ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143398 topics in this forum
-
புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட இரு நபர்கள் தமிழ் வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் பெற முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இந்த இரு நபர்களும் லண்டனில் கல்வி பயிலும் குறித்த தமிழ் வர்த்தகரின் மகனின் நண்பர்கள் எனத் தெரிய வந்துள்ளது. லண்டனில் கல்வி பயிலும் வர்த்தகரின் மகனைக் கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தி அவரிடமிருந்து 50 இலட்சம் ரூபா கப்பம் கோரியமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. புத்தளம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பிரதேசங்க்களைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டவர்களாவர். தமக்கான கப்பப் பணமான 50 லட்ச ரூபாவையும் ஸ்ரேலிங் பவுணாக வழங்குமாறு கோரியுள்ளனர். மேல் மாகாணத்துக்கான பிரதி பொலிஸ் அதிபருக்குக் கிடைத்த தகவல் ஒ…
-
- 0 replies
- 559 views
-
-
வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலமாக மீள் குடியேற்ற நடவடிக்கைகள் இழுபறியில் இருந்து வருகின்ற திருமுறிகண்டி கிராமத்தில் உள்ள தமக்குச் சொந்தமாக காணிகளில் தாங்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்க வேண்டும், இராணுவத்தின் பொறுப்பில் உள்ள அந்தக் காணிகள் தங்களிடம் கையளிக்கப்பட வேண்டும் எனக்கோரி, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார்கள். இந்தப் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களை அதியுயர் பாதுகாப்பு வலயம் என பிரகடப்படுத்தி இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தி வந்துள்ளது. எனினும் இந்தப் பகுதிகளில் கண்ணிவெடிகள் இன்னும் அகற்றப்படாத காரணத்தினாலேயே இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்யப்படவில்…
-
- 0 replies
- 432 views
-
-
தமிழ்மக்களின் முதன்மை தலங்களில் ஒன்றாக விளங்கும் கதிர்காம முருகன்ஆலய வளாகத்தில் உல்லாச விடுதி அமைக்கும் முயற்சியில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது! கதிர்காம முருகன் ஆலய வளாகத்தில் நிலத்தினை கையகப்படுத்தி அங்கு உல்லாச விடுதிஅமைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக வழக்கு தாக்கல் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இந்த அரசின் கோரிக்கையினை இரத்து செய்யுமாறு நீமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அதன் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. கதிர்காம முருகன் ஆலயத்திற்கு சொந்தமான 600 ஏக்கர் நிலப்பரப்பினை கையகப்படுத்தி அங்கு விளையாட்டு திடல் உல்லாச விடுதிகளை அமைக்கும் முயற்சியினை சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது இதனை எதிர்த்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதுதொடர்பாக வி…
-
- 0 replies
- 504 views
-
-
ஐ.நாவின் அவமானப் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டது! ஐக்கிய நாடுகள் சபையின் அவமானப் பட்டியலில் இருந்து இலங்கையை, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் நீக்கியுள்ளார். 2011ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையில் இந்நீக்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தத்தின் போது சிறுவர் போராளிகளை பயன்படுத்தியமை தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பன ஐக்கிய நாடுகள் சபையின் அவமானப் பட்டியிலில் சேர்க்கப்பட்டது. யுத்தம் நிறைவடைந்த நிலையில் விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்ததைத் தொடர்ந்து அப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் நீக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது தமிழ் மக்கள் விடுதலைப் …
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசனின் கருத்து அமெரிக்க ராஜாங்கக் கொள்கைககளுக்கு அமைவானது என அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது. புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட சிசன் அண்மையில் இலங்கையில் தொடர்பில் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இலங்கை தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் அமெரிக்க ராஜாங்கக் கொள்கைகளுக்கு அமைவானதே என குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக்கான புதிய தூதுவர் பதவியை பெற்றுக் கொள்வதற்காக வெளிவிவகார செனட்சபையில் சிசன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். மனித உரிமை விவகாரம், வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுதல், வட மாகாணசபை தேர்தல் உள்ளிட்ட சில விடங்கள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார். அமெரிக்கத் தூதுவரின் கருத்துக்கும் அமெரிக்க ரா…
