ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
புலிகள் மீதான தடை நீங்கும் வரை போராடுவோம்! - வைகோ ஊட்டி: விடுதலைப் புலிகள் [^] இயக்கம் மீதான தடை நீங்கும் வரை ஓய மாட்டோம். இப்போது நடக்கும் விசாரணை நம்பிக்கை தருவதாக உள்ளது, என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ததற்கு போதிய காரணங்கள் இருகின்றனவா, இல்லையா என்பதை விசாரிப்பதற்காக சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் தலைமையில் மத்திய தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பாயத்தின் கூட்டம் ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகையில் காலை 11 மணிக்கு நடந்தது. இந்த கூட்டத்தில் தீர்ப்பாயத்தின் தலைவர், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் தலைமையில் 13 உறுப்பினர்கள்…
-
- 0 replies
- 470 views
-
-
கொழும்பு, ஒக்ரோபர் 20 தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமைஒருமித்த கருத்துஏற்பட்டாலேயே இனப்பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வை யும் முன்னெடுக்க முடியும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நேற்று முன்தினம் தன்னைச் சந்தித்த பொதுநலவாய நாடாளுமன்றச் சம்மேளனம் மற்றும் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளிடமே அவர் இதனைத் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விவகாரத்தில் "சில தமிழ்க் கட்சிகள் சாதகமாகப் பதிலளித்துள்ளன. ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அவற்றுக்கு இடையே ஒற்றுமைஒன்றிணைவு ஒருமித்த கருத்து ஏற்படுவதற்காக நாம் காத்திருக்கின்றோம். குறிப்பாக அபிவிருத்தி தொடர்பான விடயத்தில் இந்…
-
- 1 reply
- 465 views
-
-
எப்போதும் இல்லாத அரிய சந்தர்ப்பம் ஆனால்..... இனப் பிரச்சினைத் தீர்வில் திசைமாறிச் செல்கிறது அரசு! இந்திய நாளிதழ் "த இந்து' சுட்டிக்காட்டுகிறது சென்னை, ஒக்ரோபர்19 இலங்கையில்,ராஜபக்ஷ அரசாங்கத்தின் தற்போதைய போக்கும், அதன் அண்மைக்காலச் செயற்பாடுகளும், அந்நாட்டின் இனப்பிரச் சினைக்கு நியாயமான தீர்வு ஒன்றைக் கொண்டு வருவதிலிருந்து திசை மாறிச் செல்கிறது என்ற கருத்துப்பதிவை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உண்டாகியுள்ள அதிருப்தியை அடுத்த மாதம் தமது இரண்டாவது பதவிக்காலத்தை ஆரம்பிக்கவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளதுஆலோசனை வழங்கியுள்ளது பிரபல ஆங்கில நாளிதழ் "த இந்து'. அப்பத்திரிகை தனது நேற்றைய பதிப் பின் ஆசிரியர் த…
-
- 1 reply
- 696 views
-
-
பாதுகாப்புச் செலவினம் அதிகரிப்பு: இலங்கை மீது ஐஎம்எப் அதிருப்தி இலங்கையின் பாதுகாப்புச் செலவினங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது குறித்து அந்நாடு மீது சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எப் அதிருப்தியடைந்துள்ளது. இலங்கை தற்போது ஓரளவுக்கு அபிவிருத்திப் பாதையில் சென்று கொண்டிருந்தாலும், வரவு-செலவுத்திட்ட துண்டு விழும் தொகை மற்றும் பொதுக்கடன்களை குறைப்பதற்கும் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ளது. இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியைத் துரிதப்படுத்த வேண்டுமாயின் பாதுகாப்புச் செலவினங்களைக் குறைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள நிதியத்தின் பணிப்பாளர் சபை, கடந்த வருடத்தை விட இவ்வருடம் இலங்கையின் பாதுகாப்புச் செலவினம் 6 விழுக்காடு அதிகர…
-
- 0 replies
- 379 views
-
-
