ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
[Wednesday, 2011-08-24 12:17:36] இந்தியாவின் ஒத்துழைப்பின்றி யுத்தத்தில் வெற்றியீட்டியிருக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாகவும், இந்தியாவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மிகவும் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகத் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நாட்டின் சகல அரசியல்வாதிகளும் இந்தியாவுடன் தொடர்புகளைப் பேணி வருவதாகக் குஹறிப்பிட்டுள்ளார். த…
-
- 0 replies
- 400 views
-
-
கடந்த 17ஆம் திகதி புதன்கிழமை சுழிபுரப் பகுதியில் காணாமற்போன 8 வயதுச் சிறுமியின் சடலம் சுழிபுரம் மத்தியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து ஏழுநாள்களின் பின்னர் நேற்று மீட்கப்பட்டுள்ளது. சுழிபுரம் பாண்டாவெட்டை காட்டுப்புலம் மகா வித்தியாலயத்தில் கற்கும் கிருஷ்ணமூர்த்தி சாலினி என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சிறுமி காணாமற்போனது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த சிறுமியின் சடலம் அவரின் வீட்டில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத வீட்டு வளவில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.மாடு மேய்க்கச் சென்ற ஒருவர் கொடுத்த தகவலையடுத்தே இந்தச் சடலம் குறித்த விடயம் தெ…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒரு தமிழ் அமைப்பு நல்லதைச் செய்தால் அதனை மற்றைய தமிழ் அமைப்புக்கள் மனதார ஏற்று அந்த அமைப்புக்கு ஆதரவு வழங்கும் மனப்பாd;மையை வளர்த்தால் தான் தமிழ்ச்சமுதாயம் தனது குறிக்கோளை அடைய முடியுமென கனடியத் தமிழ்க் காங்கிஸின் இயக்குனர்களில் ஒருவரான டாக்டர் சாந்தகுமார் மானஈட்டு வழக்கு சம்பந்தமான நிகழ்வில் பேசும்போது தெரிவித்தார். கனடியத் தமிழ்க் காங்கிரஸின் புலம்பெயர்ந்த தமிழர்களிற்கு எதிராக கடுமையான தொனியில் செயற்பட்டு ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் பயங்கரவாதிகள் என அடையாளமிட முனையும் றோகான் குணவர்த்தன என்ற சிங்கள இனவாதிக்கு எதிராக மான நஸ்ட ஈடு கோரி தொடரப்பட்ட வழக்குச் சம்பந்தமாக வலுச் சேர்க்கும் நிகழ்வு சனிக்கிழமை ரொறன்றோவில் இடம்பெற்ற போதே மேற்படி கருத்தை டாக்டர் சாந்தகுமா…
-
- 2 replies
- 529 views
-
-
நாவாந்துறையில் படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இரவு ஏற்பட்ட மோதலை அடுத்து, கைதானோரில் 102 பேர் வைத்தியசாலையில் நேற்றுப் பகலே சேர்ப்பு படங்கள் இணைப்பு யாழ்ப்பாணம் நகரை அண்டிய நாவாந்துறையில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய சிலரால் நேற்றுமுன்தினம் இரவு பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. மேலதிக படையினரும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டு கூட்டம் கூடிய மக்கள் அடித்து விரட்டப்பட்டனர். இதன்போது காயமடைந்த ஒரு பெண் மற்றும் பொலிஸார் ஒருவர் ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால், நேற்றுக் காலை 10 மணியளவில் நீதிமன்ற உத்தரவை அடுத்து சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் யாழ…
-
- 0 replies
- 683 views
-
-
