ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143368 topics in this forum
-
சென்னை: ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிப்பதாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2009ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற உச்சக்கட்டப் போரின்போது மனித உரிமைகளை மீறும் வகையில் ராஜபக்சே தலைமையிலான இலங்கை ராணுவம் போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது பற்றி விசாரித்து இலங்கை அரசின் மீது உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொடர்ந்து பல்வேறு நாடுகள் வற்புறுத்தி வருகின்றன. திமுகவைப் பொறுத்த வரையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து 27.4.2011 அன்று எனது தலைமையில் நடைபெற்ற கழக உயர்…
-
- 18 replies
- 1.4k views
-
-
ஜெனிவாவுக்கு வெள்ளை வானையும் எடுத்து சென்றிருக்கலாம்: ரவி ஜெனிவா மாநாட்டிற்காக இலங்கையிலிருந்து படையெடுத்து செல்ல வேண்டிய தேவையில்லை. இரண்டு மூன்று அமைச்சர்கள் சென்றிருந்தாலே போதுமென்று தெரிவித்த ஐ.தே.க. எம்.பி. யான ரவி கருணாநாயக்க, படையெடுத்து செல்லும் அமைச்சர்கள் “வெள்ளை வானையும்’ எடுத்து சென்றிருக்கலாம் என்றும் பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் பூர்வாங்க வரவு செலவுத் திட்ட விவாதம் ஒன்றை நடத்துதல் எனும் தனி நபர் பிரேரைணையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேணையை வெற்றி கொள்வதற்கு இங்கிருந்து 53 பேர் படையெடுத்துச் சென…
-
- 3 replies
- 834 views
-
-
ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபடும் – சிறிலங்கா அமைச்சர் எச்சரிக்கை [ திங்கட்கிழமை, 12 மார்ச் 2012, 00:16 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பித்திருக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தினால், நாடு துண்டாடப்படவே வழி வகுக்கும் என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமெரிக்கா சமர்ப்பித்துள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொலன்னறுவில் நடத்தப்பட்ட சமய நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் முழு உலக மக்களுக்கும் எதிராகவே செயற்படுகி…
-
- 3 replies
- 1k views
-
-
அமெரிக்காவின் நகர்வு நியாயமற்றது - கோத்தாபய [ திங்கட்கிழமை, 12 மார்ச் 2012, 00:40 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினர் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்ததாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கடுமையாகச் சாடியுள்ளார். அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று கூறியுள்ள அவர், இந்த நகர்வு நியாயமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். மகரகமவில் பௌத்த விகாரை ஒன்றில் இடம்பெற்ற வழிபாட்டை அடுத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். விடுதலைப் புல…
-
- 1 reply
- 1k views
-
-
சிசிலி கொத்தலாவல பிரித்தானியாவில் வாழ்ந்து வருகின்றார் - இன்டர்போல் கோல்டன் கீ நிறுவனம் 26 பில்லியன் ரூபா வாடிக்கையாளர் பணத்தை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிசிலி கொத்தலாவல பிரித்தானியாவில் சட்ட ரீதியாக வாழ்ந்து வருவதாக இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறை அறிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற மிகப் பெரிய நிதி மோசடிகளில் ஒன்றாகக் கருதப்படும் கோல்டன் கீ நிதி மோசடிச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக சிசிலி கொதலாவல கருதப்படுகின்றார். இலங்கையின் முதனிலை வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான செலின்கோ குழும நிறுவனத்தின் ஸ்தாபகப் பணிப்பாளர் லலித் கொதலாவலவின், மனைவியே இந்த சிசிலி கொதலாவல என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 646 views
-
-
