Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 10€ போதும் ஒரு பிள்ளையின் கல்வி உயர்வடைய. எங்களுக்காக தங்கள் வாழ்வை இழந்து சிறைகளில் வாடும் தந்தையர்களின் காணாமல் போன தந்தையர்களின் பிள்ளைகளுக்கான கல்வியை வழங்கி அவர்களது வாழ்வில் ஒளியேற்றுங்கள் உறவுகளே. இல.1) பிள்ளைகள்:- 1) டிலக்சனா 19வயது ஏஎல்உயர்தரம். (மாதம் 10€) 2) டிலானி 17வயது ஏஎல்உயர்தரம். (மாதம் 10€) 3) டிசான் 15வயது (தந்தை சிறையில் இருப்பதால் குடும்ப வறுமை காரணமாக 15வயது டிசான் கடையொன்றில் வேலைசெய்கிறார்) 4) டிலுக்சன் 9வயது 4ம் ஆண்டு. (மாதம் 10€) முகவரி – செங்கலடி , மட்டக்களப்பு தந்தையார் – 05.03.2010 அன்று மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்டவர். இப்பிள்ளைகளின் தந்தையார் மீது 3 வழக்குகள் போடப்பட்டுள்ளது. தாயாருடன் வாழ்ந்து வருகின்றனர். இ…

    • 1 reply
    • 1.3k views
  2. எங்களுக்காக தங்கள் வாழ்வை இழந்து சிறைகளில் வாடும் அல்லது காணாமல் போனகணவர்களின் மனைவியர்களுக்கு வாழ்வாதார உதவியை வழங்கி அவர்களை நிமிர வைப்போம். ஒரு குடும்பத்திற்கு 200.00€ கொடுத்து ஒளியேற்றுங்கள். 1) ஜெனிற்றா (30வயது) 16.09.2006 சந்தேகத்தின் பெயரில் கணவரை இராணுவம் கொண்டு சென்றது. முகவரி – சிலாவத்துறை 3பிள்ளைகள். ஜெனிற்றாவின் சகோதரர் நேவியால் சுட்டுக் கொல்லப்பட்டவர். வாழ்வாதார மேம்பாட்டு உதவியாக ஆடு மாடு வளர்க்க உதவி கோருகிறார்கள். (30ஆயிரம் ரூபா உதவியை வேண்டுகிறார்.அண்ணளவாக 200.00€) 2) ரேணுகா வயது(32) 21.10.2008 அன்று கணவர் கைது செய்யப்பட்டவர். முகவரி :- பீற்றூட் தோட்டம் , சின்னக்காடு , நுவரெலியா. 1பெண்பிள்ளை இருக்கிறது. வாழ்வாதாரத்தை மேம்…

  3. [ ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரோபர் 2011, 03:25 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] மட்டக்களப்பில் சிங்களவர் ஒருவர் வீடு வாங்குவதில் என்ன தவறு உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார் சிறிலங்காவின் பிரதி அமைச்சரான கருணா எனப்படும் விநாயகமூர்தி முரளிதரன். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையின் மீது உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். “காணிப்பிரச்சினைகள் தனியே தமிழ் மக்களுக்கு மட்டும் இல்லை. எல்லா சமூகத்தினருக்கும் உள்ளது. இந்தப் பிரச்சினையை நிர்வாக ரீதியாகவே நாம் தீர்க்க வேண்டும். சிறிலங்கா அதிபருடனும், அரசாங்கத்துடனும் இணைந்து கொள்வதன் மூலமே எமது பிரதேசங்களில் அபிவிருத்தி திட்டங்களால் நன்ம…

    • 6 replies
    • 1.3k views
  4. யாழ். குடாநாட்டில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களைத் தொழிலுக்கு அமர்த்தினால் அந்தத் தொழில் நிலைய உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடமாகாணப் பிரதித் தொழில் ஆணையாளர் கே. கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவிக்கையில், குடாநாட்டில் சிறுவர்கள் வேலைக்காக சில வியாபார நிலையங்களில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றார்கள். இந்த நடைமுறை இன்னும் உள்ளதனால் இந்தச் செயல் சட்டத்திற்கு முரணானதாகக் கவனத்தில் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொழில் நிலைய உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்படியான ஒரு முறைப்பாடுகள் எமக்குக் கிடைக்கப்பெற்றால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். http://www.vana…

