 18 வயது இளம் பெண்ணைத் தேடிக் களைத்த நிலையில் சேர்வடைந்த தந்தை ஊடகங்களுக்குத் தனது உள்ளக் குமுறலைத் தெரிவித்துள்ளார். அவர் வேதனையுடன் தெரிவித்த சில விடயங்கள் கீழ்வருமாறு, எனது சொந்த இடம் வன்னி ஜெயபுரம். எனக்கு 4 பிள்ளைகள். மனைவியும் ஒரு மகளும் இறுதி யுத்தத்தில் இறந்துவிட்டார்கள். யுத்தம் முடிவடைந்த பின்னர் எனது வறுமை நிலை காரணமாக நிறுவனம் ஒன்றின் மூலம் எனது இரண்டாவது மகளான யோகேஸ்வரன் சர்மினியை தெல்லிப்பளை துர்கை அம்மன் கோவில் நடாத்திவரும் சிறுவர் இல்லத்தில் சேர்த்து படிப்பித்து வந்தேன். இறுதி யுத்தம் காரணமாக ஒரு வருடம் படிக்காததால் மருதனார்மடம் இராமநாதன் மகளீர் கல்லூரியில் க.பொ.த (சா.த)தில் கல்வி கற்…

  14. போர்குற்றவாளி தமிழினப்படுகொலையாளி மகிந்த ராஜபக்ஷ லண்டன் வருவதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து புலிக்கொடிகளுடன் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ள தமிழர்கள். மேலதிக செய்திகள் விரைவில். http://thaaitamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8/

  15. [size=3][/size] [size=3][size=4]இந்திய நடிகர், நடிக்கைகளுக்கு வழங்கப்படும் கவனிப்பை இலங்கை விவசாயிகளுக்கு தற்போதைய அரசாங்கம் வழங்க மறுத்துள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கார்ல்டன் றகர் போட்டிக்கு இந்திய நடிகர், நடிகைகளை வரவழைத்து அவர்களுக்கு கோடி கணக்கில் நிதி செலவிடும் அரசாங்கத்தால் விவசாயிகளுக்கு ஏன் நிவாரணம் வழங்க முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.[/size][/size] [size=3][size=4]350 ரூபாவுக்கு உரம் வழங்கியதால் விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வ…

  16. நில ஆக்கிரமிப்புக்கு எதிராக சில போராட்டங்கள் நடந்துள்ளன. இனிவரும் காலங்களில்போராட்டங்கள் வெடிக்கும், ஆரம்பமாக அதன் நீட்சியாக எதிர்வரும் 26ம் திகதி முறிகண்டி ஆலயமுன்றலில் காலை 10மணிக்கு கவனயீர்ப்பு உண்ணாவிரதத்தை நடத்தவுள்ளோம் இதில் கட்சி வேறுபாடுகள்களைந்து, இன விடுதலைக்காக அனைத்துத் தரப்பினரும், பாதிக்கப்பட்ட மக்களும் கலந்து கொள்ளவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்அழைப்பு விடுத்துள்ளனர். உலக ஓட்டத்திற்கு தன்னையொரு மிகை ஜனநாயகவாதியாக காட்டிக் கொள்ளும் இலங்கை அரசாங்கம் மறுபுறத்தில்,தமிழ் இனத்தின் சுயத்தை மெல்ல மெல்ல அழித்து காலக்கிரமத்தில் அந்த இனத்தையே இல்லாமல் செய்வதற்குரியநடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பாகமாகவே தமிழர் தாயப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவர…

    • 0 replies
    • 837 views
  17. [size=4]பௌத்த பிக்குகள் நாடாளுமன்றத்திற்கு சென்றதன் காரணமாகவே விடுதலைப்புலிகளுடானான போரில் வெற்றிப்பெற்றதாக கருத்து கட்டியெழுப்பபட்டு வருவதாகவும் எனினும் உண்மைக்கு புறம்பானது மாத்திரமல்ல, அது மிதமிஞ்சிய மதிப்பீடு எனவும் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.பௌத்த பிக்குகள் இந்த நாட்டின் அரசியல் விடயங்களில் மறைமுகமாக சம்பந்தப்பட்டிருந்தனர் என்பது தெளிவான விடயம். எனினும் பிக்குகள் நாடாளுமன்றத்தில் அமர தேர்தலில் போட்டியிட்ட அரசியலுடன் அதனை ஒப்பிடுவது உண்மைக்கு புறம்பானது. பௌத்த பிக்குகள் நாட்டின் கலாசாரம், அரசியல் நடவடிக்கைகளில் பண்டைய காலம் தொட்டே மறைமுகமாக ஈடுபட்டு வந்துள்ளனர். எனினும் தற்போது அவர்கள் அரசியலில் ஈடுபடுவது என்பது கெடுதியான செயற்பாடு, நாடாளுமன்றத்…

  18. [size=4]தென்னியன்குளம் பகுதியில் 200 ஏக்கர் காணியையும் கோட்டைகட்டியகுளம் பகுதியில் 150 ஏக்கர் காணியையும் தேறாங்கண்டல் பகுதியில் சுமார் 250 ஏக்கர் காணியையும் துணுக்காய் ஆலங்குளம் பகுதியில் 112 ஏக்கர் காணியையும் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.[/size] [size=4]முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் சுமார் 712 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர் என்று தெரிய வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களில் பொதுமக்களின் காணிகளையும் அரச காணிகளையும் இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளதுடன் அந்தக் காணிகளைத் தமக்கு வழங்குமாறு தொடர்ந்தும் வற்புறுத்தி வருகின்றனர். துணுக்காய் தென்னியன்குளம் பகுதியில் 200 ஏக்கர் காண…

