Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தாய்லாந்தில் மேலும் 50 அப்பாவி இலங்கையர்கள் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகியுள்ளனர்: [Wednesday, 2010-12-08 05:50:13] சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக இலங்கை குடியேற்றவாசிகள் 50 பேர் பாங்கொக்கில், தாய்லாந்து பொலிஸாரால் சுற்றிவளைக்கபட்டுள்ளனர். இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டவர்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாங்கென் பிரதேசத்தில் பகோல் ஜோதின் வீதியில் சோய் பேர்ம்சின் பகுதியில் வாடகை அறைகளில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளார்கள் எனவும் இவர்கள் குடிவரவு திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைக்களுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. seithy.com

  2. நாட்டின் நலனுக்காக முன்நாள் பிரதமர் சிறிமாவோவின் கொள்கைகளை கடைபிடிக்க முடிவுசெய்துள்ளாராம் சிறிலங்கா ஜனாதிபதி: [Wednesday, 2010-12-08 05:58:43] நாட்டின் நலனுக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்ட முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அன்றைய கொள்கை மற்றும் நோக்குகளை கடைபிடிக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் எதிர்காலத்தில் செயற்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க உலகின் முதலாவது பெண் பிரதமராக நியமனம் பெற்ற 50 வது வருட பூர்த்தி ஞாபகார்த்த நிகழ்வின் போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை முன்வைத்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்த ஞாபகார்த்த நிகழ்வை சிறிலங்கா சுதந்திர கட…

  3. 1,60,000 பேர் மீள்குடியேற்றம் என்ற பெயரில் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்:மாவை எம்.பி _ வீரகேசரி நாளேடு 12/8/2010 9:00:28 AM மீள்குடியேற்றப்படுவதற்கு இன்னும் 23 ஆயிரம் பேரே எஞ்சியிருப்பதாக அரசு கூறியிருக்கின்றபோதிலும் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேர் மீள்குடியேற்றம் என்ற பெயரில் தற்காலிக தங்குமிடங்களிலோ அல்லது உறவினர்,நண்பர்களது வீடுகளிலோ தங்கியிருக்கின்றனர் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா நேற்று சபையில் தெரிவித்தார். மோசமான காலநிலை மழை வெள்ளம் ஆகியவற்றால் மீள்குடியேற்ற பிரதேசங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. மக்கள் ஒதுங்குவதற்கு இடமில்லாமல் பசியிலும் பட்டினியிலும் அவல நிலைக்குள்ளாகியுள்ளனர். பாதுகா…

  4. கிழக்கு மாகணத்தில் தனது அலுவலகங்களை மூட உலக உணவுத்திட்ட அமைப்பு முடிவு புதன்கிழமை, 08 டிசம்பர் 2010 02:56 கிழக்கு மாகாணத்தில் தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள ஐ.நாவின் உலக உணவுத்திட்ட அமைப்பு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கிழக்கு மாகாணத்தில் உள்ள திருமலை, அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகல ஆகிய பிரதேசங்களில் உள்ள அலுவலகங்களை மூடுவதற்கு உலக உணவுத்திட்ட அமைப்பு திட்டமிட்டுள்ளது. இந்த மாத இறுதியுடன் இந்த பிரதேசங்களில் உள்ள அலுவலகங்கள் மூடப்படுவதுடன், மட்டக்களப்பில் மட்டும் ஒரு நிர்வாக அலுவலகத்தை எதிர்வரும் ஒரு வருடத்திற்கு நடத்த தாம் திட்டமிட்டுள்ளதாக அதன் திருமலை அலுவலக பிரதிநிதி கனிஸ் கான் தெரிவித்துள்ளார். …

