ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143311 topics in this forum
-
ஈழத் தமிழர்களுக்காக அமெரிக்காவில் ஒலித்த குரல்! ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்யண உரிமையின் அடிப்படையில் நிரந்தரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் don davis கூறியுள்ளார். பிரதிநிதிகள் சபையில் நேற்று உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 2009 ஆம் ஆண்டில் தமிழர் இனப்படுகொலை புரியப்பட்டதாகக் கூறினார். அண்மையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெற்றதை அவர் சுட்டிக் காட்டினார். தமிழர்களுக்கு வழங்கப்படும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வு இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அமைதியையும், …
-
- 4 replies
- 442 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) காலனித்துவ ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதை போன்று லசந்த விக்கிரமதுங்க, ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன் படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு நியமிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், இந்த ஆண்டு மார்ச் 21,செப்டெம்பர் 09,ஒக்டோபர் 04,ஒக்டோபர் 18,நவம்பர் 24, நவம்பர் 30, டிசெம்பர் 06 மற்றும் டிசெம்பர் 08 ஆகிய திகதிகளில் இரு…
-
- 1 reply
- 422 views
-
-
இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை அறிவிக்கவேண்டும் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோள்களிற்கு பிரிட்டனின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஆன் மேரி டிரெவெல்யன் உறுதியான பதிலை வழங்கதவறியுள்ளார். இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து இடம்பெற்ற கடுமையான விவாதங்களின் போது பிரிட்டனின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஆன் மேரி டிரெவெல்யன் உறுதியான பதிலை வழங்கதவறியுள்ளார். கென்சவேர்ட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவருமான எலியட் கோர்ல்பேர்ன் அமைச்சர நோக்கி நேரடியாக பின்வரும் கேள்வியை எழுப்பினார். இலங்கையின் உயர் சமூகத்தை சேர்ந்த யுத்த குற்றங்களில் ஈடுபட்டனர் என நம்பகத…
-
- 0 replies
- 266 views
-
-
13 DEC, 2023 | 02:25 PM யாழ்ப்பாண மாவட்டத்தில் சீனியை பதுக்கி செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனி கூட்டுறவு சமாசம் ஊடாக கிடைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. சீனியின் கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சீனி தனியார் இறக்குமதியாளர்களிடம் இருப்பதாகவும் செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதாகவும்…
-
- 0 replies
- 351 views
- 1 follower
-
-
"எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி மக்களுக்கு ஜே.வி.பி. தலைவர் அழைப்பு Published By: RAJEEBAN 10 DEC, 2023 | 01:09 PM எங்களுடன் இணையுங்கள் நாங்கள் உங்கள் தேவைகளைபூர்த்தி செய்வோம் என வடபகுதி மக்களிற்கு வேண்டுகோள் விடுத்துள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க ஊழல்மிகுந்த ஆளும்குழுவை தோற்கடிப்பதற்கான தேசிய விடுதலை இயக்கத்திலும் நீங்கள் இணைந்துகொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்து நாளிதழிற்கான பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் எங்களின் நெருங்கிய அயல்நாடான இந்தியா மிகவும் வலுவான அரசியல் பொருளாதார மையமாக மாறியுள்ளமை எங்களிற்கு தெரியும். ஆகவே பொருளாதார அரசி…
-
- 13 replies
- 713 views
-
-