இந்தியா அல்லது அமெரிக்காவினை மகிழ்ச்சியடைச் செய்யும் நோக்கில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட மாட்டாது இந்தியா அல்லது அமெரிக்காவினை மகிழ்ச்சியடைச் செய்யும் நோக்கில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட மாட்டாது எனவும், எந்த நேரத்தில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதனை ஜனாதிபதி தீர்மானிப்பார் என கோத்தா சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிப்பட்டதனைத் தொடர்ந்து அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கையில் அவசரகாலச் சட்டம் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக சில மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. குறிப்பாக மாற்றுக் கொள்கையுடைய எதிர்க்கட்சியினரை அடக்குமுறைக்க…
-
- 2 replies
- 821 views
-
-
இன்று நல்லூர் முருகப் பெருமக் திருக்கைலைய வாகனத்தில் வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய காட்சிகள் மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும் நல்லூர் தேர்த்திருவிழா தீர்த்தத்திருவிழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது மேலதிக புகைப்படங்களை எமது புகைப்படப் பிரிவினில் பார்வையிடலாம்
-
- 0 replies
- 618 views
-
-
[Tuesday, 2011-08-23 22:59:02] புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், கனேடிய நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான மாண்புமிகு 'ஜாக் லேட்டன்' அவர்கள் மறைந்த செய்தி கேட்டு நாங்கள் மிகுந்த துயரமும் அதிர்ச்சியும் அடைகின்றோம். புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள் சார்பிலும், இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களின் சார்பிலும் நாங்கள் அவரது துணைவியார் திருமதி 'ஒலிவியா சவ்' அவர்களுக்கும், அவர்களது பிள்ளைகளுக்கும் ஏனைய குடும்ப உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் கவலையும் தெரிவித்துக் கொள்கின்றோம். மறைந்த 'ஜாக் லேட்டன்'அவர்கள் தமிழ் மக்களின் நல்லதோர் நண்பனாக இருந்து வந்துள்ளார். நீண்ட காலமாக , இலங்கைத் தீவில் நீதியை நிலைநாட்டுவதற்காகவும், தமிழர்கள் அங்கு தன…
-
- 3 replies
- 734 views
-
-
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை நிறுத்தக் கோரும் போராட்டங்கள் தமிழகமெங்கும் தீவிரமடைந்துவருகின்றன. இந்நிலையில், "மரண தண்டைக்கு எதிராக குரல் கொடுப்போம்" என பிரான்ஸ் வாழ் தமிழ்மக்களுக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்க மக்கள் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். மூவரது மரண தண்டனை தொடர்பில், பிரான்சில் உள்ள Amnesty International - France / Ensemble Contre la Peine de Mort / Fiacat.fr / Acat France உட்பட பல மரண தண்டனைக்கு எதிரான அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் கவனத்துக்கு நா.த.அரசாங்கத்தினால் நேரடியாக கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதோடு, இவ்விவகாரம் தொடர்பில் பரந்துபட்ட கூட்டுவேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனொரு அங்கமாக Amnesty…
-
- 0 replies
- 351 views
-
-
வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதிக்குள் நுழைந்த மகிந்த அரசால் உருவாக்கப்பட்ட மர்ம மனிதன் என்ற பெயரில் பெண்கள் உட்பட அனைவரையும் அச்சுறுத்திவரும் ராணுவத்தினர் இன்றும் வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதிக்குள் நுழைந்து கலகத்தை உண்டுபண்ண முற்பட்ட போது அந்தப்பகுதி இளைஞர்களால் இவர்கள் அடையாளம் காணப்பட்டு விரட்டி பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் இரு மர்ம மனிதர்களும் இருபகுதியூடாக ஊடறுத்து தப்பிக்க முயன்ற போது உடுப்பிட்டி வாழ் இளைஞர்கள் அவர்களில் ஒருவரை மட்டுமே விரட்டிப்பிடிக்க எத்தனித்திருந்த போதும் அது கைகூடவில்லை என்று அங்கிருந்து ஈழதேசம் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இன்று இரவு நடந்துள்ளது.இது தொடர்பாக வல்வெட்டித்துறை மக்கள் ஈழதேசம் இணைய செய்தியாளருக்கு தெரிவ…
-
- 0 replies
- 1k views
-
-
யாழ்.மல்லாகத்தில் மர்மமனிதர்கள் மக்கள் வாழிடங்களுக்குள் புகுந்தமையால் தற்போது பதட்ட நிலை ஏற்பட்டிருப்பதாக எமது யாழ்.பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மல்லாகம் கோணாபுலம் முகாம், நீதவான் முகாம் ஆகிய பகுதிகளில் கறுத்த உடை அணிந்த மர்ம மனிதர்கள் இருவர் அத்துமீறி நுழைந்திருக்கின்றனர். இவர்களைக் கண்ணுற்ற மக்கள் கூக்குரலிட்டதும் மக்கள் திரண்டு அவர்களைத் துரத்திச் சென்றிருக்கின்றனர். சம்பவம் இடம்பெற்றதை அறிந்தவுடன் பெருமளவான இராணுவத்தினர் கொட்டன்களுடன் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டிருப்பதாகவும், மக்களை கலைந்து செல்லுமாறு மிரட்டிவருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எமது செய்தியாளர் எமக்குத் தெரிவிக்கும்…
-
- 0 replies
- 774 views
-
-
நெடுங்கேணி ஒலுமடுக்கிராமத்தில் மர்ம மனிதர்கள் இருவர் வீட்டினுள் புகுந்தமையை அடுத்து அந்தக் கிராமத்தில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இது குறித்த செய்தி பதிவேற்றம் செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக நெடுங்கேணி ஒலுமடுக் கிராமத்தின் சனசமூக நிலையத்திற்கு முன்பாக உள்ள வீட்டினுள் ரீசேட், ஜம்பர் அணிந்த மர்ம நபர்கள் இருவர் அத்துமீறி நுழைந்திருக்கின்றனர். இவர்களை அவதானித்த வீட்டார் கூச்சலிட்டதை அடுத்து வீதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் அந்த வீட்டினை நோக்கி மோட்டார் சைக்கிளின் வெளிச்சத்தினைப் பாய்ச்சியிருக்கின்றார். இதனை அடுத்து மர்ம மனிதர்கள் இருவரும் அ…
-
- 0 replies
- 876 views
-
-
[Tuesday, 2011-08-23 23:03:50] யாழ் நாவாந்துறை பிரதேசத்தில் நேற்றிரவு மர்ம மனிதர்கள் வந்ததாக ஏற்பட்ட பதற்ற சூழலால் தாக்குதலுக்குள்ளானவர்களை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று (23) யாழ் மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டார். நேற்றைய தினம் இரவு நாவாந்துறை பகுதியில் மர்ம மனிதர்கள் நடமாடியதாகவும் அவர்களை துரத்திச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சுமார் 102 பேர் படையினரால் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் 98 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் இன்று நீதிமன்ற உத்தரவினை அடுத்து சிகிச்சைகளுக்காக யாழ் மருத்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஊழல் மோசடிகளுக்கு எதிராக இந்தியாவில் ஹன்னா ஹசாரே ஆரம்பித்துள்ள அறப் போராட்டங்களைப் போன்று இலங்கையிலும் மக்கள் போராட்டங்களை ஆரம்பிக்கும் காலம் வந்து விட்டது என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். ஐ.தே.க. இன்று சிங்கள பௌத்த இனவாதக் கட்சியாக மாறி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில், வன்னியில் மட்டுமல்ல இன்று தென் பகுதி மக்களும் பட்டினியின் கோரத்தை அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர். அன்று யுத்தத்தால் தமிழ் மக்களை கொலை செய்த அரசாங்கம் இன்று வன்னி மக்களுக்கு வழங்கிய உலர் உணவுப் பொருட்களை நிறுத்தி அம் மக்களை பட்டினியால் கொலை செய்ய திட்டமிடுகிறது. ஆனால் இந்தியாவும் அமெரிக்…
