ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143264 topics in this forum
-
கே.பி சொல்வது உண்மையா பொய்யா இனம் காண முடியாத ஊடகங்கள் இலங்கை அரசாங்கத்தின் தடுப்பில் உள்ளதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதன், இலங்கையின் சில ஊடகங்களுக்கு அவ்வப்போது செவ்விகளை வழங்கி வருகிறார் அண்மையில் அவர் வழங்கிய செவ்வியில் வன்னியில் நடைபெற்ற இறுதியுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா நடேசன் இந்திய உள்துறை அமைச்சர் பா சிதம்பரத்துடன் தொடர்புக்கொண்டு போர் நிறுத்தம் ஒன்று குறித்து பேச்சு நடத்தியதாக குமரன் பத்மநாதன் தெரிவித்திருந்தார் அப்போது போர் நிறுத்தத்திற்காக சிதம்பரம் பல நிபந்தனைகளை விதித்திருந்தார் என்றும் இந்த குறித்த விடயம், தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்…
-
- 4 replies
- 1.6k views
-
-
யாழ் ஆயர் மீழ்குடியேற்றம் தொடர்பில் மஹிந்தவிற்கு பாராட்டு. நேற்று கொழும்பில் மஹிந்த நாட்டின் ஆயர்களை சந்தித்தார். இதில் வடக்கு கிழக்கு ஆயர்களும் ஓர் குழுவாக கலந்து கொண்டனர். இந்தகூட்டத்தில் மஹிந்தவின் மீழ் குடியேற்றம் தமக்கு திருப்தி தருவதாகவும் மிகச்சிறப்பாக ஜனாதிபதி செயற்படுவதாகவும் கொழும்பு ஊடகம் கூறியுள்ளது. ஆனால் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீரவில்லை என்றும் அதனை மஹிந்தவினால் தான் முடியும் எனவும் மஹிந்தவினை உற்சாகப்படுத்தியதாகவும் ஆயர் வட்டாரங்கள் கூறுகின்றது. இதே வேளை வடக்கு கிழக்கு ஆயர்கள் தனியாக பிரதமர் ஜெயரட்னவையும் சந்தித்துள்ளனர். ஈழநாதம்
-
- 4 replies
- 686 views
-
-
ஆக 23, 2010 / பகுதி: செய்தி / பொன்சேகாவின் மதிய உணவிலும் மண்ணைப் போட்டார் கோத்தபாயா சிறீலங்காவின் நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் நடைபெறும் நாட்களில் அதில் பங்குபற்றும் ஜெனரல் பொன்சேகா நாடாளுமன்ற வாளாகத்தில் உள்ள உணவகத்தில் தனது மதிய உணவை அருந்துவதுண்டு. ஆனால் அதனையும் நிறுத்தியுள்ளர் சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்கா கடற்படை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறீலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதியும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் பொன்சேகா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்குபற்றும் சமயங்களில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உணவகத்தில் மதிய உணவை அருந்துவதுண்டு. கடற்படை தலைமையக…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழர்களே, கொதித்தெழுங்கள்...தமிழர்களை தீவிரவாதிகளாக காட்டும் காணொளிக்கு எதிர்ப்பு காட்டுவோம். ஒரு விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் அந்நிறுவத்திற்கு தக்க பாடம் புகட்டுவோம். ஈழப்போரை ஒரு கணினி விளையாட்டாக ஆக விடலாமா?! Ubisoft's new Game (Although the war in Sri Lanka is long over, the task of fighting the LTTE is not, at least from what can be seen by way of a new video game to be launched this November by a French gaming company Ubisoft. In the game titled Ghost Recon Predatorpredator an animal that derives its life support by predation. ..... Click the link for more information., players who act as members of an elite squad h…
-
- 0 replies
- 692 views
-
-
சரத் பொன்சேகாவிற்கு எதிரான இரண்டாவது யுத்த நீதிமன்ற விசாரணைகள் இன்று ஆரம்பம் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு எதிரான இரண்டாவது யுத்த நீதிமன்ற விசாரணைகள் இராணுவத் தலைமையகத்தில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் நடத்தப்பட உள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார். இராணுவத்திற்காக ஆயுதங்களை கொள்வனவு செய்த போது சரத் பொன்சேகா ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஊழல் மோசடி தொடர்பில் இன்றைய தினம் சிலரிடம் சாட்சியங்கள் பதியப்பட உள்ளதாக தெரியவருகிறது. இராணுவம் யுத்த நீதிமன்றின் தலைவராக மேஜர் ஜெனரல் எம்.ஜீ.பீரிஸ் கடமையாற்றுகின்றார். இலங்கையில் தனக்கு நியாயம் கிடைக்காது என சரத் பொனசேகா அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்தமை குறி…
