Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மக்கள் துன்பப்டுகின்றார்களாம் கருணாவுக்கு திடீர் ஞானம்? வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 2, 2010 வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களும் அகதிமுகாம்களிலிருந்து மீள்குடியேற்றப்பட்ட மக்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதை தான் நேரடியாக அவதானித்தாகவும் அந்த மக்களும் தம்மிடம் இது குறித்துத் தமது அதிருப்தியை வெளியிட்டதாகவும் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்த முரளிதரன் தான்; மஹிந்த அரசு தமிழ் மக்கள் மீது மிகவும் கவனம் எடுத்து அதிவேகமாக மீழ் குடியேற்றம் நடைபெறுவதாகவும், தனக்கு மிகவும் திருப்தியாக இருப்பதாகவும் தேர்தலிற்கு முன்பு கூறினார். தற்போது அமைச்சு பொறுப்பில் இருந்து ஒரு படி காற்று கு…

    • 0 replies
    • 622 views
  2. பிரித்தானிய தொழில் கட்சியின் தேர்தல் வெடிகுண்டு மலேசிய நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 2, 2010இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்படுவதற்கு நாங்கள் முழுமையாக செயலாற்றுவோம் என பிரித்தானிய தொழிற் கட்சியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதே தொழில் கட்சிதான் விடுதலைப்புலிகளை முற்றாக பலவீனப்படுத்துவதற்கும், ஆயுதப்போரை முற்றாக அளிப்பதற்கும் முக்கிய பங்காளியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. முள்ளிவாய்க்காலில் போரை நிறுத்தக்கூட ஆக்க பூர்வமான எதனையும் செய்யாத பிரித்தானிய தொழில் கட்சி தமிழர் வாக்குகளை சுருட்டுவதற்கு தேர்தல் வாக்குறுதிகளை இலங்கை இந்திய அரசுகள் பாணியில் வெளியிட்டுள்ளது. பிரித்தானிய தொழில் …

    • 0 replies
    • 597 views
  3. தென் தமிழீழத்தில் போரினால் 49,000 விதவைகள், எதுவித உதவிகளும் கிடைக்கவில்லை. வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 2, 2010 யுத்தம் ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாகக் கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் விதவைகள் உள்ளனர் என்றும், அவர்களுள் 25 வயதுக்கும் குறைந்த பெண்கள் சுமார் 25 ஆயிரம் பேர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 25 வயதுக்கும் குறைந்த விதவைப் பெண்களுள் சுமார் 12 ஆயிரம் பேர் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளின் தாய்மார்கள் என்றும், சிறார்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டு அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால் இவர்களுக்கு உருப்படியான திட்டங்கள் எதுவும் செயற்படுத்தப்படவில்லை. http://www.eelanatham.net/story/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B…

    • 0 replies
    • 367 views
  4. கூகிள் சேவையை தமிழில் பெற உங்கள் வாக்கை தமிழ் மொழிக்காக அளியுங்கள். இங்கே அழுத்தவும் Need Virtual Keyboard .

    • 1 reply
    • 845 views
  5. நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் அனைத்து புலம்பெயர் தமிழ் மக்களும் தவறாது வாக்களித்து தமது தேசியக் கடமையை நிறைவேற்ற வேண்டும் -ஜெயானந்தமூர்த்தி எதிர்வரும் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் அனைத்து புலம்பெயர் தமிழ் மக்களும் தவறாது வாக்களித்து தமது தேசியக் கடமையை நிறைவேற்ற வேண்டுமென லண்டன் வடமேற்கு பிராந்தியத்தில் 403 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளரும் தமிழின உணர்வாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி வேண்டுகோள் விடுத்துளளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்: எமது தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டம் நீண்ட வரலாற்றைகக் கொண்டது. பல பரிணாமங்களைக் கண்டுள்ளது. இன்று தாயகத்தில் எமது போராட்டம…

    • 2 replies
    • 653 views
  6. யாழ் மாவட்டத்தில் தமிழ்க்கூட்டமைப்பின் தேர்தல் பின்னடைவுக்குக்காரணம் என்ன Courtesy: உதயன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சி.வி.கே. சிவஞானம், கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட் டக் கிளையின் பொதுச்சபைக் கூட்டத்தில் தேர்தல் பின்னடைவு களுக்கான காரணத்தை விளக்கி உரையாற்றினார். யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தவரை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு பெற்றிருந்த பொன்சேகாவுக்குக் கிடைத்த வாக்குகளை விட, பொதுத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்புக்குக் கிடைத்த வாக்குகள் சுமார் நாற்பதாயிரம் குறைவாகும். மக்களின் அக்கறையின்மை, அதிருப்தி, உட்கட்சிக் குழப்பங்கள் போன்றவை இதற்குக் கா…

