Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் என தென், மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் றொபர்ட் ஓ பிளேக் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக வடபகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு, தேசிய மீள் இணக்கம் ஆகியவற்றை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் எனவும் பி.பி.சி செய்திச்சேவைக்கு வழங்கிய பேட்டியில் அவர் கூறினார். இதேவேளை, இராணுவப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவை இலங்கை அரசாங்கம் கையாளும் விதம் குறித்தும் அமெரிக்கா அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது குறித்து கொழும்பு சட்ட ஒழுங்குகளை பின்பற்ற வேண்டும் எனவும் றொபர்ட் ஓ பிளேக் வலியுறுத்தினார். ht…

  2. தலைவர் பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்த மேலதிக ஆவணங்களை அனுப்பிவைக்குமாறு இந்தியா இலங்கையிடம் கோரியுள்ளது: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயிரிழப்பை உறுதிப்படுத்த மேலதிக ஆவணங்கள் தேவை என இந்தியா, இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்குத் தொடர்பான விசாரணைகளுக்காக இந்த ஆவணங்கள் தேவைப்படுவதாக மத்திய புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர். மரபணு பரிசோதனையின் மூலம் தலைவர் பிரபாகரனின் உயிரிழப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், தலைவர் பிரபாகரனின் உயிரிழப்பு த…

  3. குச்சவெளியில் வதியும் 400 குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு அரசாங்கம் பணித்துள்ளது.திருகோணமலை குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் தற்காலிகமாகக் கொட்டில்கள் அமைத்து வசித்து வரும் சுமார் 400க்கு மேற்பட்ட குடும்பங்களையே அப்பிரதேசத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி குடும்பங்களுக்கு காணிகளோ அல்லது தற்காலிக வீட்டு வசதிகளோ இன்னமும் வழங்கப்படாத நிலையில் பசில் இராகபக்‌ஷ அந்த குடும்பங்களை வெளியேறுமாறு பணித்துள்ளார். http://www.sankamam.com/beta/index.php?eNoljDEOwjAMXDD_0qGbJTu246SIIY7Tf6B2YVwwhvJ_tYLlprs7FmJaptf2-D73-2D2wl7BiQiyYYMgzZB6DHNW5y7z8XcFa6OqBjbowqoKV0kgFmIjI9US8_Z5_77qNYsXGFxcOuReEkRyhHA2aasTGk63E506XCIM

    • 5 replies
    • 965 views
  4. புலிகளின் ஊடுருவல் இல்லாத தமிழ் கூட்டமைப்பை உருவாக்க இந்தியா வியூகம்: தலையாட்டுகிறாரா சம்பந்தர்? . .விடுதலைப்புலிகளோ அந்த அமைப்புக்கு தீவிரமாக ஆதரவளிக்கும் சக்திகளோ பங்காளிகளாக இல்லாத தமிழ் தேசிய கூட்டமைப்பினை சிறிலங்காவின் அரசியலில் உருவாக்கி அந்த கட்சியின் ஊடாக தமிழர் விவகாரத்தில் - விட்டுப்போன - தனது ஆதிக்கத்தை உள்நுழைப்பதற்கு இந்தியாவின் மத்திய அரசு காய்நகர்த்திவருகின்றது என்று கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்காவில் போருக்கு பின்னரான அரசியல் நிலைவரங்களை ஆழமாக கண்காணித்துவரும் இந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது:- சிறிலங்கா விவகாரத்தில் தனது ஆதிகத்தை நுழைப்பதற்கு தமிழர் விவகாரம் ஒன்றே தற்போதைக்கு இந்தியாவுக்கு மீதமாக…

  5. அனைத்து கட்சிகளும் தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றி கூறி வருகின்றபோதிலும் இவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளின் தீர்வுக்கான ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அவர்களின் முயற்சிகள் நடைபெறவில்லை என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு, தேர்தல் சம்பந்தமாக தமிழ்க் கட்சிகளிடையே ஒரு ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்ற ரீதியில் நாங்கள் பல தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். இருந்தாலும் இந்த கூட்டுச் சம்பந்தமான பேச்சுக்களை அடிப்ப டையிலேயே தேர்தலை நோக்கிய தாகவே அனைத்து கட்சிகளும் பார்க்கின்றன. தத்தமது கட்சிக்கு கூடுதலான வேட்பாளர் பங்கீடு மற்றும் தத்தமது கட்சியின் வெற்றிய…