  5. கிளிநொச்சி மாவட்டத்தில் காணி உரிமை உள்ள நிலையில், வெளிமாவட்டங்களிலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் மக்களுக்கான அறிவிப்பொன்றை காணி அமைச்சு விரைவில் வெளியிடவுள்ளது. வன்னியில் இருக்கும் காணிகள் பெரும்பகுதி புலம்பெயர்ந்த மக்களினதும் வெளிமாவட்ட தமிழர்களுக்கும் சொந்தமானது. ஆகவே இந்த தகவல்கலைத்திரட்டுவதன் மூலம் அரசாங்கம் வெளினாடுகளில் இருப்போரின் காணிகளை அரச அதிபர் ஊடாக அரசாங்கத்திற்கும் சிங்களவர்களுக்கும் பகிர்ந்தளிக்க முடிவு செய்யலாம். அல்லது நீண்டகால அடிப்படையில் படையினர்க்கு குத்தகைக்கு தருமாறும் கேட்கலாம். அடுத்ததாக வெளினாடுகளில் உள்ள மக்களை மிரட்டி பணிய வைப்பதற்கும் இந்த தகவல்களை பயன்படுத்தலாம். காணி விடயத்தில் தமிழர்கள் கறார் ஆகவே இருப்பார்கள் என்பது மஹிந்தவி…

  6. இன்றர்நெற் தகவல் இணையம் பிரபல்யம் அடைவதற்கு விக்கிலீக்ஸ் என்ற பெயரில் இயங்கும் இணையதளம் அண்மைக்காலமாக முக்கிய பங்களிப்புச் செய்கின்றது விக்கிலீக்ஸ் இணையதளத்தின் பணி எல்லோராலும் வரவேற்கப்படுகிறது என்று சொல்ல முடியாது. விக்கிலீக்ஸ் இணையதளத்தை உருவாக்கிய 39 வயதினரான யூலியன் அசன்கே இன்று வேட்டையாடப் படும் மனிதராக மாறிவிட்டார் அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க உலகின் பெரும்பாலான அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. சுவீடன் நாட்டு அரசு ஒரு படி மேலே போய் அவர் மீது பாலியல் குற்றச் சாட்டுக்களைச் சுமத்தியதோடு அவரைப் பிடித்துத் தரும்படி மேற்கு ஜரோப்பிய நாடுகளைக் கேட்டுள்ளது. சென்ற ஆகஸ்து மாதம் அவர் சுவீடன் நாட்டுப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சுவீடன் அரசு யூலியன் அச…

    • 2 replies
    • 1.2k views
  7. போர் என்பதே குற்றம். அப்படியானால் போர்க்குற்றம் என்பது யாது? ஒரு நாடு போர் புரிவதற்குக் கூட சட்டதிட்டங்கள் உள்ளனவா? அச் சட்டங்கள் யாவை? சிறீலங்கா அரசு மீறியுள்ள அனைத்துலக போரியல் சட்ட திட்டங்கள் எவை? எதன் அடிப்படையில் தமிழர்கள் வழக்குகளைத் தொடுத்துள்ளனர்? என்ற உங்களது அனைத்து வகையான வினாக்களுக்கும் சுவிஸ் ஈழத்தமிழரவையும், அனைத்துலகத் தமிழ்ப் பெண்கள் அமைப்பும் இணைந்து, இக் கைநூல் ஊடாக கருத்துத் தெளிவாக்கம் அளிக்கின்றனர். இது ஒரு முதல் முயற்சியே. தேவைக்கேற்ப இக்கைநூல் விரிவாக்கப்பட்டு மெருகூட்டப்படும். பின்வரும் முகவரியிற் சென்று குறித்த கையேட்டினைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்: http://www.scribd.com/doc/44855437/WAR-CRIMES நன்றி

  8. இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது இலங்கை ராணுவம் நடத்திய போர்க்குற்றங்கள் குறித்த ஆதாரங்களை வைத்திருப்போர், எந்த அச்சமும் இல்லாமல் அவற்றை ஐநா விசாரணைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று பழ நெடுமாறன் கேட்டுக் கொண்டார். உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இலங்கை பிரச்சனை குறித்து ஐ.நா.சபை குழு தனது விசாரணையை தொடங்கி விட்டது. வருகிற 15-ந்தேதிக்குள் இந்த விசாரணை குழுவிற்கு தங்கள் வசமுள்ள ஆதாரங்களையும், ஆவணங்களையும் யார் வேண்டுமானாலும் அனுப்பி வைக்கலாம். முள்ளிவாய்க்கால் போரின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஈழத் தமிழர்கள் பலர் தமிழ் நாட்டுக்கும் தப்பி வந்துள்ளனர். அவர்களை எல்லாம் அணுகி அவர்களிடமிருந்து புகார்களை…