-
- 0 replies
- 489 views
-
-
அமெரிக்க வான் படையுடன் சிறீலங்கா இராணுவம் உறவு சிறீலங்கா இராணுவத்தின் நடவடிக்கைகள் பாராட்குரியதென அமெரிக்க வான் படையின் உயரதிகாரியொருவர் அண்மையில் மதவச்சிக்கு சென்றிருந்த வேளையில் தெரிவித்துள்ளார். போர் நிறைவடைந்து ஒரு வருட காலப்பகுதிக்குள் எல்லைப் புற கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவதுடன் சிறீலங்காப் படையினர் மற்றும் பொதுமக்களின் கல்வித் தரம் உயர்வாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் மதவச்சிப் பிரதேசத்தில் வைத்திய முகாம் ஒன்றையும் நடத்தியுள்ளனர். எல்லையோர தமிழ் கிராமங்கள் சிங்கள மக்களால் அபகரிக்கப்பட்டு வரும் நிலையிலேயே அமெரிக்க அதிகாரி இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது http://meenakam.com/?p=5663
-
- 0 replies
- 945 views
-
-
கனேடிய பகிரங்க வாக்கெடுப்பு மையம் ஒன்று நடத்திய பகிரங்க வாக்கெடுப்பில் 35 வீதமான மக்கள் தமிழ் அகதிகளை ஏற்கவேண்டும் என்று கூறியுள்ளனர். 17 வீதமானோர் எதுவும் கூற முடியாது சட்டம் முடிவெடுக்கட்டும் என கூறியுள்ளர். ஏனைய 48 வீதமானோரே திருப்பி அனுப்ப வேண்டும் என கூறியுள்ளனர். அங்கஸ் ரெயிட் என்ற அமைப்பே இந்த வாக்கெடுப்பை நடாத்தியது. . Eelanatham.net
-
- 13 replies
- 1.1k views
-
-
ஈழத்தின் உரிமைக் குரலுக்கு உரம் சேர்க்கும் வண்ணம் தமிழகத்தில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, வி.வி.மு, பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள் மாவட்ட தலைநகரங்களில் 21.8.2010 சனிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் செய்கின்றன. முழக்கங்கள்: சிங்கள் இனவெறி அரசே, ஈழத்தமிழ்ப் பகுதிகள் மீதான ஆக்கிரமிப்புகளை நிறுத்து இராணுவ முகாம்கள் மற்றும் சிங்களக் குடியேற்றங்களைத் திரும்பப்பெறு! முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களைத் அவர்தம் வாழ்விடங்களில் மீள்குடியேற்று! அரசியல் கைதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் விடுதலை செய்! ______________________________________________________________________________ இந்திய மேலாதிக்க அரசே, இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சேவைப் பாதுகாக்…
-
- 2 replies
- 671 views
-
-
கனகராயன் குளத்தில் 8.5 அடி ( எட்டரை அடி) நீளமான புலி ஒன்று கொல்லப்பட்டுள்ளது. காட்டில் காயமுற்று இருந்த இந்த சிறுத்தை புலியினை மக்கள் மீட்டு வந்து பொலிசாரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் சிறிது நேரத்தின் பின்னர் இது இறந்து விட்டதாக வன இலாகா அதிகாரிகள் கூறியுள்ளனர். பொறியொன்றில் இந்த புலி மாட்டப்பட்டு காயப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் கூறியுள்ளனர். இந்த எட்டரை அடி நீளமான அரிதான சிறுத்தை இன புலி இலங்கையில் காண்பது மிகவும் அரிது என கூறியுள்ளனர் பொலிசார். ஆனால் வவுனியா வடக்கு காட்டுப்பகுதிகளில் இவ்வாறான இனங்கள் காணப்படுகின்றன. விடுதலைப்புலிகளினால் இந்த இனங்களை கொல்வது தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது Eelanatham
-
- 1 reply
- 1.4k views
-
-
http://www.yarl.com/forum3/uploads/monthly_06_2010/yarukku1.mp3 எழுத்து: தமிழப்பொடியன் ஒலிப்பதிவு (குரல்): எட்வேட் தொடர்புடைய பதிவு: http://www.yarl.com/forum3/index.php?showtopic=72657
-
- 42 replies
- 7.5k views
-
-
