ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
'இலங்கை : போர் குற்றங்களை தடுக்கத் தவறிய சர்வதேச சமூகம்' இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க் குற்றங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு மேற்கத்தைய நாடுகளோ அல்லது ஐநாவோ செயற்திறன் மிக்க நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளன என்று அந்தப் போர் குறித்த விவரணப்படத்தை தயாரித்த பிரிட்டிஷ் தயாரிப்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கையின் பாதுகாப்புப் படையினர் இந்தப் போரில் மேற்கொண்டதாகக் கூறப்படும் பல குற்றச்சாட்டுக்களை கசிந்த ஐநா ஆவணங்கள் மூலமும், அமெரிக்கத் தகவல் பரிமாற்ற கேபிள்களின் தகவல்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் மூலமும், ஐநாவின் முன்னாள் மூத்த அதிகாரிகளின் செவ்விகளின் மூலமுமே தாம் உறுதி செய்ததாக '' இலங்கை போர்க்களம் : தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்'' என்ற…
-
- 2 replies
- 999 views
-
-
Next Wednesday, Channel 4 will release an extremely important follow-up documentary to last year’s explosive ‘Killing Fields’. This is a real chance to effect changes to the current culture of impunity in Sri Lanka, by stirring the international community into action. We need to act together to make this happen, and stop Sri Lanka becoming yesterday’s news. Each day next week, we will be posting a story from 8 people who have witnessed crimes in Sri Lanka. This is what we do, but we need donations to keep doing it. Many of you watched ‘Sri Lanka’s Killing Fields’ when it aired in June 2011, which served as critical evidence for the UN’s Report last year on Sri …
-
- 7 replies
- 1.2k views
-
-
ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவின் நல்லிணக் ஆணைக்குழுவின் அறிக்கையினை மையப்படுத்தி அமெரிக்காவினால் பிரேரணையொன்று சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை முன்னிறுத்தி சர்வதேச சுயாதீன் விசாரணைக்கான குரல்கள் வலுத்து வருகின்றன. ஐ.நா மனித உரிமைச் சபையின் முன்னாள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் அவர்கள் ஐ.நா மனித உரிமைச் சபைக்கு இக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார். சிறிலங்காவின் போர் குற்றங்கள் தொடர்பில், ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைக்கான பொறிமுறையொன்றினை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு, சர்வதேச சமூகத்துக்கு உள்ளதென ஐ.நா மனித உரிமைச் சபையின் முன்னாள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் அவர்கள் தெரிவித்துள்ளார். ஜெ…
-
- 0 replies
- 798 views
-
-
ஐ.நா மனித உரிமைப் பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரியும், பன்னாட்டு சமூகம் ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று கோரியும் கர்நாடகத் தமிழ் மக்கள் அமைப்பும் மற்றும் பல தமிழ் அமைப்புகளும் இன்று (12.03.2012) பெங்களுர்நகர சபை முன்பு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின, இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்பாளர்கள், பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், நாம் தமிழர் கட்சியின் கர்நாடக மாநில அமைப்பாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். பெரும் ஊடக கவனத்தை ஈர்த்த இந்த ஆர்ப்பாட்டம் இந்திய அரசின் கள்ள மௌனத்தைக் வெளிச்சமிட்டதோடு இலங்கையின் போர்க…
-
- 0 replies
- 617 views
-
-
