ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
சீமானுடைய எழுர்ச்சிமிகு உரை- தமிழன்ரிவியில் தமிழன்ரிவி
-
- 1 reply
- 1.1k views
-
-
http://www.vakthaa.tv/v/3245/vaiko-visit-t...9.-part-01.html PART 1 http://www.vakthaa.tv/v/3246/vaiko-visit-t...9.-part-02.html PART 2 http://www.vakthaa.tv/v/3247/vaiko-visit-t...at1989.-part-03 PART 3 http://www.vakthaa.tv/v/3251/vaiko-visit-t...9.-part-04.html PART 4 http://www.vakthaa.tv/v/3252/vaiko-visit-t...89-part-05.html PART 5 http://www.vakthaa.tv/v/3253/vaiko-visit-t...89-part-06.html PART 6 http://www.vakthaa.tv/v/3255/vaiko-visit-t...89-part-07.html PART 7 http://www.vakthaa.tv/v/3257/vaiko-visit-t...89-part-08.html PART 8 http://www.vakthaa.tv/v/3258/vaiko-visit…
-
- 0 replies
- 826 views
-
-
சென்னை: நான் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்ததும் அவசரம் அவசரமாக இலங்கைக்கு மருந்துகளை அனுப்பியது மகிழ்ச்சி தருகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை: ஜெயலலிதாவிற்கும், அவருடைய கட்சியினருக்கும் கருணாநிதி மீது தான் கோபம் என்றும், சிங்கள அரசின் மீதோ, மத்திய அரசின் மீதோ அவர்களுக்கு கோபம் இல்லை என்றும் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறி இருக்கிறார். தன்னுடைய பதிலின் மூலம், மத்திய அரசு தவறு செய்து இருக்கிறது என்பதை கருணாநிதி மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளது தெளிவாகிறது. இலங்கை தமிழர்களை அழிப்பதற்கு உறுதுணையாக இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை, கருணாநிதி தட்டிக் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அதை கருணாநிதி செ…
-
- 3 replies
- 821 views
-
-
லண்டன் வாழ் தமிழர்களுக்கு ஒரு அவசர வேன்டுகோள் லண்டன், கரோ பிரதேசத்தில் உள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈழத்தமிழர் விவகாரத்தில் சார்பான நிலைப்பாட்டையோ அல்லது நடவடிக்கைகளையோ எடுப்பதைத் தடுப்பதற்காக , லண்டனில் உள்ள சிங்கள தூதரகம் ஒரு முஸ்லீம் பெண்ணை அப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நெருங்கிப் பழகி சுய விருப்பின் பேரில் சேவை என்ற போர்வைக்குள் தமிழர்க்கெதிரான பிரச்சாரத்தையும் அதன் மூலம் தமிழர்க்குச் சார்பான நிலைப்பாட்டை அப்பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுப்பதைத் தடுக்கவும் முயன்று வருகிறது. சிங்கல இனவழிப்புப் போரை லண்டனில் நியாயப்படுத்தி நடைபெற்ற சில பேரணிகளில் முன்னின்று செயல்ப்பட்ட இந்த முஸ்ளீம் பென் இலங்கை முச்லீம் அமைச்சர் ஒருவரின் உறவினர் என்பதும் குரிப்பிட…
-
- 1 reply
- 1.2k views
-
-
மாத்தறை குண்டுத்தாக்குதல் ஏற்படுத்தும் சந்தேகங்கள்??? சிறீலங்காவின் தென்பகுதியான மாத்தறை கொரகிட்டிய அக்குரஸஸையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சிறீலங்கா மக்கள் மத்தியில் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இலக்கு வைக்கப்பட்ட இடம், மற்றும் இலக்கு வைக்கப்பட்ட அமைச்சர்கள் அரசியல் பிரமுகர்கள் என்பன இந்த சந்தேகத்தினை வலுப்படுத்துவதாக உள்ளன. இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ள சிறீலங்காவின் தபால் தொடர்பு அமைச்சர் மகிந்த விஜயசேகர சிறீலங்காவின் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சிறீலங்காவின் ஆளும் கூட்டமைப்புக்கு தாவிய ஒருவர். அண்மைக் காலங்களாக அவர் சிறீலங்காவின் போர் நடவடிக்கைகள் பற்றி கருத்து கூறுவதில் இருந்து பெரும்பாலும் …
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்காவுக்கு பயணம் செய்யும் பொருட்டு அந்நாட்டின் அனுமதிக்காக காத்திருப்பதாக நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி பிலிப் அல்ஸ்ரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.1k views