சன் சீ கப்பல் தொடர்பிலான கட்டுரை மலேசிய நிருபர் ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 22, 2010 தலை சிறந்த கப்பல் ஓட்டியே எம்.வி.சன் சீ என்ற கப்பலை ஓட்டியிருக்க முடியும். அல்லாவிடில் இந்த கப்பல் தாய்லாந்தில் இருந்து சர்வதேச கடல் எல்லைக்குள் செல்லும் முன்பாகவே கடலில் மூழ்கி இருக்கும். இவ்வாறு கூறியுள்ளார் சன் சீ கப்பலின் முந்தைய உரிமையாளர் புமிந்தர் ஹரிசூட் என்ற தாய்லாந்து நாட்டு பிரஜை. சன் சீ கப்பல் முன்னர் ஹரின் பொனிக் 15 என்ற பெயருடன் மேற்படி உரிமையாளரால் மலேசியா, தாய்லாந்து மற்றும் பாங்கொக்- சொங்க்லா ஆகிய இடங்களுக்கு இடையே ஆடு மாடுகளை ஏற்றி இறக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தது. 57 மீற்றர் உடைய இந்த கப்பல் 175,000 கனேடிய டொலரிற்கு வாங்கப்பட்டது. சன் சீ கப்பலும் அதன்…
-
- 4 replies
- 2.3k views
-
-
போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலப் பிரதி மாயம்? அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலப் பிரதிகளைக் காணவில்லை என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்தள்ளது. குறித்த போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலப் பிரதிகள் சமாதான செயலகத்திலோ அல்லது பாதுகாப்பு அமைச்சிலோ காணப்படவில்லையென பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்தார். போர் நிறுத்த உடன்படிக்கையின் பிரதி, சிறிலங்கா அரசாங்க தகவல் மையத்தில் கூட இல்லையென தெரியவருகிறது. போர் நிறுத்த உடன்படிக்கையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் உள்ளடக்கப்படவில்லை இப்போது தெரிவிக்கப்படுகிறது. போர் நிறுத்த உடன்படிக்கையின் மூ…
-
- 2 replies
- 655 views
-
-
கே.பி.யின் பேட்டியை திரிவுபடுத்தி வெளியிட்டதுடன், அந்தப் பேட்டியினை வெளியிட்ட ஊடகத்தினையும் இருட்டடிப்புச் செய்து- தமிழ் இணையத்தளம் ஒன்று வெளியிட்ட பேட்டியினை முழுமையாக ஆங்கிலத்தில் படிக்க... இணைப்பு: KP: Past is the Past
-
- 18 replies
- 2.6k views
-
-
கேபி சொல்வது அப்பட்டமான பொய்: வைகோ ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யப்படாமைக்கு காரணம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என்று சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கே.பி. அளித்துள்ள பேட்டி தொடர்பாக வைகோ பதில் அளித்து மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வி. உரை கேட்க: http://meenakam.com/?p=5609
-
- 7 replies
- 3.1k views
-
-
கேபியின் மூலம் புலம்பெயர் தமிழர்களை குழப்பிய சிறீலங்காவின் அடுத்த இலக்கு தமிழகத்தமிழர்கள் சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கே.பி.யின் மூலம் புலம்பெயர் தமிழர்களை குழப்பிய சிறீலங்கா அரசானது அடுத்தப்படியாக கேபியின் மூலம் தமிழகத்தமிழர்களை குறிவைத்துள்ளது. இது தொடர்பாக சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கே.பி. அளித்து ள்ள பேட்டி: தமிழகத்தின் ம.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வை.கோவின் நடவடிக்கைகளினால் இறுதி நேரத்தில் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் போனதாக சிறீலங்காவின் கட்டுப்பாட்டிலுள்ள குமரன் பத்மநாதன் அறிவித்துள்ளார். இந்திய மத்திய அரசாங்கம் போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்த முனைப்பு காட்டிய போதிலும், வை.கோ அந்த யோசனைத் திட்டத்தை நிராகரித்தார் எ…
-
- 1 reply
- 891 views
-
-
ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 22, 2010 சந்திரிக்காவின் மாமனும் முன் நாள் பாதுகாப்பு துணை அமைச்சரும் தமிழின படுகொலைகளின் சூத்திரதாரியுமான அனுருத்த ரத்வத்தை அவர்கள் மலேசியாவிற்கான புதிய தூதராக விரைவில் செல்கின்றார். இதற்கான பேச்சுவார்த்தை அண்மையில் மஹிந்தவினால் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் முன் நாள் கடற்படை தளபதி வசந்த கரணகொட அவர்கள் பிரித்தானியாவிற்கான தூதராகவும் நியமனம் பெறவுள்ளார். ரதவத்தை அவர்களுக்கு 43 மில்லியன் ரூபா ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. எனினும் இந்த வழக்கை வாபஸ்பெறுமாறு மஹிந்த பணித்துள்ளாராம். இதன்படி உஅர் நீதிமன்றத்தில் ரத்வத்தையின் ஊழல் வழக்கு இலஞ்ச ஒழிப்பு விசாரணைக்குழுவினால் வாபஸ்பெறப்படவுள்ளது. இதன் பின்னர் மலேசியாவிற்கு தூதராக ரத்வத்தை ச…
