Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெள்ளத்தால் பாதிப்புற்ற 701 மாணவர்களுக்கு உதவுங்கள் கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தமது கல்விக்கான உபகரணங்கள் மற்றும் சீருடைகளை இழந்த மாணவர்களுக்கான உதவிகள் கோரப்படுகிறது. அம்பாறை ஆலையடி வேம்பு பிரதேச சபையில் பாதிக்கப்பட்ட 781மாணவர்களுக்கான உதவிகளை வேண்டியிருந்தனர். இதன் முதற்கட்டமாக 10.02.2011 அன்று இரு பாடசாலைகளில் கற்கும் 1முதல் தரம் 5வரையான 80 மாணவர்களுக்கான உதவிகளை நேசக்கரம் ஊடாக புலம்பெயர் உறவுகளால் வழங்கப்பட்ட நிதியிலிருந்து கற்கை உபகரணங்கள் மற்றும் சீருடைத்துணிகளை வழங்கியிருந்தோம். மேலும் ஆலையடி வேம்பு பிரதேச சபையில் உள்ள 5பாடசாலைகளான :- இராமகிருஷ்ணா மிஷன் மகா வித்தியாலயம் 135 இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை 3…

    • 0 replies
    • 765 views
  2. Feb 11, 2011 / பகுதி: செய்தி / ஐ.நா அமைதிப்படைக்கு மேலதிக சிறீலங்கா படையினர் ஐக்கிய நாடுகள் அமைதிப் படையில் பணியாற்றவென மேலதிக படைகளை அனுப்புவதற்கு சிறீலங்கா அரசாங்கம் எண்ணியுள்ளது. நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முன்வைத்த ஆலோசனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஐக்கிய நாடுகள் அமைதிப் படையில் ஏற்கனவே சிறீலங்கா படையினர் 1215 பேர் பணியாற்றி வருவதாக படைத்தரப்பினர் தெரிவித்தனர். ஏற்கனவே ஹெயிட்டியில் ஐக்கிய நாடுகள் அமைதிப் படையில் பணியாற்றி சிறீலங்கா படையினர் நூறுக்கும் மேற்பட்டோர் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்ப்பட்டிருந்தனர். pathivu

  3. பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதுவராக, சென்னைத் துணைத் தூதுவராக கடமையாற்றிய கே.பத்மநாதனை நியமிக்க சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸினால் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தூதுவர் பத்மநாதன் ஒரு வாரத்திற்கு முன்னரே தனது தூதரகப் பணிகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறிலங்கா அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சின் எவ்வித ஊடக அறிவித்தலும் இன்றி, மிகவும் இரகசியமான முறையில் பத்மநாதனின் நியமனத்தை மேற்கொண்டுள்ளதையிட்டு கொழும்பு ஊடகங்கள் சந்தேகம் தெரிவித்துள்ளன. பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதுவராக கடற்படைத் தளபதி வசந்த கன்னரங்கொட நியமிக்கப்படவுள்ளதாக கடந்த வருடம் செய்திகள் வெளியாகியிருந்த போதும், படைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக ப…

    • 3 replies
    • 1.3k views
  4. வியாழக்கிழமை, 10, பிப்ரவரி 2011 (22:9 IST) வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் காக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா தாக்கல் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் காக்கவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும் வழிவகை செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென தனி நலநிதியம் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இதனை காங்கிரஸ் மற்றும் பாமக உறுப்பினர்கள் வரவேற்றனர். காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், தமிழகத்திலே வாழுகிற தமிழர்கள் மட்டுமல்ல. இந்திய எல்லைக்குள் வாழுகிற தமிழர்களுக்கு மட்டுமல்ல. கடல் கடந்து வாழும் தமிழர்களையும் நான்தான் பாதுகாப்பேன…

