ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143359 topics in this forum
-
சிங்கள பெரும்பான்மை சமூகத்தால் ஆளப்படும் சிறிலங்கா காவற்துறையில், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்ள முடியும் என சிறிலங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது சிறிலங்கா காவற்துறைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் போது புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் விண்ணப்பிக்க முடியும் என காவற்துறைப் பேச்சாளர் அஜித் றொகனா இந்திய செய்தி நிறுவனமான PTI நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். "நாங்கள் அவர்களைப் பாரபட்சமாய் நடாத்த மாட்டோம். அதற்கான அத்தியாவசிய தகைமைகளைக் கொண்டிருந்தால் அவர்கள் அதற்கு விண்ணப்பிக்க முடியும்" எனவும் றொகன மேலும் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறு…
-
- 0 replies
- 786 views
-
-
கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதில் அர்த்தமில்லை - தெரிவுக்குழுவிலேயே இறுதி முடிவு! கெஹலிய ரம்புக்வெல பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை எனத் தெரிவித்திருக்கும் சிறிலங்கா அரசாங்கம், இனநெருக்கடிக்கான இறுதி முடிவு பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலேயே எடுக்கப்படவேண்டியதாக இருப்பதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களைத் தொடர்வதில் என்ன அர்த்தம் இருக்கப்போகின்றது என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கின்றது. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களைத் தொடரப்போவதில்லை எனவும் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இனநெருக்கடியைப் பொறுத்தவரையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமாகவே தீர்வு காணப்பட…
-
- 3 replies
- 963 views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், அரசு தரப்பு பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன ஆகியோருக்கும் இடையில் இரகசியச் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருப்பதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன. கொழும்பில் கடந்த 27.01.2012ஆம் திகதி இந்தச் சந்திப்பு இடம் பெற்றிருப்பதாகவும், இந்தச் சந்திப்பின் போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான பெயர்களும் இரா.சம்பந்தனால் அரச தரப்பினருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் நம்பகம…
-
- 2 replies
- 1.3k views
-
-
செந்தில் தொண்டமானின் வருகையை எதிர்த்து இந்தியாவில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மருமகனும் ஊவா மாகாண சபை அமைச்சருமான செந்தில் தொண்டமான் இந்தியாவின் பாண்டிச்சேரி, சனீஸ்வரன் கோவிலுக்கு சென்றபோது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி ஆவேசமாக கோஷமிட்டதால் அவரை பொலிஸார் அங்கிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் நேற்று சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது. இரவு சுமார் 9 மணியளவில் அமைச்சர் செந்தில் தொண்டமான் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 20 பேர் அவரின் வருகையை கண்டித்தும் ஜனாதிபதி ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
1971ல் தான் சொன்னதைப் போன்று சிங்கள மக்களுக்கு தமிழையும் தமிழ் மக்களுக்கு சிங்களத்தையும் புகட்டியிருந்தால் நாட்டில் தற்போதுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டிருக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊவா மாகாணத்தில் காணியில்லாதவர்களுக்கு காணி உறுதிகளை வழங்குகின்ற நிகழ்வு மொனராகலை பிரதேச சபை வளாகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் உருவாகாமலிருப்பதைத் தடுப்பதற்காக அனைத்து மாணவர்களுக்கும் மும்மொழி தொடர்பிலான அறிவைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மும்மொழிச் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அங்கு…
-
- 2 replies
- 660 views
-
-
