ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143266 topics in this forum
-
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 14, 2010 ஈழநாதம் இரு மாவீரர்களின் சகோதரியும் சுனாமியால் தன் பெற்றோர்களை இழந்தவருமான 13 வயது சிறுமி சிகிரியாவில் மீட்கப்பட்டுள்ளார். இவர் கடத்தி சென்ற நிலையில் கைவிடப்பட்டாரா அல்லது யாராலும் விற்கபப்ட்டாரா என தெரியவில்லை. மட்டக்களப்பு கிரான் பகுதியைச் சேர்ந்த 13 வயது நிரம்பிய சுந்தரமூர்த்தி சோனுஜோ என்ற சிறுமியே இன்று காலை சீகிரிய நகர்பகுதியில் அநாதரவாக கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் இன்று தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர். சோனுஜோ தன்னைப்பற்றி தகவல் தருகையில் தனது பெற்றோர்கள் சுனாமியில் உயிரிழந்ததாகவும் தமது சகோதரர்கள் இருவரும் யுத்தம் இடம்பெற்ற போது இயக்கத்திலி…
-
- 0 replies
- 1.5k views
-
-
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 14, 2010 தென்மராட்சிப்பகுதி நாவற்குழி தச்சன் தோப்புப் பகுதியில் மரம் ஒன்றில் கயிற்றில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் காணப்பட்டது. இவரது சடலத்தை சாவகச்சேரி பொலிஸார் மீட்டு சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர். இதே இடத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தனுஷா (வயது 19) என்னும் பெண்ணே இறந்தவராவார். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் நீதி மன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஈழ நாதம்
-
- 0 replies
- 857 views
-
-
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 14, 2010 ஈழ நாதம் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதனை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டுமென இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அண்மையில் அரசாங்கதினால் நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் அமெரிக்கா தேவையற்றதும், பொறுப்பற்றதுமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க தனது சொந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைப்பு காட்ட வேண்டும் எனவும், இவ்வாறான பொறுப்பற்ற கருத்துக்களை அரசாங்கம் கவனத்திற் கொள்ளாது எனவும் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் அமெரிக்க வெளியிட்ட கருத்தின் மூலம் அரசாங்கத்தை மட்டுமன்றி நாட்டின் அதிஉயர் சட்ட பீடமான உச்ச நீ…
-
- 0 replies
- 473 views
-
-
http://www.nerdo.lk/wp-content/uploads/2010/09/DSC012283.jpg கடந்த வருடம் யுத்தம் முடிவுக்கு வந்தபின் தடுத்து வைக்கப்பட்ட ஆயிரக் கணக்கான முன்னாள் போராளிகள் தற்போதும் தடுப்பு முகாம்களில் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் அரசாங்கத்தால்; படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருவதை நீங்கள் செய்திகளில் பார்த்திருக்கலாம். இந்தவாரம் பம்பைமடு முகாமிலிருந்து 508 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தடுப்பு முகாம்களிலுள்ள மற்றயவர்களையும் விடுவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.� இப்படியான சூழ்நிலையில்இ புலம்பெயர் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் கனவுலகில் வைத்திருக்கும் திட்டத்துடன் ஒரு சிலரால் சில கருத்துகள் இப்போதும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. புலம்பெயர் உறவுகளைக்…
-
- 36 replies
- 3.3k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஇ உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க உள்ளது 13 September 10 09:58 am (BST) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து ஆராயும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அமர்வுகள் எதிர்வரும் வாரத்தில் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அமர்வுகளின் போது தமது கட்சி உறுப்பினர்களும் சாட்சியமளிக்க உள்ள…