13 DEC, 2023 | 09:57 AM வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினர் நெடுங்கேணி பொலிஸாரால் அழைக்கப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை (12) மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வவுனியா வடக்கு, ஓலுமடு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயம் தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் புத்தர் சிலையும் வைப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்றிருந்ததுடன், ஆதிசிவன் ஆலய விக்கிரகங்களும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் வழக்கு விசாரணைகளின் பின்னர் தொல்பொருட்களை சேதப்படுத்தாது வழிபாடு செய்வதற்கு வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இந்…
-
- 0 replies
- 281 views
- 1 follower
-
-
12 DEC, 2023 | 06:18 PM (எம்.மனோசித்ரா) கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி குளத்தின் மேற்பரப்பில் 1727 மில்லியன் டொலர் நேரடி வெளிநாட்டு முதலீட்டில் சூரிய மின்சக்தி திட்டம் நிறுவப்படவுள்ளது. இதற்காக அவுஸ்திரேலியாவின் யுனைற்றட் சோலர் எனர்ஜி நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பூநகரி குளத்திலிருந்து புதிய கிளிநொச்சி உப மின் நிலையம் வரை தேவையான மின்கடத்திக் கட்டமைப்பை நிர்மாணித்தல் உள்ளிட்ட 100 வீத மின்கல வலுசக்தி காப்புக் கட்டமைப்புடனான 700 மெகாவொட் சூரிய மின்சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக யுனைற்றட் சோலர் எனர்ஜி கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவை கொள்கை ரீதியில் ஏற்றுக்…
-
- 0 replies
- 358 views
- 1 follower
-
-
12 DEC, 2023 | 12:44 PM கற்பிட்டி அழகிய கடலில் விளையாட்டுத்தனமான டொல்பின் மற்றும் இராட்சத திமிங்கலங்களை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டொல்பின் மற்றும் திமிங்கலங்களை டிசம்பர் முதல் அடுத்த வருடம் ஏப்ரல் இறுதி வரைக் காணமுடியும். பொதுவாக காலை நேரங்களில் டொல்பின்களைப் காணமுடியும். குறித்த டொல்பின் மற்றும் திமிங்கலங்களை இலந்தையடி, கண்டகுழி, கற்பிட்டி ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்க்கலாம். ஸ்பின்னர் டொல்பின்கள், பாட்டில்நோஸ் டொல்பின்கள், புள்ளிகள் கொண்ட டொல்பின்கள், ஃப்ரேசரின் டொல்பின்கள் மற்றும் இந்தோ-பசிபிக் ஹம்பக் டொல்பின்களும் கற்பிட்டி கடலில் காணப்படுகின்றன. அத்துடன், நீல திமிங்கலங்கள் , மின…
-
- 0 replies
- 474 views
- 1 follower
-
-
நாட்டில் இனி குற்றங்களுக்கு தண்டனை இல்லை ! : புது சட்டம்? வறுமை அல்லது வேறு காரணங்களால் சிறு குற்றங்களைச் செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைப்பது போன்ற தண்டனைகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சிறு குற்றங்களைச் செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, அந்த நபரின் பெற்றோர் அல்லது உறவினர்களிடம் பத்திரத்தில் கையொப்பமிட்டு அவர்களை ஒப்படைக்க முடியும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறிய தவறு செய்தவர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, அவர்களின் உடலில் ‘சிப்’ பொருத்தி, வெளிநாடுகளில் உள்ளதைப் போன்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க எதிர்பார்க்கப…
-
- 3 replies
- 346 views
- 1 follower
-
-
12 DEC, 2023 | 04:17 PM (எம்.மனோசித்ரா) யாழ்ப்பாணத்திலுள்ள சிறிய தீவுகளில் இரட்டை ரக புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கட்டமைப்புகளை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. யாழ்ப்பாண தீபகற்பத்தின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் குடியிருப்போருக்கு மின்சாரம் வழங்குவதற்காக 11 மில்லியன் டொலர் பங்கான நிதி அனுசரணையை இலங்கை அரசுக்கு வழங்குவதற்கு இந்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கமைய குறித்த கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக இந்திய ஒப்பந்ததாரர்களிடமிருந்து மட்டும் விலைமனு கோரப்பட்டுள்ளது. அதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 362 views
- 1 follower
-
-
