ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143320 topics in this forum
-
பளை பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளரின் கல்வி நிறுவனத்துக்கு தீ [sunday, 2011-07-24 04:36:34] பளை பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளரின் கல்வி நிறுவனத்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பழன் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரன் தொிவித்துள்ளார். இதேவளை,தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தரான சுந்தரலிங்கம் யோகேஸ்வரன் என்பவர் சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் தாக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=47035&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 377 views
-
-
உரத்த குரலேதும் இல்லாமை கழுகுகளுக்கே வாய்ப்பாகும் -இதயச்சந்திரன் ஜூலை படுகொலைகள், நெஞ்சில் ஆறாத இரணமாக இன்னமும் வலித்துக் கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் ஆழ் மனதில் முள்ளாய்க் குத்துகிறது. எமது போராட்ட உணர்வு மறுவாசிப்பிற்கு உள்ளாக்கப்பட வேண்டுமென்று, தூர்ந்து போன பாதைகளை வழித்தடமாக காட்ட வருகிறது பேரினவாதச் சிங்களம். இனஆளுமையின் அடையாளங்களை அழிக்கும், இறுதிமுயற்சியில் ஈடுபடும் சிங்களத்தின் கபட நோக்கங்களை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 'செய்வதைச் சொல்வேன். சொல்வதைச் செய்வேன்' என்று யாரை அச்சுறுத்துகிறார் மகிந்தர்? உலக வரலாற்றில், ஆக்கிரமிப்பாளர்கள் பிதற்றிய வார்த்தைகளே இவை. இவரின் சொல்லும் செயலும், இன அழிப்பு என்கிற கருத்தியலில் இருந…
-
- 1 reply
- 682 views
-
-
இன்று முதல் ஒருவார காலத்திற்கு ஊர்வலங்கள் நடத்துவதற்கு தடை [sunday, 2011-07-24 07:10:18] இன்று முதல் ஒருவார காலத்திற்கு ஊர்வலங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமன பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். இதற்கமைய பேரணிகள் வாகன ஊர்வலங்கள் என்பவற்றிற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.தேர்தல் நடைபெற்ற நேற்றைய தினத்தில் அமைதியான சூழ்நிலை நிலவியதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=47040&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 470 views
-
-
ஈழம் தொடர்பாக பேஸ்புகில் கணக்கு வைத்திருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் PostDateIcon சனிக்கிழமை, 23 ஜூலை 2011 18:25 ஈழ போராட்டதுக்கு ஆதரவாக பேஸ்புகில் பிரச்சாரம் செய்யும் தமிழ் ஈழ தமிழர்களே. உங்கள் புகைப்படம் மற்றும் பெயர் விலாசம் இதில் எதுவுமே உண்மையான உங்களின் விபரங்களை பேஸ்புக்கில் போடவேண்டாம். இலங்கை கணனி அவசரச் சேவைப் பிரிவும் இராணுவமும் ஈழ போராட்டத்துக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பிரச்சாரம் செய்யும் ஈழ தமிழர்களின் பேஸ்புக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. அந்த வலையில் சிக்கி விடாதீர்கள் . இலங்கை உளவுப் பிரிவினர் ஈழ ஆதரவாளர்கள் போல் தன்னை காட்டிக் கொண்டு பெண்கள் பெயரிலும் தலைவர் பெயரிலும் பேஸ்புக் உள்ளே வருகின்றார்கள் பின்பு உங்கள் விப…
-
- 2 replies
- 1.4k views
-
-
இராணுவத்தினரை புலிகள் சுட்ட காட்சிகளே சனல் 4 வீடியோவில் காட்டப்படவை! இந்துவிடம் ஜனாதிபதி மஹிந்த மறுப்பு. [saturday, 2011-07-23 22:21:16] பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்டு இருக்கின்ற இலங்கையின் கொலைக்களம் என்கிற வீடியோவில் இராணுவத்தினரை தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டுக் கொல்கின்ற காட்சிகள்தான் காட்டப்பட்டு இருக்கின்றன என்று தெரிவித்து உள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவின் இந்திய பிரபல பத்திரிகைகளில் ஒன்றான இந்துவுக்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே மேற்கண்டவாறு கூறி இருக்கின்றார். அக்காணொளி குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில் இலங்கையின் கொலைக்களம் ஒரு திரைப்படம் மாத்திரம், உண்மையான ஆவணம் அல்ல, உண்மையில் இதில் உள்ள வீடியோவின்…
