Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இனவெறிப் படுகொலையை நிகழ்த்திய இலங்கை மீது விசாரணை கோரி டெல்லியில் வைகோ ஆர்ப்பாட்டம் டெல்லி: இனவெறி படுகொலையை இலங்கையில் அரங்கேற்றய அந்த நாட்டு அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும், இலங்கைக்கு ஆதரவு தரும் போக்கை அனைத்து நாடுகளும் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் நாடாளுமன்றம் அருகே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வைகோ தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்களும் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான மதிமுகவினரும் பெரும் திரளாக பங்கேற்றனர். மத்திய அரசு, அனைத்து நாடுகள் மன்றத்தில் சிங்கள அரசுக்கு தரும் ஆதரவு போக்கை நிறுத்திக் க…

  2. கூட்டமைப்பிற்கு கடைசி வாய்ப்பு தேர்வுக்குழு அமைத்து ஆறு மாதங்களில் தமிழர்களுக்கு தீர்வை தந்துவிடுவோம் என்று பசில் ராஜபக்ஷ கூறியிருக்கிறார். இந்தத் தடவை கண்டிப்பாக ஏமாற்றமாட்டோம் என்றும் கூறியிருக்கிறார். அறுபது ஆண்டுகளாக ஏமாற்றும் ஓர் இனவாத அரசு ஆறு மாதங்கள் அவகாசம் கேட்டிருக்கிறதென்றால் அந்த ஆறு மாதங்களை அகல்வித்துப் பார்க்க வேண்டியது கூட்டமைப்பின் கடமை. தற்போது சனல் 4 காணொளி ஏற்படுத்தி வரும் தாக்கம், அமெரிக்கா உட்பட மேலை நாடுகள் கொடுக்கும் அழுத்தம் யாவும் பலம் குன்றி சுரத்து கெட்டுப்போக இந்த ஆறுமாதங்கள் போதும் என்பதை கூட்டமைப்பு கருத்தில் எடுக்க வேண்டும். தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்பது தேவையில்லை இப்போது இருக்கும் உரிமைகளே போதுமானது என்று கோ…

    • 0 replies
    • 890 views
  3. இன்று காலை கோப்பாய் இராஜவீதி பொலிஸ் நிலையத்திற்கு சற்றுத் தொலைவில் உள்ள ஒரு வீதியில் பனையில் கயிறு போட்டுத் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பப் பெண் மற்றும் ஆணொருவரின் சடலமும் ஜோடியாக தொங்கிய நிலையில் காணப்படுகின்றது. மேலும் http://www.youtube.com/user/jaffnatv#p/u/0/xfyMx2rZv9c கோப்பாய் தெற்கு வெள்ளவாய்க்கால் பகுதியிலுள்ள தோட்டக் காணியொன்றில் வளைந்த பனை மரமொன்றில் ஆணொருவரினதும் பெண்ணொருவரினதும் சடலங்கள் தூக்கில் தொங்கியவாறு காணப்பட்ட நிலையிலேயே கோப்பாய் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உரும்பிராய் தெற்கு யோகபுரத்தைச் சேர்ந்த டிப்பர்ரக வாகன சாரதியான (வயது 43) என்பவரினதும் அதேயிடத்தைச் சேர்ந்த (வயது 24) என்பவரினதும் சடலங்களே தூக்கில் த…

    • 3 replies
    • 1.6k views
  4. நெஞ்சை வெடிக்க வைக்கும் வடபுலத்து கொடூரங்கள் போருக்குப் பின்பான பாதிப்புகள் பற்றிய கவலைகள் மீதியாக இருந்தாலும் அந்தப் பாதிப்புகளிலிருந்து மக்கள் சமூகத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. இப்போதெல்லாம் வடபுலத்தின் கலாசாரக் கோலங்கள், திகில் சம்பவங்கள் என அனைத்தும் நாம் எங்கே போகின்றோம் என்ற கேள்வியை எழுப்பவே செய்யும். யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினமும் அதற்கு முன்பும் நடந்த இரண்டு சம்பவங்கள் இங்கு நோக்குதற்குரியது. நேற்று முன்தினம், கோப்பாய் தெற்குப் பகுதியில் ஆண், பெண் என இருவர் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இருவரும் தற்கொலை செய்துகொண்டனரா? அல்லது கொலை செய்யப்பட்டனரா? என்பது விசாரணைக்குரிய விடயம். ஆனால் இருவரின…

