ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143395 topics in this forum
-
சிறிலங்காவின் தேயிலை, ஆடை, இறப்பர் ஏற்றுமதி கடந்த 30 மாதங்களில் இல்லாதளவுக்கு கடும் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்றுமதி வருவாய் 10.2 வீதத்தினால் சரிந்துள்ளது. சிறிலங்காவின் மத்திய வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. தொழில்துறை ஏற்றுமதி 10.9 வீதத்தினாலும், ஆடை தயாரிப்பு ஏற்றுமதி 11.7 வீதத்தினாலும், விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி 10.1 வீதத்தினாலும் தேயிலை ஏற்றுமதி 6.3 வீதத்தினாலும் சரிவை சந்தித்துள்ளன. அதேவேளை, முதலாவது காலாண்டில் சிறிலங்காவின் ஏற்றுமதி 1.4 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சிறிலங்கா மத்திய வங்கி வெளியி…
-
- 0 replies
- 516 views
-
-
சர்வதேச நாணய நிதியம் வழங்கிய இலங்கைக்கான அவசர ஏற்பாடு நிதியம் 2.6 மில்லியன் அமெரிக்க டொலர் முழுவதும் இலங்கைக்கு கிடைத்ததும் மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர ஏற்பாட்டு நிதியை பெறுவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கப் போவதாக சர்வதேச நாணய ஒத்துழைப்புக்கான சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம இன்று கூறினார். சர்வதேச நாணய நிதியத்தின் அவசர ஏற்பாடு ரீதியான 500 மில்லியன் அமெரிக்க டொலர் அடுத்த மாதம் கிடைக்கும் இறுதி தவனைப் பணத்துடன் பூரணமாகிவிடும். சர்வதேச கடன் வழங்கும் அமைப்புகள் இலங்கையின் கடனை திருப்பிச் செலுத்தும் ஆற்றல் பற்றி நம்பிக்கை தெரிவித்ததனால் தான் இலங்கையால் முழுத் தொகையான 2.6 மில்லியன் டொலரை 8 தவணைகளில் தொடர்ந்து பெற முடிந்த…
-
- 0 replies
- 388 views
-
-
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காத வெளிநாட்டு தூதரங்களில் நடக்கும் வைபவங்களில் கலந்துக்கொள்ள வேண்டாம் என அரச பிரதானிகளை மறித்தள்ளதாக சில தினங்களுக்கு முன்னர், நடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் எந்த தூதரங்களின் வைபவங்களில் கலந்துக்கொள்ள வேண்டாம் என்பதை ஜனாதிபதி பெயர் குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை. எவ்வாறாயினும் ஜனாதிபதி அரசாங்கத்திற்கு எதிரான தூதரங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், தூதரங்களுடன் தொடர்புகளை வைத்துள்ளதுடன் தகவல்களையும் பரிமாறி வ…
-
- 0 replies
- 549 views
-
-
காலி கோட்டையின் கண்காணிப்பு நிலைகளில் பொருத்தப்பட்டிருந்த 100 பீரங்கிகள் காணாமற் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒல்லாந்தரின் ஆட்சியில் சிறிலங்கா இருந்த போது, பயன்படுத்தப்பட்ட பீரங்களே காணாமற் போயுள்ளதாக காலி மரபுரிமைகள் நிறுவகம் தெரிவித்துள்ளது. காலி கோட்டையில் இந்த பீரங்கிகளை கண்காணிப்பு நிலைகளில் பொருத்தி வைத்து ஒல்லாந்தர் பயன்படுத்தி வந்ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறிலங்காவின் தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜெகத் பாலசூரிய தெரிவித்துள்ளார். இந்தப் பீரங்கிகளை உலோகத்துக்காக களவாடிச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். htt…
-
- 8 replies
- 1.5k views
-
-
யேர்மனியில் வாழும் ஈழத்தமிழர்களின் அரசியல் விவகாரமாக யேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களின் மத்தியில் ஈழத்தமிழர்களின் சுயவுரிமைக்காக ஓர் அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவை உருவாக்கும் முயற்சியில் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை முழு முயற்சியை எடுத்துவருகின்றது . அந்த வகையில் கடந்த மாதங்களாக அவர்களுடனான பல சந்திப்புகள் மேற்க்கொள்ளப்பட்டது . இதன் வரிசையில் கடந்த வெள்ளிக்கிழமை 25 .05 .2012 இந்திய தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் செயலாளர் சி. மகேந்திரன் அவர்களின் யேர்மன் வருகையை முன்னிட்டு பல்வேறு கட்சியுடனான(SPD ,Linke மற்றும் Bündnis 90/Die Grünen ) சந்திப்புக்கள் மேற்க்கொள்ளப்பட்டது .இச் சந்திப்பில் தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் செயலாளர் சி. மகேந்திரன், சர…