  5. போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக அவுஸ்திரேலிய மெல்பேர்னில் தாக்கல் செய்யப்பட்ட போர் குற்ற வழக்கை அவுஸ்திரேலியாவின் சட்டமா அதிபர் நிராகரித்துள்ளார். இதன்படி குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாதென நிராகரிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் வதியும் ஈழத்தவரான பொறியியலாளரான 63 வயதுடைய அருணாசலம் ஜெகதீஸ்வரன் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். மஹிந்த குற்றவாளியா சுற்றவாளியாக என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் மனுவினூடாக நீதிமன்றத்தை கோரியுள்ளார். . இந்த நிலையில் ஜனாதிபத்திக்கு எதிராக வழக்குத் தொடர சட்டமா அதிபரின் அனுமதி தேவை என அவுஸ்திரேலிய பிரதமர் கூறியிருந்த நிலையில் வழக்குத் தொடர சட்டமா அதிபர் ரொபட் மிக்லேன் அனுமதி மறுத்துள்ளார். உள்நாட…

  6. கனடாவுக்கு வருகை தரவிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள்* அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நா.உ.பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா, நா.உ. திரு. எம்.ஏ.சுமந்திரன், நா.உ. பொதுச்செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஆகியோர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் ஒக்தோபர் 26, 27, 28 ஆகிய நாட்களில் பேசுகிறார்கள். நியூயோர்க்கில் உள்ள தமிழ் அமைப்புக்களின் ஆண்டு விழாக்களிலும் பங்குபற்ற இருக்கிறார்கள். இதனை முடித்துக் கொண்டு வானூர்தி மூலம் நா. உறுப்பினர்கள், திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன் நீங்கலாக கனடாவுக்கு ஒக்டோபர் 29ம் திகதி நள்ளிரவு வருகிறார்கள். ஒக்டோபர் 30 காலை ததேக…

  7. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்யும். எனவே இதனை வரவேற்கின்றோம் என இடதுசாரி முன்னணியின் தலைவரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். ஆனால் தமிழர்களை அழிப்பதற்கு உதவிய அமெரிக்காவின் செயற்பாடுகள் இவ்விடயத்தில் எந்தளவிற்கு உண்மையாக அமையுமென்பதை கூற முடியாதென்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில், கூட்டமைப்பின் அமெரிக்க விஜயத்தினால் அந்நாட்டிலுள்ள உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியிலும், உலக உழைக்கும் வர்கத்தினர் மத்தியிலும் தமிழர் பிரச்சினைகளை கொண்டு செல்ல முடியும். ஆனால் மேற்குலகம் மீது எமக்கு நம்பிக்கை கிடையாது.…

    • 13 replies
    • 2.2k views
  8. கொமன்வெல்த் உச்சி மாநாட்டில் பங்கேற்க பேர்த் அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடைந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை வரவேற்க, அவுஸ்ரேலிய அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகள் எவரும் செல்லவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு அவுஸ்ரேலிய பிராந்திய அதிகாரிகளே, சிறிலங்கா அதிபரை வரவேற்றுள்ளனர். மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி சிராந்தி ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், விளையாட்டுத்றை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா, சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தன, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரைக் கொண்ட குழுவே நேற்றிரவு பேர்த் விமான நிலையத்தைச் சென்றடைந்தது. அங்கு, சிறிலங்கா அதிபரை அவுஸ்ரேலிய அரசின் ச…

