Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து கூடுதல் எதிர்பார்ப்பு - காணப்படுகின்றது – அமெரிக்கா உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து கூடுதல் எதிர்பார்ப்பு காணப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த ஏழு ஆண்டுகள் நடைபெற்ற யுத்தம் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு விசாரணை நடத்தியுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை உயரிய தரத்தில் இருக்கும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நூலாண்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரச் செயலாளர் வெண்டி செர்மனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிக…

    • 4 replies
    • 770 views
  2. வன்னி மக்களுக்கு சொந்தமான பணத்தையும் சொத்துக்களையும் அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார். இந்த சொத்துக்கள் யாவும் அரச மாளிகையில் வசிக்கும் கே.பி.யிடமே உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பு மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்களது மனைவியர் மற்றும் அவர்களது சகோதரிகளுக்கென ஐக்கியதேசியகட்சியின் ஐக்கிய மகளிர் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில், மத்திய வகுப்பினரது வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக விளங்குகின்ற திட்டங்களை முடக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களே அதி…

  3. இலங்கை உள்ளிட்ட சட்டவிரோத குடியேறிகள் பலர் பாகிஸ்தானில் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் மொத்தமாக ஐந்து மில்லியன் சட்டவிரோத குடியேறிகள் தங்கியிருக்கின்றனர். இலங்கை, பங்களாதேஸ், இந்தியா, ஈரான், ஈராக், சோமாலியா, ஜோர்தான், உஸ்பெகிஸ்தான், எகிப்து, பர்மா, ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், அசர்பய்ஜான் உள்ளிட்ட 26 நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் இவ்வாறு சரணடைந்துள்ளனர். சட்டவிரோத குடியேறிகளின் அதிகரிப்பினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத குடியேறிகளினால் நாட்டில் பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான சட்டவிரோத குடியேறிகள் அரசியல் …

    • 2 replies
    • 764 views
  4. புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை சொந்த நாட்டுக்கு அனப்பி வைக்க முடியும் என சுவிட்சர்லாந்து மத்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டுக்கு அனுப்பி வைக்க முடியும் என சுவிஸ் மத்திய குடியேற்றத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னாள் செனட் சபையினரும் இதே நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, புகலிடம் கோரிய இலங்கைத் தமிழர்களை நாடு கடத்துவது ஆபத்தாக அமையக் கூடும் என மற்றுமொரு தரப்பினர் சுட்டிக்காட்யுள்ளனர். குறிப்பாக தமிழர்கள் கைது செய்யப்படலாம், அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படலாம் சில வேளைகளில் சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெறலாம் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர். எவ்வாறெனினும் இலங்கையின் ஒட்டுமொத்த …

  5. புலிகளை அழித்த சரத் பொன்சேகாவை கூட்டமைப்பு ஏன் ஆதரித்தது? சரத்பொன்சேகாவுக்கும் சம்பந்தனுக்கும் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருந்ததாக விக்கிலீக்ஸ் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்ட சரத் பொன்சேகா, ‘தமிழ் மக்களுக்கு அனைத்தையும் கொடுப்பதற்கு சரத்பொன்சேகா இணங்கிவிட்டார். அதற்கான உடன் படிக்கையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கைச்சாத்திட்டும் விட்டார்” என்பது ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரமாக இருந்தது. இதனை எதிர்க்கட்சிகள் மறுத்து வந்த போதிலும், ‘விக்கிலீக்ஸ்” தற்போது வெளியிட்டுள்ள இரகசியத் தகவல்கள் இது உண்மை என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றது. 2010 ஆம் ஆண்டு ஜனவரிய…