    • 0 replies
    • 1.2k views
  5. கொழும்பு ரயில் பாதையில் வெளிநாட்டவரின் சடலம் மீட்பு! கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் பாதையில் இருந்து வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தலையில் காயங்களுடன் உயிரிழந்திருந்த இந்த நபரின் ஆடைகள் சற்று தூரத்தில் கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை அளுத்கமவிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த ரயிலின் சாரதி சடலத்தை கண்டு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார். குறித்த நபரின் மரணத்தில் ஏதேனும் மர்மம் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனினும் பிரேத பரிசோதனைகளுக்கு பிறகே மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியுமென தெரிவிக்கப்படுகிறது. http://www.eeladhesam.com/index.php?option=com_con…

  6. பூந்தோட்டம் முகாமில் நீர், மின்சார விநியோகம் நிறுத்தம்! அகதிகளை வெளியேறுமாறு அரசாங்கம் நிர்ப்பந்தம் வவுனியா பூந்தோட்டம் அகதிகள் முகாமின் நீர் விநியோகத்தையும் மின்சாரத்தையும் அரசாங்கம் நிறுத்தியுள்ளதாக பி.பி.சி சிங்கள சேவை செய்தி வெளியிட்டுள்ளது. யுத்தம் மூண்ட காலத்திலிருந்து, கடந்த 19 ஆண்டுகளாக இந்த அகதிகள் பூந்தோட்டம் முகாமில் வசித்து வருகின்றனர். மீள் குடியேறுவதற்குரிய எவ்வித வாழ்வாதாரங்களும் இல்லாத நிலையில் அங்கிருந்து வெளியேற இவர்கள் மறுத்து வருகிறார்கள். இங்கு தங்கியிருந்த 16000 அகதிகளில் பெரும்பாலானோர் வெளியேறிவிட்ட நிலையில், எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற 183 குடும்பங்களைச் சேர்ந்து 1163 பேர் தொடர்ந்தும் இந்த முகாமில் தங்கியுள்ளனர். 'மீள்குடியே…

    • 0 replies
    • 732 views
  7. 3 பேர் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் தங்களது வாழ்க்கை எந்த நொடியில் முடிவுக்கு வருமோ என்ற கவலையுடன் 20 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளனர். இது மிகவும் கொடுமையானது. எனவே 3 பேரின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்யும் முடிவை மறுஆய்வு செய்து அவர்களின் விடுதலைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=arti…

  8. கோத்தபாயா சாத்தியமற்றது என்கிறார்! பஷில் ராஜபக்ஷ நம்பிக்கை வைக்க வேண்டும் என்கிறார்! இவ்வாறான நிலையில் தெரிவுக்குழுவில் எவ்வாறு மக்கள் நம்பிக்கை வைக்கமுடியும்? கூட்டமைப்பு கேள்வி? [Friday, 2011-08-12 10:56:55] தமிழ் மக்களுக்கு கூடுதலான அதிகாரங்களை வழங்குவது சாத்தியமற்றது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ள நிலையில், பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என அமைச்சர் பஷில் ராஜபக்ஷ எவ்வாறு கோர முடியும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதா…

  9. நீங்களும் பதிவினை மேற்கொண்டு பாருங்கள் அப்போதுதான் உங்களுக்கும் விளங்கும். தமிழர்கள் கொழும்பிலும் பல பாகங்களிலும் எவ்வளவு சிரமத்துக்கு உள்ளானார்கள் என்று. . ஆம் இலங்கையில் இருந்து தமிழ் நாட்டிற்கு செல்லும் சிங்களவர்கள் தாம் தங்குமிடத்துக்கு அருகே உள்ள பொலிஸ் நிலையத்தில் தமது விபரங்களை வழங்க வேண்டும் என தமிழக பொலிஸ் கூறியுள்ளது. . பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கைகள் என தமிழக பொலிசார் கூறியுள்ளனர். http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE…

