ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
[ செவ்வாய்க்கிழமை, 01 நவம்பர் 2011, 01:55 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறுமா என்பது பற்றிய உறுதியான தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இன்று இந்தச் சந்திப்பு இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் ஐ.நா பொதுச்செயலரின் இன்றைய அதிகாரபூர்வமான- வெளிப்படையான சந்திப்பு நிகழ்ச்சி நிரலில் இதுபற்றிய குறிப்புகள் ஏதும் சேர்க்கப்படவில்லை. இன்று காலை 10.10 மணியளவில் கிறீக், துருக்கிய, சைப்பிரஸ் தலைவர்களுடனும், 11 மணிக்கு கினியா பிசாவோவுக்கான ஐ.நா பொதுச்செயலரின் சிறப்பு அற…
-
- 0 replies
- 687 views
-
-
ஈழவிடுதலை நோக்கி தமிழ் சினிமா: சத்யராஜ் (காணொளி இணைப்பு) எனி வரும் தமிழ் திரைப்படங்கள் ஈழ விடுதலை சார்ந்தவையாகவே இருக்கும் என புரட்சித் தமிழன் சத்யராஜ் தெரிவித்துள்ளார். தொடரும் நீதிக்கொலைகள் என்ற ஆவணப்படம் வெளியிட்டு நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவித்ததாவது, "இரண்டாம் உலகப்போருக்கு பிறகு வெளிவந்த பெரும்பாலான ஆங்கிலப் படங்கள் அதை தழுவியே எடுக்கப்பட்டன. அதேபோல் இனி தமிழகத்தில் வெளிவரும் பெரும்பாலான தமிழ் படங்கள் ஈழ விடுதலையை சார்ந்ததாகவே இருக்கும். சினிமா வியாபாரம் சம்பந்தப்பட்டது. ஏன்னா போட்ட பணத்தை எடுக்கத்தான் எல்லாரும் நினைப்பாங்க. எந்த விஷயத்துக்காக மக்களின் கைதட்டல் அதிகமாக…
-
- 2 replies
- 978 views
-
-
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல். தமிழக மீனவர்கள் மீது இராமேஸ்வரம் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரத்திலிருந்து மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். மீனவர்களில் ஒரு பகுதியினர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் நான்கு பேர் இருந்த படகுடன் தங்களது படகை மோத விட்டனர். இதில் அந்தப் படகு சேதமடைந்தது.பின்னர் கடுமையாக எச்சரித்து விட்டு இலங்கைக் கடற்படையினர் சென்று விட்டனர். படகு சேதமடைந்து அதில் இருந்த நான்கு மீனவர்களும் தடுமாறினர். இதையடுத்து அவர்களை அருகில் இருந்த மீனவர்கள் காப்பாற்றி தங்களது படகில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்…
-
- 2 replies
- 766 views
-
-
ஆரம்பத்திலிருந்தே இலங்கையை காக்கத்தான் துடிக்கிறது இந்தியா- டாக்டர் ராமதாஸ் வேதனை இலங்கை அரசுக்கு எதிராக போர்க் குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்திய அரசுக்கு உண்டு. ஆனால் மத்திய அரசோ தொடக்கத்திலிருந்தே இலங்கையை காப்பாற்றுவதில் தான் தீவிரம் காட்டி வருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேதனை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: இலங்கை போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு நற்சான்றிதழ் வழங்கும் வகையில், அங்கு 2013-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை நடத்துவதற்கான உரிமையை இந்தியா பெற்றுத் தந்திருக்கிறது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற போரில் மனித உரிமைகளை கா…
-
- 3 replies
- 806 views
-
-