    • 0 replies
    • 518 views
  7. விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் என கைதுசெய்யப்பட்ட 1250 தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்காரணமாக அவர்களின் கல்வி உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உபுல் பிரேமரத்ன தெரிவித்துள்hளர். பம்பைமடு முகாமில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 150 மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடத்துறைகளில் பயின்றுவந்த இவர்கள் சுமார் ஒருவருடகாலம் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் சிரட்டைகளில் மோதிரங்களைச் செய்ய பயிற்றுவிக்கப்படுவதாகவும் உபுல் பிரேமரத்ன கூறியுள்ளார். இதேவேளை, முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக…

  8. 'உதயன்'-'சுடரொளி' நிறுவனத்திலிந்து விலகுகிறார் வி்த்தியாதரன் [ வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2010, 12:20 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் இருந்து வெளிவரும் 'உதயன்' மற்றும் 'சுடரொளி' ஏடுகளின் ஆசிரியர் ந. வித்தியாதரன் அந்த பணியில் இருந்து இன்று முதல் விலகிச் செல்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 25 வருடங்கள் 'உதயன்'-'சுடரொளி' நிறுவனத்தில் பணியாற்றிய நடேசபிள்ளை வித்தியாதரன், தனது ஊடகவியல் பணியை 'தினபதி' நாளேட்டில் இருந்து தொடங்கினார். எம். டி. குணசேன நிறுவனத்தின் தமிழ் நாளேடாக வெளிவந்த 'தினபதி' மற்றும் அதன் ஞாயிறு பதிப்பான 'சிந்தாமணி' ஆகியவற்றின் ஆசிரியராகப் புகழ் பெற்ற ஈழத் தமிழ் ஊடகவியலாளர் எஸ். டி.…

    • 4 replies
    • 1.9k views
  9. கிழக்கின் உதயத்தில் ‐ அஸ்தமிக்கும் உண்மைகள்‐ 1 – நாகேஸ் நடராஜா காலம் காலமாக நாம செய்து வந்த தொழிற்துறைகள் எல்லாமே யுத்தத்தோட அடிபட்டுப் போயிட்டுது. நாங்கள் எங்கட இடங்களையெல்லாம் விட்டு போய் இப்ப இங்க திரும்பி வந்து இருக்கம். எங்களுக்கு அரசாங்கம் எல்லா வசதியலையும் செய்து தாறன் எண்டுதான் சொல்லுறாங்க. அதை நம்பி நாம வந்தம் ஆனா யுத்தம் ஓஞ்சாப்புறகு கூட எங்ட வாழ்வு இப்பிடித்தான் சீரழியும் எண்டா என்னதான் நாம செய்யிறது. ஏதோ உயிரை வச்சுக்கொண்டு இப்பிடியே காலத்தை ஓட்டி செத்திட வேண்டியதுதான் என்கிறார்கள் வாகரைக் கிராமங்கள் பலவற்றில் மீள் குடியேற்றம் என்ற பெயரில் பேருந்துகளில் ஏற்றிக் கொண்டுபோய் இறக்கிவிடப்பட்ட மக்கள். மிக மிகப் பின்தங்கிய கிராமங்களாக இன்னும் அடிப்படை வா…

  10. தொடரும் கடத்தல் சம்பவங்களால் யாழ். குடாநாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்! : விஸ்வா ≡ Category: விஸ்வா, கட்டுரைகள்/ஆய்வுகள் | ≅ யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளால் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர். கடத்தல் சம்பவங்களோடு தொடர்புடைய குற்றவாளிகள் பிடிபட்டு வரும் நிலையிலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் சாவகச்சேரியில் கப்பம் கோரி 16 வயது இளைஞன் கடத்தப்பட்டார். பின்னர், படுகொலை செய்யப்பட்ட நிலையில் அந்த இளைஞனது உடல் மீட்கப்பட்டது. அச்சம்பவம் குடாநாட்டு மக்களை பெரும் பீதியிலாழ்த்தியது. இக்கொலை தொடர்பான வழக்கு விசாரணகள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவத்தின் பின்னரும் சிலர் கப்பம் கோரி கடத்திச் செல்லப்பட்டனர். சி…

