ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143185 topics in this forum
-
3 வயதுக் குழந்தையுடன் வானில் ஏற்றிச் செல்லப்பட்ட பெண் பரந்தனில் இருந்து தப்பி வந்தார்! சாவகச்சேரியில் இருந்து 3 வயதுக் குழந்தையுடன் வான் ஒன்றில் ஏற்றிச்செல் லப்பட்ட பெண் சாதுரியமாகச் செயற் பட்டதால் பரந்தனில் இருந்து மீண்டு வந் துள்ளார். சாவகச்சேரி சிவன் கோயிலடியைச் சேர்ந்த சந்திரசேகரம் தர்சினி(வயது 28) என்பவருக்கே இந்த நிலை ஏற்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக அப்பெண் தெரிவித்தவை வருமாறு: நேற்று முற்பகல் 11 மணியளவில் எனது 3 வயதுக் குழந்தையுடன் சாவகச் சேரி ஆஸ்பத்திரியை நோக்கி நடந்து சென் றேன். அவ்வேளை ஆஸ்பத்திரிக்கு சமீபமாக நின்ற வானில் இருந்த நால்வர் எனது வாய்க்குள் துணியை அடைத்து விட்டு என்னையும் குழந்தையும் வானில் ஏற்றிக்கொண்டு கிளிநொச்சிப் பக்கம் சென்றனர…
-
- 0 replies
- 1k views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து வாருங்கள் – பிரித்தானிய தமிழர் பேரவை By: admin பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் எதிர்வரும் 18ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் பேரவல நினைவுப் பேரிணைவு நிகழ்விற்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து வருமாறு, பிரித்தானியத் தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 6ஆம் நடைபெற்ற பிரித்தானியப் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களிற்கு ஆதரவான பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் துணையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர்களையும், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து வருமாறு பிரித்தானியாவிலுள்ள தமிழ் அமைப்புக்களிற்கும், பொதுமக்களிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினை…
-
- 0 replies
- 677 views
-
-
யாழ்ப்பாணம் மானிப்பாய்ப் பகுதியில் நேற்றிரவு காணாமல் போன யுவதி அருகிலுள்ள வீடொன்றில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார் ‐ GTN செய்தியாளர்‐ 13 May 10 06:03 pm (BST) யாழ்ப்பாணம் மானிப்பாய்ப் பகுதியில் நேற்றிரவு காணாமல் போன யுவதியொருவர் அருகிலுள்ள வீடொன்றில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் உடலெங்கும் கூரிய ஆயதங்களால் கிழிக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 19 வயதுடைய ஜெ.கலைவாணி என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். இவர் உடுவில் மேற்கு மானிப்பாயைச் சேர்ந்தவர் ஆவார். உடுவில் வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்து அருகிலுள்ள தமது மற்றொரு வீட்டிற்கு காவலுக்கு வைக்கப்பட்டிருந்த நாய்க்கு உணவு வைப்பதற்காக நேற்றிரவு 7.30 மணிய…
-
- 0 replies
- 954 views
-
-
தேசியத்தலைவரின் தாயார் தனது சொந்த மண்ணில் அன்புடன் கவனிக்கப்பட்டுவருகிறார்.. விவரம் தமிழ்நெற் இணையத்தில்.. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31747
-
- 6 replies
- 1.5k views
-
-