விலைமாதர் விடுதிக்கு சென்று கடவுச்சீட்டை தொலைத்த மகிந்தவின் ஊடக பிரதானிகள்! March 12th, 2012 அன்று வெளியிடப்பட்டது - ஐ.நா. மனித உரிமைப் பேரவை நிகழ்வுகளை அறிக்கையிடுவதற்கு மகிந்த அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஜெனீவா அனுப்பிவைக்கப்பட்ட ஊடக பிரதானிகள் குட்டையைக் குழப்பிக் கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்குலக நாடுகளின் அழுத்தங்களை உள்நாட்டில் மகிந்த அரசிற்கான ஆதரவை அதிகரிக்கும் வகையில் பிரசாரத்தை மேற்கொள்வதற்காகவே இந்த ஊடகவியலாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். எனினும், இவர்களது பணியை உரிய முறையில் செய்யவில்லையென மகிந்த ராஜபக்ஷ ஆத்திரமடைந்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர, லக்பிம பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ர…
-
- 5 replies
- 1.7k views
-
-
படங்கள் இணைக்கப்பட்டுள்ளது நன்றி- http://thavady.com/ Commentshttp://thaavady.com/?p=389
-
- 0 replies
- 934 views
-
-
இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்: திமுக - ஆதிமுக கோரிக்கை இலங்கையின் இறுதிப்போரின்போது நடந்ததாக கூறப்படும் பாரிய மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் தொடர்பில் ஐநா மன்றத்தின் மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இந்திய நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான நிதிநிலை கூட்டத்தொடர் திங்கட்கிழமை துவங்கியது. இதன் முதல் நிகழ்வாக ஜனாதிபதி பிரதீபா பாடில் உரை நிகழ்த்தினார். அப்போது ஐநா மன்றத்தின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கை நிலவரம் குறித்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என…
-
- 3 replies
- 721 views
-
-
கொலன்னாவை நகரசபைத் தலைவரான ரவீந்திர உதயசாந்தவை வெள்ளை வானில் சென்றோர் கடத்திச் செல்ல மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்றிரவு இலங்கை நேரம் பத்து மணியளவில் வெள்ளை வானில் சென்றோர் கொலன்னாவை நகர சபைத் தலைவரைக் கடத்திச் செல்ல முயற்சித்த போது நகர சபைத் தலைவரின் அதரவாளர்களுக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் வெள்ளை வானில் சென்றோர் தப்பிச் செல்ல முயற்சித்தனர். இருப்பினும் அவர்களை கொலன்னாவைச் சந்தியில் வைத்து நகர சபைத் தலைவரின் ஆதரவாளர்கள் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். கொலன்னாவை நகர சபைத் தலைவரைக் கடத்திச் செல்வதற்காக WP CC 8649 என்ற இலக்கத்தைக் கொண்ட வெள்ளை வானில் சென்றோர் இராணுவத்தி…
-
- 11 replies
- 2.2k views
-
-
-
- 1 reply
- 1.7k views
-
-
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு சார்பாக நடந்துகொள்ள வேண்டுமாயின் இலங்கை, மன்னார் கடலிலுள்ள எண்ணெய்வளப் படிம ஒப்பந்தத்தை தமக்கு வழங்க வேண்டும் என இந்தியா நிபதந்தனை விதித்துள்ளதாக தெரியவருகிறது. இலங்கையிலுள்ள எண்ணெய்வளப் படிமங்களை இலங்கை வேறு நாடுகளுக்கு வழங்கியுள்ளமை குறித்து இந்தியா அதிருப்தி கொண்டுள்ளதாக கடந்த 06ஆம் திகதி வெளிவந்த இந்து நாளிதழ் குறிப்பிட்டிருந்தது. இலங்கையில் தற்போதுள்ள எண்ணெய்வளப் படிங்களில் இரண்டு மாத்திரமே இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ஆய்வுகளை மேற்கொண்ட இந்தியாவின் கெயான்ஸ் நிறுவனம் இந்த ஒரு படிமத்தில் எண்ணெய்வளம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. 'M8' என்ற தொகுதியை இலங்கை இந்தியாவிற்கு வழங்கியுள்ளமை குறித்து இந்தியா …
-
- 6 replies
- 1k views
-
-
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்கக் கோரிநாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டமாக இன்று நடந்தது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தொடங்கி வைத்து உரையாற்றினார். அவரது உரை தொடங்குவதற்கு முன்பு திமுக உறுப்பினர்கள் எழுந்து இலங்கையின் போர்க்குற்றத்தைக் கண்டித்து கோஷமிட்டனர். மேலும், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில், இலங்கையின் போர்க்குற்றத்தைக் கண்டித்தும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் …