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்களுக்கும் உள்ளூர் மீனவர்களுக்குமிடையே இன்று காரைநகர் கடற்பரப்பினில் இடம் பெற்ற கைகலப்பினில் உள்ளுர் மீனவர்கள் சிலர் காயமடைந்துள்ளனர்.இதே வேளை இச்சம்பவத்தையடுத்து உள்ளூர் மீனவர்கள் முப்பத்திமூன்று பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடைய படகுகள் பன்னிரண்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.மாவட்ட மீனவ சமாசங்களின் சம்மேளனத்தலைவர் சி.தவரட்ணம் தெரிவித்தார்.எனினும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் இன்றிரவு விடுவிக்கப்பட்டுவிட்டதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் அத்தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. வடமராட்சியின் பருத்தித்துறை முனைப்பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கும் அத்து…
-
- 3 replies
- 926 views
-
-
பாரிசில் தேசிய செயற்பாட்டாளர் மீது வாள்வீச்சு! பின்னணியில் சிங்கள கைக்கூலிகள்? அக் 30இ 2011 பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆயுததாரிகள் நிகழ்த்திய வாள்வீச்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய பிரதிநிதியான திரு.பருதி அவர்கள் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலகத்தை விட்டு வெளியில் வந்த பொழுதுஇ வெளியில் காத்திருந்த முகமூடியணிந்த ஆயுதபாணிகளால் கத்திகள்இ வாட்கள் சகிதம் இவர் மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த திரு.பருதி அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் …
-
- 13 replies
- 2.1k views
-
-
திருகோணமலையில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு (படங்கள் இணைப்பு) திருக்கோணமலை நகரப்பகுதியிலுள்ள அமரர் ஜே.வி.செல்வநாயகத்தின் சிலை இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நகர் புரத்திலுள்ள சிவன் கோயிலுக்கு அருகில் உள்ள இச் சிலை நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளது. சிலையின் தலைப்பகுதி உடற் பகுதியிலிருந்து உடைக்கப்பட்டுள்ளது. உடைக்கப்பட்ட தலைப் பகுதி சிலையின் கீழ் போடப்பட்டுள்ளது. உடைக்கப்பட்ட தந்தை செல்வாவின் சிலை தற்போது மறைக்கப்பட்ட நிலையில் உள்ளது. http://www.vanakkamnet.com/selva/
-
- 12 replies
- 1.9k views
-
-
கனடாவில் இரா சம்பந்தன் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் சர்வதேசம் மிகுந்த ஆர்வத்துடன் செயற்படுகின்றது என கனடா ஸ்காபுறோ கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். 'தற்போதைய சூழ்நிலையில் எமது தாயகத் தமிழ் மக்களின் பிரச்சனை ஒரு உலகம் சார்ந்த பிரச்சனையாக கணிக்கப்படுகின்றது. அவர்கள் அந்த மண்ணில் படுகின்ற துன்பக் குரல் அல்ல்து அவர்கள் எழுப்புகின்ற அவலக் குரல் உலகின் காதுகளுக்கு கேட்கின்றது. இதேவேலை தாயகத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்களும் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் உங்களைப் போன்ற உறவுகளும் நடத்திவரும் பல்வேறு வகையான போராட்டங்களும் சந்திப்புக்களுமே தற்போது சர்வதேச அளவில் பல மாற்றங்களை ஏற…
-
- 3 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பில் கோரளைப்பற்று உதவி அரச அதிபர் பிரிவிற்கு உட்பட்ட எல்லைப்பகுதிகளில் சுமார் நாற்பதாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் சிங்களவர்க்கு தாரைவார்க்கப்பட்டுள்ளன. பட்டிப்பளை, செங்கலடி,ஏறாவூர் பற்று,கோரளைப்பற்றுப் பகுதிகளில் உள்ள இந்த காணிகள் தமிழ்மக்களுக்குச் சொந்தமானவை. இந்த காணிகளில் சிங்களவர்கள் அடாத்தாக குடியேறியபோதும் அவர்களுக்கு எதிராக மாவட்ட, பிரதேச அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவிலை அத்துடன் மாகாண சபைகூட நடவடிகை எடுக்கவில்லை என ,ஆகான சபை உறுப்பினர் இரா துரைரட்னம் கூறியுள்ளார். http://www.tamilthai.com/?p=29218