எரிபொருள் நிவாரணங்கள் எதனையும் இலங்கை கோரவில்லை – அமெரிக்கா 11 மார்ச் 2012 எரிபொருள் நிவாரணங்களை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் இதுவரையில் கோரவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையின் அடிப்படையாகக் கொண்டு இலங்கை நிவாரணங்களை எதனையும் கோரவில்லை என அமெரிக்கத் தூதுரக உயரதிகாரி எட்வர்ட் ஹெர்த்னீ தெரிவித்துள்ளார். எரிபொருள் இறக்குமதி தொடர்பான நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், ஈரானிடமிருந்து இறக்குமதி செய்யும் அளவு கனிசமாகக் குறைக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்த காரணத்தினால் ஏதேனும் சலுகைகளை வழங்க வேண்டுமென அமெரிக்காவிடம் இலங்கை இதுவரை…
-
- 1 reply
- 916 views
-
-
இலங்கைக்கு ஆசீர்வாதம் வேண்டி சகல ஆலயங்களிலும் மணி ஒலிக்க கட்டளையிடப்பட்டுள்ளது இலங்கைக்கு ஆசீர்வாதம் வேண்டி சகல ஆலயங்களிலும் மணி ஒலிக்க கட்டளையிடப்பட்டுள்ளது. நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு மணி ஒலிக்க விடுமாறு இலங்கை பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஊடாக பிரதேச செயலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இலங்கையிலுள்ள சகல பிரதேச செயலகங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பௌத்த விகாரைகளில் பிரித் பாராயணம் இடம்பெற வேண்டும். இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் மணி அடித்து வழிபாடுக…
-
- 4 replies
- 959 views
-
-
ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் இலங்கைக்கு திடீர் விஜயம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மர்மமான முறையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அதிகாரிகள் திடீர் இலங்கை விஜயம் ஐக்கிய நாடுகள் பிரகடனங்களையும், இராஜதந்திர நியதிகளையும் மீறும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த அதிகாரிகளுடன் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் தெரியவருகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முனைப்புக்கள் தீவிரப்படுத்தப்ப…
-
- 0 replies
- 882 views
-
-
பிரேரணையை வாபஸ் பெறக் கோரி இலங்கைத் தரப்பு அமெரிக்காவுக்கு அழுத்தம்! கடந்த 5 ஆம் திகதி தல் 9 ஆம் திகதி வரை நடைபெற்ற 19 ஆவது கூட்டத் தொடரின் நிகழ்வுகளில் இலங்கை விடயம் மிகவும் சூடு பிடித்துள்ளது என அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. ஏறக்குறைய 80 - 90 பேரை தனது பிரசாரத்திற்கென ஈடுபடுத்தியது இலங்கை. அவுஸ்திரேலியா, சுவீடன், பிரித்தானியா போன்ற நாடுகளிலிருந்து இவர்கள் ஜெனீவா வந்திருந்தனர். எனினும் இவர்களது பிரசாரத்தினால் இதுவரையில் எந்தவித பலனும் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. அமெரிக்க வல்லரசு ஒரு சிறிய நாடான இலங்கை விடயத்தில் ஏன் இவ்வளவு மிகக் கடுமையாக உள்ளது என்பது குறித்து இலங்கைத் தீவின் உண்மையான சரித்திரத்தை அறியாத பலர் வியக்…
-
- 0 replies
- 661 views
-
-
ஜெனிவா: மனித உரிமை கூட்டத்தொடரில் இந்தியா தனக்கான நல்வாய்ப்பை தவறவிடுமா? [ ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2012, 07:34 GMT ] [ நித்தியபாரதி ] இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகப் பெரிய நாடான இந்தியா தற்போது முன்வைக்கப்படவுள்ள பிரேரனைக்கு சார்பாக வாக்களித்து தனது இருப்பை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான நல்வாய்ப்பை இந்தியா தவறவிடக் கூடாது. இவ்வாறு இந்தியாவில் இருந்து வெளிவரும் Indian Express ஆங்கில நாளேட்டில் Maja Daruwala* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாகம் செய்தவர் நித்தியபாரதி. அதன் முழுவிபரமாவது, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட…
-
- 1 reply
- 543 views
-
-