-
- 5 replies
- 956 views
-
-
நோர்வேயில் வெடிக்கப்பட்ட இரு குண்டுகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உரங்களால் செய்யப்பட்டது. குண்டுகளை தயாரித்தவரும் , உடயா என்ற தீவில் 84 பேரை சுட்டுக்கொன்றவரும் ஒரே நபர் எனவும் தெரிய வந்துள்ளது. . இவர் ஒரு வலதுசாரி தீவிரவாதி அதுமட்டுமன்றி கொலையாளி ஒரு கத்தோலிக்கர். விவசாய பண்ணை ஒன்றை நடத்தப்போவதாக போலியாக ஒரு கிராமத்தில் பண்ணை ஒன்றை செய்து அதற்காக உரங்களை கொள்வனவு செய்திருக்கின்றார். அதன் பின்னர் நோர்வேயில் குண்டை வெடிக்க வைத்துவிட்டு உடயோ என்ற தீவில் நடந்து கொண்டிருந்த இளைஞர்கள் முகாமிற்கு சென்ற கொலையாளி அங்கு இருந்த இளைஞர்களை தாறுமாறாக சுட்டுள்ளார். இதன் போது 84 பேரை சுட்டுக்கொன்றுள்ளார். தப்புவதற்காக செத்தவர்கள் போல் நடித்து தரையில் படுத்திருந்தோரை தலையில் ச…
-
- 11 replies
- 1.9k views
-
-
-
வரலாற்று நாயகன் லெப். செல்லக்கிளி அம்மானின் வீரவணக்க நாள் Saturday, July 23, 2011, 0:38கட்டுரைகள், தமிழீழம், மாவீரர்கள் 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள். சதாசிவம் செல்வநாயகம் கல்வியங்காடு, யாழ்ப்பாணம் 23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி – கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு. நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்…
-
- 12 replies
- 898 views
-
-
ஆசிரியர் லோகேந்திரன் மீது EPDP தவநாதன், விஜயசேகரன் உள்ளிட்ட குழுவினர் சரமாரியாக தாக்கினர்:- 23 ஜூலை 2011 நேரில் கண்டவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு வாக்குமூலம்:- http://youtu.be/KQQSon002Os இன்று நானும் எனது ஆசிரியர் லோகேந்திரனும் ஏ9 வீதியால் வந்து கொண்டிருந்த போது அவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் நகுலேஸ்வரனின் ஆதரவாளர். நான் அவரது மாணவன். நாங்கள் இருவரும் வந்து கொண்டிருந்த போது எங்களுக்குப் பின்னால் பிக்கப் வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் வந்து கொண்டிருந்தன. கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் ரவறடிக்கும் இடையில் உள்ள ஒழுங்கையில் வைத்து பிக்கப் வந்து எங்களுக்கு இடித்ததும் அவரது மோட்டார் சைக்கிளில் இருந்த கை விலகியதும் பின்னால் வந்த கார் எங்களை …
-
- 0 replies
- 894 views
-
-
அமெரிக்கா போன்று இந்தியாவும் இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும்!- ராமதாஸ் [saturday, 2011-07-23 19:25:41] இலங்கை இறுதிப் போரின் போது நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை அந்நாட்டிற்கான உதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது. அதேபோல் இந்தியாவும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இலங்கை இறுதிப் போரின் போது நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை அந்நாட்டிற்கான உதவிகள் நிறுத்தப்படும் என்று அம…
-
- 0 replies
- 353 views
-
-
ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை லண்டன் புறப்பட்டுள்ளார்: 23 ஜூலை 2011 பிரித்தானிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து.. ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை லண்டன் புறப்பட்டுள்ளார்: பொதுநலவாய நாடுகளில் 100வது கூட்டத் தொடரில் கலந்துக்கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை லண்டன் புறப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் கூட்டத்தில் சிறப்புரையாற்ற உள்ளதாக எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. லண்டனில் தங்கியிருக்கும் ரணில், பிரித்தானிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabi…