  5. மீண்டும் ஒரு உள்நாட்டுப் போர் வெடிப்பதற்கான சாத்தியம்-அமெரிக்க முன்னாள் தூதுவர் [ பிரசுரித்த திகதி : 2011-02-10 04:30:21 PM GMT ] மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறீலங்கா அரசாங்கம் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தத் தவறினால் மீண்டும் ஒரு உள்நாட்டுப் போர் வெடிப்பதற்கான சாத்தியம் இருப்பதாக, சிறீலங்காவிற்கான முன்னாள் அமெரிக்க தூதுவரான ரெறேசிற்றா ஸ்க்ஹாபர் (Teresita Schaffer) எச்சரிக்கை செய்திருக்கின்றார். தெற்காசிய கொள்கைகளுக்கான திட்டமிடல் மையமும், அனைத்துலக கற்கையும் (South Asia Programme at the Center for Strategic and International Studies) என்ற அமைப்பின் இயக்குனராக தற்பொழுது திகழும் இவர், தெற்காசியாவின், குறிப்பாக நேபாளம், இலங்கை உட்பட பாதுகாப்பு தொடர்பில் அமெரிக…

  6. தமிழர்களின் அரசியல் போராட்டம் சர்வதேச அரங்கில் வீறு பெற்று உள்ளது! அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் கருத்து (ஒலிப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது) வியாழன், 10 பெப்ரவரி 2011 15:04 தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் தோற்கடிக்கப்படவே இல்லை, மாறாக சர்வதேச மட்டத்தில் வியாபித்து நிற்கின்றது என்று பிரபல அரசியல் ஆய்வாளர்களில் ஒருவரும், அரசியல் அவதானியும், சட்டத்தரணியும், ஆசிரியருமான சி.அ. ஜோதிலிங்கம் தெரிவித்து உள்ளார். இவர் இலங்கையின் உள்நாட்டு அரசியல் நிலைமைகள் குறித்து தமிழ் சி.என்.என் இற்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறி உள்ளார். இவர் இப்பேட்டியில் முக்கியமாக தெரிவித்து இருந்த விடயங்கள் வருமாறு:- "போரின் தோல்வியோடு எல்லாம் முடிந்து விட்டது என்கிற மனநிலை தமி…

  7. நயினாதீவு விகாரையை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் கடற்படையினர்: பாரிய புத்தர் சிலையொன்று புதிதாக அமைக்கப்படவுள்ளது.... வியாழக்கிழமை, 10 பிப்ரவரி 2011 09:23 நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையில் சிறிலங்கா கடற்படை இறங்கியுள்ளது. சிறிலங்கா கடற்படையின் உதவியுடன் தேசிய கட்டட மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் இந்த விகாரை விரிவாக்கப்படவுள்ளது. விகாரை புனரமைப்பு நடவடிக்கைளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நேற்றுமுன்தினம் காலை இடம்பெற்றது. நயினாதீவு விகாரையில் 3,157,000 ரூபா செலவில் பாரிய புத்தர் சிலையொன்று புதிதாக அமைக்கப்படவுள்ளது. இந்தப் பாரிய புத்தர் சிலையின் அடித்தளத்துக்கான அடிக்கல்லை சிறிலங்கா கடற்படையின் வடபிராந்திய தளபதி றி…

  8. 39 மாத காலப் பகுதியில் 36 தடவைகள் வெளிநாட்டுப் பயணங்கள்! முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித சாதனை வியாழன், 10 பெப்ரவரி 2011 15:29 வெளிநாட்டு அமைச்சராக பதவி வகித்த 39 மாத காலப் பகுதியில் 36 தடவைகள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு இருக்கின்றார் ரோஹித போகொல்லாகம. இவற்றுள் இந்தியாவுக்கு 10 தடவைகளும், பிரித்தானியாவுக்கு 08 தடவைகளும், சீனாவுக்கு 04 தட்வைகளும், அமெரிக்காவுக்கு 04 தடவைகளும் சென்று இருக்கின்றார். இவரது வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஒட்டுமொத்தம் 02 கோடியே 70 இலட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவாகி உள்ளது. tamilcnn

