ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
இலங்கைத் தீவில் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள், ஓர் வெளிப்படையான செய்தியை இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு கூறி வருகின்றனர். அதாவது இத் தீவு சிங்கள மக்களுக்கும் பௌத்த சமயத்திற்கும் உரியது, தமிழ் மக்களாகிய நீங்கள் எம்முடன் சேர்ந்து வாழ விரும்பினால் நீங்கள் ஓர் சிறுபான்மை இன அந்தஸ்துடன் சிங்களவர்களாகிய எம்மை அரவணைத்து வாழுங்கள். இல்லையேல் எம் இனத்தினால் உங்களுக்கு ஏற்படும் கஷ்ட, நஷ்டங்களை அனுப விக்கத் தயாராயிருங்கள் என்பதே அதுவாகும். இலங்கைத் தீவு 1948 ஆம் ஆண்டு சுதந்திரமடைந்தது முதல் இன்றுவரை இந்தச் சிங்கள அரசுகளின் போக்கினால் இத்தீவில் வடக்கு, கிழக்கு முதல் மலைநாடு வரை தமிழர்கள் படும் கஷ்ட நஷ்டங்கள் தொல்லைகள் வர்ணிக்க முடியாதவை! அறவழிப் போராட்டமாக இரு…
-
- 0 replies
- 865 views
-
-
[Monday, 2011-10-17 09:16:54] விடுதலைப் புலிகளின் பரப்புரைக்குள் கனடா வீழ்ந்து விட்டதாக கனடாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் சித்ராங்கனி விசனம் வெளியிட்டுள்ளார். போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்துள்ளார் சித்ராங்கனி வாகீஸ்வரா. கனேடிய ஊடகங்களை சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வாகீஸ்வரா நேற்றையதினம் ஒட்டாவாவில் சந்தித்தபோது ஊடகங்களுக்கு அளித்துள்ள செவ்வியில், கனடாவின் இந்த அறிக்கைகள் தொடர்பாக தாம் கவலை கொள்வதாகவும், உண்மையான நிலைமைகளை கனடா அறிந்து கொள்ள வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் கூறியுள்ளார். …
-
- 0 replies
- 624 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் மீறல்கள் குடியேற்றங்கள் ஆகியவற்றை கண்டித்து இன்று மாபெரும் உண்ணாவிரதம் வவுனியாவில் ஆரம்பமானது. மூன்று கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை 7 மணியளவில் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது.. இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது. வவுனியா வாழ் மக்கள்,பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் அனைத்து தமிழ்க்கட்சிகளின் பிரதி நிதிகள் ,மனோ கணேசன் ஆகியோர் இதில் கலந்துகொண்டுள்ளதாக வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப்போராட்டத்திற்கு புலம்பெயர்ந்த மக்கள் தமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளன.. மூன்று கோரிக்கைகளாவன; . 1. முல்லைத்தீவு மாவட்டத்தில் எல்லைக்களை மாற்றி வெலிஓயா எ…
-
- 1 reply
- 848 views
-
-
ஜனநாயகமும் சமத்துவமும் நிலவவேண்டிய பாராளுமன்றத்தில் இப்போது பொய்யர்களும் கொலைகாரர்களும் நிறைந்த ஒரு கூடமாக மாறியுள்ளது. இவர்கள் எல்லா அரசியல் கட்சிகளூடாகவும் பாராளுமன்றத்திற்குள் புகுந்துள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளார் முன் நாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க பண்டார நாயக்க. . பெற்றோர்களாகிய நாம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும் சரியான பாதையினையும் வழங்கி வளர்க்கவேண்டும். அவ்வாறு செய்யாவிடில் எமது பரப்பரையே சீரழிந்து போய்விடும். தற்போது கொலைகாரர்கள், பச்சைப் பொய்யர்கள் பாராளுமன்றில் புகுந்துள்ளார்கள். இவர்களால் இந்த நாடு கொள்ளையடிக்கப்படுகின்றது. . தந்தை,தாய், மகன், மகள் என ஒரு குடும்பமே பாராளுமன்றத்துக்கு வருகின்றார்கள் இவர்கள் எல்லோரும் மக்களால் தெரிவு செய்யப்பட்…
-
- 0 replies
- 652 views
-
-
