ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
அமைப்பின் ஒருங்கிணைப்பில், அமெரிக்க உயர்கல்வி மாணவ சமூகத்தினால், நியூயோர்க் நகரில் சிறிலங்கா தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வொன்று, பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. “Get on the Bus for human rights ” எனும் தலைப்பில், சிறிலங்கா தொடர்பில் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு நிகழ்வானது, உள்ளக அரங்க நிகழ்வாகவும், வெளித்திடல் கவனயீர்ப்பு போராட்டமாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உள்ளக அரங்க நிகழ்வில், அம்னெஸ்ரி அமைப்பின் மேலாளர் Director Susan Nossel ,சிறிலங்காவில் இருந்து தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள பிரபல ஊடகவியலாளர் ஏ.எஸ்.திசநாயகம் மற்றும் பர்மா ,இந்தோனேசிய பிரதிநிதிகள் பலரும் உரையாற்றியிருந்தனர். க…
-
- 4 replies
- 1.4k views
-
-
http://newjaffna.com/
-
- 6 replies
- 1.5k views
-
-
"அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த இலங்கையும் ஒரு சிங்கள பௌத்த நாடாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். அதனால்தான் இந்துக்கோயில்கள் இடிக்கப்படுகின்றன. இஸ்லாமிய பள்ளிவாசல்கள் இடிக்கப்படுகின்றன. இராணுவம் பொலிஸ் துணையுடன் பௌத்த சிங்கள மக்கள் இல்லாத இடங்களில் புத்தர்கோயில்கள் நிர்மாணிக்கப்படுகின்றன" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருக்கின்ற போதிலும் அவர்கள் பேச்சுக்களுக்கு வருவதற்கு மறுக்கின்றார்கள் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். தந்தை செல்வாவின் 35 ஆவது நினைவு தினம் நேற்று சனிக்கிழமையன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தமிழர் விடுதல…
-
- 1 reply
- 590 views
-
-
இலங்கை விவகாரம்:மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடிதம் இலங்கையில் இராணுவம் சிவில் நிர்வாகத்திலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்றும் அது தொடர்பில் இந்திய அரசு இலங்கையுடன் பேச வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் இந்தியப் பிரதரிடம் கோரியுள்ளனர். வடக்கு-கிழக்குப் பகுதிகளில் இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் கூடுதல் முதலீடுகளை செய்ய வேண்டும் என்றும், அண்மையில் இலங்கை சென்றுவந்த இந்திய நாடாளுமன்ற குழுவில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளனர். அங்கு பல்துறைகளில் திறமையான அதிகாரிகள் குறைவாக இருப்பதால், இந்தியாவிலிருந்து அதிகாரிகள் அங்கு சென்று இலங்கை அரசுக்கு …
-
- 0 replies
- 540 views
-
-
3 வருடங்களில் 417 படுகொலைகள்; 2006 - 2008 இடையில் குடாநாட்டில் பயங்கரம்; ஆனால் ஒரு கொலையாளிகூட அகப்படவில்லை. யாழ். மாவட்டத்தில் 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 417 பேர் நீதிக்குப் புறம்பான வகையில் கொல்லப்பட்டுள்ளனர் என்று அரச ஆவணங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் "சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்புக் கருதி அவரது பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை. பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபின்னர் செய்யப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்தக் கொலைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களின் பெயர்கள், முகவரிகள், கொல்லப்பட்ட திக…
-
- 2 replies
- 476 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவு வழங்கிய சீனா, ரஷ்யா உட்பட்ட நான்கு முக்கிய நாடுகள் ஜுன் மாதத்துடன் விலகிக் கொள்வதால், நவம்பர் 1ம் நாள் நடைபெறவுள்ள, மனித உரிமைகள் நிலை குறித்த மீளாய்வுக் கூட்டத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்று இலங்கை அரசாங்கம் கவலை கொண்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் மட்டுமே உறுப்புரிமை வகிக்க முடியும் என்பதால், சுழற்சி முறையில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு யூன் மாதத்துடன் ரஸ்யா, சீனா, சவூதி அரேபியா, பங்களாதேஸ் ஆகிய நாடுகளின் பதவிக்காலம் முடிவடைகிறது. இவற்றில் ரஸ்யாவும், சீனாவும் இலங்கைக்கு மிகவும் நெருக்கமான நாடுகளாகும். கடந்தமாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்…
-
- 0 replies
- 1k views
-
-