திஸ்ஸ விகாரைக்கு சிங்கள மக்கள் படையெடுப்பு - சிறப்பு ரயில்களில் வந்தனர் ஆதவன். யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகா ரைக்கு நேற்று சுமார் 400 சிங்கள மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். சிறப்பு ரயிலில் அவர்கள் அழைத்து வரப்பட்டு, திஸ்ஸ விகாரையில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்ந்த கர்ப்பிணிப் பெண்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்ந்தோருக்கு சிறப்பு உதவித் திட்டங்களும் அவர்களால் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, தையிட்டியில் இதுவரை விடுவிக்கப்படாதுள்ள காணிகளையும் அந்த மக்கள் பார்வையிட்டுள்ளனர். இது, காணிகளை சிங்கள மக்களுக்குத் தாரை வார்க்கும் முயற்சியா? என்று அந்தப் பகுதியிலுள்ள மக்கள் சந்த…
-
- 1 reply
- 410 views
-
-
யாழில். ஊடகவியலாளரின் வீடு புகுந்து கொலை அச்சுறுத்தல். யாழில் கும்பலொன்று ஊடகவியலாளர் ஒருவரின் வீடு புகுந்து அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வியங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவருக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ தினமான நேற்று(11) மாலை, முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 06 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் அடங்கிய கும்பல் குறித்த ஊடகவியலாளரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை தாக்க முற்பட்டதாகவும், இதன்போது அயலவர்கள் கூடியமையினால் அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது. போதைப்பொருள் …
-
- 1 reply
- 365 views
-
-
கூலிப்படையாக சென்றவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியாது – பாதுகாப்பு அமைச்சு. வெளிநாடுகளில் கூலிப்படையாக செயல்படும் முன்னாள் இராணுவ வீரர்கள் அல்லது தனிநபர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அமைச்சிற்கோ அல்லது நாட்டின் இராணுவத்திற்கோ எந்த அதிகாரமும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டால் மட்டுமே சட்ட நடவடிக்கை எடுக்க முடியும், இல்லையெனில், அத்தகைய நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலின் போது உக்ரேனிய வெளிநாட்டு படையணிக்காக போரிட்ட மூன்று இலங்கை முன்னாள் இராண…
-
- 0 replies
- 387 views
-
-
காணாமல் போன சிறுவர்கள் குறித்து பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள தகவல்! நாட்டில் கடந்த இரு நாட்களில் 4 சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி, பொரலஸ்கமுவ – வெரஹெர பிரதேசத்தில் வசிக்கும் 15 வயது சிறுவனும், கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுவனும், ஹற்றன் – பொல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுமியும், யடியன தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 15 வயதுடைய சிறுமி ஒருவரும் என 4 பேர் காணாமல் போன சிறுவர்களில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், காணாமல் போனவர்களில் நுவரெலியாவைச் சேர்ந்த 18 வயது யுவதியும், பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணும், …
-
- 0 replies
- 184 views
-
-
Published By: DIGITAL DESK 3 12 DEC, 2023 | 08:55 AM குருந்தூர்மலை தொடர்பான வழக்கு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (11) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்றிருந்தது. B1053 /2022 என்ற இலக்கமுடைய வழக்கு தொடர்ச்சியாக தவணைகள் வழங்கப்பட்டு இடம்பெற்று வந்த நிலையில் நேற்று குறித்த வழக்கு இடம்பெற்ற போது நீதிமன்றிற்கு வருகை தந்த சட்டத்தரணிகள் அனைவரும் எழுந்து நின்று ஆதரவு தெரிவித்திருந்தனர். வழக்கு விசாரணை நடைபெற்று விவாதங்கள் நடைபெற்று 29 ஆம் திகதி பெப்ரவரி மாதம் 2024 அன்று வழக்கு தவணையிடப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும், சைவ வழிபாடுகளை மேற்கொள்ள எந்தவித இடையூறுகளும் விளைவிக்க கூடாது, குருந்தூர் மலையை…