-
- 2 replies
- 793 views
-
-
-
- 0 replies
- 555 views
-
-
யாழ் பரமேஸ்வரா சந்திக்கு அருகில் நேற்று பிற்பகல் மது போதையில் சென்ற சிங்கள குழுஇளைஞர்கள் உந்துருளியில் பயணித்த தமிழ்இளைஞர்கள் இருவரை கடுமையாக தக்கியுள்ளார்கள். ஊர்தி ஒன்றில் சென்று கொண்டிருந்த 6பேர் அடங்கிய சிங்கள இளைஞர்கள் உந்துருளியில் சென்ற இருவரை மறித்து கடுமையாக தாக்கியுள்ளார்கள்.ஊர்தியால் உந்துருளியினை மோதி விழுத்திவிட்டு அதில் பயணித்த இரண்டு இளைஞர்கள் மீது கடும் தாக்குதலினை நடத்தியுள்ளார்கள். வீதியால் உந்துருளியில் சென்று கொண்டிருந்த பரித்தானியாவில் இருந்து சென்ற இளைஞனும் இன்னும் ஒருவரும் சென்று கொண்டிருந்த போது ஊர்தி செல்வதற்கு பாதை விட்டுக்கொடுக்காததன் காரணத்தால் இவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை சிங்கள இளைஞர்கள் மேற்கொண்டுள்ளார்கள். இரு…
-
- 3 replies
- 1.3k views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலை ஊழல் மோசடிகளை வெளிக்கொணர்ந்த வைத்திய சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் பழிவாங்கப்பட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகளை வெளிக்கொணர அரச வைத்திய சங்கம் மேற்கொண்டிருந்த நிலையில் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை பணிப்பாளர் மேற்கொண்டுள்ளார் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுப் பொறுப்பதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டமை திட்டமிடப்பட்ட ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள அரச வைத்திய சங்கத்தின் யாழ்.கிளையினர் இது தொடர்பில் பணிப்பாளர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாது போனால் பணிப்புறக்கணிப…
-
- 1 reply
- 966 views
-
-
யேர்மனியில் Berlin மற்றும் Hagen நகரங்களில் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது . நினைவு நிகழ்வில் கலந்துகொண்ட இளையோர்கள் ,பொதுமக்கள் தியாகி பொன் சிவகுமாரனின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர் . அத்தோடு Hagen நகரில் ஈழத்தமிழர்களின் சிறுவர்கள் அவல நிலை குறித்து யேர்மனிய மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் "அவர்களுக்கும் ஆசைகள் உண்டு" எனும் நிகழ்வும் நடைபெற்றது . அங்கே இவ் விடையம் சார்ந்த துண்டுப்பிரசுரம் மக்களுக்கு வழங்கப்பட்டு இளையோர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது . புரட்சியும் எழுச்சியும் இளைஞர் சமூகத்திடமிருந்து தான் தோற்றம் பெறுகின்றது. எனவே, தமிழ் மாணவர்களின் கல்வியைச் சீரழிப்பதன் மூலம் மக்க…
-
- 2 replies
- 899 views
-
-
வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழம் சார்பாக பங்கேற்ற அணியினருக்கு அவர்கள் வாழும் நாடுகளில் பலத்த வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.உலகளாவிய தமிழ் இளையேர் அவையின் ஏற்பாட்டில், சர்வதேச அரங்கில் இடம்பெறும் இந்த காற்பந்தாட்ட போட்டியான வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணியும் பங்கு பற்றி விளையாடி இருந்தது. குருதிஸ்தானில் (வட இராக்) இடம்பெற்ற இந்த உலகக்கிண்ணப் போட்டியில், தமிழீழம் அணி சார்பாக கனடா, சுவிற்சர்லாந்து, மற்றும் பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழ் விளையாட்டு வீரர்கள் விளையாடி இருந்தனர். இவ்வாறு தமிழீழ அணிக்காக பிரித்தானியாவில் இருந்து சென்று விளையாடிய வீரர்கள் இரவு (10-06-2012) லண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையத்திற்கு வந்தபோது, அங்கு வரவேற்பு அளிக்கப்பட…
-
- 8 replies
- 1.4k views
-
-