    • 0 replies
    • 648 views
  9. யாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை! செவ்வாய், 07 டிசம்பர் 2010 15:57 யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதி காக்கும் படையினரால் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த யுத்தக் குற்றங்கள் கனடாவின் நசனல் போஸ்ட் பத்திரிகையில் நேற்று வெளியாகி உள்ளன. பருத்தித் துறை பிரதேசத்தை சொந்த இடமாக கொண்டவரும், கனடாவில் தற்போது வாழ்ந்து வருபவருமான ஆர். சுரேந்திரன் என்பவர் இந்திய படையினரின் அட்டகாசங்களை நேரில் கண்டிருக்கின்றார். நசனல் போஸ்ட் பத்திரிகையின் வாசகர் என்கிற வகையில் பத்தி ஒன்றை எழுதி இருக்கின்றார். இவர் இதில் முக்கியமாக தெரிவித்து உள்ளவை வருமாறு:- ”1987 ஆம் ஆண்டு நான் பருத்தித் துறையில் இருந்தேன். யுத்த டாங்கிகள் சகிதம் இந்திய படையினர் எமது …

  10. பயங்கரவாதிகளை மட்டுமே படையினர் கொன்றனர்! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-06 07:11:36| யாழ்ப்பாணம்] படையினர் எந்தவொரு தமிழ் குடிமகனையும் கொல்லவில்லை.அவர்கள் புலிப் பயங்கரவாதிகளை மட்டுமே கொன்றனர். எமது அறிவுறுத்தல் எந்தவொரு பொதுமகனையும் தாக்கக்கூடாது.இது ஒரு மனிதா பிமான நடவடிக்கை என்பதாகவே இருந்தது. இவ் வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச லண்டன் ரைம்ஸ் இதழுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்ற வென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரிட்டன் சென்றிருந்தபோது புலம்பெயர் தமிழ்க் குழுக்களின் எதிர்ப்பலைகள் காரணமாக அவர் நிகழ்த்த விருந்தஉரை யூனியன் ஏற்பாட்டாளர்களால் இரத்துச் செய்யப்பட்டது.அதன் பின்னர் லண்டன் ரைம்ஸ் அவருடன் மேற்கொண்ட நேர்காண…

    • 4 replies
    • 1.3k views
  11. கிளிநொச்சி பொன்னகரில் வீடமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் புதிதாக 50 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை தேசிய வீடமைப்பு அதிகாரசபை மேற்கொண்டு வருகிறது. இந்த வீடமைப்புத் திட்டத்தில் தற்போது ஆரம்பகட்ட வேலைகள் முடிவடைந்துள்ளனவாம். ஆனால் இந்த வீடுகள் எந்த பயனாளிகளுக்கு வழங்கபப்டும் என குறிப்பிடப்படவில்லை. சில வேளை இந்த வீடுகள் படையினர்க்கோ அல்லது சிங்கள அதிகாரிகளுக்கோ வழங்கப்படலாம் என மக்கள் ஐயப்படுகின்றனர். ஈழ நாதம்

