ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
Reddit சமூக வலைத்தளத்தின் உரையாடலில் கலந்துகொள்ள அல்லது பார்வையிட: http://www.reddit.com/r/worldnews/comments/i0891/sri_lankas_killing_fields_is_disturbing_revolting/ குறிப்பிட்ட செய்தி சம்பந்தமாக Reddit நடைபெறும் உரையாடலின் சில பகுதி:
-
- 1 reply
- 615 views
-
-
மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கியநாடுகள் சபை விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய 14 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் அடங்குவதாக அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் எய்லின் சம்பர்லைன் டொனாகோ தெரிவித்துள்ளார். இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அச்சுறுத்தலுக் குள்ளாகியுள்ளது. போர் முடிந்ததன் பிற்பாடு ஊடகங்களுக்கான சுதந்திரம் அதிகரித்திருக்க வேண்டும் ஆனால், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் போது ஊடகவியலாளர்களும், அரசாங்கத்துடன் உடன்படாதவர்களும், சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அச்சுறுத்தல்களுக்குள்ளாகியிருந்தனர். அந்நிலை தொடர்கிறது. இவ்வாறான மனித உரிமை மீறல்கள் தெர்டர்பாக ஈரான், ரஸ்யா, கியூபா, சீனா, சிரியா, உகண்டா, வெனிசுலா, பஹ்ரைன், …
-
- 1 reply
- 841 views
-
-
சோனியா காந்தியின் விருப்பத்திற்குரிய இலங்கை தூதர் பிரசாத் காரியவாசம் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழக முதல்வருடன் இணைந்து செயல்பட விரும்புவதாக கூறியுள்ளார்.தமிழ் நாட்டை இனி ஒன்றுமே செய்ய முடியாது, தமது தேவைக்கு ஏற்ப தமிழ் நாட்டில் ஆடக்கூடிய அரசும் இல்லை, என சிங்களம் முடிவு செய்து விட்டது. ஆகவேதான் இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்கின்றது சிங்களம். முடியும்வரை முட்டிப்பார்ப்போம் இல்லையேல் முட்டிபோட்டு நிற்போம் என்பதே சிங்களத்தின் தந்திரம். . இலங்கைத் தமிழர்கள் தங்களது வசிப்பிடங்களுக்கு மீண்டும் குடியேறுவதற்கான பணிகள் திருப்திகரமான முறையில் நடைபெறவில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா டில்லியில் நிருபர்களிடம் கூறியிருந்தார். . அதுதொடர்பாக இந்திய நிரூபர் ஒருவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
16 ஜுன் 2011, வியாழன் 7:20 மு.ப மக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் பதிவு நடவடிக்கையின்போது முறையான விதிமுறைகளைப் பின்பற்றும்படியே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதிவு நடவடிக்கையை முற்றாக இடைநிறுத்துமாறு உத்தரவிடவில்லை. யாழ். குடாநாட்டில் இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தும் நோக்குடனேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் எந்தவித சூழ்ச்சியும் இல்லை.இவ்வாறு யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்தஹத்துருசிங்க நேற்று உதயனுக்குத் தெரிவித்தார். கடந்த சில நாள்களாக இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று யாழ். குடாநாட்டில் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், புகைப்…
-
- 1 reply
- 555 views
-
-
[Thursday, 2011-06-16 12:20:24] செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை : சிறப்பு முகாம்களில் சிறைபடுத்தப்பட்டுள்ளோரை விடுதலை செய்க:-செந்தமிழன் சீமான் செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியிலுள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் 3 பேர் தங்களை விடுவிக்கக்கோரி கடந்த 13ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செல்வம், அருங்குலசிங்கம், தர்மலிங்கம் ஆகிய அந்த மூன்று பேரில், செல்வத்தின் உடல் நிலை மோசமாகி அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர்களைச் சந்தித்த செங்கல்பட்…