-
-
அகதிமுகாம்கள் சர்வதேச தரத்துடன் இல்லாவிட்டால் ஐ.நாவின் உதவிகள் நிறுத்தப்படும் என எச்சரிக்கை பிரசுரித்த திகதி : 11 Mar 2009 முல்லைத்தீவில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வரும் மக்களுக்காக அமைக்கப்படும் முகாம்கள், சர்வதேச தராதரத்துக்கு அமையக்காணப்பட வில்லை என்றால் ஐக்கிய நாடுகளின் நிதி யுதவி கிடைக்காமல் போகலாம் என எச் சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் அகதி முகாம்கள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும்குறிப்பிட்டுள்…
-
- 2 replies
- 1.1k views
-
-
பிரபாகரனை இலங்கை அரசாங்கத்தினால் அசைக்கக்கூட முடியாது மலேசிய ஜனநாயக செயல் கட்சியின் தலைவர் : விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இலங்கை அரசாங்கத்தினால் அசைக்கக்கூட முடியாது என மலேசிய ஜனநாயக செயல் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் பிரபல சட்டத்தரணியுமான கர்பால் சிங் தெரிவித்துள்ளார். பினாங்கில் அண்மையில் இடம்பெற்ற ஈழத் தமிழர்களுக்கான நிதித் திரட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகளை அழித்து விடலாம் என கனவு காண்பதாகவும் பிரபாகரனை மகிந்த ராஜபக்ஷவால் அசைக்கக்கூட முடியாது எனவும் பிரபாகரன் ஓடிவிடமாட்டார். தமிழீழம் மலரும் வரை அவர் போராடுவார் எனவும் தமிழீழம் மலர்ந்தே …
-
- 2 replies
- 1.9k views
-
-
மத்திய அரசில் அங்கம்வகித்து அதன் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் தி.மு.க.வும் -பா.ம.க. வும் தமிழகத்தில் மட்டும் இலங்கைப் பிரச்சினை விஷயத்தில் நீலிக் கண்ணீர் வடிப்பது ஏன்? என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் தேசிய செயலாளருமான டி. ராஜா பேசியிருக்கிறார் என் செய்வது; தி.மு.க. - பா.ம.க. ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதரவு பெற்று ராஜ்ய சபாவுக்குள் நுழைந்தவர்; இதுவும் பேசுவார் -இன்னமும் பேசுவார்! மத்திய அரசுக்கு தி.மு.க. வும், பா.ம.க.வும் ஆதரவு கொடுப்பது பற்றி ஆதங்கப்பட்டுள்ளார். தோழமைக் கட்சிகளுக்கு துரோகம் விளைவிப்பது எப்படி என்பதை இவரிடம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய ஜெயல…
-
- 0 replies
- 863 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்காக நான் உண்ணாவிரதம் மேற்கொண்டதற்கு உலக அளவில் வரவேற்பு இருப்பதைக் கண்டு கருணாநிதி கதிகலங்கி ஆடிப்போயிருக்கிறார்' என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: உண்ணாவிரத மேடையில் இருந்த வாசகங்களை வினாவாக எழுப்பி ஜெயலலிதாவிற்கும் கட்சியினருக்கும் கருணாநிதி மீது தான் கோபம் என்றும் சிங்கள அரசின் மீதோ மத்திய அரசின் மீதோ அவர்களுக்கு கோபம் இல்லை என்றும் கருணாநிதி பதிலளித்திருக்கிறார். இதன் மூலம் மத்திய அரசு தவறு செய்து கொண்டிருக்கிறது என்பதை கருணாநிதி மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளது தெளிவாகிறது. இலங்கைத் தமிழர்களை அழிப்பதற்கு உறுதுணைய…
-
- 0 replies
- 914 views
-
-
சுவிஸ்முரசம் http://www.swissmurasam.net விடுதலைப் புலிகளுடனான போர் இலங்கை அரசாங்கத்துக்கு செலவுமிக்க ஒன்றாக மட்டுமன்றி பெரும் இழப்புகளைக் கொண்டதாகவும் அமைந்திருக்கிறது.இப்போது இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடனான போரில் கொல்லப்படும் மற்றும் காயமடையும் படையினரின் தொகையை வெளியிடுவதில்லை. கடந்த நவம்பர் மாதத்துக்குப் முன்னர் நாடாளுமன்றத்தில் மாதாந்த அவசரகாலச் சட்ட நீடிப்பின் போது பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க முந்திய மாதத்தில் கொல்லப்பட்ட, காயமுற்ற படையினர் மற்றும் பாதி;ப்புக்குள்ளான பொதுமக்களின் எண்ணிக்கை விபரத்தை வெளியிட்டு வந்தார்.ஆனால், போர் உக்கிரமடைந்து படையினர் அதிகளவில் கொல்லப்பட்டு, காயமடையத் தொடங்கியதும் இந்த இழப்புக் கணக்குகளை வெளியிடுகின்ற முறையைத் தவிர…