  12. http://www.yarl.com/files/101207_vavuniya_uv_member.mp3

    • 0 replies
    • 495 views
  13. விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவுநர் ஜலியன் அசேஞ் லண்டனில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ள போதிலும், விக்லீக்ஸ் கிளப்பிய சர்ச்சைகள் இலங்கை அரசியலில் இன்றும் புகைந்துகொண்டுதான் இருக்கின்றது. இலங்கை தொடர்பாக இதுவரையில் வெளிவராத ஆவணங்கள் வெளிவரும் பட்சத்தில் கொழும்பு அரசியலில் ஒரு பூகம்பம் கிளம்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் ஜலியன் அசேஞ் லண்டனில் வைத்து செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டிருக்கின்றார். விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் இலங்கை தொடர்பாக மூன்று வகையான தகவல்கள் உள்ளடங்கியிருந்தன. ஒன்று, விடுதலைப் புலிகளுடனான போரில் இடம்பெற்றிருக்கக்கூடிய போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் இதில் வெளியாகியிருக்கின்றது. இரண்டாவத…

  14. விக்கிரமபாகுவை அரசின் கையாட்கள் விமான நிலையத்தில் தாக்கியமையை நேரில் கண்டேன்! சிவாஜிலிங்கம் பேட்டி செவ்வாய், 07 டிசம்பர் 2010 19:43 E-mail அச்சிடுக PDF Share 0 ”சம சமாய கட்சியின் செயலாளர் நாயகம் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவை அரசின் கையாட்கள் தாக்கியமையை நேரில் கண்டேன்.” இவ்வாறு தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் தமிழ்.சி.என்.என் இற்கு தெரிவித்தார். ”விக்கிரமபாகு கருணாரட்ண பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு மாலை 4.00 மணி அளவில் திரும்பி இருந்தார். இவரை வரவேற்க சமசமாய கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் அடங்கலாக சுமார் 50 ஆதரவாளர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றிருந்தனர். வ…

  15. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதியுதவியளித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன மற்றும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்துமாறு இன்று இரகசிய பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இலங்கை தேசிய முன்னணியின் தலைவர் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினரே இரகசிய பொலிஸாரிடம் இந்த முறைப்பாட்டினை முன்வைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒக்ஸ்போர்ட் உரை இறுதி தருணத்தில் தடை செய்யப்பட்டமைக்கு மேற்படி இருவருமே பொறுப்பு கூற வெண்டும் என்று குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …

    • 0 replies
    • 422 views
  16. லண்டனில் மூக்குடைபட்ட ஆத்திரத்தில் வன்னி மக்களைப் பழிவாங்கிய கொலைகாரன் ராஜபக்ஷ லண்டனில் அவமானப்பட்டு நாடு தப்பி வந்த கொலைகாரன் ராஜபக்ஷ, நேற்று வவுனியா அகதிமுகாமில் வசித்துவந்த கர்ப்பிணிகள் வயோதிபர் என 500 கொட்டும் மழையிலும் சுற்றிவளைத்து கிளிநொச்சி நகரில் பேரணி ஒன்றைக் கட்டாயமாக நடத்தியுள்ளான். "தமிழரை ராஜபக்ஷ மிகவும் நல்லாக நடத்துகிறார், புலம்பெயர் தமிழரால்த்தான் பிரச்சனை" என்று கோஷமெழுப்பும்படி மக்கள் வற்புறுத்தப்பட்டதோடு, மறுத்தவர்கள் மகிந்தவின் வேட்டை நாய்க்கூட்டத்தால் நையைப் புடைக்கப்பட்டனர். Rajapaksa vengeance orchestrates political shield of captive Tamils in Vanni [TamilNet, Saturday, 04 December 2010, 11:45 GMT] Sri Lanka’s president Mahinda Rajapa…

