Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழ நிலைமையை தமிழக கட்சிகள் புரிந்துகொள்ளவில்லை - இலங்கை பத்திரிகையாளர் ஈழத்து இனப் படுகொலைக்கு எதிரான குரல்கள் சற்று அடங்கி, மூன்று தமிழர்களின் உயிரைக் காப்பாற்றவேண்டும் எனற குரல்கள் உயர்ந்துள்ளன. அதுவும் உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பில் ஈனஸ்வரத்துக்குப் போயுள்ள நிலையில், கடந்த 6-ம் தேதி சென்னையில் நடந்த இலங்கை பத்திரிகையாளர் ஒருவருடனான உரையாடல் நிகழ்வு, தமிழ் உணர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மனித உரிமை ஆர்வலரும் புலி ஆதரவாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுபவருமான பேராசிரியர் அ. மார்க்ஸ், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். 'போருக்குப் பிந்தைய இலங்கையும் தமிழ் ஊடகங்களும்' என்ற தலைப்பில், கொழும்பில் இருந்து வெளியாகும் 'தினக்குரல்' நாளிதழின் ஆசிரியர் தனப…

    • 0 replies
    • 720 views
  2. 17 ஆம் திகதி உண்ணாவிரதம் மேற்கொள்ள தமிழ்க்கட்சிகள் தீர்மானம் தமிழர் தாயக பிரதேசத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும் அரசின் கவனத்திற்குக் கொண்டுவரும் வகையிலும் எதிர்வரும் 17 ஆம் திகதி வவுனியாவில் உண்ணாவிரதம் நடத்த பல தமிழ் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ். புளொட் ஆகியன, டெலோ ஆகிய கட்சிகளுக்கிடையில் இன்று செவ்வாய்கிழமை வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: * முல்லைத்தீவு மாவட்டத்தில் எல்லைகளை மாற்றி வெலிஓயா …

  3. இலங்கை அரசின் நடவடிக்கையிலும் இலங்கையில் இறுதி யுத்தத்தில் நடந்த சம்பவங்களிலும் நான் பொறுமை இழந்துள்ளேன் என்று ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்தார் நோர்வேயில் திங்கள் கிழமை ஆரம்பமான உலகில் அனைவருக்கும் 2030ஆம் ஆண்டுக்கிடையில் மின்சாரம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வந்தபோது விசேடமாக தெரிவு செய்யப்பட்ட சர்வதேச பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் போது இலங்கை தொடர்பாக நீண்ட நெடு நேரம் கருத்து தெரிவித்த ஜ.நா பொதுச் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை விடயத்தில் நான் ஒரு விசேட நிபுணர் குழுவை அமைத்திருந்தேன். அது உங்களுக்கு நினைவிருக்கும். அவர்கள் அனைத்தை…

  4. மொழி பயன்பாடு மற்றும் மொழி உரிமைகள் தொடர்பாக சர்வதேச ரீதியாக நடைபெற இருக்கும் பிரதான மாநாடான மொழி மற்றும் அபிவிருத்தி பற்றிய 9வது சர்வதேச மாநாடு இம்முறை இலங்கையில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச தலைமையில் ஒக்டோபர் மாதம் 17ம் திகதி முதல் 19ம் திகதி வரை கொழும்பில் இம்மாநாடு இடம்பெறவுள்ளது. http://www.saritham.com/?p=37246

  5. [Tuesday, 2011-10-11 08:20:03] மூன்று நாள் பயணமாக சிறிலங்கா சென்றிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் இரண்டு கட்டங்களாக தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். ஆனால் ஈபிடிபி கட்சியின் பொதுச்செயலரும் சிறிலங்கா அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை சந்திப்பதற்கு அவர் நேரம் ஒதுக்கிக் கொடுக்கவில்லை என்று அறியப்படுகிறது. இந்தியாவின் வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் நேற்று முன்தினம் மாலை கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ம…

  6. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரின் வேண்டுகோளுக்கிணங்க, கொலன்னாவை தேர்தல் தொகுதியின் அனைத்து சமூக, அரசியல் செயற்பாடுக்கான இணைப்பாளராக அமைச்சர் பஷில் ராஜபக்ஷவைஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்காலிகமாக நியமித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. http://www.saritham.com/?p=37215