-
- 0 replies
- 1.5k views
-
-
வெள்ளவத்தை, பஸல்ஸ் ஒழுங்கையில் வைத்து தமிழ் ஆசிரியர் ஒருவர் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெள்ளவத்தைப் பொலிஸிலும் மக்கள் கண்காணிப்புக் குழுவிலும் முறையிட்ப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் கண்காணிப்புக் குழு அமைப்பாளரும் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கையில், இச்சம்பவம் தொடர்பில் தம்மிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். நேற்று மாலை 4.30 மணியளவில வெள்ளவத்தை, பஸல்ஸ் ஒழுங்கையில் தனது வீட்டுக்கு முன்பாக பெண்ணொருவருடன் பேசிக் கொண்டிருந்த போது வெள்ளை வானில் வந்தோர் அவரை பலாத்காரமாக ஏற்றிச் சென்றனர்.ராஜகிரியவிலுள்ள ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 31 வயதான ஆசிரியையே கடத்தப்பட்டவரென மனோ கணேசன் எம்.பி தெ…
-
- 0 replies
- 941 views
-
-
விடுதலைப் புலிகளின் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்றில் 500-க்கும் அதிகமான சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 1000-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலைக்கு தெற்கே அமைந்துள்ள தேவிபுரத்தினுள் ஊடறுப்புத் தாக்குதலை தொடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் சிறீலங்காப் படையினருக்கு பலத்த ஆழணி உயிரிழப்புகளை ஏற்பட்டுத்தியுள்ளனர். விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் 58வது படைப்பிரிவின் 3 கொம்பனிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. கடந்த இரு நாள் நடந்த ஊடறுப்புத் தாக்குதல்களில் 500-க்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 1000-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். ஊடறுப்புப் தாக்குதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளினா…
-
- 1 reply
- 3k views
-
-
சிறிலங்காவில் இனிவரும் காலங்களிள் பொது விழாக்களுக்கான ஏற்பாடுகள் செய்ய முன்னர் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெறப்பட வேண்டும் என மகிந்த அரசாங்கம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 430 views
-
-
சிறிலங்கா படையினரின் பல கிலோ மீற்றர் தூரம் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளதுடன் கிளிநொச்சிக்கு அண்மையாக இருந்த படையினரின் பீரங்கி நிலைகளையும் கைப்பற்றியுள்ளனர் என்று கொழும்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா படையினர் இந்த வாரம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளனர். படையினரின் 58 ஆவது டிவிசன் படையணியின் முன்னணி நிலைகளை தகர்த்தவாறு விடுதலைப் புலிகளின் 600 உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளனர். விடுதலைப் புலிகளின் இந்த பெருமெடுப்பிலான ஊடுருவல் காரணமாக ஏ-9 பாதையின் ஊடான படையினரின் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை மீள கைப்பற்ற முடியாத நிலையில் 58 ஆவத…
-
- 3 replies
- 2.5k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் பாரிய ஆட்லெறி பீரங்கி தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: விசுவமடு பகுதியில் உள்ள தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் அண்மையில் அமைத்திருந்த ஆட்லெறி பீரங்கித் தளத்தை நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர். ஆறு ஆட்லெறி பீரங்கிகளை கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் அவற்றினை அங்…
-
- 0 replies
- 1.9k views
-
-