-
- 1 reply
- 862 views
-
-
இலங்கை ஜனாதிபதியின் வாக்குறுதிகளில் பூரண நம்பிக்கையில்லை - ஹார்பர் 31 அக்டோபர் 2011 இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குறுதிகளில் பூரண நம்பிக்கை கிடையாது என கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென கனடா கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. யுத்தக் குற்றச் செயல் தொடர்பில் சுயாதீன விசாரணைகளுக்கு ஜனாதிபதி அனுமதிக்காவிட்டால் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என ஹார்பர் மீண்டும் அறிவித்துள்ளார். சுயாதீன விசாரணைகள் தொடர்பான தமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையா…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமெரிக்க பயணத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் ஆதரவு வழங்க வேண்டும்! என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமெரிக்க பயணத்தை வைத்து தினமும் பல செய்திகளை காண்கிறோம். இந்தியாவிற்கு பல தடவை அழைக்கப்பட்ட அல்லது இந்தியாவிற்கு பல தடவை சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று அமெரிக்க, கனடா போன்ற நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்கிறது, அந்த நேரத்தில் தமிழ் மக்களுக்கு சிங்கள அரசின் கொடிய பிடியிலிருந்து விடுதலை கிடைக்க, தமிழீழ மக்களின் தாயகம் தேசியம் தன்னாட்சி வலியுறுத்தப்படும் பட்சத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிட்கு தமிழீழ மக்கள் ஆதரவு இருக்கும். அதே நேரத்தில் நாம் ஒரு அரசியல் நிகழ்வை மறந்து விட கூடாது. முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற போர் குற்றம், மனித நேயத்திற்கு எத…
-
- 3 replies
- 834 views
-
-
திருமலையில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு! மனோ கணேசன் கண்டனம்! தமிழரசுக்கட்சி மௌனம்! திருக்கோணமலையில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலையின் தலைப்பகுதி நேற்று இரவு உடைத்து சேதமாக்கப்பட்டிருப்பதாக திருகோணமலையிலிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்து மலையக மக்கள் முன்னணி கடும் கண்டனம் வெளியிட்டுள்ள போதிலும் தமிழரசுக்கட்சி, தந்தை செல்வா என அரசியலுக்காக புகழ்பாடுகின்ற தமிழரசுக்கட்சியினர் எவரும் வாய் திறக்காமை தந்தை செல்வாவை ஆழமாக நேசித்த மக்கள் மத்தியில் விசனத்தினைத் தோற்றுவித்துள்ளது. இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் அமெரிகாவிற்கான முக்கிய பயணத்தினை மேற்கொண்டிருக்கின்ற போதிலும் தமிழரசுக்கட்சியினை நிர்வகிக்கின்ற பேராசிரியர்…
-
- 0 replies
- 820 views
-
-
கொழும்பு, ஸ்ரீலங்கா: ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக வெளிநாடுகளில் செய்யப்படும் பிரச்சாரத்துக்கு எதிரான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கின்றது ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு. ஆஸ்திரேலிய டி.வி. சேனல் ஏ.பி.சி.யின் ‘செவன்-தர்ட்டி ஷோ’-வில் வெளியான டாக்குமென்ட்ரி ஒன்றுக்கு பதில் அளிக்கும் பாணியிலேயே பாதுகாப்பு அமைச்சின் வீடியோ வெளியாகியுள்ளது. முதல் தடவையாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளிநாட்டு ஸ்டைலில் எதிர்ப் பிரச்சாரம் ஒன்றை இதன்மூலம் ஆரம்பித்துள்ளது. இதுபோன்ற வீடியோக்கள் கடந்த காலங்களில் இஸ்ரேலிய அரசால் (அல்லது அரசு சார்பு மீடியா நிறுவனங்களால்) வெளியிடப்படுவது வழக்கம். பாலஸ்தீன விடுதலை அமைப்புகளின் பிரச்சாரத்துக்கு எதிர்ப் பிரச்சாரமாக, இஸ்ரேலிய அரசு அவற்றை வெளியிடுவது பிரபலமாக …