புதன்கிழமை, அக்டோபர் 20, 2010 விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை ரத்து செய்வதா அல்லது நீடிப்பதா என்பதை விசாரிக்கும் மத்திய தீர்ப்பாயத்தின் கூட்டம் ஊட்டியில் இன்று நடைபெறவுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ததற்கு போதிய காரணங்கள் இருகின்றனவா, இல்லையா என்பதை விசாரிப்பதற்காக சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் தலைமையில் மத்திய தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பாயத்தின் கூட்டம் ஊட்டியில் இன்று நடைபெறவுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ ஆஜராக உள்ளார். ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகையில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் தீர்ப்…
-
- 1 reply
- 1.3k views
-
-
புலிகளை ஒழித்த மஹிந்தவுக்கு டக்ளஸ் நன்றி வவுனியாஇ ஒக்.20 விடுதலைப் புலிகள் அமைப்பைத் தோற்கடித்து இன்றைய சூழலை உருவாக்கித் தந்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவித்தார் பாரம்பரியக் கைத்தொழில் சிறு கைத்தொழில் முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. "புலிகளைத் தோற்கடித்தமைக்காக எங்கள் மண்ணில் வைத்து உங்களுக்கு இன்று நன்றி கூறுகின்றேன்'' என்றார் அவர். வவுனியாவில் நேற்று நடைபெற்ற வடக்கு அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் வைத்தே அமைச்சர் இந்தப் பாராட்டைத் தெரிவித்தார். தமிழ் மக்களின் நலனுக்காக ஜனாதிபதி முன்னெடுக்கும் முயற்சிகளுக்கும் அமைச்சர் தனது பாராட்டைத் தெரிவித்தார். இதேவேளைஇ கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அமைச்சர் டக்ளஸ் மற்றும் வடக்கு ஆளுநர் சந்தி…
-
- 1 reply
- 762 views
-
-
யாழ்.அராலி தெற்கு பிரதேசத்தில் வைத்து பாடசாலை மாணவியான 13 வயதுச் சிறுமி ஒருவருடன் நேற்று காலை பாலியல் உறவு கொள்ள முயன்ற குடும்பஸ்தர் ஒருவர் பிரதேசவாசிகளிடம் கையும் மெய்யுமாக மாட்டிக் கொண்டார். சிறுமி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் தரம் -08 பயில்பவர். இவர் தனியார் வகுப்பு ஒன்றுக்கு சென்று விட்டு காலை 11.15 மணியளவில் வீதியால் நடந்து வந்து கொண்டிருந்தார். இரு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் தவக்குமார் (வயது 26) என்பவர் வீதியில் சிறுமிக்காக காத்திருக்கின்றார். சிறுமியை அழைத்துக் கொண்டு சென்றிருக்கின்றார். இதனை அப்பகுதி இளைஞர்கள் சிலர் அவதானித்தனர். இருவரையும் பின் தொடர்ந்து சென்றனர். தவக்குமார் சன நடமாட்டம் குறைந்த வீதி வழியே சிறுமியை கூட்டிச் சென்று …
-
- 0 replies
- 895 views
-
-
இலங்கையில் கொலை செய்யப்பட்ட தமிழக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழமானாங்கரையை சேர்ந்த செல்வராஜ் என்பவரது உடல் நான்கு மாதங்களுக்கு பின், அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. சமையல்துறையில் கல்வி கற்ற செல்வராஜ் (24) இலங்கைக்கு வீட்டு வேலைக்காகச் சென்றார். அங்குள்ள ஒரு ஹோட்டலில் வேலை என்றதும் மறுப்பு தெரிவித்த இவர், வேறு வழியின்றி அங்கு பணியாற்றினார். எனினும் ஹோட்டல் முகாமையாளர் தொடர்ந்து தொந்தரவு கொடுக்கவே, மீண்டும் தன்னை இந்தியா அனுப்பி விடுமாறு செல்வராஜ் கோரினார். ஆத்திரமடைந்த ஹோட்டல் முகாமையாளர், தனது மனைவி மற்றும் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் ஒருவரின் உதவியுடன், செல்வராஜைக் கொலை செய்து, கடலில் வீசினார். …
-
- 0 replies
- 634 views
-
-