  11. முட்டுச்சந்தில் திணறும் மூவரணி – மீனகம் இளமாறன் கடந்த ஏப்ரல் 27ந் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம். வேலை நிறுத்தத்திற்கு எதிர் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. அவசிய பொருட்களின் விலைஉயர்வு, முக்கிய குற்றச்சாட்டாக இந்த அடைப்புக்கு காரணம் சொல்லப்பட்டது. அடைப்பு மற்றும் வேலை நிறுத்தத்திற்கு நாடுதழுவிய அளவில் பெரும் ஆதரவு இல்லை என கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சி குழுமங்கள் மாறி மாறி செய்திகள் வாசித்துக் கொண்டிருந்தன. உண்மையிலேயே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்பதை அறிவிப்பதற்கு கலைஞர் தொலைக்காட்சிக்கு ஒரு உண்மை விளம்பி தேவைப்பட்டார். அவர்கள் தேடி சென்ற இடம் வீரமணி. திராவிடர் கழக பொதுச்செயலாளரான வீரமணி, கலைஞர் தொலைக்காட்சி செய்தியாளர்களிடம், தமிழ்நாட்டில் பாலும் …

  12. மனம் திறந்து துணிவோடு எழுதுகோலை எடுப்பவனே உண்மையான போராளி. அவன் சமுதாய காவல் நாய். எங்கே நின்றோம்?எங்கே நிற்கிறோம்?எங்கே போகிறோம்? பாகம்-1 வாழ்வின் முக்கியமான காலகட்டமொன்றில் நாம் பயணிக்கும் பாதை இரண்டாகப்பிரியலாம். அதில் ஒன்று எக்களுக்கு மிகவும் பழகமானதாகவும் பலரும் பயணிக்கும் எழிதான பாதையாக இருக்கும். இன்னொன்று எங்களுக்கு பழக்கமில்லாத ,கடினமான,பலரும் விரும்பாத பாதையாக இருக்கும்.அந்த இக்கட்டான காலகட்டத்தில் நமக்கு முன் இரண்டு தெரிவுகள் இருக்கும். ஆனால் தீர்மானம் ஒன்றாக இருக்கவேண்டும்.இது ஆங்கில கவிஞன் ரொபேட் புரொஸ்ட் இனது சிந்தனையில் வந்தது. இதை ஆதாரமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை ஒன்றை இணையத்தில் படித்த போது, புலம்பெயர் தமிழ் சமூகத்தின் "இரண்…

    • 3 replies
    • 1.1k views
  13. யாழ் பிரதான வீதியில் புத்தர் சிலை அமைப்பது தொடர்பில் குழப்ப நிலை தோன்றியுள்ளது. யாழ் மாநகரசபையில் நேற்று இடம்பெற்ற மாதாந்த கூட்டத்திலேயே, யாழ் பிரதான வீதியில் புத்தர் சிலை அமைப்பது தொடர்பில் குழப்பநிலை ஏற்பட்டது. பிரதான வீதியில் புத்தர் சிலை அமைக்க எண்ணியுள்ள இடத்தில் வீதிக் குறியீடுகள் பொருத்த மாநகரசபை தீர்மானிக்கிறது என்ற சொற்பிரயோகத்தை அடுத்தே, குழப்ப நிலை ஏற்பட்டது. புத்தர் சிலையை அமைக்க யாழ் மாநகரசபை எண்ணவில்லை என்பதுடன், இவ்வாறான சொற்பிரயோகம் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினையை தோற்றுவிக்கும் எனவும் எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டனர். இந்த நிலையில், இவ்வாறான சொற்பிரயோகத்தை பிரேரணையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் யாழ் மாநகரசபையின் எதிர்க்கட்சியினர் கோரியிருந…

  14. யாழ் குடாநாட்டில் தனியாருக்கு சொந்தமான காணி மற்றும் கட்டிடங்களில் தங்கியிருக்கும் இராணுவத்தினர் அவற்றிலிருந்து விலகிச்செல்லவிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்தார். யாழ் குடாநாட்டுக்கான விஜயத்தினை கோத்தபாய ராஜபக்ஸ நேற்று மேற்கொண்டிருந்த நிலையிலேயே, இவ்வாறு கூறினார். இதேவேளை, ஆணையிறவில் படையினரின் நினைவுத்தூபியை கோத்தபாய ராஜபக்ஸ இன்று திறந்துவைத்தார் http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/2119

