ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143359 topics in this forum
-
சாந்தி சச்சிதானந்தத்தின் விழுது ஆற்றல் மேம்பாட்டு நிலைய காரியாலயம் மீது இனந்தெரியாதநபர்கள் தாக்குதல் [ உலகத் தமிழ் செய்திகள் ] - [ Jan 24, 2012 14:22:24 GMT ] நாளை ஊடகங்களுக்கு எதிரான அடக்கு முறையை ஆட்சேபித்து போரட்டம் நடத்தவுள்ள நிலையில், ஊடக அடக்கு முறையின் மற்றுமொரு அங்கம் இன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. இன்று அதிகாலை டொரிங்டன் அவன்யூ பகுதியில் அமைந்துள்ள விழுது ஆற்றல் மேம்பாட்டு நிலையத்தின் பிரதான காரியாலயம் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார். தமதுநிலையத்தில் ஏதோ ஒரு ஆவணத்தை தேடும் முயற்சியில் இனந்தெரியாத நபர்கள் தீவிரமாக ஈடுபட்டதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்தார். இந்ததாக்குதலினால் அங்குள்ள பொருட்கள் மற்ற…
-
- 0 replies
- 585 views
-
-
ஹிக்கடுவை கடலில் மூழ்கி ஜெர்மன் பிரஜை பலி! ஹிக்கடுவ கடலில் நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (21) மாலை வேளையில் நீரில் மூழ்கிய குறித்த வெளிநாட்டவர் மீட்கப்பட்டு கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் 72 வயதுடைய ஜெர்மன் நாட்டுப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஹிக்கடுவை பிரதேச சுற்றுலா விடுதி ஒன்றில் இவர் தங்கியிருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.saritham.com/?p=48330
-
- 7 replies
- 1k views
-
-
சிறிலங்கா அரசின் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் மனித உரிமைப் பேரவையில் அங்கம்வகிக்கும் நாடுகளே தீர்மானம் எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர்பான் கீ மூனின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில்விசாரணை பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நிபுணர் குழுநியமிக்கப்பட்டிருந்தது. தாருஸ்மன் தலைமையிலான மூவர் அடங்கிய ஆணைக்குழு இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருந்தது. நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதா இல்லையா என்பதனைஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளே தீர்மானிக்கவேண்டுமென அவர் …
-
- 0 replies
- 465 views
-
-
புனர்வாழ்வு பெற்று தற்போது மீளவும் சமூகத்துடன் இணைக்கப்பட்டு வடக்கில் வாழும் முன்னாள் புலி உறுப்பினர்களை அரசியற் செயற்பாடுகளில் ஈடுபடாமல் தூர விலகி இருக்குமாறு, சிறிலங்கா இராணுவம் அச்சுறுத்தி வருவதாக உள்ளுர் அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மக்கள் போராட்ட இயக்கத்துடன் [Peoples Struggle Movement - PSM)] இணைந்து செயற்படவேண்டாம் என முன்னாள் புலி உறுப்பினர்களிடம் சிறிலங்கா இராணுவம் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக, வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவரான MK சிவாஜிலிங்கம், பிபிசி சந்தேசியாவிடம் தெரிவித்துள்ளார். "இது அவர்களின் அரசியல் உரிமையை மறுப்பதாக உள்ளது" எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி யிலிருந்து பிரிந்து சென்ற அமைப்பே மக்கள் போராட்ட இயக…
-
- 0 replies
- 575 views
-
-
யாழ். வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவுக்கான இயந்திரங்கள் அன்பளிப்பு யாழ். போதனா வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவுக்கான இயந்திரங்களை கனடா வாழ் தமிழ் மக்கள், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புரூஸ் லெவி ஊடாக இன்று திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் கையளித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவுக்கான இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. கனேடிய மக்களின் இந்த அன்பளிப்பை கனேடிய அரசினூடான அந்த மக்கள் யாழ். மக்களின் மருத்துவ வசதிக்காக இந்த இயந்திரத்தை அன்பளிப்பு செய்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா குறிப்பிட்டுள்ளார். சுமார் 225 மில்லியன் பெறுமதியான இருதய சிகிச்சை பிரிவு இயந்திரங்கள…