-
- 0 replies
- 607 views
-
-
ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 22, 2010 இலங்கயின் போர்க்குற்ற விசாரணை பற்றி பலரும் பல வழிகளில் முன்னெடுப்புக்களை செய்து வருகின்றனர். இதில் பான்கி மூன் அவர்களின் செயற்பாடானது பெரிதாக பாதிக்கப்போவது இல்லை என்றும் அது ஓர் அளவீடாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளன சிங்கள ஊடகக்ங்கள். மேலும் பான்கி மூனின் விசாரணைக்குழுவை ஓரளவு அங்கத்துவ நாடுகளின் உதவியுடன் தணிக்க முடியும் அல்லது ஏமாற்றவும் முடியும் என்பது இராஜபக்ஷக்களின் நம்பிக்கை. அடுத்ததாக அண்மையில் 57 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ஹிலாரி கிளிங்டனுக்கு வழங்கிய அறிக்கையில், வேண்டுகையில் இலங்கையில் போர்க்குற்ற விசாரணை தேவை அதுவும் சர்வதேச விசாரணை தேவை என கூறியுள்ளது. இந்த அறிக்கையும் சிறிது தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடியது தான்…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 22, 2010 இந்திய வெளியுறவு அமைச்சஎ எஸ்.எம். கிருஸ்ணா வருகின்ர அக்டோபர் மாதம் கொழும்பு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கலைஞர் கருணா நிதி அவர்களை சந்தித்த நிருபாமா இது தொடர்பில் ஆலோசனை பெற்றதாகவும் அந்த அடிப்படயிலேயே கிருஸ்ணா செல்லவிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. ஆனால் முக்கியமான ஒரு இந்திய அதிகாரி ஒருவர் கொழும்பு செல்லவிருப்பதாகவும் வெளியுறவு செயலராக அது இருக்காது எனவும் வேறொரு செய்தி தெரிவிக்கின்றது. கொழும்பினுடனான சீன மற்றும் பல நாட்டு உறவுகளை எச்சரிக்கும் பொருட்டு இலங்கை தமிழர் பிரச்சினைகளை கையில் எடுத்துக்கொண்டு இந்தியா அலைவதாக சில செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. கிருஸ்ணா வரும் நேரம் அவர் அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாண…
-
- 0 replies
- 495 views
-
-
25 வருடங்களின் பின் இந்திய பிரதிநிதி இலங்கை பயணம் செய்வார் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உதவியளிக்கும் நோக்கில் விசேட இந்திய பிரதிநிதியொருவர் இலங்கை செல்ல உள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் இவ்வாறான ஓர் பிரதிநிதி முதல் தடவையாக இலங்கைக்கு செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் ஆட்சி காலத்தில் இவ்வாறான சிறப்புபிரதிநிதிகள் அடிக்கடி இலங்கைக்கு பயணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. வடக்கு மக்கள் மீள் குடியேற்றம், அரசியல் தீர்வுத் திட்டம் மற்றும் நலன்புரி நிலைய மக்களின் நிலைமைகள் ஆகியன குறித்து சிறப்பு பிரதிநிதி கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமி…
-
- 0 replies
- 454 views
-
-
சிங்களம் வெறியாடிய மூதூர் படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு நாள் திகதி: 04.08.2010, 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் நாள் பாரிசைத் தலைமையகமாகக்கொண்டுள்ள பட்டினிக்கு எதிரான அமைப்பு Action Contre La Faim (ACF) என்ற மனிதாபிமான அமைப்பின் 17 உள்ளுர் பணியாளர்கள் மூதூரில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் மரண தண்டனைவிதிக்கப்படும் பாணியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் . மூதூர் பகுதியில் சிறிலங்கா தரை ப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த சூழ்நிலையிலேயே இந்தப் படுகொலைகள் இடம்பெற்றன .2004 ஆம் ஆண்டில் இடம்பெற்றஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கும் பணியில் இந்த மனிதாபிமான அமைப்பின் பணியாளர்கள்ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மூதூரில் போர் மூண்டதையடுத்து அதில் பாதிக…
