Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து சேர்ந்த விடுதலைப் புலிகளின் முக்கிய அரசியற் பிரமுகர்கள் பலர் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நிராயுதபாணிகளாய் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்த இவர்கள் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் மேலிடத்து உத்தரவுக்கமைய கொல்லப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசியற் துறைப் பணிகளை மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரும் முன்னாள் ஈரோஸ் இயக்கத் தலைவருமான வீ.பாலகுமாரன், வரலாற்று ஆவணக் காப்பகப் பொறுப்பாளர் யோகரத்னம் யோகி, கலைப் பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட பலர் இவ்வா…

    • 0 replies
    • 1.2k views
  2. மனிக்பாம் முகாமிற்கு செல்ல விடாது தடுத்த அரசின் எதேச்சாதிகாரத்தை கவனத்தில் கொள்க சர்வதேசமே! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் வவுனியா "மனிக்பாம்"முகாமுக்குச் செல்லவிடாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் பன்னிருவரையும் தடுத்த இலங்கை அரசாங்கத்தின் எதேச்சாதிகாரச் செயலை, தக்கவாறு கவனத்தில் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்திடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசாங்கத்தின் செயலைக் கண்டித்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கூட்டறிக்கை யிலேயே அவர்கள் இதனை வலியுறுத்தியுள்ளனர். மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திப் பதற்கு விடாது தடுத்…

  3. இந்தியாவுடனான வர்த்தக உடன்பாடுகளை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் திகதி: 26.05.2010 // தமிழீழம் இந்தியாவுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தக உடன்பாடுகளை கைவிடுமாறு தென்னிலங்கை சிங்கள மக்கள் சிறீலங்கா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இந்தியாவுடன் சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் வர்த்தக நடவடிக்கைகளை கைவிடுமாறு நேற்று (25) செவ்வாய்க்கிழமை பல நூறு சிங்கள மக்கள் சிறீலங்காவின் தலைநகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களை தனது அரச தலைவர் இல்லத்தில் சந்தித்த சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தான் இந்தியாவுடன் மேற்கொள்ளும் வர்த்தக நடவடிக்கைகளை கைவிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் சிறிலங…

  4. சிவகுமாரன் அண்ணா நினைவாக தமிழீழ தேசிய மாணவர் எழுச்சி நாள் லண்டனில் ஜூன் 06 Uploaded with ImageShack.us

    • 0 replies
    • 807 views
  5. மூடிய அறைக்குள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் [ தினக்குரல் ] - [ May 26, 2010 04:00 GMT ] கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது தனது அமர்வுகளை மூடிய அறைக்குள்ளேயே நடத்தவுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் கடந்த வாரம் அமைக்கப்பட்ட முன்னாள் சட்ட மா அதிபர் சி.ஆர்.டி.சில்வா தலைமையிலான இந்த நல்லிணக்க ஆணைக்குழுவானது அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள், ஆயுதப்படை அதிகாரிகள் என அதிகளவு எண்ணிக்கையானவர்களை நேர்காணவுள்ள நிலையில், அந்த அமர்வுகளைப் பார்வையிட,பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமர்வுகளுக்கான ஏற்பாடுகள் இல்லை. "மூடிய அறைக்குள்ளேயே சகல பதிவுகளையும் நாம் மேற்கொள்வோம் என்று சி.ஆர்.டி.சில்வா …

  6. மே 19 - "ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நாள்” மே 19 ம் நாளினை "ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நாள்" என பிரகடனப்படுத்தவேண்டும் என இணைய செய்தி ஊடகமான புதினப்பலகை முன்மொழிந்ததை யாழ் இணையம் ஆதரிக்கிறது. அதனையேற்று தமிழ்ச் சமூகத்தின் ஒரு அங்கமாக - விடுதலைக்காக போராடும் இனங்களின் ஒரு அங்கமாக நின்று - யாழ் இணையம் இந்த நாளினை "ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நாள்" என பிரகடனப்படுத்துமாறு கோருகிறது. என்றும் ஒடுக்கப்படும் மக்களோடு யாழ் இணையம் இணைந்திருக்கும் - ஒடுக்கப்படும் மக்களுக்காக தனது குரலினை பதிவு செய்யும். நாமார்க்கும் குடியல்லோம். நன்றி யாழ் இணைய நிர்வாகம்