-
- 4 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவைத் துரத்தும் பிரித்தானியப் பிரதமர் [ திங்கட்கிழமை, 31 ஒக்ரோபர் 2011, 01:25 GMT ] [ கார்வண்ணன் ] puthinappalakai.com அடுத்த கொமன்வெல்த் கூட்டம் 2013ம் ஆண்டில் சிறிலங்காவில் நடைபெறும் போது, புறக்கணிப்புகள் இடம்பெறுவதைத் தடுக்க வேண்டுமானால், அதற்கு முன்னதாக சிறிலங்கா அரசாங்கம் மனிதஉரிமை நிலைமைகளில் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் எச்சரித்துள்ளார். கொமன்வெல்த் மாநாட்டின் இறுதி நாளான நேற்று பிபிசிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டின் போது சிறிலங்கா அதிபரிடம், உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கொழும்பு எத…
-
- 0 replies
- 1.2k views
-
-
நேற்று நள்ளிரவு 12 மணியுடன் உலக சனத்தொகை 700 கோடியை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று நள்ளிரவு சரியாக 12 மணிக்குப் பிறந்த குழந்தை 700வது கோடி குழந்தை என அழைக்கப்படுகிறது. இந்த 700வது கோடி குழந்தையை உலகிற்கு வரவேற்க உலகம் முழுவதும் உள்ள குழந்தை மகப்பேற்று வைத்தியசாலைகளில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டதோடு அக்குழந்தைகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதேவேளை, இலங்கையிலும் 700வது கோடி குழந்தைகள் இரண்டு பிறந்துள்ளதாக கொழும்பு சிறுவர் ரிட்ஜ்வே வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார். நேற்று நள்ளிரவு 12 மணி 1 செக்கனில் இரு குழந்தைகள் பிறந்ததாக அவர் குறிப்பிட்டார். குறித்த குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு சுகாதார அமைச்சர் தலைமையில் இன்று கா…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கை அரசின் எதிர்ப்புக் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவைச் சந்திக்கும் திட்டத்தை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் கைவிட்டு விட்டதாகத் தெரியவருகின்றது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் வோஷிங்டன் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் நால்வரும் அங்கு இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் பலருடனும் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளிங்ரனையும் இவர்கள் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியான போதும், சந்திப்பு இடம் பெற்றதாகத் தகவல் இல்லை. இந்தநிலையில் இலங்கை அரசின் எதிர்ப்புக் காரணமாக ஹிலாரி கிளின்ரன், கூட்ட மைப்புப் பிரதிநிதிகளைச் சந்திப்பதைக் கை விட்டுள்…
-
- 3 replies
- 1.9k views
-
-
பிரபாகரன்..! சர்வதேசத்தை ஈழத்தின்பால் ஈர்க்கச் செய்த தமிழன். உண்மைதான். மரணத்தின் வலிகளை துச்சமெனக் காட்டியவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். பிரபாகரனின் வீட்டை இலங்கையர்கள் தனித்துவமாக பார்ப்பதுண்டு. அவர் அங்கு தனது காலத்தைக் கழிக்காவிடினும் வல்வெட்டித்துறையில் கோயிலுக்கு அடுத்தபடியாக மக்கள் நம்பிக்கையுடன் நோக்கிய இடம் அதுவாகத்தான் இருந்தது. யுத்தம் முடிவடைந்து இராணுவ பாதுகாப்புக் காவலரண்கள் பல முழுமையாக அகற்றப்பட்டபோதிலும் சில மாதங்கள் வரை அவரது வீட்டுக்கு முன்னாலுள்ள காவலரண் அகற்றப்படவில்லை. இப்போதும் இராணுவ வீரர்கள் இந்த வீட்டுக்கு அருகில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது அந்த வீட்டின் தற்போதைய தோற்றம். …