  6. மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் பதற்ற நிலை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9 வயது பாடசாலை சிறுமி ஒருவர் மீது படையினர் மேற்கொண்ட பாலியல் சித்திரவதைகளை அடுத்து குறிப்பிட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் படை முகாமிற்கு சென்று இராணுவத்தினருக்கு எதிராக கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தை அடுத்து திகிலிவட்டை கிராமத்திற்கு சென்ற இராணுவத்தினர் கிராம மக்களை அச்சுறுத்தியுள்ளனர். ஆதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தின் போது முன்னணியில் செயல்பட்ட இளைஞர் ஒருவர் படைத்தரப்பால் கொலை செய்யப்பட்டுள்ளார். 31 அகவையுடைய சந்திரசேகரன் சுகபாலன் என்ற இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது…

  7. திரு செ.பத்மநாதன் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் நாம் அவருடன் தொடர்புகளைப் பேணுவதாகவும் அவரது வழிகாட்டலில் செயற்படுவதாகவும் வதந்திகளை சிலர் பரப்ப முனைவதான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. நாம் அவருடன் எந்தவகையான தொடர்புகளையும் பேணவில்லை. அவரது வழிகாட்டலில் செயற்படவும் இல்லை. இந்த விசமத்தனமான வதந்தி பரப்பும் முயற்சிஇ நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் எமது முயற்சிக்கு இடையூறு விளைவிக்கும் கெட்ட உள்நோக்கம் கொண்டதாகவே நாம் கருதுகிறோம்.' இவ்வாறு இணையத்தளம் ஒன்றுக்கு (நநடயஅநநெறள.உழஅ) அளித்த செவ்வியொன்றில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் திரு விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கேள்வியொன்றிற்கு ருத்ரகுமாரன் அள…

  8. வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் கால எல்லைகளை நிர்ணயிக்க முடியாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக நலன்புரி நிலைய மக்களை மீள் குடியேற்றுவதாக இந்தியாவிலடம் இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மீள் குடியேற்ற துறை அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது மீள் குடியேற்றம் தொடர்பில் காலக்கெடு எதனையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று கூறினார். முகாம்களில் உள்ள மக்களை விரைவில் மீள் குடியேற்ற வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் எனினும் அதற்கான கால எல்லைகளை நிர்ணயிக்க முடியாது என்றும் அவர் குறிப…

  9. இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பு தமது இலக்கை நிறைவேற்றிக்கொள்வதற்காக தற்போது ஏனைய வழிகளில் செயற்பட முயன்றுவருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம குற்றஞ்சாட்டியுள்ளார். மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அகமட் ஷஹிட்டுனான சந்திப்பிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். இலங்கை மற்றும் மாலைதீவு போன்ற நாடுகள் அச்சுறுத்தல்களுக்கான ஆபத்தை எதிர்நோக்கிவருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். எனவே, இரு நாடுகளும் தகவல்களை பரிமாறிக்கொள்ளவேண்டும் எனவும் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். http://www.tamil.dailymirror.lk/2009-08-13-06-05-34/1019-2010-02-23-04-42-48.html

  10. சக்தி தொலைக்காட்சி ஊடகவியலாளரும் அரசின் கைப்பாவையுமான சிறீரங்கா இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களை வடக்கு கிழக்கு தமிழ் மாணவர் ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கி அதில் இணையுமாறு கேட்டுள்ளார், வரப்போகும் பொதுத்தேர்தலில் மாணவர்கள் சார்பாக இரு மாணவர்களைப் போட்டியிட வருமாறு ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் சென்று அழைப்புவிடுத்துள்ளார். விபரம் தெரியாமல் மாணவர்கள் அவருக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். ரங்காவைப் பற்றி அனைத்து மாணவர்களுக்கும் தெரியப்படுத்தி இந்தச் சதிவலையில் சிக்காமல் இருக்க உதவுமாறு உங்களுக்குத் தெரிந்ததானைவருக்கும் தெரியப்படுத்துங்கள். இன்று கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ரங்கா இதற்கு அழைப்புவிடுத்துள்ளார்