  7. உலகத் தமிழர்களே ஒரு மணி நேரம் ஒதுக்குங்கள்: மலேசியாவில் தவிக்கும் ஈழத்தமிழர்களின் கோரிக்கை அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் நாடுகளுக்கு எங்களை அனுப்பி வையுங்கள் என்று மலேசிய முகாம்களில் தத்தளிக்கும் 61 ஈழத்தமிழர்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நக்கீரன் இணையதளம் மூலம் விடுத்துள்ள கோரிக்கையில், உலகத் தமிழர்களின் பார்வைக்கு மரணத்தின் வாயிலில் இருந்து ஈழத் தமிழர்களின் கண்ணீர் கோரிக்கை. உலகத் தமிழினமே உங்களை நம்பித்தான் உயிரை பணயமாக வைத்து, பழுதான படகில் புறப்பட்டோம். நடுக்கடலில் சிக்கி தவித்தபோது மனிதாபிமானத்தோடு காப்பாற்றியது மலேசிய அரசு. ஆனால், வதைமுகாம்களில் நாங்கள் பட்ட சித்ரவதையைவிட, இப்போது அதிகமாக பட்டுக்கொண்டிருக்கிறோம். எங்…

  8. இலண்டனில் அமைந்துள்ள ஒரு உணவு விடுதி. ஒரு நிறைமாத கர்ப்பிணித் தாயும், அவரது மகனும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தத் தாய் ஒரு இந்தியப் பெண்மணியாகவோ அல்லது இலங்கைப் பெண்மணியாகவோ இருக்கலாம். அத்தாயின் அடையாளம் அப்படித்தான் இருந்தது. ஆனால் அக்குழந்தை ஒரு பிரித்தானியருக்கு பிறந்தவராக இருக்கவேண்டும். அக்குழந்தையின் தோற்றம் அப்படித்தான் இருந்தது. ஆனால் எனது பிரச்சினை அதுவல்ல. அன்று ஒரு வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமைகளில் இலண்டனில் அமைந்திருக்கின்ற இலங்கை உணவு விடுதிகளில் 'தாளி' மிகவும் பிரபல்யம். தாளியை தாயார் சாப்பிட, மகன் பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் தாயின் கன்னத்தை வருடிய அக்குழந்தை தாயின் உணவுத் தட்டிலிருந்து உணவை எடுத்து தாய்க்…

    • 1 reply
    • 1.1k views
  9. கொழும்பு திரைப்படவிழாவை ஃபிக்கி தவிர்க்க வேண்டும் – கமலகாசனுக்கு மே 17 அறிக்கை ஃபிக்கியின் தலைவர்கள் புறக்கணிப்பது அல்ல முக்கியம், அந்நிகழ்ச்சியை கொழும்புவில் நடத்தாமல் ஃபிக்கி தவிர்க்க வேண்டும் என்பதே தமிழின உணர்வாளர்களின் வேண்டுகோளாகும் என்று நடிகர் கமலகாசனுக்கு மே 17 இயக்கம் பதில் தெரிவித்துள்ளது. ஈழத் தமிழர்கள் ஒன்றரை இலட்சம் பேரை இனப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் ராஜபக்ச கலந்து கொள்ளும் இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழா வரும் ஜூன் மாதம் 3 முதல் 5ஆம் தேதிவரை இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெறவுள்ளது. இந்தத் திரைப்பட விழாவை இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு குழுவுடன் இணைந்து இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பான ஃபிக்கி ஏற்பாடு …

  10. தலைவர் பிரபாகரனின் வீரச்சாவு குறித்துத் தொடரும் சர்ச்சை: காரணங்கள் எவை? என்ற கட்டுரைக்கான கோபி என்பவரின் எதிர்வினை குறித்த பதிற்குறிப்பு இது. கோபி எழுதியவரின் உண்மைப் பெயரா அல்லது புனைபெயரா அல்லது இப் பெயரால் பரவலாக அறியப்பட்ட ஒருவரா என்பது தெரியவில்லை. எழுதிய விதத்தைப் பார்க்கும் போது அவர் சொந்தப் பெயரில்தான் எழுதியுள்ளார் போல் தெரிகிறது. ஒரு எழுத்தாளன் தனது எழுத்துக்குரிய அறநெறிகளைப் பேணிக் கொண்டு, தான் வாழும் நாட்டின் சூழல், சமூகச் சூழல், எழுதும் விடயங்களின் தன்மை, எழுத்தாளனின் விருப்பு போன்றவற்றைக் கவனத்திற்கொண்டு புனைபெயர்களில் எழுதும் வழமை உலகளாவிய ஒரு நடைமுறைதான். இதனால் ஒரு எழுத்து சொந்தப் பெயரில் எழுதப்படுகிறதா அல்லது புனைபெயரில் எழுதப்படுகிறதா என்…