  9. அவுஸ்திரேலியாவின் சிட்னியில் மூன்று நாட்களாக சிறீலங்கா குறித்து உலகத்தமிழர் பேரவை அவுஸ்திரேலிய தமிழர் பேரவை இணைந்து நடாத்திய 3 நாள் மாநாடு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. ஒக்டோபர் 20ஆம் நாள் தொடங்கிய மாநாடு ஒக்டோபர் 22ஆம் நாள் முடிவடைந்தது. கொமன்வெல்த் நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டிற்கு முன்பாக நடைபெற்ற இம்மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இம்மாநாட்டில் கொமன்வெல்த்தின் நோக்கம்�� குறிக்கோள் குறித்து விளக்கி அதனை சிறீலங்கா அரசு எவ்வாறு கடுமையாக மீறிவருகிறது என்பதை கூட்டிக்காட்டி அது விடயமாக நடவடிக்கை எடுக்குமாறு கொமன்வெல்த்தை வேண்டி இரு தமிழர் பேரவைகளின் தலைவர்களும் இணைந்து வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  10. பொதுநலவாய நாட்டுத் தலைவர்களின் 22வது மாநாட்டில் கலந்து கொள்ளவென நேற்று அவுஸ்திரேலியா சென்ற ஜனாதிபதிக்கு பேர்த் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் பாரிய வரவேற்பளித்தனராம். . ஈழத்தமிழர் அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் என்பவரால் போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக மெல்பேர்ன் நீதிமன்றில் போர்குற்ற வழக்குத் தாக்கல் செய்துள்ளார். ஆனால் அந்த வழக்கினை விசாரணைக்கு எடுப்பதற்கு அவுஸ்ரேலிய மத்திர அரசின் அனுமதி பெறவேண்டும் என அவுஸ்ரேலிய பிரதமர் கூறியுள்ளார்.இவ்வாறான வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி எதுவும் செய்ய முடியாதென அவுஸ்திரேலிய ஏபீசி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார். . சட்டமா அதிபருக்கு இவ்வழக்குத்…

  11. அவுஸ்ரேலிய பிரதமர் ஜூலியா அம்மையாருக்கு ஒரு பிரச்சினை. என்னவென்றால் சிறிலங்காவில் இருந்துவரும் தமிழ் அகதிகளை தடுத்து நிறுத்தவேண்டும். அதற்காக சிறிலங்கா அரசுடனும் அரச கடற்படை மற்றும் இராணுவத்திற்கு உதவி ஒத்தாசைகளை கொடுத்து தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். . ஆனால் இதே சிறிலங்கா அரசாங்கமும், அரச படைகளும்தான் போரின் இறுதிப்பகுதியில் 40,000 மக்களை கொன்று குவித்துள்ளார்கள். இப்போதும் மெல்ல மெல்ல கொல்கின்ரார்கள்.போர்முடிந்துவிட்டதாக கூறினாலும் கடந்த இரண்டுவருடங்களாக அங்கு சிறிலங்காப்படைகள் தமிழ் மக்களை ஓர் போர்ச்சூழலிலேயே வைத்திருக்கின்றார்கள். நேற்று முந்தினம் வெளியான ஆசிய மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கையில் ஒரு செய்தி கூறபப்ட்டுள்ளது. . அ…

  12. சுருங்கிய தமிழ்த்தாய் வாழ்த்து !!! "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!" தமிழ் தாய் வாழ்த்தில் திராவிடத்தை மட்டும் வைத்து விட்டு தமிழில் இருந்…

  13. அமெரிக்கா பயணமாகியுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் அங்கு தமது கடமைகளை முடித்துக்கொண்டு கனடா செல்கின்றனர். கனடாவில் 31 ஆம் திகதி வெளியுறவு செயலக அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக கனடா செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் கனடாவில் ஒக்டோபர் 30ம் திகதி காலை ததேகூ இவர்கள் கடனாவிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு அன்று மாலை 6.30 மணிக்கு இரவு விருந்தும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. . இதன் பின்னர் நவம்பர் முதலாம் திகதி சம்பந்தன், மாவை, சுமந்திரன் ஆகியோர் ஐக்கிய நாடுகள் சபை செயலர் பான் கி மூனை சந்திக்கின்றார்கள். மூலம்