  11. யாழ் இந்துக்கல்லூரியில் சிங்கள பாடத்திற்கு பெளத்த துறவி நியமனம் Posted on February 22nd, 2010 in செய்திகள் சிங்களபாடம் மாணவர்களுக்கு ஒரு பாடமாக இருந்த பொழுதிலும் கடந்தகாலங்களில் குறிப்பாக தமிழர் பிரதேசங்களில் இந்தப்பாடம் கற்பிக்கப்படுவதில்லை தற்போது மீண்டும் சிங்கள பாடம் கற்பிப்பதற்கான ஆசிரியர் நியமனங்கள் முன்னெடுக்கப்படுகின்றன .இந்நிலையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு தற்போது சிங்கள பாடக்கற்பித்தலுக்காக பெளத்ததுறவி ஒருவர் நியமனம் பெற்றிருக்கிறார் குறித்த ஆசிரியர் நேற்று அதிபரை சந்தித்து தமது நியமனம் குறித்தும் தங்குமிட வசதி தொடர்பாகவும் கலந்துரையாடியிருப்பதாக தெரியவருகிறது. சிங்களபாடம் கற்பிக்க ஆசிரியர் நியமிக்கப்படுவது சாதாரண விடயம் என்றபொழுதிலும் வரலற்று…

    • 9 replies
    • 1.3k views
  12. தமிழர் இறைமையை தமிழர் அரசியற் தலைமையானது தானே முன்வந்து தாரைவார்த்துவிடுவது ஏன் ஒருபோதும் செய்யக்கூடாதது? இறைமையைச் சரணாகதி செய்யும்படி ஏன் தமிழர்கள் எல்லாப்பக்கங்களில் இருந்தும் அச்சுறுத்தப்படுகிறார்கள்? இலங்கைத் தீவில் தமிழர்கள் தமது தனி இறைமைக்கு உரிமை கோருவதற்கான சட்டஇ வரலாற்று அடிப்படைகள் எவை? – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்காலகட்டத்தில்இ அரசியல்வாதிகளாயினும் சரிஇ சாமான்யராயினும் சரிஇ ஒவ்வொரு ஈழத்தமிழரும் கருத்தூன்றிக் கவனமாக ஆராயவேண்டிய கேள்விகள் இவைஇ என்று கூறுகிறார் கொழும்பிலிருந்து தமிழ்நெற் அரசியற் கருத்துரையாளர். சிங்களவர்களைப் போன்றே தமிழர்களும் தங்கள் இறைமையை போர்த்துக்கேயரிடம் இழந்திருந்தார்கள். ஆயினும்இ இந்த இழப்புகள் தனித்தனியான சட்ட உடன்படிக்க…

  13. அக்கா நாங்கள் கிளிநொச்சிக்கு வந்திட்டம். போன புதன்கிழமை வந்தனாங்கள் கோல் பண்ண ஏலாமல் போச்சு, பற்றி சார்ஜ் இறங்கிவிட்டுது. முந்த நாள் வீட்டுக்கு போயிட்டம். ரவுணுக்க இலவசமா சார்ஜ் போட்டு கொடுக்கிறாங்கள் அங்க வந்து சார்ஜ் பண்ணிட்டுதான் கதைக்கிறன். வீடுகள், இயக்கத்தின்ர கட்டடங்கள் எல்லாம் கள்ளர்களோ ஆமியோ ஆரெண்டு தெரியாது எல்லாம் உடைச்சு கொண்டு போயிட்டாங்கள். பத்தைகள் வளர்ந்து இருக்கு . இயக்கத்தின் காவல்துறை ஆமி பாவிக்கிறாங்கள். வெற்றி மனை மன நோயாளர் விடுதி ஆமி முகாம் போட்டிருக்கிறான். வெண்புறா அமைப்பின் காணிதான் பெரிய புத்த கோயிலாக இருக்கின்றது. சமாதான செயலகம், அரசியல் துறை செயலகம் ஆமிதான் பாவிக்கிறான் போல இருக்கு. பொது கட்டடங்கள் எல்லாம் முதல் வந்த சனங்கள் உடைச்சு …