A9 பாதை திறக்கப்பட்டு, சீரான விநியோகம் நடைபெறுகின்றது. இன்று இரவு பயணம் நாளைய கொழும்பின் விடிவு என்றவாறு யாழ் மக்கள் மாத்திரமல்ல அனைத்து மக்களும் ஏ 9 வீதியைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் தமிழர்களின் மனம் வேதனைப்படும் சம்பவங்களை சிங்கள மக்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்து வருவது இன ஒற்றுமையைச் சீர்குலைத்து மேலும் அபாயகரமான பிரச்சினையைத் தூண்டுகின்றது. தமிழர்களின் தேசியத் தலைவர் இறந்துவிட்டார் என சிங்கள அரசு அறிவித்த அன்றே சிங்கள மக்களில் பெரும்பாலோனோர் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் வெடிகளைக் கொழுத்தியும் ஆர்ப்பரித்தும் பெரும் கொண்டாட்டங்களை நிகழ்த்தினர். இதைவிட ஒரு சிலர் ஒரு படி மேலே போய் தமிழர்களின் கடைகளை தட்டி பணம் பறித்து கொண்டாட்டங்களை நிகழ்த்தினர். தமிழர்களின்…
-
- 0 replies
- 670 views
-
-
கொழும்பு பத்திரிகையின் படி 1983ம் கலவரத்தின் பின் யாழ்ப்பணத்தில் இருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசித்த இந்த குடும்பங்கள் மீள குடியமத்தப்படுவர். கடந்த 27 வருடங்களுக்கும் மேலாக இவர்களை பற்றி ஒருவரும் கவனிக்கவும் இல்லை கதைக்கவும் இல்லை. According to the state owned Daily News (Oct 19, 2010) ‘All Sinhala families in IDP centres in Jaffna will be resettled. They will be given new land, Resettlement Minister Milroy Fernando yesterday promised 150 displaced Sinhala families living in makeshift tents at the Railway Station.’ Minister Milroy Fernando has said that these Sinhalese families were uprooted in the 1983 violence and were living in camps in abj…
-
- 2 replies
- 747 views
-
-
மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு அக் 19, 2010 மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஈடுபட முயற்சிக்கும் சகல நபர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. வடக்கு கிழக்கில் உள்ள சில தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. குறிப்பாக வடக்கில் மாவீரர் தின நிகழ்வுகளில் ஈடுபட முயற்சிப் போரை தாமதமின்றி கைது செய்யுமாறு பிரதேச பொலிஸ் நிலையங்கள் மற்றும் இராணுவ முகாம்களின் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களில் சில புலி ஆதரவாளர்கள…
-
- 3 replies
- 936 views
-
-
வன்னியில் இடம்பெற்ற போரில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்களை சிறீலங்கா இராணுவம் கைகளை கட்டிய பின்னர் கொண்டு செல்லும் காட்சிகளையும், பல இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளையும் உலகத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது. சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இந்த போர்க்குற்றங்கள் தொடர்பான புகைப்படங்களை நேற்று (19) சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது தமிழ் மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை போல பெருமளவான புகைப்படங்கள் தம்மிடம் உள்ளதாகவும், அவற்றில் கைது செய்யப்பட்ட அப்பாவி மக்களும், அதனை மேற்கொண்ட படை அதிகாரிகளும் தொளிவாக தெரிவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உலகத் தமிழர் பேரவை உறு…
-
- 0 replies
- 1.3k views
-
-
புதன்கிழமை, அக்டோபர் 20, 2010 Murphy விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்த முயற்சிகளை மேர்பி பாராட்டியுள்ளார். ஐக்கிய இராச்சியத்தின் சகல கட்சிகளும் உங்களின் நிலைப்பாட்டில் உள்ளன. இன்று இலங்கைக்கு உதவுவதற்குத் தயாராக அவை உள்ளன என்று மேர்பி கூறியுள்ளார்.இந்தத் தீவிலிருந்து பயங்கரவாதம் இல்லாமல் போய்விட்டதையிட்டு நாம் மகிழ்ச்சியடைந்துள்ளோம். இன்று புனர்நிர்மாணம், நல்லிணக்கம் அன்றாட நடவடிக்கையாக மாறியுள்ளதென்று மேர்பி கூறியுள்ளார். இலங்கைக்கு தான் முன்னர் மேற்கொண்டிருந்த விஜயத்தை அவர் நினைவுகூர்ந்தார். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் கிளிநொச்சி இருந்த சமயத்தில் அவர் அங்கு சென்றிருந்தார். இப்போது இங்குள்ள சூழ்நிலையானது பிரிட்டனின்…