    • 2 replies
    • 1k views
  10. வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 12, 2011 மனித உரிமை மீறல் பிரச்னை தொடர்பாக சர்வதேச நெருக்கடி எழுந்தால் அதை எதிர்கொள்ள சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு உதவும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் தெரிவித்துள்ளார். மஹிந்த இராஜபக்‌ஷவிற்கு சீனப் பிரதமர் இந்த வாக்குறுதியை அளித்ததாக அவர் மேலும் கூறினார். போரில் மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபை பொருளாதார தடை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதுபோன்ற சூழ்நிலை உருவானால், சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்யும் என்று கூறப்படுகிறது. http://www.eelanatha...%AE%A4%E0%AE%BF

    • 5 replies
    • 1k views
  11. இன்று மாலை மகர யாளி வடிவத்தில் காட்சி தந்தான் நல்லைக் கந்தன். thx http://www.newjaffna.com/

    • 2 replies
    • 736 views
  12. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வீட்டை சுற்றுலாத்தலமாக்க இலங்கை அரசு முயற்சி வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 12, 2011, 13:20 கொழும்பு: முல்லைத்தீவில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற இலங்கை அரசு ஏற்பாடு செய்து வருகிறது என்று அந்நாட்டு தமிழ் இணையதளங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் செல்லும் வழியில் உள்ள காட்டுக்குள் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாகக் கூறப்படும் வீடு உள்ளது. வெளியில் இருந்து பார்த்தால் சாதாரணமாக காட்சியளிக்கும் அந்த வீட்டுக்குள் பல பதுங்குகுழிகள் உள்ளன. ஒவ்வொரு பதுங்குகுழிப் பாதைக்கும் இரும்புக் கதவுகள் உள்ளன. பிரபாகரன் க…

  13. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை நீக்க வேண்டுமென அவ்வமைப்பின் சார்பில் ஆஜரான நெதர்லாந்து சட்டத்தரணியொருவர் ஐரோப்பிய நீதிமன்றத்தை கோரியுள்ளார். எல்.ரி.ரி.யை ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இணைத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை ரத்துச் செய்ய வேண்டுமென சட்டத்தரணி விக்டர் கோப் கோரினார். எல்.ரி.ரி.ஈ. அமைப்பு மேற்படி தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டவாறு இனியும் இல்லை. தனது அரசியல் இலக்கை அடைவதற்கு இராணுவ தந்திரோபாயத்தை பயன்படுத்துவதில்லை என அவ்வமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது என அவர் கூறினார்.ஐரோப்பிய ஒன்றியத்தின் இத்தடை சட்டரீதியாக தவறானது எனவும் எல்.ரி.ரி.ஈ.யை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்துவது தமிழ் மக்களின் சுயநிர்…

  14. வீழ்வேனென்று நினைத்தாயோ? உயிரை விலையாகக் கொடுப்பது எளிதானதா என்ன? இதற்கு இணை என எதுவுமே இல்லை. தன் சொந்த மண்ணைவிட்டுப் பிரிய மாட்டேன் என்று, வைராக்கியமாக அந்த மண்ணுக்குள்ளே கடைசிக் கணம் வரை போரிட்டு நின்று மூச்சை அடக்கி, உயிரை நிறுத்திக்கொள்கிறது மாவீரம். மண் மீதான உரிமைக்காக, உயிரையும் விலையாகக் கொடுப்பேன் என்பவர்களுக்கு மட்டுமே, இந்த மாவீரம் சாத்தியம்! இதற்கு உலகில் எத்தனையோ முன் உதாரணங்கள் உண்டு என்றாலும், இந்த 21-ம் நூற்றாண்டில் மண்ணுக்காக உயிர்ஆயுதம் ஏந்திய வீரர் நிலம் முள்ளி வாய்க் கால் என்பதில் உடல் சிலிர்க்கிறது. இலங்கையின் கடற்கரைக் கிராமங்களில் ஒன்றாக இருந்த முள்ளி வாய்க்கால், 2008- மே 17-க்குப் பின், ஒரு தனித்த வரலாறாக நிமிர்ந்த…