-
- 2 replies
- 515 views
-
-
Thursday, June 16, 2011, 9:09சிறீலங்கா கரையோர சட்டங்களை மீறி, மட்டக்களப்பு பாசிக்குடா கடற்கரையில், அரசாங்கத்தின் முன்னணி அமைச்சர் ஒருவரின் அணுசரனையில் 5 நட்சத்திர விடுதியொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. கரையில் அலையடிக்கும் இடத்தில் இருந்து 10 அடித் தூரத்தில் இந்த விடுதி நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதனால் கரையோர பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் முக்கிய நபரின் அணுசரனையில் இந்த நிர;மாணிப்பு இடம்பெற்று வருவதால், மக்கள் பகிரங்கமாக எதனையும் கூற அஞ்சுகின்றனர் . http://www.tamilthai.com/?p=19400
-
- 1 reply
- 626 views
-
-
[Thursday, 2011-06-16 11:33:10] பிரித்தானிய தொலைக்காட்சியான செனல்-4 ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்தினை ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பார்க்கவில்லை என செயயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்டீன் நெசர்க்கி தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையிடமிருந்து சாதகமான கருத்து வெளியாகும் போது தான் இறுதிகட்ட யுத்தம் தொடர்பில் சுயாதீன விசாரணையை மேற்கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=44943&category=TamilNews&language=tamil
-
- 3 replies
- 1.4k views
-
-
இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்பது புலி ஆதரவாளர்களின் கருத்து. புலி ஆதரவாளர்களின் கருத்திற்கெல்லாம் நாம் செயற்படமுடியாது. . இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தகுற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இலங்கை மறுத்துள்ளது. இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டதை அடுத்து அல்-ஜஷீரா தொலைக்காட்சி சேவை அரச பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ராஜீவவிடம் சர்வதேச விசாரணையை இலங்கை ஏற்றுக் கொள்ளுமா என கேள்வி எழுப்பியது. இதன் போதே ரஜீவ விஜயசிங்க மேற்கண்டவாரு பதிலளித்துள்ளார். . இதன்படி அனைத்துலக மன்னிப்பு சபை, அனைத்துலக மனித உரிமை கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் புலி ஆதரவாளர்கள் அல்லவா.…
-
- 1 reply
- 479 views
-
-
[Thursday, 2011-06-16 11:57:08] ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 18 ஆவது கூட்டத் தொடர் இவ்வருடம் செப்டெம்பர் மாதமளவில் ஜெனிவாவில் நடைபெறும் என்று மனித உரிமைகள் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன. அந்த வகையில் மனித உரிமைப் பேரவையின் 18 ஆவது கூட்டத்தொடலும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவொன்று கலந்துகொள்ளவுள்ளது. மனித உரிமைகள் அமைச்சர் என்ற வகையில் தனது தலைமையிலான குழு பேரவையின் 18 ஆவது கூட்டத்தொடல் பங்கேற்கும் என்று அமைச்சர் சமரசிங்க குறிப் பிட்டார். ஏற்கனவே கடந்த மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமான மனித உமைப் பேரவையின் 17 ஆவது கூட்டத் தொடர் நாளை வெள்ளிக் கிழமையுடன் நிறைவடையவுள்ளது. இந்தக் கூட்டத் தொடல் இலங்கையி…
-
- 0 replies
- 849 views
-
-
by Thaiveedu on Thursday, 09 June 2011 at 07:15 ராதிகா சிற்சபைஈசனுடன் ஒரு சந்திப்பு -கருணா- அந்தச் சிறுமி அப்போதுதான் யாழ்ப்பாணத்திலிருந்து கனடாவுக்கு வந்திருந்தாள். மிசசாகாவில் உள்ள பாடசாலையொன்றில் அவள் சேர்ந்து ஓரிரு நாட்களே ஆகியிருந்தன. புதிய நாடு, புதிய கலாசாரம், புதிய மொழி. புதிய கல்விமுறை, பதிய மனிதர்கள் என்று எல்லாமே புதியனவாக இருந்தன. ஆனால் சொர்க்கத்துக்கே செல்வதைப்போன்ற ஆனந்தத்துடன் அவள் அங்கு வந்திருந்தாள். பாடசாலையில் வெள்ளையின மாணவர்களே நிறைந்திருந்தனர். அவர்களுக்கு அவளும் அவளுடைய தோல் நிறமும் புதுமையாகத் தெரிந்தன. பாடசாலை விளையாட்டு மைதானத்துக்குச் சென்றவளுக்கு அதிர்ச்சியான அனுபவம் காத்திருந்தது. அருகில் வந்த சக மாணவ…