  9. தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் அறுவருக்கு எதிராக பிடியாணை! வெள்ளி, 11 பெப்ரவரி 2011 00:26 தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த ஆறு முன்னணி உறுப்பினர்களை கைது செய்கின்றமைக்கான பிடியாணை உத்தரவை கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று பிறப்பித்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மில்லியன் கணக்கான ரூபாயை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மூலமாக வழங்கி இருந்தனர் என்று குற்றஞ்சாட்டி இந்நீதிமன்றத்தில் மேற்படி ஆறு பேருக்கும் எதிராக வழக்கு இடம்பெறுகின்றது. ஆனால் எதிரிகள் மன்றுக்கு ஆஜராகின்றமை கிடையாது. இந்நிலையில் எதிரிகளை கண்ட இடத்தில் கைது செய்கின்றமைக்கான உத்தரவை குற்றப் புலனாய்வுப் பொலிஸாருக்கு நீதிபதி டபிள்யூ.ரி.எம்.பி.வி.வெரவெவ பிறப்பித்தார். இவ…

  10. யாழ்ப்பாணத்தில் இரு வௌ;வேறு இடங்களிலிருந்து ஆண்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் ஒன்று யாழ் சுழிபுரம் மேற்குப் பகுதியில் உள்ள குளமொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச் சடலம் அதே பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரான இருபத்தெட்டு வயதுடைய முருகேசு சிவநேசன் என்பவரின் சடலம் என உறவினர்களால் இனம் காணப்பட்டுள்ளது. மற்றுமொரு சடலம் யாழ் கொக்குவில் தலையாளி கிழக்குப் பகுதியின் ஆள் நடமாற்றம் இல்லாத பிரதேசம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. அச் சடலம் கொக்குவில் பிரதேச வாசியான சிவசங்கர் என்பவரது சடலம் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். பிரஸ்தாப நபர் கடந்த சனிக்கிழமை முதல் காணாமற் போனயிருந்ததாகவும், அதன்…

  11. தமிழ்ச் சமூகத்தின் நிலைப்பாடு என்ன...? தமிழ்ச் சமூகம் எவருக்கும் அடிமைப்பட்டதாக இருந்ததுமில்லை, இருக்கப் போவதுமில்லை. பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டமை தமிழ் இளைஞரை ஆயுதம் ஏந்தும் நிலைக்கு இட்டுச் சென்றிருந்தது. தனித்துவம் மிக்க இனமாக வாழ நினைத்த தமிழினத்தை ஒடுக்க முற்பட்டமையே போர் அழிவுகள் இடம்பெற்றமைக்குக் காரணமாயிருந்தன. ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 34ஆவது சிரார்த்ததினம் இன்றாகும் 1901 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் திகதி கணபதிப்பிள்ளை காங்கேயர் தம்பதிகளுக்கு அருந்தவப் பேறாகத் தோன்றிய பொன்னம்பலம் இளமையில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரியிலும் பின்னர் கொழும்பு சென்.ஜோசப்ஸ் கல்லூரியிலும் கல்வி கற்றார். அவருடைய கல்லூரிக் காலத்திலே பேச்சுத் திற…

  12. யாழ் ஸ்ரான்லி வீதி ஒருபக்கம் பள்ளமான குழிகளால் ஆன சீரில்லாத பகுதியாகவும் மற்றப் புறம் சீரான நேரிய பகுதியாகவும் காணப்பட்டு வீதியால் பயணிப்பவர்களை யோசனையில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் அவ் வீதியில் பயணிப்பவர்கள் சிலர் இப்பகுதிகள் இரண்டுக்கும் இடையில் காணப்படும் பிரதேசத்தில் சறுக்கி விழுவதுமாக இருக்கின்றார்கள். யூரோவில் நிறுவனம் இவ் வீதியைப் புனரமைப்பு செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இருந்தும் முக்கிய வர்த்தகப் பகுதி மற்றும் முக்கிய அமைச்சர் ஆகியோரது அலுவலகங்கள் இருக்கும் இவ் வீதியை இவ்வாறு அர்த்தநாதீஸ்வரர் கோலத்தில் விட்டுள்ளது அனைவரையும் அசெளகரியப்படுத்துகின்றது. thx newjaffna.com

