ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143193 topics in this forum
-
தனி ஈழம்தான் இந்தியாவுக்கு அரண்! பேராசிரியர் பிரான்சிஸ் பாயில் அமெரிக்காவின் மிகப் பிரபல மான சட்ட மேதை. சிகாகோவில் உள்ள இல்லினாய் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை பேராசிரியர். மனித உரிமைகள் மற்றும் சர்வதேச தனிமனித உரிமை, அரசியலமைப்பு சட்டங்களில் கீர்த்தி வாய்ந்தவர். இஸ்ரேலுக்கு எதிராக 60 ஆண்டுகளாகப் போராடிவரும் பாலஸ்தீன அரசின் சட்ட ஆலோசகரான பாயில், அதன் அரசியலமைப்பு மற்றும் அரசியல் சட்டம் போன்ற அயல் நாட்டு உறவுகளுக்கு ஆலோசனை தருகிறார். சில ஆண்டுகளாக ஈழத்தமிழர் பிரச் னைகளில் முழுமூச்சாக ஈடுபட்டு, சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்ஷே அரசின் மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை பெற்றுத்தரப் பாடுபடுபவர். நாடு கடந்த தமிழீழ அரசு அமைய ருத்திரகுமாரனுக்கு ஆலோசனை கூறி …
-
- 29 replies
- 1.9k views
-
-
இலங்கை முள்ளிவாய்க்கால் தாக்குதல் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னையில் நடந்த, பொதுக்கூட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும் போது, தனது அரசியல் வாழ்வையே, இலங்கைப் பிரச்னைக்காக தியாகம் செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த கூட்டத்தில் வைகோ, ’’தமிழ் ஈழம் மலர உறுதியெடுப்போம். விரைவில், இலங்கையில் மீண்டும் ஐந்தாவது போர்க்களம் அமையும். உலகெங்கும் உள்ள தமிழர்கள் திரண்டு வருவார்கள். தாய் தமிழகத்தில் உள்ள மான உணர்ச்சியுள்ள வாலிபர்கள் போர்க்களத்திற்கு வருவார்கள். பிழைப்புக்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல நான். இதனால், என் அரசியல் அழிந்தாலும், அதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை என அதிர்ச்சி கணையை எறிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…
-
- 3 replies
- 2.7k views
-
-
சிறீலங்காவில் திரைப்படவிழாவை நடத்தவிருக்கும் IIFAவுடன் இணைந்து செயல்படும் FICCI யின் கௌரவ தலைவர் பதவியிலிருந்து நடிகர் கமலகாசனை விலகக்கோரி மே 17 இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் நடிகர் கமல் ஹாசன் வீட்டின் முன்பு, இலங்கையில் சிங்கள இனவெறி அரசால் நடத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையை மறைக்க IIFA யுடன் இணைந்து விழா நடத்தும் FICCI யின் கௌரவ தலைவர் பதவியிலிருந்து நடிகர் கமல் ஹாசன் விலக வலியுறுத்தி மே 17 மற்றும் சேவ் தமிழ்ஸ்(save tamils) இயக்கத்தினர் இணைந்து அவரின் இல்லத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்பு கமலின் உதவியாளரிடம் கோரிக்கை கையளிக்கப்பட்டது. http://meenakam.com/?p=16962
-
- 0 replies
- 1.3k views
-
-
வன்னிப் பகுதியிலும் பருவ மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மீளக் குடியேறியுள்ள மக்கள் பெரும்பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். போரின் காரணமாக தங்களின் வீடுகளை இழந்த மக்கள் மீளக்குடியேறி சிறு கூடாரங்களை அமைத்துக் கொண்டே இந்தப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.. இந்த நிலையில் சீரற்ற காலநிலை காரணமாகப் பெய்து வரும் பெருமழையினாலும் காற்றினாலும் இந்த மக்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட மக்களே இந்த மழையினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மாவட்டத்தில் மீளக்குடியேறிய மக்களில் 90 வீதமானவர்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித் தார். பலமாக வீசிய காற்றினால் கூரைகளும் கூடாரங்களும் சேதமாகியதால் …
-
- 0 replies
- 506 views
-
-
வெள்ளத்தினால் பாதிகப்பட்ட மக்களுக்கு தென்பகுதியில் குடும்பம் ஒன்றிற்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.மழை,வெள்ளம் காரணமாக தமது இருப்பிடங்களை முற்றாக இழந்தவர்களுக்கு நஷ்டஈடாக தலா 50,000 ரூபாவை வழங்கவுள்ளதாகவும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு சேதத்துக்கான கணிப்பீட்டின்படி நஷ்டஈடு வழங்கப்படுமென்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்துள்ளார். அண்மையில் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு 97 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தத் தொகையில் இதுவரை 31 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆனால் வடக்கு கிழக்கில் தமது இருப்பிடங்களை முற்றாக இழந்த குடும்பங்கள், உறவுகள…