-
- 3 replies
- 1k views
- 1 follower
-
-
சிறிலங்காவின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டு இரண்டு நாள் கடந்து உள்ள நிலையில் பல்வேறு நாடுகளும் தமது கருத்துக்களை வெளியிட்டுவரும் நிலையில் குறித்த ஆவணப்படத்தினை ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பார்க்கவில்லை என செயயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்டீன் நெசர்க்கி தெரிவித்துள்ளார். . மேலும், இலங்கையிடமிருந்து சாதகமான கருத்து வெளியாகும் போது தான் இறுதிகட்ட யுத்தம் தொடர்பில் சுயாதீன விசாரணையை மேற்கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதே வேளை விசேடமாக ஐக்கிய நாடுகள் சபையில் சிறிலங்காவின் கொலைக்களம் காண்பிக்கபப்டும் என ஐ. நா. வட்டாரம் கூறுகின்றது. ஈழ நாதம்
-
- 0 replies
- 656 views
-
-
[Thursday, 2011-06-16 12:17:13] கனடாவின் பிரபல தேசிய ஊடகங்கள், நேற்று முன்தினம் இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் சேனல் 4 தொலைக்காட்சியின் "இலங்கையின் கொலைக்களம்" என்ற விவரண சித்திரம் குறித்த தகவல்களை கனேடிய மக்களுக்கு, தொலைக்காட்சி மூலமாகவும், கனேடிய தேசிய ஊடங்கள் மூலமாகவும் வெளிக்கொணர முன் வந்துள்ளன. இம் மைய ஊடகங்கள் , 2009 ஆண்டு மே மாத இறுதிகட்ட போரின் போது, தங்களின் நெருங்கிய உறவினர்களை இப்போர்ச்சூழலில் பறிகொடுத்த கனேடிய தமிழ் உறவினர்களை அவசரமாக நேர்காணல் செய்ய விரும்புகிறார்கள். இவ் மைய ஊடங்களில் பங்குபற்றி , இலங்கையின் கொலை களம் சம்பந்தமான உண்மைகளை வெளிக்கொணர விரும்பும் தமிழ் கனேடிய உறவுகள் உடனடியாக கனேடிய பேரவையை 416 -240 -0078 என்ற இலக்கத்தில் தொடர…
-
- 0 replies
- 463 views
-
-
இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் தமிழகத்தின் கரிசனை முயற்சிகள் மற்றும் திட்ட வரைபுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது இதேநேரம் இவ்விடயத்தில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு தார்மிக ரீதியிலான கடமையும் பொறுப்பும் இருக்கின்றது என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கு மற்றும் தமிழர் பிரச்சினையில் உலக நடப்புக்களையும் யதார்த்தங்களையும் புரிந்து கொண்டு காலத்தின் தேவை கருதி இலங்கை அரசு செயற்பட்டு கௌரவமான தீர்வொன்றினை முன் வைக்குமானால் சர்வதேச அழுத்தங்களுக்கு இடமிருக்காது என்றும் அக்கட்சி கூறியுள்ளது. இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை சந்தித்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா, இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் விடு…
-
- 1 reply
- 676 views
-
-
Wednesday, 15 June 2011 05:11 . .ஐக்கிய இலங்கைக்குள் சாத்தியமான அளவுக்கு அதிகபட்ச அதிகாரப் பகிர்ப்வையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். வன்முறையற்ற நிலைமையானது அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டிற்கும் சகல மக்களுக்கும் அனுகூலத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமென்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளேடான இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகையின் கொழும்பிலுள்ள நிருபர் சம்பந்தனுடன் அண்மையில் உரையாடியுள்ளார். இது தொடர்பாக இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருப்பதாவது; இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு…
-
- 8 replies
- 1k views
- 1 follower
-
-