    • 2 replies
    • 964 views
  11. டானிஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவால் நாச்சிக்குடா மன்னாரில் 75-100 மனித எலும்ப்புக்கூடுகள் கண்டெடுப்பு! http://tamilnet.com/art.html?catid=13&artid=31785 இலங்கை மன்னார் மாவட்டம் வன்னிப்பகுதிக்கு அருகே உள்ள நாச்சிக்குடா பகுதியில் மனித புதை குழி இருப்பது தெரியவந்தது. அங்கே தோண்டத்தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள் இருக்கின்றன. இலங்கை ராணூவம் மறைத்து வைத்திருந்த இந்த கொடூரச்செயலை கண்ணிவெடி நிபுணர்கள் வெளிகொண்டு வந்துள்ளனர். இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த போரின் போது சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்கள் அகதிகளாக தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்களை, அவர்களது சொந்த ஊர்களில் மீண்டும் குடியேற்ற வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் வற்புறுத்தியதால் இலங்கை …

    • 73 replies
    • 7.3k views
  12. மனித உரிமை நிபுணர் குழு: சிறிலங்க அரசு கோரிக்கையை பான் கி மூன் நிராகரித்தார் புதன், 26 மே 2010( 12:00 IST ) FILE இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்கப் படையினரின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கும் நிபுணர் குழு அமைப்பது சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகும் என்று அந்நாட்டு அமைச்சர் பெய்ரீஸ் கூறியதை ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் நிராகரித்துள்ளார். இலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச 8 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளார் என்றும், அதனை அமெரிக்கா வரவேற்றுள்ள நிலையில், மனித உரிமை மீறல்கள் குறித்து ஆலோசனை வழங்க நிபுணர்கள் கு…

  13. தன் எழுச்சியான தமிழ்த்தேசிய உணர்வு பாரிஸ், லாச்சப்பலில். பிரெஞ்சுத்தலைநகர் பாரிசில் இருந்து சிவா சின்னப்பொடி அவர்களை ஆசிரியராகக் கொண்டு தாய்நிலம் எனப் பெயர்தாங்கி, புதிய வாரப்பத்திரிகை, ஒன்று வெளியாகி லாச்சப்பல் கடைகளில் விநியோகத்திற்கு வைக்கப்படடிருந்தது. அப்பத்திரிகையில் பிரசரிக்கப்பட்டிருந்த ஒரு கட்டுரை தொடர்பாக விசனமடைந்த தமிழ்த்தேசிய உணர்வாளர்கள், தன் எழுச்சியடைந்து லாச்சப்பல் கடைகளிலிருந்த தாய்நிலம் பத்திரிகையை எடுத்துச்சென்று குப்பைத்தொட்டிகளில் போட்டுச் சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்வானது தமிழீழ விடுதலைக்கு எதிரான தினமுரசு, துக்ளக் போன்ற வெளியீடுகளுக்கு நடந்தவற்றை நினைவூட்டுகின்றது. நாடுகடந்த அரசிற்கு ஆதரவாக இப் பத்திரிகை வெளியிடுவதாக சொல்லிக்கொண்டு, தமிழ…

    • 23 replies
    • 3.1k views
  14. கலந்து கொள்ள மாட்டேன் என அமிதாப்பச்சன் இன்னும தெரிவிக்கவில்லையாம். http://epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=25_05_2010_002_003&mode=1