பாராளுமன்றில் கொலையாளிகள் நிரம்பியுள்ளனர் – சந்திரிக்கா பண்டாரநாயக்க 17 அக்டோபர் 2011 பொதுமக்களின் பணத்தை களவாடும் நோக்கில்.. பாராளுமன்றில் கொலையாளிகளும், திருடர்களுமே நிரம்பியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். கொரகொல்ல பிரதேசத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தை பிரதிநித்துவம் செய்யும் சகல கட்சிகளிலும் கொலைகாரர்களும், திருடர்களும் நிரம்பி வழிவதாகத் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் பணத்தை களவாடும் நோக்கில் குறித்த நபர்கள் அரசியலில் களமிறங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சிரச தொலைக்காட்சி சேவையில் சந்திரிக்காவின் செவ…
-
- 0 replies
- 440 views
-
-
வட மாகாண சபைக்கான தேர்தல்கள் மாத்திரமே எஞ்சியிருக்கின்ற நிலையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் ஏனைய அனைத்துத் தேர்தல்களையும் நடத்தி முடித்திருக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான மூன்று கட்ட தேர்தல்களும் நிறைவுக்கு வந்துள்ளன. 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தல் முதல் தற்போது நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் வரையில் அனைத்து பிரதிபலன்களும் ஆளும்கட்சியிடமே போய்ச் சென்றுள்ளன. ஜனாதிபதி பாராளுமன்றம், மாகாண சபைகள் என அதிகாரங்கள் தம் கையில் இருக்க நாடளாவிய ரீதிய…
-
- 0 replies
- 945 views
-
-
அமைச்சர் விமல் வீரவன்சவினால் நடாத்தப்படும் இணைய ஊடகத்தில் வெளியான செய்தியால் ஆத்திரமடைந்த கோத்தபாய கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முல்லேரியாவில் துமிந்த – பாரத லக்ஷ்மனுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் நாடாளுமன்ற தேர்தலின் போது விருப்பு வாக்குகினால் ஏற்பட்ட தகராறு என வீரவன்சவின் ஊடகம் கருத்து வெளியிட்டுயிருந்தது. இதனை மறுக்கும் கோத்தபாய, பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை சம்பந்தமாக மக்களை குழப்பக் கூடிய வகையில் எந்த கருத்துக்களையும் வெளியிட வேண்டாம் என அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு கடும் உத்தரவை பிறப்பித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மீது தொடர்ந்தும் குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம் என தெரிவித்துள்ள கோத்தபாய இந்த மோதல்கள் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்த…
-
- 6 replies
- 1.7k views
-
-
தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க வல்லவர்களும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் தாக்கப்பட்ட சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன். அதுமட்டுமன்றி மேற்படி சம்பவத்தினை எதிர்த்து தனது கண்டனத்தையும் வெளியிட்டு தமிழ் மக்களின் பிரதிநிதி என்பதை நிலைநாட்டியுள்ளார் சிறிதரன். அந்த வகையில் இச் சம்பவம் தொடர்பில் அவர் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்தவை வருமாறு, http://youtu.be/OXXkWL3jKXQ தமிழ் மக்கள் வெகுஜன ரீதியாக தங்களது குரல்களை வெளிப்படுத்துவதற்கு தமிழ் பகுதிகளில் எந்தவித உரிமையும் இல்லை என்பதை யாழ…
-
- 5 replies
- 1k views
-
-
நோர்வே நாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உயிர்ப்பிக்க அனுமதிக்கக் கூடாதென சிறீலங்காவின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான தூதுக்குழுவினர் அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறீலங்கா தூதுக்குழுவினருக்கும் நோர்வேயின் வெளியுறவு அமைச்சருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சில் தருஸ்மன் அறிக்கை பற்றி பிரச்சினை மற்றும் கற்றுக் கொண்ட நல்லிணக்க ஆணைக்குழு குறித்த தங்கள் கருத்தை விளக்கமளித்ததாகவும் சந்திப்பு சுமுகமாக இடம்பெற்றதாக சிறீலங்கா தூதுக்குழுத் தெரிவித்துள்ளது. சிறீலாங்கா தனது செயற்பாடுகளை உலக நாடுகளுக்கு தெரியப்படுத்திவருவதாக தெரிவித்த அவர் இறுதி முடிவை எட்டுவதற்கு நேரகாலம் தேவைப்படுவதாகவும் நோர்வையிடம் தொவித்துள்ளார். சிறீலங்கா…