  13. நல்லெண்ண தூதுவராக செயல்பட அருகதை அற்றவர் நோர்வேயின் சொல்ஹெய்ம்! பிரதமர் டி.எம் ஆவேசம் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் சமூகத்துக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் நல்லெண்ணத்தை கட்டி எழுப்ப வல்ல தூதுவராக செயல்பட நோர்வே நாட்டின் எரிக் சொல்ஹெய்மை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்து உள்ளார் பிரதமர் டி.எம்.ஜயரட்ண. அரசு - தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோருக்கு இடையில் நோர்வேயின் சமாதான தூதுவராக செயல்பட்டவர் சொல்ஹெய்ம். நோர்வே நாட்டின் சுற்றாடல் துறை அமைச்சராக தற்போது உள்ளார். போருக்கு பிந்திய இலங்கையில் அரசு-புலம்பெயர் தமிழ் சமூகம் ஆகியவற்றுக்கு இடையில் நல்லெண்ணத்தை ஏற்படுத்த வல்ல தூதுவராக செயல்பட பெருவிருப்பம் கொண்டு உள்ளார் என்று அடிக்கடி வெளிப்படுத…

  14. வியாழக்கிழமை, பெப்ரவரி 10, 2011 வடக்கு கிழக்கில் பெய்த கடும் மழையினால் அங்கு 90 விழுக்காடு வயல் நிலங்கள் அழிந்துள்ளன. இவ்வாறு கூறியுள்ளார் ஒக்ஸ்பாம் வதிவிட பிரதிநிதி. இதனால் நெற்செய்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தென்பகுதிகளுக்குவடக்கு கிழக்கு பகுதிகளில் உற்பத்தியாகும் அரிசி உணவு தேவைகலை பூர்த்தி செய்து வந்தது ஆனால் இப்போ இலங்கை முழுவதும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதார அழிவு வடக்கு கிழக்கில் ஏற்பட்ட சுனாமி பொருளாதார அழிவினை விட மோசமானது என கூறியுள்ளார் ஒக்ஸ்பாம் பிரதிநிதி. http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%…

  15. அம்பாறை சங்கமன்கண்டி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ள 80 குடும்பங்களுக்கு நேசக்கரம் நிதியுதவியுடன் உலர் உணவு பொருட்களை வழங்கப்பட்டது. பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள சங்கமன்கண்டி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முன்பள்ளி பாடசாலைக் கட்டிடத்தில் 80 குடும்பங்கள் தஞ்சமடைந்துள்ளனர். இக் குடும்பங்களுக்கு அரசா அரசசார்பற்ற நிறுவனங்களினால் எதுவித நிவாரணங்களும் வழங்கப்படாத நிலையில், நேசக்கரம் தொடர்பாளர்கள் மேற்படி பிரதேசத்திற்குச் சென்று நிலமைகளை அறிந்து உதவிகளை வழங்கியுள்ளனர். இவ் நிவாரணத்தைப் பெற்றுக் கொண்ட சம்மன்கண்டி மக்கள் பாதிக்கபபட்டு மூன்று தினங்களாக ஒரு நேர உணவை மட்டும் பெறக்கூடியதாக …

    • 2 replies
    • 736 views
  16. வியாழக்கிழமை, பெப்ரவரி 10, 2011 வெள்ளத்தால் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கட்டையடம்பன் கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்ட போதும் எந்த அதிகாரிகளும் உதவவில்லை என்றும் கச்சான் கடலையை மூன்று நேர உணவாக உண்பதாகவும் அக்கிராம மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் புகார் தெரிவித்துள்ளனர். இக் கிராமதிற்குச் சென்ற பாராளுமன்ற உருப்பினர் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து உரையாடியுள்ளார். 83 குடும்பங்களில் 15 குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதோடு செட்டியர் மகன் கட்டையடம்பன் பாடசாலையில் தங்கியுள்ளனர். ஆனால் எங்கள் கிராமத்திற்கு பொறுப்பாகவுள்ள கிராம அலுவலகர் எங்கள் பகுதிக்கு வந்து 5 நாட்களைக் கடந்துவிட்ட…