  14. சிறிலங்கா அரசு என்ற மாயையும்... [TamilNet, Monday, 22 February 2010, 18:49 GMT] தமிழர் தலைமையின் வரலாற்றுக் கடமையும் தமிழர் இறைமையை தமிழர் அரசியற் தலைமையானது தானே முன்வந்து தாரைவார்த்துவிடுவது ஏன் ஒருபோதும் செய்யக்கூடாதது? இறைமையைச் சரணாகதி செய்யும்படி ஏன் தமிழர்கள் எல்லாப்பக்கங்களில் இருந்தும் அச்சுறுத்தப்படுகிறார்கள்? இலங்கைத் தீவில் தமிழர்கள் தமது தனி இறைமைக்கு உரிமை கோருவதற்கான சட்ட, வரலாற்று அடிப்படைகள் எவை? – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்காலகட்டத்தில், அரசியல்வாதிகளாயினும் சரி, சாமான்யராயினும் சரி, ஒவ்வொரு ஈழத்தமிழரும் கருத்தூன்றிக் கவனமாக ஆராயவேண்டிய கேள்விகள் இவை, என்று கூறுகிறார் கொழும்பிலிருந்து தமிழ்நெற் அரசியற் கருத்துரையாளர். சிங்களவர்களைப் …

    • 2 replies
    • 960 views
  15. கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்படும்போது அவர்கள் கூறும் பதில்களை கேட்கக்கூடியவாறு வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியை கோபத்தில் எட்டி உதைந்தார் பொன்சேகா!:-இராணுவ வட்டாரங்கள். [Monday, 2010-02-22 09:37:10] தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இராணுவத்தினரால் அவரது அறையில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கியை எட்டி உதைந்தார் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரசுக்கு எதிராக சதிமுயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்படும்போது அவர்கள் கூறும் பதில்களை கேட்கக்கூடியவாறு பொன்சேகா தடுத்துவைக்கப்பட்டுள்ள அறையினுள் ஒலிபெருக்கி ஒன்றினை இராணுவ விசாரணையாளர்கள் பொருத்திவைத்துள்ளனர். …

  16. தமிழ்க்கூட்டமைப்பின் இரகசியங்களை அம்பலப்படுத்தப்போகிறேன்: சிவநாதன் கிஷோர் தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் காணப்படும் பிரச்சினைகள், அந்த கூட்டணி கடந்த காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றின் உண்மைகள் ஆகியவற்றை அம்பலப்படுத்தப்போவதாகவும் அதற்காக இன்று அல்லது நாளை விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை கூட்டவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கிவிட்டு புதியவர்களை இணைக்கும் முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்த கிஷோர், தான் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் வன்னியில் போட்டியிடவுள்ளதாக அடித்துக்கூறியு…

  17. அமெரிக்காவும் பிரித்தானியாவும் எதிர்ப்பு வெளியிட்டாலும் பொன்சேகாவுக்கு இராணுவமே தீர்ப்பளிக்கும்:- இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய. அமெரிக்காவும் பிரித்தானியாவும் எதிர்ப்பு வெளியிட்டாலும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என சிரேஷ்ட சிறீலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 2009 இலக்கம் 35 கூட்டுப்படைத்தலைமை அதிகாரி சட்டமூலத்தின் கீழ் ஜெனரல் சரத் பொன்சேகா கூட்டுப் படைத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டாலும் அவருக்கு எதிராக சிறீலங்கா இராணுவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என இராணுவச் சட்ட அதிகாரிகளுக்கு இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய அறிவித்துள்ளார். இதனடிப்படையில் இராணுவத்…