-
- 1 reply
- 630 views
-
-
தீருவில் குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவுத்தூபி இருந்த இடத்தில் பூங்காவொன்றை கட்டுவதற்கு வல்வெட்டித்துறை நகரசபை தீர்மானம்.எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளான குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவாக வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியை சிங்கள இனவாத அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக முற்றுமுழுதாக இடித்தழித்திருந்தனர். இந்த நிலையில் அதே குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவாகவும் கட்டப்பட்டிருந்த தூபி பகுதியை பொது பூங்காவாக கட்டியமைப்பதற்கு வல்வெட்டித்துறை நகரசபை முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பான செய்தி இன்னும் சில நாட்களில் ஊடகங்களுக்கு உத்…
-
- 2 replies
- 1.4k views
-
-
மகிந்தவுக்கு எதிரான அமெரிக்க நீதிமன்ற அழைப்பாணையை சிறிலங்கா அரசு நிராகரிப்பு! - கொழும்பு ஊடகம் தகவல்!! அமெரிக்க நீதிமன்றத்தின் அழைப்பாணை உள்ளூர் ஊடகங்கள் மூலம் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பப்பட்டிருந்தாலும் கூட, அதற்குப் பதில் அளிக்கப் போவதில்லை என சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பில் இருந்து வெளிவரும் The Sunday Leader எனும் பத்திரிகை தெரிவித்துள்ளது. கேணல் ரமேஷின் துணைவியார் வத்சலாதேவி நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குத் தொடர்பிலேயே சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்த அழைப்பாணை ஊடகங்கள் ஊடாக அனுப்பப்பட்டிருந்தது. வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சி…
-
- 1 reply
- 519 views
-
-
வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசம் என்பதனை 1921 ஆம் ஆண்டு சிங்களம் ஏற்றுக்கொண்டுள்ளது.1921 ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறிலங்காவில் இன ரீதியான தனி அலகுகள் தான் இருந்தன.ஆனால் அதன் பின்னர்தான் நிலமைகள் மாறியது. இவ்வாறு கூறியுள்ளார் முன் நாள் உயர் நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன். இனத்துவ அடையாளங்களையும் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு ஆங்கிலேயர் தனித்தனி அலகுகளாகவே ஆட்சி அதிகாரங்களை வைத்திருந்தார்கள். . ஆனால் 1917 ஆம் ஆண்டு பிரதேச முறைப்படி அது அமைய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அதனை அப்போது சபாபதி தலைமையிலான யாழ்ப்பாண சங்கம் எதிர்த்தது. பிரதேச ரீதியில் இருந்தால் பெரும்பான்மை இனத்தவர்கள் கூடுதல் பலம் பெற்று விடுவார்கள். சிறுபான்மை இனத்தவர்களைக் கணக்கிலெடுக்க மாட்…
-
- 1 reply
- 753 views
-
-
ரஞ்சன் மத்தாயின் இராஜதந்திர வருகையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பும் கடந்த வார இறுதி நாட்களில் மூன்று முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. அவற்றின் எதிரொலிகள் இந்த வாரம் முழுவதும் பேச்சிலும் எழுத்திலும் வந்து கொண்டே இருந்தன. ஒன்று உள்ளூராட்சி சபைகளில் எஞ்சியிருந்த 23 சபைகளுக்கான மூன்றாவது கட்டத் தேர்தல். இரண்டாவது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரபலங்களிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையும் படுகொலை படுகாயங்கள் பட்டமை. மூன்றாவது இவற்றின் மத்தியில் இந்தியாவின் புதிய வெளி விவகாரச் செயலாளர் ரஞ்சன் மத்தாயின் மூன்று நாள் இலங்கைக்கான ராஜதந்திரப் பயணம். இவை மூன்றும் நமது சூழலின் அரசியல் களத்தில் வைத்து அலசிப் பார்க்கப்பட வேண்டியவைகளாகும்…