-
- 0 replies
- 553 views
-
-
சிறிலங்கா விசாரணைக்குழுவுக்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு சாட்சியமளிக்கும் - இரா சம்பந்தன் இலங்கையில் அரசதலைவரால் நியமிக்கப்பட்டுள்ள படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் இது தொடர்பில் அனுப்பிய கடிதம் கிடைத்துள்ளதாக பிபிசி தமிழோசையிடம் கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ்த் தரப்பின் நியாயங்களை சரித்திர ரீதியாக முன்வைக்க வேண்டிய நிலையில் தாம் இருப்பதாகக் கூறினார். ஆணைக்குழு மீதுள்ள நம்பகத் தன்மைகளுக்கு அப்பாற்பட்டு, அதன் முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கான கடப்பாடு தமிழர் தரப்புக்கு இருப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்தார். …
-
- 2 replies
- 617 views
-
-
வல்வெட்டித்துறை அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை உலகத் தமிழர் பேரவையின் செயலாளரான இராமசாமி பத்மநாபன் இன்று காலையில் சென்று பார்வையிட்டார்.இவர் பேரவையின் தலைவரான பழ.நெடுமாறனின் விசேட பிரதியாகவே இவர் வந்திருந்தார். அவர் பார்வதி அம்மாளைப் பார்வையிட்டு நலத்தை அறிந்து கொண்டார்.http://www.tharavu.com/2010/09/blog-post_4076.html
-
- 0 replies
- 2.1k views
-
-
திங்கட்கிழமை, செப்டம்பர் 13, 2010 நாளை பிரித்தானிய பாராளுமன்றில் தமிழர்கள் பிரச்சினை தொடர்பில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப உள்ளனர். அதில் முக்கியமாக கைது சிறையில் உள்ள போராளிகள் தொடர்பிலும் கேள்வி எழுப்பப்படவுள்ளது. கைது செய்த போராளிகளுக்கு என்ன நடக்கின்றது? உண்மையில் அவர்களது எண்ணிக்கை என்ன? ஏன் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினை பார்க்க அனுமதிக்கவில்லை? வடக்கு கிழக்கில் புனர்வாழ்வு புனரமைப்பு செயற்பாடுகள், தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு ஆகியனபற்றியே பாராளுமன்ற ஆழும் கட்சி உறுப்பினர்களால் கேட்கப்படும். தமிழ் மக்களிற்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு இதனை கேட்கவுள்ளது. சுமார் 100 இற்கு மேற்பட்ட எம்.பி க்கள் இந்த கேள்விக்கு ஆதரவு தெரி…
-
- 2 replies
- 912 views
-
-
திங்கட்கிழமை, செப்டம்பர் 13, 2010 பிரித்தானிய பாராளுமன்றில் தமிழர்களின் ஆதிக்கம் குறித்து கவலை கொண்ட மஹிந்த அதற்கென வருடாந்தம் மூன்று இலட்சம் பவுண்கள் சம்பளத்தில் முக்கிய நிறுவனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை மூளை சலவை செய்யும் பணிகளில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு உள்ளூரில் விருந்துகள் மற்றும் உதவிகள் புரிதல், சிறிலங்காவிற்கு இலவச பயண சுற்றுலா ஒழுங்குகள் என திட்டமிடபப்ட்டுள்ளன. சுற்றுலாத்துறையினை விரிவு படுத்தல் என்ற பேரிலேயே இவை நடக்கின்றன. ஆனால் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இந்த வலையில் விழவில்லை என தெரிய வருகின்றது. காரணம் இது ஓர் அரசியல் பிரச்சினையாக உள்ளூரில் உருவெடுக்கும் என்பதனாலும் கூடவே சர்வதேச மன…
-
- 1 reply
- 924 views
-
-
http://www.yarl.com/files/100907_jaffna_report.mp3 நன்றி: ATBC
-
- 31 replies
- 7.3k views
-
-
நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களை, மிருகங்களைப் போன்று எந்தவிதமான அடிப்படை வசதியுமின்றி குடியமர்த்துவது மீள் குடியேற்றமாக கருதப்பட முடியாது.தமிழர்கள் சொந்த நாடு என உணரக் கூடிய சூழ்நிலையை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.எங்கள் நாடு எங்கள் தேசம் என்ற உணர்வு தமிழர்களுக்கு ஏற்படக் கூடிய வகையில் அரசாங்கம் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களை, மிருகங்களைப் போன்று எந்தவிதமான அடிப்படை வசதியுமின்றி குடியமர்த்துவது மீள் குடியேற்றமாக கருதப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மீள் குடியேற்றப்பட்ட மக்கள் வாழ்வதாரமின்…
