ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143329 topics in this forum
-
சுழிபுரத்தில் சந்தேகத்திற்கு இடமான சிங்கள முதியவர் Friday, September 2, 2011, 10:11 சுழிபுரம் வறுத் தோலைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருவரைக் கலைத்துப் பிடித்து மக்கள் அவரை வட்டுக்கோட்டைப் பொலிஸ்நிலையத்தில் நேற்று ஒப்படைத்துள்ளனர். அந்த நபர் சித்த சுவாதீனம் அற்றவர் எனப் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்ட போதும் வலிமேற்கு பிரதேசசபையின் தலைவர் அந்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதை அடுத்து பொலிஸார் குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலை செய்யவுள்ளதாகத் தெரிவித்தனர்.சுழிபுரம் வறுத்தோலை பகுதியில் நேற்று மாலை சந்தேகத்துக்கிடமான முறையில் நபர் ஒருவர் நடமாடியுள்ளார். மக்கள் அவரை அணுகி விசாரிக்க முற்பட்டபோது எந்தவித பதிலையும் அவர் தெரி…
-
- 3 replies
- 645 views
-
-
வன்னி போரின் இறுதிப்பகுதியில் சிறிலங்காப்படையினரால் கைது செய்யப்பட்ட 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளில் மறுவாழ்வளிக்கப்பட்டு இன்னமும் விடுதலை செய்யப்படாது உள்ளவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் டோனர் தெரிவித்துள்ளார். . வாஷிங்டன் ஊடகவியளார்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். . மேலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட தீர்மானத்துக்கும் வரவேற்பளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். . இதேவேளை, அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டமையானது இலங்கை வாழ் மக்களுக்கு சாதாரண வாழ்க்கையை சிறப்புற உணர்ந்து கொள்ள உதவும் என அவர் குறிப்பிட்டுள்ள…
-
- 0 replies
- 782 views
-
-
வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் சிறிலங்கா படையினர் யுத்தக் குற்ங்களில் ஈடுபடவில்லை என்று கூறி பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க திடீர் பல்டி அடித்துள்ளார். . இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சிறிலங்கா படை தரப்பைச் சேர்ந்த சில சிப்பாய்கள் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் வெளிப்படையாகக் கூறி 24 மணித்தியாலயம் கழிவதற்கு முன்னரே இவ்வாறு பல்டி அடித்து அறிக்கை விட்டுள்ளார். . சிறிலங்கா இராணுவத்தின் அதிகாரிகள் மட்டத்தைச் சேர்ந்த சிலர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராஜீவ விஜேசிங்க தெரிவித்திருந்தார் என இந்திய ஊடகம…
-
- 0 replies
- 592 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போரில் தமது படைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன என்பதை சிறீலங்கா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவின் NDTV தொலைக்காட்சிக்கு கருத்துரைத்த இன நல்லிணக்கத்திற்கான சிறீலங்கா அரச அதிபர் மஹிந்த ராஜபக்சவின் ஆலோசகர் பேராசிரியர் ரஜீவ வியசிங்க, இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார். போர் முடிவடைந்த இரண்டு வருடங்களின் பின்னர் சிறீலங்கா அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதையாவது ஒப்புக்கொண்டிருப்பதாக அனைத்துலக ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன. தமது படையினரில் சிலர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் எனவும், அவர்களுக்கு எதிராக அடுத்துவரும் மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதன்முறையாக, நேரடியாக சிறீலங்கா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளத…
-
- 1 reply
- 594 views
-
-
காணாமல் போன பன்னிரண்டாயிரம் பேர் குறித்து இன மதச் சார்பற்ற விசாரணை நடாத்துமாறு கோரிக்கை – 02 செப்டம்பர் 2011 இலங்கையில் காணாமல் போன பன்னிரண்டாயிரம் பேர் குறித்து இன மதச் சார்பற்ற விசாரணை ஒன்றை நடாத்துமாறு காணாமல் போனோரின் பெற்றோரும் உறவினர்களும் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். காணாமல் போனோர் குறித்த உலக தினத்தையிட்டு விடுத்துள்ள செய்தியிலேயே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். உலகில் அதிகம் காணாமல் போனவர்களின் பட்டியல் உள்ள நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இனத்தையோ மதத்தையோ பாராமல் எங்களுடைய பிள்ளைகளைக் கண்டு பிடிக்க உதவுங்கள் என்று தமிழ்த் தாய்மார்கள் காணாமல் போனோர் நினைவு தினமான ஓகஸ்ட் 30 அன்று கோரிக்கை வி…