    • 2 replies
    • 856 views
  18. வரதராஜப்பெருமாளுக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இந்தியா கோரிக்கை. இணைந்த வடக்கு கிழக்கு மாகணத்தின் முதலமையச்சராக இருந்த வரதராஜப்பெருமாளுக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு இந்தியா ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளது. அதேவேளை இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் ஒன்றை ஏற்படுத்தவும் அரசாங்கத்தின் பங்காளிகளான கருணா, பிள்ளையான் ,டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் மூலமாக அதனை நிர்வகிப்பதற்கும் இலங்கை அரசாங்கதிற்கு இந்தியா ஆலோசனை வழங்கியுள்ளது. இதன் மூலம் இலங்கையில் அரசியல் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும் என்று இந்தியா கருதுகின்றது. அதேசமயம் புலம் பெயர் நாடுகளில் …

    • 2 replies
    • 1.1k views
  19. ஏற்றுமதி வரிச் சலுகை கோரி ஐரோப்பிய ஒன்றியத்திடம் பேச்சு நடத்த சிறிலங்கா வர்த்தக சமூகம் முடிவு ஐரோப்பிய ஒன்றியத்தால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் கூடுதல் வர்த்தக சலுகைகளை [GSP+] மீண்டும் பெறுவதற்காக சிறிலங்க அதிபர் ராஜபக்சவிடமும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் பேச்சு வார்த்தை நடத்த சிறிலங்கா வர்த்தக சமூகம் முடிவு செய்துள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகள் இணைந்து இழந்த சிறப்புச் சலுகைகளை மீண்டும் பெற போராடும் என சிறிலங்கா தேசிய வணிக அமைப்பின் [sri Lanka National Chamber of Commerce] தலைவர் லால் டி அல்விஸ் [Lal De Alwis] அரசால் நடத்தப்படும் சிறிலங்கா ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியுள்ளதாவது சிறிலங்கா வர்ததக சமூகத்தினர…

    • 2 replies
    • 532 views
  20. இன்றைய தினம் தலதா மாளிகையில் நடத்தப்படவிருந்த பூசை பொலிசாரால் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து குறித்த பூஜை வழிபாடுகளை வீதியிலேயே நடத்தியிருப்பதாக சாரதர்ம இளைஞர் சமாஜம் என்ற அமைபபு தெரிவித்துள்ளது. சாரதர்ம இளைஞர் சமாஜத்தினால் சரத் பொன்சேகாவிற்கு ஆசி வேண்டி தலதா பூஜை நிகழ்வொன்று இன்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பூசை ஆரம்பிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் அவ்விடத்திற்கு வந்த பொலிசார் அனுமதி பெறாத காரணத்தினால் இந்தப் பூசையை நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது எனக் கூறியதைத் தொடர்ந்து விகாரையில் வழிபாடு நடத்துவதற்கு எந்தவிதமான அனுமதியும் தேவையில்லை என ஏற்பட்டாளர்கள் வாதிட்டனர். எனினும் தமக்கு உயர் மட்டத்திலிருந்து இந்த உத்தரவு வந்திருப்பதாகவும் எக்காரணம் கொண்டு…

  21. இராணுவத்தின் யாழ் மாவட்டத் தளபதியான மேஜர் ஜெனரல் ஹத்துறுசிங்கவை யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் இன்றைய தினம் சந்தித்துள்ளார். யாழ் ஆயர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும் இதன் போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை எனவும் எமது யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார் http://www.eelamweb.com