-
- 5 replies
- 852 views
-
-
ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் அதிகாரப் பகிர்வு மற்றும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு ரணில் விக்ரமசிங்க இதன்போது அழைப்பு விடுத்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் இந்த அழைப்பை நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. http://akkinikkunchu.com/new/index.php
-
- 1 reply
- 742 views
-
-
தத்தளிக்கும் எம் தாயக உறவுகளைக் கரைசேர்க்கப் புதிய ஆண்டில் உறுதியேற்போம் Sunday, January 01, 2012 ஈழத்தவன் 2012ம் ஆண்டில் மகிழ்ச்சியுடன் காலடி எடுத்துவைக்க உலகம் தயாராகிக் கொண்டிருக்கின்ற வேளையில், ஈழத்தில் வாழும் தமிழர்களின் புத்தாண்டு பலகேள்விகளுடன் ஆரம்பிக்கப்போகின்றது. குறைந்தபட்ச அதிகாரங்கள்கூட மறுக்கப்பட்டதால் தோல்வியடைந்த பேச்சுவார்த்தை, சிங்களப் பேரினவாதத்திடமிருந்து தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதை மீண்டும் தெளிவாகப் பறைசாற்றியுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, அதிலுள்ள பரிந்துரைகளைக்கூட நிறைவேற்றமாட்டோம் என்ற சிறிலங்கா ஆட்சியாளர்களின் பிடிவாதம், எதிர்பார்ப்புக்களுக்கு உள்ளாகியுள்ள ஜ.நா மனித உரிமை சபையின் கூட்டம் போன்ற விடயங்கள் முக்கிய இ…
-
- 0 replies
- 519 views
-
-
அதிகாரபூர்வமாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை: ஒரு வகையில் இலங்கை அரசுக்கான எச்சரிக்கை தான் "................................அமெரிக்கா இப்போது இலங்கை விவகாரம் தொடர்பாக அதிகம் கருத்து வெளியிடுவதைக் காணமுடியவில்லை. இது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வைத்து அரசாங்கம் என்ன செய்கிறது என்று நாடி பிடித்துப் பார்ப்பதற்கான ஒரு முயற்சியாகவும் இருக்கலாம். அதேவேளை, அரசாங்கமும் இந்த விடயத்தில் அதிகம் அலட்டிக் கொள்வதாகவும் காட்டிக் கொள்ளவில்லை. இந்தநிலையில் அடுத்துவரும் மூன்று மாதங்களும் அரசுக்கு சிக்கல் நிறைந்தவையாகவே இருக்கும். அமெரிக்கா விரும்புவது போன்று அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் தமது கடமைப் பொறுப்பை நிறைவேற்ற எந்த முயற்சிகளும் எடுக்கப்படாது போனால் அமெ…
-
- 0 replies
- 1k views
-
-
மகிந்த சிந்தனையில் அப்துல் கலாம் ! சமாதானத்தைக் கட்டியெழுப்புவதே எனது சிறிலங்காவுக்கான பயணத்தின் நோக்கமென, இந்தியாவின் முன்னார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார். சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் சிந்தனை முழக்கத்தின் வடிவமாக, சிங்களம்- தமிழ் – ஆங்கிலம் மொழியை யைப்படுத்தி, மும்மொழி ஆண்டாக 2012ஐ சிறிலங்கா அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. பிரகடனத்த்தின் உத்தியோகபூர்வ நிகழ்வில் இந்தியாவின் முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பங்கெடுத்துள்ளார். http://naathamnews.c...21/abdul-kalam/
-
- 8 replies
- 2.9k views
-
-
லியோனின் பட்டிமன்றம் நாளை காத்தான்குடியில்- இம்முறையும் பாசிச புலிகள் என முழங்குவாரா? Published on January 21, 2012-10:49 pm · உலகில் மிக கொடிய பயங்கரவாத பாசிச இயக்கம் விடுதலைப்புலிகள் தான் என கடந்த வருடம் காத்தான்குடியில் முழங்கிய திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றம் நாளை ஞாயிறு இரவு 8மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற உள்ளது. மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளன செயலாளர் சின்னலெப்பை முகமட் ஆரிப் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். கடந்த வருடம் காத்தான்குடியில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் உரையாற்றிய லியோனி விடுதலைப்புலிகளைப் போல கொலைகார பாசிச பயங்கரவாதிகள் உலகில் வேறு எங்கும் இல்லை என பேசியிருந்தார். போர் நடைபெற்ற காலத்தில் கனடாவில் உள்ள தமிழ் …
-
- 12 replies
- 1.9k views
-
-