பொறுப்பேற்று மூன்று வாரங்களில் மிக முக்கியமான மூன்று தீர்மானங்கள் தமிழ் நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டமையையிட்டு கோடானு கோடி உலகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்துள்ளனர் என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி வைத்துள்ளார். மேலும், அக் கடிதத்தில் :- மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கட்கு வணக்கம், தாங்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராக மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்று, சுமார் மூன்று வாரங்களில் மிக முக்கியமான மூன்று தீர்மானங்கள் தமிழ் நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டமையையிட்டு, கோடானு கோடி உலகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியும் நிம்மதியும் அ…
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென பிரித்தானிய ஏடொன்று கேள்வி எழுப்பியது றட்கோ மிளாடிச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் அதே வேளை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென பிரித்தானியாவின் கார்டியன் நாளேடு கேள்வி எழுப்பியுள்ளது. சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான இலங்கையின் கொலைக் களங்கள் விவரணம் குறித்த தகவல்களை உள்ளடக்கிய ஆசிரியர் தலையங்கம் ஒன்று இன்று அந்த ஏட்டில் வெளியாகியது. பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்துவது ஒரு போர்க் குற்றமென அந்த ஏடு தெரிவிக்கிறது. அந்த விடயம் உண்மையென நிரூபிக்கப்பட்டால், கட்டளையிடும் அதிகாரிகளின் ஊடாக, இலங்கை இராணுவம், இலங்கை அரசு ஆகியவற்றின் உயர் பீடம் வரை அந்த…
-
- 2 replies
- 1k views
-
-
சிங்களச் சாரதிக்கும் தமிழ் சாரதிக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பின் காரணமாக சிங்கள சாரதியுடன் இணைந்து இராணுவத்தினர் தமிழ் சாரதியை தாக்கியதில்அவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுக்காலை 7.30 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த வந்த சிங்கள வாகன சாரதி ஒருவர் சாவகச்சேரியில் யாழ் நோக்கி வருவதற்காக காத்திருந்த பயணியொருவரை ஏற்ற முற்பட்டபோது பயணிகளை ஏற்றவேண்டாம் என யாழ். கொடிகாமம் பஸ் சேவையில் ஈடுபடும் தமிழ் வாகனச் சாரதி கூறினார். இதன் போது இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இவ்வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதனை அவதானித்த இராணுவத்தினர் சிங்கள சாரதியுடன் இணைந்து தமிழ்ச் சாரதியை பொல்லுகள்…
-
- 2 replies
- 923 views
-
-
[ புதன்கிழமை, 15 யூன் 2011, 11:53 GMT ] [ நித்தியபாரதி ] "அரசாங்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்படும் ஒரு மூளைச்சலவையே இப்பயிற்சி நெறி" என மூத்த விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு Rohini Hensman பிரித்தானியாவை தளமாகக் கொண்ட Guardian ஊடகத்தில் எழுதியுள்ளார். அதன் முழுவிபரமாவது, பிரித்தானிய நாட்டு மாணவர்கள் தமக்கான கற்றல் நிதியை பிரிட்டன் அரசாங்கம் முடக்கியமையைக் கண்டித்து அரசாங்கத்திற்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், உயர்கல்விக்கான நிதி ஏற்கனவே முடக்கப்பட்ட நிலையிலுள்ள சிறிலங்கா மாணவர்கள் தற்போது பிறிதொரு பிரச்சினையை எதிர் கொள்ள வேண்டியுள்ளார்கள். 'தலைமைத்துவம் மற்றும் மனப்பாங்கு…
-
- 1 reply
- 494 views
-
-
வவுனியாவின் ஏ9 வீதியில் பயணித்துக்கொண்டிருந்த படை அதிகாரியின் ஊர்தி , டிப்பர் ஒன்றுடன் மோதிக்கொண்டதில் படை உயர் அதிகாரி உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்துள்ளார்கள். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் லெப்ரினன் கேணல் நிலையுடைய படைஅதிகாரியும் பாதுகாப்பு படையினர் இருவரும் படுகாயமடைந்துள்ளார்கள். காயம் அடைந்த படையினர் வவுனியா பொதுமருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். http://www.pathivu.com/news/16891/57//d,article_full.aspx