-
- 0 replies
- 709 views
-
-
மணலாற்றில் சிங்களக் குடியேற்றங்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் தீவிரம்! திகதி: 23.05.2010 // தமிழீழம் மணலாறு மாவட்டத்தை முற்றுமுழுதாக சிங்கள மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முழுவீச்சுடன் மகிந்த அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மணலாறு மாவட்டத்தில் ஏற்கனவே சிங்கள மயப்படுத்தப்பட்டுள்ள தமிழீழ மக்களின் வரலாற்று வாழ்விடங்களின் சுற்றுப்புறங்களை குறிவைத்தே இவ்வாறான நடவடிக்கைகளை மகிந்த அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக தெரிய வருகின்றது. குறிப்பாக மண்கிண்டிமலை, ஒதியமலை, ஆண்டான்குளம், தண்டுவான் போன்ற பகுதிகளையும், அவற்றின் சுற்றுப்புறக் கிராமங்களையும் இலக்கு வைத்தே இவ்வாறான நடவடிக்கைகளில் சிங்கள அரசு ஈடுபடுவதாக கூறப்படுகின்றது. சங்கதி
-
- 0 replies
- 444 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்! [ வெள்ளிக்கிழமை, 21 மே 2010, 07:01.30 பி.ப | இன்போ தமிழ் ] http://www.infotamil.ch/ta/view.php?2bEEQMe0dEgm40ecKA0W4a4nd4ecd3cYJ3dc2Coc2b424OS3e220Mq20 வன்னியில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மற்றும், தடுப்பு முகாம்களில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப் பட்டுள்ள தமிழ் மக்களை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நேரில் சென்று பார்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இறுதிக் கட்டப் போரின்போது சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து உயிரோடு தப்பி வந்து, வதை முகாம்களில் அடைக்கப்பட்டுக் கொடுமைப் படுத்தப்பட்ட அம் மக்களை, அந்த மக்களின்…
-
- 6 replies
- 958 views
-
-
http://tamilwin.com/view.php?2aasQG11Bddc2eZZLuub24bb3889jTdd0ee5Hjooeccd3066QVVd32ee4FF2ggcce00c2IPPB44b44DDpiic00 இதில் உள்ள வீடியோவைப் பாருங்கள் அதன் பின்பு உங்களால் முடிந்த உத்வியைச்செய்யவும்.
-
- 1 reply
- 1.2k views
-
-
அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்தில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் அமர்வில், தென் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் (குகஃM) அமெரிக்க பிரதிநிதி டொமச் றொச்சும் (Domach Rauch) முன்னாள் அமெரிக்காவின் சட்டமா அதிபர் ராம்சே கிளார்க்கும் (Ramsey Clark) சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டுள்ளனர். இவர்களின் பிரசன்னம், பல செய்திகளைக் காவி நிற்பதனை உணரலாம். அவர்கள் அங்கு ஆற்றிய உரைகளில் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கான சர்வதேச உறவு நிலை, எவ்வாறு அமைந்தால் நன்றாக இருக்கும் என்பது போன்ற அறிவூட்டல்களும் காணப்பட்டன. அங்கு உரை நிகழ்த்திய சூடான் பிரதிநிதி, தமது நாட்டில் ஏற்பட்டுள்ள இன முரண்பாடுகளும், தேசிய விடுதலைப் போராட்டமும் மத ரீதியானதல்ல என்பதை …
-
- 0 replies
- 898 views
-
-
முள்ளிவாய்க் காலில் சமர் முற்றுப் பெற ஒரு வார காலம் இருக்கும் தருவாயில் இலங்கை ராணுவம் மக்களை ராணுவ கட்டுப் பாட்டு பிரதேசங்களுக்கு வருமாறு ஒலிபெருக்கி மூலம் மக்களிடம் பிரச்சாரத்தினை மேற்கொண்டு இச்செய்தியை அனைத்து சிங்கள ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களும் ஒலிபரப்பு செய்து இலங்கை ராணுவத்திற்கு ஒரு நற்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் செயல் பட்டுக்கொண்டிருந்தன. இறுதி சமரின் இறுதி நான்கு நாட்களில் ராணுவம் மக்கள் மீது கண்மூடித் தனமான தாக்குதல்களை இரவு பகலாக மேட்கொண்டிருந்தது. அமெரிக்க பசிபிக் பிராந்தியத்தின் கடற்படைத் தளபதி மக்களைக் காப்பாற்ற தனது கடற்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விடுக்கப்பட்ட அறிக்கை மேல் மக்கள் நம்பிக்கை வைக்கிறார்கள். ஒபாமாவும் பங்கிற்கு ஒரு அவசர…