  7. [Monday, 2011-10-10 13:12:23] காணிப் பதிவு சம்பந்தமான விவகாரத்தினால் வடபகுதி மக்கள் மிகவும் கவலையுற்றுள்ளனர். இதற்கெதிராக கூட்டமைப்பு நடவடிக்கை எடுப்பதாயின் நாம் பூரண ஆதரவு வழங்கத் தயாராகவுள்ளோம். இல்லையேல் இவ்விடயத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு எமக்கு கூட்டமைப்பு ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கோரியுள்ளார். இது குறித்து சம்பந்தன் எம்.பி.க்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளதாவது, காணிப் பதிவு சம்பந்தமாக ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை இத்துடன் இணைத்துள்ளேன். இந்தக் காணிப் பிரச்சினை இன்று மிகப் பெர…

  8. இலங்கைப் போர்க் குற்றங்கள் குறித்த அனைத்துலக விசாரணைக்கு ஒஸ்ரேலியாவின் ஆதரவை அனைத்துலக மன்னிப்புச் சபை கோரியது இலங்கையில் புரியப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக விசாரணைக்கு ஒஸ்ரேலிய அரசு ஆதரவளிக்க வேண்டுமென அனைத்துலக மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் கோரிக்கை விடுத்தார். கான்பெராவில் (Canberra) இன்று ஒஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கெவின் றட்டைச்(Kevin Rudd) சந்தித்தபோது, அனைத்துலக மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் சலில் ஷெட்டி (Salil Shetty) இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். இலங்கை அரசு மேற்கொண்டுள்ள விசாரணை கேலிக்கூத்தானதெனவும், அதன் அறிக்கை எவ்வாறு இருக்குமென்பது தமக்குத் தெரியுமெனவும் ஷெட்டி பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார். போதுமான அளவு …

    • 0 replies
    • 529 views
  9. இறுதி யுத்தம் என்ற பெயரில் முள்ளி வாய்க்கால் பகுதியில் எம்மினப் பெண்கள்பாலியல் வக்கிரம் கொண்ட சிங்கள இராணுவக் காடையர்களால் கதறக் கதறக் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டது நீங்கள் அறிந்த ஒன்று. இவ்வாறான இராணுவக் காடேறிகள் முன்னிலையில் குத்தாட்டம் போடுகின்றனர் யாழ்ப்பாண இளம் குமரிகள். இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவில் இராணுவத்தின் ஏற்பாட்டில் சிறுவர் மகிழ்வரங்கு ஒன்று நடைபெற்றது. முழுக்க முழுக்க இராணுவ மயமாக்கப்பட்ட இம் மகிழ்வரங்கில் தமது பாடல்களுக்கு தமிழ் இளம் குமரிகளை ஆடவிட்டு அழகு பார்த்தது சிங்களம். http://youtu.be/7HMz5H1sMxc இவ்வாறு ஆடும் தமிழ்ப் பெண்களை இரகசியமான முறையில் தமது வீடியோக் கமராவினால் வித்தியாசமான பதிவுகளைச் …

  10. மாவீரர் குடும்பத்தவர்களிற்கு ஓர் அன்பான வேண்டுதலும் அழைப்பிதழும். Tuesday, October 11, 2011, 7:57 யேர்மனியில் தற்போதுள்ள சூழ்நிலைகாரணமாக நாம் தேசிய மாவீரர் நாளை 27-11-2011 ஞாயிறு அன்று FERMAN EVENT CENTER, Bonnenbroicher Str.11-13, 41238 MÜNCHENGLADBACH என்னும் முகவரியில் நினைவு வணக்க நிகழ்வு நடாத்த ஏற்பாடு செய்துள்ளோம். எனவே தங்களுடைய சகல விபரங்களையும் எம்மால் திரட்ட முடியவில்லை. அத்துடன் முள்ளிவாய்க்கால் பேரவலம்வரை அதிகளவான மாவீரர்களையும் இழந்துள்ளோம். அவர்களுடைய தகவல்கள் பற்றிய பதிவுகளும் எம்மால் முழுமையாக சேகரிக்க முடியவில்லை. ஆகவே தயவுகூர்ந்து மாவீரர் குடும்பங்களாகிய நீங்கள் உடனடியாக கீழ்காணும் தொலை பேசி அல்லது மின் அஞ்சல் மூலமாக எம்முடன் தொடர்புகளை மேற…