-
- 1 reply
- 669 views
-
-
இலங்கை வரலாற்றில் சிங்கள மக்களே வந்தேறு குடிகள். தமிழ் மக்கள் அல்ல என்பதை பெளத்த பிக்குகள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும். என தமிழரசுக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.கடும் போக்கு கருத்துக்களைக் கூறி இலங்கையில் இனப்பிரச்சனை தீர்க்கவிடாமல் தடுக்கும் ஒரு தீய சக்தியாக இப்பெளத்த பிக்குகள் விளங்குகிறார்கள். எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேதானந்த தேரர் வடக்கு கிழக்குப் பகுதி தமிழருக்குச் சொந்தமில்லை என்று குறிப்பிட்டமை தொடர்பாக சிறிதரனுடன் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை வரலாற்றில் சிங்கள் பௌத்த பிக்குகளின் செயற்பாடு என்பது, இலங்கையை முற்று முழுதாக சிங்கள நாடு என…
-
- 1 reply
- 598 views
-
-
யுத்தம் நிறைவடைந்து மூன்று வருடங்கள் நிறைவடைந்தும் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்படாமல் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வாழ்கின்றனர். திருகோணமலை, சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கிளிவெட்டி அகதி முகாம்களில் இன்றும் தங்கியிருப்பதை படங்களில் காணலாம். http://thaaitamil.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/
-
- 0 replies
- 628 views
-
-
40 பேர் அடங்கிய இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு ஒன்று அவுஸ்திரேலியாவின் கோகோஸ் தீவைச் சென்றடைந்துள்ளது. நேற்று முன்தினம் (29) செவ்வாயன்று இந்தப் படகு கோகோஸ் தீவைச் சென்றடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரத்தில் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்துள்ள இரண்டாவது இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் குழு இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து 3000 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கோகோஸ் தீவில் ஆட்கள் இல்லாத 27 சிறு சிறு தீவுகள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து சென்ற படகில் இணைய மற்றும் ஜிபிஆர்எஸ் வசதிகள் இருந்ததாகவும் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலிய பொலிஸார் மற்றும் சுங்க அதிகாரிகளால் பிடிக்கப்பட்டதாகவும்…
-
- 0 replies
- 510 views
-
-
2009 ஆம் ஆண்டு முதல் இதுவரை நட்டில் 1,700 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அனைத்து பொலிஸ் நிலையப் பதிவுகளிலுமிருந்து தெரியவந்துள்ளது. அதில் 1,300 பேர் தீவிரவாத தடுப்புப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடத்தல்கள் தொடர்பில் சில முறைப்பாடுகளிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். தீவிரவாதத் தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து அவர்களது உறவினர்களுக்கு அறிவிக்கப்படாத நிலையில் தகவல் சேகரிப்பிற்காகவே இவர்கள் தடுத்து வைக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை, உறவினர்கள் கோரிக்கை விடுத்தும் அரசாங்கம் அவர்களைப் பார்வையிடக் கூட அனுமதி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டோர் இரு பிரிவுகளாக பிரித்த…
-
- 0 replies
- 614 views
-
-
வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற கோருவது சாதாரண மக்கள் அல்ல : கோதாபய ராஜபக்ஷ வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றக் கோருவது அங்கு வாழும் சாதாரண மக்கள் அல்லர். வடக்கின் அரசியல் அதிகாரத்திலிருந்து சரிந்து செல்லும் தமிழ்க் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளே இவ்வாறு கோருகின்றன. கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களைப் பார்க்கிலும் அநுராதபுரம் - பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இராணுவ முகாம்கள் அமைந்துள்ளதை அந்த அமைப்புக்களுக்கு சுட்டிக்காட்ட தாம் விரும்புவதாக பாதுகாப்பு, செயலர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் அநுராதபுர - பொலன்னறுவை மக்கள் அந்த மாவட்டங்களில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு ஒருபோதும் கோஷம் எழுப்பவில்லை என்பதையும் அந்த அமைப்புக்களுக்கு சுட்டிக்காட்ட …