சிறீலங்காவின் மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் இனவாதிகளின் உதவியுடன் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி இரத்தத்தை பெற்று வன்னியில் காயமடைந்துவரும் படையினருக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இரத்தம் வழங்குவது உடல் நலத்துக்கு நன்கு சிறந்தது என்றும், இரத்தம் வழங்கினால் ஒருமுறை வழங்க 250 ரூபாய் தருவதாகவும் கூறி மக்களிடம் இருந்து குருதியை பெற்றுக்கொள்வதாகவும், பின்னர் பணம் எதுவும் வழங்காமல் அவர்கள் சென்றுவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் இவ்வாறு பணம் வழங்காது குருதியை பெற்றுவிட்டு அக்குழுவினர் சென்றுவிட ஆத்திரமடைந்த குருதிக் கொடையாளர் சிலர் உள்ளுர் அரசியல்வாதி ஒருவரது வீட்டை முற்றுகையிட்டபோது இந்த தகவல் வெளிவந்துள்ளது. அனை…
-
- 1 reply
- 734 views
-
-
பளை, கிளாலி இராணுவ நிலைகள் நோக்கி புலிகள் ஆடடிலெறி தாக்குதல் - படைதரப்பு அதிர்ச்சியில் திகதி: 10.03.2009 // தமிழீழம் // [எல்லாளன்] யாழ்ப்பாணம் பளை, கிளாலி, மற்றும் முகமாலை முன்னரங்க நிலைகளிலுள்ள படை முகாம்களை நோக்கி நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆட்டிலறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஏ-9 வீதியை இலக்குவைத்து நேற்றிரவு ஆரம்பித்த எறிகணைத் தாக்குதல்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல்வரை நீடித்திருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. விடுதலைப் புலிகள் வீசிய எறிகணைகளில் பல சிறீலங்கா படையினரது முகாம்களிலும், முகாம்களிற்கு அருகிலும் வீழ்ந்து வெடித்துள்ளன. விடுதலைப் புலிகள் எறிகணை வீசியபோது சிறீலங்கா படையினரை ஏற்றிய 25 வரையிலான பேரூந்துக…
-
- 9 replies
- 3.1k views
-
-
வீரகேசரி இணையம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற கொலை சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸார் சந்தேகத்தின் பேரிம் இருவரைக் கைது செய்துள்ளனர். சுன்னாகம் பனை-தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் புன்னாலைக்கட்டுவன் கள்ளுத் தவறணைக் கிளை முகாமையாளர் இராசு வாமதேவன் (வயது 47). மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், கிளையைப் பூட்டிவிட்டு இரவில் வரும் போது, வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து ஒரு தொகைப் பணமும் கொள்ளையிடப்பட்டிருந்தது. இந்தக் கொலை சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரி.லுடாவை தலைமையிலான குழுவினர் கடந்த 7ஆம் திகதி சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட சந்தேக நப…
-
- 1 reply
- 1k views
-
-
http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54 இந்தக் காலகட்டத்திற்கு தேவையானது. புலிகள் வீழ்ந்து விட்டனரோ என்ற ஐயத்திலிருக்கும் புலம் பெயர் ஈழத்தமிழர்களுக்கும், கையாலாகதவர்களாக தம்மைக் கருதிக்கொண்டு புலம்பும் தாய்த்தமிழக மக்களுக்கும் ஆழ்ந்த சிந்தனையைத் தோற்றுவிக்க வல்ல கேள்வி அது. இன்றைய உலகத் தமிழர்களின் ஒரே சாத்தியமான குரலான தாய்த்தமிழக மாநில அரசு தனது கடமையைச் சரிவரச் செய்கிறதா என்று ஆராய்வதும் , தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அளவிற்கு அது திறனுடன் இருக்கிறதா என்று பார்ப்பதும் தமிழீழத்திற்கான தேவையை உறுதி செய்ய உதவும்.! *** எல்லோரையும் போல , நானும் கூட கலைஞரைப் பற்றிக் குறைகூறிக்கொண்டுதான் இருக்கிறேன் , ஒரு மாநில முதல்வர் …
-
- 1 reply
- 2.4k views
-
-
தமிழர்களின் எதிர்பார்ப்பும் புலிகளின் காத்திருப்பும்: ஆய்வு [ செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2009, 01:42.03 PM GMT +05:30 ] இன்று உலகத் தமிழர்கள் அனைவரினதும் ஒரே அங்கலாய்ப்பாய் இருப்பது விடுதலைப்புலிகளின் பதில்தாக்குதல் எப்போது? என்பதுதான். எம் உறவுகளை நாளாந்தம் கொன்று குவிக்கும் சிங்களத்துக்கு பதிலடி கொடுக்க துடியாய் துடிக்கிறார்கள். தினந்தினம் தமிழ் உறவுகளின் கதறல்கள், மரண ஓலங்கள்,அவலங்கள், சாவுகள்,பிணங்களைப் பார்த்துப் பார்த்து உணர்வற்று இருந்தவர்கள் கூட போராட்டங்கள், பேரணிகள் என்று எழுச்சி கொள்ளத் தொடங்கி விட்டார்கள். இந்த எழுச்சியுணர்வையுந்தாண்டி அவர்களுக்குள் ஒரு வெறி உருவாகி வருவதை யாருமே உணரவில்லை. ஏன் அவர்கள் கூட அதை உணர்ந்திருப்பார்களா? என்பது சந்தேகம…