-
- 3 replies
- 490 views
-
-
ஹிலாரி, ரொபர்ட் பிளேக்கை த.தே.கூ. எம்.பிகள் சந்திக்கத் திட்டம் Sunday, October 16, 2011, 16:23 தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அமெரிக்க விஜயத்தின்போது அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் ரொபட் ஓ பிளேக் ஆகியோரையும் சந்தித்து இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை குறித்து விளக்கவுள்ளதாக த.தே.கூ. பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் எதிர்வரும் 25 ஆம் திகதி அமெரிக்கா பயணமாகவுள்ளனர். தமிழ் அரசியல் கட்சியொன்றின் தூதுக்குழுவுக்கு அமெரிக்க அரசாங்கம் அழைப்பு விடுத்தமை இதுவே முதல் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் க…
-
- 3 replies
- 487 views
-
-
WIKILEAKS – “RAJAPAKSAS ARE UNEDUCATED AND UNCULTURED RASCALS” – CBK WIKILEAKS – “RAJAPAKSAS ARE UNEDUCATED AND UNCULTURED RASCALS” – CBK Colombo Telegraph IN JOURNALISM TRUTH IS A PROCESS CBK - Fonseka came from a Buddhist extremist background, he seemed more honest than Rajapaksa “President Kumaratunga found the Rajapaksa family involvement in politics very distasteful and called them ‘uneducated and uncultured rascals.’ She worried that the political climate since her term had become “vindictive and threatening” and that Rajapaksa had ‘muddied the thinking’ of masses.” The US ambassador wrote to Washington. The Colom…
-
- 1 reply
- 901 views
-
-
இப்போதெல்லாம் புலத்து தமிழர்களிற்கு அஞ்சி சிங்களம் இரகசிய பயணங்களையும் சந்திப்புக்களையும் மேற்கொள்கின்றது. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களுக்கும் பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் அலென் யூபே அவர்களுக்கும்; இடையிலான சந்திப்பு கடந்த 13.10.11 அன்று பாரிசில் இடம்பெற்றுள்ளது. . இதே போல நோர்வேக்கு சென்ற அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா எரிக் சொல்கைம் அவர்களை சந்தித்துள்ளார். . பிரான்ஸ் வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பில் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்த பின்னணியில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கு முயற்சிகளை நடைமுறைப்படுத்தும்படி பிரான்சின் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளாராம். . சிறிலங்காவில் யுத்தத்தின் பின்னான இனங்…
-
- 2 replies
- 709 views
-
-
தமிழர்களின் போராட்டவலுவைச்சிதைத்ததிற்கான பலனை இந்தியா அனுபவிக்கத்தொடங்கியுள்ளது. தமிழர்களைப்போராடத்தூண்டிவிட்டு பின்னர் ஒட்டு மொத்த தமிழர்களையே கொன்று குவிக்கவும், கொன்றுகுவித்தும்நாடகமாடிய இந்தியா இன்று 'பிள்ளையார் பிடிக்கக்குரங்கு வந்தது" போல் சீனாவின் பிடியில் மும்முனைகளிலும் அகப்பட்டு என்னசெய்வது என்று தவிதவியாய்த் தவிக்கின்றது. சீனாவோ தன்பிடியைமேலும் வலுப்படுத்திக்கொணடு செல்கின்றது. தமிழர்களை ஒழிக்க இலங்கை அரசிற்கு இந்தியா உதவி இருந்தாலும் இந்திhவின் பலவீனத்தைப்பாவித்து தமிழர்களை ஒழித்தது இலங்கை. மீண்டும் இந்தியா இப்பிராந்தியத்தில் வலுவாக இருந்தால் இலங்கையில் அமைதி நிலவாது என்பதை ராஜபகஸ 1986களில் ஐபிகேஎவ்ஆக இலங்கையில் காலடி வைத்தபோதே கூறியுள்ளார். புலிகளை வளர்த்…