-
- 1 reply
- 430 views
-
-
அமெரிக்க புலனாய்வு விமானம் கொழும்பில் தரையிறங்கியது? 02 செப்டம்பர் 2011 அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் இரகசிய விமானமொன்று கொழும்பில் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீவிரவாத சந்தேக நபர்களுடன் இந்த விமானம் இலங்கையைச் சென்றடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. கைது செய்யப்படும் தீவிரவாதிகளிடம் விசாரணை நடத்தும் போது அமெரிக்க உளவுப் பிரிவினர் இரகசிய விமானங்களைப் பயன்படுத்துவது வழமையாகும். நடைமுறைசார் விளக்கங்களைப் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு விமானங்களைப் பயன்படுத்தி சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்படுகின்றது. அந்த வகையில் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி அமெரிக்க உளவுப் பிரிவினர், தீவிரவாத சந்தேக நபர்களுடன் விமானம் மூலம் கொழும்பில் தரையிறங…
-
- 0 replies
- 712 views
-
-
தமிழ்நாட்டு முகாம்களில் இருக்கின்ற இலங்கையரை அழைத்து வர ஏற்பாடு 9/2/2011 10:16:53 AM தமிழ்நாட்டில் உள்ள சுமார் 31 முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற பல்லாயிரக்கணக்கான மக்களை மீண்டும் பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வந்து மீள்குடியேற்றுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மீள்குடியேற்ற அமைச்சு மேற்கொண்டுவருகிறது. இப்போது யுத்தம் முடிவடைந்து நாட்டில் மீண்டும் அமைதியும் சமாதானமும் திரும்பிக்கொண்டிருப்பதனால் அவர்கள் இலங்கை திரும்பி தங்கள் உறவுகளுடன் ஒன்றிணைந்து வாழ இப்போது அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். தமிழ் நாட்டு முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களை மீண்டும் இங்கு அழைத்து வருவதற்கான ஒழுங்குகளை மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் உத…
-
- 0 replies
- 380 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கைமனித உரிமை மீறல்கள் குறித்து முதற்கட்ட விவாதம்! Published on September 2, 2011-4:08 am No Comments ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மீதான சபை அமர்வின்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து முதற்கட்டமான விவாதம் இடம்பெறவேண்டுமென அமெரிக்கா, பிரிட்டன் உட்பட்ட நாடுகள் நேற்றைய தினம் இராஜதந்திர ரீதியிலான வலியுறுத்தல்களை மீண்டும் விடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் மீதான சபைக் கூட்டத்தில் விசேட அறிக்கையயான்றை சமர்ப்பிப்பதற்கு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க ஆகியோர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதேசமயம், தாரு…
-
- 0 replies
- 476 views
-
-
Sep 2, 2011 / பகுதி: செய்தி / இலங்கை குழு 8ல் ஜெனீவா செல்கிறது - 12ல் மஹிந்த விசேட உரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை குழு எதிர்வரும் 8ம் திகதி ஜெனீவா நோக்கி செல்லவுள்ளது. நிமல் சிறிபால டி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்த சமரசிங்க ஆகிய அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் குறித்த குழுவில் அடங்குகின்றனர். இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸும் ஜெனீவா செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலின் 18வது அமர்வு எதிர்வரும் 12ம் திகதி தொடக்கம் 30ம் திகதிவரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் …
-
- 0 replies
- 401 views
-
-
08.09.11 ஹாட் டாபிக் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை வரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தூக்கில் போடக் கூடாது என தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம், தீக்குளிப்புப் போராட்டம் என அனல் பறக்கிறது. அதிலும், காஞ்சிபுரத்தில் செங்கொடி என்ற இளம்பெண் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தீக்குளித்து இறந்த சம்பவம் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் ஆவேசத்தைக் கிளப்பியிருக்கிறது. போராட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க சட்டரீதியான வழிகளைக் கையாண்டனர் பழ.நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்டவர்கள். நீண்ட ஆலோ…