  15. 70,000 க்கும் மேற்பட்ட தமிழர்களை வகை தொகை பாராது குண்டுகள் போட்டு துடிக்கப்பதைக்க அழித்த சிங்கள இனவெறியன் சரத் பொன்சேகாவைச் சிறையில் அடைத்திருப்பதால் தான் இயற்கை சீற்றம் கொண்டுள்ளது. என்று சரத் அனோமாவின் கருத்து நகைப்புக்கிடமாக உள்ளது. தமிழர்களை வென் அழிக்கும்போது அநீதியான செயல் என்று உணரத்தவறியவர்கள் இன்று தங்களுக்கு நடைபெறும் செயலால் இயற்கையின் தண்டனையை அனுமதித்து இருப்பது தவறான செயல்கள் செய்தால் இயற்கை தண்டிக்கும் என்ற உணர்வு எழத்தொடங்கியிருக்கின்றது. இருந்தும்; தங்கள் இராணுவ வெற்றியைக் கொண்டாட்டத்தில் பங்கேற்காது தனது கணவன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார் என்பது. இவள் தவறைச் சுயநலத்துடன் தான் ஒத்துக்கொள்கிறாள் என்பதும் தெளிவாகின்றது. பிரபாகரன் சொன்னதுபோல் இயற்கை என…

    • 0 replies
    • 1.2k views
  16. இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கு கே.பி. வழங்கி வரும் பங்களிப்பு அளப்பரியது – ரொஹான் 25 May 10 01:40 am (BST) இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் வழங்கி வரும் பங்களிப்பு அளப்பரியதென சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். இன ஒற்றுமையை ஏற்படுத்துவதில் குமரன் பத்மநாதனின் பங்களிப்பு முக்கியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குமரன் பத்மநாதன் தற்போது இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தமிழர்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையிலான உறவுப் பாலத்தை வலுப்படுத்த க…

    • 9 replies
    • 1.5k views
  17. "தமிழ்மக்களுக்கான விடுதலைப்போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப்புலிகளின் புலிக்கொடியை இவ்வளவு காலமும் தாங்கிய தமிழினம், பயங்கரவாத அமைப்பாக பன்னாட்டு சமூகத்தினால் தடைசெய்யப்பட்ட அந்த அமைப்பின் கொடியை தாங்கியதால் சர்வதேச சமூகத்திடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டுவிட்டது. அந்த கொடியினை களைந்துவிட்டு தமிழ்மக்களின் உரிமைகளையும் நலன்களையும் ஒரு மக்கள் சமூகமாக சென்று சர்வதேச சமூகத்திடம் இறைஞ்சினால் - அல்லது பேரம் பேசினால் - தமிழ்மக்களுடைய விடுதலையை பெற்றுவிடலாம்"- இவ்வாறான ஒரு எழுதப்படாத கோட்பாடு கடந்த மே 19 ஆம் திகதிக்கு முன்னர் புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தின் ஒரு பகுதியினரின் மத்தியில் காணப்பட்டது. அந்த எழுதாத தத்துவத்தை தற்போது ஓர்மமாகவே நின்று அமுல்படுத்தி, "புலிகளது …

    • 0 replies
    • 1.4k views
  18. ஆதிக்க சக்திகள் எப்போதும் ஒரே மாதிரித்தான் இருந்திருக்கிறார்கள். அது ஜெர்மனாக இருக்கட்டும், இந்தியாவாக இருக்கட்டும், பிரிட்டனாக இருக்கட்டும், ரஷியாவாக இருக்கட்டும். ஆதிக்கமும் அதன் அடங்காப்பிடாரித் தனமும் வெவ்வேறாக இருந்ததில்லை. பல பத்தாண்டுகளை கடந்து நாம் போய் பார்த்தாலும், போராளிகள் சித்ரவதைப்பட்ட...ு இறந்துபோயிருக்கிறார்கள். அவர்கள் குருதி கறையிலே முகிழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும்கூட, அவர்களின் லட்சியங்கள் மாறவில்லை, அவர்களுக்கான எண்ணங்கள் இடைவிடாமல் விடுதலை என துடித்துக் கொண்டிருந்தது. எந்த ஒரு போராளியும் தமது வாழ்வுக்காக, தமது வளத்திற்காக போராடியது கிடையாது. அப்படி போராடுவது ஒரு போராளியின் குணமும் கிடையாது. தேசிய தலைவர் இதைக் குறிப்பிடும்போது நாங்கள் பு…