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீமூனுக்கும் இடையிலான சந்திப்பு திட்டமிட்டபடி நாளை முதலாம் திகதி நியூயோர்க்கில் இடம்பெறும் என்று அறிய வந்துள்ளது. இலங்கை அரசு இந்தச் சந்திப்புக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோதும் திட்டமிட்ட சந்திப்பை இரத்துச் செய்ய முடியாது என்று பான் கீமூன் இலங்கை அரச பிரதிநிதிகளிடம் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து தற்போது கனடாவில் தங்கியுள்ள கூட் டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பான் கீமூனைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் எனத் தெரிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஐ.நா பொதுச்செயலர் பான் கீமூனைச் சந்திப்பதை தடுத்து நிறுத்த இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.இலங்கை வெளிவிவகார அம…
-
- 0 replies
- 644 views
-
-
இராமேஸ்வரத்தில் இருந்து சிறிலங்காவிற்கு தப்பி செல்ல முற்பட்ட சிங்களவர் ஒருவர் பொலிசாரினால் பிடிக்கப்பட்டுள்ளார். இவருடன் ரவீந்திரன் என்ற தமிழரும் பிடிபட்டுள்ளார். தீஸ எனும் சிங்களவரும் ரவீந்திரன் என்ற தமிழரும் ஒருவருடத்திற்கு முன்னர் இந்தியாவிற்கு வந்துள்ளனர். . இதில் தீஸ எனும் சிங்களர் மும்பாய்க்கு அடிக்கடி போய்வந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது. இவர்கள் இருவரும் தமது பாஸ்போட்டினை தொலைத்ததனால் படகில் தப்பி செல்ல முற்பட்டதாக கூறியுள்ளனர். மும்பாய், தமிழகம் என இவர்கள் ஒருவருடமாக இருந்துள்ளனர். வியாபாரம் செய்ய வந்ததாகவும் கூறுகின்றனராம். . இவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் தமிழக பொலிசார் தீவிர விசாரணையினை மேற்கொண்டுவருகின்றனர். மூலம்
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறையிலிருந்து விடுதலையாகிய முன்னாள் போராளியான சந்தனமூர்த்தி தீபன் (27வயது) 29.10.2011 அன்று மரணமடைந்துள்ளார். இவர் கடைசி யுத்தத்தில் சரணடைந்தார். சரணடைவின் பின்னர் பூசா முகாமில் தடுத்து வைக்கப்படடு அண்மையில் விடுதலை செய்யப்பட்டவர். திடீரென நோயுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீபனின் தந்தையார் சந்தானமூர்த்தியும் மற்றும் இரு சகோதரர்களும் முள்ளிவாய்க்காலில் இறந்துவிட்டார்கள். தீபன் மட்டுமே தாயாருக்கான ஆறுதலாக இருந்தவர். தடுப்பிலிருந்து வெளிவந்து ஒன்றரை மாதத்தில் இறந்து போயுள்ள மகனின் மரணச்சடங்கினைச் செய்யக்கூட உதவியற்ற நிலமையில் இருக்கிறார் தீபனின் தாயார். தீபனின் மரணச்சடங்கிற்கும் அவரது தாயாரின் வாழ்வாதாரத்துக்குமான உதவியினை தீபனின் மாமனார…
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாண மக்கள் வாக்காளர் இடாப்பில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் - பெபரல் : 31 அக்டோபர் 2011 யாழ்ப்பாண மக்கள் வாக்காளர் இடாப்பில் தங்களை பதிவு செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கையின் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான பெபரல் கோரியுள்ளது. வாக்காளர்களை பதிவு செய்யும் விசேட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை என தமிழ் அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன. யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆயிரக் கணக்கான…
