ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143303 topics in this forum
-
http://www.yarl.com/files/110510_kavitha.mp3
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது நடந்ததாகத் தெரிவிக்கப்படும் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தென்னாப்பிரிக்காவின் ஆளும் கட்சியான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது. ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்களால நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும் என அக்கட்சி தேட்டுள்ளது. இந்த நிபுணர் குழுவில் யாஸின் சூகா என்ற முன்னணி தென்னாப்பிரிக்க சட்ட நிபுணர் இடம்பெற்றுள்ளார். இலங்கையில் இடம்பெற்றுள்ள சட்டமீறல்களில் சில போர்க்குற்றங்களாகவும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாகவும் அமையக்கூடியவை என்றும் அந்த நிபு…
-
- 5 replies
- 1.4k views
-
-
உங்கள் நிலங்கள் இப்பகுதிகளில் இருந்தால், உடனே செயற்படவும்! ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Viruvirupu, Tuesday 10 May 2011, 14:56 GMT ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ்ப்பாணம், ஸ்ரீலங்கா: யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள ராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள சில கிராமங்களில் இருந்து படைகள் வாபஸ் பெறப்படுவதாக ஸ்ரீலங்கா ராணுவம் நேற்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா ராணுவத்தின் வட மாகாணத்துக்கான அலுவல…
-
- 1 reply
- 1.8k views
-
-
ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளராக சுபேனி நந்தி நியமனம்! ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளராகவும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகவும், மனிதாபிமான உதவிகளுக்கான இணைப்பாளராகவும் சுபேனி நந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ கடிதத்தை இன்று (10.05.11) சிறிலங்காவின் வெளிவிகார அமைச்சிடம் கையளித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளராக இவரை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ளார். இலங்கையிலுள்ள சிரேஸ்ட ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியான இவர் இலங்கையிலுள்ள இருபது ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனங்களுக்கு தலைமை தாங்கவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை…
-
- 1 reply
- 943 views
-
-
நிபுணர் குழு அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு தெரிவித்துள்ளது. நல்லிணக்க முயற்சிகளை பலப்படுத்துவதற்கும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் இலங்கையின் பாதுகாப்புக்கும் மிகப் பாரதூரமான குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீனமான விசாரணை பங்காற்ற வேண்டும் என்ற தனது கருத்தை ஐரோப்பிய ஒன்றியம் மீள வலியுறுத்துகிறது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கை பிரிவுத் தலைவர் கெதரின் அஷ்டன் அறிக்கையொன்றில் கூறியுள்ளார். நிபுணர் குழுவின் அறிக்கையின் ஆக்கபூர்வமான நோக்கங்களை இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் நம்புகிறது. அவ்வறிக்கையின் உள்ளடக்கங்கள் குறித்து ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் பேச்சு நடத்துவ…
-
- 3 replies
- 774 views
-
-
Tuesday, 10 May 2011 03:15 யாழ்ப்பாணத்தில் சிங்கள காடையர் அட்டகாசம் ! யாழில் ஐ.நா வின் அறிக்கையை எதிர்த்து ஊர்வலம் நடப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இருப்பினும் அவர்களில் அநேகமானோர் சிங்கள காடையர்கள் எனவும், இராணுவத்தால் அவர்கள் வரவளைக்கப்பட்டு அங்கே நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்துகொள்ளச் செய்யப்பட்டதாகவும் அறியப்படுகிறது. முற்சக்கர வண்டி, மற்றும் வான்களை இவர்கள் வாடகைக்கு அமர்த்தி ஊர்வலம் என்ற பெயரில் கூச்சலிட்டுள்ளனர். போதாக்குறைக்கு தமிழர்களை மிரட்டியும் ஐ.நாவுக்கு எதிராக கையெழுத்து வாங்கியுள்ளனர். sankathi