-
- 1 reply
- 1.4k views
-
-
டக்ளஸ் தேவானந்தாவைப் பிடிக்க ரெட் அலர்ட் கொடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு கொலை வழக்கில் சென்னை நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியான இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ரெட் நோட்டீஸ் கொடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கொலை வழக்கில் சென்னை நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கில் இந்திய வெளியுறவுத் துறை அளித்துள்ள பதில் மனுவில் அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தா அரசு முறை பயணமாக இந்தியாவுக்க…
-
- 1 reply
- 888 views
-
-
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் இன்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கல்லூரி நிர்வாகத்தால் சிங்களப் பேராசிரியை ஒருவர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ் உணர்வளர்கள் போராட்டத்தை நடாத்தியுள்ளனர். தமிழர்களது உணர்வுகளை மதிக்காது சிங்களப் பேராசிரியை ஒருவரை கல்லூரி நிகழ்விற்கு அழைத்துள்ளதை வன்மையாக கண்டித்து கோசங்களை எழுப்பிய உணர்வளர்கள் கைகளில் கறுப்புக் கொடிகளையும் ஏந்தி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஐம்பதிற்கு மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் தமிழகப் போலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். அதேவேளை பலத்த பாதுகாப்புடன் சிங்களப் பேராசிரியை வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த சிங்களப் பேராசிரியை …
-
- 1 reply
- 628 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில், ஐ.நாவோ மேற்குலகமுமோ இராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களைத் தடுக்க காத்திரமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்பட இயக்குனர் கல்லம் மக்ரே குற்றம் சாட்டியுள்ளார். பிபிசி சிங்கள சேவைக்கு அவர் அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். கல்லம் மக்ரே மேலும் தெரிவிக்கையில்: சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிடப்படவுள்ள புதிய ஆவணப்படம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் திட்டமிட்ட அடிப்படையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதை தெளிவாக உறுதி செய்கிறது. இலங்கையின் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த ஒளிப்படங்கள், காணொளி நிபுணர்களால் கவன…
-
- 2 replies
- 798 views
-
-
எதற்காக அடிக்கடி வன்னிக்குப் போனீர்கள்..? நீங்கள் கல்வி கற்பதற்கு புலிகள் பணம் வழங்கினார்களா..? புலிகளுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டீர்களா? உங்கள் குடும்பத்திற்கும் புலிகளுக்கும் எந்த வகையான தொடர்புகள் இருந்தன..? இது சிறீலங்கா இராணுவப் புலனாய்வாளர்களின் அடுக்கடுக்கான கேள்விகள். வன்னியிலிருந்து வருகை தந்து யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களை நோக்கியே இந்தக் கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2005, 2006, 2007, 2008 மற்றும் யுத்தம் முடிவடைந்த 2009ம் ஆண்டு ஆகிய காலப்பகுதிகளில் யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களை இலக்குவைத்து சிறீலங்கா இராணுவ புலனாய்வுக் குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வன்னியிலிருந்து வருகை தந…
-
- 17 replies
- 1.9k views
-
-