  11. அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சவேந்திர சில்வா தொடர்பில் அவரது வழக்கில் இருந்து இராஜதந்திரிகளுக்கான சலுகைகள் பாதுகாக்கும் என கூறியதாக சிறிலங்கா அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது. . இது தொடர்பில் அமெரிக்க சட்டவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பொதுவான உரிமை பற்றியே நீதிமன்றத்திர்கு அறிவித்ததே ஒழிய அந்த இராஜதந்திரிகளுக்கான உரிமைகள் சவேந்திர சில்வாவை பாதுகாக்கும் என கூறவில்லை மாறாக அப்படி கூறவும் அவர்களால் கூற முடியாது. அது தொடர்பில் நீதிமன்றம்தான் முடிவு எடுக்க வேண்டும். . ஆனால் நீதிமன்றங்கள் சவேந்திர சில்வா வழக்கு போன்றதொரு வழக்கை முன்னர் நடத்தியுள்ளது. அந்த வழக்கில் இராஜதந்திரிகளுக்கான சலுகைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட வெளி நாட்டு பிர…

    • 1 reply
    • 1.1k views
  12. தமிழக மீனவர் பிரச்னை: பிரதமருக்கு முதல்வர் கடிதம் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதல் குறித்து இந்திய அரசின் சார்பில் இலங்கை அரசுக்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை இந்திய அரசின் மீதான இலங்கை அரசின் செயலாக பார்க்க வேண்டும் என்றும், இதனை தேசிய பிரச்சனையாக கருத வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை குண்டர்…

  13. Oct 11, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்தாயகத்தில் காலூன்றதுடிக்கும் இந்தியா! வடக்கு கிழக்கில் தமிழ்மக்கள் வாழ்இடங்களில் பலஅபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் நோக்கில் நீண்டகாலஅடிப்படையில் பலஅபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது. வடக்கில் 79 பாடசாலைகளை புனரமைப்பதற்கு இந்தியா உதவியளிக்கவுள்ளது. 160 மில்லியன் சிறீலங்கா ரூபா செலவில் இப்புனரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மாதாய் இன்று தெரிவித்துள்ளார். 3 நாள் பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார செயலளார் கொழும்பிலுள்ள இந்திய செய்தியாளர்களை சந்தித்தபோதே இத்தகவலை தெரிவித்தார். வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த பாடசாலைகள் அமைந…

    • 13 replies
    • 799 views
  14. தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் இராணுவ முகாம்களை நிரந்தரமாக்குவோம்: ஜகத் ஜயசூரிய _ யுத்தத்தின் இறுதிக் காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது இலங்கை இராணுவம் ஒரு போதும் இனவாதமாக செயற்படவில்லை. சர்வதேச நாடுகளில் இருந்து கொண்டு போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களுக்கு உண்மைகளை நினைவுபடுத்திக் கொடுக்க வேண்டும் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை நிலையானவைகளாக மாற்றி படையினரின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இனி தேசத்திற்கு துரோகம் ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு பயங்கரவாத சக்தியினையும் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப…

    • 0 replies
    • 717 views
  15. [Tuesday, 2011-10-11 09:31:59] ஐக்கிய தேசியக் கட்சியால் இதுவரை ஆதிக்கம் செலுத்தப் பட்டு வந்த அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை அமோக வெற்றியீட்டியுள்ளது. இந்த அமோக வெற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அரசாங்கம் மீதும் மக்களால் வழங்கப்பட்ட உறுதியான நம்பிக்கையை தெளிவாக எடுத்துக் காட்டுகிறதென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார். அவர் மேலும் கூறியதாவது, கிராமங்கள் மட்டுமன்றி நகரங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வெற்றியடையச் செய்துள்ளன. கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டியிருந்த போதிலும் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களினூடான தோல்வியுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றும் பாரிய வெற்றியல்ல. …