    • 2 replies
    • 1.5k views
  19. கடந்த ஓராண்டு காலப்பகுதியில் சிறீலங்காவின் பொருண்மிய வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பன்னாட்டு நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று அறிக்கை ஒன்றை விடுத்திருக்கும் பன்னாட்டு நாணய நிதியம், வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் சிறீலங்காவிற்கு அனுப்பப்படும் பணமும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதுமே அதன் பொருண்மியம் வளர்ச்சி நிலையை நோக்கி நகர்வதற்கான காரணிகளாக அமைந்திருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது. அண்மைக் காலங்களில் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக செல்லும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, புலம்பெயர் தேசங்களில் இருந்து பெரும் தொகையில் இலங்கைக்கு பணமும் அனுப்பப்பட்டு வருகின்றது. தமிழீழ மக்களுக்கு…

    • 4 replies
    • 1.3k views
  20. மலேசியாவில் தத்தளிக்கும் தமிழர்களை உரிமையுடன் வாழ அனுமதிக்கும் நாட்டிற்கு அனுப்ப தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சீமான் கோரிக்கை மலேசியாவில் தத்தளிக்கும் தமிழர்களை உரிமையுடன் வாழ அனுமதிக்கும் நாட்டிற்கு அனுப்ப தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். கடல் கடந்து வாணிபம் செய்வதற்கும்,தனது வெற்றிக்கொடியை நாட்டுவதரற்கும் கப்பலில் உலகம் முழுவதும் பயணம் செய்த நம் தமிழினம் இன்று வாழ வழியில்லாமல் கப்பலில் நாடு நாடாகத் திரியும் அவலம் நம் கண் முன்னே நிகழ்கின்றது. தங்கள் தாய்த்திருநாட்டில் சிங்கள இனவாதத்தால் மானத்துடன் உயிர் வாழ வழியின்றி எங்காவது சென்று உயிர் பிழைத்தால் போது…

  21. வற்றாப்பளை கண்ணகி அம்மன் ‐ வயற்கடல் வெளி ‐ மன ஆறுதலுக்காக அம்மாளிடம் வந்திருக்கிறேன் ‐ நாங்கள் வேறு எங்கு போக முடியும் ‐ குளோபல் தமிழ் செய்திகளுக்காக நவராஜ் பார்த்தீபன் கடந்த வருடம் யுத்தம் மிகத் தீவிரமாகி மக்கள் அனைவரும் வன்னியை விட்டு வெளியேறிய ஒரு சில நாட்களில் வற்றாப்பளை அம்மன் வருடாந்த திருவிழா வந்தது. முன்பு வற்றாப்பளை அம்மன் கோயிலை சுற்றி லட்சக்கணக்கான மக்கள் திரண்டு இருக்கும் நிலையில் அந்த வருடம் கோயிலையோ திருவிழாவையோ யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை. யுத்தம் முடிவடைந்து ஒரு வருடம் ஆகி விட்டது. வற்றாப்பளை ஆலயத்தை சுற்றி மிக அண்மையில்தான் மீள் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. நான் வற்றாப்பளை ஆலயத்த…

  22. போரில் தமது சொந்தங்களை இழந்த வன்னி மக்கள் வவுனியாவில் ஓர் கவன் ஈர்ப்பு நிகழ்வினை நடாத்தினர். இதில் நூற்றுக்கணக்கான தமிழ் சொந்தங்கள் தமது காணாமல் போன உறவுகளை மீட்டுத்தருமாறு மன்றாடினர். தடுப்பு முகாமிலும், முள்ளீவாய்க்காலிலும் ஆயிரக்கணக்கான இளையோர்கள் கைது செய்யபட்டனர். ஆனால் அவர்களின் நிலை என்னவென்று இன்னமும் தெரியவில்லை. சர்வதேச செஞ்சிலுவை சங்கம், ஐக்கிய நாடுகள் சபை கூட இந்த விவகாரங்களில் போதிய கவனம் எடுக்காமல் இருக்கின்றமை மக்களுக்கு சிறிதளவு கூட நம்பிக்கை அற்ற நிலையே காணப்படுகின்றது. தமது பிள்ளைகளை தேடும் நேரத்தில் தம் பிள்ளைகள் எவ்வாறு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு சிங்களப்படைகளினால் கொல்லபட்டார்கள் என்ற புகைப்படங்களேவெளியே வருகின்றன. ஆகையால் பெற்றோர்கள் பதைபதைத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.