-
- 4 replies
- 1.7k views
-
-
http://www.yarl.com/articles/files/100521_ram.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 0 replies
- 799 views
-
-
Sat, May 22 2010 இந்தியப் படைகளின் போர்க்குற்றங்களை மூடிமறைக்கும் சிங்களம்! By: அதியமான் தமிழீழ தாயகத்தை இந்தியப் படைகள் ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில் இந்திய ஜவான்களால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை மூடிமறைக்கும் வகையிலான நடவடிக்கைகளை சிங்கள அரசு மேற்கொண்டு வருகின்றது. அமைதிப்படை என்ற போர்வையில் கடந்த 1987ஆம் ஆண்டு தமிழீழ தாயகப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்ட இந்தியப் படைகளால், தமிழீழ மக்களுக்கு எதிராக மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்களும் இழைக்கப்பட்டிருந்தன. இவற்றில் உலகத் தமிழர்களை உலுக்கிய கொடூரங்களில் ஒன்றாக கடந்த 1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2ஆம், 3ஆம், 4ஆம் நாட்களில் வல்வெட்டித்துறைய…
-
- 0 replies
- 888 views
-
-
சிறிலங்கா அரசிற்குத் தலையிடியாக உருவெடுத்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் வெளிநாடுகளில் இயங்கும் இலங்கைத் தூதரகங்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன. இதற்காக பல்வேறு உபாயங்களை வகுத்து இவை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த வகையில் பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் துரிதமாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நாடு கடந்த அரசாங்கப் பிரதிநிதிகள் ஒரு சிலரை விலை கொடுத்து வாங்கி நாடு கடந்த அரசிற்கெதிரான பிராச்சாரங்களை அவர்கள் மூலமாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது. பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தி;ல் துணைத் தூதராகப் பணிபுரியும் அம்சா இந்தப் …
-
- 4 replies
- 1.7k views
-
-
என்ரை தம்பியவையை காணேல்ல கடைசி நேரத்தில களத்துக்கு போனவை....இன்னும் வரவுமில்லை அவையைப்பற்றிய எதையும் இதுவரை அறியவும் முடியேல்ல...நான் தான் என்ர தம்பியவையின்ரை குடும்பங்களையும் பாக்கிறேன்....10பேர் என்னை நம்பியிருக்கினம்....கடைசியில எரிஞ்ச அந்த நெருப்பு இன்னும் என்னாலை மறக்கேலாதாம்....இப்பவும் கனவிலை வருது....கடைசி நேர யுத்தத்தில் தான் கண்ட உண்மைகளை பகிர்கிறாள் இந்தப் பெண்.....இரத்தமும் சதைத்துண்டங்களின் நடுவிலிருந்து உயிர் தப்பியது பற்றி உதிரம் உறையும் கதைகளிலிருந்து ஒரு பகுதி இது....அடுத்த பகுதி நாளை....
-
- 0 replies
- 1.3k views
-
-
மக்களவையின் அனைத்துலக செயலகம் விடுக்கும் அவசர அவசிய செய்தி By: admin அன்பான தமிழீழ மக்களே! முள்ளிவாய்காலின் மனிதப்படுகொலைகள் ஓராண்டுகள் எட்டிவிட்டன. ஆனால் கொலையை செய்தவனும், கட்டளையிட்டவனும் எக்காளம் இட்டுக்கொண்டிருக்கிறான். ஆனால் நாமோ எமது உறவுகளை பறிகொடுத்தும், பலிகொடுத்தும் அவர்களுக்கான எதையும் நீதியின் முன்னால் நிறுத்த நாம் முன்வரவில்லை. எமது மக்களுக்கு நீதி வேண்டியும், நியாயம் கேட்டும் உலகம் முழுவதும், தாம் வாழும் நாடுகளிலும் அதை நீதிமன்றங்களில் வழக்கை பதிவு செய்தும், யுத்தத்தாலும், இப்பெயர்வாலும் மற்றும் அனைத்து இராணுவநடவடிக்கையாலும் உயிரை இழந்து, அங்கீவீனமாக்கப்பட்டவர்,காணாமல் போனோர், மனவுழைச்சலுக்குள்ளானவர்கள் போன்றோரின் விபரங்கள், தகவல்களை ஆதாரங்களுடன் எதி…
-
- 19 replies
- 2.1k views
-
-
இன்று வவுனியா மனிக்பாம் முகாமிற்குச் சென்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை படையினர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவின் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே எவராக இருந்தாலும் உள்ளே செல்ல முடியும் என படையினர் தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது மேலதிக தகவல் விரைவில்.