பருத்தித்துறை படையினரின் முகாமினுள் குண்டு வெடிப்பு By: admin புதன்கிழமை காலை 4.30 மணியளவில் வடமராட்சி பருத்தித்துறையில் அமைந்துள்ள சிறீலங்காவின் 524 வது படைப்பிரிவினரது முகாமினுள் குண்டுகள் வெடித்ததுடன் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் கேட்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்கு மின்ஒழுக்கால் ஏற்பட்ட விபத்தே காரணம் என படையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை படையினர் தமது பாதுகாப்பினை புதன்கிழமை காலை பலப்படுத்தியிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இவ் வெடிச்சத்தத்தையடுத்து இப்பிரதேச மக்கள் பெருத்த அச்சத்துடன் காணப்பட்டதாகவும் தெரியவருகிறது. எனினும் இதன்போது படையினருக்கு ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பாக எதுவித தகவலும் வெளியிடப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கத…
-
- 0 replies
- 724 views
-
-
நான்காம் கட்ட ஈழப்போர் ஒரு கசப்பான அனுபவத்தோடு நிறைவடைந்திருக்கிறது. இது ஈழ ...விடுதலையை பின்னுக்கு தள்ளியதாகவோ அல்லது போராட்டமே நிறைவடைந்ததாகவோ நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள முடியாது. ஈழ விடுதலைப் போரின் எதிர்காலம் குறித்து ஏராளமான வினாக்கள் நம்முன் விரிந்திருக்கிறது. தற்போதைய நிலையில் இன ஒடுக்குமுறையின் தனிபெரும் தலைவராக திகழ்ந்த ராஜபக்சே மீண்டும் இலங்கையின் அதிபராக பொறுப்பேற்க இருக்கிறார். இன்னும் இரண்டு ஆண்டுகள் தமக்கான பதவிகாலம் இருந்தபோதும் கூட இன ஒடுக்கு முறையின் அடையாளமாக அதன் வெற்றி நாயகனாக தம்மை முழுமைப்படுத்திக்கொண்டு தேர்தல் களத்திற்கு வந்தார். அவரோடு கைகோர்த்து அவரின் சாட்டையாக இருந்த சரத்பொன்சேகா அவரின் எதிரணியின் வேட்பாளராக இருந்து தோல்வியடைந்திருக்கி…
-
- 5 replies
- 1.6k views
-
-
-
மலேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 75 அகதிகளில் மூவர் நெஞ்சுவலியால் துடிப்பதாக அறியப்படுகிறது. இவர்கள் மலேசிய அதிகாரிகளிடன் இது குறித்துக் தெரிவித்துள்ளபோதும், அதிகாரிகள் அசட்டையீனமாகச் செயல்படுவதாகவும், இதனால் தகுந்த மருத்துவ சிகிச்சையின்றி இம் மூவரும் இறக்கும் நிலை தோன்றலாம் எனவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே புலம் பெயர்ந்து வாழும் எம் மக்களே உங்களுக்கு யாராவது மருத்துவர்களை மலேசியாவில் தெரியும் என்றால், உடனே அவர்களை தொடர்புகொண்டு இந்த அகதிகளுக்கு உதவச்சொல்லுங்கள். உங்களுக்குத் தெரிந்த தாதிமார், அல்லது வைத்தியர்கள் யாராவது மலேசியா, கோலாலம்பூரில் இருந்தால் அவர்களை உடனே சென்று இந்த அகதிகளுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளைச் செய்யச் சொல்லுங்கள் த…
-
- 0 replies
- 618 views
-
-
FICCI - யின் மின்னஞ்சல்கள் - IIFA அடுத்து FICCI - க்குஎதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் தமிழர்களே, நடிகர்கள் அம்புதான். பெரு முதலாளிகள் (முதலைகள்) FICCI சேர்ந்தவர்கள். ஒருநாள் கூத்து ஆடப்போகிறார்கள் பணத்தை வாங்கிகொண்டு திருப்பிவிடுவார்கள். இந்த பெரு முதலாளிகள் (முதலைகள்) அங்கிருக்கும் நிலங்களையும், வளங்களையும் கொள்ளை அடிக்கப்போவது நடக்கத்தான் போகிறது. படிப்படியாக அங்குள்ள மக்கள் அழிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்காக எப்படி இப்போது நக்சலைட்டுகள் என்று மத்திய இந்தியாவில் மலைவாழ் மக்கள் எப்படி வேட்டையாடப்படுகிறார்களோ அப்படி. இலங்கையில் இவர்கள் காரணம் இல்லாமல் IIFA நிகழ்வை நிகழ்த்தபோவதில்லை. இந்த இணையத்தை (…
-
- 0 replies
- 808 views
-
-
