ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
அவுஸ்திரேலியாவின் லா ட்ரொப் பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் சிசிர ஜயசூரிய ஏ.பி.சி தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி!
-
- 1 reply
- 1.3k views
-
-
ஊடகவியலாளர்கள் பணிபுரிவதற்கு உலகிலேயே மோசமான இடமாக இலங்கை GTN ற்காக – சுனந்த தேசப்பிரிய: ஊடகவியலாளர்கள் பணிபுரிவதற்கு உலகிலேயே மோசமான இடமாக இலங்கை விளங்குகிறது. கடந்த மூன்று வருடத்துள் இலங்கையில் ஊடகம் எதிர்பார்த்திருக்காத நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடத்தப்பட்டிருக்கிறார்கள், தாக்கப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டிருக்கிறார்கள். ஊடக நிறுவனங்கள் பலாத்காரமாக மூடவைக்கப்பட்டுள்ளன. தீ வைக்கப்பட்டுள்ளன. தேசத்திறிகு எதிரானவை என அடையாளமிடப்பட்டுள்ளன. 2006ஆம் ஆண்டிலிருந்து 18 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மிக அண்மைய சம்பவமாக 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி…
-
- 0 replies
- 579 views
-
-
தொடர் தாக்குதல்களும் வெளிவராத உண்மைகளும் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் வன்னிப் பகுதியில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை எவ்வளவு? இதற்கான விடையை நாம் கூறும் முன்னர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து விடும். அந்தளவிற்கு ஒவ்வொரு கணமும் வன்னியில் கொல்லப்படும் மற்றும் காயப்படும் மக்களின் எண்ணிக்கைகள் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து செல்கின்றன. தினமும் மேற்கொள்ளப்படும் பல நூற்றுக்கணக்கான எறிகணை வீச்சுகள் மற்றும் வான் தாக்குதல்களால் பொதுமக்கள் பேரழிவுகளை சந்தித்து வருகின்றனர். புதுக்குடியிருப்பு வைத்தியசாலை பல தடவைகள் வான்குண்டு மற்றும் எறிகணை தாக்குதல்களுக்கு உள்ளாகிய நிலையில் அது தற்போது கைவிடப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் கொழும்பு வதிவிடப் பேச்சாளர் கோ…
-
- 0 replies
- 1.4k views
-
-
இறுதியில் மேற்குலக இணைத்தலைமை நாடுகள், இலங்கைப் பிரச்சினையில் தமது நிலைப்பாட்டை தெரிவித்து விட்டன. புலிகளை சரணடையக் கோரியதன் மூலம், தமிழீழ போராட்டம் இதற்கு மேலும் நகர முடியாது என்றும், அதற்கு தமது ஆதரவு கிடையாது என்றும் தெளிவுபடுத்தி விட்டன. ஒரு விடுதலைப் போராட்டம் தொடர வேண்டுமா, அல்லது நிறுத்த வேண்டுமா என்பதை, சம்பந்தப்பட்ட மக்கள் முடிவெடுக்க சுதந்திரமுண்டு. இப்படித்தான் செய்யவேண்டும் என்று உத்தரவிடுவது, ஏகாதிபத்திய தலையீட்டையே குறிக்கின்றது. எனினும் ஆரம்பத்தில் இந்தியாவையும், பின்னர் மேற்குலக நாடுகளையும் நம்பியிருந்த ஈழப் போராட்டம், நெருக்கடிக்குள் சிக்கிய நிலையிலும், தமிழர்கள் மத்தியில் சர்வதேசம் குறித்த மாயை அகல இன்னும் சில காலமெடுக்கலாம். "இலங்கைப் பிரச்சினையை இ…