-
- 3 replies
- 719 views
-
-
‘வடக்கின் நண்பர்கள்’ என்ற பெயரில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும் றாஜபக்ச சகோதரர்களின் நெருங்கிய நண்பருமான டளஸ் அளகப்பெருமவினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்கள் மாயமாக மறைந்திருப்பதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப் பாதையை அமைப்பதெற்கென அமுல் படுத்தப்பட்டிருந்த இந்தத் திட்டத்தின் கீழ் பெருமளவான பணம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் மூலமும் திரட்டப்பட்டிருந்தது. எனினும் இந்தப் பணம் எந்தவொரு வங்கியிலும் வைப்புச் செய்யப்படவில்லை என்றும் போக்குவரத்து அமைச்சைத் திரும்பவும் கையளிக்கும் போது இந்தப் பணம் குறித்த எந்த ஆவணங்களும் அமைச்சிடம் பாரப்பட…
-
- 10 replies
- 1.2k views
-
-
வன்னியில் முல்லைத்தீவில் மீளக்குடியேறிய தமிழ்மக்கள் எதுவுமே இல் லாத வெறுமையுடன், அநாதைகள் போல் அல்லாடுகின்றனர். எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி கணவனை இழந்த விதவைகளும், பிள்ளை களை இழந்த பெற்றோருமாக உதவி செய்ய எவரும் இன்றி அவதிப்படுகிறார்கள். முல்லைத்தீவு,மே22 வன்னியில் முல்லைத்தீவில் மீளக்குடியேறிய தமிழ்மக்கள் எதுவுமே இல் லாத வெறுமையுடன், அநாதைகள் போல் அல்லாடுகின்றனர். எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி கணவனை இழந்த விதவைகளும், பிள்ளை களை இழந்த பெற்றோருமாக உதவி செய்ய எவரும் இன்றி அவதிப்படுகிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிக ளுக்கும் சென்று மீளக்குடியேறிய மக்களை நேரில் சந்தித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்களிடம் தமது அவலங்களை…
-
- 5 replies
- 635 views
-
-
Fri, May 21 2010 போர்க்குற்றம் இழைத்த சிங்கள அரசுக்கு நிதிச் சன்மானமளிப்பதற்கு உலகம் தயார்? By: அதியமான் தமிழீழ மக்களுக்கு எதிராக மிக மோசமான போர்க்குற்றங்களையும், மானிடத்திற்கெதிரான குற்றச்செயல்களையும் இழைத்த சிங்கள அரசுக்கு நிதிச் சன்மானமளிப்பதற்கான சமிக்ஞைகளை பன்னாட்டு நாணய நிதியம் வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் பாதீட்டின் துண்டுவிழும் தொகையை ஈடுசெய்ய முடியாது திண்டாடும் சிங்கள அரசின் பன்னாட்டு நாணய இருப்பு, கடந்த ஆண்டு ஏறத்தாள நூறு கோடி டொலராக வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து பன்னாட்டு நாணய நிதியத்திடம் இருநூற்று அறுபது கோடி டொலர் கடனுதவியைக் கோரியிருந்தது. இது தொடர்பாக இவ்வாரம் கொழும்பு சென்று ஆய்வுகளை நிகழ்த்தியிருந்த பன்னாட்டு நாணய நிதியம், ஒரு நான்கு த…
-
- 2 replies
- 723 views
-
-
குருநாகல்,இப்பாகமுவ பிரதேசத்தில் பள்ளிவாசல் உடைப்பதற்கான முயற்சி குருநாகல், இப்பாகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இயங்கிவந்த பள்ளிவாசலை உடைப்பதற்கான முயற்சியில் அப்பிரதேசவாசிகள் சிலர் ஈடுபட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தன. இது சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது, இப்பள்ளிவாசலை விஸ்தீரனம் செய்வதற்கான முயற்சியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அப்பள்ளிவாசல் நிர்வாக சபையினர் ஈடுபட்டுவருகின்றனர். எனினும் பிரதேசவாசிகளின் எதிர்ப்பின் காரணமாக விஸ்தீரனம் நடவடிக்கை இடம்பெறவில்லை. இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை இப்பள்ளிவாசலை விஸ்தீரனம் செய்வதற்கான அனுமதியை இப்பாகமுவ பிரதேச செயலாளர்…
-
- 1 reply
- 885 views
-
-
