ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142980 topics in this forum
-
பொன்சேகா விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஜே.வி.பி. உறுப்பினர்கள் உட்பட அனோமா பொன்சேகா ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு முகத்துவாரம் காளி கோயிலில் தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதன் பின்னர் உரையாற்றும் போதே அனோமா பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், "நாட்டைக் கொடிய யுத்தத்தில் இருந்து மீட்டெடுக்க தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் தான் எனது கணவர் ஜெனரல் சரத் பொன்சேகா. அவரை இன்று அரசியலில் ஈடுபட்டார் என்ற ஒரே காரணத்திற்காகப் பொய் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து சிறையில் அடைத்துள்ளனர். அவரது விடுதலைக்காக சட்டத்துடன் போராடும் அதேசமயம், ஆலயங்களை நாடி பிரார்த்தனைகளிலும் ஈடுபடுகின்றோம். இதைத் தவிர வ…
-
- 10 replies
- 1k views
-
-
இலங்கை பிரச்சனைக்கு அரசியல் தீர்வு: தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் சென்னை, சனி, 20 பிப்ரவரி 2010( 15:57 IST ) இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அதிகார பகிர்வு ஒன்றுதான் நிரந்தர தீர்வு என்றும் அதற்கான அரசியல் தீர்வு காண முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தி.மு.க. பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது. முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: * மத்திய கல்வித்துறை சார்பாக கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள உயர்கல்வி ஆணைய மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதோ…
-
- 5 replies
- 865 views
-
-
Sri Lanka's tortured politics shifted into a new and murky phase after the re-election of the country's president, Mahinda Rajapaksa, in January. Rajapaksa soundly defeated retired Gen. Sarath Fonseka, the battlefield commander who helped destroy the Liberation Tamil Tigers of Eelam last year, ending Sri Lanka's 26-year civil war. The election was a bitter contest between the two former allies and when Fonseka threatened to challenge the results in court — he said there was widespread vote rigging — the government had him arrested for plotting a coup http://www.cbc.ca/canada/story/2010/02/19/f-sri-lanka-unrest.html
-
- 5 replies
- 971 views
-
-
இந்தியாவினால் நேரடியாக இயக்ப்படும் தமிழ் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாறியுள்ளது இந்தியாவினால் நேரடியாக இயக்ப்படும் தமிழ் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் கூட்டமைப்பு அலுவலகம் ஒன்று இந்தியாவின் தலைநகர் புதுடெலகியில் திறந்து வைக்கப்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கூட்டமைப்பின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்தியாவில் உள்ள அலுவலகம் துணை புரியும் என்று கூட்டமைப்பினர் நம்பிக்கை கொண்டுள்ளனர். தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு தமிழ் மக்கள் செறிவாக வாழும் வடக்கு கிழக்கில் ஒரு அலுவலக்த…
-
- 8 replies
- 1.1k views
-
-
தமிழ்கட்சிகள் தன்னோடுதான் பேசி தீர்வுகாணவேண்டும் அல்லது புதிய "தமிழ் தலைவர்கள்" வருவார்கள் - மகிந்த எச்சரிக்கை .நாடாளுமன்ற தேர்தல்கள் முடிவடைந்தபின்னர் தமிழ் பேசும் மக்களின் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவிருப்பதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் அரச தலைவராக இருப்பதால் தமிழ்க்கட்சிகள் தன்னோடு தான் பேச்சுவார்த்தை செய்யவேண்டும் எனவும் தமிழ்க்கட்சிகளால் தன்னோடு இணைந்து வேலைசெய்யாவிட்டால் புதிய தமிழ் தலைவர்கள் தோன்றுவார்கள் எனவும் அவர்களோடுதான் பேச்சுவார்த்தைகளை செய்வேன் என்றும் மேலும் அவர் தெரிவித்தார். இந்திய பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே மேற்குறிப்பிட்ட தகவல்களை ச…