தற்போது நாட்டில் மிதமிஞ்சிய அரிசி மற்றும் மரக்கறிகள் உள்ளதாகவும் கூடுதல் வருமானத்தை பெற்றுத்தரும் வகையில் அவற்றை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் விவசாய அபிவிருத்தித் திட்டங்களின் விளைவு இதுவெனவும் அவர் கூறினார். ‘மேலதிகமாகவுள்ள உணவுப் பொருட்களை பதப்படுத்தும் திட்டம் மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளுக்கு அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. பொதுமக்களினால் வீட்டுத் தோட்டங்களில் மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கை காரணமாகவே அளவுக்கதிகமான உணவுப் பொருட்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலதிகமாகவுள்ள மரக்கறிகளை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்…
-
- 0 replies
- 677 views
-
-
தம்புள்ளையில் அமைந்துள்ள முஸ்லீம் பள்ளிவாசல் தொடர்பில் பிரதமர் டி.எம் ஜயரத்ன எடுத்த தீர்மானத்தை கண்டிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் குறிப்பிடுகின்றது. அந்த கட்சியின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட குழுவினர் நேற்று நடைபெற்ற கட்சி அரசியல் குழு கூட்டத்தில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.இது பற்றி அவர் குறிப்பிடுகையில், தம்புள்ளை பள்ளி விவகாரம் சம்மந்தமாக அந்தப் பள்ளியை அங்கிருந்து அகற்றுவதற்கு எடுக்கப்படுகின்ற எந்த தீர்மானத்திற்கும் நாங்கள் உடன்பட மாட்டோம் என்பதை மிகத் தெளிவாக நேற்று எங்களுடைய அரசியல் உயர்பீடம் கூடித் தீர்மானித்திருக்கின்றோம். இது சம்பந்தமாக நாட்டின் பிரதம மந்திரி தன்னிச்சையாக எந்த அமைச்சரையும் கலந்தாலோசிக்காமல் எடுத்த தீர்மானத்தை ந…
-
- 0 replies
- 600 views
-
-
இலங்கை மாத்தளை பகுதியில் உள்ள தம்புல்ல ஜும்மா பள்ளிவாசலை இடித்து தரைமட்டம் ஆக்கிய புத்த பிக்குகளையும் ராஜ பக்ஷேவின் அரசாங்கத்தையும் கண்டிக்கும் விதமாக இன்று இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டனர். இன்று மாலை 4 மணியளவில் ராயப்பேட்டை பள்ளிவாயிலில் புறப்பட்ட போராட்டக்காரர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர் இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் எப்பொழுதும் பரபரப்புடன் காணப்படும் ராதா கிருஷ்ணன் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன . போராட்ட காரர்கள் ராஜ பக்ஷேவின் உருவ பொம்மையை எரித்ததால் அங்கு சிறிது பதற்றம் நிலவியது . பின்னர் தாயராக இருந்த காவல்துறையின் வாகங்களில் கைது படலம் துவங்கியது கைது செய்யப்பட அனைவரையு…
-
- 4 replies
- 593 views
-
-
பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புக்கள் அனைத்துடனும் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றிற்கு பிரித்தானியத் தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இன்றுள்ள சூழலில் நாம் அனைவரும் இணைந்து செயற்படாவிட்டால் தாயகத்தில் வாழ்கின்ற மக்களுக்கு ஒரு சுமூகமான நிலை தோன்றாது எனவும் அதனால் காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளது எனவும் பிரித்தானியத் தமிழர் பேரவையின் உருவாக்க உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் நாளை 29.04.2012 ஞாயிற்றுக்கிழமை St Joseph�s Church, Colliers Wood High Street, London SW19 2HS எனும் இடத்தில் மாலை 2:30 முதல் 4:30 மணிவரை நடைபெறவுள்ள முக்கிய கலந்துரையாடலில் அனைத்து பிரித்தா…
-
- 4 replies
- 599 views
-
-
செங்கல்பட்டு அகதிகள் முகாமில் இலங்கை தமிழர்கள் 10க்கும் மேற்பட்டோர் அங்கு சிறை வைக்கப்பட்டுள்ளனர். தங்களை விடுதலை செய்யக் கோரி கடந்த 17ஆம் திகதி முதல் ஈழத்தமிழர்கள் விக்ரமசிங்கம், அருள் குலசிங்கம், சதீஷ்குமார், சிவக்குமார், நாகராசு, பராபரன், நந்தகுமார், ஜெயராமன், சேகர், சதர்சன் உள்பட 14 பேர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர் . இன் நிலையில் இன்று செங்கல்பட்டு முகாம் தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு . ஒரு மாதத்திற்குள் 15 பேர்களை விடுதலை செய்ய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது . இதற்காகாக உழைத்த அனைத்து தமிழ் உணர்வளர்களுக்கும் நன்றிகள் http://thaaitamil.com/?p=17457
-
- 0 replies
- 824 views
-
-