-
- 0 replies
- 760 views
-
-
புதன்கிழமை, அக்டோபர் 20, 2010 London protest லண்டனில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 12:30 மணிமுதல் மாலை 3:30 மணிவரை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவர் கலந்துகொள்ளும் மாநாட்டைக் கண்டித்தும் நூற்றுக்கணக்கான லண்டன் வாழ் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள டெம்பிள் (TEMPLE) பகுதியில் அமைந்துள்ள மாநாடு நடைபெறும் அருண்டேல் ஹவுஸ் (ARUNDEL HOUSE) மண்டபத்திற்கு முன்பாகக் கூடிய நூற்றுக்கணக்கான தமிழர்கள், ஜி.எல்.பீரிசின் மாநாட்டை எதிர்த்துக் கோஷமிட்டனர். காலநிலை ஒத்துழைக்காது மழை பொழிந்தபோதும் அங்குகூடிய மக்களில் ஒருவர் கூட விலகிச் செல்லாது அங்கேயே கூடிநின்று தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தன…
-
- 0 replies
- 641 views
-
-
அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!! ஓவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய செய்தியாகும். முக்கியமாக பதிவர்கள், வாசகர்கள் மற்றும் இணைய உரிமையாளர்கள் ஒத்துழைப்பு நல்குங்கள். பாதிக்கப்பட்டவர் இது அசினின் பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்த கதையாகும். இதில் உள் குற்றம் வெளிக் குற்றம் பார்க்கக் கூடாது தான் அனால் பாதிக்கப்பட்டது ஏழைகளல்லவா. திரையில் ஏழைகளுக்கு உதவத் துடிக்கும் நடிகர்களோ அல்லது அவர்கள் ரசிகர்களோ இதை கவனத்திலெடுங்கள். சம்பவம் என்னவென்றால் சில நாட்களிற்கு முன் யாழ் வந்திருந்த அசின் இங்குள்ள 300 வறியவர்களுக்கு விழிவெண்படல அறுவைச்சிகிச்சை இலவசமாக செய்து கொடுத்தார். …
-
- 23 replies
- 2.9k views
-
-
மன்னார் முருங்கன் பகுதியில் உள்ள என் இரட்சகர் சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் இருவர் மீது குறித்த சிறுவர் இல்லத்தினை நடத்தி வந்த போதகரால் பாலியல் துஸ்பிரையோகத்திற்கு உற்படுத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் குறித்த சிறுவர் இல்லம் நோற்று மூடப்பட்டதோடு அங்கு பராமரிக்கப்பட்டு வந்த 18 சிறுவர்களில் 16 சிறுவர்கள் இன்று மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளினூடாக மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.யுட்சன் பெற்றோர் உள்ள 8 சிறுமிகளை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறும் 6 சிறுமிகளை மன்னாரில் உள்ள பாதுகாப்பான சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறும் சிறுவர் நன்னடத்தைப்பிரிவு அதிகாரிக்கு உத்தர…
-
- 2 replies
- 651 views
-
-
எங்கள் துன்பங்களையும் கஷ்டங்களையும் கேட்டறிந்து கொள்ள, நல்லிணக்க ஆணைக்குழுவினராகிய நீங்களாவது எங்கள் முன் வரவேண்டும். விடுதலை செய்யப்படாமல் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எங்களை விடுதலை செய்வதற்காக எங்கள் அனைவரினதும் கருத்துக்களையும் கேட்டறிந்து ஜனாதிபதி முன்னிலையில் சமர்ப்பியுங்கள் என புதிய மகசின் சிறைச்சாலை, ஜி.எச்.ஜே. பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதி உருவாக்கிய நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு எழுதிய கடிதம் ஒன்றிலேயே இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்க் கைதிகள் எழுதிய இக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது : " நல்லிணக்க ஆணைக்குழு எங்களது கருத்துக்களையும் கேட்டறிய வே…