-
- 0 replies
- 137 views
- 1 follower
-
-
10 DEC, 2023 | 10:56 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தனது உயிருக்கு இராணுவத்தினராலும் பாதுகாப்பு தரப்பினராலும் அச்சுறுத்தல் என்று மிஹிந்தலை விகாராதிபதி கருதுவாராயின் இராணுவத்தினர் உட்பட 251 பாதுகாப்பு அதிகாரிகளை மீளப் பெற்றுக்கொள்ளுவோம். இராணுவத்தின் மீது படுகொலை குற்றச்சாட்டை முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மிஹிந்தலை புனித பூமிக்கு பணிக்கு செல்ல இராணுவத்தினர் விரும்பவில்லை. ஆகவே பாதுகாப்பு தரப்பினரை மீளப்பெறும் தீர்மானத்தில் மாற்றமில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்…
-
- 1 reply
- 204 views
- 1 follower
-
-
11 DEC, 2023 | 05:44 PM யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரான தர்ஷனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரும் ஊடகவியலாளருமான இராசரத்தினம் தர்ஷனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து சுமார் 4 மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவ்விசாரணை காலை 10 மணிக்கு ஆரம்பமாகி 2.30 வரை தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முன்னெடுத்தபோது தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல் இசைக்கப்பட்டமை மற்றும் ம…
-
- 2 replies
- 323 views
- 1 follower
-
-
மாஹோ சந்தி முதல் அநுராதபுரம் வரையான வடக்கு தொடருந்து பாதை திருத்தப் பணிகளுக்காக 6 மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி முதல் எதிர்வரும் 6 மாதங்களுக்கு குறித்த தொடருந்து மார்க்கம் மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சந்தர்ப்பங்களில், கொழும்பிலிருந்து மாஹோ சந்தி வரையிலும், அநுராதப்புரத்திலிருந்து காங்கேசன்துறை வரையில், மாத்திரமே தொடருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு தொடருந்து மார்க்கத்தில் மாஹோ மற்றும் ஓமந்தை வரையில் இரண்டாம் கட்ட திருத்தப்பணிகளுக்காக இவ்வாறு மூடப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/284285
-
- 10 replies
- 706 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 11 DEC, 2023 | 04:03 PM கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்ட, கொட்டாஞ்சேனை, மட்டக்குளி மற்றும் மோதர ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள தமிழ் மக்களை குறிவைத்து மீண்டுமொரு பதிவு நடவடிக்கை நடந்து வருவதாகவும், இந்த அனைத்து பதிவு விபர பத்திர ஆவணங்களும் சிங்கள மொழியிலேயே வழங்கப்படுவதாகவும், நாட்டின் அரசியலமைப்பை மீறி சிங்கள மொழியில் மட்டுமே இந்த விபர பதிவுப் பத்திர ஆவணங்களை வழங்குகின்றனர் என்றும், அது தவறான விடயம் என்றும்,”ரணில் பொலிஸ் இராஜ்யமா நடக்கிறது என சந்தேகம் எழுவதாக” பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் முகமாக கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர…
-
- 4 replies
- 243 views
- 1 follower
-
-
11 DEC, 2023 | 05:06 PM யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய பகுதிகளில் இரவு வேளைகளில் வழிப்பறிக் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.நகர் பகுதியை அண்டிய முட்டாஸ்கடை சந்தி பகுதிகளில் இரவு வேளைகளில், வீதியில் பயணிப்போரை வழிமறித்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். காங்கேசன்துறை வீதி - ஸ்ரான்லி வீதி ஆகிய இரு பிரதான வீதிகளும் சந்திக்கும் சந்தி பகுதியான குறித்த சந்தியில் மின் விளக்குகள் பொருத்தப்படாமையால், இருளில் மறைந்து இருக்கும் கொள்ளையர்கள், வீதியில் தனியாக மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் நபர்களை இலக்கு வைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். பேர்ஸில் இருக்கும் …
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