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தமிழ்செய்திக்கு வழங்கிய நேயர்காணலில், இலங்கையில் மோசமான இனப்படுகொலை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும்,இதற்கு இந்தியா உட்பட பல நாடுகள் துணை போவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் எழுந்துள்ள எழுச்சி தமிழர்களுக்கு சுயாட்சி கிடைக்கும் வரை தொடர வேண்டும் என செ.கஜேந்திரன் மேலும் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு வழங்கிய முழுமையான பேட்டி: கேள்வி: இலங்கையின் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராணுவ நடவடிக்கை பற்றி? பதில்: இலங்கையில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருப்பது மோசமான இனப்படுகொலை. இதனைப் பார்த்துக் கொண்டு உலகம் அமைதியாக உள்ளது.…
-
- 0 replies
- 1.3k views
-
-
எரிக் சோல்கைம் அவர்களுக்கு உங்கள் கண்டனங்களை அனுப்பி வைக்கலாம். தொலைபேசி: +47 22 24 39 00 மின்னஞ்சல் முகவரி: utviklingsminister@mfa.no முகவரி: Utviklingsministeren Pb. 8114 Dep. 0032 Oslo, Norge
-
- 5 replies
- 1.9k views
- 1 follower
-
-
ICRC please don't leave from war operated areas in vanni send your request by E-mail,Fax,Telephone ICRC helping civilians in war affected areas in vanni,the srilankan defence ministry ordered ICRC to leave the war operating areas immediately as a part of their ongoing genocide of tamils,if ICRC left from the vanni,numbers of civilian casualties will be increase,nobody will know the real casualties and hospital bombing in future.so kindly show your attention and ask ICRC to continue their services in war operated areas. contact details are follows. ICRC Colombo Tel.: (+9411) 250 33 46 / 250 33 47 Head of delegation: Mr CASTELLA Paul Media contact person: …
-
- 1 reply
- 1k views
-
-
மட்டக்களப்பு மாவட்ட மாநகர சபை மேயர் சிவகீத்தா காவல்கடமைக்காக அமர்த்தப்பட்ட காவலருடன் கொண்ட பாலியல் துஸ்ப்பிரயோகத்தினால் காவல்துறை அதிகாரி வாகரை காவல்நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சிவகீத்தாவின் கணவர் பிரபாகரன் எந்நாளும் மதுபோதையில் மயங்குவதால் கணவருடன் விருப்பமற்ற நிலையில் அவரின் பாதுகாப்புக் கடமைக்காக வழங்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரியொருவருடன் விருப்பமடைந்து சிவகீத்தாவின் படுக்கையறைக்கு அழைத்து தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனை கண்ட கணவர் ஆத்திரமடைந்து தான் வைத்திருந்த துப்பாக்கியால் இருவருக்கும் சுட்ட பொழுது இருவரும் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர். இதனால் சிவகீத்தாவுடன் தகாத முறையி…
-
- 7 replies
- 2.1k views
-
-
இதுவரை காலமும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்புச் செய்யப்பட்டு வந்த பி.பி.சி. சிங்கள சேவையின் சந்தேசய மற்றும் பி.பி.சியின் தமிழோசை நிகழ்ச்சிகள் இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் பி.பி.சி. நிர்வாகத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த ஒலிபரப்புத் தடைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் குறுகிய அலைவரிசையில் பி.பி.சியின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்புச் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது. http://www.paristamil.com/tamilnews/?p=27304
-
- 7 replies
- 971 views
-
-
சிங்கள நிருபர்களே தங்களின் பெயரை வெளியிடவேண்டாம் என கேட்கும் அளவுக்கு பத்திரிகாதர்மம் இலங்கையில் நிலவுகிறது.