  17. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களான செ.கஜேந்திரன், சி.வரதராஐன், வி.மணிவண்ணன் ஆகியோர் இன்று மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிவழங்குவதற்காக மட்டக்களப்பிற்கு பயணமாகியுள்ளனர். அவர்கள் செல்லும் வழியில் மன்னம்பிட்டியில் வீதியை மூடி வெள்ளம் பாய்ந்தமையால் தொடர்ந்து பயணிக்க முடியாத நிலையில் கிரிதலை என்ற இடத்தினூடாக பயணம் செய்து நேற்று நள்ளிரவு மட்டக்களப்பைச் சென்றடைந்துள்ளனர். நேற்று நள்ளிரவு மட்டக்களப்பை சென்றடைந்த தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கான உதவிகளை வழங்குவவதோடு, மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விஜயம் செய்யவிருப்பதாகவும் தெரியவ…

  18. இலங்கையில் நடந்த இறுதிப்போரில் போர்க்குற்றங்கள் நடந்தேறியுள்ளன. இதனை அமெரிக்கா உற்றுனோகி வருகின்றது. அமெரிக்காவின் போர்க்குற்றம் தொடர்பான கரிசனை ஓர் விளையாட்டானது அல்ல என அமெரிக்காவின் முன் நாள் தூதுவர் திரேசா சவர் கூறியுள்ளார். இலங்கையில் சிறந்ததோர் தீர்வு எட்டப்படாவிடில் அங்கு உள் நாட்டு போர் மீண்டும் வெடிக்கலாம் என கூறியுள்ளார் திரெஸ்ஸா -------------- http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%…

  19. விடுதலைப் புலிகளின் பிரசார வீடியோக்களுடன் மாத்தளையில் ஐவர் கைது! வியாழன், 10 பெப்ரவரி 2011 11:50 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரசார வீடியோக்களுடன் ஐந்து பேர் மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ள பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டு உள்ளார்கள். பொலிஸ் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் ஹோட்டலை முற்றுகை இட்டு இக்கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். கைதானவர்களின் உடைமையில் இருந்து ஒரு கமரா, புலிகள் இயக்க புரட்சி பாடல்கள் கொண்ட சி.டிகள், 15,000 ரூபாய் பணம், ஒரு வான் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு உள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் கிறி…

  20. ஆங்கிலத்துக்கு மகுடம் சூட்டும் உயர் கல்வி அமைச்சு! எதிர்வரும் நாட்களில் பல்கலைக்கழக அனுமதியை மாணவர்கள் பெறுகின்றமைக்கு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் பொது ஆங்கிலம் என்கிற பாடத்தில் சித்தி பெற வேண்டியமை கட்டாயம் ஆகும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது உயர் கல்வி அமைச்சு. உயர்தர மாணவர்கள் 'பொது ஆங்கிலம்' பாடப் பரீட்சைக்கு கட்டாயம் தவறாது தோற்றியே ஆக வேண்டும் என்றும் இல்லா விட்டால் பல்கலைக்கழக அனுமதியை பெறுகின்றமைக்கு அருகதை அற்றவர்கள் என்றும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க அறிவித்து உள்ளார். மாணவர்கள் பொது ஆங்கில பாடப் பரீட்சையில் பெறுகின்ற புள்ளிகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுவார்கள் என்று உயர்கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஜயந்த நவரட்ண தெ…

  21. யாழ். புனித புத்திரிசியர் கல்லூரியில் இன்று காலை 9 மணிக்கு புதிய கூடைப்பந்தாட்ட திடல் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா கல்லூரி அதிபர் வண பிதா ஜெறேம் செல்வநயகம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக பிரிகேடியர் சு. டேவிட் , திருமதி பேர்ல்லி டேவிட் ஆகியோர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவை தொடர்ந்து கூடைப்பந்தாட்ட காட்சிப் போட்டி நடைபெற்றது. காட்சி கூடைப்பந்தாட்டப் போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரி அணியுடன் வட்டுக்கோட்டை யாழ்ப்பணக்கல்லூரி அணி மோதியதில் 25-16 என்ற புள்ளி அடிப்படையில் பத்திரிசியார் கல்லூரி அணி வெற்றி பெற்றது. புதிய கூடைப்பந்தாட்டத் திடலை அமைப்பதற்காகன பிரதான பங்களிப்பினை திறப்பு விழா…