    • 18 replies
    • 2.6k views
  17. சிறீலங்கா பேரினவாதம் உலக வல்லாதிக்கங்களின் துணையோடும் அண்டை நாடுகளின் ஆசீர்வாதத்துடனும் விடுதலைக்காக போராடிய தமிழ் இனத்தை சர்வதேச போர் விதிமுறைகளையும் மீறி நாகரீக உலகத்தின் கண்களின் முன்னே மிலேச்சத்தனமாக படுகொலை செய்து ஆண்டு ஒன்றரையாகிவிட்ட நிலையில் படுகொலைக்கான ஆதாரங்களை வெளிப்படுத்தும் காணொளிகளும் நிழற்படங்களும் அடிக்கடி சிறீலங்காவின் கொடுங்கோல் ஆட்சியின் உச்சத்தை அம்பலப்படுத்தி வரும் நிலையில் சிறீலங்காவும் சிறீலங்காவின் ஊன்றுகோல்களும் விழி பிதுங்கிநிற்கின்றனர். அத்தோடு தமிழர்களை மனரீதியாக ஆற்றுப்படுத்தி சிறீலங்காமீது பாரதூரமான விளைவுகளை தமிழர்கள் மேற்கொள்ளா வண்ணம் அநுதாப அறிக்கைகளையும் சிறீலங்காவின் ஊதுகுழல்கள் மேற்க்கொண்டுவருகின்றனர் இப்படியான போக்…

    • 0 replies
    • 697 views
  18. பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சித் திட்டம் தீட்டப்படவில்லை � டாய் லியனகே பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சித் திட்டங்கள் தீட்டப்படவில்லை என மிட்வேய் மாநகரசபையின் முன்னாள் மேயர் டாய் லியனகே தெரிவித்துள்ளார். � ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன மற்றும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளனர். பிரித்தானிய பாராளுமன்றின் எட்டாம் இலக்க� அறையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. � இலங்கை அரசியல்வாதிகள் பிரி;த்தானியர்களுடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சித் திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட…

  19. என்னை தாக்கி இருந்தால் சுட்டு இருப்பேன்! சிவாஜிலிங்கம் கொந்தளிப்பு செவ்வாய், 07 டிசம்பர் 2010 20:12 E-mail அச்சிடுக PDF Share 0 சம சமாய கட்சியின் செயலாளர் நாயகம் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவை வரவேற்கின்றமைக்காக விமான நிலையத்துக்கு இன்று மாலை சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் எம்.பி எம்.கே. சிவாஜிலிங்கம் மீது அங்கு தாக்குதல் நடத்தவும் சிலர் முயன்று இருக்கின்றனர். சிவாஜிலிங்கம் சுதாகரித்துக் கொண்டார். தற்பாதுகாப்புக்காக அவருக்கு வழங்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி வாகனத்தில் இருந்தது. தாக்குதல் ஆராவது மேற்கொண்டால் அவர்களை சுட்டே தீருவார் என்று மனதுக்குள் கறுவிக் கொண்டார். எனவே கைத்துப்பாக்கியை எடுக்கின்றமைக்காக வாகனத்துக்கு வந்த…

  20. என்.எஸ்.எஸ்.பி கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரபாகு கருணாரத்ன, லண்டனில் இருந்து கொழும்பு திரும்பியபோது இன்று மாலை வானூர்தி நிலையத்தில் வைத்து காடையர்களினால் தாக்கப்பட்டுள்ளார். லண்டனில் மாவீரர் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த இவர், தமிழ் மக்கள், தமிழ் அமைப்புக்கள், சிங்கள மக்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் பிரித்தானிய அரசியல் தலைவர்களைச் சந்தித்துவிட்டு நாடு திரும்பியபோது தாக்கப்பட்டுள்ளார். வானூர்தி நிலையத்திற்கு வெளியே விக்கிரமபாகுவின் கட்சி உறுப்பினர்கள், சட்டவாளர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் அவரை வரவேற்கக் காத்திருந்தவேளை, அங்கு சென்ற 20 முதல் 30 வரையிலான சிங்கள காடையர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டு இருக்கின்றனர். தமது தலைவர் மகிந்த ராஜபக்ச நா…

    • 0 replies
    • 743 views
  21. வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு அடுத்த மாதம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு மின்னஞ்சல் வழியாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இது தொடர்பாக கூறியுள்ளார். இவ்வறிக்கையை பொது மக்களின் பார்வைக்கு வெளியிடுவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனே தீர்மானிப்பாதத் எனக் இச் செவ்வியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், மூவரடங்கிய நிபுணர்கள் குழுவுக்கு சாட்சியங்களை வழங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.