-
- 9 replies
- 1.5k views
-
-
இராணுவ புலனாய்வாளர்கள் எனக் கூறிவிட்டு நகைகளைக் கொள்ளையிட்ட மூவர் மடக்கிப்பிடிப்பு; விழிப்புக் குழுவினர் சாமர்த்தியம்; உசனில் சம்பவம் இராணுவப் புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகப்படுத்திய சிங்கள மொழி யில்பேசியவாறு வீட்டாரை மிரட்டி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட குழு ஒன்று அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த விழிப்புக்குழுவிடம் மாட்டிக்கொண்டது. இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கி ழமைஇரவு 9.30 மணிக்கு உசன் விடத்தற்பளை வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவரு வதாவது: ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கி ளில் சென்ற ஆறுபேர் கொண்ட குழுவினர் தாம் புனர்வாழ்வளிக்கப் பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளை விசாரணை செய்ய…
-
- 2 replies
- 597 views
-
-
30 ஆயிரம் வாக்குகளுடன் தலைநகர தமிழர் தலைமைக் கட்சி என்ற அந்தஸ்து உறுதியாகிறது Sunday, October 16, 2011, 19:08 கொழும்பு மாநகரசபை,தெகிவளை-கல்கிசை மாநகரசபை,கொலொன்னாவை நகரசபை ஆகிய கொழும்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களிலே நமது கட்சியின் தனித்துவமான ஏணிச் சின்னத்திற்கு கிடைத்துள்ள சுமார் 30 ஆயிரம் வாக்குகள் மூலம் தலைநகர தமிழர்களின் தலைமைக்கட்சி என்ற எமது அந்தஸ்து தெட்டத் தெளிவான முறையிலே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 30 ஆயிரம் வாக்குகளை வெகுவிரைவில் 60 ஆயிரமாக மாற்றிக்காட்டுவோம். அதற்கான துணிச்சல் மிக்க வல்லமை எங்களுக்கு இருக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் தொடர்ப…
-
- 2 replies
- 724 views
-
-
அமெரிக்க அரசின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று அடுத்த வாரம் வாஷிங்டன் செல்லவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வாஷிங்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. . சிறிலங்கா அரசின் உத்தரவுக்கமைய அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது. அமெரிக்காவில் வாழும் இலங்கைச் சிங்களவர்களையும் சிறிலங்கா அரசு சார்புத் தமிழர்களையும் ஒன்றிணைத்து இந்த ஆர்பப்பாட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால், இவ்வாறாதொரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கு அமெரிக்க வாழ் சிங்களவர்களில் பெரும்பாலானோர் விருப்பம் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்ரது. …
-
- 4 replies
- 753 views
-
-
Published By பெரியார்தளம் On Friday, October 14th 2011. Under பெரியார் திராவிடர் கழகம் இன வெறி, சாதி வெறி இரண்டுக்கும் எதிரான போராட்டங்களின் குறியீட்டுப் பெயர்தான் கொளத்தூர் மணி. உள்ளூர்ச் சேரிகளில் தீண்டாமை திணிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட தமிழர்களுக்கும் ஈழத்து முள்வேலிகளில் அடைக்கப்பட்ட தமிழர்களுக்கும் சற்றும் சமரசம் இன்றிக் குரல் கொடுப்பவர். மூன்று தமிழர்களின் உயிர் காக்க மரண தண்டனை எதிர்ப்புப் பிரசாரப் பயணத்தில் இருந்தவரைச் சந்தித்தேன். ”நீங்கள் பெரியார் கொள்கைகள்பால் எப்படி ஈர்க்கப்பட்டீர்கள்?” ”கொளத்தூர் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, புலவர் வ.வேணுகோபால் என்ற தமிழ் ஆசிரியர்தான் எனக்கு முதன்முதலில் பகுத்தறிவுச் சிந்தனைகளை அறிமுகப்…
-
- 2 replies
- 2.2k views
-
-
