ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
வனாத்தமுல்ல - ரி-20 தோட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற பதற்ற நிலை தொடர்பில் விசாரணை நடத்தவென உதுல் பிரேமரத்னவை தேடி பொலிஸார் வலை வீசியுள்ளனர்.உதுல் பிரேமரத்னவை தேடி இன்று 25ம் திகதி அதிகாலை இரு வீடுகள் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கான இயக்கம் தெரிவித்துள்ளது. உதுல் பிரேமரத்னவின் கொட்டாவை வீடு மற்றும் அவர் அடிக்கடி சென்றுவரும் இரத்தினபுரி வீடு என்பவற்றிற்கு இன்று அதிகாலை 2.30 அளவில் பொலிஸார் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வனாத்தமுல்ல - ரி-20 தோட்டத்தில் அண்மையில் பொலிஸார் சோதனை நடத்தி சிலரை கைது செய்ததை அடுத்து பிரதேச மக்கள் சிலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் பதற்றம் ஏற்படுத்தியமை …
-
- 0 replies
- 566 views
-
-
போருக்குப் பின்னரும் இந்த அரசு தமிழ் மக்களை பெரும் படை பலத்துடன் அடக்கி வருகின்றது. இதனைத் தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டிய கட்டாய தேவையாகும் என நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். மே தினக் கூட்டம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ; எதிர்வரும் மே தினக் கூட்டம் நவசமசமாஜக் கட்சி ஒன்றில் கொழும்பில் தனியாக நடத்தும் அல்லது வேறு இடதுசாரி அரசியல் , தொழில் சங்க அமைப்புகளுடன் கை கோர்த்து நடத்தும். யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ள இணைந்த எதிரணிக் கட்சிகளின் மே தினக் கூட்டத்திலும் நவசம சமாஜக்கட்சி பங்குகொள்ளும் இதன் காரணமாக சில அரசியல் வட்டாரங்களில் இருந்து விமர்சனங்களும் கண்டனங்களும் வெளிப்படுத…
-
- 4 replies
- 744 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள சிறிலங்கா தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தொடருக்கு, மூதூர் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் படுகொலை தொடர்பான அறிக்கை ஒன்றை, பிரான்சை தளமாகக் கொண்ட ஏசிஎவ் எனப்படும் பட்டினிக்கு எதிரான நிறுவனமும், ஸ்பீக் எனப்படும் மனிதஉரிமைகள் அமைப்பும் இணைந்து கையளிக்கவுள்ளன. 2006ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 ஏசிஎவ் பணியாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு முட்டுக்கட்டை போடப்படுவதைக் கண்டிக்கும் வகையிலும், இந்த வழக்கில் சிறிலங்கா அதிகாரிகள் நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளதைக் சுட்டிக்காட்டும் வகையிலும், இந்த அறிக்கை அமையவுள்ளது. மூதூர் படுகொலைகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், சிறிலங்கா அதிகாரிகள் குற்றவாளிகள…
-
- 1 reply
- 780 views
-
-
இந்திய மத்திய அரசாங்கத்துடனான உறவினை விட, தமிழகத்தினுடனான ராஜதந்திர உறவுகளை இலங்கை அரசாங்கம் விரித்தி செய்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிரேஷ்ட அமைச்சர் டி.இ.டபிள்யு குணசேகர நேற்று இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் எந்த ஒரு அரசாங்கமும், தமிழகத்துடன் ராஜதந்திர ரீதியான உறவினை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவரையில் தமிழகத்தின் முதலமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதில்லை. இதேநேரம் இலங்கையின் உயர்மட்ட அமைச்சுக் குழு ஒன்று தமிழகத்துக்கான விஜயத்தை இதுவரையில் மேற்கொண்டதும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் தமிழ் மக்கள், தமிழக மக்களுடன் கொண்டுள்ள மொழி மற்றும் கலாசார…
-
- 3 replies
- 506 views
-