-
- 0 replies
- 850 views
-
-
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க உத்தியோகஸ்தர்கள் போன்றோரை கொலை செய்த ஒட்டுக் குழுவின் தலைவர் பிள்ளையானின் கைகூலியான ஷரண் சுவிஸ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொழும்பு மாநகரில் சர்வதேச பண்டாரநாயக்க ஞாபகாத்த மண்டபத்தில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத், கொழும்பு புறக்கோட்டையில் புகையிரத நிலையத்தில் வைத்து கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இரத்தினபுரி பகுதியில் வீதியோரமாக வீசப்பட்ட இரு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க உத்தியோகஸ்தர்களின் சடலங்கள் மீட்க்கப்பட்டன. இக்கொலைகள் தொடர்பாக காவல்துறையின் விசாரணை முடுக்கிவிடப்பட்ட நிலையில் ஒட்டுக்குழுவின் தலைவரின் கைகூலி…
-
- 1 reply
- 1.3k views
-
-
வன்னி போர்க்களம் - கேள்விகள் பதில்களாக – பதில்கள் கேள்விகளாக வன்னியில் விசேடமாகப் புதுக்குடியிருப்பைச் சுற்றிய பிரதேசங்களில் குறிப்பாக சாலையில் நடந்தது நடப்பது நடக்கப் போவது என்ன என்பது குறித்து இலங்கையிலும் புலம்பெயர்வாழ் தேசங்களிலும் உள்நாட்டு சர்வதேச ராஜதந்திர மட்டங்களிலும் பெரும் கேள்விக்குரிய விடயமாகி பலருடைய சிந்தனைகளையும் குடைந்து கொண்டிக்கின்றது. உண்மையில் சுயாதீன ஊடகவிலாளர்கள் நடமாட முடியாத, உள்நாட்டு சர்வதேச நடுநிலையாளர்கள் எவரும் உலாவ முடியாத எந்த செய்திகளையுமே பெற்றுக் கொள்ள முடியாத போர்க்களமாக வன்னி மாறிவிட்டது. கடந்த கால யுத்தங்களில் போரில் ஈடுபட்ட இரு தரப்பினரும் தமது தரப்புகளை திருப்திப்படுத்துகின்ற, போர் நிலவர செய்திகளை உடனுக்குடன் வெள…
-
- 0 replies
- 1.4k views
-
-
வன்னிப் பிரதேசத்திலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வரும் சிவிலியன்களது விபரங்களை வெளியிடுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தங்களது சொந்தங்கள் எவ்வாறு இருக்கின்றார்கள் என்பது குறித்து வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் தன்னிடம் கேள்வி எழுப்பி வருவதாக ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து தப்பிவரும் தமிழ்ச் சிவிலியன்களை அவர்களது உறவினர்களுடன் இணைய அனுமதியளிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். http://www.paristamil.com/tamilnews/?p=27299
-
- 4 replies
- 751 views
-
-
“Stop Genocide” Bruce Fein அவர்களின் உரை ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 3 replies
- 1.1k views
-
-
இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து வன்னி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது ஆயிரக்கணக்கான எறிகணைகளையும் கிளஸ்ரர் குண்டுகளையும் வீசி பள்ளிகள் வைத்தியசாலைகள் என்று பொதுமக்கள் காணப்பட்ட இடமெல்லாம் தாக்குதல் நடத்தி பொதுமக்களைக் கொன்றுவிட்டு அவற்றை புலிகளின் இலக்காக பிரச்சாரம் செய்து வந்த இராணுவத்தைக் கண்டிக்க வழியில்லாதவர்கள்.. இன்று இராணுவத்தால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின் பிரகாரம்.. அது வெளியிட்ட காணொளிப்படங்களின் பிரகாரமும் விடுதலைப்புலிகள் மீது கண்டனங்களை அமெரிக்கா என்ற வல்லாதிக்க சக்தியும் அதற்கு வால் பிடிக்கும் ஐநாவும் விட்டுள்ளன. வன்னியில் இன்று இராணுவத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக இராணுவம் பொதுமக்கள் மீது கைக்குண்டுகளை வீசித் தாக்கிவி…
-
- 21 replies