-
- 4 replies
- 1.1k views
-
-
சக்வித்தி ரணசிங்க, சிங்களவர் தங்கவேலுவாக என்ற தமிழராக மாறினார் இலங்கையில் தனியொரு மனிதனாக இருந்து சுமார் 100 கோடி ரூபாவை மோசடி செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள சக்வித்தி ரணசிங்க, என்ற சிங்கள நபர் தமிழ் பெயரை பயன்படுத்தியே இந்தியாவுக்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சக்வித்தி ரணசிங்க என்ற சந்தேக நபர் தங்கவேலு எலியமூளை என்ற பெயரிலேயே சென்னைக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அவருடைய மனைவி தங்கவேலு ராதா என்ற தமிழ் பெயரில் கடவுச்சீட்டை வைத்திருந்தார் என பொலிஸார் இப்போது தெரிவித்துள்ளனர் இந்த கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி சக்வித்தியும் அவருடைய மனைவியும் இலங்கையில் இருந்து தப்பிச்சென்றதன் பின்பு ஐரொப்பிய நாடுகளுக்கு செல்லும் நோக்கில் …
-
- 0 replies
- 815 views
-
-
இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது ஜே வி பி இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கக்கோரி சர்வதேச நாடுகளை கோரப்போவதாக ஜே வி பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தள்ளார். சமீபத்தில் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலியில் வைத்து கைதுசெய்யப்பட்டமையை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சோமவன்ச தெரிவித்துள்ளார் அகிம்சை ரீதியான எதிர்ப்புக்களுக்கு இலங்கையில் இடமில்லை என்ற அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார் காலியில் சரத் பொன்சேகாவை விடுகவிக்குமாறு கோரி நடத்தப்ட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்புகைத்தாக்குதலை நடத்தியதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களையு…
-
- 0 replies
- 414 views
-
-
தாயகத்தில் நிலப்பறிப்பையும், சிங்கள மயமாக்கலையும் தடுப்பதற்கு தாயக, தமிழக, புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுபடவேண்டும்: தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தாயகத்தில் தொடர்ச்சியாக இடம் பெற்றுவரும் நிலப்பறிப்பையும், சிங்கள மயமாக்கலையும் தடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவையாக உள்ளது. இந்த ஆதரவை திரட்டுவதற்கு தாயகத்திலுள்ள மக்களும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களும், தமிழகத்திலுள்ள தமிழ் உறவுகளும் விழிப்புணர்வுடன் ஒற்றுமையாகச் செயற்பட முன்வருமாறு தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி 19-08-2010 ஊடக அறிக்கை இலங்கைத்தீவில் 1505 ம் ஆண்டு வரை தமிழ்த் தேசம் தனது இறைமையை செவ்வனே பிரயோகிக்கக்கூடிய ஒரு தேசமா…
-
- 0 replies
- 359 views
-
-
போர் தந்த வெற்றிக்களிப்பில் மனித அவலங்கள் மறைக்கப்படுகின்றன் – வடக்கு கிழக்கு பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை போர் முடிந்து ஒரு வருடம் இரண்டு மாதங்களும் நிறைவடைந்து விட்ட போதும் இன்னம் வெற்றிக் களிப்புகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. வெற்றிக் கொண்டாட்டங்களின் ஓசையில் வேளையில் அதனூடாக மனித அவலக்குரல்கள் மறைக்கப்படுகின்றமை யாவரும் அறிந்ததே. இருப்பினும் ஆண் பெண் இருபாலாலும் தற்போது பெண்கள் அதாவது தொழில் புகின்ற மற்றும் குடும்பப் பெண்கள் மேலதிகாகள் மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டிய பாதுகாப்புப் பிவினரால் துன்புறுத்தப்படுகின்றமை அதிகத்து வருகின் றது. இவற்றில் குறிப்பிட்ட ஓரண்டு வழக்கு கள் மட்டுமே விசாரணை வரைக்கும் வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு வருகின்ற வழக்கு கள்…
-
- 0 replies
- 405 views
-
-
நல்லூர் கந்தசாமி கோவில் ஏழாம் நாள் விழா My link மேலதிக படங்களுக்கு ... http://meenakam.com/?p=5577
-
- 0 replies
- 629 views
-