-
- 1 reply
- 515 views
-
-
நேசக்கரம் உறவுகளுக்கு உதவும் சுயதொழில் சத்துணவுத் திட்டம் ஒக்ரோபர் மாதம் போரால் பாதிக்கப்பட்டு உதவிகள் அற்ற உறவுகளுக்கான உதவும் திட்டத்தை நேசக்கரம் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி முதல் 15ம் திகதி வரையில் 256000ரூபாவுக்கான (இரண்டு இலட்சத்து ஐம்பத்து ஆறாயிரம் ரூபா) உதவிகளை வழங்கியுள்ளது. இவ்வுதவிகளானது சுயதொழில் வேலைவாய்ப்பு பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவு கல்வித் தேவைகள் துவிச்சக்கர வண்டி போன்றவற்றுக்காக வழங்கப்பட்டுள்ளது. தங்கராசா நாகலட்சுமி 10000ரூபா எள்ளுக்காடு உருத்திரபுரம் , சிவசுப்பிரமணியம் உருத்திரபுரம் எள்ளுக்காடு 5000ரூபா , திருச்செல்வம் வித்தியா எள்ளுக்காடு உருத்திரபுரம் 5000ரூபா , இராசன் சுப்பிரமணியம் மருதநகர், கிளிநொச்சி 11000ரூபா , பாலநந்தின…
-
- 1 reply
- 823 views
-
-
சிங்கள மக்கள் காலம் காலமாக வாழ்ந்தனராம் – அவர்களை மீளக்குடியேற்ற வேண்டுமாம் – சொல்கிறார் சிங்களக் கைக்கூலி ராகவன் http://meenakam.com/?p=11100 யாழ்ப்பாணத்தில் காலம் காலமாக சிங்கள மக்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன என்று லண்டனில் இருந்து யாழ் வந்துள்ள சிங்கள கைக்கூலி ராகவன் குறிப்பிட்டுள்ளார். கி.பி 15 நூற்றாண்டு முதல் நடத்தப்பட்ட கணக்கெடுப்புக்களின்படி 1000 வரையிலான சிங்கள மக்கள் வாழ்ந்துள்ளதை யாழ்ப்பாண வைபவமாலை மற்றும் யாழ்ப்பாண சரிதம் முதலிய நூல்கள் சொல்லுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் 1984ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி திருமணம் செய்து கொண்டு புலம்பெயர்ந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மத்திய குழு உறுப்பி…
-
- 7 replies
- 1.2k views
-
-
மகிந்தாவின் ஆசியுடன் தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்கும் திட்டம் வெற்றிஅனலை நிதிஸ் ச. குமாரன் சிறிலங்கா என்பது பவுத்த-சிங்கள மக்களைக் கொண்ட நாடாகவே சிங்கள தேசம் இன்றுவரை கூறிவருகின்றது. தமிழர்கள் கள்ளத்தோணிகள் என்றும் இவர்கள் சட்டவிரோதமாக சிங்கள-பவுத்த நாட்டை கைப்பற்றி இன்று தனிநாடு கேட்குமளவு மோசமான நிலைவந்துவிட்டதாக கூக்குரல் இடும் சிங்கள இனவாதிகள், கடந்த வருடம் வரை புலி என்றால் கிலிகொண்டு ஓடுமளவு பயமிருந்தவர்கள் எல்லாம் துணிச்சலுடன் இன்று தமிழர்களின் தாயகப் பிரதேசத்தில் காலடி வைத்து வரலாற்றிற்கு முன்னிருந்த காலப்பகுதிகளிலிருந்தே தமிழர்கள் வாழ்ந்த நிலங்களை அரசாங்கத்தின் நேரடி ஆதரவுடன் அபகரிக்க திட்டம்போட்டு அதிலும் வெற்றி கண்டுவருகின்றார்கள். சில ஈனத்தமிழர்க…
-
- 0 replies
- 685 views
-
-
http://www.yarl.com/files/101019_saroja_sivachandran.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 810 views
-
-
http://www.yarl.com/files/101019_ranjan_batticaloa.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 624 views
-
-
http://www.yarl.com/files/101019_jaffna_report.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 756 views
-
-
http://www.yarl.com/files/101019_colombo_report.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 547 views
-
-
http://www.yarl.com/files/101019_ajan_vanni_school_situation.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 547 views
-