  19. தமிழீழ விடுதலைப் போரில் முதற் பலியான தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவாக கழகங்களுக்கு இடையில் நடத்தப்படும் ‘பொன் சிவகுமாரன் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான’ உதைபந்தாட்டப் போட்டிகள் மூன்றாவது வருடமாக இம்முறையும், ரொறன்ரோவில், தமிழ் இளையோர் அமைப்பினாலும் கனடியத் தமிழர் விளையாட்டுத் துறையினாலும் இணைந்து தியாகி பொன் சிவகுமாரனின் நினைவு நாளான ஜூன் 17 ஆம் நாளான சனிக்கிழமை ‘சில்வர் ஸ்பிரிங்’ விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது. தமிழீழத் தேசியக்கொடி மற்றும் கனடியத் தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் ரொறன்ரோ பெரும்பாகத்திலிருந்து பல விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றியிருந்தன. இத்துடன் பெருந்தொகையான அளைவில் இளையோர்களும் இதில் கலந்துகொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்றன. ந…

    • 0 replies
    • 564 views
  20. யாழ். மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் முக்கிய அரசியல் செயற்பாட்டு நிலையமாக விளங்கிய பொற்பதி அரசியல்துறை செயலக கட்டிடத்தில், தற்போது ஒட்டுக்குழு ஈ.பி.டி.பியினர் முகாமிட்டு அதனை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு முயற்சித்து வருவதாக பிரதேச மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறித்த கட்டிடத்தில், 1995ம் ஆண்டு வரையும், பின்னர் சமாதான காலத்திலும்,தமிழீழ விடுதலை புலிகள் தமது அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்திவந்தனர். எனினும் யுத்தம் தீவிரமடைந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் புலிகள் வெளியேறினர். இதன் பின்னர் மூடப்பட்டிருந்த வீடு விசேட அதிரடிப்படையினரால் தீயிடப்பட்டதுடன், பொற்பதி பகுதியிலிருந்த பல இளைஞர்கள் கடத்தப்பட்டும், காணாமல்போயும், சுட்டுக் கொல்லப்பட்டும் …

    • 2 replies
    • 1.2k views
  21. [size=4]அவுஸ்திரேலியாவில் கடந்த 2004ம் ஆண்டு முதல் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை புகலிடக் கோரிக்கையாளரை விடுதலை செய்யுமாறு அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 36 வயதான குறித்த நபருக்கு புகலிடம் வழங்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக பாதுகாப்பு வீசா வழங்க மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]எனினும் குறித்த புகலிடக் கோரிக்கையாளரை காலவரையறையின்றி தடுத்து வைப்பது சட்டவிரோதமானது என அவரது சட்டத்தரணி நீதிமன்றில் வாதிட்டுள்ளார். இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாகவும், வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருவதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.[/size] [size=4]http://www.sei…

  22. [size=4][/size] [size=4]பொது மக்களின் பணத்தை கொள்ளையிட்டு ஆட்சி நடாத்திவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை விரட்டியடிக்கும் மக்கள் போராட்டங்களை ஜூலை மாதம் ஆரம்பிக்க போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கான ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சகல தொகுதி அமைப்பாளர்களும் தற்போது இருந்தே அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.[/size] [size=4]ஊழல் மிக்க இந்த அரசாங்கத்தை வீழ்த்தி, மக்கள் மற்றும் நாட்டுக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த போகும் இந்த பயணத்திற்னு பங்களிப்புச் செய்யாத, பொறுப்புக்களை தட்டிக்கழிக்கும் தொகுதி அமைப்பாளர், ஊடனடியாக அந்த பதவிகளில் இருந்து நீக்கப…

  23. [size=5]'ஜெனிவா தீர்மானம் தேவை அற்றது! - மனிதவுரிமை ஆணைக்குழுவின் 20வது அமர்வில் சிறிலங்கா காட்டம்!!'[/size] [size=4] [/size] [size=4]ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற 19வது அமர்வில் சிறிலங்கா மீது தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தேவையற்ற ஒன்று என சிறிலங்கா தெரிவித்துள்ளது.[/size] [size=4]ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 20வது கூட்டத் தொடரில் ஆரம்பவுiரையை ஆற்றிய ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையோ அல்லது வேறு எந்தப் பிரதிநிதிகளுமோ இலங்கை விவகாரம் தொடர்பில் எதுவும் குறிப்பிடாத நிலையில், இவ்வமர்வின் ஆரம்பத்தில் உரையாற்றிய ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவர் மனிசா குணசேகர இவ்வாறு கூறியு…

  24. [size=4]புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் சூரி மற்றும் நகரசபை உறுப்பினர் உட்பட நான்கு பேர் குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.[/size] [size=4]வவுனியா மாவட்ட புளொட் அமைப்பின் பொறுப்பாளராக சூரி என்பவர் செயற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் மற்றும் இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கியமை என்பன தொடர்பாகவே குறித்த புளொட் உறுப்பினர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.[/size] [size=4]புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட முன்னாள் பொறுப் பாளரான சூரி மீது கொள்ளை முதலான பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக பொலிஸார் அவரைத் தேடியவேள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.