தலையங்கம்: நம்பிக்கைத் துரோகிகள்... தினமணி இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நடந்த போர் முடிந்து ஓராண்டு நிறைவடையும் இந்த நேரத்தில் வேறொரு விதமான தாக்குதலை தமிழர்கள் மீது தொடுத்திருக்கிறது ராஜபட்ச அரசு. தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு கெüரவமான பிரதிநிதித்துவம் அளித்துவந்த விகிதாசார பிரதிநிதித்துவ முறையைக் கைவிடுவதற்கு இப்போதுள்ள அரசியல் சட்டத்தைத் திருத்துவது என்பதுதான் அது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படும், தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடிக்கும் வேட்பாளரே வெற்றியாளர் என்ற தேர்தல் முறைக்கு இலங்கையும் மாறவிருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இதில் என்ன குறை என்றே கேட்கத் தோன்றும். இந்தியாவைப் போ…
-
- 0 replies
- 1.5k views
-
-
மஹிந்தவின் விசாரணை கமிசன் சரணடைந்த, கொலப்பட்டவர்கள் பற்றி விசாரிக்காதாம் - குழு தலைவர் வவுனியா நிருபர் வியாழக்கிழமை, மே 13, 2010 மஹிந்தவினால் உலகை ஏமாற்ற அமைக்கப்பட்டிருக்கும் விசாரணைக்குழுவிற்கு விசாரணைச் சட்டத்தின் கீழான ஆணைக்குழுவின் அதிகாரங்கள் வழங்கப்படாமையால் தகவல்களைத் திரட்டுவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் இந்த நிலையில், இந்த குழு சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டமை மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்குத் தீர்மானம் மேற்கொள்ளவில்லை. எனவும் குழுவின் தலைவர் சமரக்கோன் கூறியுள்ளார். எனினும் தமது குழுவின் அறிக்கையும் அதன் காரணங்களும் பரிந்துரைகளும் எதிர்வரும் ஜூலை மாத இறுதிக்குள் ஜனாதிபதியிடம் சமர்ப…
-
- 1 reply
- 509 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்பான பகிரங்க மடலுக்கு ஜெயானந்தமூர்த்தி அவர்களின் பதில் பிரித்தானியா, வடமேற்கு லண்டனில் நாடுகடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினராக அதிக வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ள எஸ். ஜெயானந்தமூர்த்தி அவர்களுக்கு, பிரித்தானியாவிலிருந்து தமிழர் ஒருவர் அனுப்பிய பகிரங்க மடலுக்கு உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி அனுப்பியுள்ள பதில்.... அன்புடன் மாறன். உங்கள் திறந்த மடல் பார்த்தேன். மிகவும் சந்தோசம். என்னைப் பொறுத்தவரை நான் கொள்கையிலும் தேசியத்திலும் இருந்து விலகப்போவதில்லை. நான் அதில் உறுதியோடு இருக்கின்றேன். அத்துடன் எவரும் என்னை பகடைக் காயாக நடத்த முடியாது. ஏனெனில் நான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவன். மக்களின் ஆணைக்கே நான் தலைவணங்குவேன். …
-
- 10 replies
- 1.4k views
-
-
தமிழர்களின் உரிமை மேலும் பறிபோகிறது: ராஜபட்சவின் அடுத்தகட்ட நடவடிக்கை பி.கே. பாலசந்திரன் கொழும்பு, மே 11: இலங்கையில் தமிழர்களை இன ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையை அதிபர் மகிந்த ராஜபட்ச தொடங்கியிருக்கிறார் என்றும் இந்த முயற்சியின் தொடர்ச்சியாக செய்யப்படும் திருத்தங்கள் தங்களுக்கு ஏற்புடையவை அல்ல என்றும் தமிழ் தேசிய கூட்டணி (டி.என்.ஏ.) செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இலங்கையில் இப்போது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் கிடைக்கும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் அந்தந்த அரசியல் கட்சிக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இலங்கையின் வடக்கிலும் க…