-
- 3 replies
- 2k views
-
-
இனப்படுகொலை – மட்டையாட்ட அணிக்கு எதிராக போராட்டம் – தமிழ் இளையோர் அமைப்பு அழைப்பு எதிர்வரும் 14ம் திகதி இங்கிலாந்தின் ஒக்ஸ்பிரிஜ் மைதானத்தில் நடக்கவிருக்கும் போட்டியில் இலங்கை – இங்கிலாந்து அணியோடு விளையாடுகின்றது. இப்போட்டியை புறக்கணிப்தோடு மைதானத்தின் முன்பாகவும் போராட்டம் ஒன்றையும் பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பினர் நடத்த உள்ளனர். இப்போராட்டத்திற்கு முறையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளன. இனப்படுகொலை , போர்க்குற்றங்கள் புரிந்த நாட்டின் அணியோடு விளையாடக்கூடாது என பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. http://rste.org/2011/05/10/இனப்படுகொலை-மட்டையாட்ட/
-
- 1 reply
- 691 views
-
-
May 9, 2011 / பகுதி: செய்தி / தமிழ் நாடு தேர்தல் திருவிழா ஈழத்தமிழருக்கு என்ன பயன்? புல்லுக்கு இறைத்த நீரில் நெல்லுக்குப் பங்கு உண்டா? தமிழ் நாட்டு சட்ட சபைத் தேர்தல் வாக்களிப்பு ஏப்ரல் 13ம் திகதி நடைபெற்றது. வாக்குகள் எண்ணும் நடவடிக்கை மே 13ம் திகதி வரை நடைபெறும், அதாவது ஒரு மாதம் முற்றாக எண்ணும் பணி நடக்கும். முடிவுகள் 14ம் திகதி தெரியவரும். அடுத்த சட்ட மன்றம் 17ம் திகதி தொடங்கப்பட வேண்டும். தற்போதுள்ள சட்ட மன்றத்தின் காலம் 16ம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது. தமிழ் நாட்டுத் தகவல்களின்படி ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. அப்படியாயின் தமிழக முதல்வர் பதவியை ஜெயலலிதா கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது.…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஸ்விட்சர்லாந்து என்றாலே நம் நினைவுக்கு வருவது பனிமலையும், சாக்லேட்டும். அதே போல ஸ்விஸ் வங்கிக் கணக்குகளுக்கென்றும் ஒரு தனிக் கவர்ச்சி உண்டு. கத்தைக் கத்தையாய்க் கரன்சிகள் சலவையாய் அடுக்கப்பட்டு, ஒரு பக்கம் தங்கக் கட்டிகள் குவிக்கப்பட்டு இருப்பதாகவும், மிகக்கடுமையான இரும்புப் பெட்டகத்திற்குள் திருட்டுப் பணம் பாதுகாப்பாக இருப்பதைப் போலவும் நமக்குத் தோன்றலாம். இதையெல்லாம் தாண்டி ஸ்விஸ் வங்கி என்றதுமே ஆழ்மனதில் முதலில் தோன்றும் விஷயம் "ரகசியம்" மற்றும் "அது பணக்காரர்களுக்கானது". இந்த இரண்டில் ரகசியம் மட்டுமே உண்மை, மற்றபடி ஸ்விஸ் வங்கிக் கணக்கென்பது நம்ம ஊர் பொட்"டீ"க்கடை கணக்கு போலத்தான் யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இத்தொடரில் ஸ்விஸ் வங்கிகள் குறித்தும், வங்கிகள் …
-
- 3 replies
- 2k views
-
-
ஐக்கிய நாடுகளின் நிபுனர் குழு அறிக்கைக்கு அரசு எப்போதும் பொறுப்பு கூறாது எனவும் அவ்வறிக்கை தொடர்பான உண்மைத் தன்மையை ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு தெளிவுபடுத்துவோம் எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் இலங்கையிடம் இருந்து பதில் வரும் என காத்துக்கொண்டு இருக்கின்றனர். முன்னர் அறிக்கை தொடர்பில் தாம் பதில் வழங்க தயாராகி வருவதாகவும் அதற்கு ஒரு குழு அமைக்க போவதாகவும் இலங்கை அரசு ஏமாற்றிக்கொண்டிருந்தது. ஆனால் பீரிஸ் இப்போ இவ்வாறு பதில் அளிக்க முடியாது என கூறுவதன் பின்னணி என்ன. இந்தியா அல்லது சீனா ஆகிய நாடுகள் பதில் அளிக்க வேண்டாம் என ஆலோசனை கூறியதா? ஈழ நாதம்
-
- 1 reply
- 2k views
-
-
யாழின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றினால் குறையும் சாத்தியம் _ வீரகேசரி இணையம் 5/10/2011 8:01:20 AM Share யாழ்ப்பாண மாவட்டத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்து 80 ஆயிரமாக குறைவடையும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் எதிர்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைவடையும் சாத்தியம் உள்ளதாகவும் கருதப்படுகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் இம் மாதம் 30 ஆம் திகதி மாவட்டத்தின் வாக்காளர் இடாப்பு தேர்தல் திணைக்களத்தினால் உறுதிபடுத்தப்படவுள்ளதாகவும் யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் குகநா…