  16. உயர்பாதுகாப்பு வலயத்தின் காங்கேசன்துறை முருகைக் கல் அகழ்வு மற்றும் வியாபாரத்தின் பின்னால் கோத்தாபய 11 அக்டோபர் 2011 மௌனம் காக்கிறார்கள் அரச அதிகாரிகள்:- குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்:- மக்கள் மீளக்குடியமர அனுமதி மறுக்கப்பட்டுள்ள போதும் உயர்பாதுகாப்பு வலயத்தின் காங்கேசன்துறைப் பகுதியில் தொடரும் முருகைகல் அகழ்வின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து மக்களிடையே சந்தேகங்கள் தொடர்கின்றது. அரச உயர்மட்டத்தை சேர்ந்த சிலரே அதன் பின்னணியிலிருப்பதாக கூறப்படுகின்ற நிலையிலேயே இச்சட்டவிரோத முருகைகல் அகழ்வு பற்றி பலரும் கண்டு கொள்ளாதிருக்கவே விரும்புவதாகவும் தெரியவருகின்றது. இம்முருகைக்கல் அகழ்வு சட்டவிரோதமானது எனவும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடு…

  17. Adam Werritty attends meeting with Sri Lankan president - video Footage shows Liam Fox's former flatmate meeting President Mahinda Rajapaksa with defence secretary in 2010 http://www.guardian.co.uk/politics/video/2011/oct/08/adam-werritty-meeting-sri-lankan Defence secretary Liam Fox's future hangs in the balance as the Observer reveals film and email evidence that appears to contradict prior claims about his friend Adam Werritty's involvement in meetings with overseas dignitaries and businessmen. The film shows that Fox's former flatmate, who was also best man at his wedding, met the president of Sri Lanka with Fox for a meeting in a London hotel last ye…

  18. பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸின் இலங்கை விஜயத்தின்போது, அவரின் நெருங்கிய நண்பர் ஒருவரும் பயணித்தமை தொடர்பாக அமைச்சர் லியாம் பொக்ஸ் நெருக்கடியில் சிக்கியுள்ளார். 34 வயதான அடம் வெரைட்டி என்பவர் லியாம்பொக்ஸுடன் ஒரே தொடர்மனையில் வசித்ததுடன் லியாம் பொக்ஸின் திருமணத்தின்போது மாப்பிள்ளைத் தோழராகவும் விளங்கியவர். அவர் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சை பயன்படுத்தி லியாம்பொக்ஸின் உத்தியோகபூர்வ இலங்கை விஜயத்தில் பங்குபற்றியமை குறித்து பிரித்தானிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. பிரித்தானிய இராணுவத்தினருக்கு உபகரணங்களை விற்கும் நிறுவமொன்றுடன் துபாயில் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற சந்திப்பொன்றில் தனது நண்பர் வெரைட்டியுடன் லியாம்பொக்ஸ் பங்குபற்றியதாகவும் அதில் பிரி…

  19. எனது நெருங்கிய உறவினர் ஒருவர், கொழும்பில் படித்தவர், என்பது தொடக்கத்தில் லண்டன் வந்து விட்டர்.. டெமொகிரேசியின் மீதான தீவிர ஆதரவாளர்/ மற்றும் தீவிர புலி எதிர்ப்பாளர்.. காரணம் புலிகள் டெமொகிறேசியை பின்பற்றவில்லையாம்.. ஆள் மேட்டுக்குடி டைப்.. தமிழர்கள் எண்டால் இளக்காரம்.. லண்டனில் உள்ள சிங்களவர்களுடந்தான் நட்பு.. கேட்டால் அநேக தமிழர்கள் பிந்தங்கிய மனப்பான்மையை கொண்டவர்களாம்.. முட்டாளகளாம்.. இவர்களுடன் பழகுவது அனாவசிய தொந்தரவு, என்பார்.. ( இதி உண்மை இருந்தாலும்.. அநேக தமிழர்கள் என்பது பிழை.. அரைவாசிக்கு சற்று அதிகமானதமிழர்களே மேற்படி கட்டகரிக்குள் வரக்குடியவர்கள்.. சொல்லவந்த கதை என்ன வெண்டா.. குறிப்பிடவரின் தாய்க்கு கொழும்புத்துறையில் பெரிய காணிகள் இருக்கு.. அது கொடிக்கனக…

