ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142976 topics in this forum
-
யாழ். பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் சிங்கள மாணவர்களுக்கு அனுமதி: மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை .யாழ் பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் சிங்கள, முஸ்லிம் மாணவர்களை அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தில் பிற மாவட்ட சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் முன்னர் சென்று கல்வி கற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதும், போர் சூழல் காரணமாக அது சாத்தியப்படவில்லை என்று கூறியுள்ள காமினி சமரநாயக்க - தற்போது அங்கு கல்வி கற்பதற்கு பல மாணவர்கள் ஆர்வம் காட்டியிருப்பதால் யாழ் பல்கலைக்கழகத்திற்கான பிற மாவட்ட மாணவர் அனுமதி கோட்டாவை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக கூறியள்ள…
-
- 1 reply
- 718 views
-
-
எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையாளர் மறுப்பு .ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பதிவு செய்யப்பட்ட 10 அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஏற்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் புதிதாக நிறைவேற்றப்பட்ட தேர்தல் சட்டமூலத்திற்கமையவே அவர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார். இதனடிப்படையில் புதிய கட்சிகளைப் பதிவு செய்யும் அதிகாரம் தனக்கு இல்லையென தேர்தல் ஆணையாளர் ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் வெஹெரகொடவிற்கு அறிவித்துள்ளார். இந்த நிலைமையில், ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த கட்சிகள்…
-
- 0 replies
- 609 views
-
-
ஒருபோதும் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரித்தது கிடையாது - இரா.சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரித்தது கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரித்தது கிடையாது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அதிக அதிகாரங்கள் கொண்ட தீர்வையே நாம் வலியுறுத்தி வருகின்றோம் எனக் கூறியுள்ளார். நாங்கள் பெரும்பாண்மை சிங்கள சகோதரருக்கு மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். ஒருபோதும் நாங்கள் எவ்விதமான தீங்கையும் …
-
- 85 replies
- 5.8k views
-
-
கசூரினாக் கடற்கரையில் கலாசாரச் சீரழிவு திகதி: 06.02.2010 // தமிழீழம் காரைநகர் கசூரினாக் கடற்கரைக்குச் செல்லும் சிலர் கலாசாரச் சீரழிவில் ஈடுபட்டு வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஏ-9 பாதை திறக்கப்பட்ட பின்னர் தென்பகுதியிலிருந்து பெருமளவான பொதுமக்கள் (உல்லாசப் பயணிகளாக) குடாநாட்டுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு வருகை தரும் உல்லாசப் பயணிகள் காரைநகர் கசூரினாக் கடற்கரைக்கும் பெருமளவில் படையெடுத்து வருகின்றனர். இதேநேரம் யாழ்.குடாநாட்டுப் பொதுமக்களும் இவர்களுட ன் வருகை தரும் அதேவேளை சில இளைஞர், யுவதிகள் கலாசார சீரழிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கூடுதலாகத் தனியார் கல்வி நிலையத்திற்குச் செல்வோர் அங்கு செல்வதாகக் கூறி…
-
- 32 replies
- 2.8k views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
ஈழத்தில் சுதந்திர தாகம் ஓயாது: பினாங்கு துணை முதல்வர் ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது என்று உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டில், பினாங்கு துணை முதல்வர் ராமசாமி கூறினார். கோவையில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு கோவை வ.உ.சி.பூங்கா மைதானத்தில் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். மலேசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: உலகம் எங்கும் பரந்து கிடக்கும் தமிழர்களுக்கு கடந்த காலங்களில் கசப்பான அனுபவங்கள்தான் ஏற்பட்டு உள்ளது. உலக அளவில்உள்ள தமிழர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிவருகின்றனர். மலேசியா, சிங்கப்பூர், …
-
- 4 replies
- 1.2k views
-
-
கடந்த சில வாரங்களில் மட்டும் 150,000 சிங்களவர்கள் யாழ் வருகை!! ஞானசீலன், யாழ்ப்பாணம் சனி, பிப்ரவரி 6, 2010 20:04 கடந்த சில வாரங்களில் மட்டு தென்னிலங்கையிலிருந்து 150,000 சிங்களவர்கள் யாழ்ப்பாணம் வந்து சென்றுள்ளதாக எமது யாழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: தென்னிலங்கையிலிருந்து வரும் சிங்களவர்களால் கலாச்சார, சுகாதார சீர்கேடுகள் அதிகரித்து வருகின்றது. கடந்த சில வாரங்களில் மட்டும் 150,000 சிங்களவர்கள் யாழ்ப்பாணம் வந்து சென்றுள்ளனர். இவர்களின் வருகையினால் விடுதிகளில் தங்குவதற்கு இடங்கள் இன்றி அவர்கள் தெருக்களிலும் படுத்துறங்கிவிட்டுச் செல்கின்றனர். தெருக்களில் தங்கியிக்கும் போது அவர்கள் அணியும் ஆடைகள், மற…
-