-
- 3 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பில் 24 வயது இளைஞன் கடத்தல் வவுனியா நிருபர் வியாழக்கிழமை, மே 13, 2010 நேற்று முந்தினம் இரவு மட்டக்களப்பு ஜீவபுரம் சந்திவெளியினை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் வீட்டில் வைத்து கடத்தப்பட்டுள்ளார். யோகரசா என்ற இளைஞரே இவ்வாறு வெள்ளைவான் குழுவினரால் கடத்தப்பட்டுள்ளார். இரவு வேளையில் வீட்டுக்கு வந்த சந்தேக நபர்கள் குறித்த நபருக்கு தொழில் பெற்று தருவதாகக் கூறி வேனில் கடத்தி சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து மேற்படி நபரின் குடும்பத்தார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் இது தொடர்பில் பொலிசார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%…
-
- 0 replies
- 436 views
-
-
பார்வதியம்மாள் இலங்கை சென்றது அரசியல் பிழைப்புவாதிகளுக்கு சரியான சவுக்கடி – சீமான் அன்னை பார்வதி இலங்கைக்கு திரும்பி சென்றது அவருக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் தமக்கு வரலாற்றில் ஏற்பட்டுள்ள அழிக்க முடியாத தீராக்கறையை மாற்றிவிடலாம் என எண்ணிய அரசியல் பிழைப்புவாதிகளுக்கு சரியான சவுக்கடியாகும் என்று இயக்குநர் சீமான் தெரிவித்துள்ளார். ஆறு மாத விசா பெற்று சென்னை வந்த தமிழ்த் தேசிய தலைவர் அண்ணன் பிரபாகரன் அவர்களின் தாயார் பெருமாட்டி பார்வதியம்மாள் அவர்களை மாநில போலீசின் துணையோடு மத்திய அதிகாரிகள் கடந்த மாதம் திருப்பி அனுப்பி தீராக் களங்கத்தை உருவாக்கினர். ஈவிரக்கமில்லாத இந்தப் போக்கு உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்த இப்போது பார்வதியம்மாளுக்கு அரசு செலவ…
-
- 7 replies
- 1.3k views
-
-
சல்மான்கான்,லாராதத்தா,விவேக் ஓபராய் ஆகியோருக்கு எதிராக போராட்டம் தொடரும் – நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் அறிவிப்பு தமிழர்களின் உணர்வைப்புரிந்து iifaவிலிருந்து நடிகர் அமிதாப்பச்சன் விலகியுள்ளார். அவரது இடத்தில் நடிகர் சல்மான்கான் இப்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ளார். நடிகர் சல்மான்கானைக்கண்டித்தும் போராட்டங்கள் தொடருமென்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் இயக்குநர் சீமான் தெரிவித்துள்ளார். இலங்கையின் கொடூர முகத்தை மறைப்பதற்காக இந்திய அரசின் உதவியுடன் இலங்கை அரசு கொழும்பில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை வரும் ஜுன் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன்முக்கிய பங்காற்றுவதாகவும்அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழர்களின்…
-
- 4 replies
- 1k views
-
-
புதன்கிழமை, 12, மே 2010 (23:44 IST) சுயநினைவை இழந்தார் பார்வதி அம்மாள்? விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் சுயநினைவை இழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வட்டித்துறைக்கு சென்று கொண்டிருந்த போது அவர் சுயநினைவை இழந்ததார் என்று வெளியாகி உள்ள செய்தி யாராலும் உறுதிப்படுத்தப்படவில்லை. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாள், தமிழகத்தில் தங்கி சிகிச்சை பெற விரும்புவதாக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று தமிழக அரசு பரிந்துரை செய்ததால் மத்திய அரசும் பார்வதி அம்மாள் தமிழகம் வர அனுமதி அளித்தது. தமிழகத்தில் மருத்தவச் சிகிச்சைக்காக 6 மாதம் மருத்துவமனையில் மட்டும் தங்கி இருக்க வேண்டும் என்று நிப…