-
- 3 replies
- 1.4k views
-
-
மகிந்தரின் புதல்வர் நாமல் இராஜபக்ஷவின் சுவிஸ் வங்கி கணக்கில் 2000 மில்லியன் டொலர்கள் Thursday, September 1, 2011, 19:03 போர்க்குற்றவாழி,சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் பல்வேறு நிறுவனங்களையும் அமைப்புகளை நடத்தி வருபவருமான நாமல் ராஜபக்ஷவின் சுவிஸ் வங்கிக் கணக்கில் இரண்டாயிரம் மில்லியன் டாலர்கள் அளவில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. அரச சொத்துகளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணமும் மற்றும் கப்பம்;அரச நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பணமுமாகவே இவ்வாறு சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது. http://www.tamilthai.com/?p=25660
-
- 9 replies
- 1.8k views
-
-
சிங்களவனுக்குச் சொந்தமான பேருந்திற்கு கல்லெறிந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த எங்கள் வீட்டு ஆண்களை இழுத்துச் சென்று இராணுவத்தினரும் பொலிஸாரும் வீதியில் போட்டு அடித்தனர் என கொக்குவில் பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொக்குவில் பிரதேசத்தில் நேற்று இரவு 8.30மணியளவில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் இருந்துள்ளது. அதனை அவதானித்த மக்கள் சிலர் மின்னொளிகளைக் கொண்டு தேடியபோது மதிலில் இருந்து மர்ம மனிதனொருவன் பாய்ந்து ஓடியுள்ளான். ஓடியவன் நேராக வீதியில் நின்ற சிங்களவனுக்குச் சொந்தமான பேருந்தினுடாகச் சென்று மறைந்திருக்கின்றான். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் குறித்த பேருந்தின் மீது கல்லெறிந்துள்ளனர். இதனால் குறித்த பேருந்து அங்கிருந்து …
-
- 1 reply
- 1.2k views
-
-
ஐயா! யாழ்ப்பாணத்தில் என்ன நடக்குது பொழுது சாய்ந்தால் மர்ம மனிதனின் பயம். விடிந்தால்; மர்ம மனிதன், பெண் கடத்தல், சிறுமியைக் காணவில்லை இப்படியான திகில் சம்பவங்கள். ஐயா! யாழ்ப்பாணத்தில் இப்போது என்ன தான் நடக்கின்றது எனத் தெரியாமல் உள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பயப்பீதியில் உறைந்து போயிருக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெளனமாக இருக்கின்றார்கள். இதை நாம் கூறினால் கூட்டமைப்புக்கு எதிர் என்று சொல்வார்கள். ஐயா! யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற சம்பவங்களை ஆராய்ந்து பார்க்கும் போது அவசரகாலச்சட்டத்தை நீடிக்கும் எண்ணத்துடன் சம்பந்தப்பட்டதென்று கூறமுடியாது. அப்படியானால் இவை ஏன்? என்று தீர ஆராய்ந்தால், உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்க…
-
- 1 reply
- 1.5k views
-
-
யாழ்ப்பாணம், கோண்டாவில் பிரதேசத்தில் வைத்து நேற்று மாலை மக்களால் பிடித்துக்கொடுக்கபப்ட்ட மர்ம நபர், ஓர் 17 வயது சிங்கள இளைஞர். இவர் பெண்களின் மீது மோகம் கொண்ட மன நோயாளி என மருத்துவ அறிக்கை தெரிவிப்பதாக கிளிநொச்சி மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரும் யாழ். பதில் பொலிஸ்மா அதிபருமான நீல் தலுவத்த சோடிப்பு செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார். . மேற்படி நபர் தீவிர பொலிஸ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர் ஒரு மன நோயாளியென தெரியவந்ததாக இந்த சோடிப்பு வர்ணனை மேலும் கூறுகின்றது. . இந்த மர்மநபர் கஹவத்தை, வெல்லந்துர பிரதேசத்தைச் சேர்ந்த தனஞ்சய (வயது 17) என்பவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் இவ…
-
- 5 replies
- 1.1k views
-
-
செப்டம்பர் மாதம் சிறிலங்கா அரசாங்கமானது சில இராணுவ அதிகாரிகள் மீது போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன. இது தொடர்பில் இந்திய ஊடகக்ங்களும் குறிப்பிட்டுள்லன.இது ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் சபை தமக்கு எதிரான மனுக்களை சமர்ப்பிப்பதனை தடுக்கும் நாடகங்களில் ஒன்றாக இருக்கும் என கூறபப்டுகின்றது. . ஏற்கனவே சில இராணுவ சிப்பாய்களும் , அதிகாரிகளும் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் பொன்சேகாவுக்கும் எதிரணிகளுக்கும் ஆதரவான ஆட்களாகவும் இருக்கலாம். அல்லது ஏற்கனவே இராணுவத்தை விட்டு ஓடி வெளி நாட்டுக்குச்சென்றவர்களாகவும் இருக்கலாம். ஈழநாதம்