அமெரிக்காவின் தீர்மானத்திற்கு கொழும்பும் புலம்பெயர்ந்த தமிழர்களும் கண்டனம் "ஆனால் காரணங்கள் வெவ்வேறு' ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின் மிக உயர் மட்டத்துடன் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு கலந்துரையாடல்களின் பின்னரே மிகக் கவனமான முறையில் பிரதிபலிப்புகளை வெளிப்படுத்தும் விதத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக வாஷிங்டன் கூறியுள்ளது. இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசாங்கமும் புலம் பெயர்ந்த தமிழர்களும் வெவ்வேறு காரணங்களுக்காக கண்டித்துள்ளனர். இந்தத் தீர்மானமானது தலையீடு செய்யும் நடவடிக்கையெனவும் நல்லிணக்கத்துக்கு உதவப் போவதில்லையெனவும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. அதேவேளை இந்தத் தீர்மானம் அரசாங்கத்தை பி…
-
- 8 replies
- 951 views
-
-
திருச்சியில் தமிழுணர்வாளர்களால் வெளியேற்றப்பட்ட சிங்களப் பேராசிரியை அரசியல் வாதிகள், முக்கிய பிரமுகர்கள் என பலதரப்பட்ட இலங்கை பிரதிநிதிகளுக்கு தமிழ்நாட்டில் கதவடைக்கப்பட்டுள்ள நிலையில் மற்றுமொருவருக்கு கதவடைக்கப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது. ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியர் ஹேமா மாலினி முனவர்த்தன இன்று (12.3.2012) திருச்சியில் உள்ள பிசப் கீபர் கல்லூரிக்கு வந்தார். அங்கு நடந்த சிறப்பு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார். இது தெரிந்ததும் புதிய தமிழகம் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கல்லூரி முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் பொலிஸார் கல்லூரி நிர்வாகத்திற்கு முன்னெச்சரிக்கை விடுத்தனர். இதையடு…
-
- 0 replies
- 922 views
-
-
வாய்ப்புகள் எந்தச் சூழலிலும் ஏற்படும். அவற்றைக் கையாள்வதன் மூலமாகவே வெற்றியும் தோல்வியும் அமைகின்றன. வாய்ப்புகளைக் கையாள்வதன் மூலமே ஒரு தலைமைத்துவத்தின் சிறப்பும் ஆளுமையும் புலப்படும். மேலும் ஒரு சிறப்பான தலைமை தனக்கான வாய்ப்புகளை உருவாக்குவதுமுண்டு. அல்லது கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தன்னுடைய வெற்றியை அது உறுதி செய்து கொள்ளும். அதுவே வரலாற்றில் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினருக்கு அந்தத் தலைமை வழங்குகின்ற நன்றிக்கடனும் பங்களிப்புமாகும். அந்தத் தரப்பு மக்களுக்கு அந்தத் தலைமை அளிக்கின்ற கௌரவமுமாகும். மக்கள் எதற்காகத் தங்களுக்கான தலைமைகளை உருவாக்குகிறார்கள்? தங்களுடைய நெருக்கடிகளைத் தீர்த்துக் கொள்வதற்காகவும் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்…
-
- 2 replies
- 1.2k views
-
-
சென்னை: ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிப்பதாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2009ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற உச்சக்கட்டப் போரின்போது மனித உரிமைகளை மீறும் வகையில் ராஜபக்சே தலைமையிலான இலங்கை ராணுவம் போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது பற்றி விசாரித்து இலங்கை அரசின் மீது உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொடர்ந்து பல்வேறு நாடுகள் வற்புறுத்தி வருகின்றன. திமுகவைப் பொறுத்த வரையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து 27.4.2011 அன்று எனது தலைமையில் நடைபெற்ற கழக உயர்…
-
- 18 replies
- 1.4k views
-
-
ஜெனிவாவுக்கு வெள்ளை வானையும் எடுத்து சென்றிருக்கலாம்: ரவி ஜெனிவா மாநாட்டிற்காக இலங்கையிலிருந்து படையெடுத்து செல்ல வேண்டிய தேவையில்லை. இரண்டு மூன்று அமைச்சர்கள் சென்றிருந்தாலே போதுமென்று தெரிவித்த ஐ.தே.க. எம்.பி. யான ரவி கருணாநாயக்க, படையெடுத்து செல்லும் அமைச்சர்கள் “வெள்ளை வானையும்’ எடுத்து சென்றிருக்கலாம் என்றும் பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் பூர்வாங்க வரவு செலவுத் திட்ட விவாதம் ஒன்றை நடத்துதல் எனும் தனி நபர் பிரேரைணையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேணையை வெற்றி கொள்வதற்கு இங்கிருந்து 53 பேர் படையெடுத்துச் சென…