-
- 0 replies
- 537 views
-
-
சிறிலங்கா அற்பதாயிரம் ஏக்கர் கா|ணிகளை அமெரிக்காவிற்கு நீண்டகால குத்தகைக்கு வாழைப்பழ செய்கைக்காக கொடுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தினை எதுவித வெளிப்படைத்தன்மை இன்றி அமெரிக்கா செய்துள்லதாக இலங்கையின் சூழலியல் காப்பாளர் பியால் பராக்கிரம குறிப்பிட்டுள்ளார். . இந்த காணிகள் அனைத்தும் இலங்கையின் இயற்கைச்சூழலை பாதுகாக்கும் காடுகள் ஆகும். இதுவரை 60 ஆயிரம் ஏக்கர் காடுகள் வாழைப்பழச்செய்கைக்காக அமெரிக்க கம்பனி ஒன்றினால் அழிக்கபப்ட்டு பயிர்ச்செய்கைக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. . இந்த காணித்துண்டங்களில் 15 ஆயிரம் ஏக்கர் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் நிலங்களாகும். . இனி அமெரிக்கா எப்படி தமிழர்கள் உரிமை பற்றியும் போர்க்குற்றம் பற்றியும் சிங்களத்துடன் இறுக்கம் காட்டும்?? htt…
-
- 9 replies
- 3.8k views
-
-
இந்திய உளவுத்துறையின் வலையில் சிக்குமா நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் .Monday, August 22, 2011, 10:21 இந்திய உளவுத்துறையின் கைபொம்மைகள் வருகின்ற மாதம் 30 ஆம் திகதி ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர் இதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி ஒருவர் தொடக்கி வைக்கிறார் என்று இந்திய உளவுத்துறையின் கைபொம்மைகள் அறிவித்துள்ளனர் . ஆனால் நாம் நாடுகடந்த தமிழீழ அரசாங்க தோழமைமைய உறுபினர்களை கேட்ட பொழுது எமக்கும் இந்த மாநாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டனர் . தற்போது புலத்தில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதி நிதிகளை தொடர்புகொண்டு நாம் நாம் தமிழர் இயக்க ஏற்பாட்டில் தான் நடத்துகின்றோம் நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்று ஒருவர் வேண்டுகோள…
-
- 9 replies
- 1.6k views
-
-
ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ’’இலங்கை தமிழர்கள் பிரச்சனையை என்னால் மட்டும்தான் தீர்த்து வைக்க முடியும். ஆனால் வைகோ, நெடுமாறன், சீமான் உள்ளிட்டவர்கள் தாங்கள் தோற்று விட்டதாக ஒப்புக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஒப்புக்கொண்டால் நான் இலங்கை அதிபரை சந்திப்பேன். இல்லையென்றால் நான் செய்த பிறகு இவர்கள் செய்ததாக கூறுவார்கள். ஏற்கனவே முல்லை பெரியாறு பிரச்சனையில் 6 ஆண்டுகள் வழக்கு நடத்தி நீர்மட்டத்தை உயர்த்த செய்தேன். ஆனால் இவர்கள் செய்ததாக சொல்லிக்கொண்டார்கள். எனவே இவர்கள் தோற்று விட்டதாக ஒப்புக்கொண்டால் நான் இலங்கை தமிழர்கள் பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன்’’ என்று http://www.nakkheera...ws.asp…
-
- 4 replies
- 810 views
-
-