பருத்தித்துறை இன்பருட்டிப்பகுதியில் இன்றிரவு மற்றொரு மீனவ சங்க பிரமுகரும் தாக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மயிலிட்டி மீனவ சங்கத் தலைவர் தாக்கப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாளுக்கு நாள் இந்த தாக்குதல் சம்பவங்கள் மோசமான கட்டத்தை அடைந்து வருகின்றன. வீட்டினுள் அத்துமீறி உட்பிரவேசித்த கும்பலொன்றே இத்தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகின்றது. அக்கும்பல் அங்கிருந்த பொருட்கள் சிலவற்றை சூறையாட முற்பட்டதாகவும கூறப்படுகின்றது. குறிப்பாக இடம்யெர்ந்த மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை கடந்த ஒன்பது நாட்களுக்கு மேலாக குறித்த தரப்புக்கள் தடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளையடுத்தே இன்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வல…
-
- 0 replies
- 638 views
-
-
லண்டனில் கடந்த வருடம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தமிழ்ச் சிறுமியான துஷா கமலேஷ்வரன் தன்னால் எழுந்த நடக்க முடியாத போதிலும் தனது பெற்றோருடன் தனது பொழுதினை மிக மகிழ்ச்சியாக செலவழித்து வருகின்றார். அடுத்தமாதம் 20 ஆம் திகதி தனது 7 ஆவது வயதை கடக்கவுள்ள துஷாவினால் தற்போது எழுந்து நடக்கமுடியாது. தெற்கு லண்டனில் உள்ள கடையொன்றில் வைத்து கடந்த வருடம் மார்ச் மாதம் இவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். இச்சிறுமியின் பெற்றோர் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் ஆவர். அதன்பின்னர் அச்சிறுமியின் இடுப்பிற்கு கீழான பகுதி செயலிழந்து போனதுடன் இவரால் இனிமேல் எழுந்து நடக்கமுடியாதென மருத்துவர்கள் குறிப்பிட்டனர். எனினும் தனது தன்னம்பிக்கையை இழக்காத துஷா பெற்றோர…
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழீழ மாணவர் எழுச்சி நாள், நோர்வே ஒஸ்லோ நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக தமிழ் இளையோர் நடுவத்தினரால் நேற்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் இளையோர் நடுவத்தின் ஆரம்ப நாளாகவும் இது அமையபெற்றிருந்தது. நிகழ்வினை முல்லை நிசாந்தன் தொகுத்து வழங்க, பொதுச்சுடறேற்றலைத் தொடர்ந்து, அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. நிகழ்வின் பொதுச்சுடரினை சட்டவாளர் ஸ்டெஇனர் ஸ்டென்வாக் ஏற்றிவைக்க, தியாகி பொன்.சிவகுமாரனின் திருவுருவபடத்திற்க்கான மலர்மாலையினை நோர்வே தமிழ் இளையோர் நடுவ இணைப்பாளர் திரு. மேனன் அணிவித்து ஈகைச்சுடரினையும் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து, இதே நாளில் வீரச்சாவினை தழுவிய மாவீரர்களான லெப்.கேணல் அன்பு/அம்மா, லெப்.கேணல் சாள்ஸ், லெப்.கேணல் டேவிட் ஆகியோரின் …
-
- 0 replies
- 727 views
-
-
கனேடிய அரசாங்கம் நிதியுதவி அளித்தது:- இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறையினரின் தரவுத் தள வலையமைப்புடன் இலங்கை குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள தரவுத் தளம் இணைக்கப்பட்டுள்ளது. களவாடப்பட்ட, காணாமல்போன பயண ஆவணங்கள் பற்றிய தரவுகள், சர்வதேச குற்றவாளிகள் பற்றிய தரவுகள், புகைப்படங்கள், கைவிரல் அடையாளங்கள் போன்ற பல்வேறு தரவுகள் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளது. இன்டர்போலுடன் இலங்கை குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள தரவுத் தளத்தை இணைக்கும் நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. தென் ஆசியாவிலேயே முதல் முறையாக இவ்வாறான திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய கனே…
-
- 3 replies
- 631 views
-
-
பிரதமர் டி.எம். ஜயரத்னவிற்கு தற்போது அவரது பணிகளை செய்ய முடியாத வகையில் சுகயீனமுற்றிருப்பதால், அவருக்குப் பதிலாக கோத்தபாய ராஜபக்ஷவை அந்தப் பதவிக்கு நியமிக்க மகிந்தர் தீர்மானித்துள்ளார். டி.எம். ஜயரத்ன அண்மைக்காலமாக சிங்கப்பூர் மௌவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று தற்போது நாடு திரும்பியுள்ள போதிலும் அவருக்கு தமது பணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என மருத்துவ நிபுணர்கள் மகிந்தருக்கு அறிவித்துள்ளனர். அமைச்சரவையில் மாற்றம் செய்ய மகிந்தர் அண்மைக்கால பலமுறை முயற்சித்தார். எனினும், பிரதமர் பதவிக்கு புதிய ஒருவரை நியமிப்பதில் ஏற்பட்ட நெருக்கடியால் அந்தத் தீர்மானத்தை அவர் தொடர்ந்து ஒத்திவைத்து வந்தார். எனினும், அடுத்த நடத்தத் திட்டமிட்டுள்ள மூன்ற…
-
- 1 reply
- 1k views
-
-