[ சனிக்கிழமை, 15 ஒக்ரோபர் 2011, 04:12.45 மு.ப GMT ] இங்கிலாந்து நாட்டின் புதிய ராணுவ அமைச்சராக பிலிப் ஹேமண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் ராணுவ அமைச்சராக லியாம் பாக்ஸ் பதவி வகித்து வந்தார். இவர் தன்னுடைய பதவி காலத்தில் தன் நெருங்கிய நண்பர் ஆதம் வெரைட்டிக்கு சலுகை தந்தது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்க ஆளானார். இதனையடுத்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்து அதற்கான கடிதத்தை பிரதமர டேவிட் கமரூனிடம் வழங்கினார். பாக்ஸ் விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர் டேவிட் கமரூன் தங்களின் உண்மையான விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன், நீங்கள் பதவி விலகுவது வருத்தத்திற்குரியது என தெரிவித்தார். பாக்ஸ் விலகலுக்கு பின்னர் புதிய அமை…
-
- 0 replies
- 624 views
-
-
சிங்கள முன்னைநாள் கடற்படை தளபதி மீது போர்குற்றம் தற்போதைய அவுஸ்திரேலிய உயர்ஸ்தாநிகரும் முன்னைநாள் சிங்கள கடற்படை அதிகாரியும் மீது போர்குற்றச்சாட்டுக்கள், அவுஸ்திரேலியா காவல்துறை முன்வைக்கப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவில் தற்சமயம் வாழும் சிலரை சாட்சியாக கொண்டு வலுவான சாட்சியங்களை உள்ளடக்கி International Commission of Jurists' Australian section மூலமாக இந்த குற்றப்பத்திரிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதேவேளை இரட்டை குடியுரிமையை கொண்ட கொஹனா மீதும் 'வெள்ளைக்கொடி' சம்பந்தமான விசாரணைகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. Sri Lanka diplomat accused of war crimes SRI LANKA'S high commissioner to Australia, former admiral Thisara Samarasinghe, should be investig…
-
- 5 replies
- 1.1k views
-
-
[sunday, 2011-10-16 08:45:34] பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலை அதிபர் தொடர்பான கருத்துக்களை ஊடகங்கள் தவறாக அர்த்தப்படுத்திவிட்டன பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபர் தொடர்பான கருத்துக்களை ஊடகங்கள் தவறாக அர்த்தப்படுத்திவிட்டதாக அந்தர் பல்டி அடித்துவிட்டார் அரச அதிபர் இமெல்டா சுகுமார். பிரதி அமைச்சர் கருணாவினூடாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தலையடுத்தே தனது கடும் போக்கிலிருந்து அரச அதிபர் பின்வாங்கியுள்ளதாக செயலக அதிகாரிகள் கூறுகின்றனர். பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை ஆசிரிய மாணவிகள் பாலியல் நுகர் பொருளாகப் பார்க்கப்படுகின்றனர் என்று ஊடகங்களுக்கு தெரிவித்தேனே தவிர பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபரினால் ஆசிரிய மாணவிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்ப…
-
- 2 replies
- 1.9k views
-
-
இந்தப் பாடசாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட படுவான்கரைப் பிரதேசமாகும். இந்தக் கிராமம் மட்டக்களப்பு பதுளை வீதியில் அமைந்துள்ளது. நெடுங்காலமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தப்பிரதேசம் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் முற்றாகப் பாதிக்கப்பட்டு பலமுறை மக்கள் இடம்பெயர்வுகளும் இடம்பெற்ற பிரதேசமாகும். இந்தக் கிராமத்தில் அநேகமான ஆண்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அனேகமாக குழந்தைகள் தங்களது தந்தையரை இழந்த நிலையில் மிகவும் வறுமைப்பட்ட நிலையில் தங்களது கல்வியைச் சரிவரத் தொடங்க முடியாமல் பெரிதும் கஸ்ரப்படுகின்றனர். மேலும் இந்தப் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்கள் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து …
-
- 1 reply
- 873 views
-