ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142935 topics in this forum
-
சிறிலங்காவில் பன்றிக் காய்ச்சல் நோயின் அறிகுறிக்குரிய முதலாவது நபர் கண்டறியப்பட்டுள்ளார். சிறீலங்காவின் தலைநகரை அடுத்துள்ள புறநகர் பகுதியான வத்தளையில் இருந்தே இந்த முதலாவது பன்றிக்காய்ச்சல் நோயாளி கண்டறியப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவில் இருந்து தனது குடும்பத்தினர் ஐவருடன் கொழும்பு சென்றுள்ள 8 அகவையுடைய சிறுவனுக்கே பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவில் ஏற்கனவே பரவிவரும் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற தொற்றும் நோய்களுக்கான முறையான தடுப்பு முறைகள் இன்றி பலர் இறந்துள்ள நிலையில், காற்றினால் பரவும் பன்றிக்காய்ச்சல் அபாயம் அச்சுறுத்தலாக அமையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 70 இற்கும் மேற்பட்ட நாடுகளின் கண்டறியப்பட்டுள்ள இந…
-
- 1 reply
- 1k views
-
-
வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் எமது அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதிப்பதற்கான உடனடித் தேவைகளை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 362 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுமாயின், அது சிறிலங்கா அரசு முகங்கொடுக்கக்கூடிய காத்திரமான அமைப்பாக திகழக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தேசிய சமாதானப்பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஷிஹான் பேரேரா தெரிவித்துள்ளார். இது குறித்து எழுப்பப்பட்ட வினாக்களுக்கு தெளிவு படுத்தும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,'நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுவது தொடர்பான கருத்துக்களின் பிண்ணனியினை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் தமிழர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். இம் மக்களிடையே தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வெகுவாக ஆதரவு காணப்படுகிறது.தற்போது விடுதலைப்புலிகள் இல்லை என சொல்லப்படும் நிலையில், அவர்கள்…
-
- 3 replies
- 2.1k views
-
-
தடுப்புமுகாம்களில் அவுஸ்திரெலியாத் தமிழர்கள் Search goes on for Aussies in Sri Lanka Australia is continuing the search for three NSW residents thought to be in refugee camps in northern Sri Lanka, where Tamils are being kept following the end of the civil war. Human rights groups have labelled the camps a disgrace, urging Sri Lanka to free the 300,000 displaced people being held there. Foreign Minister Stephen Smith put Sri Lanka on notice that it would be judged according to how it dealt with those in the camps. "We think the Sri Lankan government and the Sri Lankan authorities will now be judged on two things - how they manage and deal with th…
-
- 2 replies
- 932 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும், அவருடன் வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மற்றும் தளபதிகளுக்கும் தாம் வீரவணக்கத்தைச் செலுத்துவதாக அறிவித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை, தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் போராட்டத்தின் அடுத்தபடி நிலையாக - தற்போது உருவாக்கப்படவுள்ள 'நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைவதற்கு தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 662 views
-
-
ஊடகத்துறையினர் மீதான தாக்குதல், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் போன்றவற்றை மேற்கொண்டவர்கள் மீது சிறிலங்கா அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்க தூதுவர் பற்றீசியா புற்றனீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளை சிறிலங்கா பூர்த்தி செய்வதுடன், இடம்பெயர்ந்த இலட்சக்கணக்காண மக்களின் தரத்தை உயர்த்துவதற்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும். ஊடகத்துறையினர் மீதான தாக்குதல், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் போன்றவற்றை மேற்கொண்டவர்கள் மீது சிறிலங்கா அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை தவறவிடவேண்டாம் என்பதே சிறிலங்காவுக்கான எமது பிரதான செய்தியாகும். தமிழ் மக்கள் தங்…
-
- 1 reply
- 643 views
-
-
பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் பேட்டி ஈழப் போராட்டம் ஓய்ந்துவிடாது ஈழ விடுதலைப் போராட்டம் ஓயாது; மீண்டும் புலிகள் உருவாகுவார்கள் என்று கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், ‘நக்கீரன்’ இதழுக்கு (ஜூன் 17) அளித்த பேட்டியில் கூறியுள்ளார். பேட்டி விவரம்: ராணுவ லாரிகள் மீதான தாக்குதலுக்குப் பிறகு பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஈழத்தில் தமிழினம் ஒரு பேரழிவிற்கு உட்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டிருக
-
- 0 replies
- 1.4k views
-
-
தோற்றது இந்தியாவின் ராஜதந்திரம்தான்! பழ. நெடுமாறன் இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த போர் முடிவடைந்துவிட்டது. விடுதலைப் புலிகளை முற்றாகத் தோற்கடித்து விட்டோம்'' என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்திய அரசும் அதற்குப் பாராட்டுத் தெரிவித்துவிட்டது. ஆனால் இலங்கைப் போரில் புலிகள் தோற்றார்களா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையைவிட இந்தியாவின் ராஜதந்திரம் வெற்றி பெற்றதா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை அறிவதுதான் முக்கியமானதாகும். 1980-களில் தொடங்கி இன்று வரை இலங்கையில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் இந்துமாக்கடலின் முக்கியக் கடல், வான் பாதைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற…
-
- 0 replies
- 1.1k views
-
-
வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் எமது அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதிப்பதற்கான உடனடித் தேவைகளை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்திருக்கின்றார். இது தொடர்பாக சிறிலங்கா தேர்தல் ஆணையாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) நியமனப் பத்திரத் தாக்கல் நடவடிக்கைகள் தொடர்பாக …
-
- 0 replies
- 413 views
-
-
ஆயிரமாயிரம் ஆண்;டுகளாயினும் செத்து விடாது தாயகக் கனவு - தொல்காப்பியன் - தமிழ் மக்களின் விடுதலைக்காக இராணுவ ரீதியாக நடத்தப்பட்ட போராட்டம்- ஈழத்தமிழர் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பேரழிவுகள்- அவலங்களுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. புலிகளின் மரபு ரீதியான போரிடும் திறனை, சதிச்செயல்கள் மூலம் அரச படைகள் முற்றாகச் சிதைத்திருக்கின்ற நிலையில்- தமக்கு ஏற்பட்ட இராணுவத் தோல்வியை புலிகள் இயக்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. வெற்றியைக் கொண்டாடிய புலிகள் இயக்கம், இன்று ஆயுதப் போராட்டத்தில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக் கொண்டிருப்பது அதன் யதார்த்தமான நிலைப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருப்பதை இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத…
-
- 1 reply
- 1.2k views
-
-
17/06/2009, 12:25 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] நாடு திரும்பிய ராஜபக்ச – நிவாரண நிதி தமிழ் மக்களைச் சேருமா? சிறீலங்கா அரசு மியான்மாருடன் பல வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ளதாக, நாடு திரும்பியுள்ள சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 50,000 அமெரிக்க டொலர் பெறுமதியான உதவித் திட்டத்தைப் பெற்றுக்கொண்டு, தமது அதிபர் நாடு திரும்பியிருப்பதாக, அதிபரது ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களிற்காகவே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற போதிலும், குறிப்பிட்ட நிதியுதவி இடம்பெயர்ந்த தமிழ் மக்களைச் சென்றடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன், சுற்றுலா விசா நடைமுறை மாற்றங்கள், மற்றும் …
-
- 1 reply
- 895 views
-
-
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் 3 இலட்சம் மக்களையும் மீளக்குடியமர்த்தும் அரசாங்கத்தின் 180 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தீர்மானித்துள்ளார். “வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் இடம்பெயர்ந்த எமது மக்களை மீளக்குடியமர்த்த வேண்டிய பொறுப்பு உள்ளது. இந்த நோக்கத்திற்காக அரசாங்கத்தின் செயற்திட்டத்துக்கு நான் ஆதரவு வழங்கவுள்ளேன்” என அவர் கூறினார். எனினும், அரசாங்கத்துடன் இணையப் போவதாக வெளியாகியிருக்கும் செய்திகளை மறுத்திருக்கும் கிஷோர், அரசாங்கத்துடன் தான் இணையப் போவதாக வெளியான தகவல்களில் எந்தவிதமான உண்மையும் இல்லையெனவும், தமி…
-
- 6 replies
- 1.9k views
-
-