  15. பேரறிவாளனின் கருணைமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரின் தாய் அற்புதம் அம்மா அவர்களுடன் ஒரு சந்திப்பு(Video in) Friday, August 12, 2011, 10:21 இந்தியா, உலகம், காணொளி ராஜீவ் கொலை வழக்கில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனைக் கைதியாக இருபத்தோரு ஆண்டுகள் நீதிக்காக காத்திருக்கும் திரு.பேரறிவாளனின் கருணைமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரின் தாய் அற்புதம் அம்மா அவர்களுடன் ஒரு சந்திப்பு-

  16. வீரகேசரி இணையம் 8/11/2011 8:21:03 PM சீனா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு கௌரவ கலாநிதிப் பட்டமொன்றை வழங்கியுள்ளது. சீனாவின் வெளிநாட்டு மொழிக் கற்கை நெறிகளுக்கான பல்கலைக்கழகமே இந்தக் கௌரவத்தை வழங்கியுள்ளது. இதற்கென இன்று அங்கு ஒரு விழா எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=33221

  17. காலமும் கருத்தும் : வென்றவனுக்கும் தெரியவில்லை தோற்றவனுக்கும் தெரியவில்லை.. August 11, 2011 இலங்கைத் தலைவர்களின் அவல நிலையை விளக்கும் கருத்துப்படமும் கட்டுரையும் சிறீலங்காவின் இனப்பிரச்சனைக்கு தீர்வு என்று எதுவும் கிடையாது. இப்போது இருப்பதே போதும், என்று பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கு பொருத்தமான பதில் ஒன்றை மு.கருணாநிதி வழங்கியுள்ளார். ஓர் இனத்தை ஒடுக்கு முறைக்குள் வைத்திருப்பவன் கூறும் கருத்தை, அவனால் ஒடுக்கப்பட்ட ஓர் இனம் கேட்க வேண்டும் என்று கருத முடியாது என்று தெரிவித்துள்ளார். ஆக கோத்தபாயவின் கருத்து தமிழருக்கு அவசியமற்ற கருத்தே. சிங்களத் தலைவர்கள் புலிகள் போர்க்களத்தில் இருந்தபோது ஒரு கருத்தும், அவர்கள் ப…

    • 3 replies
    • 1.3k views
  18. அமெ. போர் விமானங்கள் இலங்கை வானில் அதிரடிஅனுமதி ஏதும் இன்றிப் பறந்தன அரசு எதிர்ப்பு; கடும் கண்டனம் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான 10 போர் விமானங்கள் கடந்த வாரம் இலங்கை வான் பரப்புக்குள் அத்துமீறிப் பறந்துள்ளன. இது குறித்து விசனம் அடைந்துள்ள இலங்கை தனது கண்டனத்தையும் கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது. இது நாட்டின் இறைமையை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளது.தென்கிழக்காசியக் கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பலில் இருந்து கிளம்பிய போர் விமானங்களே இலங்கையின் வான்பரப்புக்குள் அனுமதி ஏதுமின்றித் திடீரெனப் புகுந்து வெளியேறின என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்க விமானங்கள் 10 இலங்கை வான் பரப்பைக் கடந்து சென்…

    • 23 replies
    • 2.6k views
  19. ராஜிவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளனின் கருணை மனுக்கள்- ஜனாதிபதி நிராகரிப்பு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நிராகரித்துவிட்டார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் முருகனின் மனைவி நளினி ஆகியோருக்கு 1999ம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மரண தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. நளினியின் மரண …

  20. குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும்வரை, அதற்கான கோரிக்கை வலுவடைந்து செல்லுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிடுகிறது. பாரதூரமான மனித உரிமை மீறல்களைப் புரிந்தவர்கள், அமெரிக்காவில் இருந்தாலும், இலங்கையில் இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கிறது. அந்த அமைப்பின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிறாட் அடம்ஸ் இது குறித்த பத்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈராக்கில் அமெரிக்கப் படையினர் புரிந்த சித்திரவதைகள் குறித்து கண்டறிவதற்கு அமெரிக்க ஜனாதிபதி பறாக் ஒபாமா எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானவை இல்லையென அவர் குறிப்பிடுகிறார். ஜோர்ஜ் டபிள்ய+ புஷ் ஆடசிக் காலத்தில், குற்றங்களைப் புரிந்தவர்களை நீதியி…