    • 7 replies
    • 769 views
  22. தேசபக்தி என்பது அயோக்கியர்களினது கடைசிப் புகலிடம் என்ற பிரபலமான வரிகளை விளங்கிக் கொள்ள வேண்டிய ஒடுக்கப்படும் மக்கள், இந்த தேசபக்தி அயோக்கியர்களின் சர்வாதிகார சிந்தனை முறைகளிற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். இலங்கையில் ஜெயவர்த்தன, பிரேமதாச போன்ற கொலைகாரர்களின் மொத்த வடிவமாக மகிந்த கும்பல், பெளத்த தேசிய வெறியினைக் கிளறி மக்களை ஒடுக்கி வருகிறது. இலங்கையின் தேசிய வளங்களையும் தொழிலாளர்களின் உழைப்பையும் வெளிநாட்டு முதலாளிகட்கு விற்பதில் எந்தவித தயக்கமும் கூச்சமும் காட்டாத இந்த தேசபக்தி கொள்ளையர்கள், மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடுவதன் மூலம் தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள். தமது அதிகாரம் அதன் மூலம் சொந்த நாட்டு மக்களை கொள்ளையடித்துக் குவிக்கப் படும் சொத்துக்கள் …

    • 1 reply
    • 995 views
  23. இலங்கையில் இந்தியா தலையிடுவதற்கு தீர்க்கமான நேரம் வந்துவிட்டது என்கிறது அமெரிக்க ஏட்டின் இந்திய வெளியீடு "உங்களது சர்வாதிகார ஆட்சியாளரை நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறை தான் மக்களாட்சி முறைமை" என முன்பொரு காலத்தில் யாரோ ஒருவர் கூறியிருந்தார். இலங்கையில் தமிழ்ச் சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில், கடந்த ஜனவரியின் இறுதிப் பகுதியில் நடந்து முடிந்திருக்கும் குடியரசு அதிபர் தேர்தலும் இது போன்றதொரு குழப்பகரமான தடுமாற்ற நிலையையே தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. தங்களது தாயகப் பூமியில் கொடூரத் தனமான ஒரு போர் அரங்கேறுவதற்குக் கட்டளையிட்டவர் யாரோ அவருக்கு வாக்களிப்பதா அல்லது அந்தப் போரில் களமுனையில் முனைப்புடன் படைகளை நடாத்திய ஜெனரலுக்கு வாக்களிப்பதா? ஈற்றி…

  24. சிறீலங்கா அரசு அடிப்படை மனித உரிமைகளை மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: பேர்னாட் சவேஜ் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அடிப்படை மனித உரிமைகளை புறந்தள்ளுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என சிறீலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பேர்னாட் சவேஜ் கொழும்பு வாரஏடு ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் (21.02.2010) தெரிவித்துள்ளார். அதன் தமிழ் வடிவம் வருமாறு: கேள்வி: ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. எனவே தற்போதைய நிலையில் இருந்து இருதரப்பும் மேற்கொண்டு செல்ல வேண்டிய திசை என்ன? பதில்: இதற்கான திட்டம் 18 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. அது பல விடயங்களை கொண்டது. அதனை நாம் கடந்த ஒக்டோபர் மாதம் வெளியிட்ட இறுதி அறி…

    • 0 replies
    • 843 views
  25. நான்காம் கட்ட போரும் ஆயுதப்போராட்டமாக அமையலாம் – உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் [/size] 75 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஈழம் இன்று 15 கிலோமீட்டராக சுருங்கிவிட்டது. ஈழமண் பறிபோனது. தமிழ் ஈழத்தில் மண்ணை இழந்துவிட்டோம். அந்த மண்ணை இழந்தாலும் விடமாட்டோம். ஆயுதப்போர் தொடங்கும், இது வரை ஈழம் மூன்று கட்ட போர்களை சந்தித்திருக்கிறது. முதற்கட்ட போர் பேச்சுவார்த்தை, இரண்டாம் கட்ட போர் அறப்போராட்டம், மூன்றாம் கட்ட போர் பிரபாகரன் தலைமையில் ஆயுதப்போராட்டம். நான்காவது போரும் ஆயூதப்போராட்டமாக அமையலாம். ஆயுதப்போராட்டம்தான் எங்கள் தீர்வு. போர்க்குணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். போராட்டம் தொடரும்” என்று காசி ஆனந்தன் தெரிவித்தார். தமிழர் மீட்சிப்படையில் இருந்த முத்துக்குமாருக்கும், புதுக்…

    • 5 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.