future_eelam1.jpg - 1.99MB future_eelam3.jpg - 1.93MB future_eelam.jpg - 1.91MB ஊர்வலங்கட்கு இப்படங்களை பிரதி எடுத்து தாங்கி செல்லலாம் அளவு : A3
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினையில் கரிசனை செலுத்தப்படும் - கனடா தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக தொடர்ந்தும் கரிசனை செலுத்தப்படும் என, கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடிய நாடாhளுமன்றச் செயலர் தீபக் ஒபராயிற்கு கொழும்பு செல்ல வீசா வழங்குவதற்கு, சிறீலங்கா அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. தாரண்மைவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பொப் றேக்கு வீசா வழங்கிய சிறீலங்கா அரசு, கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து, அவரை நாட்டிற்கு நுழைய விடாது திருப்பி அனுப்பியிருந்தது. ஆனால் இதே காலப்பகுதியில் வீசாவிற்கு விண்ணப்பித்த பழமைவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தீபக்கிற்கு வீசா வழங்குவதற்கே, அரசு மறுத்திருக்கின்றது. இருப்பினும் தமது அரசு தமிழ் மக்களின் …
-
- 1 reply
- 953 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசு: வரலாற்றுத் தேவை, சட்டப் பின்னணி, வேலைத் திட்டங்கள், ஆலோசனைக் குழு: உருத்திரகுமாரன் விளக்கம் [செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2009, 06:22 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடர முடியும். எனவேதான் - அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக - தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்கள் தற்பொழுதிற்கான 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசிம் எனக் கருதுகின்றார்கள் என அந்த அரசாங்கத்தை …
-
- 34 replies
- 3.4k views
-
-
Author: Jonathan Miller|Posted: 7:19 pm on 17/06/09 Category: World News Blog | Tags: Sri Lanka/ Tamil Tigers/ Tamils Sinhalese Sri Lankans are so relieved their war is over that most appear blinded by patriotism, drunk on victory and deaf to the clamour from outside their island for investigations into possible war crimes. The country’s pliant media speak with one voice, exhorting their loyal compatriots to celebrate this great triumph over terror. But the only terror I saw there was in the eyes of vanquished Tamils. Those I met were terrified in case they were caught talking to us, constantly looking over their shoulders. A Tamil journalist pulled ou…
-
- 0 replies
- 927 views
-
-
ஈழ விடுதலைக்கான ஐந்தாம் போரை சர்வதேச சூழல்களுக்கு ஏற்ப யுக்திகளை வகுத்து செயல்பட உலக தமிழர்கள் தயாராக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகளின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தலைமையிலான தமிழீழ விடுதலை போராட்டம் நெருக்கடியான சிக்கல்கள் நிறைந்த வரலாற்று சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. இச்சூழலில் இவ்விடுதலை போராட்டத்தை வீரியத்தோடு முன்னெடுத்து செல்ல வேண்டிய பொறுப்பும் கடைமையும் உலக தமிழினத்திருக்கு உள்ளது. குறிப்பாக, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் இந்த வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளனர். இவாறான சூழல்க…
-
- 3 replies
- 1.6k views
-
-
“தமிழீழ மக்களவை” குறித்து ஒரு பார்வை. சூ.யோ.பற்றிமாகரன் தமிழீழ மக்களவையின் இன்றைய முக்கியத்துவம் என்ன? உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் முதன்மைக் கவனத்திற்குரிய பிரச்சினையாகச் சிறிலங்காவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகித் தவிக்கும் வன்னித் தமிழீழ மக்களின் பிரச்சினை விளங்குகிறது. அதீத மனிதாய தேவையில் அந்த மக்கள் உள்ள நிலை அனைவராலும் உணரப்படுகிறது. இந்நிலையில் அம்மக்களுக்கான சர்வதேச சட்டங்களுக்குரிய உதவிகளைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச அரசுக்களுடனும் சர்வதேச அமைப்புக்களுடனும் தாராண்மைவாத ஜனநாயகவழிகளில் போராடும் உரிமை புலத்து தமிழர்களுக்கு உண்டு இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க மக்கள் சக்தி ஒருங்கிணைவதற்குத் தமிழீழ மக்களவை காலத்தின் தேவையாகிறது. அடுத்து தமிழீழ மக்…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்திட்டம் சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப் போராட்டம் இன்று புதியதோர் கட்டத்தை எட்டியுள்ளது. தாயகத்தின் யதார்த்த நிலையினைப் புரிந்துகொண்டு, நமது விடுதலை இலட்சியத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்குத் தேவையான அரசியல் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய காலகட்டம் இது. இதற்காக பொதுக்கொள்கையின்…