எடுக்கவா?கோர்க்கவா? துரியோதனன் கேட்டது எதற்காக-சிறீ லங்காவின் இன்றைய நிலை குந்திக்கும் சூரியனுக்கும் பிறந்தவன் கர்ணன். திருமணத்திற்கு முன் ஏற்பட்ட காதல் வயத்தால் நடந்த விபத்து அது.நடக்கக்கூடாதது நடந்துவிட்டது.இருந்தும் பெற்றதன் குழந் தையை வளர்ப்பேன் என்று குந்தி சபதம் செய்திருந்தால் அது ஒரு புதுமையாக இருந்திருக்கும். எனினும் பழிக்கு அஞ்சி தான்பெற்ற குழந்தையை பேழையில் வைத்து ஆற்றிலே விடுகிறாள் குந்தி என்று பாரத இதிகாசம் சொல்கிறது. கதையில் துயரம் இருந்தாலும் கர்ணன் துரியோதன னுடன் நட்புக் கொள்வதும் கர்ணனை அங்க தேசத்தின் அதிதியாக்கும் துரியோதனனின் செயலும் குந்தியுடன் ஒப்பிடும் இடத்து உயர்ந்து நிற்பதை உணரமுடியும்.அதிலும் இன்னுமோர் சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கது. …
-
- 2 replies
- 4.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றில் வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓமந்தைச் சோதனைச் சாவடியில் பஸ் நிறுத்தப்பட்ட போது இருக்கை ஒன்றின் கீழ் இருந்த இந்தக் குண்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவே குண்டு கண்டெடுக்கப்பட்டது. குண்டு இருந்த பொதிக்கு யாரும் உரிமை கோராததை அடுத்து பஸ்ஸில் பயணம் செய்த 38 பயணிகளும் படையினரால் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். மறைத்து வைக்கப்பட்டிருந்த பையிலிருந்து 3 டெற்றனேற்றர்கள், 300 கிராம் கன் பவுடர், 24 ரவைகள் மற்றும் வெடிபொருள் கொள்கலன் ஒன்று என்பவற்றைப் படையினர் கண்டெடுத்தனர். எனக் குறிப்பிடுகின்றன. வடகிழக்கை இராணுவ மயப்படுத்தும்நோக்கோடு இலங்கை அரசு இவ்வாற…
-
- 1 reply
- 885 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பில் விடுவிப்பது அரசின் பொறுப்பு - முரளி அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்வதே அரசியல் கைதிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் முன்னுள்ள பொறுப்பாகும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். இன்றைய நிலையில் சிறைகளில் தவித்துக்கொண்டிருக்கும் மலையக மற்றும் வடக்கு, கிழக்கு இளைஞர்களின் நிலைமைகள் தொடர்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போர் முடிவடைந்து மூன்றாண்டுகள் கடக்கின்ற நிலையிலும் தமிழ் மக்களின் பிள்ளைகளில் நூற்றுக்கணக் கணவார்கள் விசாரணை இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.…
-
- 0 replies
- 539 views
-
-
இலங்கையில் நிலைத்து நிற்கக் கூடிய காத்திரமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இந்தியா முழுமையான அதீத அக்கறை காட்டி வருகிறது. அதே சமயம் அமைதித் தீர்வு தொடர்பாக இலங்கையின் வாக்குறுதிகள் இந்தியாவுக்குத் திருப்தி அளிக்கின்றன. இவ்வாறு அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவ், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்ரனிடம் தெரிவித்திருக்கிறார். நேற்றுமுன்தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தற்போதைய இலங்கையில் அரசியல் நிலைமை மற்றும் இலங்கை விவ காரத்தில் ஏனைய நாடுகளின் தலையீடுகளை அடுத்தே இவர்களின் தீடிர் சந்திப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வோஷிங்டனில் கடந்த வருட இறுதியில் இந்தியத் தூதுவரா…
-
- 7 replies
- 723 views
-
-
ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் புதிய நியமனத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொள்ளும் என தெரியவருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பிரிவின் பான் கீ மூனுடைய சிரேஸ்ட ஆலோசகர் குழுவில் சவேந்திர சில்வாவும் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து இன்னர் சிட்டி பிரஸ்டு ஐக்கிய நாடுகள் சபையிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் பேச்சாளர், "சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து பான் கீ மூன் பொறுப்புக் கூற மாட்டார். அதேவேளை, அவருடைய நியமனத்தை தடுக்கும் வகையில் செயற்படவும் மட்டார்." எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே சவேந்திர சில்வா ஐக…
-
- 3 replies
- 675 views
-
-