-
- 4 replies
- 400 views
-
-
பம்பைமடு சிறிலங்கா இராணுவ முகாமுக்குள் துப்பாக்கிச் சண்டை – படைச் சிப்பாய் பலி [ சனிக்கிழமை, 23 யூலை 2011, 02:01 GMT ] [ வவுனியா செய்தியாளர் ] வவுனியா பம்பைமடு சிறிலங்கா இராணுவ முகாமுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டை ஒன்றில் படைச்சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்றுக்காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சமிந்த பண்டார என்ற சிறிலங்கா படைச்சிப்பாயே கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த படையினர் தங்கியுள்ள பம்பை மடு இராணுவ முகாமில் இரண்டு படையினருக்கு இடையில் ஏற்பட்ட சாதாரண வாய்த்தர்க்கமே துப்பாக்கிச் சண்டையாக வெடித்துள்ளது. இந்தச் சண்டையில் சமிந்த பண்டார என்ற படைச் சிப்பாய் கொல்லப்பட்டார். இவருடன் துப்பாக்கிச்…
-
- 5 replies
- 900 views
-
-
1983 ஜுலை நெஞ்சில் காயாத இரத்தம் -குளோபல் தமிழ் செய்திகளுக்காக தேசப்பிரியன் கறுப்பு ஜீலை எனப்படும் ஆடிக்கலவரம் நடந்து இருப்பத்தி எட்டு வருடங்களாகின்றன. கறுப்பு ஜீலையை அனுபவித்த தமிழனால் மட்டுமல்ல கறுப்பு ஜீலைக் காலத்தில் வாழ்ந்த தமிழனால் மட்டுமல்ல எவராலும் மறக்க முடியாதபடி நெஞ்சில் பெரும் காயமாக ஆறாமல் ஆடிக்கலவரம் இருக்கிறது. ஈழத் தமிழ் மக்களிடத்தில் இந்தக் கறுப்பு ஜீலைதான் வரலாற்றை திருப்பிப் போடத் தொடங்கியது. இனவெறி வன்முறைகளும் படுகொலைகளும் உரிமை மறுப்புக்களுமே தமிழ் மக்களிடத்தில் ஆறாக காயங்களை நெஞ்சில் உருவாக்கியது. தமிழ் இனத்திற்கு விடுதலையும் நாடும் உரிமையும் தேவை என்கிற அவசியத்தை ஏற்படுத்தியது. இலங்கைத்தீவும் ஈழமும் வெடித்து இ…
-
- 0 replies
- 493 views
-
-
மாகாண சபைகளுக்கு நிலம் மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நான் ஒருபோதும் வழங்கமாட்டேன். அப்படி வழங்கினால் மும்பாய் போன்று குண்டுகள் வெடிக்கும். இவ்வாறு கூறியுள்ளார் மஹிந்த இராஜபக்ஷ. இந்து பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் மஹிந்த மேலும் கூறுகையில்; அரசியல் தீர்வுக்கு நாடாளுமன்ற தெரிவு குழு சிபார்சு செய்யவேண்டும். என்றாலும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கமாட்டேன். ஏனென்றால் அது இந்தியாவில் மாகாணங்களில் குண்டுகள் வெடிப்பது போன்று வெடிக்கும். அதிகாரம…
-
- 2 replies
- 738 views
-
-
அமெரிக்கா உதவிகளை நிறுத்தினால் பாதகமான விளைவுகள் ஏற்படும் - தயாசிறி 23 ஜூலை 2011 அமெரிக்கா உதவிகளை நிறுத்தினால் பாதகமான விளைவுகள் ஏற்படும் - தயாசிறி அமெரிக்காவினால், இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகள் நிறுத்தப்பட்டால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். உதவிகள் நிறுத்தப்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களின் அவல நிலைமை மேலும் உக்கிரமடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் உதவிகள் நிறுத்தப்பட்டால் அதன் மூலம் பாதிக்கப்பட போவது அப்பாவி மக்கள் என்பதனை அனைவரும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்கள் தொடர்பில் வி…
-
- 1 reply
- 590 views
-
-