-
கிருஸ்ணாவைப் போன்று சுஷ்மாவுக்கும் காலை வாரிவிட்டார் இலங்கை ஜனாதிபதி! இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜுக்கு 13வது அரசியலமைப்புத் திருத்தத்தையோ அதற்கு அப்பாற்பட்ட விடயங்களையோ நடைமுறைப்படுத்துவதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. 12 பேர் கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவுக்குத் தலைமை தாங்கி இலங்கை வந்த சுஸ்மா சுவராஜ், இந்தப் பயணத்தின் முடிவில், கடந்த சனிக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்திருந்தார். அப்போது, 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல்தீர்வை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு தனக்கிருப்பதாக இலங்கை ஜனாதிபதி உறுதியளித்ததாக அவர் கூறியிருந்தார். ஆனால் இலங்க…
-
- 6 replies
- 650 views
-
-
இந்திய கடல் பரப்பிற்குள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரவேசித்தால் கைது செய்வோம் என தமிழகத்தின் பிரபல சட்டத்தரணியொருவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறல்களில் ஈடுபடுவதனை எதிர்த்து டக்ளஸ் தேவானந்தா பாரியளவில் படகுப் போராட்டம் ஒன்றை நடாத்த உத்தேசித்துள்ளார். தமிழக கடற்பரப்பிற்குள் டக்ளஸ் தேவானந்தா அத்து மீறி பிரவேசித்தால், தமிழகத்தின் எந்தவொரு பிரஜையும் அவரை கைது செய்ய முடியும் என சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். அத்து மீறி பிரவேசித்தால் அமைச்சர் டக்ளஸை கைது செய்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினரிடம் ஒப்படைக்கும் அதிகாரம் தமிழக மாநிலத்தின் சகல பிரஜைகளுக்கும் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். 1986ம் ஆண்டு தமிழக…
-
- 6 replies
- 1.3k views
-
-
உயிரைப் பணயம் வைத்தாவது பௌத்த தர்மத்தை அரசாங்கம் பாதுகாக்கும்!- தம்புள்ளை விவகாரம் தொடர்பாக பிரதமர்! வரலாற்றுப் புகழ்மிக்க ரங்கிரி தம்புள்ளை புனித பூமி பிரதேத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் சமய புனிதஸ்தலம் சம்பந்தமான பிரச்சினை தொடர்பில் உயிரைப் பணயம் வைத்தாவது பௌத்த தர்மத்தைப் பாதுகாப்பதற்கு எமது அரசாங்கம் எப்போதும் கடமைப்பட்டுள்ளது என பிரதமர் தி.மு. ஜயரத்ன தெரிவித்தார். இன மற்றும் மத ரீதியான பிரச்சினைகள் எழும்போது சிறு சிறு கருத்து வேறுபாடுகளை பூதாகரமாக மாற்றுவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவ்வாறான பிரச்சினைகளின்போது சகல தரப்பினர்களினதும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தீர்வொன்றுக்குச் செல்ல வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். கலகெதர பிரதேசத்தில் …
-
- 4 replies
- 665 views
-
-
ஈரானிய எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவினால் ஈரான்மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையினால் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணையின் எண்ணெயின் அளவை குறைக்க வேண்டியுள்ளதாக பெற்றோலியத் துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஈரானிலிருந்து இலங்கைக்கு வருடாந்தம் 13 கப்பல் மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு, இலங்கையில் சுத்திகரிக்கப்படுகிறது. எனினும் மேற்படி தடை காரணமாக எண்ணெய் கொள்வனவும் ஈரானுடன் டொலரில் வர்த்தகம் செய்வதும் கடினமாகியுள்ளது. இலங்கை தனது வருடாந்த மொத்த எண்ணெய் கொள்வனவை தலா 135,000 தொன் கொண்ட 3 கப்பல் தொகுதிகளால் குறைக்க முடிந்தால் எஞ்சிய எண்ணெய் தொகைய டொலருக்குப் பதிலாக வேறு நாணயமொன்றை பயன்படுத்தி ஈர…
-