பிரசுரித்தவர்: Sukkran August 23, 2011 இந்தியாவுடனான உறவுகளை இலங்கை பலப்படுத்த வேண்டும். விரும்பியோ, விரும்பாமலோ இந்தியாவின் புவியியல் கட்டுப் பாட்டுக்குள் இலங்கை உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று ஐ.நா.சபையின் ஆயுதபரிகரண விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவரும் இலங்கையின் மூத்த ராஜதந்திரியுமான ஜயந்த தனபால லக்பிம ஆங்கில வாரப் பத்திரிகைக்குத் தெரிவித்திருக்கின்றார். அவர் மேலும் கூறியதாவது: 20 மைல்களுக்கு அப்பால் உள்ள இந்தியாவை நாம் தூக்கி எறிந்து விட முடியாது. இந்தியாவுடனான உறவை புத்திசாலித்தனமான முறையில் இறுக்கமாக வைத்து வந்த ஜனாதிபதியிடமிருந்து 2009 இற்குப் பின்னர் அந்தப் புத்திசாலித்தனத்தைக் காணமுடியவில்லை. …
-
- 1 reply
- 487 views
-
-
http://www.yarl.com/files/110823_colombo_reporter.mp3
-
- 0 replies
- 598 views
-
-
http://www.yarl.com/files/110823_jaffna_report.mp3
-
- 0 replies
- 498 views
-
-
http://www.yarl.com/files/110823_ariyanethiran.mp3
-
- 0 replies
- 433 views
-
-
http://www.yarl.com/files/110823_piyasena.mp3
-
- 0 replies
- 511 views
-
-
http://www.yarl.com/files/110823_skandakumar.mp3
-
- 0 replies
- 459 views
-
-
கடந்த இரவு ஐந்து கிரிஸ் மர்ம நபர்கள் நாவாந்துறை மக்கள் குடியிருப்பில் உள் நுழைந்து திருட்ட முற்பட்டுள்ளனர் .இதை அடுத்து அவர்களை கண்ட மக்கள் குறித்த ஐவரையும் விரட்டி சென்று தாக்கியுள்ளனர் .அப்போது அங்கே புதிதாக அமைக்க பட்ட கடல் படை முகாமில் இருந்து வந்த ஜீப்பில் அவர்கள் ஏற்ற பட்டுபாதுகாப்பாக அழைத்து செல்ல முற்ப்பட்ட வேளையே அந்த ஜீப் வண்டியை மக்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தினர் . இதை அடுத்து அங்கு வரவளைக்க பட்ட நூற்றி ஐம்பது இராணுவத்தினர் மக்களை அடித்து துன்புறுத்தி நூற்றுக்கு மேற்பட்டவர்களைகைது செய்து சென்றுள்ளனர் . இராணுவத்தினர் தற்போது அந்த பகுதியினை சூனிய பகுதியாக அறிவித்துள்ளனர் .அத்துடன் அங்கு எவரும் தொலைபேசி அழைப்புக்கள் மேற்கொள்ள முடியாத படி தட…
-
- 1 reply
- 984 views
-
-
[Tuesday, 2011-08-23 11:59:32] கிழக்கிலும், புத்தளம், குருநாகல், கண்டி போன்ற பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். ரமழான் நோன்பை முன்னிட்டு இரவு நேரத்தொழுகையில் ஈடுபடும் முஸ்லிம்களின் நலன்கருதியே பாதுகாப்பை பலப்படுத்துமாறு அவர் உத்தரவிட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத் தரப்பு கூறியுள்ளது. முஸ்லிம் அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகளுடன் நேற்றையதினம் இது குறித்த பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கலந்துரையாடியுள்ளார். இன்று கிழக்கு பகுதியில் உள்ள பள்ளிவாசல்களின் நிர்வாக்கிகளுடன் சிறப்புக் கலந்தரையாடல் ஒன்றையும் அவர் நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்ற…
-
- 1 reply
- 360 views
-
-
23 ஆகஸ்ட் 2011 கிறிஸ் பேய் வாந்திகளுடன் பாதுகாப்புப் படையினருக்கு தொடர்பு கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படையினரே கிறிஸ் பேய்களாக மாற்றமடைந்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எதுவித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டத்தை கையிலெடுக்க எவருக்கும் அனுமதியில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். …
-
- 1 reply
- 447 views
-