  15. காங்கிரஸில் சேரும் குஷ்புவுக்கு தங்கபாலு வரவேற்பு நடிகை குஷ்பு அரசியலில் ஈடுபட முடுவு செய்துள்ளார். அவர் தேசிய கட்சியான காங்கிரசில் இணைய முடிவு செய்துள்ளார். தற்போது குடும்பத்தினருடன் லண்டனில் இருக்கும் அவர் ஓரிரு தினங்களில் சென்னை திரும்புகிறார். அதன் பிறகு அரசியலில் ஈடுபடும் முடிவை அறிவிக்கவிருக்கிறார். தொலைபேசி மூலம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் தலைவர்கள் உங்களை கட்சியில் சேரும் படி அழைத்தார்களா என்ற கேள்விக்கு அது பற்றியெல்லாம் இப்போது எதுவும் சொல்ல விரும்ப வில்லை. ஓரிரு தினங்களில் சென்னை திரும்புகிறேன். அதன் பிறகு இது போன்ற கேள்விகளுக்கு விளக்கமாக பதில் அளிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இது …

    • 15 replies
    • 1.5k views
  16. ஈழம் – இன்றைய அவலம் : எம்.ரிஷான் ஷெரீப் “கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே” என்ற ஔவையாரின் வாக்கை நேரடியாக மெய்ப்பிப்பது போலவே இன்றைய ஈழ மாணவர்களின் நிலைமை இருக்கிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்கும் பல மாணவர்கள் அரசாங்க உதவித் தொகையை மட்டுமே நம்பி தமது காலத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது. அரைகுறை உணவு, பழைய ஆடைகள், புத்தகங்களோடு செலவுகளைக் குறைக்கவேண்டி அநேக மாணவர்கள் தம் வெறும் வயிற்றில் தண்ணீரை மாத்திரம் அருந்தியபடி கல்வி கற்றுக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தினர் அகதி முகாம்களிலும், தொழிலற்றும் வாடியிருக்கும்போது தமது தேவைகளுக்காக குடும்பத்தை நாடவும் இவர்களால் முடியாதுள்ளது. அடுத்ததாக யுத்தத்தின் மூலமாக ஏற்பட்ட உடல் சுகவீனங்களுக…

  17. வெள்ளிக்கிழமை, 30, ஏப்ரல் 2010 (22:27 IST) இந்தியாவிடம் ராஜபக்சே கோரிக்கை இந்த திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தக் கூடாது என தமிழகத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இவ்விழா தூதராக நியமிக்கப்பட்ட அமிதாப் பச்சனை அதில் கலந்துகொள்ள வேண்டாம் என்று திரைப்பட இயக்குனர் சீமான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தொல். திருமாளவன் உள்ளிட்டோர் வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் திட்டமிட்டபடி இந்த திரைப்பட விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம், இலங்கை அதிபர் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். nakkheran

  18. குருபரன் ‐ தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தேக்கத்தை ஒரு பின்னடைவை இன்னும் சொல்லப்போனால் ஒரு தோல்வியைச் சந்தித்திருக்கும் ஒரு நிலையில் நாடுகடந்த அரசின் முக்கியத்துவம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதன் சாத்தியப்பாடு எதாக இருக்கப்போகிறது? ருத்திரகுமாரன் ‐ இந்த நாடுகடந்த அரசாங்கத்தின் எங்கட அரசியல் முன்னெடுப்பை எங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில் இருந்து பார்க்க வேண்டும் என நான் கருதுகின்றேன். 1976 ஆம் ஆண்டு வட்டுக் கோட்டைத் தீர்மானமும் அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெற்றியும் அங்குள்ள தமிழினம் தங்களுடைய அரசின் சுயநிர்ணய உரிமைக்காண முழுமையான செயலுருவம் கொடுப்பதற்காகவும் தமது இறைமையை பிரயோகிப்பதற்கு கொ…

    • 0 replies
    • 1.1k views
  19. நோர்வே, ஜெர்மனி, சுவிட்சாலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ் வர்த்தகர் ஒருவர் மலேசியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறீலங்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது கைது செய்யப்பட்டவர் விபூசன் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டள்ளது. http://meenakam.com/?p=14943

    • 2 replies
    • 1.1k views
  20. . நல்லூரில் நட்சத்திர விடுதி : 10ஆம் திகதி இறுதி முடிவு. யாழ். நல்லூரில் ஐந்து நட்சத்திர விடுதி அமைக்கும் பணிகள் தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கப்படும். யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாவட்ட உள்ளூர் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் ஆலோசனையின் கீழ் விடுதி தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என யாழ் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். பி.எல்.சி வங்கியின் அனுசரணையுடன் 400 மில்லியன் ரூபா செலவில் 80 அறைகள் கொண்ட உல்லாசப் பயணிகளுக்கான நட்சத்திர விடுதி அமைக்கும் பணியில் பல பாகங்களில் இருந்தும் வந்த எதிர்ப்புக்களைத் தொடர்ந்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேயர் குறிப்பிட்டார். குறிப்பாக 4 விடயங…