-
- 0 replies
- 522 views
-
-
நீயா? நானா? போட்டி: கூட்டமைப்புக்குள்ளும் ஏழரை! சுரேஸ் - சம்பந்தன் மோதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கு தலைமை வகிக்கும் கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்தும் போக்கை பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விமர்சித்துள்ளார். அண்மையில் நடந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில், அதன் தலைவர் இரா. சம்பந்தன் வெளியிட்ட சில கருத்துக்கள் தொடர்பில் தாம் முரண்படுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை (ஈபிஆர்எல்எஃப்) சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் பீபீசி தமிழோசையிடம் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் சம-பங்க…
-
- 0 replies
- 833 views
-
-
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா காவல்துறையினரின் மறைமுகமான வழிநடத்தல்களின் கீழ் செயற்பட்டு வரும் விடுதிகளில் அதிகமான சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. குறிபாக விபச்சாரம், போதைப்பொருள் பாவனை போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் குழுவினர்களை உள்ளடக்கி இயங்கிருவரும் இவ்வாறான விடுதிகள் தொடர்பாக யாரும் எந்தவிதமான கருத்துக்களையும் கூறுவது இல்லை. காரணம் இவ்வாறான விடுதிகளை நடத்துபவர்கள் பெரும்பாலும் காவல்துறையினருடன் நெருங்கிய நேரடித் தொடர்பில் இருந்து வருகின்றார்கள். இவர்கள் விடுதியில் உள்ள விபச்சாரிகளிடம் செல்ல வேண்டும் என்றால் அவ் விடுதிகளுக்கு அருகில் உள்ள வியாபார நிலையங்களினை மையப்படுதி ஒரு தரகர் செயற்பட்டு வருவார் அவருடைய தொடர்பினால் மட்டுமே அவ் விடுதிகளில் விபச்சார…
-
- 0 replies
- 713 views
-
-
எமது தேசிய விடுதலைப் போராட்டம் வெறுமனே சிங்களபேரினவாதபடைகளுக்கு எதிரான எதிர்ப்பு என்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் தமிழீழமக்களுக்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் அதனுடான செற்பாடுகளையும் மிக அற்புதமாகவும் ஆழமானசிந்தனையுடனும் வடிவமைத்திருந்தது அனைவரும் அறிந்ததே. அந்தவகையலேயே புலம்பெயர் தேசங்களிலும் விளையாட்டு நிகழ்வுகளையும் தனித்து விளையாட்டின் ,வெற்றி என்ற விடயங்களுக்கு அப்பால் விளையாட்டினூடாக தமிழ்தேசிய ஒருமைப்பாட்டையும், புரிந்துணர்வையும் வளர்த்தெடுப்பதற்காகவே உருவாக்கி காலகாலமாக நடாத்தி வந்ததும் அனைவரும் அறிந்ததே.இனஅழிப்புக்கான இறுதிக்கட்டபோரை சிங்களஇனவெறி அரசு மாவிலாற்றிலிருந்து ஆரம்பித்த பின்னர்கூட தமிழீழத்தில் இருந்து வலைப்பந்தாட்டஅணியையும் வேறு விளையாட்டுகளின் அண…
-
- 2 replies
- 858 views
-
-
VOTE FOR "Sri Lanka's Killing Fields" For Bafta TV Awards 2012/ Takes One Second to vote & forward to others http://www.radiotime...in#pd_a_6166811 http://www.radiotime...in#pd_a_6166811 http://www.radiotime...in#pd_a_6166811
-
- 648 replies
- 56.6k views
- 1 follower
-
-
பெரும்பான்யைமான மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இந்த அதிருப்தியாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்னமும் பூரணமான ஆதரவினை வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தியுடன் காணப்படுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் உரிய முறையில் நிறைவேற்றத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, அதிகளவான மக்கள் ஐக்கிய…
-
- 0 replies
- 556 views
-
-
இராணுவமுகாம்களை நாம் வேறுநாடுகளில் அமைக்கவில்லை:- வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுப்பது அங்கு வசிக்கும் மக்கள் அல்ல எனவும் வடபகுதி மக்களின் அரசியல் அதிகாரத்தை விழுங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அவ்வாறான கோரிக்கை விடுப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களை விட அனுராதபுரம் - பொலன்நறுவை மாவட்டங்களில் அதிகளவான இராணுவ முகாம்கள் உள்ளன. எனினும் அங்குள்ள முகாம்களை அகற்றுமாறு மக்கள் கூச்சல் போடுவதில்லை என்பதை சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு தான் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் கோத்தபாய கூறியுள்ளார். தியத்தலாவ போன்ற பிரதேசங்களில் இராணுவ முகாம் மற்றும் இராணுவத்தினர் …