-
- 3 replies
- 833 views
-
-
ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபடும் – சிறிலங்கா அமைச்சர் எச்சரிக்கை [ திங்கட்கிழமை, 12 மார்ச் 2012, 00:16 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பித்திருக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தினால், நாடு துண்டாடப்படவே வழி வகுக்கும் என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமெரிக்கா சமர்ப்பித்துள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொலன்னறுவில் நடத்தப்பட்ட சமய நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் முழு உலக மக்களுக்கும் எதிராகவே செயற்படுகி…
-
- 3 replies
- 1k views
-
-
அமெரிக்காவின் நகர்வு நியாயமற்றது - கோத்தாபய [ திங்கட்கிழமை, 12 மார்ச் 2012, 00:40 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினர் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்ததாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கடுமையாகச் சாடியுள்ளார். அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று கூறியுள்ள அவர், இந்த நகர்வு நியாயமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். மகரகமவில் பௌத்த விகாரை ஒன்றில் இடம்பெற்ற வழிபாட்டை அடுத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். விடுதலைப் புல…
-
- 1 reply
- 1k views
-
-
சிசிலி கொத்தலாவல பிரித்தானியாவில் வாழ்ந்து வருகின்றார் - இன்டர்போல் கோல்டன் கீ நிறுவனம் 26 பில்லியன் ரூபா வாடிக்கையாளர் பணத்தை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிசிலி கொத்தலாவல பிரித்தானியாவில் சட்ட ரீதியாக வாழ்ந்து வருவதாக இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறை அறிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற மிகப் பெரிய நிதி மோசடிகளில் ஒன்றாகக் கருதப்படும் கோல்டன் கீ நிதி மோசடிச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக சிசிலி கொதலாவல கருதப்படுகின்றார். இலங்கையின் முதனிலை வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான செலின்கோ குழும நிறுவனத்தின் ஸ்தாபகப் பணிப்பாளர் லலித் கொதலாவலவின், மனைவியே இந்த சிசிலி கொதலாவல என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 645 views
-
-
எரிபொருள் நிவாரணங்கள் எதனையும் இலங்கை கோரவில்லை – அமெரிக்கா 11 மார்ச் 2012 எரிபொருள் நிவாரணங்களை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் இதுவரையில் கோரவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையின் அடிப்படையாகக் கொண்டு இலங்கை நிவாரணங்களை எதனையும் கோரவில்லை என அமெரிக்கத் தூதுரக உயரதிகாரி எட்வர்ட் ஹெர்த்னீ தெரிவித்துள்ளார். எரிபொருள் இறக்குமதி தொடர்பான நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், ஈரானிடமிருந்து இறக்குமதி செய்யும் அளவு கனிசமாகக் குறைக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்த காரணத்தினால் ஏதேனும் சலுகைகளை வழங்க வேண்டுமென அமெரிக்காவிடம் இலங்கை இதுவரை…
-
- 1 reply
- 915 views
-
-
இலங்கைக்கு ஆசீர்வாதம் வேண்டி சகல ஆலயங்களிலும் மணி ஒலிக்க கட்டளையிடப்பட்டுள்ளது இலங்கைக்கு ஆசீர்வாதம் வேண்டி சகல ஆலயங்களிலும் மணி ஒலிக்க கட்டளையிடப்பட்டுள்ளது. நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு மணி ஒலிக்க விடுமாறு இலங்கை பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஊடாக பிரதேச செயலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இலங்கையிலுள்ள சகல பிரதேச செயலகங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பௌத்த விகாரைகளில் பிரித் பாராயணம் இடம்பெற வேண்டும். இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் மணி அடித்து வழிபாடுக…
-
- 4 replies
- 958 views
-