- 8 replies
- 1.1k views
-
-
யாழ்.காங்கேசன்துறை வீதியை விஸ்தரிக்கும் போது 27 இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசாரச் சின்னங்களும் அழிவடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த விடயம் குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள நிபுணர்களுடன் ஆராய்ந்து மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை கொழும்பில் நேற்று நேரில் சந்தித்த இந்துமாமன்றத்தின் தூதுக்குழுவினர் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தினர். இந்தச் சந்திப்பு தொடர்பாக இந்து மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யாழ்.நகரிலிருந்து காங்கேசன்துறை செல்லும் பிரதான வீதியை அகலப்படுத்தி விஸ்தரிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும், இதற்…
-
- 23 replies
- 1.8k views
-
-
யாழில் இருந்து வெளியாகும் உள்ளுர் நாளிதழ் ஒன்றுக்கு யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் அச்சுறுத்தல்? தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உதயன் சுடரொளி ஆசிரியருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகசெய்திகள் வெளியாகியுள்ள நிலையில் யாழப்பாணத்தில் இருந்து வெளியாகும் உள்ளுர் நாளிதழ் ஒன்றுக்கு யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் தென்னிலங்கை வீதியோர வர்த்தகர்களை ஊக்குவிப்பதில் யாழ் மாநகரசபை நிர்வாகம் முழு அளவில் செயற்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் குடாநாட்டில் இருந்து வெளிவரும் உள்ளுர் நாளிதழ் ஒன்று ஆசிரியர் தலையங்கம் ஒன்றை எழுதியிருந்தது. இ…
-
- 7 replies
- 921 views
-
-
அ) மரண தண்டனை வழங்கப்படலாம் ஆ) ஊடகங்களுக்கு அனுமதி இல்லை Gen. Fonseka to be hauled before military court A Military Court will try retired General Sarath Fonseka on several charges of conspiracy, the Sunday Times learns. Such charges are to include an attempt to overthrow the Government and assassinate President Mahinda Rajapaksa. This new move, as against indicting him under the normal laws of the land, came after the CID consulted Attorney General Mohan Peiris, an authoritative legal source said yesterday. Criminal Investigations Department (CID) detectives allege that the actions of Gen. (retd.) Fonseka on the main subjects of their inquiry had th…
-
- 2 replies
- 759 views
-
-
அமெரிக்காவுடன் எமது உறவுகளை சீர் செய்ய உதவுமாறு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மாட்டின் லூதர் கிங் இடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அமெரிக்காவுடன் எமது உறவுகளை சீர் செய்ய உதவுமாறு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மாட்டின் லூதர் கிங் -111 இடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவின் நட்பை பெறுவதற்கு நாம் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் அதனை மேற்கொள்ள நாம் தயாராக உள்ளோம் என மகிந்த மாட்டினிடம் தெரிவித்துள்ளார்.நாம் அமெரிக்காவின் வெளிவிவகார…
-
- 2 replies
- 1.5k views
-
-
அந்தமான் தீவுகளில் இந்தியா சிறீலங்கா கடற்படைகள் ஒத்திகை திகதி: 06.02.2010 // தமிழீழம் அந்தமான் தீவுகளில் இந்தியா பாரிய கடற்படை ஒத்திகை நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது. நேற்று ஆரம்பமான மிலான் 2010 என்ற இந்த கடற்படை ஒத்திகையில் சிறீலங்கா உட்பட 11 நாடுகளின் கடற்படைகள் கலந்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்தின் கடலாதிக்கத்தை தக்கவைப்பதற்கான இந்தியாவின் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த கடற்படை ஒத்திகை நடவடிக்கை யுத்த ஆய்வாளர்களால் நோக்கப்படுகின்றது. http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3368&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51
-
- 16 replies
- 1k views
-
-
உலகத் தமிழர் மாநாடு: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சி.டி. பறிமுதல் கோவையில் நடந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் அமைக்கப்பட்ட அரங்கில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படங்கள் மற்றும் சிடிக்கள் விற்பனைக்கு வைத்திருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவை வ.உ.சி.பூங்கா மைதானத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதையொட்டி, மைதானத்தில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு அரங்குகளை போலீஸார் சனிக்கிழமை சோதனையிட்டனர். அப்போது, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படங்கள் மற்றும் அவரது சிடிக்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதை உதவி ஆணையர் பி.முத்துராஜ் அந்த சிடி க்களை பறிமுதல் செய்தார்.