  21. பார்வதியம்மாள் பாடாய் படுகிறார்! இந்தியாவைப் போற்றி கனடாவில் ஒரு களியாட்டக் கூத்து!! செந்தமிழன் பார்வதியம்மாள் தள்ளாத இந்த 80 வயதில் தமிழகத்தில் இருந்து திருப்பியனுப்பப்பட்டார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அங்கங்களின் இயக்கம் இல்லாத ஒரு படுக்கை நோயாளி என்றுகூடப் பார்க்காமல் மனிதாபினமானமற்ற முறையில் இந்தியாவால் திருப்பி அனுப்பப்பட்டார். அதனால் பின் தமிழகம் மீண்டும் ஈழத்தை நோக்கி உயிர் பெற்றிருக்கிறது. தமிழகத்தின் ஈழப் போராட்ட ஆதரவுத் தலைவர்கள் மாத்திரமல்லாமல் எல்லோரும் குரல் கொடுக்க அத்வானியும் மத்திய அரசியலில் இருந்து குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் கனடாவில் எங்கள் உடன் பிறப்புக்கள் ஜெய கே என்று இந்தியத் தேசியக் கீதத்தில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள…

  22. நுரைச்சோலைப் பிரதேசத்தில் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட சீனப் பிரஜை ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 14 வயதான பாடசாலை மாணவி ஒருவரை குறித்த சீனப் பிரஜை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக முந்தல் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லொறி ஒன்றிற்குள் அழைத்துச் சென்று குறித்த சிறுமியை சீனப் பிரஜை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த நபர் தப்பிச் சென்றதாகவும், காவல்துறையினர் சீனப் பிரஜையை மடக்கிப் பிடித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. 36 வயதான சீனப் பிரஜை ஒருவரே இந்தக் குற்றச் செயலை மேற்கொண்டுள்ளார். http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=…

    • 1 reply
    • 733 views
  23. பிரபாகரன் தாயாருக்கு சிகிச்சை அளிக்க தயார்: தமிழக அரசு பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். இதை எதிர்த்து வழக்கறிஞர் கருப்பன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நலன் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16ஆம் தேதி மலேசியாவில் இருந்து சென்னை வந்த பார்வதி அம்மாளை குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். விசா உள்ளிட்ட உரிய அனுமதியுடன் வந்த பார்வதி அம்மாளை, இந்தியாவுக்குள் அனுமதிக்காகதது சர்வதேச மனித உரிமை மீறல். இதனால் பார்வதி அம்மாளை தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை அழைத்து வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் …

    • 2 replies
    • 843 views
  24. அமெரிக்க மாநிலங்களின் வாக்களிப்பு நிலையங்கள் Polling Booth Details: 1.New England •Courtyard by Marriot, Boston WOBURN / Boston North, 700 Unicorn Park Drive, Woburn Ma (May 1st 12pm - 6pm) •First Parish, 75 Great Road, Bedford MA (1:30pm to 6pm) 2.New York •Vaishnav Temple, 100 Lakeville Road, New Hyde Park, New York (12pm - 8pm) •Staten Island, New York 3.New Jersey •Jewish Community Center, 91 Jefferson Blvd, Edison NJ (1pm to 7pm) 4.Mid Atlantic •Murugan Temple Lanham, Maryland •Lake Lynn Recreation Center, Art Room, 7921 Ray Road, Raleigh, NC (1pm to 5pm) 5.South •Details Coming Soon. 6.Midwest •Dublin Community Recreation …

    • 0 replies
    • 615 views
  25. யாழ். கோட்டைப் பகுதிக்குச் செல்ல மக்களுக்கு அனுமதி : பிரி. சரத் விஜயசிங்க யாழ். கோட்டைப் பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல, எந்தவிதத் தடையுமில்லை என 51ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சரத் விஜயசிங்க தெரிவித்துள்ளார். பொது மக்கள் அங்கு சுதந்திரமாகச் சென்று வரலாம் எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "யாழ். கோட்டைப்பகுதி பொதுமக்களின் பாவனைக்காக இராணுவத்தால் திறந்து விடப்பட்டிருக்கின்றது. அங்கு செல்வதற்கு பொது மக்களுக்கு எவ்வித தடையுமில்லை. காலை முதல் மாலை வரை எவரும் சென்று பார்வையிடலாம். மக்கள் தமது பொழுதை இன்பமாகக் கழிப்பதகு இப்போது கோட்டைப் பகுதியை நாடி வருகின்றார்கள். மக்களின் இயல்பு நிலையைக் கருத்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.