-
- 1 reply
- 1.1k views
-
-
‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் ஈழ மக்களால் நேசிக்கப்பட்ட கணேஷ் மாமாவின் 2 ஆம் ஆண்டு நினைவு நாள் (video in) Monday, May 9, 2011, 21:41 சிங்கள இராணுவத்தின் இன அழிப்பின் போது 09.05.2009 அன்று சிறிலங்கா அரச படைகளின் எறிகணைவீச்சில் படுகொலை செய்யப்பட்டர் . அவரின் 2 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் . ‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞரான கணேஷ் மாமா அவர்கள் 09.05.2009 அன்று சிறிலங்கா மேற்கொண்ட இன அழிப்புத் தாக்குதலில் பலியானார். போராட்டத்துக்காக ‘கலை’ வடிவில் போராடிய உண்மை கலைஞன்….எத்தனை படங்கள், குறும்படங்கள்…வறுமையில் வாடினாலும் போராட்டத்துடன் ஒன்றிப்போன, போராடத்துகாகவே வாழ்வை அர்ப்பணித்து கடைசிவரை உறுதியாக இருந்தா உண்மை மனிதர்களில் இவரும் ஒ…
-
- 1 reply
- 1.6k views
- 1 follower
-
-
மட்டக்களப்பு நாவற்குடாவில் முஸ்லீம் கடைகளுக்கு தீ வைப்பு! Posted by uknews On May 10th, 2011 at 2:24 am மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் இருந்த முஸ்லீம் கடைகள் இரண்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த அமீன் என்பவரின் ஜிதா மோட்டஸ் கடையும் அதற்கு முன் உள்ள கடையுமே இவ்வாறு தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. இதனால் இக்கடைகளில் இருந்த சுமார் மூன்று இலட்சம் பெருமதியான பொருட்கள் தீயில் கருகியுள்ளது. இன்று அதிகாலை 3மணியளவில் இக்கடைகள் தீப்பற்றி எரிந்ததாகவும் சம்பவத்தை கேள்வியுற்ற காத்தான்குடி பொலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அனைத்ததுடன் இது பற்றி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழ் பிரதேசமான நாவற்குடாவில் இருக்க…
-
- 0 replies
- 965 views
-
-
போரினை முடிவுக்குக் கொண்டுவர 38முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன – விக்கிலீக்ஸ்! Posted by admin On May 10th, 2011 at 9:01 am மேற்குலகின் இராஜதந்திரிகள் 2009 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களும் இலங்கைத் தீவின் போரினை முடிபுக்குக் கொண்டு வருவதற்கு எவ்வாறு முனைப்புடன் முயன்றனர் என்பதை வெளிப்படுத்தும் 38 வரையான-விக்கிலீக்ஸ் ஊடாகக் கசிந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சக ஆவணங்களை நோர்வேயின் ஆப்தன்போஸ்தன் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆபதன்போஸ்தன் வெளியிட்டுள்ள கட்டுரையின் தமிழகத்தினை இங்கே முழுமையாகத் தருகின்றோம். 2009 மார்ச் மாதம் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் போரினால் பாரிய மனிதாபிமான அழிவு ஏற்படும் என எச்சரித்திருந்தார். அரசாங்கப் படைகள் அதே தீவிரத்தில் ப…
-
- 0 replies
- 1.5k views
-
-
'புலிகள் சுதந்திரப் போராளிகள், பயங்கரவாதிகளல்லர்' உறுதியுடன் கூறும் அவுஸ்ரேலிய பேராசிரியர். 'புலிகள் சுதந்திரப் போராளிகள், பயங்கரவாதிகளல்லர்' உறுதியுடன் கூறும் அவுஸ்ரேலிய பேராசிரியர் "என்னைப் பணியிலிருந்து விலக்கவேண்டும் என Ceylon கல்லூரி மருத்துவர்கள் அவுஸ்திரேலியக் கல்லூரி மருத்துவர்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தனர். இவ்விடயம் உண்மையில் என்னைப் பெருமையில் ஆழ்த்தியுள்ளது" என பேராசிரியர் Whitehall கூறுகிறார். இவ்வாறு Sydney Morning Herald ஊடகத்தின் இணையத்தளத்தில் Tim Elliott எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் முழுவிபரமாவது, 'பயங்கரவாதிகளின்…
-
- 0 replies
- 902 views
-
-