-
- 0 replies
- 845 views
-
-
இலங்கையர்களுக்கு வீசா வழங்குவதில் இந்தியாவின் புதிய நடைமுறை இலங்கையர்களுக்கு வீசா வழங்குவது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்தினால் புதிய நடைமுறை ஒன்று பின்பற்றப்படவிருப்பதாக கூறப்படுகிறது. இதன் படி இந்தியாவில் நடைபெறவுள்ள கருத்தரங்குகள், நிகழ்வுகளில் இலங்கை உள்ளிட்ட எட்டு நாடுகளில் இருந்து பங்கு பற்றுபவர்களுக்கு விசா பெற்றுக் கொள்வதில் அதிக கெடுபிடிகள் காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த நிகழ்வு நடைபெறுவதற்கு 6 வாரங்களுக்கு முன்னதாகவே இந்திய உள்துறை அமைச்சிடம் அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வீசா பெறவிருப்பவர் குறித்தும் முறையாக உள்துறை அமைச்சிடம் தெரிவித்து, அனுமதி பெற வேண்டும் என கோரப்பட்டு…
-
- 12 replies
- 1.5k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமநாதன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட உள்ளார் என மட்டக்களப்பு மாவட்டச் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்ற பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தங்கேஸ்வரி நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த றாஜபக்சவை ஆதரித்திருந்தார். SOURCE : http://www.eelamweb.com
-
- 4 replies
- 945 views
-
-
வெளிநாட்டமைச்சு சந்தேகத்துக்கிடமான NGO மற்றும் சர்வதேச NGO க்கள் பற்றி ஒரு விசாரணையை தொடங்கவிருப்பதாக அறியப்படுகிறது. "வெளிநாடுகளில் இருந்து முறை தவறிய வழிகளில் நிதி சேர்த்தல், அதனை அரசைக்கவிழ்பதற்கு உபயோகம் செய்தல் ஆகிய குற்றங்களையே அரசு புலனாய்வு செய்யவிருப்பதாக வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லகம ராஜதந்திகளை அண் மையில் சந்தித்த போது மேற்படி விடயம் குறித்து அவர்களுக்கு விளக்கமளித்துள்ளதாகவும் இவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை அரசாங்கம் இந்த பாரதூரமான விடயம் குறித்து கவலை கொண்டுள்ளது. இத்தகைய கொடுக்கல்வாங்கல் குறித்தும் இதில் சம்பந்தப்பட்ட தனிப்பட்டவர்கள் மற்றும் குழுவினர் குறித்தும் கண்டுபிடிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப் படும் இத்தகைய கொடுக்கல்வாங்…
-
- 0 replies
- 676 views
-
-
வடபகுதிக்குச் சுற்றுலாப் போன 75 தென்னிலங்கைப் பயணிகளுக்கு வயிற்றோட்டம் தென்னிலங்கையில் இருந்து A9 பாதையூடாக வடபகுதிக்குச் சுற்றுலாச் சென்ற பயணிகளில் 75 பேர் வயிற்றோட்டம் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இப்பயணிகள் நேற்றிரவு கிளிநொச்சியில் தங்கியிருந்தனர். கிளிநொச்சியில் சுத்தீகரிக்கப் படாத தண்ணீரை அருந்தியதால் வயிற்றோட்டம் ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. அண்மைக் காலமாக தென்னிலங்கையிலிருந்து வடபகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் தொகை அதிகரித்து வருவது தெரிந்ததே. சரியான தங்குமிட வசதிகளோ அடிப்படை வசதிகளோ வடபகுதியில் அற்ற நிலையில் பாரிய தொகையில் பயணிகளின் வருகை சுகாதார சீர்கேடுகள…
-
- 7 replies
- 727 views
-
-
இலங்கையில் சிங்கள மக்கள், படையினர் மற்றும் மகா சங்கத்தினர் மத்தியில் அரசாங்கம் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. பிரபாகரனால் செய்ய முடியாததை அரசாங்கம் இன்று செய்துள்ளது என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டைப் பாதுகாத்த ஜெனரல் சரத் பொன்சேகா தேசத் துரோகியாகி விட்டார். கே.பி. இன்று தேசப்பற்றாளர் ஆகிவிட்டார் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சுட்டிக் காட்டினார். ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்படவுள்ள 10 இலட்சம் மக்களின் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கையின் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று கொழும்பு ஜே.ஆர். ஜயவர்த்தன நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்…