கிளைமோர் தயாரித்ததாக முன்னாள் போராளி கைது! ரி.ஐ.டி.யினரால் கொழும்புக்கு நேற்றிரவு கொண்டு செல்லப்பட்டார் [ஆதவன்] கிளைமோர் தயாரித்த குற்றச்சாட்டில் முன்னாள் போராளி மற்றும் அதற்கு உதவியதாக ஒருவருமாக இருவர் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மன்னார், தேவன்பிட்டி, வெள்ளாங்குளத்தைச் சேர்ந்த ஆரோக்கியநாதன் சவேரியான் (ஜோன்சன்) (வயது - 48) என்ற முன்னாள் போராளியும், நாச்சிக்குடா, கரக்குன்றைச் சேர்ந்த தம்பு குணசேகரம் (வயது -63) ஆகிய இருவருமே பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட் டுள்ளனர். தம்பு குணசேகரம் வைபர் (படகுகள் செய்வதற்குப் பயன்படும் பொருள்) ஒட்டுவேல…
-
- 0 replies
- 237 views
-
-
முல்லைத்தீவு மாவட்ட பண்ணையாளர்களுக்கான விசேட அறிவித்தல்! பண்ணைகளை பதிவுசெய்து உச்ச பயன் பெற அழைப்பு [செல்வன்] முல்லைத்தீவு மாவட்ட பண்ணையாளர்கள் மாடுகளுக்கான பண்ணைகளை பதிவு செய்து உச்ச பயன் பெற்றுக்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப்பணிப்பாளர் கிருஜகலா சிவானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இத்ற்கமைய அவர் விடுத்துள்ள கோரிக்கையில் பண்ணையாளர்கள் தமது மாட்டுப் பண்ணைகளை பதிவுசெய்ய வேண்டியதும் தங்களால் வளர்க்கப்படும் சகல மாடுகளுக்கும் காதுப்பட்டி பொருத்துதலும் மிக முக்கியமானதாக அறிவிக்கப்படுகின்றது. இலங்கையிலுள்ள பண்ணைகளில் மாடுகளின் பண்ணைகள் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்பது 2008ம் ஆண்டில் இருந்தே முக்கிய விடய…
-
- 0 replies
- 142 views
-
-
மனித உரிமை மீறல்களை எதிர்த்து யாழில் போராட்டம்! adminDecember 11, 2023 தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு மாகாண பெண்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் மீறல்களை எதிர்த்து யாழ்ப்பாணத்தில், இன்றைய தினம் திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு மகஜரொன்றையும் கையளித்தனர். குறித்த மகஜரில், இலங்கையில் மனித உரிமை பாதுகாப்பு இன்மையே இங்கு வாழ்கின்ற மக்கள் என்ற ரீதியில் தொடர்ச்சியாக நாங்கள் எதிர் நோக்கி வருகின்றோம் குறிப்பாக நீரியல்வளங்கள்,நிலவளங்கள், சுற்றாடல் போன்ற வள பகிர்வுகளில் அரசாங்கம் மற்றும் மக்களுக்கு இடையிலே உள்ள சமூக ஒப்பந்தம் மீறப்படுவ…
-
- 0 replies
- 404 views
-
-
விவாகரத்தை எளிதாக்கும் வகையில் மூன்று புதிய சட்டமூலங்கள் ! விவாகரத்து பெறுவதை மிகவும் எளிதாக்கும் மூன்று சட்டமூலங்களை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. திருமண காரணங்கள் சட்டம், வெளிநாட்டு விவாகரத்து தீர்ப்புகளை அங்கீகரிக்கும் சட்டம் மற்றும் சிவில் நடைமுறை சட்ட ங்களில் திருத்தம் அவசியம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விவாகரத்து கோரி தாக்கல் செய்பவரின் சுமை அதிகமாக உள்ளது என்றும் காரணங்களை நிரூபிப்பது மிகவும் கடினம் என்பதனால் சில விவாகரத்து வழக்குகள் 10-20 ஆண்டுகள் செலவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாட்டு விவாகரத்து தீர்ப்புச் சட்டத்தின் கீழ், வெளிநாட்டு நீதிமன்றங்களால் வழங்கப்படும் விவ…
-
- 0 replies
- 249 views
-
-
11 DEC, 2023 | 11:11 AM கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளுக்கு தங்களது பயணப்பொதிகளை இலகுவாக அடையாளம் காண பயன்படுத்தப்படும் "டாக்" குறிச்சொற்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் சோதனையிட ஆரம்பித்துள்ளனர். சில விமானப்பயணிகள் தங்களது பயணப்பொதிகளுக்கு மாறாக வேறொரு பயணப்பொதிகளை எடுத்துச் செல்வதும் சில பயணிகள் தெரிந்தே மற்றவர்களது பயணப்பொதிகளை திருடிச்செல்வதும் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது. இவ்வாறு மாற்றப்பட்டு எடுத்து செல்லப்பட்ட பயணப்பொதிகள் மீண்டும் அடிக்கடி விமான நிலையத்திற்குத் திரும்புகின்ற நிலையில் அவைகளின் உரிமையாளர்களுக்கு வழங்குவது மிகவும் கடின…
-
- 0 replies
- 333 views
- 1 follower
-