-
- 0 replies
- 707 views
-
-
திங்கட்கிழமை, செப்டம்பர் 13, 2010 யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த வான் புத்தளம் மாறாவில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை பஸ்ஸூடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் 5 வயதுடைய சந்தோஸ் மற்றும் 60 வயதுடைய சண்முகலிங்கம் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். விபத்தி்ல் காயமடைந்தவர்களில் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், ஏனைய 7 பேர் மாறாவில் வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். Eelanatham
-
- 0 replies
- 715 views
-
-
திங்கட்கிழமை, செப்டம்பர் 13, 2010 18 நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் தமிழீழம் அமைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு கூறியுள்ளார் சிங்கள பிரமதர் ஜயரட்ன. இவர்கள் பல்வேறு அமைப்புக்களை உருவாக்கி சட்ட ரீதியாக செயற்பட ஆரம்பித்துள்ளனர். இதில் புத்திஜீவிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் ஆதரவுடன் நடைபெறுகின்றது. இதனை நாம் ஒற்றுமையுடன் முறியடிக்க வேண்டும் என்றார் சிங்கள பிரதமர் ஜயரட்ன. . Eelanatham
-
- 0 replies
- 1.1k views
-
-
யேர்மன் பெர்லினில் நடைபெற்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்த உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2010 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில் 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீழாத் து…
-
- 0 replies
- 663 views
-
-
இன்று பிற்பகல் மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மக்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆரையம்பதி சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவர் நடராசா துஸாதரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் ஆரையம்பதி பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம்,மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்பாளர் ரவீந்திரன்,உட்பட கிராம முக்கியஸ்த்தர்கள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதியமைச்சர், சகலரும் ஒன்று பட்டு எமது பலத்தை அதிகரிப்பதன் மூலமே எமது தனித்துவமான செயற்பாட்டை அதிகரிக்கலா…
-
- 4 replies
- 1.4k views
-
-
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 10, 2010 பாராளுமன்றில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட 18ஆவது திருத்தச் சட்ட மூலம் உள்ளிட்ட இலங்கையின் அரசியல் சூழ்நிலைகள் தொடர்பான தகவல்களை அறியத் தரும்படி இந்தியாவிடம் அமெரிக்கா கோரியுள்ளது. இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் அரசியல் நிலைமைகள், பிராந்தியத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதனைத் தெளிவுபடுத்துமாறும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம், இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகள், வெளிவிவகாரம், அரசியல் சாசனத் திருத்தங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்தியாவிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி கோரிக்கையை அமெரிக்க ராஜாங்கத் திணைக்க…
-
- 4 replies
- 1.2k views
-
-