-
- 4 replies
- 2k views
-
-
ஐஃபா தூதர் பொறுப்பிலிருந்து விலகினார் அமிதாப்! மும்பை: நாம் தமிழர் இயக்கத்தினரின் தொடர் உண்ணாவிரதம் [^] மற்றும் ஆர்ப்பாட்டத்தையடுத்து, கொழும்பில் நடைபெறும் சர்வதேச இந்தியப் படவிழாவில் (ஐஃபா) பங்கேற்பதில்லை என நடிகர் அமிதாப் அறிவித்துள்ளார். மேலும் ஐஃபா அமைப்பின் தூதர் பொறுப்பிலிருந்தும் அவர் விலகிக் கொண்டுள்ளார். இத்தகவலை நாம் தமிழர் அமைப்பின் தலைவரும் இயக்குநருமான சீமான் இன்று வெளியிட்டுள்ளார். இதுகுறித்து சீமான் கூறியதாவது: இலங்கையின் கொடூர முகத்தை மறைப்பதற்காக இந்திய அரசின் உதவியுடன் இலங்கை அரசு கொழும்பில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை வரும் ஜுன் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன்முக்கியப…
-
- 3 replies
- 1.2k views
-
-
இராணுவ வெற்றி வாரம் கொண்டாடுவது தவறு - ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு நிருபர் புதன்கிழமை, மே 12, 2010 போரினால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் மீழ்குடியேற்றப்படாமையால்ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண கிராமங்களில் சுதந்திரம் இன்றித் தவித்துக்கொண்டிருக்க, மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இராணுவ வெற்றியை கோலாகலமாகக் கொண்டாடுகிறது. ஓர் இனம் அந்நியப்படுத்தப்பட்டிருக்கையில் நாட்டின் வெற்றி எனக் கொண்டாடுவது எந்த வகையில் நியாயம்? என ஐக்கிய தேசிய கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன வீரகேசரி இணையத்தளத்துக்கு இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "நாட்டுக்குச் சுதந்திரம், விடுதலை கிடைத்த…
-
- 2 replies
- 704 views
-
-
சீமானின் நாம் தமிழர் அமைப்பு நேற்று முதல் மும்பையில் உள்ள அமிதாப் வீட்டின் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளனர் அவர்களின் போராட்டத்திற்கான தாக்கமும் நேற்றே கிடைக்க தொடங்கியுள்ளது. Headlines Today என்ற வட இந்திய ஆங்கில ஊடகத்தில் ஏறக்குறைய பத்து நிமிடம் இந்நிகழ்வைப் பற்றிய செய்தி தொகுப்பு நேற்றும், இன்றும் அவ்வுடகத்தில் காண்பிக்கப்படுகிறது. மேலும் கடந்த சனிக்கிழமை அன்று நடந்த SAVE TAMIL தகவல் தொழில்நுட்ப மாணவர்களின் நிகழ்வும் காண்பிக்கப்படுகிறது. அமிதாப்பச்சன் வீட்டிற்கு வெளியே வந்து பேசியுள்ளார். தான் ஒரு விளம்பர தூதுவர் மட்டுமே என்றும் ஒட்டுமொத்த விழாவை ரத்து செய்ய Wizcraft International Entertainment Pvt. Ltd. நிர்வாகிகள்தான் முடிவுசெய்ய…
-
- 2 replies
- 1.2k views
-
-
நெல்லியடியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்‐ நெல்லியடியில் இருந்து GTN னின் விசேட செய்தியாளர்‐ 02 May 10 05:08 pm (BST) நெல்லியடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று இரவு இலங்கை நேரம் 7.30ற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் 26 வயதுடைய சிவலிங்கம் சபசேன் என்ற இளைஞரை சுட்டுக் கொலை செய்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். வன்னியின் இறுதி யுத்தத்தில் அகப்பட்டு முகாமில்; இருந்து விடுபட்டு சென்ற இவர் நாளை பெயின்ற் கடை ஒன்றைத் திறப்பதற்கு தயாரான நிலையில் படைப் புலனாய்வுப் பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளதாக நெல்லியடித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரம் விரைவில்…