நிபுணர் குழுவின் பரிந்துரைய நடைமுறைப்படுத்த கனடா வழிகாட்டியாக திகழவேண்டும்! - பேராசிரியர் சரி எய்க்கன் ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கனேடிய அரசாங்கம் அனைத்து ஐ.நா உறுப்பு நாடுகளுக்கும் வழிகாட்டியாக திகழவேண்டுமென பேராசிரியர் சரி எய்க்கன் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகினற் கையெழுத்துப் போராட்டம் குறித்து கனடா ரொறன்ரோவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கெடுத்து உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார். ஐ.நா பொதுப் சபையும், பாதுகாப்புச் சபையும் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தீர்மானத்தை கொண்டு வரவேண்டும் எனவும் குறிப்பிட்டார். பேராசிரியர் சரி எய்க்கன் அவர்கள் குயீன் பல்கலைக்கழகத்தி…
-
- 1 reply
- 389 views
-
-
http://www.maxwell.syr.edu/video.aspx?destinationID=0kNEP6F6kkacBBFK9A4jRw&contentID=8TJoMYpjC0SzjbBKDaDcNA
-
- 1 reply
- 682 views
-
-
இலங்கையில் புரியப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து ஆராய்வதற்கு அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவொன்று அமைக்கப்படவேண்டும் - ராதிகா சிற்சபைஈசன் இலங்கையில் புரியப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து ஆராய்வதற்கு அனைத்துக் கட்சி நடாளுமன்றக் குழுவொன்றை அமைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளவிருப்பதாக கனேடிய நாடாமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ஆராய்ந்து, கனேடிய அரசுக்குப் பரிந்துரைகளை வழங்குவது அந்தக் குழுவின் முக்கிய பணியாக இருக்குமெனவும், அத்தகைய குழுவின் பரிந்துரைகளைக் கனேடிய அரசு ஏற்றுக் கொள்ளுமென தான் நம்புவதாகவும் அவர் பீபீசீயின் சிங்கள சேவையிடம் தெரிவித்தார். உண்மையான மீள் இணக்கம் ஏற்படுவதற்கு, குற்றங…
-
- 1 reply
- 707 views
-
-
வடமராட்சிக் கடற்பகுதியில் சர்ச்சைக்குரிய சிவப்பபு நிறத்தினாலான நீர் - மீனவர்களிடையே அச்சம் வடமராட்சிக் கடற்பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் மிதந்து வருவதாகத் தெரிவிக்கப்படும் சிவப்பபு நிறத்தினாலான நீரினால் மீனவர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 தினங்களுக்கு முன்னதாக பருத்தித்துறையில் 7 பாகை கடற்பகுதியில் ஆழ் கடலில் பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் வழமைக்கு மாறாக இரத்த நிறத்திலான கடல்நீர் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நீண்ட பரப்பரவில் இது பின்னர் விரிவடைந்த போதும் தொழிலுக்குச் சென்று வந்த மீனவர்கள் இத்தகவலை வெளியிட்டபோது மீனவர்களிடையே குழப்பகரமான சூழல் காணப்படுகிறது. இதையடுத்து அப்பகுதிக்கு விஜயம் செய்த மினவ அமைப்பினர் அப்பகுதி நீரின் மாதிரிகளை எடுத்துச்செ…
-
- 0 replies
- 873 views
-
-
தற்போது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு தலைவராக இருக்கும் பிரான்ஸ் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் அமைதி காத்து வருகின்றது. இதுபற்றி பாதுகாப்பு சபை தலைவரான ஜெராட் அரோட் (French ambassador Gerard Araud) இடம் இன்னசிற்றி பிறஸ் கேள்வி எழுப்பியது. அதாவது நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் என்ன செய்வதாக உத்தேசம் என இன்னசிற்றி பிறஸ் கேட்டது. ஆனால் கெராட் இடம் இருந்து உருப்படியான பதில் இல்லை. மீண்டும் இன்னசிற்றி பிறஸ் ஜெராட்டை கேள்வி மூலம் துழைத்தது. ஜெராட் அவர்களே நீங்கள் லிபியாவில் சில மக்கள் கொல்லப்பட்டபோதும், ஏன் ஐவரிகோஸ்டில் சில உயிர்கள் கொல்லப்பட்டபோதும் குரல் கொடுத்தீர்கள். சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் இரு நாடுகளையும் விசாரிக்க தீர்மானம் இயற்றினீ…
-
- 12 replies
- 2.2k views
-
-