  14. ” ஒரு சந்நியாசின் இலக்கு இறைவனை கண்டடைவது. ஒடும் நதியின் இலக்கு சமுத்திரத்தை சென்றடைவது. ஒரு போராளியின் இலக்கு பூர்வீகத்தை வென்றெடுப்பதே “ வரலாற்று சுவடுகளை ஆராய்ந்து பார்த்தால் ஓர் ஆச்சர்யமான நிஜம் தென்படும். சர்வாதிகாரத்தின் ஆயுள் ? அற்ப ஆயுள் என்பதே அது. போராட்டத்தில் பின்னடைவுகள் தோன்றலாம், மறையலாம் ஆனால் போராட்டம் மட்டுமே உறுதியானது இறுதியானது. இதை உலகிற்கு உரக்கசொன்னவர்கள் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து தேசத்திற்காகவும், தேசவிடுதலைக்காகவும் புதுவிடியலை உருவாக்கிய உன்னத தலைவர்கள். அந்த உன்னத தலைவர்கள் பலர் மாபெரும் புரட்சி செய்து அடக்குமுறையை அப்புறப்படுத்தி மக்களாட்சி மலர்ந்திட செய்திருக்கிறார்கள். அதில் சிலர் யுத்தகளத்தில் வீரமரணத்தையும் ச…

  15. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயத்தின்போது நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமரான ருத்திரகுமாரன் விசுவநாதனைச் சந்திக்கும் திட்டமில்லை எனத் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.இதேவேளை, கொழும்பிலிருந்து புறப்பட்டுச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமெரிக்காவில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் அந்நாட்டு வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்டன் உட்பட பல முக்கியஸ்தர்களையும் சந்தித்து இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள், அதற்கான தீர்வின் விரைவான அவசியம் குறித்து விளக்கமளிக்கவுள்ளனர். அமெரிக்காவிலிருந்து பிரித்தானியாவுக்குச் செல்லும் கூட்டமைப்பினர் பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழ் சமூகத்தைச் சந்தித்துப் பேசவுள்ள…

  16. http://www.abc.net.au/lateline/content/2011/s3347070.htm http://www.smh.com.au/world/sri-lankan-president-accused-in-australian-court-20111024-1mgea.html

  17. Monday, 24 October 2011 18:03 லிபியாவின் சர்வாதிகாரியான முகம்மர் கடாபி நாயைப் போன்று பதுங்குகுழி ஒன்றில் வைத்துச் சுடப்பட்டார். இதுதான் சர்வாதிகாரிகளின் இறுதி முடிவு. இந்த நாட்டு மக்களை நேசித்து மக்களுக்கான ஆட்சி இலங்கையில் நிலவ வேண்டுமானால் 18 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நீக்க வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு இன்று வருகை தந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பதவிகளை நீக்குமாறு முதலாவது நீதிமன்றம் முன்வைத்த சிபார்சுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது தொட…

  18. ஆனால் கிளிநொச்சியை சேர்ந்த மற்றுமொரு மாணவர் தாக்கப்பட்டுள்ளார் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சு. தவபாலசிங்கம் தாக்கப்பட்டமை தொடர்பில் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ள பாதுகாப்பின்மை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினத்திற்கும் யாழ் மாவட்ட தளபதி மகிந்தஹத்துருசிங்கவுக்கும் இடையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்பில் மாணவர்கள் எந்த விதமான அச்சமுமின்றி கல்வியைத் தொடரலாம் என்று மகிந்த ஹத்துருசிங்க தலைமையிலான பாதுகாப்புத் தரப்பினர் துணைவேந்தருக்கு உறுதியளித்துள்ளதாக யாழ் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படைத்தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில…

  19. இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் அமெரிக்காவை வதிவிடமாக் கொண்டவருமான கோடீஸ்வரர் ராஜ் ராஜரத்தினத்திடம் 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டஈடு தரக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்த மாதம் நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நீதிமன்றத்திலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் மேற்கொண்ட குண்டுத் தாக்குதல் ஒன்றில் உயிரிழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு ராஜ் ராஜரட்ணத்துக்கு உத்தரவிட வேண்டுமென்று கோரியே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ராஜ் ராஜரட்ணம் நான்கு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியிருந்தார் என அமெரிக்க எவ்.பி. ஐ யினர…