-
- 22 replies
- 2.2k views
-
-
http://www.yarl.com/articles/files/100511_ratnakumar_neethan.mp3 நன்றி: ATBC
-
- 15 replies
- 960 views
-
-
மீள்குடியேற்றத்தை விரைவில் செய்ய வேண்டும்- இந்தியா லங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மீதமுள்ள தமிழர்களையும் தங்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திருப்பியனுப்ப இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் அமைதி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது என்ற தலைப்பில், அப்ஸர்வர் ரிசர்ச் ஃபவுண்டேசன் சார்பில் புதுடெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கைத் துவக்கி வைத்துப் பேசும்போது, இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் இந்தக் கருத்தை வெளியிட்டார். அதே நேரத்தில், இலங்கை மக்கள் எவ்வாறு ஒன்றுபட்டு வாழ்வது என்பதை அவர்களே பேசி முடிவு செய்துகொள்ள வேண்டும் என்பதை சர்வதேச சமூகம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நிருபமா ராவ் வலியுறுத்தின…
-
- 7 replies
- 953 views
-
-
அமீரகத்திலிருந்து சுப.வீ.க்கு ஒரு கடிதம் விசயகுமார் சனி, 08 மே 2010 13:57 ஐயா சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு, வணக்கம். நான் விசயகுமார், அமீரகத்திலிருந்து எழுதுகிறேன். வயது- 30. பொருளாதாரக் காரணம் தமிழகத்தில் இருந்து அரபு நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்கிறேன். பெரியார் திடலில் ஆற்றிய தங்களின் உரையின் காணொளியினை குமுதம் தளத்தில் கண்டேன். கீற்று தளத்தில் விஜயகுமார் என்பவர் எழுதிய கட்டுரைக்கு சில மளுப்பல்களை சொல்லி இருந்தீர்கள். என் பெயரும் விசயகுமார்தான். கட்டுரையையும் காணொளியையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் எனக்கு ஏற்பட்ட வினாக்களை உங்களிடம் பகிர்கிறேன். நான் 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 94 -95 காலகட்டம், ஈழம் என்றால் என்னவன்றே தெரியா…
-
- 2 replies
- 836 views
-
-
குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற உத்தரவின் படி கைது செய்யப்பட்ட ஈபிடிபியின் சிரேஸ்ட உறுப்பினரும் யாழ் மாநகர சபையின் துணை மேயருமான றேகனின் கைதிற்கெதிராக யாழ் மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணம் போர்க் கொடி தூக்கியிருக்கிறார். தமக்கு கீழியங்கும் மாநகரப் பணியாளர்களை வேலைகளைச் செய்யாமல் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ளும் படி வற்புறுத்தி வரும் யோகேஸ்வரி யாழ் மாநகரசபையின் மாதாந்தப் பொதுக் கூட்டங்களையும் தன்னிஸ்டப்படி காலவரையின்றி ஒத்திவைத்துள்ளார். எதிர்க்கட்சிகளும் தனது முடிவிற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக யோகேஸ்வரி பற்குணம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள போதிலும் இவரது இந்தக் கூற்றை எதிர்க்கட்சிகள் முற்றாக மறுத்துள்ளன. குற்றவாளி எனக் கருதப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஒரு…
-
- 1 reply
- 846 views
-