அமெரிக்காவின் இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் மே மாதம் முதல் வாரமளவில் இந்தியாவுக்கு அவசரப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 5ம் நாள் முதல் 8ம் நாள் வரை பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுக்கான பயணத்தை ஹிலாரி கிளின்ரன், மேற்கொள்ளவுள்ளதாக வொசிங்டனில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் அம்மையார் தகவல் வெளியிட்டுள்ளார். இந்தப் பயணத்தின் போது ஹிலாரி, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா ஆகியோரை சந்திக்கவுள்ளார். இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பில், பிராந்திய மற்றும் பலதரப்பு விவகாரங்கள் குறித்தே கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அதனடிப்படையில் சிறிலங்கா வி…
-
- 1 reply
- 644 views
-
-
அமெரிக்காவின் தடையை அடுத்து ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சிறிலங்கா, ஏனைய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் மசகு எண்ணெயை சுத்திகரிப்பதற்காக சபுகஸ்கந்த சுத்திகரிப்பு ஆலையைப் புதுப்பிக்க 210 பில்லியின் ரூபாவை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஈரானின் துணையுடன் நிறுவப்பட்டுள்ள சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயை மட்டுமே சுத்திகரிக்கும் திறன் கொண்டது. தற்போது சிறிலங்கா தனது எண்ணெய் தேவையில் 95 வீதத்தை ஈரானிடம் இருந்தே பெற்று வருகிறது. ஆனால் அமெரிக்காவின் தடைகளை அடுத்து ஈரானிடம் இருந்த எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டிய நிலைக்கு சிறிலங்கா தள்ளப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 390 views
-
-
-
ஈழத்தமிழன் இதயங்களில் மட்டுமல்ல உலகத்தமிழனின் மனங்களிலும் மரணித்துப்போன முன்நாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களே!! வஞ்சகத்தின் வாள்வீச்சால் காயம்பட்ட இதயத்துடன் வாழ்ந்துகொண்டிடுக்கும் ஈழத்தமிழனாகிய நான் அடிமனதில் ஆத்திரத்துடனும் சில ஆதங்கத்துடனும் காலத்தின் கட்டாயத்தில் புலத்தில் இருந்து உங்கள் மீது ஏவுகின்ற ஒரு ஏவுகணை என்றே கருதி இந்த கடிதத்தை உங்களுக்கு அனுப்புகின்றேன். எனது அன்றாட வேலைகளை விடுத்து இந்த கடிதத்தை எழுதுவதற்காக ஒரு சில நிமிடங்களை செலவிடுவதை நினைத்து மிகவும் வருத்தமும் வேதனையும் கொள்கின்றேன். எனது மனதிலே மரணித்துப்போன உங்களுக்கு நான் எழுதும் இந்த கடிதம் வெறும் கடதாசியில் எழுதுகோல் கொண்டு எழுதி அனுப்பவில்லை. ஆத்திரத்தில் கொதிக்கும் உதிரத்தால்…
-
- 0 replies
- 1k views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கிய நான்கு முக்கிய நாடுகள் ஜுன் மாதத்துடன் விலகிக் கொள்வதால், நவம்பர் 1ம் நாள் நடைபெறவுள்ள, மனிதஉரிமைகள் நிலை குறித்த மீளாய்வுக் கூட்டத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்று சிறிலங்கா அரசாங்கம் கவலை கொண்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் 47 நாடுகள் மட்டுமே உறுப்புரிமை வகிக்க முடியும் என்பதால், சுழற்சி முறையில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு ஜுன மாதத்துடன் ரஸ்யா, சீனா, சவூதி அரேபியா, பங்களாதேஸ் ஆகிய நாடுகளின் பதவிக்காலம் முடிவடைகிறது. இவற்றில் ரஸ்யாவும், சீனாவும் சிறிலங்காவுக்கு மிகவும் நெருக்கமான நாடுகளாகும். கடந்தமாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிர…
-
- 3 replies
- 793 views
-
-
தம்புள்ள பள்ளிவாசலை இடித்தழிக்கும் நோக்குடன் பௌத்த பேரினவாதிகளால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளால் சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தவர்கள் மேலும் கோபம் கொண்டுள்ளனர். இவ்வாறு வளைகுடா நாட்டை தளமாகக்கொண்டு வெளிவரும் Gulf News ஆங்கில ஊடகத்தில் பத்தி எழுத்தாளர் *Tariq A. Al Maeena எழுதியுள்ள சிறப்பு கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் முழுவிபரமாவது, 26 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட வன்முறை மிக்க, மிகப் பயங்கரமான உள்நாட்டு யுத்தமானது பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்து, அவர்களின் சொத்துடைமைகளை நாசம் செய்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்காவில் வாழும் பௌத்தர்கள், தமிழர்கள் மற்று…
-
- 0 replies
- 510 views
-
-
தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையை கண்டித்து சென்னையில் இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கை மாத்தாளை மாவட்டம் தம்புள்ளை என்னும் ஊரில் 60 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலை சிங்கள புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இடித்து சேதப்படுத்தி உள்ளதை கண்டித்து, சென்னை டி.டி.கே.சாலை பிரிவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்களால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநில துணைத்தலைவர் முகமது முனீர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மகிந்தவை கண்டித்து கோஷம்…