- 3.8k views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினையில் ஐ.நா.சபை உடனடியாக தலையிட வேண்டும். அப்போதுதான் போர் நிறுத்தம் கொண்டுவரமுடியும். இதற்காக ஐ.நா.சபை அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு கோவையில் வக்கீல்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் இலங்கை தமிழ் எம்.பி சிறீகந்தா பேசினார். http://www.paristamil.com/tamilnews/?p=27293
-
- 0 replies
- 804 views
-
-
09/02/2009, 15:50 [ கொழும்பு நிருபர் மயூரன் ] வெளிநாட்டு தூதுவர்களின் வன்னி செல்வதற்கான கோரிக்கை நிராகரிப்பு வன்னியில் உள்ள மக்களின் அவலங்களை அறிவதற்காக இலங்கைக்கான டென்மார்க் மற்றும் சுவிசர்லாந்து தூதுவர்களின் வன்னி செல்வதற்காக கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வெளிநாட்டு தூதுவர்கள வன்னியில் மக்களின் அவலங்களை கண்டறிவதற்கும் தற்போதைய சூழ்நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கில் அங்கு செல்வதற்கான அனுமதியை கோரியிருந்தனர். இதேவேளை வன்னிக்கு செல்லும் நோக்கில் சர்வதேச நிறுவனங்களினால் அனுப்பிய சர்வதேச ஊடகவியலாளர் குழுவினர் கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்கியுள்ளனர். இவர்களின் வன்னி செல்வதற்கான கோரிக்கைய…
-
- 1 reply
- 996 views
-
-
சிறிலங்காவின் போரை இந்தியா வழிநடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், தற்போது இந்தியாவில் இருந்து ஆயுதங்கள் காங்கேசன்துறை வழியாக அனுப்பப்படுவதாக தெரியவந்துள்ளது. சிங்களப் படையினர் தொடர்ச்சியான தாக்குதலில் ஈடுபட்டிருக்கும் நிலையில் உடனடி ஆயுதத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவில் இருந்து கடல் வழியாக காங்கேசன்துறைமுகத்தை வந்தடையும் ஆயுதங்கள், வேகமாக வன்னிக் களமுனைக்கு அனுப்பப்படுவதாக தெரியவந்திருக்கின்றது. இந்தியாவில் இருந்து ஆயுதங்கள் காங்கேசன்துறைமுகத்திற்கு தொடர்ச்சியாக வந்திறக்கிக் கொண்டிருப்பதாகக் அங்கிருந்து வரும் நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வந்திறங்கிய ஆயுதங்கள் நேரடியாக வன்னிக் களமுனையின் முன்னணிக்கு கொண்டு செ…
-
- 0 replies
- 1.4k views
-
-
இன்னும் சில வாரங்களுக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தாம் இணையவுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தார். இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் தற்போது பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அவருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது மேலும் தெரிவித்தாவது, புதிது புதிதாகக் கட்சிகளை ஆரம்பிப்பதனை விட தேசியக் கடக்சி ஒன்றுடன் இணைந்து செயற்படுவதே மேல். அதன் மூலம் மக்களுக்குச் சேவை செய்ய முடியும். அதற்குப் பொருத்தமானதொரு கட்சிதான் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நாம் இணைவதன் மூலம் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தி அரசாங்கத்தின் ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு விரைவில் அதிகாரப் பகிர்வு திட்டமொன்று முன்வைக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார். சிவிலியன் பாதுகாப்பு மற்றும் சமூக நலனைக் கருத்திற் கொண்டதோர் ஜனநாயக முறையிலான தீர்வுத் திட்டமொன்று விரைவில் முன்வைக்கப்படவுள்ளது. டென்மார்க்கின் வெளிவிவகார அமைச்சர் பார் ஸ்டிக் மொலரிடம் அமைச்சர் ரோஹித்த இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக முறையின் அடிப்படையில் மத்திய அரசின் அதிகாரங்கள் பரவாலக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.paristamil.com/tamilnews/?p=27245
-
- 1 reply
- 738 views
-
-