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதிசவேந்திர சில்வாவை நாம் தெரிவு செய்யவில்லை ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணியின் ஆலோசனைக் குழுவில்சவேந்திர இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, ஐக்கியநாடுகள் அமைப்பு இவ்வாறு பதிலளித்துள்ளது. சவேந்திர சில்வாவை, ஆசிய பிராந்திய வலய நாடுகளே ஆலோசனைக்குழுவிற்கு தெரிவு செய்தன என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர்மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார். பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கும் இந்த நியமனத்திற்கும் தொடர்பு கிடையாதுஎன அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.நா அமைதி காக்கும் படை உயர் பதவிக்கு சவேந்திர சில்வா நியமனம் 27-…
-
- 1 reply
- 868 views
-
-
திருகோணமலை விநாயகபுரம் மட்டிக்களி கிராமத்தில் சிங்களக் காடையர்கள் புகுந்து நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் பெருமளவானோர் காயம் அடைந்திருக்கின்றனர். இன்று இரவு 7 மணியளவில் குறித்த கிராமத்தினுள் புகுந்த சிங்கள் காடையர் குழு தமிழ் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருக்கின்றது. சம்பத்தினால் அந்தக் கிராமமே அல்லோல கல்லோலப்பட்டதாக அங்கிருந்து வெளியாகியிருக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் முதற்கட்டமாக நால்வர் திருகோணமலை பொது வைத்தியசாலைகக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் அவர்களில் மூவர் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் என்றும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பாதிக்கப்பட்டோர் தொகை இன்னமும் அதிகமாக இருக்கலாம் என்றும் இது க…
-
- 6 replies
- 1.1k views
-
-
காணி, பொலிஸ் வழங்க வேண்டும்- பசில் _ புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பின்னர் வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் நான் சேவையாற்றினேன். புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்தவருக்கு மருந்துவ வசதிகளை செய்துகொடுத்து உபசரித்தேன். அந்த வகையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு காணி, பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesar...asp?key_c=36316
-
- 7 replies
- 1.2k views
-
-
வடக்கு, கிழக்கு இனப்பிரச்சினை தீர்வுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் வேளையில் தமிழ் மக்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்வதானது தமிழ் மக்கள் மத்தியில் சந்தேக நிலையை தோற்றுவித்துள்ளது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கச்சக்கொடிசுவாமிமலை கிராம சேவையாளர் பிரிவில் உள்ள புராதன காலத்து அடையாளங்கள் உள்ள பகுதியிலும் மக்கள் இல்லாத பகுதியிலும் இராணுவம், பொலிசாரின் உதவியுடன் சிங்களப் பொதுமக்கள் ஒரு சில பௌத்த துறவிகளின்…
-
- 0 replies
- 872 views
-
-
இனந்தெரியாத சிலரால் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட கொழும்பு மாநகரபை மற்றும் பல நிறுவனங்களின் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றி வந்த சத்தியசீலன் பாக்கியராஜ் கடந்த 23ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ். அச்சுவேலி பிரதேசத்தில் 34 வயதான சத்தியசீலன் பாக்கியராஜ் மறைந்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர். கொழும்பு மாநகரபை மற்றும் பல நிறுவனங்களின் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றும் இவர், விடுமுறையை கழிப்பதற்காக திருகோணமலைக்கு சென்றபோது இனந்தெரியாதோர் சிலரால் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக அவரது மனைவி திருகோணமலைஇ துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி 13ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்து, திருகோணம…
-
- 0 replies
- 802 views
-
-
மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் சட்ட விரோதமான முறையில் தங்கியிருந்தார்கள் என்ற குற்றத்தின் பேரில் பெண்கள், குழந்தைகள் உட்பட 200 ற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமொன்றில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சட்ட விரோத ஆட்கடத்தல் முகவர்களினால் கனடாவிற்கான பயணத்தின் நிமித்தம் அழைத்துச் செல்லப்பட்டு டோகோவிலுள்ள வீடுகளில் தங்க வைக்கப்பட்டிருந்தபோது இவர்கள் அந்நாட்டு பொலிசாரின் சுற்றிவளைப்பில் சிக்கியுள்ளனர்.தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தவர்கள் புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் உதவியுடன் நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் 9 பேர் இதுவரை நாடு திரும்பியுள்…
-
- 1 reply
- 1k views
-
-
ஜெனீவாவில் பெப்ரவரி மாத இறுதியில் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம்எதுவும் நிறைவேற்றப்படாமல் தடுப்பதில் இலங்கை அரசு தீவிரமாக உள்ளது. இந்தப் பணிகளுக்காக அமைச்சர்கள் பலரை உள்ளடக்கிய 15 பேர் கொண்ட குழு பல்வேறு நாடுகளுக்கும் விரையவுள்ளது. நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை இந்தக் குழு கொழும்பில் இருந்து புறப்படவுள்ளது. இலங்கையின் இறுதிப் போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காகச் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்று மேற்கு நாடுகள் வலியுறுத்துகின்றன. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மார்ச் மாதக் கூட்டத் தொடரில் இலங்கை மனித உரிமைகள் நிலைமை குறித்துப் பகிரங்க விசாரணை கோரும் பிரேரணை ஒன்று சமர்ப…
-
- 1 reply
- 569 views
-
-
'த. தே. கூட்டமைப்பு - கிழக்கு முதலமைச்சர் சந்திப்பு அரசியல் உள்நோக்கங்களுக்கு அப்பால் பார்க்கப்பட வேண்டும் ' அரசியல் உள்இணைவுகளுக்கு சில கோரிக்கைகள் விடுக்கப்படும் போதும் முயற்சிகள் செய்யப்படும் போதும் அதனைப் பொதுநோக்கில் பார்ப்பதே சிறந்ததாக இருக்கும் என்பதுடன், அரசியல் சுயலாபங்களுக்கு அப்பால் பார்க்கப்படவும் வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளருமான எட்வின் கிருஸ்ணானந்தராஜா (பிரதீப் மாஸ்டர்) தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் கிழக்கு முதலமைச்சருக்குமிடையில் நடைபெறவுள்ள பேச்சினைக் குழப்ப முனையும் அமைப்புகள் குறித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி…
-
- 2 replies
- 1.2k views
-
-
அதிகாரப் பகிர்வை வழங்க சிறிலங்காவுக்கு அழுத்தங்களை ஏற்படுத்துக! - புதுடில்லிக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் ஆலோசனை! இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கான அழுத்தங்களை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்படுத்துவதற்கு இந்தியா பங்களிப்பு வழங்க வேண்டிய தேவையுள்ளதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேசக் கற்கைகளுக்கான கல்லூரியின் பேராசிரியர் அனுராதா எம்.செனோய் தெரிவித்துள்ளார். 'தமிழ் மக்கள் வாழும் வடக்குக் கிழக்குப்பகுதிகளுக்கு அரசியல், பொருளாதார அதிகாரங்களுக்கான உத்தரவாதம் தேவைப்படுகிறது. இந்நிலையில் இவ்விகாரம் தொடர்பில் இந்தியா அதிகளவுக்கு ஆதரவான பங்களிப்பை வழங்க வேண்டும். சுய நிர்வாகத்துடன்…
-
- 4 replies
- 798 views
-
-
<p> போர்க்குற்றவாளியை ஐ.நா அமைத்திப்படை ஆலோசனைக்குழுவில் நியமிக்க வேண்டாம் - அமெரிக்க மனிதவுரிமை அமைப்புக்கள் கோரிக்கை இலங்கையில் 2009 இல் முடிவடைந்த மிகக் கொடூரமான இனவழிப்புப் போரில் முக்கிய பாத்திரம் வகித்தவரும், போரின் இறுதிக்கட்டத்தில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட நேரடிக் காரணமாக இருந்தவருமான ஜெனரல் சவீந்திர சில்வாவை ஐ.நா அமைத்திப்படையின் ஆலோசகர்ப் பதவியொன்றிற்குப் பரிந்துரைத்திருப்பதைக் கண்டித்து அமெரிக்காவின் மூன்று முக்கிய மனிதவுரிமை அமைப்புக்கள் செயலாளர் நாயகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளன. போரின் இறுதிக்கட்டத்தில் சர்வதேச சட்டங்களை உதாசீனம் செய்து மனித விழுமியங்களுக்கெதிராகப் போர்நடத்தி பல்லாயிரக்கணக்கான மனிதவுயிர்கள் கொல்லப்படக் காரணமாக இருந்தவரை…
-
- 2 replies
- 832 views
-
-
ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, அமைதிகாக்கும் செயற்பாடுகளுக்கான ஆலோசனைக் குழுவுக்கு ஐ.நா.செயலாளர் பான் கீ மூனினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐ.நா. அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கு படைகளை அனுப்பும் நாடுகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அமைதிகாக்கும் செயற்பாடுகள் தொடர்பாக இத்தகைய பதவியொன்றுக்கு இலங்கையர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். மேற்படி குழுவில் ஆசிய- பசுபிக் நாடுகளை மேஜர்ஜெனரல் சவேந்திர சில்வா பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார். http://www.saritham.com/?p=48845
-
- 34 replies
- 2.4k views
-
-
மீண்டும் மிரட்டும் 'ஜெனிவா' ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் பற்றிய செய்திகள் ஊடகங்களில் மீண்டும் பரபரப்பாகத் தொடங்கியுள்ளன. இதற்கு முன்னரும் பலமுறை ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டங்கள் தொடர்பாக பரபரப்பாக செய்திகள் வெளியாவதுண்டு. குறிப்பாக 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், இது ஒரு வழக்கமான விவகாரமாகி விட்டது. ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்க சில வாரங்கள் முன்னதாகவே தொற்றிக்கொள்ளும் இந்தக் காய்ச்சல், அது முடிவுக்கு வரும் வரை விடாமல் அடித்துக் கொண்டேயிருக்கும். இப்போதும் அப்படித் தான், இந்தக் கூட்டத்தொடர் ஆரம்பிக்க இன்னும் கிட்டத்தட்ட 4 வாரங்கள் இருக்கின்ற போதும், அதையொட்டிய பரபரப்புக்கு குறைவேதும் இல்லாமல் கிளம்பிவிட்…
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கைக்குள் சீனப் பொருளாதார கொலைகாரர்கள் உட்புகுந்து ஆக்கிரமிப்புச் செய்துள்ளனர். அரசாங்கம் நாட்டை சீனாவிடம் தாரைவார்த்துள்ளது. இதனால் இந்தியா கடுமையான அதிருப்திக்குள்ளாகியுள்ளது. இதனால் தெற்காசிய பிராந்தியத்தில் புதியதொரு பூகோள மாற்றம் ஏற்பட்டுள்ளது என ஐக் கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப் பினர் ஹர்ஷ டி.சில்வா குற்றம்சுமத்தியுள்ளார். கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே கலாநிதி ஹர்ஷ டி.சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார். கொழும்பு துறைகத்தின் வடக்கு இறங்குதுறை விஸ்தரிப்பு திட்டம் மேர்சன்ட் நிறுவனம் மற்றும் உள்ளுர் நிறுவனமான எயிட்கன்ட் ஸ்பென்ஸ், துறைகங்கள் அதிகாரசபை இணைந்து மேற்கொள்வ…
-
- 3 replies
- 1k views
-
-
ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனின் மியன்மாருக்கான சிறப்பு ஆலோசகராக இந்திய தூதுவர் விஜய் நம்பியார் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 5 வருடங்களாக பான் கீ மூனின் தலைமை ஆலோசனை அதிகாரியாக இருந்து வந்த விஜய் நம்பியார், இப்பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து மியன்மாருக்கான சிறப்பு ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் ஐ.நாவின் நிரந்தர பிரதிநிதியாக நீடிக்கவுள்ளார். வி.புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினர்க்கும் இடையில் 2009 இல் இறுதியுத்தம் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது அதில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஐ.நாவினால் தவிர்க்க முடியாது போனதற்கு விஜய் நம்பியாரும் ஒரு காரணம் என முன்னர் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வ…
-
- 10 replies
- 1.6k views
-
-
செனட் சபைக்குள் ஒளிந்திருக்கும் தீர்வு பொறிகள்-இதயச்சந்திரன் Published on January 28, 2012-7:47 pm சைக்கிள்கள் டோக்கன்களாக உருமாறிய கதையை, இந்திய வெளிநாட்டமைச்சர் யாழ்ப்பாணத்தில் நின்றபோது பார்த்தோம். பொலிஸ், காணி, நிதி, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உட்பட்ட பல முக்கிய விடயங்களை நாமே நிர்வகிக்கக் கூடிய தீர்வையே எதிர்பார்க்கின்றோமென கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறும்போது, “செனட் சபை’ என்கிற டோக்கனை காட்டுகிறது அரசு. இந்த டோக்கன் விளையாட்டு, மாவட்ட அபிவிருத்திச் சபையிலிருந்து ஆரம்பமாகிறது. தங்கத்திற்கு மாற்றீடாக டொலர் தாள்களை அச்சடித்து, உலக வளங்களை தனதாக்கி, பெரும் வல்லரசான அமெரிக்காவின் வரலாறுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு வகையில் …
-
- 2 replies
- 845 views
-