  20. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மத்தாய்க்கும் தமிழ்த் தரப்புக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று பகல் 12 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. சுமார் 45நிமிட நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி,புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் தி.சிறீதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாயுடன் இந்திய அதிகாரிகளும் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா பிரதி உயர்ஸ்தானிகர் குமரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது,வடக்கு கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் ஒவ்வொரு சிவில் நிர்வாக அலுவல்களிலும் இரா…

  21. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ஓமடியாமடு கிராமத்தில் தற்போது மகாவலி அபிவிருத்தித்திட்ட பூமி வழங்கல் என்ற வகையில் அப்பகுதிக்கு வந்துள்ள சிங்கள அதிகாரி ஒருவர் 30 சிங்கள குடும்பங்களை அக்கிராமத்தில் குடியேற்றியுள்ளார். இக்குடியேற்றம் சார்பாக அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் குறித்த அதிகாரியிடம் தமிழ் பகுதியின் நடுவில் இவ்வாறு குடியேற்ற வேண்டாம் என கூறியபோது உங்களுக்கு கஷ்ரமாக இருந்தால் நீங்கள் இப்பகுதியில் இருந்து வெளியேறுங்கள் என தமிழ் மக்களுக்கு அச்சிங்கள அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார். இவ்வேளை கடந்த சில காலமாக சிங்கள மக்களை தமிழ் பகுதியில் குடியேற்றும் வகையில் பல நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றது. இச்செயற்பாடானது. “வெந்த புண்ணில் வேல் நுழைப்பத…

  22. இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போலி போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உலகின் எந்தவொரு நீதிமன்றிலும் சாட்சியமளிக்க அஞ்சப் போவதில்லை. என முரளிதரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, மேஜர் ஜெனரல் சாவேந்திரா சில்வா, மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் ஆகியோருக்கு எதிராக விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதி ரமேஸின் மனைவி வத்சலாதேவி சுமத்தியுள்ள போலிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மையான தரவுகளை சர்வதேச நீதிமன்றங்களில் வெளிப்படுத்தத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். வத்சலாதேவி தென் ஆபிரிக்காவில் இல்லை எனவும் அவர் லண்டனில் இருக்கின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த சகல வழக்குகளின் பின்னணியிலும் ருத்ரகுமாரன் செயற்பட்டு வருகின்றார். தமிழீழ விடு…

  23. கிழக்கு மக்களின் காணிகளுக்கும் பாதுகாப்பில்லை! அமைச்சர் முரளிதரன் காணிகளை பலவந்தமாக கைப்பற்றி வருகிறார்! பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பில் உள்ள காணிகளை பலவந்தமாக கைப்பற்றி வருவதாக கூறப்படுகிறது. இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேசங்களில், புல்டோசர்களை பயன்படுத்தி, பல ஏக்கர் காணிகளை பிரதியமைச்சர் முரளிதரன் சுத்தம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மட்டக்களப்பிற்கு தெற்கில் உள்ள மருத்துவ குணங்கொண்ட பெறுதிமிக்க செடிகளை கொண்ட காணிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. இந்த பிரதேசத்திற்குள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிரதியமைச்சர் கைப்பற்றியுள்ள காணிகளின் சுற்றுலா விடுதிகள் மற்றும் சு…

  24. கொலன்னாவையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர மற்றும் அவரது உதவியாளர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்ததாக எமது செய்தியாளர் கூறினார். http://www.vanakkamnet.com/died/ துமிந்த சில்வா மீது துப்பாக்கிச் சூடு: வைத்தியசாலையில் அனுமதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் 10 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.