    • 3 replies
    • 2.1k views
  6. கிளிநொச்சி, ஸ்ரீலங்கா: வன்னியில் யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையிலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. யுத்தம் நடைபெற்ற காலம் முழுவதும் கடும் நெருக்கடிக்குள் வாழ்ந்துவந்த இந்த மக்கள், இப்போதும் நெருக்கடிக்குள்தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டியுள்ளது. அவர்களின் தலைக்கு மேலால் சீறிக்கொண்டு செல்லும் மோட்டார் ஷெல்களின் சத்தமும், 100 மீட்டர் தொலைவில் விழுந்து வெடிக்கும் குண்டுகளின் வெளிச்சமும் இப்போது இல்லைதான். ஆனால், வேறு விதமான நெருக்கடிகளுக்கு அவர்கள் இப்போது முகம் கொடுக்க வேண்டியுள்ளது. யுத்தத்தில் அனைத்தையும் தொலைத்துவிட்டு பூச்சியத்தில் இருந்து வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய நெருக்கடி இது. …

  7. ஐ.நா. செயலர் பான் கீமூனைச் சந்திக்கவுள்ளனர் என பெருமை கூறித் திரிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, அவரைச் சந்திக்க முடியாமல் போனது சர்வதேச ரீதியில் ஏற்பட்ட படுதோல்வியாகும். இந்தத் தோல்வியை கூட்டமைப்பினர் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு நியூயோர்க்கிலிருந்து நேற்று இரவு உதயனுக்குத் தெரிவித்தார் ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா.வெளிநாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் அமெரிக்காவில் வைத்து ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்திப்பர் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பு முதலாம் திகதி நிச்சயம் நடைபெறும் என்றும் உறுதியாகக் கூறப்பட்டிருந்தது.ஆனால், பான் கீ முன் தமிழ்த் தேச…

  8. இலங்கைப் போர் குறித்த அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு விடுக்குமாறு நியுசிலாந்தை அனைத்துலக மன்னிப்புச்சபை கேட்டுள்ளது. இலங்கைப் போர் குறித்த அனைத்துலக விசாரணை ஒன்றுக்கு நியுசிலாந்தின் அரசு கோரிக்கை விடுக்கவேண்டுமென அனைத்துலக மன்னிப்புச்சபை கேட்டுள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஷலில் ஷெட்டி, நியுசிலாந்தின் Herald ஏட்டில் இது குறித்துக் கட்டுரை ஒன்றை எழுதினார். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து கவலை வெளியிட்டு, நீண்ட கால அடிப்படையில் தீர்வொன்றைக் காணுமாறு நியுசிலாந்து வலியுறுத்தியதைச் சுட்டிக் காட்டிய ஷெட்டி, அதனை உறுதி செய்வதற்கு, அனைத்துலக விசாரணையை நியுசிலாந்து கோரவேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசு புரிந்த …

    • 1 reply
    • 1.6k views
  9. அவுஸ்ரேலியாவின் கிறீன் கட்சி சிறிலங்காவில் நடந்த போர்க்குற்ற விசாரணைக்கு ஓர் சர்வதேச , முழுமையான விசாரணை ஒன்றை நடத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றது. இந்த விடயத்தில் நாம் உறுதியாக உள்ளோம். அதே வேளை மஹிந்த அரசாங்கம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் தனது நல்லிணக்க ஆனைக்குழுவின் அறிக்கையினை வெளியிடப்போவதாகக் கூறியுள்ளது. இந்த ஆணைக்குழுவின் அறிக்கை பொதுமக்களுக்கு பார்வைக்கு வரமாட்டா என பிபிசி நேற்று கூறியுள்ளது. ஆகவே இது ஒரு கண் துடைப்பு நாடகமாகத்தான் முடியும். இவ்வாறு கூறியுள்ளார். அவுஸ்ரேலிய செனட்டர் லீ ரெய்மொன். . கடந்த முதலாம் திகதி பாராளுமன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் அவுஸ்ரேலிய அரசாங்கம் ஏன் சர்வதேச விசாரணைக்கு ஆதரவு கொ…