- 2 replies
- 784 views
-
-
ஒட்டுக்குழு டக்ளஸ் தேவானந்தா இந்தியக் கடற்பரப்புக்குள் பிரவேசித்தால் எந்தவொரு இந்தியப் பிரஜையும் அவரைத் தடுத்துவைக்க முடியும் என்று தமிழக சட்டத்தரணி பி.புகழேந்தி தெரிவித்துள்ளார். இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் ஊடுருவுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக 5 ஆயிரம் மீனவர்களுடன் இந்தியக் கடலுக்கள் பிரவேசிக்கப் போவதாக டக்ளஸ் தேவானந்தா அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சட்டத்தரணி இக்கருத்தை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 1986 கொலை வழக்கு தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா தேடப்படுகிறார். அமைச்சருக்கு எதிராக சர்வதேச பொலிஸாருக்கு அறிவிப்பதற்கான அறிவுறுத்தலை விடுக்குமாறு மாநில உள்துறை செயலாளருக்கும் பொலிஸ் பணிப்பாளர…
-
- 3 replies
- 676 views
-
-
சுயநிறைவான, தன்னில் தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமுகம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம், மக்கள் தம்மைத் தாமே ஆளும் உரிமையுடைய சனநாயக ஆட்சி முறையையே நான் விரும்புகின்றேன். இந்தப் புதிய சமுகத்தில், உழைக்கும் மக்கள் மத்தியில் பொருளாதார சமத்துவம் நிலவவேண்டும். - தமிழீழ தேசியத் தலைவர் சர்வதேச முதலாளித்துவ பொருளாதார வர்க்கம் ஒரு முறம், இனவாத, சர்வதிகார ஒடுக்கு முறைக்கும் இடையில் மக்கள் புது உலகம் என்று சொல்லப்படும், இரண்டாம் உலகப்போருக்கு பின் இன்றுவரை ௬௪ வருடங்களாக ஆதிகார சக்திகளுக்கு ஆட்பட்டு உலகெங்கும் இனப்படுகொலைகளும் ஏழ்மையும் உலகெங்கும் தலைவிரித்து ஆடுகிறது. தமிழர்களின் கட்டுபாட்டில் தமிழீழம் இருந்த போது, புரட்சிகர மாற்றங்களை கண்ட…
-
- 0 replies
- 875 views
-
-
நேற்றும் இன்றும் வன்னி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடராக மழைபெய்து கொண்டிருப்பதாகவும் இதனால் மீள்குடியேறி தறப்பாள் கொட்டகைகளுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் அவலங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு,கிளிநொச்சி,வவனியா மாவட்டங்களில் இடைவிடாத மழை கொட்டித்தீர்த்துள்ளது இதன்போது பலத்த காற்றும் விசியுள்ளதால் தற்போது வதைமுகாமில் தங்கியுள்ள மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரான மழையினால் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போக்கு வரத்து செய்யமுடியாத நிலை காணப்பட்டதாகவும் எமது வன்னி செய்தியாளர் தெரிவித்துள்ளார். http://thaaitamil.com/?p=16902
-
- 0 replies
- 514 views
-
-
இலங்கைப் பயணம்: மன்மோகன் சிங்குடன் சுஷ்மா ஆலோசனை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் 12 பேர் கொண்ட குழு, கடந்த வாரம் இலங்கையில் மேற்கொண்ட பயணம் குறித்து, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விவரித்திருக்கிறார் அந்தக் குழுவுக்குத் தலைமை வகித்த சுஷ்மா ஸ்வராஜ். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் கடந்த வாரம் இலங்கை சென்றது. தமிழர்களின் மறுவாழ்வு, மீள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்த அந்தக் குழு, பொதுமக்களிடமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை நடத்தியது. இறுதியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்துப் பேசியது. இந் நிலையில், அந்தப் பயணம் தொட…
-
- 1 reply
- 802 views
-
-