நோர்வே குண்டுத் தாக்குதலுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது! பிரசுரித்தவர்: NILAA July 23, 2011 நோர்வேயில் இடம்பெற்ற கொடூர குண்டுத்தாக்குதலை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாக கண்டித்திருப்பதுடன் நோர்வேயின் அரசுக்கும் மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக நா.த.அரசாங்கத்தின் பிரதமர் விசுநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: உலகில் சமாதானத்தை நிலை நாட்டுவதற்காக அயராது பாடுபட்டு வந்துள்ள நோர்வேயிய மண்ணில் இடம்பெற்றுள்ள இக்கொடூரத் தாக்குதலினால் நாங்கள் மிகவும் கவலை அடைகின்றோம். இலங்கைத் தீவினில் அமைதியை நிலைநாட்டும் நோக்குடன் சி…
-
- 1 reply
- 651 views
-
-
பிரான்ஸ் நீதவான் தங்காலை கடலில் மூழ்கி மரணம்! Published on July 23, 2011-2:07 am பிரான்ஸ் நாட்டு நீதவான் ஒருவர் தங் காலை கடலில் நீராடிக் கொண்டிருந்த சமயம் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி மரண மடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சுற்றுலாவிற்காக இலங்கை வந்திருந்த மேற்படி நீதவான் கடலில் நீராடிக் கொண்டிருந்த சமயம் அலையில் அடித்துச் செல்லப்பட்டே இவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் கூறினர். மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் சுற்றுலாவுக்காக இலங்கை வந்திருந்த மேற்படி பிரான்ஸ் நாட்டு நீதவான் தன் குடும்பத்தாருடன் இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த சமயத்திலேயே அலையினால் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.saritham.com/?p=27239
-
- 6 replies
- 868 views
-
-
கிளிநொச்சியில் 21 தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாக கபே அமைப்பு கூறியுள்ளது. பெரும்பாலான வன்செயல்கள் கரைச்சி பிரதேச சபையிலேயே இடம்பெற்றுள்ளன. அங்கு ஆயுத தாரிகள் மக்களை அதிகாலை நான்கு மணியில் இருந்தே பயமுறுத்த தொடங்கியதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. . இதே வேளை வடபகுதியில் எதிர்பார்த்த அளவு மக்கள் வாக்களிக்க வில்லை என தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 22-30 விழுக்காடு வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. . கிளி நொச்சி மாவட்டத்தில் தேர்தல் திணைக்களம் 65 விழுக்காடு என கூறியுள்ளது. ஆனால் அந்த அளவிற்கு மக்கள் வாக்கு சாவடி நிலையத்திற்கு வரவில்லை எனவும் பீதி காரணமாகவே மக்கள் வருகை தரவில்லை எனவும் கூறப்படுகின்றது. http://www.eelanatham.net/story/%E0%A…
-
- 1 reply
- 762 views
-
-
வாக்கு பதிவு நிறைவு: இதுவரை 60 தேர்தல் வன்முறைகள் பதிவு _ 7/23/2011 6:16:45 PM Share உள்ளுராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்புகள் இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் 60 தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32848
-
- 0 replies
- 412 views
-
-
யாழ் மாவட்டத்தில் 40 சதவீதத்திற்கும் மேலதிகமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளது : 23 ஜூலை 2011 குளோபல் தமிழ்ச்செய்தியாளர் யாழ் மாவட்டத்திற்கான தேர்தல் வாக்களிப்புகள் நிறைவடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 40 சதவீதத்திற்கும் மேலதிகமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக யாழ் செயலகத்தினால் முதல் கட்டமாக வெளியிடப்பட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருமளவில் அசம்;பாவிதங்கள்கள் இடம்பெறாவிட்டாலும் சிறு சிறு அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காரைநகர்ப்பகுதியில் உள்ள ஒரு வாக்களிப்பு நிலையத்தினுள் வாக்களிக்க முற்பட்ட ஒரு குழுவினரை காவற்துறையினர் நுழைய விடாதபடி தடுத்துள்ளனர். காரைநகர் சுந்தரமூர்த்தி வித்தி…
-
- 0 replies
- 624 views
-
-