    • 0 replies
    • 1.1k views
  10. சர்வதேசம் மீண்டும் ஈழத் தமிழர்களை சிதைப்பதற்கு தயாராகின்றதா? Friday, November 4, 2011, 13:07 2009ம் ஆண்டில் சர்வதேசம் செய்த சதியால் ஈழத் தமிழினத்தின் வீரம் பலாத்காரமாக பறிக்கப்பட்டது. லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொலலப்பட்டு, அவர்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப் புலிகள் போராளிகள் விசமத்தனமான முறையில் அழிக்கப்பட்டார்கள்.அந்த வீரர்கள் தந்திரமான முறையில் தோற்கடிக்கப்பட்டார்கள். அவர்கள் தோற்கடிக்கப்பட்ட போது உலகம் ஒரே பக்கத்தில் நின்றது. ஒரு இனம் அல்லது நாடு அடக்கு முறையிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஆயுதப் போராட்டம் அவசியமானது என்று பிரச்சாரம் செய்து வந்த நாடுகள் கூட நமது வீரத்தை பறிப்பதற்கு ஒன்றாகப் பறந்து வந்து இலங்கை அரசாங்கத்திற்கு உதவிக் கரம் நீட்டி நின்றன. …

  11. வெள்ளிக்கிழமை, நவம்பர் 4, 2011 நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை தாம் பெரிதாக எதிர்பார்ப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. நவம்பர் 18 இல் வெளிவரவிருப்பதாக கூறப்படும் அறிக்கையானது நம்பகத்தன்மையானதாகவும் அதே வேளை அதனை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் எனவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்காவின் இராஜாங்க செயலக பேச்சாளர் விக்டோரியா நூலான்ட் கூறியுள்ளார். இதே வேளை கூட்டமைப்பினர் வருகை பற்றியும் அவர்கள் அமெரிக்காவின் அரசியல் விவகார செயலரை சந்தித்தது பற்றியும் உறுதிப்படுத்தியுள்ளார் விக்டோரியா. Re

  12. இலங்கை மனித உரிமை மீறல் குறித்து ஆராய ஜெனிவாவில் விசேட மாநாடு எதிர்வரும் 8ம், 9ம் திகதிகளில் நடைபெறும் news இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நாடுகள் கடுமையான தொடர் விமர்சனங்களை முன்வைத்து வரும் தற்போதைய சூழ்நிலையில், அது குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஓர் அமைப்பான சித்திரவதைகளுக்கெதிரான குழு (Committee Against Torture) எதிர்வரும் 8 மற்றும் 9ம் திகதிகளில் ஜெனிவாவில் அவசரமாகக் கூடவிருக்கின்றது. இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து ஏற்கனவே ஆராய்ந்திருக்கும் இந்தக் குழு, அது குறித்தான சிபார்சுகளைக் கடந்த காலங்களில் இலங்கையிடம் கொடுத்திருந்தது. இப்போது அந்தச் சிபார்சுகள் இலங்கை அரசால் கிரமமாக அமுல்படுத்தப்பட்டுள்ளதா …

  13. மருமகனார் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல உதவினாராம்! அனோமா பொன்சேகாவுக்கு எதிராகவும் வழக்குப் போடத் திட்டம்! [Friday, 2011-11-04 10:45:57] சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு சிறிலங்கா சட்டமாஅதிபர் திணைக்களம் ஆலோசித்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இலங்கைப்படைகளுக்கான ஆயுதக்கொள்வனவு மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறி தேடப்பட்டு வரும் அவரது மருமகன் தனுன திலகரட்ணவை, வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டின் பேரிலேயே அனோமா பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நட…

  14. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடு தொடர்பான ஆவணம் அமெரிக்கா உள்ளிட்ட சில நாட்டு தூதுவராலயங்களுக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆவணத்தின் பிரதியொன்றை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமக்கு வழங்கியதாக அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டீனாஸ் தெரிவித்துள்ளார். 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த விசேட இரகசிய குறிப்பில் தூதுவர் இந்தத் தகவல்களை குறிப்பிட்டுள்ளார். அதி…