-
- 0 replies
- 847 views
-
-
வடக்கு கிழக்கில் ஜெனரல் சரத் பொன்சேகா ஈட்டிய வெற்றிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிமை கோர முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்தில் இயங்கிவரும் துணை இராணுவக் குழுக்களின் ஆயுத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் பிரதேச மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கில் இயங்கி வரும் துணை இராணுவ குழுக்களின் செயற்பாடுகளை அரசாங்கம் களைந்திருந்தால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கக் கூடிய சாத்தியம் காணப்பட்டதென அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டதனைப் போன்றே குறித்த ஆயுதக் குழுக்களையும…
-
- 13 replies
- 1.4k views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றிணைந்து செயற்பட்ட எதிரணிக் கட்சிகளின் தேர்தல் கூட்டு எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிளவுபடும் நிலை உருவாகின்றது. எதிரணிக் கட்சிகள் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது அன்னம்சின்னத்தில் போட்டியிடுவதா என்பது குறித்த சர்ச்சை இடம் பெறுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெவிக்கின்றன. ஐ.தே.க. யானைச் சின்னத்தில் போட்டியிடுவதில் மிக உறுதியாக இருக்கின்றது.ஜே.வி.பியை அடுத்த தேர்தலில் கூட்டணியில் இணைத்து கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ள ஐ.தே.க., தேர்தலுக்குப் பிறகு ஜே.வி.பி.யை சேர்த்துக் கொள்ளுவது குறித்து ஆலோசிக்கலாமெனத் தெவித்துள்ளது. எதிரணியின் சரத் பொன்சேகா தரப்பு அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தயார் நிலையிலிருந்தபோதும் அந்த சின்னத்திற்…
-
- 1 reply
- 877 views
-
-
இலங்கைக்கான ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை இடைநிறுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தீர்மானம் இலங்கைக்கான ஜீ.எஸ்.பி வரிச் சலுகைத் திட்டத்தை ரத்து செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சலுகைத் திட்டம் இடை நிறுத்தப்பட்டமை தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் விடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கான முனைப்புக்களை இலங்கை எடுக்கவில்லை என ஐரோப்பிய ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வ…
-
- 10 replies
- 1.2k views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த றாஜபக்சவின் மகன் நாமல் றாஜபக்சவும் போட்டியிடுவார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது. ஜனாதிபதித் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் முகமாக ‘ஜெற்லைனர்’ கப்பலில் நடத்தப்பட்ட விருந்துபசார நிகழ்வில் வைத்தே இந்த முடிவு பகிரங்கப்படுத்தப்பட்டதாகத் தெரிய வருகிறது. இதன்படி ஜனாதிபதியின் சகோதரர் பசில் றாஜபக்ச கம்பஹா மாவட்டத்திலும் நாமல் றாஜபக்ச ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் போட்டியிடுவார்கள் எனத் தெரிய வருகிறது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நாமல் றாஜபக்சவுடன் மகிந்தவின் மூத்த சகோதரர் சமல் றாஜபக்ச மற்றும் நிருபமா றாஜபக்ச ஆகியோரும் போட்டியிடுவார்கள் எனத் தெரியவருகிறது மூலம் : http://www.eelamweb.com
-
- 8 replies
- 846 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மக்கள் அவைகளும் தனித்தனி இரு அரசியல் அமைப்புக்கள் என விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரமாவது: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என்பது தொடர்பான மதியுரைக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் உருவான அறிக்கையை தைத்திருநாளன்று (14.01.2010) மக்கள் கருத்துப் பரிமாற்றத்திற்காக வெளியிட்டிருந்தோம். இக் கருத்துப்பரிமாற்றம் 5.02.2010 வரை இடம் பெற்றபின் மக்கள் கருத்துக்களை உள்வாங்கி பெப்ரவரி 10ம் திகதியளவில் அறிக்கை முழுமைப்படுத்தப்படும் எனவும் அறிவித்திருந்தோம். அதன் தொடர்ச்ச…
-
- 6 replies
- 1.3k views
-
-
-
- 9 replies
- 2.2k views
-
-