-
- 0 replies
- 617 views
-
-
கொல்லப்போவது போல கழுத்தை இறுக நெரிப்பதும், பின்னர் பிடியை மெல்லத் தளர்த்துவதும் தான், இலங்கை விவகாரத்தில் மேற்குலகு கையாளும் வழிமுறையாக மாறியுள்ளது. கொமன்வெல்த் மாநாட்டில் இலங்கைக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், கடைசி நேரத்தில் அந்த அழுத்தங்கள் தளர்த்தப்பட்டுள்ளன 2013இல் அடுத்த கொமன்வெல்த் கூட்டத்தை இலங்கையில் நடத்த 2009ஆம் ஆண்டே முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை மறுபசீலனை செய்வது குறித்து பேர்த் மாநாட்டில் ஆராயப்படும் என்று கனடாவும், அவுஸ்திரேலியாவும் மிரட்டிக் கொண்டிருந்தன. அதேவேளை, போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்தன.இன்னொரு பக்கத்தில் ஜனாதிபதி மஹிந்த…
-
- 4 replies
- 1.5k views
-
-
மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்காக இந்தமுறை பொதுநலவாய மாநாட்டின்போது ஆக்கபூர்வமான பொறிமுறையொன்று மேற்கொள்ளப்படுமென்று மனித உரிமை ஆர்வலர்கள் வைத்திருந்த நம்பிக்கை தவிடு பொடியாகியுள்ளது. மனித உரிமைகளுக்கான சுயாதீன ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கை, நேற்றுடன் நிறைவடைந்த பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டில் பெரும்பான்மை ஆதரவின்றி நிராகரிக்கப்பட்ட மையே இதற்கான காரணமாகும். பொதுநலவாய அமைப்பு உறுப்புநாடுகளில் மனித உரிமை துஷ்பிரயோகங்கள் எந்த ஒரு நாட்டில் இடம்பெற்றாலும், அந்நாட்டுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென நிர்ப்பந்திக்கும் முக்கிய பரிந்துரையைத் தடுக்க பொதுநலவாய அமைப்பின் தலைவர்கள் சனிக்கிழமை பகீரதப் பிரயத்த னத்தில் ஈடுபட்டார்கள்.இந்த…
-
- 1 reply
- 716 views
-
-
தமிழர்களுக்குச் சார்பாக செய்திகளை வெளியிடுவதாக கூறி கொமன்வெல்த் மாநாடு நடைபெறும் பேர்த் நகரில், ஏபிசி தொலைச்சாட்சி நிலையத்துக்கு முன்பாக சிங்களவர்கள் நேற்று போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு சார்பான வகையில் செய்திகளை வெளியிடுவதாக இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஏபிசி அலைவரிசை மீது குற்றம்சாட்டியதுடன், கண்டனம் தெரிவித்து முழக்கங்களையும் எழுப்பியிருந்தனர். அத்துடன் இதுதொடர்பாக தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையிலான கடிதம் ஒன்றையும் போராட்டத்தில் ஈடுபட்ட சிங்களவர்கள் ஏபிசி தொலைக்காட்சி நிறுவன அதிகாரிகளிடம் கையளித்திருந்தனர். சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணப்படங்களை அவுஸ்ரேலியாவின் ஏபிசி த…
-
- 7 replies
- 1.1k views
-
-
உங்களுக்கு தெரிந்த சிக்காக்கோ வாழ் தமிழரல்லாதோரையும் பார்க்க சொல்லுங்கள். Amnesty International USA will be showing the documentary "Sri Lanka's Killing Fields" at Facets Multimedia, 1517 W. Fullerton Ave., in Chicago on Dec. 5, 2011. A reception will start at 6:00 P.M. The screening will be at 7:00 P.M. The film is approximately 50 minutes long. After the screening, I'll be speaking about Amnesty's human rights concerns in Sri Lanka, particularly the need for an international investigation into the reported war crimes and other human rights abuses committed by both sides during the war there. We'll have actions available for people to sign. The event is free a…
-
- 0 replies
- 605 views
-