  15. கிளிநொச்சி, ஸ்ரீலங்கா: வன்னியில் யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையிலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. யுத்தம் நடைபெற்ற காலம் முழுவதும் கடும் நெருக்கடிக்குள் வாழ்ந்துவந்த இந்த மக்கள், இப்போதும் நெருக்கடிக்குள்தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டியுள்ளது. அவர்களின் தலைக்கு மேலால் சீறிக்கொண்டு செல்லும் மோட்டார் ஷெல்களின் சத்தமும், 100 மீட்டர் தொலைவில் விழுந்து வெடிக்கும் குண்டுகளின் வெளிச்சமும் இப்போது இல்லைதான். ஆனால், வேறு விதமான நெருக்கடிகளுக்கு அவர்கள் இப்போது முகம் கொடுக்க வேண்டியுள்ளது. யுத்தத்தில் அனைத்தையும் தொலைத்துவிட்டு பூச்சியத்தில் இருந்து வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய நெருக்கடி இது. …

    • 0 replies
    • 561 views
  16. தமிழனின் தொடர்கதைகள் தொடர்ந்தே செல்லுமா? சேரன், சோழன், பாண்டியன் கிரேக்கத்திலிருந்து அவுஸ்த்திரேலியா வரை உள்ள கரையோரத்தை ஆண்டார்கள் என்பது அழிந்தொழிந்த எங்சியுள்ள வரலாறுகள் மூலமும் புவி சார்ந்த கொள்கையாலும் விளங்கமுடிகின்றது, இவர்களுக்கிடையில் போர் புரிந்து அழிந்தார்கள். அத்துடன் குமரிக்கண்டமான பாண்டிய நாடு பேரலை போன்ற அனர்த்தத்தில் மூழ்கி ஏராளமான தமிழர்கள் மாண்டு போக ஏஞ்சிய தமிழர்கள் ஆங்காங்கே மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, அந்தமான் இலங்கை போன்ற இடங்களில் விடப்பட்டார்கள். பின்னர் அந்நியரின் வியாபாரப்படையெடுப்பால் ஒல்லாந்தர், போத்துக்கீசர், ஆங்கிலேயர் வந்து போரிட்டபோது தமிழ் மன்னர்கள் எதிர்த்துப்போரிட்டனர். காட்டிக்கொடுக்கும் தமிழர்களால் அவர்கள் போரில் வ…

    • 2 replies
    • 1.3k views
  17. நாட்டில் பிரிவினைவாதத்தையே இலக்காகக் கொண்டு செயல்படும் சில தமிழ் அரசியல்வாதிகள் ஒஸ்லோவுக்கும் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் சென்று இலங்கை அரசுக்கு எதிராக பிரயத்தனம் மேற்கொள்ளும் படி அந்த நாடுகளில் உள்ள அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றார்கள் என்று இரா சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினரது பயணத்தை பேரினவாதியும் அமைச்சருமான விமல் வீரவன்சவும் விமர்சனம் செய்துள்ளார். அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள தயட்ட கிருல்ல கண்காட்சியை முன்னிட்டு பதவியா நகரில் ஜனசென வீடமைப்பு கிராமமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே பேரினவாதி விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: "ஜனாதிபதி இலங்கையில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும்போத…

  18. யாழ்ப்பாணத்தின் அரியாலை கிழக்குப்பகுதியினில் படை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் கொள்ளையினை தடுத்து நிறுத்தப்போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற நல்லூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அண்மையிலேயே மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட இப்பகுதிகளில் படை உயரதிகாரிகள் மக்கள் குடியிருப்பு காணிகளிலிருந்து மணலை திருடி விற்று வருகின்றனர். இரவிரவாக இடம்பெற்று வரும் இம்மணல் கொள்ளையினால் அவர்கள் நாள் தோறும் இலட்சக்கணக்கினில் வருமானம் ஈட்டியும் வருகின்றனா.; இதனால் கடலரிப்பு ஏற்படலாமென எச்சரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவ்விவகாரம் இன்று நல்லூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தினில் முன்வ…