'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' அண்மைக்கால இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி மகிந்த கொம்பனி தெய்வங்களே இல்லை என்ற முடிவுக்கு வந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழருக்கெதிரான யுத்த வெற்றி, அதனைத்தொடர்ந்து ஜனாதித் தேர்தல் வெற்றி ஆகிய இரு பெரு வெற்றிகளைத் தொடர்ந்து தற்பொழுது 18 ஆவது திருத்தச் சட்டத்திற்கான வெற்றியானது சிங்களத்திற்கு மேலும் மமதையை உண்டாக்கியிருக்கலாம். 18 ஆவது திருத்தமென்பது ஓரளவு ஜனநாயக வரைமுறைகளை உட்புகுத்தியிருப்பது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஜனாதிபதித் தெரிவானது முழுக்க முழுக்க சிங்கள மக்களின் கைகளிலே இருப்பதால் சிங்கள மக்களுக்கு இது ஜனநாயக செயலாக தோன்றலாம். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இது முழுக்க ம…
-
- 3 replies
- 723 views
-
-
கனடியத் தமிழ்க் காங்கிரஸ் தலைமை அலுவலகம் வன்முறையாளர்களால் உடைப்பு: எம்.வி.சன்.சி.கப்பல் தமிழர்களது விபரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பலவும் கொள்ளை. [Monday, 2010-09-13 01:24:21] கனடாவின் மிகப்பெரும் தமிழர் தொண்டார்வ நிறுவனமான கனடியத் தமிழ்க் காங்கிரஸின் அலுவலகம் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளன. கனடா வாழ் தமிழர்களின் ஏகோபித்த குரலாக வேற்றின மக்களிடையேயும், கனடியத் தேசிய நீரோட்டத்திலும் செயற்பட்டு வரும் கனடியத் தமிழ்க் காங்கிரஸ் கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் 11 அலுவலகங்களைக் கொண்டிருந்தாலும் அதன் தலைமையலுவலகம் ரொறன்ரோவின் ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ளது. இவ்வலுவலகமே கடந்த சனிக்கிழமை இரவுக்கும் ஞாயிற்றுக்கிழமை காலைக்குமிடையே வன்முறையாளர்களால் உடைக்கப்பட்டு பெற…
-
- 0 replies
- 892 views
-
-
சனிக்கிழமை, 11, செப்டம்பர் 2010 (19:54 IST) பார்வதியம்மாளை பார்க்க வரும் சிங்களவர்கள் இலங்கை வல்வெட்டித்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள், தற்போது நீராகாரம் மற்றும் திட ஆகாரம் உட்கொள்வதாக அவரது உறவினரும் எம்.பி.,யுமான சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். சிறுநீர் கழிப்பதிலும் சிக்கல் நிலை உள்ளதாகவும் உடல்நிலை சற்று முன்னேறுவதும் பின்னடைவதுமாக காணப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீண்டகாலம் தடுப்பு முகாமில் இருந்த காரணத்தினால் அவருடைய நிலைமையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தன்னால் உணரமுடிகிறது என்று கூறியுள்ளார். மேலும் பார்வதி அம்மாவின் உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த கடினம் என்று மருத்து…
-
- 5 replies
- 1k views
-
-
பி.பி.சி சிங்கள வானொலிச் சேவையின் செவ்வியை தவிர்த்த கே.பீ பின்னர் சிங்கள பத்திரிகை மற்றும் புலம்பெயர் ஆங்கில இணையம் ஆகியவற்றுக்கு செவ்வி வழங்கியமை குறித்து சர்ச்சை‐ 11 September 10 03:11 am (BST) பி.பி.சி சிங்கள வானொலிச் சேவை பல வாரங்களுக்கு முன்னர் கே.பி. என்ற குமரன் பத்மநாதனிடம் செவ்வியொன்றைப் பெறுவதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்திய பின்னர் அந்த செவ்வியில் கேட்கப்படவிருந்த 23 கேள்விகள் அடங்கிய பட்டியலை பி.பி.சியின் கடிதத் தலைப்புடன் கே.பிக்கு கிடைக்கச் செய்திருந்தனர். பாதுகாப்புச் செயலாளரின் அனுமதியின்றி கே.பி நேர்காணல்களை வழங்க முடியாது என்பதை அறிந்துகொண்ட பி.பி.சி ஊடகம்இ அதன் கேள்விகளை பாதுகாப்புச் செயலாளருக்கும் அனுப்பி வைத்தது. புலம்பெயர் சமூகத்தில்…
-
- 4 replies
- 1.1k views
-
-
வியாழக்கிழமை, செப்டம்பர் 9, 2010 தனக்குப் போதுமான கால அவகாசம் இருந்திருந்தால் அரசமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு கொண்டிருக்கும் சந்தேகத்தைத் தீர்த்து கூட்டமைப்பின் ஆதரவையும் இந்த அரசமைப்புத் திருத்தத்துக்குப் பெற்றுக்கொடுத்திருக்க முடியும் என்று மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று நாடாளு மன்றில் கூறினார். அரசமைப்புத் திருத்தம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதுதொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: நாங்கள் எந்தவிதமான அச்சுறுத்தல்களும், பலவந் தங்களும் இன்றி நிறைந்த மனதுடனேயே 18ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கின்றோம். எமது கட்சியின் பரிபூரண அங்கீகாரத்துடனேயே ஆதரவாக வாக்களிக்கின்றோம். இன்று காலை இச்சபையில் உரையா…