  20. அமெரிக்கா என்ன செய்யப்போகின்றது? கூட்டமைப்பினை ஏன் அழைத்துள்ளார்கள்? நோர்வே மீண்டும் ஏன் களத்தில் இறங்கியுள்ளது? இந்தியா அமைதியாக உள்ளதே, இந்தியாவை மீறி அமெரிக்காவால் ஏதும் செய்ய முடியுமா? . இப்படி பல கேள்விகள் எம்முன் விரிகின்றது. அமெரிக்காவிற்கு நாளை கூட்டமைப்பு விஜயம் ஒன்றை செய்யப்போவதாக கூறும் நிலையில் அவர்களில் சிலருக்கு இன்னமும் வீசா ஒழுங்குகள் கூட சரிவரவில்லை. அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இன்னமும் ஹிலாரி கிளிங்டனை சந்திக்கவோ அல்லது முக்கிய இராஜ தந்திரிகளைச் சந்திக்கவோ நேர அட்டவணை கொடுக்கவில்லை. . ஆனால் பல அமைப்புக்கள், தமிழ் அரசியல் கட்சிகள், பத்திரிகைகள் உட்பட ஏதோ இந்த நடவடிக்கையினை ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாக பிரச்சாரப்படுத்தியும்,அமெரிக்கா ஏதோ என்னமோ செய்…

  21. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை அமெரிக்காவுக்கான விஜயத்தினை மேற்கொள்கின்றனர். நாளை அதிகாலை இலங்கையிலிருந்து அமெரிக்கா நோக்கி இவர்கள் புறப்படவுள்ளனர். எம்.பி.க்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ்பிரேமச்சந்திரன், எம். சுமந்திரன் ஆகியோரே அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளனர். அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ அழைப்பினையேற்றே இவர்கள் அங்கு செல்கின்றனர். அமெரிக்காவில் இவர்கள் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளின்டன், தெற்காசிய விவவாரங்களுக்கான அமெரிக்க பிரதி வெளிவிவகார செயலாளர் ரொபட் ஓ பிளேக் உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து பேசவுள்ளனர். இவர்கள் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ ம…

  22. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள நிலையில், அவருக்கு எதிராக மெல்போர்ன் நீதிமன்றம் ஒன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவுஸ்திரேலிய பிரஜையான அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் என்பவரே இந்த வழக்கை நேற்றுத் (23) தாக்கல் செய்துள்ளார். வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஆகாய மார்க்கமாகவும் தரை மார்க்கமாகவும் குண்டுகளைப் போட்டு பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் இறப்புக்கு ஜனாதிபதி மஹிந்த காரணமாக இருந்தமை மற்றும் பாடசாலைகள், வைத்தியசாலைகள், சமூக நல நிலையங்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை உட்பட பல குற்றச்சாட்டுகள் இலங்கை ஜனாதிபதி மீது சுமத்தப்பட்டே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு …

  23. Sri Lankan envoy 'war crimes' SRI Lanka's high commissioner to Australia, former navy Admiral Thisara Samarasinghe, should be investigated for war crimes, a brief before the Australian Federal Police says. The submission, from the International Commission of Jurists' Australian section, has compiled what a source has told The Age is direct and credible evidence of war crimes and crimes against humanity. Witnesses - former Sri Lankan residents now living in Australia - can attest to the crimes, the source said Admiral Samarasinghe was the commander of the Sri Lankan navy's eastern and then northern areas, as well as naval chief of staff, during the fin…

  24. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இனந் தெரியாத நபர்களினால் இன்று தாக்கப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று மாலை தெரிவித்துள்ளது . யாழ். பல்கலைக்கழக கலைத்துறை நான்காம் வருட மாணவரான ராஜவரோதயன் கவிதாஸ் (வயது 26) இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தவபாலன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தைச் செர்ந்த யாழ்.பல்கலைக்கழக மாணவன் ராஜவரோதயன் கவிதாஸ், கிளிநொச்சி - பரந்தன் பூநகரி வீதியை அண்மித்த பகுதியில் வைத்து இன்று அதிகாலை முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த குழுவினரினால் பொல…

    • 2 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.