  22. யுத்தம் முடிந்தும் தமிழ் மக்கள் மீது இப்போதும் வேறுபட்ட அணுகுமுறை குடாநாட்டில் புகைப்படம் பிடித்தல், கிளிநொச்சியில் சிங்கள கடிதங்களுக்கு கையொப்பம் பெறுவதைச் சுட்டிக்காட்டி தமிழ்க் கூட்டமைப்பு கடும் விசனம் யுத்தம் முடிவடைந்து விட்டதாக அரசு கூறுகின்ற போதும் தமிழ் மக்களை வித்தியாசமான மனப்பான்மையிலேயே நோக்குவதாகக் குற்றம் சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.எஸ்.ஸ்ரீதரன், யாழ்.குடாநாட்டில் குடும்பம் குடும்பமாக இராணுவத்தினர் புகைப்படம் எடுப்பதற்கும் கிளிநொச்சியில் சிங்களத்தில் எழுதப்பட்ட கடிதங்களில் கையொப்பம் பெறும் செயலுக்கும் கடும் கண்டனம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டநீடிப்புப் பிரேரணை …

  23. இலங்கை மத்திய வங்கி இன்று புதிய நாணயத்தாள்களை வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று இலங்கையின் 63வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய நாணயத்தாள்களை வெளியிட்டுள்ளது இந் நாணயத்தாள்கள் அபிவிருத்தி, சுபீட்சம் மட்டும் இலங்கை நடனக்காரர் என்று தொனிபொருளுடன் வெளியிடப்பட்டுள்ளன . புதிய தொடர்கள் ரூ.20 , ரூ.50, ரூ.100 , ரூ.500, ரூ.1,000 மற்றும் ரூ.5000 பெறுமதி கொண்ட நாணயத்தாள்களாக உள்ளடக்கின்றன . ஒவ்வொரு தாளும் முன்பக்கம் நாட்டின் சுபீட்சத்திற்கு பொருளாதார முன்னேற்றத்தின் அடையாளத்தைச் சித்தரிக்கிறது . வீரகேசரியிலிருந்து........

  24. இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பாணை அனுப்புமாறு அமெரிக்க நீதிமன்றத்தைக் கோரவுள்ளதாக வழக்கறிஞர் புறூஸ் ஃபெய்ன் தெரிவித்தார். தாங்கள் தொடுத்துள்ள வழக்கில், இலங்கை ஜனாதிபதி பதிலளிக்கக் கோரும் நீதிமன்ற அழைப்பாணையை, அலரிமாளிகையின் விலாசத்திற்கு அனுப்புமாறு நீதிமன்ற அதிகாரிகளிடம் கோரவுள்ளதாக மூன்று தமிழர்களின் சார்பில் வழக்குத் தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் புறூஸ் பெய்ன் தெரிவித்தார். அது குறித்து நேற்றுச் செய்திக் குறிப்பொன்றை அவர் வெளியிட்டார். னுளைவசiஉவ ழக ஊழடரஅடியை வுக்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில், தமிழர்கள் சட்டவிரோதமான முறையில் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டமை தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது வழக்கொன்றைக் கடந்த மாதம் 28 ஆந் திகதி தாக்கல் செய்ததா…

    • 0 replies
    • 628 views
  25. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைச் சிறையிலிருந்து விடுதலை செய்யக்கோரி இலங்கையின் சுதந்திரதினமான கடந்த வெள்ளிக்கிழமை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பொரளையில் தீப்பந்த ஊர்வலத்தையும் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் அனுசரணையுடனான ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கம் நேற்று முன்தினம் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தையும் நடத்தியிருந்தன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை எதிரணியின் பொது வேட்பாளராக நிறுத்துவதில் இணங்கிச் செயற்படக் கூடியதாக இருந்த எதிரணிக் கட்சிகளினால் அவரின் விடுதலைக்காக ஒரு வருடத்துக்குப் பின்னர் ஒருங்கிணைந்து போராட்டங்களை முன்னெடுக்க முடியாமல் இருக்கிறது. அரசாங்கத்துக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் தங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.