-
- 13 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணத்தில் பிச்சை எடுக்கும் தமிழ் மாணவர்கள் தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வறுமை காரணமாகவும் பெற்றோர்கள் இல்லாத நிலையிலும் வீதியோரங்களில் பிச்சைஎடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. யாழ்ப்பாணத்தில் மட்டும் தற்போது ௧௪௨ பிச்சை ஏந்தும் மாணவர்களின் விபரங்களை எமது அமைப்பினர் சேகரித்து உள்ளனர். வடக்கில் பல மாணவர்கள் காலையில் பாடசாலைக்கும் மாலையில் பிச்சை எடுக்கும் தொழிலுக்கும் செல்கின்றனர் . அதிகரித்த பசி மற்றும் குடும்ப வறுமை என்பனவே எமது மாணவர்களை இந்தளவு நிலைக்கு கொண்டுவந்துள்ளது . எமது சமுதாயத்தின் எதிர்கால தூண்களின் நிலைமை எங்கே சென்று கொண்டிருக்கின்றது ? இதை இப்படியே வேடிக்கை பார்க்கப் போகிறோமா ? நலன்புாி முகாம்களிலிருந்த…
-
- 6 replies
- 1.2k views
-
-
வன்னிப் பெருநிலப்பரப்பில் மக்கள் மீள்கு டியேறாத பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வீட்டுத் தளபாடங்கள் என்பன சக விரோதிகளால் திருடப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்க ளின் இணையத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அரச அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள மேற்படி கோரிக்கைக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யுத்தம் காரணமாக கடந்த ஆண்டு வன்னி பெருநிலப்பரப்பிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்க ளில் தங்கிய பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் அவரவர் இடங்களில் மீளக்குடிய…
-
- 0 replies
- 612 views
-
-
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திலுள்ள இரு ஆயுதக் குழுக்களின் முகாம்க ளையும் அகற்றி வர்த்தக நிலையங்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரி வர்த்தகர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கலடி பிரதேசத்தில்கடந்த ன்று மாத காலப் பகுதிக்குள் எட்டு கடைகள் உடைக்கப்பட்டு பெறுமதி மிக்க பொருட் கள் கொள்ளையிடப்பட்டதையடுத்து வர்த்த கர்கள், ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். ஆர்ப்பாட்டத்திற்காக நேற்று அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. பொலிஸ், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை முகாம்கள் சூழ இருக்கின்ற செங்கலடிப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவது ஆயுதக்குழுக்களின் கைவரிசையே என தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக் காலத்தில் செங…
-
- 1 reply
- 820 views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: கிருஷ்ணசாமி சென்னை, வெள்ளி, 19 பிப்ரவரி 2010( 16:41 IST ) தங்களுடைய துப்பாக்கிகள் மெளனித்துவிட்டதாக அறிவித்துவிட்டு, நாடு கடந்ததமிழீழ அரசை அமைக்க ஜனநாயக ரீதியில் அவர்கள் வாக்கெடுப்புநடத்திவரும் நிலையில், இதற்கு மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதானதடையை நீடிப்பதற்கு என்ன நியாயம் இருக்க முடியும் என்று புதிய தமிழகம்கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். WD சென்னையில் இன்றுசெய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் க. கிருஷ்ணசாமி, விடுதலைப் புலிகள்மீதான தடை தொடர்ந்துநீடிக்கப்பட்டு வருகிறகாரணத்தினால்தான், செங்கற்பட்டுஉள்ளிட்ட அகதிகள் முகாம்களில்இருக்கும் ஈழத் தமிழ் அகதிகள்புலிகள் என்று சந…
-
- 1 reply
- 547 views
-
-
சுயேட்சைக்குழு கட்டுப்பணம் செலுத்தியது எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் யாழ்மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு சாவகச்சேரியை சேர்ந்த சண்முகநாதன் மனோகரன் என்பவரின் தலைமையிலான 12 பேர் அடங்கிய சுயேட்சைக்குழு நேற்று யாழ் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியிருக்கிறது. இதேவேளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உள்ளுர் வேட்பாளர்களை நிறுத்தவேண்டும் என்ற எண்ணக்கரு யாழ் மக்களிடையே மேலோங்கிவருகின்றது இந்நிலையில் சுயேட்சைக்குழுவின் பிரசன்னம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது http://vembady.com/news/?p=336