-
- 3 replies
- 827 views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பொன்றை கோரும் மனு அன்பின் ஜனாதிபதி ஒபாமா அவர்களே, அண்மையில் தென் சூடானில் இடம்பெற்ற பொதுசன வாக்கெடுப்பில் சுதந்திர தென்சூடானை ஆதரித்துப் பொதுமக்கள் அமோகமாக வாக்களித்திருந்தனர். தென் சூடான் மக்களுக்கு இப் பொதுசன வாக்கு மூலம் சாத்தியமாகும் இறைமையை நாம் அங்கீகரித்து ஆதரிக்கின்றோம். இதனால் முக்கியமான இரு விடயங்கள் நிறைவேறுகின்றன. முதலாவதாக தென் சூடான் மக்களுக்குத் தங்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பும் அமைதியும் கிட்டுகின்றது. இரண்டாவதாகப் பல வருடங்களாக நீடித்த பயங்கரப் போர் முடிவுக்கு வந்துள்ளது. தென் சூடானில் இடம்பெற்றதைப் போன்றே இலங்கையிலும் ஓர் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப் பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். சூடானை…
-
- 0 replies
- 1k views
-
-
Malaysia told to rethink support for Sri Lanka Human rights group Proham says there is evidence of human rights violation during the Tamil Tigers conflict and Malaysia should not lend their support to Sri Lanka PETALING JAYA: Malaysia should reconsider its support to Sri Lanka’s stand that others should not interfere in its domestic affairs. In a statement, Persatuan Promosi Hak Asasi Manusia (Proham) said that an UN independent panel has found credible allegations of human rights violation during the final stages of the nation’s civil war. “The panel had also recommended that UN secretary-general, Ban Ki-Moon establish an independent team to investig…
-
- 2 replies
- 788 views
-
-
A hard-hitting investigation into alleged war crimes in Sri Lanka drew more than 800,000 viewers to Channel 4 http://www.broadcastnow.co.uk/ratings/c4-sri-lanka-doc-draws-800000/5028759.article
-
- 14 replies
- 2.2k views
- 1 follower
-
-
அலிஸ்டயர் பர்ட் கருத்துக்கு இலங்கை அரசு கவலை இலங்கை தொடர்பான ஆவணப்படமொன்றை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட பின், தெற்காசியாவுக்கான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் தனது சொந்தப் பிரஜைகைளை வேண்டுமென்ற இலக்கு வைப்பதாக மேற்படி வீடியோவில் குற்றம் சுமத்தப்படுவதை இலங்கை அரசாங்கம் உறுதியாக மறுப்பதை,தெற்காசியாவுக்கான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் கவனத்திற்கொள்ளாதமை குறித்து அரசாங்கம் கவலைகொண்டுள்ளது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு நண்பர்களிடமிருந்து அச்சுறுத்தல்கள் அல்லாமல், 3 தசாப்தகால யுத்தத்தில் இழந்தவற்றை மீள ஸ்தாபிப்பதற்கும் நல்லிணக்கம் மற்றும் …
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
Wednesday, June 15, 2011, 23:11காணொளி தமிழா ஓ சிதறியோடிய ஏதிலித்தமிழா!!! உன் விழிகளை கொஞ்சம் சனல் நாங்கு தொலைக்காட்சி நோக்கி திருப்படாஅதில் ஒளிபரப்பாகிக்கொண்டிருப்பது திரைப்படம் அல்ல உன் இனத்தின் கொலைப்படம்-அதில் சிங்களத்தின் கொலைமுகம்தெரிகிறதா பார்…. சிதறிய உடல்களும் சிந்திய உதிரமும் உனை தூற்றுவது கேட்கிறதா?? இன்னும்என்னசெய்யப்போகிறாய் என் இனமே !! என் உறவுகளின் உதிரத்தை உற்றுப்பார் என் தமிழ் சாதியே !!நாதியற்ற நாய்களைப்போல் செத்துக்கிடக்கும் என் உறவுகளைப்பார் ஏனடா இந்த அவல நிலை இது என் இனத்தின் சாபமா ?? அல்லது நாம் செய்த பாவமா??? ஓ,,,,,,,,,, இளைய சமூகமே இளவுவீட்டில் நின்றுகொண்டு ஏன்வேடிக்கை பார்க்கின்றாய் கதறி அழு -உன் சத்தம் செவிடர்கள்காதுகளில் ரத்…
-
- 0 replies
- 833 views
-