-
- 10 replies
- 2.7k views
- 1 follower
-
-
யாழ். மாவட்டத்தில் உள்ள மானிப்பாய் சுதுமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கொழும்பில் காணவில்லை என அவரது தாயார் யாழ். மனித உரிமை அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளார். தர்மலிங்கம் தர்சன் (வயது 26) என்ற இளைஞனே கடந்த சனிக்கிழமை (07.03.09) முதல் காணாமல் போய் உள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. வெளிநாடு செல்வதற்காக கடந்த 20 நாட்களுக்கு முன்னர் கொழும்பு சென்று விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாகவும் கடந்த சனிக்கிழமை மாலை 5 மணிக்குப் பின்னர் அவர் விடுதிக்கு திரும்பவில்லை என்றும் தயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இவர் கடத்தப்பட்டடிருக்கலாம் எனவும் அவர் தொடர்பான தகவல் எதுவும் இதுவரை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் தாயார் கூறுகின்றார். இந்த முறைப்பாட்டை யாழ். மனித உரிமை …
-
- 0 replies
- 399 views
-
-
"நான் இந்த கடல் பகுதியில்தான் இருக்கின்றேன். அப்படி ஒரு தாக்குதலை நான் காணவில்லை. கப்பல் திருகோணமலை நோக்கிச் சென்றுள்ளதாக நாங்கள் அறிகின்றோம்" என்று புதுமாத்தளன் பகுதியில் இருக்கும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பார்த்தீபன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் கடற்பரப்புக்கு வந்த உணவுக் கப்பல் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளமை குறித்து லண்டன் பிபிசி தமிழோசைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பிபிசி தமிழோசையில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை (09.03.09) ஒலிபரப்பாகிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையின் வடக்கே வன்னிப் பகுதிக்கு கப்பல் மூலமா…
-
- 0 replies
- 336 views
-
-
ஐரோப்பா வாழ் தமிழ் மக்களால் பெல்ஜியத்தின் தலைநகர் பிறசல்சில் அமைந்துள்ள ஜரோப்பிய நாடாளுமன்றம் முன்பாக "உரிமைப் போர்" பேரணியும் பொதுக்கூட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது. ஐரோப்பா வாழ் தமிழ் இளையோரின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை (16.03.09) முற்பகல் 10:00 மணி தொடக்கம் பிற்பகல் 5:00 மணி வரை இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்திடம் தமிழீழ மக்களின் கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தையும், தன்னாட்சி உரிமையையும், தமிழீழ மக்களின் அரசியல் தலைமையான விடுதலைப் புலி…
-
- 0 replies
- 407 views
-
-
மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரச கொடாப்பிட்டியவில் இடம்பெற்ற அமைச்சர்கள் மீதான குண்டுத் தாக்குதலை அடுத்து அங்கு இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையில் நூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் மீது தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. மாத்தறை மாவட்டத்தில் தமிழர்கள் வாழும் கிராமங்கள் தோட்டங்களில் கடுமையான தேடுதல் சோதனை நடவடிக்கைள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வரை நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சோதனை நடவடிக்கையில் 17 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மாத்தறை அக்குரச காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பிரதி அமைச்சர் இராதாகிருஸ்ணனிடம் முறையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளைய…
-
- 0 replies
- 394 views
-