-
- 2 replies
- 944 views
-
-
வரும் மே 18ம் நாள் அமெரிக்க இராஜங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனை சந்திப்பதற்காக அமெரிக்கா செல்லும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான சிறிலங்கா குழுவினர் ஒபாமா நிர்வாகத்தின் முக்கியமான பல அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளனர். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, நாமல் ராஜபக்ச, சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோரும் அமெரிக்கா செல்கின்றனர். இவர்கள் வொசிங்டனில் சந்திக்கத் திட்டமிட்டுள்ள – சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவருமே, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கியமான மூத்த பெண் இராஜதந்திரிகளாவர். அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஹிலாரி கிளின்ரன் மற்றும் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சுச…
-
- 2 replies
- 746 views
-
-
இலங்கையில் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் நடைபெறும் அனைத்துச் செயற்பாடுகளையும் கண்காணிப்பதற்குப் புதுடில்கியில் அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் இந்திய அரசின் கவனம் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவியான சுஷ்மா ஸ்வராஜ் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தபோது இது தொடர்பான யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார். இதற்கமையப் புதுடில்லியில் இந்தக் கண்காணிப்பு அலுவலகத்தை நிறுவுவது குறித்து இந்திய அரசு கவனம் செலுத்தியுள்ளதாகப் புதுடில்கி ராஜதந்திர தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக் கண்காணிப்பு அலுவலகம் நிறுவப்பட்டதன் பின்னர் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் நடைபெறும் அனைத்…
-
- 2 replies
- 555 views
-
-
சென்னை தியாகராயநகர் மதுரை வீரன் கோவில் தெருவில் புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற தலைப்பில் பா.ம.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பகுதி செயலாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:- கருணாநிதி எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போதெல்லாம் தமிழ் ஈழம் பற்றி பேசுவார். 5 வருடம் ஆட்சியில் இருந்தபோது லட்சக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்தார். தமிழர்களின் அழிவுக்கு அவரும் காரணமாகிவிட்டார். http://thaaitamil.com/?p=17415
-
- 0 replies
- 503 views
-
-
திராவிடக் கட்சிகளின் பங்கேற்பு இல்லாமல் இந்திய நாடாளுமன்ற குழுவினரின் இலங்கை விஜயம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த வருகையானது சர்வதேச இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் மிக்கதாக நோக்கப்பட்ட போதிலும் தமிழ் மக்கள் மத்தியில் இது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. ஏனெனில் இந்த வருகை தமிழ் மக்கள் எதிர்பார்த்த பலன்களைத் தராமலே நிறைவடைந்திருக்கிறது. இந்திய நாடாளுமன்ற குழு வரவுள்ளது என்பதை அறிந்தவுடனேயே குடாநாட்டு மக்கள் வன்னி மக்கள் உட்பட அனைவரும் எதிர்பார்ப்புடனேயே காத்திருந்தனர். இக்குழு நேரடியாகத் தமது இடங்களுக்கு வருகை தந்து குறைநிறைகளைக் கேட்டறியும் என்று இந்த மக்கள் நம்பினர். ஆனால் தமிழர் தாயகத்தில் அவ்வாறான எதுவுமே நடக்கவில்லை. தமிழ் மக்களின் அடிப்படைப் …
-
- 0 replies
- 415 views
-
-
http://livestre.am/OTgD
-
- 0 replies
- 315 views
-
-
-
- 0 replies
- 780 views
-
-
பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் - போர்க்குற்றம் சாட்டப்படும் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா இந்தவாரம் கொழும்பு திரும்பவுள்ளார். மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா இந்தவாரம் கொழும்பு திரும்புவார் என்றும் இனிமேல் அவர் பிரித்தானியாவில் பணியாற்றமாட்டார் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சரத் திசநாயக்க, உறுதிப்படுத்தியுள்ளார். இவரது இடத்துக்கு யாரை நியமிப்பது என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு வரும் காலத்தில் வேறு எங்காவது இராஜதந்திரப் பதவி ஏதும் வழங்கப்படுமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளிக்க மறுத்து வி…
-
- 0 replies
- 478 views
-