செங்கற்பட்டு சிறப்பு முகாமில் நீண்ட நாட்களாக அடைபட்டுக் கிடக்கும் ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்திடுக! வைகோ அறிக்கை. நூற்றுக்கணக்கான அப்பாவி ஈழத் தமிழர்கள், தமிழக ‘கியூ’ பிரிவு காவல்துறையினரால் பொய்யாகப் புனையப்பட்ட வழக்குகளின் மூலம், சட்டவிரோதமாக செங்கற்பட்டு சிறப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் நீதிமன்றத்தின் மூலமாக விடுவிக்கப்பட்டாலும், நீதிமன்ற வாயிலிலேயே மீண்டும் கைது செய்து, இந்த சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. இவர்கள் தமிழீழ அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்கள் என்று, சிங்களப் பேரினவாத அரசின் உளவுத்துறை மூலமாக இந்திய அரசுக்குத் தகவல்கள் அனுப்பப்பட்டு, சிங்கள அரசின் அடக்குமுறைச் செயல்பாடுகளை நம்முடைய க…
-
- 0 replies
- 822 views
-
-
யாழ்.வடமராட்சிப் பகுதியில் ஈருருளியில் வாள் மற்றும் பொல்லுகளுடன் முகமூடியணிந்து வந்த இனந்தெரியாதவர்கள் பொது மக்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (24-04-2012) 1.30 மணியளவில் வடமராட்சி வதிரிச் சந்தியில் சிறீலங்காப் படைக் காவலரணுக்கு அருகில் ஈருருளியில் முகமூடியணிந்து வந்த இனந்தெரியாதவர்கள் இளைஞனைத் தாக்கி கொலை செய்துள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் தொண்டமனாறு கோவில் வீதியைச் சேர்ந்த 28 அகவையுடைய சிவஞானம் சிவரூபன் என அடையாளங் காணப்பட்டுள்ளது. சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் வடமராட்சியில் தற்போதும் கடும் …
-
- 0 replies
- 844 views
-
-
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் களத்தில் குதிக்கும் பரபரப்பிலும் பேரப்பேச்சுகளிலும் தமிழ் முஸ்லிம் கட்சிகள் பம்பரமாகச் சுழன்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், முன்னாள் வடக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாளும் களத்தில் குதிக்க ஆயத்தமாகி வருகிறார் என்று யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐ.ம.சு.மு. அரசின் பங்காளிக்கட்சியாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் குதிக்கவே முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்கிறார் எனத் தெரியவருகின்றது. இது தொடர்பில் அவரும், அவரது இயக்கப் பிரமுகர்களும் பல்வேறுபட்ட பேச்சுகளில் மிக இரகசியமாக ஈடுபட்டு வருகின்றனர் என …
-
- 2 replies
- 530 views
-
-
அம்பாந்தோட்டையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிறுவியுள்ள துறைமும், மற்றும் விமான நிலையம் ஆகியவற்றைப் பயன்படுத்த அனைத்துலக கப்பல் மற்றும் விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டாதது சிறிலங்கா அரசுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அம்பாந்தோட்டைத் துறைமுகம் திறந்து வைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியுள்ள நிலையில் அங்கு குறிப்பிட்ட சில கப்பல்களே வந்துள்ளன. துறைமுகத்தின் நுழைவாயிலில் காணப்பட்ட பாரிய கற்பாறைகளை அகற்ற பல மில்லியன் டொலரை சிறிலங்கா அரசு செலவிட்ட போதும், இங்கு போதிய கப்பல்கள் வராதது சிறிலங்கா அரசாங்கத்தை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தநிலையில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு கப்பல்களை அனுப்புமாறு பங்களாதேசுடன் சிறிலங்கா அரசு பேச்சுகளை நடத்தியுள்ளது. வேறும்…
-
- 1 reply
- 403 views
-
-