-
- 0 replies
- 640 views
-
-
தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை உருவான பிறகே அதிகாரப்பகிர்வு அளிக்கப்படவேண்டும் என்று அண்மையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னால் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா கூறினார். கடந்த பல ஆண்டுகளில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே இரு தரப்பு அரசியல்வாதிகளால் அவநம்பிக்கையும் சந்தேக உணர்வும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனால் தான் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதை சிங்களவர் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள் என்றும் அவர் கூறினார். கொழும்பு புறநகரப் பகுதியான தலவத்துகொடவில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் பேட்டியளித்தார்: தமிழர்களுக்கு எதைக் கொடுத்தாலும் அதற்கு சிங்களர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள்…
-
- 8 replies
- 1.1k views
-
-
நுவரெலியா நல்லாயன் மகளீர் கல்லூரியில் அண்மைக் காலமாக தமிழ் மாணவிகள் கிறித்தவ மதத்தைச் ஆசிரியை ஒருவரால் அச்சுறுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கபடுகிறது.. இவர் குறித்த தமிழ் மாணவிகளை நெற்றிப் பொட்டு வைக்கவேண்டாம் என அறிவுறுத்தி வருகிறார் உனத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். அந்த பாடசாலையின் அதிபரும் ஒரு சிங்களராவார். அங்கு தமிழ், சிங்கள, மொழிகள் இரண்டிலுமே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, இந்து இஸ்லாம், கிறிஸ்தவ, கத்தோலிக்க, பௌத்த மதங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் இங்கு கல்விபயின்று வருகின்றனர். எனினும் இந்து மத மற்றும் நெற்றிப் பொட்டு வைக்கும் மாணவிகள் அவற்றை வைக்கக் கூடாது என அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அப்படியும் அவர்கள் வைத்துக் கொண்டு வந்தால் பலவந்தமா…
-
- 0 replies
- 1.2k views
-
-
லியாம் பொக்ஸ் உள்ளிட்ட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்ற விரைவில் யாழ்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமை குறிப்பாக, வடக்கில் இராணுவ பிரசன்னம் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக கண்காணிக்க உள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதியின் ஆலோசகர் அருண் தம்பிமுத்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு விஜயம் செய்யுமாறு தம்மால் விடுக்கப்பட்ட அழைப்பாணையயை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பிரித்தானியாவிற்…
-
- 2 replies
- 874 views
-
-
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலரைக் கொண்ட மற்றுமொரு அகதிகள் படகொன்று ஆட்கடத்தல்காரர்கள் பிடியில் சிக்காது அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் 88 இலங்கைத் தமிழ் அகதிகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதென அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த படகு விரைவில் அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவை வந்தடையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலியா, அதிகளவான இளைஞர்கள் படகில் இருப்பதாகக் கூறியுள்ளது. இவர்கள் மீன்பிடி படகில் அவுஸ்திரேலியா நோக்கிச் செல்வதாக தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மொத்தமாக 211 புகலிடக் கோ…
-
- 1 reply
- 900 views
-
-