13வது திருத்தத்துக்கே அரசு தயாரில்லை! - போராட்டத்தை முன்னெடுக்க கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்!- சுரேஸ் அரசியலமைப்புக்கான 13வது திருத்தச் சட்டத்தில் ஏற்கனவே உள்ள அதிகாரங்களைக் கூட வழங்கமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இன்று சிறிலங்கா அரசாங்கம் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்தி ஜனநாயக ரீதியான போராட்டத்தை முன்னெடுக்கும் தேவை எழுந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நோக்கத்துக்காக சிறிலங்கா அரசாங்கத்துடன் சார்ந்திராத தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படும் ஏனைய தமிழ் கட்சிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைக்கு…
-
- 1 reply
- 877 views
-
-
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் இன்று யாழ் மண்ணில் தடம்பதித்துள்ளார். இதன்போது யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் அத்துல் காலமிற்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இதன்போது அப்துல்கலாம் பொன்னாடை போர்த்து கௌரவிக்கப்பட்டதுடன் யாழ். பல்கலைக்கழகம் சார்பில் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம், இந்தியஉயர்ஸ்தானிகர் அசோக கே. காந்தா, யாழ். இந்தியத் தூதுவ அதிகாரிஎஸ்.மகாலிங்கம், அமைச்சர் திஸ்ஸ விதாரன மற்றும் உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன் போது அப்துல்கலாம் அவர்கள் யாழ் மாணவர்கள் மத்தியில் தமிழில் உரையாற்றினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய…
-
- 3 replies
- 2.3k views
-
-
இந்தியாவுக்கு 5 நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரண்டு தலைவர்களுக்கும் இடையில் நீண்டநேரம் இந்த பேச்சுதவார்த்தை நடைபெற்றுள்ளது. இலங்கையில் அதிகாரத்தை பரவலாக்குவது, இனப்பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாகவும் இதன் போது பேசப்பட்டுள்ளது. அதேவேளை சந்திப்பின் போது, குஜராத் முதலமைச்சரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ரணில் கேட்டுக்கொண்டுள்ளார். ஜே.ஆர். ஜயவர்தன அரசியல் விஞ்ஞான பீடத்தில் உரையாற்றுவதற்காக இந்த அழைப்பை ரணில் விக்ரமசிங்க விடுத்திருந்ததுடன், அதனை நரேந்திரமோடி ஏற்றுக்கொண்டுள்ளார். நரேந்திரமோடி பாரதீய ஜனதா கட்சியின் பிரத…
-
- 0 replies
- 445 views
-
-
வடபகுதி மக்கள் தமது உரிமைகளுக்காகவே போராடினார்கள். விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை தவறில்லை. வடக்கு மக்கள் நாட்டைப்பிரிக்கப் போராடவில்லை (கிழக்கு மக்கள் போரடவே இல்லையோ?) என மூன்று விடையங்களைத் தொட்டுத்தொடங்கி இறுதியில் இன ஒற்றுமையில் முடியும் வகையில் ஒரு பேச்சை இலங்கை அரசின் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க கிழக்கு மாகாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாநிகழ்வில் பேசியிருந்தார். பல்வேறு முரண்களைக் கொண்ட அந்தப்பேச்சின் நோக்கம் என்னவென்பது அந்தச்செய்தியை வாசிப்பவர்களுக்குத் தெரியும். விடுதலைப்புலிகள் உயிரோடு இருக்கும் போது இவற்றைக் கூறியிருந்தால் சிலவேளை அர்த்தமிருந்திருக்கும். மேலும் சிங்கள அரசியல்வாதிகள் பேசுவதற்கும் செய்வதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை யாவரும் அறிவர். என்ன இருந்…
-
- 11 replies
- 1.8k views
-
-
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா படுகொலை செய்யப்படுவார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனுக்கு மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரர் பசில் ராஜபக்ஸ தெரிவித்து இருக்கின்றார். கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளின் காதுகளுக்கு இத்தகவலை போட்டு வைத்து இருந்தார் சம்பந்தர். 