தம்புள்ளைப் பள்ளிவாசல் பிக்குகளால் சேதமாக்கப்பட்ட விவகாரத்தையடுத்து சிறுபான்மையின மக்கள் மத்தியில் எழுந்துள்ள கொதிப்பு தணியும் முன்னரே கிழக்கில் திருகோணமலையில் 60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தையும் அகற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்தப் பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கையானது தமிழ் மக்களின் கலாசார, சமய விடயங்களில் கைவைக்கும் விடயமாக மாறியுள்ளதுடன் இந்து மதத்தையும் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை பொதுவைத்தியசாலை வளா…
-
- 3 replies
- 868 views
- 1 follower
-
-
எங்குதான் போவான் ஈழத் தமிழன்? விடுதலை கோரி சீமான் அறிக்கை செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுதலை செய்யுமாறு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு சிறப்பு முகாமில் சட்டத்திற்குப் புறம்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் 13 பேர், தங்களை விடுதலை செய்யக்கோரி மீண்டும் ஒரு முறை பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றோடு 9வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அவர்களில் பலரின் உடல் நிலை மிகவும் நலிவுற்றுள்ளது என்கிற செய்தி வருத்தத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்துகிறது. போரின்போது இலங்கைக்கு மண்ணெண்ணை கடத்தினார்கள், மர…
-
- 0 replies
- 597 views
-
-
இனவாத எதிர்ப்பு போராட்டத்தில் முஸ்லிம்கள் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் இன்றைய அரசாங்கம், இனவாத அரக்கனை அவிழ்த்துவிட்டுள்ளது. இந்த அராஜக அரக்கன், தமிழ் இந்துக்களை அல்லது தமிழ் கிறிஸ்தவர்களை மாத்திரமே குறி வைத்துள்ளது என்ற மூட நம்பிக்கையை முஸ்லிம் மக்கள் கைவிட வேண்டும். இந்நாட்டில் இனவாதம் தமிழ் மக்களை மாத்திரம் குறி வைக்கவில்லை. இனவாதம் அனைத்து தமிழ் பேசும் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் குறி வைத்துள்ளது. சிங்களம் பேசும் கிறிஸ்தவர்களையும்கூட அது குறி வைக்கிறது. தமிழர்களில் ஆரம்பித்து முஸ்லிம்கள் மக்கள் மீது கை வைக்கும் நிலைமை நீண்ட காலத்திற்கு முன்னமேயே உருவாகி விட்டது. தற்போது அது பகிரங்கமாக மேடை ஏறியுள்ளது. எனவே இனவாத அராஜ…
-
- 0 replies
- 419 views
-
-
யாழ்.புல்லுக்குளத்திற்கும் யாழ்.நூலகத்திற்கு இடையில் கடந்த 12 வருடங்களாக இருந்து வந்த மினி இராணுவ முகாம் இன்று செவ்வாய்கிழமை இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளது. யாழில் போக்குவரத்திற்கு இடையூறாக கடந்த காலங்களில் இருந்து வந்த இராணுவ முகாம் இன்றைய தினம் இராணுவத்தினரால் இடித்து அழக்கப்பட்டுள்ளது. இத்தோடு இந்த இராணுவ முகாமை இராணுவத்தினர் குருநகர் கரையோரப்பகுதியில் அமைத்து வருகின்றனர். இராணுவத்தினரின் முகாங்கள் மீண்டும் மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதியில் அமைக்கப்பட்டு வருவதால் யாழ்.மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு வருகின்றது யாழில் இராணுவ முகாம்களும் புத்த விகாரகைளை அமைப்பதில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. யாழ்.குருநக…
-
- 0 replies
- 489 views
-
-
இரு ஆண்டுகளுக்குள் இரண்டாகும் இலங்கை ஐ.நா. படை இதை அரங்கேற்றும்; எதிரணிக் கட்சிகள் எச்சரிக்கை ஜெனிவாத் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கும், அரசியல் தீர்வை வழங்குவதற்கும் அரசு தவறினால் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் நாடு இரண்டாகப் பிளவுபடும் சூழ்நிலை ஏற்படும். ஐக்கிய நாடுகள் அமைதிப்படை வடக்கு, கிழக்கிற்குச் சென்று இதனை அரங்கேற்றும் என்று எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நவசிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திரா இது தொடர்பாகத் தெரிவித்ததாவது: ஜெனிவாத் தீர்மானத்தை நிறைவேற்றக் கோரியும், அரசியல்…