யாழ். குடாநாட்டில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத இடங்கள் தவிர்ந்து, ஏனைய இடங்களில் உள்ள ஆயிரத்து 33 காணிகள் மற்றும் வீடுகளை முப்படையினரும் சுவீகரிக்கவுள்ளனர். இதில் 29 காணிகளே அரச நிலங்கள். ஏனையவை தனியார் பொதுமக்களின் காணிகள் என்று தெரிவிக்கப்படுகிறது. யாழ். மாவட்டத்தில் 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் 1996 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினர் தனியார் மற்றும் அரச காணிகளில் நிலைகொண்டுள்ளனர். தற்போது தாம் நிலை கொண்டுள்ள நிலங்களைத் தமக்கே வழங்க வேண்டும் என்று கோரி சகல பிரதேச செயலர்களுக்கும் கடிதங்கள் அனுப்பியுள்ளனர். கடந்த டிசெம்பர் மாதம் அனுப்பப்பட்ட இந்தக் கடிதங்களுக்கு பிரதேச செயலர்கள் உரிய பதில் வழங்காததைத் தொடர்ந்து, வடமாகாண ஆளுநரினால் பிரதேச செயலர்களுக்கு அழுத்தம் க…
-
- 0 replies
- 537 views
-
-
யாழ். குடாநாட்டில் நிலைகொண்டுள்ள இராணுவம் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் அதிதீவிரமாக ஈடுபட்டுள்ளது என எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரித்த யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, அங்கு படை முகாம்களை அமைப்பதற்கென அரச காணிகளை இராணுவம் கையகப்படுத்தவுள்ளமையை ஒத்துக்கொண்டார். ஆனால் தனியார் காணிகளை சுவீகரிக்கும் திட்டம் இராணுவத்திடம் கிடையாது என்று உறுதியாகக் கூறினார். வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகம் தொடர் அழுத்தங்களைப் பிரயோகித்து வரும் இவ்வேளையில், யாழ். நகர்ப்புறங்களில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் விரைவில் முற்றாக அகற்றப்படும் என்ற விடயத்தையும் அவர் “சுடர் ஒளி’யிடம் தெரிவித்தார். அத்தோடு, சிவி…
-
- 0 replies
- 790 views
-
-
சிறிலங்காவானது மற்றுமொரு 1983 யூலை கலவரத்துக்கு வழிவகுக்கின்றதா? முஸ்லீம் மக்களின் வணக்கத் தலங்களான பள்ளிவாசவல்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல்கள் சிறிலங்காவில் மற்றுமொரு இனக் கலவரத்தை தூண்டுவதற்கு காரணமாக அமையும் என்கின்ற அச்சம் அதிகரித்துள்ளது. இவ்வாறான கொந்தளிப்பின் மத்தியில், சிறிலங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களமானது பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய கல்விக் கூடங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதானது முஸ்லீம் மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையானது விசனத்தை ஏற்படுத்துகின்ற செயலாகும். அனுராதபுரம், தம்புள்ள, குருநாகல, மற்றும் தற்போது கொழும்பு, தெகிவளை போன்ற …
-
- 3 replies
- 563 views
-
-
யாழ் மாநகர சபையின் எல்லைக்குள் புதிய மத வழிபாட்டிடங்களை அமைக்கும் போது மாநகர சபையின் அனுமதியை பெற்றாக வேண்டும் என்று யாழ் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா அறிவித்துள்ளார். இலங்கை பௌத்த சாசன, மதவிவகார அமைச்சின் அண்மைய சுற்றறிக்கை ஒன்றின் பிரகாரமே இந்த அறிவிப்பை தான் வெளியிட்டுள்ளதாக யாழ் மேயர் கூறியுள்ளார். புதிதாக வரக்கூடிய மத வழிபாட்டிடங்கள், குறித்த பிரதேசத்தின் கலாச்சாரம் மற்றும் விழுமியங்களை பாதிக்க அனுமதிக்கக் கூடாது என்ற அடிப்படையிலேயே, அப்படியான மத நிறுவனங்களை அமைக்கும் போது உள்ளூராட்சி சபையின் அனுமதியை பெற்றாக வேண்டும் என்று அரசாங்க சுற்றறிக்கை கூறுவதாகவும் அவர் கூறினார். அனைத்து மத நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும், ஏற்கனவே இது குற…
-
- 3 replies
- 597 views
-
-
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த போராளிகள் காணாமற்போனதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள படி ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் சாட்சியமளித்தோரிடம் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்த பொதுமக்களுடன் கலந்துரையாடுவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் திட்டமிட்டுள்ளதாக, சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் உயர் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. முறைப்படியான இந்த வேண்டுகோளை சிறீலங்கா அரசாங்கம் நிராகரித்தால், மூன்றாவது தரப்பின் ஊடாக இந்தக் கலந்துரையாடல்கள் நடத்தப்படக் கூடும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சிறீலங்காப் பயணத்துக்கு முன்பத…
-
- 1 reply
- 584 views
-
-