2009 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி சம்பந்தருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்று இருந்தது. ஜனாதிபதித் தேர்தல் குறித்துப் பேசி இருந்தனர். மஹிந்தருக்கு போட்டியாக பொன்சேகா களத்தில் இறங்குவார் என்றும் இதற்காக முப்படைக் கூட்டுத் தளபதி பதவியை ராஜினாமா செய்வார் என்றும் சொல்லி இருக்கின்றார் சம்பந்தர். தேர்தல் விவகாரம் சூடு பிடிக்கின்ற நிலையில்…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழத்தமிழினத்தின் முன்னேற்றத்திற்காகவும் தமிழர்களினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வொன்றை வற்புறுத்ததுவதற்காகவும் முன்னின்று செயற்பட்டு வரும் கனடிய மனிதவுரிமை மையம் கனடியப் பாராளுமன்றில் சிறீலங்கா தொடர்பான மாநாடொன்றை ஏற்பாடு செய்துள்ளது. பெப்ரவரி மாதம் 1ம் தேதி புதன்கிழமை கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் கனடாவின் சகல கட்சிகளையும் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கனடிய ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். http://youtu.be/xOwDAACh__A சிறீலங்காவின் "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு" வெளியிட்ட அறிக்கை தமிழர்களின் பிரச்சினைகள் குறித்த எந்தவொரு ஆக்கபூர்வமான தீர்வையும்…
-
- 2 replies
- 534 views
-
-
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாகச் செயல்பட்ட இந்திய அரசு, இப்போது வீடுகள், பள்ளிக்கூடங்கள் கட்டித் தருகிறோம் என்று மாய்மால வேலை செய்கிறது என்றும். அரசியல் சட்டத் திருத்ததை இலங்கையிடம் வலியுறுத்தியதாகக் கூறி தமிழக மக்களையும், உலகத்தையும் ஏமாற்றும் வேலைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதகுலத்தின் மனசாட்சியை நடுங்கச் செய்யும், கோரமான தமிழ் இனப்படுகொலையை இலங்கையின் ராஜபக்சே அரசு செய்தது. லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2008ம் ஆண்டிலும், 2009 மே 18 வரையிலும், ஈழத்தமிழ் மக்கள், வயது முதிர்ந்தோர், பெண்கள், குழந்தைகள் என அனைவருமே, சிங்கள வி…
-
- 0 replies
- 562 views
-
-
முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் நாளை (23) திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக யாழ். இந்திய துணைத்தூதகர அதிகாரி வி.மகாலிங்கம் தெரிவித்தார். இந்தியன் வங்கியில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ். விஜயம் செய்யும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் யாழ். பல்கலைக்கழகத்தில் விசேட உரையாற்றவுள்ளார். அத்துடன் யாழ். பல்கலைக்கழக மாணவர்களையும் பீடாதிபதிகளையும் சந்திக்கவுள்ளார். மேலும் யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெறும் நிகழ்வு ஒன்றிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார் என யாழ். இந்திய துணைத்தூதுவர் மேலும் தெரிவித்தார். http://www.saritham.com/?p=48365
-
- 11 replies
- 1.1k views
-
-
ஒரு முன்னாள் பெண்போராளி சுயதொழில் செய்து முன்னேற விரும்புகிறாள் முன்னாள் போராளிகளின் இன்றைய நிலமையை மீண்டும் ஞாபகப்படுத்துகிற இந்த முன்னாள் பெண்போராளியின் கதையைக் கேளுங்கோ. இரண்டரை வருசமாகீட்டுது ஆனால்முன்னாள் போராளிகள் பற்றி இப்ப அதிகம் கதைக்கிறோம். குறிப்பாக பெண் போராளிகள் பற்றி அதிகம் கதைகளையும் அதிகமாக அறிகிறோம். ஏல்லாத்தையும் இழந்து இன்று வீடுதிரும்பியிருக்கிற இந்தப் பெண்போராளியின் சோகங்கள் நிறைய. முன்னாள் பெண்போராளிகளின் அவலத்தின் அடையாளமாக இந்தப் பெண் போராளி எங்களிட்டை கேட்கிறது ஒரு சின்ன உதவிதான். வீட்டோடை இருந்து கோழி வளர்ப்புச் செய்து தனது சுயபொருளாதாரத்தில் முன்னேற வேணுமென்பதுதான் இவளது இப்போதைய கனவு. ஒலிப்பதிவைக் கேட்க இணைப்பில் அழுத்துங்கள். இந்…
-
- 5 replies
- 1.2k views
-
-
போர்க்குற்றங்ககள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் இடம்பெற வேண்டும்! - நிபுணர்கள் குழுவில் அங்கம் வகித்த ஸ்டீபன் ராட்னர் மீண்டும் வலியுறுத்தல்!! இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவில் அங்கம் வகித்த பேராசிரியர் ஸ்டீபன் ராட்னர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், இப்போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகளை நடத்துவதன் மூலமே, இலங்கையில் சமாதானத்தையும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும் எனவும் ஸ்டீவன் ராட்னர் தெரிவித்துள்ளார். ஜெனிவ…
-
- 1 reply
- 547 views
-
-