-
- 7 replies
- 1.4k views
-
-
மாந்தை மேற்கு பிரதேசச்செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டான்குளம் வீதி ஆக்காட்டி வெளி கிராமத்தில் நேற்று புதன் கிழமை இரவு 9.30 மணியளவில் கடை உரிமையாளர் ஒருவர் தனது கடைக்குள்ளேயே வைத்து இனம் தெரியாத நபர்களினால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் ஆக்காட்டி வெளி கிராமத்தில் வசித்து வரும் குடும்பஸ்தரான கனகரத்தினம் மகேந்திரன் (வயது-42) என விடத்தல் தீவு பொலிஸார் தெரியவித்துள்ளனர். ஆண்டான்குளம் வீதி ஆக்காட்டி வெளி கிராமத்தில் வசித்து வரும் குடும்பஸ்தரான கனகரத்தினம் மகேந்திரன் என்பவர் நேற்று இரவு 9 மணியளவில் தனது கடையில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று இரவு உணவை உண்டு விட்டு மீண்டும் இரவு 9.30 மணியளவில் தனது கடையில் ப…
-
- 0 replies
- 549 views
-
-
யாழ்.குருநகரில் மர்ம மனிதன் ஒருவர் மக்களால் பிடிக்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து அந்தப் பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை பதட்டமான சூழல் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சற்று முன்னர் அந்தப் பகுதியில் மர்ம மனிதர் அடாவடி நடவடிக்கையில் ஈடுபட முற்பட்டதை அடுத்து அவரை மக்கள் மடக்கிப்பிடித்துக் கட்டியபொழுது அங்கு சென்ற இராணுவத்தினர் குறித்த நபரை மக்களிடம் இருந்து மீட்டுச் சென்றிருப்பதாக கிராமத்தில் தகவல் பரவியது. தகவல் பரவியதை அடுத்து மக்கள் வீதிகளில் திரண்டிருக்கின்றனர். நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அங்கு பதட்டமான சூழல் நிலவுவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் மர்ம மனிதன் பிடிப…
-
- 2 replies
- 1.4k views
-
-
01 செப்டம்பர் 2011 முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர். வடக்கு கிழக்கு மாகாணங்கள் பூராவும் குறிப்பாக தற்போது யாழ்ப்பாணக் குடாநாட்டில் மர்ம மனிதர்கள் பற்றிய பயத்தில் மக்கள் ஒவ்வோர் இரவும் பயந்து நடுங்கி வாழ வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.இரவில் ஆண்கள் நித்திரை முழித்து தமது பெண்டிர் பிள்ளைகளைப் பாதுகாப்பதில் ஈடுபட வேண்டியுள்ளது. பெண்கள் எந்த நேரத்தில் மர்ம மனிதர்கள் தங்கள் வீடுகளுக்கும் வந்துவிடுவார்களோ என்று பயந்து பயந்தே இரவுகளைக் கழிக்க வேண்டியவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். மர்ம மனிதர்கள் பயத்தில் இரவில் நித்திரை முழிப்பதனால் அடுத்த நாள் அவர்கள் தமது வேலைகளை ஒழுங்காகச் செய்யமுடியாது உள்ளனர். இவ்வாறு வடகிழக்கு மாகாண…
-
- 2 replies
- 799 views
-
-
'வீர வணக்கம் வீர வணக்கம்' என்ற கொட்டொலி முழங்க தோழர் செங்கொடியின் இறுதி வணக்க நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர். கட்சிப்பிரதிநிதிகள் இயக்க பிரதிநிதிகள் கலைஞர்கள் தோழர்கள் தொண்டர்கள் என பன்முகதளங்களில் இருந்து பெருந்திரளானவர்கள் பங்கெடுத்திருந்தனர். உணர்வெழுர்ச்சியுடன் இடம்பெற்ற இந்த இறுதிவணக்க நிகழ்வரங்கில் தோழர் செங்கொடியின் திருவுருவச்சிலையினை பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் திறந்து வைத்தார். ஏழு மணி நேர தொடர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட தோழர் செங்கொடியின் உடலம் அரங்கில் வைக்கப்பட்டது. பிரதிநிதிகளின் உணர்வெழுர்ச்சி உரைகளைத் தொடர்ந்து தோழா செங்கொடியின் உடலம் நல்லடக்கம் ச…
-
- 3 replies
- 1.2k views
-
-
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றுமாறு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம், ‘’இது மோசமான முன்னுதாரணம். இதற்காக உயர்நீதிமன்றத்தை நாடியது தவறானது. இது உச்சநீதிமன்றத்தால் கண்டனத்துக்குள்ளாகும்’’ என்று அவர் தெரிவித்துள்ளார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=60613
-
- 0 replies
- 761 views
-
-