இறுதிக்கட்டப் போரில் புலிகள் தொடர்பான தகவல்களை வழங்கியமைக்கு சிதம்பரத்துக்கு இலஞ்சம் கொடுத்த மஹிந்தர்! திங்கட்கிழமை, 09 மே 2011 21:12 வன்னி இறுதிக்கட்டப் போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு இந்திய அரசு சார்பாக செயற்பட்டவர்களுள் காங்கிரஸ் அமைச்சரான சிதம்பரத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ வழங்கிய கையூட்டு தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன. தமிழர்களுக்கு சார்பாக செயற்பட்டு விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்களைக் கறந்து சிங்கள அரசிற்கு வழங்கியதுடன் சர்வதேச மனிதாபிமான நடவடிக்கைகளையும் முடக்கவும் துணை போயிருந்தார். இதற்காக மஹிந்த ராஜபக்ஸ அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி பெயரில் நளினி தொழில் நிலைக்கூட்டு நிறுவனத்திற…
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவராக தமரா குணநாயம்? திங்கட்கிழமை, 09 மே 2011 21:04 ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவராக பணியாற்றிவரும் ஷேனுகா செனவிரத்னவை கொழும்புக்கு திருப்பியழைக்கவுள்ள அதேவேளை கியூபாவில் உள்ள இலங்கைத் தூதுவர் தமரா குணநாயத்தை இப்பதவிக்கு நியமிக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.நா. நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் தொடர்ந்தும் முக்கியம் பெற்றுவரும் நிலையில் இந்நியமனம் அமையவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமரா குணநாயகம் ஜெனீவாவில் வசித்தவர். மனித உரிமை பணியாளராகவும் கடமையாற்றியவராவார். இலங்கைக்கு எதிராக மனித உரிமை விவகாரங்கள் மேலெழும்போது இலங்கையை பாதுகாப்பது குறித்து தமரா முயற்சிப்பார் என்று அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. ஐ…
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
இலங்கை மீது போர்க்குற்றம் தொடர்பில் அனைத்துலக விசாரணை! ஐ.நாவில் மீண்டும் பிரேரணை வருகிறது நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் பிரேரணை ஒன்றைக் கொண்டுவருவதற்காக முயற்சி எதிர்பார்த்த பலனை இன்னும் அளிக்காத நிலையில், ஐ.நா. மனித உரிமைச் சபையில் போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணையை வலியுறுத்தும் பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இது தொடர்பான அவசரக் கூட்டம் ஒன்று அடுத்த வாரம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தலைவர் நவநீதம்பிள்ளை மற்றும் மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ராஜ தந்திரிகளும் …
-
- 0 replies
- 823 views
-
-
தமிழ் உறவுகளிடம் வினாவொன்று..... தமிழ் உறவுகளிடம் வினாவொன்று, தமிழ்ப் புத்திஜீவிகள் என்றால் யார்? அதாவது தமிழ்ப்புத்திஜீவிகள் என்று தமிழுக்காகத் தொண்டாற்றுபவர்கள் அல்லது தொண்டாற்றியவர்கள் இருக்கின்றார்களா? அப்படியிருந்து தமிழுக்காக, தமிழருக்காக, தமிழரது வாழ்வுரிமைக்காகத் தமது புத்தியைத் தீட்டிச் சிங்களத்தை வெட்டி வீழ்த்தியுள்ளார்களா? இந்தப் புத்திஜீவிகளில் எத்தனைபேர் சிங்களத்துக்கு ஆலோசனை வழங்குபவர்களாக இருந்தார்கள். இருக்கின்றார்கள். புத்திஜீவிகளாகட்டும், செயல்வீரர்களாகட்டும் தமக்குள், அதாவது தமிழருக்குள் தமிழரை வீழ்த்துவதில் மட்டுமே சூரர்களாக உள்ளமையே நிதர்சனமாக உள்ளது. உண்மையில் தமிழினம் புத்திஜீவிகளைக் கொண்டது என்பதாயின் 2009 மேயின் பின்னராவது ஒரு அணியாக நின…
-
- 6 replies
- 1.9k views
- 1 follower
-
-
மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த சர்வ கட்சி பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட வேண்டும் : கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த சர்வ கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும் என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார். நிபுணர்கள் குழுவின் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் ராதிகா குறிப்பிட்டுள்ளார். சகல மக்களினதும் கடமை, சம உரிமை, நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் கன…
-
- 0 replies
- 516 views
-