சிறிலங்காவில் நீதியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை சிறிலங்காவில் நீதியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை ! ஊடகம், சிவில் சமூகம், சிறுபான்மையினரிடம் தொடரும் அடக்குமுறை என மனித கண்காணிப்பகத்தின் 2012ம் ஆண்டுக்குரிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை எகிப்பதிய தலைநகர் கெய்றோவில் 2012 ஆண்டுக்குரிய அறிக்கையினை மனித உரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. சர்வதேச நாடுகளில் உள்ள மனித உரிமை நிலைவரம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ள மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆண்டறிக்கையில் சிறிலங்கா தொடர்பில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினை தருகின்றோம் : http://naathamnews.com/2012/01/23/hrw-repor/
-
- 0 replies
- 444 views
-
-
சொந்த வீட்டின் அருகில் இருந்து வீட்டிற்கு செல்ல முடியாத அவல நிலை வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு தொடர்கின்றது என இலங்கை பாராளுமன்ற உறுப்பின சுமந்திரன் தெரிவித்தார். நேற்று கனடியத் தமிழர் பேரவையின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் சிறப்பு அதீதியாகக் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற முதுமொழி அறுவடை முடிந்து இயற்கைக்கு நன்றி தெரிவிக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் புதுப்பிக்கப்பட்ட வீட்டில் நாங்கள் சிறப்பாக வாழ்வோம் என்ற நம்பிக்கை தருவதாக அமைகின்றது. போரினால் இடப்பெயர்ந்த பல நூறு ஆயிரம் தாயகத்தில் உள்ள மக்கள் கூரைகளற்ற வீடுகளில் வாழ்கின்றார்கள். இன்னும் 200,000 மக்கள் தங்கள் சொந்த இடத்துக்குத் திரும்…
-
- 7 replies
- 1k views
-
-
இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள, இந்திய முன்னாள் குடியரசுத்தலைவரும் புகழ் பெற்ற அறிவியலாளருமான அப்துல் கலாம் யாழ். பல்கலைக்கழகத்தில் உரையாற்றியுள்ளார். இந் நிகழ்விற்கு செய்தி சேகரிப்பதற்குச் சென்ற ஊடகவியலாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. கலாம் உரையாற்றும் மண்டபத்திற்குள் ஊடகவியலாளர்களை செல்வதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் காவற்றுறையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. http://www.eelampres.../2012/01/48394/
-
- 0 replies
- 585 views
-
-
நேற்று மதியம் முதல் மாணவர்களை எச்சரிக்கும் சுவரொட்டிகளும் துண்டு பிரசுரங்களும் குடாநாடு எங்கும் பரவலாக காணப்பட்டது. குறிப்பாக கஸ்தூரியார் வீதி, திருநெல்வேலி, கோப்பாய், கொக்குவில், போன்ற பல இடங்களில் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் மாணவர்கள் துணிவுடன் அதனை அகற்றுவதையும் பார்க்க முடிந்தது . இந்து கல்லூரியில் காணப்பட்ட பிரசுரங்கள் மாணவர்களால் தீ இட்டு கொளுத்தப்பட்டது. இதே போன்ற எச்சரிக்கையின் பின்னர், இதே அமைப்பினரால் எச்சரிக்கை விடப்பட்டு பின் 4 மாணவர்கள் கடத்தப்பட்டனர். மீண்டும் இது தலை தூக்கி இருப்பது பெற்றோர் மத்தியில் பீதியை கிளப்பி உள்ளது. http://www.eeladhesa...ndex.php?option
-
- 0 replies
- 669 views
-
-
சன்னார் கிராமத்தில் ரிசாட் பத்தியூனின் ஆட்கள் அட்டகாசம் மாந்தையில் சன்னார் கிராமத்தில் ரிசாட் பத்தியூனின் ஆட்கள் அடாத்தாக சென்று அங்கு பல திட்டங்களை ஆரம்பித்துள்ளார். மஹிந்தரின் பணிப்பின் பேரில் தாம் இதனை செய்வதாக கூறியுள்ளார். தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் மோதவிடும் திட்டத்திற்கு றிசாட் பத்தியூன் துணைபோவது எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களையும் கசப்பான அனுபவங்களையும் மீண்டும் ஏற்படுத்தும். சன்னார் கிராமத்தில் 150இக்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 900 பேர் வசித்து வருகின்றனர். இவர்களை இந்தப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு மாந்தை மேற்குப் பிரதேச செயலகம் ஊடாக ரிசாட் பதியூன் அவர்களால் தொடர்ச்சியாக வற்புறுத் தப்பட்டு வந்துள்ளது. எனினும…
-
- 1 reply
- 841 views
-