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானம் குறித்த வாக்கெடுப்பை தடுக்கும் முயற்சியில் இலங்கை அரசு தீவிரமாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத் தொடரில் - இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானத்தை முன்வைத்துள்ளது. இத் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடாது தடுப்பதற்கான முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொள்ளவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக இலங்கை அரசின் மனித உரிமைகளுக்கான விசேடதூதுவரும், அமைச்சருமான மஹிந்த சமரசிங்க ஜெனிவா செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்சமயம் ஜப்பானில் தங்கியுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க கொழும்பு திரும்பிய பின்னரே ஜெனிவா செல்வதாக …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜெனீவா மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாமையை இட்டு மக்கள் மத்தியில் பலத்த விமர்சனங்கள் உருவாகியுள்ளன. இந்த விமர்சனங்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஓர் அங்கமான தமிழரசுக்கட்சி தனது நியாயங்களை வலியுறுத்தி வருகிறது என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியபோது பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவன் என்ற வகையில் சில விடயங்களை மக்களின் …
-
- 3 replies
- 921 views
-
-
இரத்தத்தை உறைய வைக்கும் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை – பிரித்தானிய ஏடு [ ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2012, 01:56 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த, கைது செய்யப்பட்ட போராளிகளும், முன்னணித் தலைவர்களும், சிறுவர்களும் கூட- சிறிலங்கா படையினரால் திட்டமிட்ட அடிப்படையில் நீதிக்குப்புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பிரித்தானியாவின் ‘தி இன்டிபென்டென்ட்‘ ஏடு தகவல் வெளியிட்டுள்ளது. http://www.puthinappalakai.com/view.php?20120311105756
-
- 14 replies
- 3.1k views
-
-
போர்க்குற்றம்.. இந்தியா... தமிழர்கள்... இலங்கையில் நடந்த இன அழிப்பின்போது தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பை வகித்த கருணாநிதி அப்போது நடந்த அத்தனை போராட்டங்களையும் ஒடுக்கி காங்கிரஸ் தலைமைக்கு தன் விசுவாசத்தையும், புலிகளுக்கும், ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் தன் நடுவிரலை உயர்த்திக் காட்டினார். போர் குற்றம் தொடர்பாக அப்போது ராஜபக்ஷேவிற்கு உதவிய அத்தனை நாடுகளையும், குறிப்பாக இந்தியாவையும் சேர்த்தே விசாரிக்க வேண்டும். முக்கால் மணி நேர உண்ணாவிரதத்தால் ஈழ மக்களை கருணாநிதி காப்பாற்றி விட்டதாக அப்போது உடண்பிறப்புகள் தமிழகமெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டியது இன்னொரு காலக்கொடுமை. அதே துரோகி இப்போது அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என நீலிக்கண்ணீர் வடிக்கிறார். இந்த ஆள் அப்போதும் …
-
- 0 replies
- 658 views
-
-
http://naathamnews.com/?p=4272 சிறிலங்கா அரசுக்கு சர்வதேச அளவில் கடும் நெருக்கடியை தோற்றுவித்த சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்பட பிரதிகள் சிறிலங்காவுக்கு சென்றுள்ள இங்கிலாந்தின் துடுப்பாட்ட அணியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சனல்-4 தொலைக்காட்சி இது தொடர்பில் செய்திக்குறிப்பொன்றினையும் வெளியிட்டுள்ளது. ஐ.நா.மனித உரிமைச் சபையின் கூட்டத தொடரில் சிறிலங்கா தொடர்பிலான பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ள சூழலில் இங்கிலாந்து அணி சிறிலங்காவுக்கு செல்வது பொருத்தமில்லாத ஒன்றென சனல்-4 தொலைக்காட்சியின் செய்திக்குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிம்பாவே நாட்டில் அதிபர் முகாபேக்கு எதிர்பினைத் தெரிவித்து இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் முகாமையா…
-
- 4 replies
- 808 views
-
-