    • 5 replies
    • 965 views
  19. சிறிலங்கா படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்ற வன்னிப் பிரதேசத்துக்கு இந்திய இராணுவ அதிகாரிகள் குழுவொன்று பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய இராணுவத்தின் உயர் கட்டளை கற்கைநெறியைப் பயிலும் அதிகாரிகள் குழுவே வன்னிக்குச் சென்றுள்ளது. இந்திய விமானப்படையின் அதிகாரியான எயர் கொமடோர் பி.ஆர்.நவல்கர் தலைமையிலான இந்தக் குழுவில் 16 இந்திய இராணுவ அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். ஆறுநாள் பயணத்தின் ஒரு கட்டமாக இந்தக் குழுவினர் வன்னிப் படைகளின் தலைமையகம், ஆட்டிலறிப் பாடசாலை, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பணியகம், மற்றும் பல தொல்பொருள் ஆய்வு, வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் சென்றுள்ளனர். நேற்று இந்தக் குழுவினர் சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்க…

  20. தப்பிச் சென்ற புலிகள் நாட்டை அழிக்கும் நடவடிக்கையில் – பஷில் தெரிவிப்பு! இலங்கையிலிருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் வாழும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து நாட்டை அழித்தொழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாடுகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ச’வுக்கு எதிராக பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொள்ள முயற்சித்து வருகின்றன. எனவே அனைவரும் பேதங்களை மறந்து நாட்டையும், நாட்டுத் தலைவரையும் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்­ஷ‌ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; அன்று எமது நாட்டு மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டிருந்தது. வாகனமொன்றில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாகச் செல்ல முடியாது. மாணவர்களு…

  21. ஐ.நா செயலரை சந்திக்காவிட்டால் போர்க் குற்றத்தில் இருந்து தப்ப முடியுமா..? கூட்டமைப்பின் ஐ.நா பயணம் தோல்வியடைந்துவிட்டது என்பதைக் காட்டுவதற்கு சிறீலங்காவின் இராணுவத்தை சேர்ந்த சவேந்திர டி சில்வாவின் கருத்துக்கள் இன்று சிறீலங்காவில் அதிகபட்சம் வெளியாகியுள்ளன. நேற்று பொறுப்புள்ள அமைச்சர் பீரீஸ் பொது நலவாய நாட்டிலும் தமக்கே வெற்றியென மார் தட்டிய பின்னர் இன்று அடுத்த மார்தட்டல் வெளியாகியுள்ளது. இந்த மார்தட்டல்களும் வெற்றியும் சரியானவையாக இருந்தால் எதற்காக கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும், அவர்களுடனான பேச்சுக்களை இடை நிறுத்த வேண்டுமென ஜாதிக கெல உறுமய போன்ற இனவாதக் கட்சிகள் கோஷமிடுகின்றன. சிங்கள அரசு சொல்லும் வெற்றி உண்மையானால் இவர்கள் கொழும்பில் வெடி கொழுத்தியல்லவ…

  22. தமிழ்தேசியக் கூட்டமைப்பு போர்க் குற்றச்சாட்டுக்களை கைவிட்டுவிடுமானால் அது அரசியல் தந்கொலை ஒன்றை செய்து கொண்டுவிட்டதாகவே அர்த்தம் என்கிறார் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன். தமிழ்தேசியக் கூட்டமைப்பு போர்க்குற்றச்சாட்டுக்களை கைவிட்டு விட்டது என்பதில் எந்த விதமான உண்மையும் கிடையாது. அவ்வாறானதொரு நிலைப்பாட்டை கூட்டமைப்பு எடுக்காது என்பதை கட்சியின் தலைவர் இரா.சம்பந்தர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் போர்க்குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப் படவேண்டும் என்பதற்கப்பால், இந்த மண்ணில் சிங்கள ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.சர்வதேச ரீதியில் அது உறுதிப்படுத்தப்படவேண்டும்;. அதன் மூலம் தமிழர்களை ஆளு…