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்காக சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு http://itso4students.com/ என்ற வலைப்பதிவினை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த தளத்தின் மூலம் மாணவர்கள் கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் பிற பிரதேசங்களில் பிரபல ஆசிரியர்களினால் வழங்கப்படும் வினா விடைகள், பாடக் குறிப்புக்கள் போன்றவற்றினை உடனுக்குடன் தரவிறக்கிக் கொள்ளலாம். எமது தமிழ் மாணவர்கள் உயர்தர பரிட்சையில் அதிகூடிய சித்திகளை பெருவதற்க்கு இந்த இணையத்தளம் பேருதவியாக அமையும். உதாரணமாக யாழ்ப்பாணதிலுள்ள ஒரு உயர்தர மாணவன் கொழும்பு, திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் பிற பிரதேசங்களில் உள்ள பிரபல ஆசிரியர்களினால் வழங்கப்படும் வினா விடைகள் , பாடக் குறிப்புக்கள் போன்றவற்றினை பண…
-
- 19 replies
- 4.5k views
-
-
தேசிய தலைவர் நம்மிடம் பேசுவார்!! ஓர் இனத்தின் வரலாறு தோற்கடிக்கப்பட்டதாக அறிவித்து, ஓராண்டு நிறைவெய்தி இருக்கிறது. கடந்த ஓராண்டிலே எத்தனையே விமர்சனங்கள் புதிது புதிதாக தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன. விமர்சனங்களைப் பொறுத்தமட்டில் அதன் ஆளுமை மாந்த வாழ்வின் அடித்தளத்தை முன்னிருத்தியே அதன் நிலைத்தன்மை நீடித்திருக்கும். மார்க்சிய கோட்பாட்டின்படி இந்த மண்ணின் மேல் உள்ள எல்லா வகையானவையும் விமர்சனத்திற்குரியவை தான். ஆக, நேர்மையும் உண்மையும் கொண்டவர்கள் விமர்சனங்களைக் குறித்து அஞ்சத் தேவையில்லை. மாறாக, விமர்சனம் நம்மை செழுமைப்படுத்தும், கூர்மையாக்கும், அடுத்தக்கட்ட நகர்வுக்கு அசைவில்லாமல் அழைத்துச் செல்லும். அதே நேரத்தில் விமர்சனம் என்பதற்கும், புழுதி வாரி தூற்றுதல் என்ப…
-
- 4 replies
- 2.3k views
-
-
Member of Parliament General Sarath Fonseka, speaking to Daily Mirror online a short while ago, said that LTTE leader Vellupillai Prabakaran was killed on May 19 last year and not May 18 as claimed by the government after the war. Fonseka said that the Tiger leader was only killed after President Mahinda Rajapaksa had declared in Parliament on May 19 that Prabakaran was dead. The former army commander who led the military during the last stages of the war also expressed disappointment at the way he was treated after the military victory against the Tiger http://www.dailymirror.lk/index.php/news/3844-fonseka-disputes-war-claims.html
-
- 22 replies
- 4k views
-
-
கிராமிய அபிவிருத்தி மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுகள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் சிங்கள குடியற்றங்களை துரித கதியில் மேற்கொள்ள வசதியாகவே இவை கொத்தபாயவின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. Defence Ministry takes over Urban Development and Internal affairs May 22 (GDI) "The subject area of the Ministry of Defence has been expanded after taking over the responsibilities of Urban Development and Internal affairs matters and in the future respective news about them also given to the Media through the Media Centre for National Security" Media Minister Keheliya Rambukwella stated after assuming duties as the minister of Media and ....…
-
- 0 replies
- 638 views
-
-
வெள்ளிக்கிழமை, 21, மே 2010 (21:57 IST) இறுதிப்போரின் போது போர் குற்றங்கள் நடைபெறவில்லை என்கிறார் சரத்பொன்சேகா ஜனநாயக தேசிய முன்னணியின் விசேச செய்தியாளர் மாநாடு இலங்கை நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் ஃபொன்சேகா பேசியுள்ளார். அவர், இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்ட போரின் போது அரச தரப்பு போர் குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை, மறுத்துள்ளார். அரச தரப்பில் போர் குற்றங்கள் ஏதும் இழைக்கப்படவில்லை என்பதை தான் எப்போதுமே வலியுறுத்தி வந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்ட போரை தானே திட்டமிட்டு, நடத்தி, மேற்பார்வை செய்ததாகவும் மு…
-
- 3 replies
- 693 views
-