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வழங்கப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்ட உணவகம் ஒன்றில் காசாளராக கடமை புரியும் நபர் ஒருவரால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த உணவக களஞ்சியசாலைக்கு அழைத்துச் சென்ற நபர் சிறுமியை இருமுறை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://thaaitamil.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%…
-
- 0 replies
- 722 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சில முக்கிய இடங்களுக்குத் தமிழ் மக்கள் செல்வதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளாமுள்ளி வாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகளால் அரிசி ஏற்றி வரப்பட்ட போது கரையொதுங்கிய 100 மீற்றர் நீளமான கப்பல் ஒன்று காணப்படுகிறது. வன்னிப் பகுதிகளுக்கு வருகை தரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் இதனைப் பார்ப்பதற்கு முண்டியடிப்பதை காண முடிகின்றது. ஆனால் தமிழ் மக்கள் இதனைப் பார்வையிடச் செல்வதை ஏனோ இராணுவத்தினர் அனுமதிப்பதில்லை. முஸ்லிம் மக்கள் கூட இதனைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படும் நிலையில் தமிழ் மக்களை இராணுவத்தினர் தடுத்து நிறுத்துகின்றமை ஏன் என்று தெரியவில்லை. இதில் என்ன பாரபட்சம் என்று கேட்கின்றனர் தமிழ் மக்கள். மேலும் இந்தக் கப்பலை …
-
- 0 replies
- 513 views
-
-
முள்ளிவாய்க்காலைப் பொறுத்தவரை அங்கே என்ன தான் நடக்கிறது என்ற ஏக்கங்கள் பல தமிழர்கள் மனதில் உள்ளது. அப்பகுதிக்கு தமிழர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை என்பது ஒருபுறம் இருக்க, அப்பகுதியை சல்லடைபோட்டு அங்குலம் அங்குலமாக் இராணுவத்தினர் தேடிவருகின்றனர் என்பதே உண்மையாகும். யுத்தம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிய பிற்பாடும், ஆனந்தபுரம், சாலை, வலைஞர்மடம், புதுமாத்தளான், ரெட்டமுள்ளிவாய்க்கால் மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதியை இராணுவத்தினர் தொடர்ந்தும் கடும் தேடுதலுக்கு உள்ளாக்கி வருகின்றனர். இங்கே காணப்படும் மனித எலும்புகளை உருக்கி உக்கவைக்க சில திரவங்களை சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்துள்ளனர் இலங்கை இராணுவத்தினர். இதனைத் தவிர, விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த இராணுவத் தளபாடங்கள்…
-
- 0 replies
- 458 views
-
-
மே 30, 2012 உலகளாவிய தமிழ் இளையோர் அவை வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழம் சார்பாக ஓர் அணி பங்கேற்கவுள்ளது என்பதை அறிவிப்பதில் உலகளாவிய தமிழ் இளையேர் அவை பெருமை அடைகிறது. சர்வதேச அரங்கில் இடம்பெறும் ஒரு காற்பந்தாட்ட போட்டியான வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டி யூன் 2012, எர்பில், குருதிஸ்தான் (வட இராக்கு) இல் இடம்பெறவுள்ளது. FIFA உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் அனுமதி பெறாத மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெறப்படாத தேசிய இன மக்களுக்காகவே வீவா சுற்றுக்கிண்ணப் போட்டி Nouvelle Fédération-Board (N.F. Board) ஆல் நடாத்தப்படுகிறது. காற்பந்தாட்டதில் தங்கள் திறமைகளை தமிழீழ விளையாட்டுவீரர்கள் புலம்பெயர் நாடுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். …
-
- 73 replies
- 6.3k views
-
-
கிழக்கு மாகாணத்திலிருந்து அழைத்து வரப்பட்ட பல பெண்கள் கொழும்பில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் அடிமைத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வரும் அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. கிராமப் புறங்களைச் சேர்ந்த இளம் பெண்களுக்குக் கொழும்பிலும் பிற பிரதேசங்களிலும் தொழில் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து வரும் ஒரு கும்பலே இவர்களைக் கொழும்பில் சிறைவைத்து பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அதன் மூலம் வருமானம் பெற்று வருகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த வறுமைப்பட்ட குடுங்களிலுள்ள இளம் யுவதிகளே இவ்வாறு ஏமாற்றப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் பலாத்கார பாலியல் வியாபாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தொழில் வாய்ப்புப் பெ…
-
- 0 replies
- 1.1k views
-