  23. இராணுவத்தின் பராமரிப்பில் கிரிக்கெட் அரங்கு இலங்கையில் உள்ள முக்கிய கிரிக்கெட் மைதானங்களை பராமரிக்கும் பணியை இராணுவம் ஏற்கவுள்ளது. இந்த மைதானங்களை பராமரிக்கத் தேவையான பணம் தன்னிடம் இல்லை என்று கிரிக்கெட் வாரியம் கூறுகிறது. ஆனால் இப்படி மைதானங்களை இராணுவத்திடம் ஒப்படைக்கும் செயல் இராணுவமயமாக்கல் இலங்கையில் மோசமான அளவுக்கு சென்றுள்ளதை காட்டுகிறது என்று சிலர் கூறுகின்றனர். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளை கூட்டாக நடத்திய இலங்கை, அந்தப் போட்டிகளுக்காக இரண்டு புதிய கிரிக்கெட் அரங்குகளை கட்டியது. அதில் ஒன்று ஜனாதிபதியின் அம்பாந்தோட்டையில் இருக்கிறது. அதுதவிர ஏற்கனவே இருந்த ஒரு மைதானம் முழுமையாக சீரமைக்கவும்பட்டது. இதற்காக பெரு…

    • 0 replies
    • 615 views
  24. கே.பியிடமுள்ள சொத்துக்கள் வன்னித் தமிழ் மக்களிடத்திலேயே ஒப்படைக்க வேண்டும் வன்னிமக்களிடமும், புலிகளிடமும் அரசு கொள்ளையடித்த சொத்துக்களை முதல் கட்டமாக வழங்கவேண்டும் என்று ரணில் கோரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.புலிகளிடம் அரசு கொள்ளையடித்த சொத்துக்கள் தங்கங்கள் எங்கே என்ற கேள்வியும் மர்மமாகவே உள்ளது.இவைகள் குறித்து எதுவும் பேசாத ரணிலின் பேச்சுக்களை கீழே காணலாம் : சிங்கள வர்த்தகர்களது தொழில் நிறுவனங்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் சட்ட மூலத்தை விடுத்து, சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளுக்கு இருக்கும் சொத்துக்களை அரசாங்கம் தன்னகப்படுத்தும் சட்ட மூலமொன்றை கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்துள்ளார். ஸ்ரீ கொத…

    • 0 replies
    • 680 views
  25. ஐ.நா செயலரை சந்திக்காவிட்டால் போர்க் குற்றத்தில் இருந்து தப்ப முடியுமா..? கூட்டமைப்பின் ஐ.நா பயணம் தோல்வியடைந்துவிட்டது என்பதைக் காட்டுவதற்கு சிறீலங்காவின் இராணுவத்தை சேர்ந்த சவேந்திர டி சில்வாவின் கருத்துக்கள் இன்று சிறீலங்காவில் அதிகபட்சம் வெளியாகியுள்ளன. நேற்று பொறுப்புள்ள அமைச்சர் பீரீஸ் பொது நலவாய நாட்டிலும் தமக்கே வெற்றியென மார் தட்டிய பின்னர் இன்று அடுத்த மார்தட்டல் வெளியாகியுள்ளது. இந்த மார்தட்டல்களும் வெற்றியும் சரியானவையாக இருந்தால் எதற்காக கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும், அவர்களுடனான பேச்சுக்களை இடை நிறுத்த வேண்டுமென ஜாதிக கெல உறுமய போன்ற இனவாதக் கட்சிகள் கோஷமிடுகின்றன. சிங்கள அரசு சொல்லும் வெற்றி உண்மையானால் இவர்கள் கொழும்பில் வெடி கொழுத்தியல்லவா க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.