-
- 27 replies
- 2.5k views
-
-
ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 12, 2010 கிழக்கு மாகாணம் பனிக்கங்குளத்தில் விடுதலைப்புலிகளின் மருத்துவ அணியினரின் ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்களும் மருந்துகளும் மீட்கப்பட்டுளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. உயிர்க்காப்பு மருந்துகள், மயக்க மருந்துகள், நோயெதிர்ப்பு மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சைக்குரிய மருந்துகளே மீட்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அண்மையில் பிடிக்கப்பட்ட படகோட்டிகளின் தகவலிற்கு அமையவே இந்த பொருட்கள் கடற்படையினரால் கண்டெடுக்கபப்ட்டதாக கூறப்படுகின்றது. My link
-
- 1 reply
- 1.4k views
-
-
ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 12, 2010 படையினரால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் சில உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் மீண்டும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் பத்துக்கு மேற்பட்டோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் விடுவிக்கபட்டவர்களுக்கு கடிதம் வழங்கும் போது அது 06 மாதம் தான் செல்லும் எனவும் வழங்கப்படுகின்றது. ஆனால் 06 மாதம் சென்ற பின்னர் இவர்க|ள் ஏதாவது ஆவணங்கள் தேவைப்படின் பொலிஸ் கடிதம் தேவை என கூறுகின்ரனர். பொலிசிடம் போனால் அவர்கள் விடுவிக்கப்பட்ட கடிதம் செல்லுபடியாகாது மீண்டும் கடிதம் தேவை என கூறுகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின்போது கைது செய்யப்பட்ட மற்று…
-
- 2 replies
- 955 views
-
-
செப் 12, 2010 / பகுதி: செய்தி / த எக்கொனமிஸ்ட் சஞ்சிகை சிறீலங்கா அரசால் மீண்டும் பறிமுதல் சிறீலங்கா அரசின் 18 ஆவது திருத்தச்சட்டத்தை கடுமையாக சாடி ஆசிரியர் தலையங்கம் ஒன்றை வரைந்திருந்த த எக்கொனமிஸ்ட் சஞ்சிகையை சிறீலங்கா அரசு விமான நிலையத்தில் பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்காவுக்கு கொண்டுவரப்பட்ட த எக்கொனமிஸ்ட் சஞ்சிகையை சிறீலங்கா அரசின் சுங்கத்திணைக்கள அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சிறீலங்கா அரசின் 18 ஆவது திருத்தச்சட்டத்தை கடுமையாக சாடி ஆசிரியர் தலையங்கம் ஒன்றை வரைந்திருந்ததால் அதனை பறிமுதல் செய்துள்ளதாகவும், அதனை தாம் தகவல் திணைக்களத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் சுங்கத்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தம்ம…
-
- 0 replies
- 589 views
-
-
செப் 12, 2010 / பகுதி: செய்தி / சீனாவில் கோட்டாபய பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் உயர் மட்ட பாதுகாப்புக் குழுவொன்று சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்தும் நோக்குடன் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளுக்காக இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இக்குழுவில் சிரேஷ்ட படை அதிகாரிகள் பலர் இடம்பெற்றுள்ளனர். இராணுவத்தின் பிரதம படை அதிகாரி மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்க இக்குழுவில் இடம்பெற்றுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. அதேவேளை, விமானப்படையின் பிரதம படை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பி.பீ. பிரேமச்சந்திரவும் சீனாவுக்குச் சென்றுள்ளதாக விமா…
-
- 0 replies
- 524 views
-