    • 0 replies
    • 945 views
  21. அரசு கண்டிக்க வேண்டும்: பேரவையில் முதல்வர் வலியுறுத்தல் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ள இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு இந்தியத் தூதர் மூலம் தனது கண்டனத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். இந்தச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததுதான், இது போன்றதொரு பேட்டியை அளிப்பதற்கான துணிச்சலை கோத்தபய ராஜபக்ஷேவுக…

  22. முதலமைச்சர் ஜெயலலிதா ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி.. http://www.youtube.com/watch?v=nj_zuE8sN80&feature=feedf

    • 8 replies
    • 2.1k views
  23. சீனாவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, யுத்தக் குற்றம் தொடர்பான விசாரணைக்கு மேற்கு நாடுகள் கொடுக்கும் அழுத்தத்துக்கு எதிராகவும் உலகளவில் உருவாகி வரும் நிதி நெருக்கடியில் இலங்கைக்கு உதவும் வகையிலும் சீனாவின் ஆதரவை கோருவார் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி ஹுஜின்தாவோவையும் பிரதமர் வென்ஜியாபோவையும் பீஜிங்கில் சந்திப்பார். பொருளாதார ஒத்துழைப்பில் முக்கிய கவனம் செலுத்தவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி திங்கட்கிழமை தெரிவித்தார். இலங்கைக்கு ஆகக்கூடுதலான உதவி வழங்கும் தனியொரு நாடாக சீனா உள்ளது. அம்பாந்தோட்டையில் ஒரு துறைமுகத்திற்கும் நுரைச்சோலையில் அனல் மின் நிலையத்திற்கும் சீனா நிதி வழங்கியுள்ளது. யுத்தத்தின் பின்னரான மீள்நிர்மாணத…

  24. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில் நடைபெறவுள்ள விவாதம் குறித்த அறிவிப்பில், அடுத்தடுத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் பின்னணி குறித்து சந்தேகம் கிளம்பியுள்ளது. இலங்கை போர் நடைபெற்ற போது, அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பாக பார்லிமென்டில் விவாதம் நடத்த, தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., - தி.மு.க., - கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. லோக்சபாவில், விதிஎண் 193ன் கீழ், பொது விவாதமாக நடைபெறவுள்ள இலங்கை தமிழர் பிரச்னை, கடந்த வாரமே நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், நடக்கவில்லை. இந்நிலையில், லோக்சபா அலுவல்கள் குறித்த கையேடு நேற்று காலை வழக்கம் போல அனைவருக்கும் வினியோக…

  25. வென்றவனுக்கும் தெரியவில்லை தோற்றவனுக்கும் தெரியவில்லை.. சிறீலங்காவின் இனப்பிரச்சனைக்கு தீர்வு என்று எதுவும் கிடையாது. இப்போது இருப்பதே போதும், என்று பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கு பொருத்தமான பதில் ஒன்றை மு.கருணாநிதி வழங்கியுள்ளார். ஓர் இனத்தை ஒடுக்கு முறைக்குள் வைத்திருப்பவன் கூறும் கருத்தை, அவனால் ஒடுக்கப்பட்ட ஓர் இனம் கேட்க வேண்டும் என்று கருத முடியாது என்று தெரிவித்துள்ளார். ஆக கோத்தபாயவின் கருத்து தமிழருக்கு அவசியமற்ற கருத்தே. சிங்களத் தலைவர்கள் புலிகள் போர்க்களத்தில் இருந்தபோது ஒரு கருத்தும், அவர்கள் போர்க்களத்தில் இல்லாதபோது இன்னொரு கருத்துமாகக்கூறி நேர்மையற்ற தலைவர்கள் என்பதை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள்.…

    • 0 replies
    • 941 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.