ஐ.நா மனிதவுரிமைப் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா சமர்ப்பித்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நல்லாசி வேண்டி தமிழ்க் கிழவனாம் நல்லூர் முருகனிடம், இளைஞர்களுக்கான நாளைய அமைப்பினர் நேற்றையதினம் வழிபாடு செய்துள்ளனர். யுத்தம் என்ற பெயரில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்த பழி பாவங்களைச் சுமந்து கொண்டிருக்கும் மஹிந்தவின் நலனுக்காக தமிழ்க் கிழவன், தமிழர்களுக்கேயுரித்தான தனிப்பெருங்கடவுள் என்றெல்லாம் புகழப்படுகின்ற நல்லூர் முருகனிடம் அடிக்கடி சிங்களம் வழிபட்டு வருகிறது. முள்ளிவாய்க்காலில் குண்டுமாரி பொழிந்து மக்களின் உயிர்களைப் பறித்த உலங்கு வானூர்திகளைக் கொண்டு நல்லூர்த் தேர்த்திருவிழாவின் போது பூ மாரி பொழிந்தது சிறிலங்கா வான்படை. மஹ…
-
- 15 replies
- 1.6k views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு இணங்க முடியாது என்று சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு அங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட ஆணைக்கு உட்பட்டதாக உள்ள பரிந்துரைகளை அடையாளம் காண வேண்டிய தேவை சிறிலங்கா அரசாங்கத்துக்கு உள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு தமக்கு வழங்கப்பட்ட ஆணைக்கு அப்பால் சென்றுள்ளதாக சில நிபுணர்கள் சொல்கிறார்கள். நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட ஆணைக்கு அமைவான பரிந்துரைகளை அடையாளம் கண்டு அவற்றை விரைவாக நடைமுறைப்படுத்த முடியும். சில பரிந்துரைகளை நாம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளோம். …
-
- 2 replies
- 960 views
-
-
நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவி லக்சினியினை வன்புணர்ச்சிக்குட்படுத்திக் கொடூரமாய் கொன்ற கொலைபாதகனுக்குத் தண்டனை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் ஐரோப்பாவைத் தளமாகக்கொண்டியங்கும் நெடுந்தீவிற்கான சர்வதேச இணையம் மற்றும் குமுதினி இணையவலை காப்பகம் கூட்டாகக் கண்டனம் தெரிவித்துள்ளன. நெடுந்தீவு மகாவித்தியாலயமானது பல மகான்களை நல்ல மனிதர்களை உலகிற்கீந்த உன்னத கல்விக்கூடம். பல இன்னல்களுக்கும் மத்தியில் கல்விப்பெரும் பேற்றை அள்ளிகொடுத்துக் கொண்டிருக்கின்ற அந்தக் கல்லூரியின் 8ம் தரமாணவி லக்சினியை சீரழித்து சித்திரவதைப்பட்டு காமுக வெறியனொருவாரல் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டாள் என்கின்ற ஈனச்செய்தி எம்மைத் திடுக்கிட வைக்கின்றது. இது தொடர்பில் ஈ.பி. டி.பி யின் முன்னணி தளபதி நெப்…
-
- 7 replies
- 1k views
-
-
சிறிலங்காவின் சாயம் வெளுக்கிறது - எல்லா பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த முடியாதாம் [ ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2012, 11:30 GMT ] [ கார்வண்ணன் ] நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு இணங்க முடியாது என்று சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு அங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட ஆணைக்கு உட்பட்டதாக உள்ள பரிந்துரைகளை அடையாளம் காண வேண்டிய தேவை சிறிலங்கா அரசாங்கத்துக்கு உள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு தமக்கு வழங்கப்பட்ட ஆணைக்கு அப்பால் சென்றுள்ளதாக சில நிபுணர்கள் சொல்கிறார்கள். …
-
- 4 replies
- 909 views
-
-
திருகோணமலை மாவட்டம், மூதூர், பச்சனூர் பகுதியில் கடற்படையினரின் பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் 20 கடற்படையினர் காயமடைந்துள்ளனர். பிற்பகல் இரண்டு மணியளவில் குறித்த பஸ் வண்டி வீதியை விட்டுவிலகி ஏரியொன்றிற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறித்த பஸ் வண்டி சேருநுவரவில் இருந்து நிலாவெளி நோக்கிப் பயணித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். காயமடைந்தவர்களில் 13 பேர் மூதூர் வைத்தியசாலையிலும் ஒன்பது பேர் திருகோணமலை வைத்தியசாலையிலும் சிகிக்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 772 views
-
-
மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தை இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டுவருகிறது இந்தியா இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இந்திய மீனவர்கள் 16 பேர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து இலங்கை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டுசெல்லுமாறு கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தை இந்திய அரசாங்கம் கோரியுள்ளது. பாக்கு நீரிணையில் சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 16 பேர், இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் குறித்து சம்பந்தப்பட்ட இலங்கை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசெல்லுமாறு இந்திய தூதரகத்தை இந்திய வெளிவிகார அமைச்சு கேட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் பி.ரி.ஐ.க்கு தெரிவித்துள்ள…
-
- 2 replies
- 836 views
-
-
ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குகொள்ளாமை மற்றும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மையில் தமிழ் ஊடாகங்களுக்கு தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் ஆகியவற்றை நியாயப்படுத்தும் வகையில், கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்கள், செய்தி ஆசிரியர்கள் மற்றும் சிரேஸ்ட தமிழ் ஊடகவியலாளர்களை அழைத்து இரகசியக் சந்திப்பொன்றை கூட்டமைப்பின் உறுப்பினர்களான சம்பந்தன், மாவை சேனாதிராச மற்றும் போர்க்குற்றம் தொடர்பான சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு எதிராக செயற்பட்டுவரும் சுமந்திரன் ஆகியோர் நடாத்தியுள்ளனர். கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள கூட்டமைப்பின் காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இச…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பார்த்து தனது கண்கள் இன்னமும் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்கிறது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறுகிறார். இன்றைக்கு கண்ணீர் சிந்துகிறீர்களே, அன்றைக்கு என்ன செய்தீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.திருவொற்றியூர் பெரியார் நகரில் நடந்த நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் சீமான் பேசும்போது, உலகிலேயே வேகமான ஒரு உண்ணாவிரதத்தை நடத்தி விட்டு அங்கு போர் நின்றுவிட்டது என்று கூறி முடித்துக் கொண்டீர்கள். அதற்கு பிறகுதானே அங்கிருந்த தமிழ் மக்கள் மீது கனரக ஆயுதங்களையும், குண்டுகளையும் வீசி தமிழர்களை கொத்து கொத்தாக சிங்கள அரசு கொன்று குவித்தது. இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீ…
-
- 6 replies
- 907 views
-
-
எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டாலும், இலங்கைக்கெதிராக அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்துள்ள பிரேணையை தோற்கடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் மகிந்தவின் திட்டமிடாத செயற்பாடுகளே என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு இலங்கைத் தூரக அலுவலகமொன்றில் அதிகாரிகளைச் சந்தித்த போதே வெளிவிவகார அமைச்சர் இதனை மிகவும் வெறுப்புடன் தெரிவித்துள்ளார். தான் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த போதிலும், ஜெனீவாவிற்கான இலங்கைக் குழுவின் தலைவராக அமைச்சர் மகிந்த சமரசிங்கவை நியமித்து தன்னை ஜனாதிபதி அவமதித்துள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பு ஒபரோய் …
-
- 12 replies
- 1.5k views
-
-
[TamilNet, Sunday, 11 March 2012, 11:37 GMT] The US-tabled resolution at UNHRC, based on the fundamentally flawed LLRC recommendations, is extremely disappointing and counter-productive, said Gajendrakumar Ponnambalam, leader of Tamil National Peoples’ Front (TNPF), in a press meet held at the party office in Jaffna on Saturday. The resolution envisages an accused in the violation of international humanitarian law to become the investigator of the crime. If the LLRC findings are going to be the ‘starting point’ for any future prospects, chances of progress are difficult. Rather than keeping the expectations of the grieved party at the bare minimum, the resolution should…
-
- 0 replies
- 510 views
-