முல்லைத்தீவு மணலாறில் சிங்களவர்களை குடியேற்றி உதவி அரசாங்க அதிபர் பிரிவை புதிதாக ஏற்படுத்த முயற்சி முல்லைத்தீவு மணலாறு பகுதியில் சிங்கள மக்களைப் பலவந்தமாகக் குடியேற்றி இப்பகுதிகளை உள்ளடக்கிய புதிய உதவி அரசாங்க அதிபர் பிரிவு ஒன்றினை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகின்றது. இந்த நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாகக் கைவிடவேண்டும் என்று வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களினூடாக அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வடக்குகிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் என்பது இதற்கு முன்னர் இந்த நாட்டை ஆட்சிசெய்த பல்வேறு ஆட்சியாளர்களினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தியஇ…
-
- 0 replies
- 516 views
-
-
போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு பயணம் செய்யவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியுயோர்க் நகருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது. . இவ் விஜயத்தின் போது, பல நாடுகளின் தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மகிந்த ஈடுபடுவார் என அறிவிக்க ப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பலர் உடன் செல்லவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. . இந்த முறையும் அமெரிக்க தமிழர்கள் மஹிந்தரை தப்ப விடுவார்களா? அல்லது சுடந்திரமாக அமெரிக்காவில் நடமாட விடுவார்களா? ஏற்கனவே மஹிந்தருக்கு வழக்கு ஒன்று உள்ளது. ஆனால் அந்த வழக்கு இராஜ தந்திர பயணங்களில் ஈடுபடுவோரை பாதிக்காது எனவும் கூறப்ப…
-
- 6 replies
- 1.3k views
-
-
சீன உளவுக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டு உளவுபார்த்தது:- 01 செப்டம்பர் 2011 சீன உளவுக் கப்பல் ஒன்று கொழும்புத்துறைமுகத்தில் நங்கூரமிட்டதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கடற்படையினரின் நடவடிக்கைகளை குறித்த உளவுக் கப்பல் கண்காணித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த சீன உளவுக் கப்பலில் 22 ஆய்வு கூடங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ராடார்களுக்கு சிறிய ரக மீன்பிடிப் படகினைப் போன்று தோற்றமளிக்கக் கூடிய வகையில் இந்த கப்பல் அமைந்துள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது. அந்தமான் தீவுப் பகுதியிலிருந்து இந்து சமுத்திரத்தின் வரைபடங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமான பல …
-
- 1 reply
- 918 views
-
-
வடக்கின் உயர்பாதுகாப்பு வலயம், படைமுகாம்களை அகற்றுவது குறித்து மன்மோகன் சிங்குக்கு த.தே.கூ. மனு இலங்கையின் வடபகுதியிலுள்ள படைமுகாம்களை அகற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரும் மனுவொன்றை இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கையளித்துள்ளது. இந்திய நாடாளுமன்ற லோக்சபா எம்.பிகள் சிலரின் உதவியுடன் இம்மனு கையளிக்கப்பட்டதாக த.தே.கூட்டமைப்பு பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கலாநிதி மன்மோகன் சிங்கிடம் இம்மனுவை கையளிப்பதற்காக இந்தியாவின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த லோக்சபா எம்.பிகளுடன் நாம் இணைந்து செயற்பட்டோம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுவதும் இம்ம…
-
- 2 replies
- 397 views
-
-
57வது படைப்பிரிவின் CDO பிரிவால் எரி குண்டு வீசி கொல்ல பட்ட போராளிகள் புதிய போர்குற்ற ஆதாரம் (Photo in) Thursday, September 1, 2011, 10:44 சிங்கள பேரினவாதம் தமிழர் தாயக பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன்பாரிய இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டது .இதன் போது இறுதி பாதுகாப்பு வலயம் என அழைக்க பட்ட பகுதிகளிற்குள் தங்கி இருந்த மக்களையும் போராளிகளையும் கைது செய்து கொன்று குவித்தது . இவ்வாறாக போராளிகள் குழு ஒரு கொட்டகைக்குள் பாதுகாப்பு தேடி வாழ்ந்த வேளை அவர்கள் மீது நச்சு எறிகுண்டுகளை வீசி கொன்று அழித்துள்ளது. இந்த குண்டு வீழ்ந்து வெடித்த ஐநூறு மீட்டருக்கு உட்பட்ட பகுதிகள் எங்கும் புகை மண்டலமாய் காட்சி அளிப்பதுடன் அதற்குள் தங்கி இருந்தவர்கள் அனைவரும் மூச்…
-
- 3 replies
- 1.2k views
-