விசாரணைகளின்றித் தடுப்பக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் பிரச்சினை இப்போது சர்வதேச விவகாரமாகியிருக்கின்றது. சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் உண்ணாவிரதப் போரரட்டத்தையடுத்து வவுனியாவிலும், கொழும்பிலும் மக்கள் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனைவிட ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் கைதிகள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இதன்மூலம் தடுப்புக்காவலில் உள்ளவர்கள் தொடர்பில் சர்வதேசத்துக்கும் பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் மகிந்த ராஜபக்ஷ அரசுக்கு ஏற்பட்டுள்ளது. போர் முடிவடைந்து மூன்று வருடங்கள் சென்றுள்ள போதிலும் காணாமல்போனவர்கள் மற்றும் தடுப்புக்காவலில் உள்ளவர்களின் பிரச்சினை தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது. …
-
- 0 replies
- 826 views
-
-
தங்கச் சங்கிலி ஒன்றைத் திருடியதாக குற்றஞ்சுமத்தி தம்புத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் தம்புத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். ”தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் தமது கைகள், கால், கண்களைக் கட்டி உயரத்தில் தொங்கவிட்டு இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் கடுமையாக தாக்கினர்” பாதிக்கப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பொலிஸ் பேச்சாளரிடம் கேட்டபோது, குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். எனினும், குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுதலை செய்ததாக தம்புத்தேகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்…
-
- 0 replies
- 1k views
-
-
யாழ்ப்பாணம் மாதகல் கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்ல பாஸ் அனுமதியைப் பெற வேண்டும் என கடற்படையினர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் தொழிலுக்குச் செல்வதில் பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக மாதகல் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பாஸ் அனுமதியைப் பெறுவதற்கு மீனவரின் புகைப்படங்கள், அவர்களின் விவரங்கள், கடற்றொழில் உபகரணங்களின் விவரங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டுமென கடற்படையினர் கட்டளையிட்டுள்ளனர். இதனால் கடலுக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபட முடியாத நிலையிலுள்ளதாக மாதகல் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%…
-
- 0 replies
- 462 views
-
-
யாழ்.பல்கலைக்கழகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் ராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப் படவுள்ளதாக ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிக சூரிய தெரிவித்துள்ளார்.யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் மாணவர் ஒன்றியத்தினர் யாழ். கட்டளைத் தளபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது: “பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து எம்முடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படியும், கற்றலுக்கான அச்சமற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தோம். ஆனால் ஒரு போதும் ராணுவத்தினரைப் பாதுகாப்புக் கடமையில் …
-
- 0 replies
- 1.2k views
-
-
கதித் தஞ்சம் கோரியுள்ள தமிழ் மக்களை மீண்டும் அவர்களது சொந்த நாடான சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்புவதை பிரித்தானிய அரசாங்கம் உடனடியாக நிறுத்தி, அது தொடர்பான தனது கொள்கைகளை மீளவும் ஆராய்ந்து மாற்றுத் தீர்வொன்றை எட்டவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அடுத்த கட்டமாக மே31, 2012 அன்று தனது நாட்டில் தஞ்சம் கோரியுள்ள சிறிலங்கர்களின் ஒரு தொகுதியினரை மீண்டும் அவர்களது நாட்டுக்கு திருப்பு அனுப்புவதென பிரித்தானியா தீர்மானித்துள்ள நிலையிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகம் இவ்வேண்டுகோளை முன்வைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் ஏனைய சில நாடுகளில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மீண்டும் சிறிலங்காவுக்கு அனுப்பு வைக்கப்பட்ட தமிழர்களில் பலர், அங…
-
- 0 replies
- 374 views
-