-
- 1 reply
- 559 views
-
-
ஒன்பது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைகழுவுகின்றது கூட்டமைப்பு: புது முகங்கள் களத்தில் [ சனிக்கிழமை, 20 பெப்ரவரி 2010, 01:59 GMT ] [ கார்வண்ணன் ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த ஒன்பது பேருக்கு இந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. நேற்றைய தினம் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் வேட்பாளர் பட்டியல்கள் முடிவு செய்யப்பட்டிருந்தன. பெரும்பாலும் இன்றைய தினம் வன்னி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பாளர் …
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியா சென்ற கோத்தபாய ராஜபக்ச இந்தியாவின் வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.பாதுகாப்பு தொடர்பிலான கண்காட்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக இந்தியா சென்ற கோத்தபாய மரியாதை நிமிர்த்தம் நிருபமா ராவ் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். நாளை கோத்தபாய நாளை கொழும்பு திரும்புகிறார் என சிறீலங்கா அரச வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. http://thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=129:2010-02-19-01-34-00&catid=34:2010-02-09-12-34-07&Itemid=53 ============== நீண்ட இடைவெளியின் பின் கொழும்பில் உருவான பழைய உறவுகளை புதுப்பிக்கவோ?
-
- 1 reply
- 561 views
-
-
இலங்கையின் ஏழாவது நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலுக்குரிய வேட்புமனுத் தாக்கல் நேற்று ஆரம்பமாகிவிட்டது. இனி, அடுத்த வெள்ளிக்கிழமை வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியும். இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் இத் தேர்தல் மிகமிக முக்கியமான ஒன்று. அதனைத் தமிழ்ப் புத்திஜீவிகள், தொழில்சார் நிபுணர்கள், கல்விமான்கள் மற்றும் சமூக நலனில் அக்கறையுள்ள வர்த்தக முக்கியஸ் தர்கள் போன்ற தமிழர்களின் மேம்பாட்டில் சிரத்தையும் பிரக்ஞையும் கொண்ட உயர்மட்டக் குழுவினர் ஒரு மித்த குரலில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர் எனச் செய்தி கள் வெளியாகியிருக்கின்றன. இலங்கையில் தமிழ்ப்பேசும் சமூகத்தின் இருப்பை யும், எதிர்காலத்தையும், தலைவிதியையும் தீர்மானிக்கும் முக்கிய பொதுத் தேர்தலாக இதனை அவர்கள்…
-
- 1 reply
- 727 views
-
-
இராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடாவில் சேதுசமுத்திரத்திட்ட ஆய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ள ஆய்வுக்குழுவினர் இந்தப் பணிக்காக அந்தப் பகுதி மீனவர்களின் நாட்டுப்படகு மற்றும் விசைபடகுகளைப் பயன்படுத்துகின்றனர் மேலும் ஆய்வுக்கருவிகள் மற்ற மீன்பிடிப் படகுகளால் சேதமடைவதைத் தடுக்க அப்பகுதி மீனவர்களும் காவல் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். இவ்வாறு தனுஷ்கோடி அருகே இந்திய எல்லைக்குள் நான்காம் மற்றும் ஐந்தாம் தீடைகளுக்கு நடுவே காவற் பணியில் ஈடுப்பட்டிருந்த ரீகன் மற்றும் பென்சியர் என்ற இரு தமிழ்நாட்டு மீனவர்களைத் தான் இந்தியக் கடல் எல்லைக்குள் புகுந்து சிங்களக் கடற்படையினர் அடித்து, உதைத்து, மிதித்துத், தாக்கியுள்ளனர் காவற்பணியில் தங்களை ஈடுபட அனும…
-
- 0 replies
- 652 views
-
-