-
- 74 replies
- 8k views
-
-
புலம்பெயர்ந்து வாழும் எம் தாயக தேசத்தின் உறவுகளுக்கு வணக்கம்!… ஒரு தாயானவளின் மடியில் படுத்துறங்கிய குழந்தை தன் தாயின் மடியை விட்டு எங்குதான் தவழ்ந்து சென்றாலும் அது தன் தாய் மடியின் வாசத்தையே சுவாசித்துக்கொண்டிருக்கும்
-
- 185 replies
- 13.2k views
-
-
வணக்கம், மிகப்பெரிய மனிதப்பேரவலம் சிறீ லங்கா பயங்கரவாத அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த அகால நேரத்தில் தமிழ் ஜனநாயகம் பேசுகின்ற விளக்குமாறுகள் யாழ் குடாநாட்டில் தமது தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக தேவனந்தா அடிகளார் தமிழ் மக்கள்பால் தான் பேரன்பு கொண்டுள்ளதை நீரூபிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவாமிகள் பொதுமக்களுடன் சாதாரண பேரூந்தில் ஒன்றாக பயணம் செய்ததாகவும் இதைக்கண்ணுற்ற பொதுமக்கள் (?) ஆனந்தக்கண்ணீர் வடித்ததாகவும் கூறப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பேரூந்தை ஓட்டிய சாரதி இரு கண்களிலும் கண்ணீர் ஆறாக ஓட தேவாந்தா சுவாமிகளை கட்டியணைத்து தனது அன்பை தெரிவித்ததாகவும் சொல்லப்படுகின்றது. வாழ்…
-
- 11 replies
- 2k views
-
-
இலங்கையின் போரினால் இடம்பெயர்ந்துள்ள சுமார் மூன்று லட்சம் பேரின் நிலைமை மிகவும் துயரமானதாக உள்ளது எனவும் அவர்கள் விரைவில் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கண்ணிவெடிகள் அகற்றப்படல், வீடுகள் மீண்டும் மீளமைக்கப்படுதல்,, சீர்குலைந்துள்ள உட்கட்டமைப்பைச் சீர்படுத்துதல் போன்ற பணிகள் செய்யப்பட வேண்டியிருந்தாலும் இடம்பெயர்ந்தோரை தங்கள் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பும் காலக்கெடுவை அரசு தள்ளிப்போடுவதற்குரிய காரணம் புரியவில்லை எனவும் ஆயர் கூறியுள்ளார். இந்த இடம்பெயர்ந்த மக்களில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் அரசு அமைத்துள்ள ஆறு முகாம்களில் வாழ்வதாகவும், இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள இவர்க…
-
- 14 replies
- 1.2k views
-
-
இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் சமஷ்டித் தீர்வை ஏற் றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. அதனாலேயே,வெற்றிபெறும் நிலையில் இருந்த சமாதான முயற்சிகள் இறுதிக்கட்டத்தில் முறிவடைந்தன"என்று தெரிவித்திருக்கிறார்நோர்வ
-
- 7 replies
- 1.3k views
-
-
17/06/2009, 12:38 மணி தமிழீழம் [செய்தியாளர் தாயகன்] தடுப்பு முகாமில் 25,000 தமிழர்கள் காணாமல் போயுள்ளனர் - அரசே உறுப்படுத்தியது வன்னியில் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் தொடர்பான முழுமையான விபரங்களை சிறீலங்கா அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. 262,632 பேர் மட்டுமே தடுப்பு முகாம்களில் இருப்பதாகவும், இவர்களில் 134,464 பேர் பெண்கள் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. வவுனியா முகாம்களில் 282,000 இற்கும் மேற்பட்ட மக்கள், அல்லது மூன்று இலட்சம் வரையிலான மக்கள் இருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே அறிவித்திருந்தது. இது பற்றிக் கருத்து வெளியிட்ட சிறீலங்கா அரசாங்கம், கந்த மே மாதம் 11ஆம் நாள், 287,598 பேர் இந்த முகாம்களில் இருந்திருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளது. …
-
- 1 reply
- 735 views
-
-
புதிய இட்லர் இராசபக்சே அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒபாமா போரை நிறுத்தும்படியும் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றும்படியும் வேண்டுகோள் விடுத்தார். பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட், பிரான்சு வெளியுறவுத் துறை அமைச்சர் பெர்னார்டு கவுச்னர் ஆகிய இருவரும் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யுமாறு சிங்கள அரசை வற்புறுத்துவதற்காக நேரடியாக கொழும்பு சென்று பேசினர். ஆனால் இவர்கள் அனைவரின் வேண்டுகோளையும் ஏற்க சிங்கள அரசு மறுத்துவிட்டது. தனது பொருளாதார வளர்ச்சிக்காக மேற்கு நாடுகளை நம்பிக் கிடந்த சிங்கள அரசு அந்நாடுகளின் வேண்டுகோளை மறுக்கும் துணிவினைப் பெற்றது எப்படி? அது மட்டுமல்ல. ஆண்டுதோறும் கனடா நாட்டின் பொருளாதார உதவியை பெற்றுக் க…
-
- 1 reply
- 1.1k views
-