-
- 4 replies
- 1k views
-
-
இலங்கையில் அரசியல் தீர்வுக்கு இந்திய அழுத்தம் அவசியமானது இந்திய நாடாளுமன்றில் சுஷ்மா சுவராஜ் இன்று விளக்க அறிக்கை இலங்கையில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை மிக விரைவாக எட்டுவதற்கு இந்திய மத்திய அரசு இலங்கை அரசு மீது கடும் அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கை உட்படப் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை இந்திய எதிர்க்கட்சித் தலைவியும் இலங்கை வந்த இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவியுமான சுஷ்மா சுவராஜ் இன்று செவ்வாய்க்கிழமை இந்திய நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றுவார் எனத் தெரியவருகிறது. அத்துடன் இந்த அறிக்கையை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும் நேரில் சந்தித்து…
-
- 0 replies
- 758 views
-
-
Jehan Mubarak released on bail after fatal accident Sa'adi Thawfeeq April 23, 2012 Sri Lanka player Jehan Mubarak was taken in custody by police and later released on bail after the car he was driving was involved in a fatal accident that killed one person and injured another at Maikkulan on the Chilaw-Colombo main road on Sunday. Mubarak was driving back to Colombo at around 1.00 pm when his car hit two youths who were heading to Chilaw on a motorbike. The victim, identified as a 31-year-old resident of Dumbaladeniya, was admitted to the Chilaw Base Hospital and transferred to the National Hospital in Colombo where he succumbed to his injuries. The …
-
- 5 replies
- 811 views
-
-
'மதிப்புக்குரிய' மகிந்த ராஜபக்சே இலங்கை ஜனாதிபதி. 'மதிப்பிற்குரிய' மெரீன் லீ பென், பிரெஞ்சு வெள்ளை இனவாதக் கட்சியின் தலைவர் ழான் மரி லீ பென்னின் புதல்வி. இவர்கள் இருவருக்கும் என்ன பொதுத்தன்மை? மகிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக இருக்கிறார். மெரின் லீ பென் ஜனாதிபதி தேர்தலுக்குப் போட்டியிடுகிறார். மறுபடியும் அதே கேள்வி, இலங்கை ஜனாதிபதிக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி வேட்பாளருக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் இருக்கிறது. பிரான்சில் பிரெஞ்சு நேஷனல் பார்ட்டி இருப்பது போல பிரிட்டனில் பிரிட்டிஸ் நேஷனல் பார்ட்டி என ஒரு கட்சி இருக்கிறது. இரண்டும் வெள்ளை இனவெறிக் கட்சிகள். நாசி படுகொலைகளையும் யூதமக்கள் கொல்லப்பட்டதையும் ஆதரிக்கும் கட்சிகள். இந்தக் கட்சிகளோடு சேர்ந்து செயல்பட்டவர்தான், எழுபத்…
-
- 0 replies
- 817 views
-
-
இன்றைய அரசாங்கம், இனவாத அரக்கனை அவிழ்த்துவிட்டுள்ளது. இந்த அராஜக அரக்கன், தமிழ் இந்துக்களை அல்லது தமிழ் கிறிஸ்தவர்களை மாத்திரமே குறி வைத்துள்ளது என்ற மூட நம்பிக்கையை முஸ்லிம் மக்கள் கைவிட வேண்டும். இந்நாட்டில் இனவாதம் தமிழ் மக்களை மாத்திரம் குறி வைக்கவில்லை. இனவாதம் அனைத்து தமிழ் பேசும் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் குறி வைத்துள்ளது. சிங்களம் பேசும் கிறிஸ்தவர்களையும்கூட அது குறி வைக்கிறது. தமிழர்களில் ஆரம்பித்து முஸ்லிம்கள் மக்கள் மீது கை வைக்கும் நிலைமை நீண்ட காலத்திற்கு முன்னமேயே உருவாகி விட்டது. தற்போது அது பகிரங்கமாக மேடை ஏறியுள்ளது. எனவே இனவாத அராஜகத்திற்கு எதிரான போராட்டத்தில், முஸ்லிம் மக்களும் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம…
-
- 0 replies
- 509 views
-