சிறிலங்காவின் பாணந்துறை நீதிமன்றம் விசித்திரமான தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. குறிப்பிட்ட நபரொருவரைக் கைது செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் இவரைக் கைது செய்ய முடியவில்லை என பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து குறித்த நபரைத் தன்னால் கைது செய்து நீதிமன்றில் ஒப்படைக்க முடியும் என தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் முன் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தக் கைதியை பிணையில் விடுதலை செய்த பாணந்துறை நீதிபதி ரங்க திசாநாயக்கா இரு வாரங்களில் குறித்த நபரைக் கைது செய்து நீதிமன்றிடம் கையளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பு சட்டவாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. SOURCE: http://eelamweb.com
-
- 4 replies
- 1.2k views
-
-
அடிப்படைக் கொள்கைகளை முன்வைத்தாலே தமிழ் மக்கள் கூட்டமைப்பினரை ஏற்றுக்கொள்வார்கள் - ஜெயானந்தமூர்த்தி எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் அடிப்படைக் கொள்கைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி, இறைமை என்ற கோட்பாடுகளை முன்வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டால் மாத்திரமே தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துரைத்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்: “கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்குறித்த தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாட்டை ம…
-
- 3 replies
- 580 views
-
-
யாழ். நகரில் அண்மைக் காலத்தில் சிறுவர்கள் பிச்சை கேட்பது அதிகமாகி வருகிறது. இதில் அதிமாகப் பெண் பிள்ளைகள் ஈடுபடுவதைக் காணமுடிகின்றது. இவ்வாறு பிச்சை கேட்கும் பெண் பிள்ளைகளின் வயது எல்லையாக 8 முதல் 14 வரை உள்ளதாகக் காணப்படுகிறது. பாடசாலைகளுக்குச் செல்லும் வயதில் இவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை, கொப்பி, பேனா போன்றவற்றை இவர்கள் பிச்சையாகக் கேட்பதைக் காணமுடிகிறது. யாழ். பேரூந்து தரிப்பிடத்திலேயே இவர்கள் அதிகமாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது http://www.thinamurasam.com/
-
- 18 replies
- 2.5k views
-
-
ஒலிம்பிக் பதக்கம் வென்றவரான சுசந்திக்கா ஜயசிங்கவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிட உள்ளார். இவர் கேகாலை மாவட்டத்தில் போட்டியிடுவார் என சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுசந்திகா ஜயசிங்க போட்டிகளில் ஈடுபட்ட காலத்தில் அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சரும் தற்போதய ஆளும் கட்சி முக்கியஸ்தருமான எஸ்.பி. திசாநாயக்கவுடன் முரண்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது SOurce: http://www.eelamweb.com
-
- 0 replies
- 605 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று நடைபெற்றுள்ளது. இச் சந்திப்பு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரின் கேம்பிறிஜ் இடத்திலுள்ள உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது. எனினும், இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து எதுவும் தெரியாதெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. http://www.thinamurasam.com/
-
- 0 replies
- 479 views
-
-
பொன்சேகாவை மீட்க லியன் பொக்ஸ் இலங்கை விஜயம் இலண்டன் நிருபர் வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2010 Liam fox பிரித்தானிய பாதுகாப்பு நிழல் அமைச்சரும் மஹிந்தவின் நண்பருமான லியன் பொக்ஸ் சனிக்கிழமை இலங்கை செல்லவிருக்கின்றார். இவரது பயணத்தின் முக்கிய நோக்கம் மஹிந்த மற்றும் சரத்பொன்சேகா ஆகியோருக்கு இடையே சமரசம் பேசி பொன்சேகாவை ஒருவாறு மீட்பதே ஆகும் என கூறப்படுகின்றது. லியன் பொக்ஸ் அவர்களை இலங்கை மீதான மேற்கத்தைய நாடுகளின் இறுக்கத்தை தளர்த்த உதவும் படியும், அபிவிருத்திக்கு உதவும் படியும் கேட்பதற்காக மஹிந்த அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள லியன்பொக்ஸ் தான் வருவதென்றால் சரத் பொன்சேகா விடயத்தில் தளர்வு போக்கினை காட்டவேண்டும் என கூறியுள்ளார். இதன் அடிப்படையிலேயே வர…
-
- 11 replies
- 1.8k views
-