வணக்கம் உறவுகளே...!!!! ஒரு முக்கியமான கால கட்டத்தில் வரலாற்று கடமையை செய்ய வேண்டிய தருணத்தில் நிற்கிறோம். புலம்பெயர் தமிழர்களின் கைகளில் முக்கியமான பணி ஒன்று தமிழீழ தாயகத்தில் வாழும் எங்கள் உறவுகளால் தரப்பட்டிருக்கிறது. இன்று ஒரு பலஸ்தீனியன் செய்யாத புரட்சியை,இஸ்ரேலியன் செய்திராத சர்வதேச பரப்புரையை,ஒரு காசா நாட்டுக்காரன் கண்டிராத இழப்பை எல்லாம் ஈழத்தமிழன் நிலத்திலும் புலத்திலும் அனுபவித்தும் செய்தும் காட்டியாகிவிட்டது. கடந்த 3வாரமாக சர்வதேச அளவில் வரலாற்றில் எந்த ஒரு இனமும் செய்திராத மக்கள் புரட்சியை புலம்பெயர் தமிழர்கள் நிகழ்த்தி சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டியிருக்கிறார்கள்.இதற்கு
-
- 4 replies
- 1.4k views
-
-
வெலிவேரிய பிரதேசத்தில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கோஷ்டி ஒன்றினைச் சுற்றி வளைத்துப் பிடித்த பொதுமக்கள் அவர்களைப் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். வெலிவேரிய பொலிசார் இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது இந்தப் புதையல் தோண்டும் கோஷ்டியின் தலைவராகச் செயற்பட்டவர் மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய என்பது தெரிய வந்துள்ளது. கடந்த (07) இரவு முழுவதும் பொலிசாரின் விசாரணைக்குட்படுத்தப்பட்ட மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய உட்பட அனைவரும்; இன்று (08) நீதவான்; முன்னிலையில்; ஆஜர்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். ரணவிரு விருது பெற்ற மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய கிழக்கு ம…
-
- 1 reply
- 1.1k views
-
-
அம்பாறை மாவட்டம் பொத்துவில் -பாணம ஹெலவ- காட்டு பகுதியில் உள்ள வீதியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 2 விசேட அதிரடிப்படையினர், உழவு இயந்திர சாரதி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் மேலும் ஒரு சிவிலியன் கொல்லப்பட்டதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் மறைத்து வைத்திருந்த கிளைமோர் குண்டே வெடிக்க செய்யப்பட்டுள்ளது. இன்று காலை இவர்கள் உழவு இயந்திரத்தில் பயணித்து கொண்டிருந்த போது இந்த தாக்குதல் சமபவம் இடம்பெற்றுள்ளது. பொத்துவில் பிரதேசத்தில் இருந்து 24 கிலோ மீற்றர் தொலைவில் இந்த இடம்பெற்றுள்ளதாகவும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 1 reply
- 592 views
-
-
விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை இலங்கை அரசாங்கப் படைகள் அறிந்துகொள்ள வேண்டுமெனத் தெரிவித்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி, பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல்கள் நடத்தப்படக் கூடாது எனக் கூறியுள்ளார். இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுவரும் மோதல்களில் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என இந்தியா, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 1 reply
- 1.4k views
-
-
தர்மபுரம் பகுதியில் இராணுவ இலக்கை கரும்புலிப் போராளி தாக்கியதில் பல சிறீலங்கா பெண் படையினர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இதன் போது இராணுவம் கண்டபடிக்கு தாக்கி இராணுவத்திடம் அடைக்கலம் தேடிய மக்களைக் கொன்றுள்ளது. அப்படிக் கொன்றுவிட்டு.. கரும்புலித்தாக்குதலில் மக்களும் பலி என்று கட்டுக்கதை பரப்பி வருகிறது. Many civilians, female soldiers among dead The army said that a large number of civilians including several female soldiers were killed and over 60 others injured due to the suicide blast in, Dharmapuram, Visvamadu. The bomber exploded herself when a female soldier tried to body check her. டெயிலிமிரர்.கொம்
-
- 11 replies
- 3k views
-