கொழும்பு வருமாறு ஜெயலலிதாவுக்கு அழைப்பு அனுப்பினார் மகிந்த [ சனிக்கிழமை, 23 யூலை 2011, 02:43 GMT ] [ தா.அருணாசலம் ] தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவை சிறிலங்காவுக்கு வருமாறு மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். அவரது தனிப்பட்ட அழைப்பை நேற்று முன்தினம் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவிடம் இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் கையளித்ததாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளார். அலரிமாளிகையில் நேற்றுக்காலை ‘இந்து‘ நாளிதழின் ஆசிரியர் என்.ராம், சிறிலங்கா அதிபரைச் சந்தித்த போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுடன், இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் சந்தித்துப் பேசியது குறித்து இந்து ஆச…
-
- 5 replies
- 544 views
-
-
யாழில் வாக்குப் பெட்டிகள் தேர்தலிற்கு முன்பே மாயம்! Saturday, July 23, 2011, 9:07 சிறீலங்கா 1977ம் மற்றும் 1981ம் ஆண்டு தேர்தல் வன்முறைகளை ஒத்த தேர்தல் வன்முறைச் செயற்பாடுகள் தேர்தல் ஆரம்பிப்பப்பதற்கு 14 மணி நேரமே உள்ள நிலையில் தற்போது வடக்கில் மிக வேகமாகத் தொடங்கியுள்ளன. தற்போது கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின்படி யாழ் மாவட்ட வாக்களிப்பு நிலையங்களிற்கு பொறுப்பான தேர்தல் உத்தியோகத்தர்களிற்கு விநியோகிப்பதற்காக பலத்த பாதுகாப்பின் மத்தியில் கொண்டு வரப்பட்ட வாக்குப்பெட்டிகளில் சுமார் 4,000 வாக்குகளை உள்ளடக்கிய வாக்களிப்பு நிலையங்களிற்கான பெட்டிகளை காணவில்லை எனத் தெரியவருகிறது. இந்த வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணியில் பொலிசாரும் அதற்குப் பாதுக…
-
- 7 replies
- 669 views
-
-
புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களின் சிதைவுகளை அகற்ற 2180 கோடி ரூபா செலவு [ சனிக்கிழமை, 23 யூலை 2011, 01:31 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] காங்கேசன்துறை துறைமுகப் பகுதியில் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட ஏழு கப்பல்களின் சிதைவுகள் உள்ள போதும் அவற்றில் ஆறு கப்பல்களின் சிதைவுகளை அகற்றவே உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட ஆறு கப்பல்களின் சிதைவுகளை அகற்ற இந்தியா 2180 கோடி ரூபாவை செலவிடவுள்ளது. ஆனால் ஏழு கப்பல்களின் சிதைவுகள் அங்கு காணப்படுவதாக சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். இவற்றில் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கிய சீ டான்சர் என்ற கப்பல் உள்ளடக்…
-
- 1 reply
- 597 views
-
-
தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல்சேவை எதிர்பார்த்தளவு வெற்றியைத் தரவில்லை [ சனிக்கிழமை, 23 யூலை 2011, 08:14 GMT ] [ நித்தியபாரதி ] பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல்சேவையானது எதிர்பார்த்தளவு வெற்றியைத் தரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 1044 பயணிகளை ஏற்றிச் செல்லும் கொள்திறனைக் கொண்ட 'ஸ்கொற்றியா பிறின்ஸ்' என்ற பயணிகள் கப்பல் கடந்த யூன் 13ம் திகதியிலிருந்து தனது சேவையை தொடங்கியது. ஆனால், வாரத்தில் இரு தடவைகள் பயணத்தை மேற்கொள்ளும் இக்கப்பல் தனது பயணத்தின் போது ஒவ்வொரு தடவையும் 150 பிரயாணிகளைக் காவிச் செல்வதில் கூட மிகவும் சிரமப்படுகின்றது. இக்கப்பல் சேவையானது தனது ஒட்டுமொத்த கொள்திறனில் 15 சதவீதத்தை மட்டுமே நிரப்ப…
-
- 0 replies
- 477 views
-
-
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் உட்பட 114 பேர் பயணித்த இரு படகுகள் அவுஸ்திரேலிய கடற்படையினர் வசம் [saturday, 2011-07-23 11:45:00] இலங்கையின் புகலிடக் கோரிக்கையாளர்கள் உட்பட 114 பேர் பயணித்த 02 படகுகள் அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த குழுவினர் தற்போது கிறிஸ்மஸ் தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட குழுவிலுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=46989…
-
- 0 replies
- 361 views
-