http://www.youtube.com/watch?v=DWvnE7QfbMo என்மேல் குற்றம் என்று நிரூபித்தால் தீக்குழிக்கவும் தயார்: பரமேஸ்வரன் என் மீது குறைகூறுபவர்கள் குற்றத்தை நிரூபித்தால் தீக்குழிக்கவும் தயார் எனப் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார் லண்டனில் கடந்த வருடம் மே மாதம் ஊண்ணாவிரம் இருந்த பரமேஸ்வரன் பிரித்தானிய அரசு கொடுத்த வாக்குறி ஒன்றிக்கமைவாக அதைக் கைவிட்டார். இருப்பினும் அவரைப் பற்றி பல விமர்சனங்கள் எழுந்தது. கடந்தவருடம் அவர் உண்ணாவிரதம் இருந்த காலகட்டத்தில் மக்டொனால்ஸ் பேகரைச் சாப்பிட்டார் என்று ஸ்காட்லன் யாட் பொலிசார் தெரிவித்ததாக பல பத்திரிகைகள் செய்திவெளியிட்டிருந்தது. இதனை திட்டவட்டமாக மறுத்த பரமேஸ்வரன், தற்போது "சன்" மற்றும் "மெயில்" பத்திரிகைகளுக்கு எதிராக வழக்கு தொடரப்ப…
-
- 28 replies
- 3.7k views
-
-
- Sri Lanka: Tamils on probation வ்றாண்ஸ் 2424 இன் காணோளி. Six months ago in Sri Lanka, as the last bastion of the Tamil Tigers fell, tens of thousands of civilians who had fled the fighting were detained in refugee camps. Now the Sri Lankan army has given them permission to return home. We went to meet these refugees who have lost everything. REPORTERS By FRANCE 24 -
-
- 2 replies
- 830 views
-
-
புலிகளை அழிக்க உதவிய'விஜயபாகு' இளைஞர் படை பிப்ரவரி 06,2010,00:00 IST கொழும்பு :விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக் கட்ட போரின்போது, இலங்கை ராணுவத்தின் "விஜயபாகு' படைப்பிரிவினர் பாராட்டத்தக்க வகையில் செயல்பட்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை:ராணுவத்தில் "விஜயபாகு' என்ற படைப்பிரிவு உள்ளது. முற்றிலும் இளைஞர்களை கொண்ட இந்த படைப்பிரிவு, முன்பு இலங்கையை ஆண்ட விஜயபாகு மன்னரின் பெயரில் ஏற்படுத்தப்பட்டது. கடந்தாண்டு மே மாதம் நடந்த புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரின் போது, இந்த படைப் பிரிவினர் அசாத்திய திறமையுடன், துணிச்சலாக செயல்பட்டனர். குறிப்பாக, விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் முல்லைத் தீவில் இருந்து தப்பிச் செல்லும் முயற்…
-
- 12 replies
- 2.5k views
-
-
சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் ஜெனரல் பொன்சேகா வெற்றிபெற்றிருந்தால் அவருக்கு ஆதரவான சிங்க படையணியையும், கொமோண்டோ படையணியையும் அழித்து ஆட்சியை கைப்பற்ற சிறப்பு படையணியும், கஜபா படையணியும் தயார் நிலையில் இருந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் பொன்சேகா இராணுவப்புரட்சியை மேற்கொள்ளவுள்ளதாக அரச ஊடகங்கள் தேர்தலின் பின்னர் பல நாட்கள் தொடர்ச்சியாக தலைப்பு செய்திகளை வெளியிட்டு வந்தன. ஆனால் உண்மையில் என்ன நடைபெற்றது என்பது தொடர்பான தகவல்கள் இராணுவத்திற்குள் இருந்து அறியப்பட்டுள்ளது. சிறீலங்காவில் நடைபெறவுள்ள அரச தலைவருக்கான தேர்த…
-
- 9 replies
- 1.3k views
-
-
சனி, பிப்ரவரி 6, 2010 13:35 ரஸ்சியாவிடம் இருந்து 300 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்கள் கொள்வனவு சிறீலங்கா அரசாங்கம் ரஸ்சியாவிடம் இருந்து சுமார் 300 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை கடனடிப்படையில் பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்கா ஐனாதிபதி ரஸ்சியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இவ்அறிவிப்பு ரஸ்சிய உயர் அலுவலர்களால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. pathivu
-
- 5 replies
- 759 views
-
-
யாழ் ஆயர் புதுமாத்தளனுக்குப் பயணம்! போரின் கொடூரங்களால் எமது மக்களின் எதிர்காலமே கேள்விக்குறி! யாழ் மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற புதுமாத்தளன் பகுதிக்கு பயணம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 29ம் திகதி அவர் புதுமாத்தளன் பகுதிக்கு சென்று அங்குள்ள நிலமைகளை அவதானித்து திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயர் தனது இந்த பயணம் குறித்தம் அங்கு தான் மேற்கொண்ட அவதானிப்புகள் குறித்தும் ஊடகங்களுக்கு எந்த தகவலையும் வெளியிடக் கூடாது என்று அரசாங்க தரப்பு கண்டிப்பான உத்தரவை பிறப்பித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அங்கு தான் கண்ட போரின் கொடூரங்களும் அழிவுகளும் எமது மக்களின் எதிகாகாலம் குறித்த நம்பிக்கையீ…
-
- 2 replies
- 640 views
-