ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143653 topics in this forum
-
முல்லைத்தீவு - பரந்து விரிந்த உலகின் கவனம் நிலைகுத்தி நிற்கும் பிரதேசம்: வடக்கே காங்கேசன்துறை முதல் கிழக்கே பொத்துவில் வரை விரிந்து பரந்த தமிழீழ தனியரசுக்கான போரை முடிவுறுத்துவதற்கான இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் புளகாங்கித அறிவிப்பை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. கள நிலமைகள் குறித்து பக்கச்சார்பற்ற அறிக்கைகள் கிடைக்காதமை ஊகங்களுக்கும் அனுமானங்களுக்கும் வழிசமைத்து விடுகின்றன. தோற்கடிக்க முடியாத போராட்ட சக்தியாக தமிழ்த் தேசிய ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்ட புலிகள் எல்லாவற்றையும் இழந்து விட்டு போர்க்களத்தில் நின்ற இராவணனை ஒத்த நிலையில் இருப்பதாக, இராமாயணத்தில் இராமனுடன் சேர்ந்ததால் முதலில் உயிரிரையும் பின்னர் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தையும்…
-
- 1 reply
- 1.1k views
-
-
முல்லைத்தீவு நகரை கைப்பற்றியதாக ராணுவம் அறிவிப்பு இராணுவத்தின் 59வது படைப்பிரிவு இன்று காலை முல்லைத்தீவு நகரத்தினை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் அறிவித்துள்ளார். 13 வருடங்களின் பின்னர் முல்லைத்தீவு நகரம் இராணுவக்கட்டுப்பாட்டினுள் வந்ததாக அமைச்சர் கெகெலிய ரம்புக்வல்ல தெரிவித்துள்ளார். - அத தெரண.
-
- 54 replies
- 15.2k views
-
-
வந்தார் மேனன் நொந்தது தமிழர் மனம் வீரகேசரி வாரவெளியீடு 1/26/2009 4:36:38 PM - வடக்கில் இடம்பெறும் யுத்தத்தை நிறுத்தும் வகையில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக தான் இலங்கை வரவில்லையென்று கடந்த வாரம் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளரும் இந்தியாவுக்கான முன்னாள் உயர் ஸ்தானிகருமான சிவ்சங்கர் மேனன் தெரிவித்திருந்தது ஆச்சரியத்தை அளிப்பதாகத் தெரியவில்லை. சிவ்சங்கர் மேனனின் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகல்லாகமவும், சிவ்சங்கர் மேனன் வடபகுதி யுத்தம் குறித்தோ யுத்த நிறுத்தம் குறித்தோ இலங்கை அரசுடன் பேச வில்லையென்று தெரிவித்திருந்தார்.அவர் இலங்கைக்குப் புறப்படும் முன்னரே என்ன நோக்கத்துக்காக இங்கு வருகிறார் என…
-
- 0 replies
- 360 views
-
-
ஊடக அடக்குமுறையை தடுக்கும் எண்ணம் உண்டா.. [26 ஜனவரி 2009, திங்கட்கிழமை 12:55 மு.ப இலங்கை] வன்முறைக்கலாசாரத்தின் முற்றுகைக்குள் சிக்கியிருக்கின்றது இலங்கையின் ஊடகத்துறை. அரசின் போரியல் வெறிப்போக்குக்கு ஒத்து ஊதாத அனைத்து ஊடகங்களும் பயங்கரவாத அமைப்புகளாக அரசின் உயர்மட்டத்தினால் பச்சையாக விமர்சிக்கப்படும் பேராபத்து நிலைமை ஏற்பட்டிருப்பது வெளிப்படையான அம்சம். அமெரிக்காவில் ஜனாதிபதி பராக் ஹுசைன் ஒபாமாவின் புதிய அரசநிர்வாகம் பொறுப்பேற்ற கையோடு இலங்கை விவகாரத்தை ஒட்டி அதன் சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய அறிக்கை, இலங்கையில் செத்துக்கொண்டிருக்கும் ஊடக சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க அரசின் கரிசனையை வெளிப்படுத்தும் விவகாரமாக அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது. இலங்கைய…
-
- 0 replies
- 436 views
-
-
யாழ் பல்கலைக்கழகத்தின் அதிகாரி ஒருவர் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தினது ஆனந்த குமாரசாமி மாணவர் விடுதியினது வாடனாகக் கடமையாற்றும் 41 வயதான எம் பிரேமச்சந்திரன் என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகிப் படுகாயமடைந்துள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 1 reply
- 1.2k views
-
-
சிலருக்கு குழப்பமாக உள்ளதால் இங்கும் அறிவிக்கப்படுகின்றது. மக்களின் அவலங்கள் எனத் தனியாக ஒரு பிரிவு உருவாக்கப்பட்டு, அதுவே முகப்பிலும் காண்பிக்கப்படுகின்றது. மக்களின் அவலங்கள் தொடர்பான செய்திகளை அங்கு இணையுங்கள். http://www.yarl.com/forum3/index.php?showforum=144
-
- 0 replies
- 672 views
-
-
ஈழத்தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரில் சிங்களப் பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் !! ஜனவரி 26 இந்தியக் குடிரயரசு தினத்தில் அதிகார வர்க்க அமைப்புக்கள் குடியரசு மகாமித்யத்தை ஓதிக்கொண்டிருப்பது வழக்கம். இந்நாளில் ஈழத்திற்காக இந்திய அரசு செய்யும் துரோகத்தை அம்பலப்படுத்த எமது புரட்சிகர அமைப்புக்கள் முடிவு செய்தன. நேற்று மாநாடு முடிந்த கையோடு வெளியூரிலிருந்து மற்றும் உள்ளூர் தோழர்கள் ஆங்காங்கே தங்கி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தயாராக இருந்தனர். இன்று காலையில் சென்னை நகர் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை விளக்கி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையின் முன் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் என்பதை சுவ…
-
- 5 replies
- 2.4k views
-
-
இந்தியாவும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உற்பட துணை அங்கத்துவ நாடுகளும் போருக்கு பின்னல் இருந்து எம்மை ஊக்குவிக்கின்றன - இலங்கை ! Sri Lanka said Friday its military offensive against the Tamil Tigers was supported by India and the Co-Chairs to the donor community – US, EU, Norway and Japan. Foreign Minister Rohitha Bogollagama said the Co-Chairs and Sri Lanka had a common objective of a speedy solution to the conflict. Meanwhile, Japan’s special envoy Yashushi Akashi, was quoted by the Defence Ministry as “expressing satisfaction at the efforts by the Sri Lanka Government to safeguard the civilian population in the north.” Almost a hundred civilians died this week i…
-
- 0 replies
- 595 views
-
-
சார்லஸ் ஆண்டனி... வயது 23... இந்த இரண்டு விவரங்களைத் தவிர பிரபா கரனின் மூத்த மகனைப் பற்றிய சமீபத்திய வேறெந்தத் தகவலும் மீடியாக்களுக்கோ சிங்கள ராணுவத்துக்கோ இன்றுவரை கிடைக்கவில்லை. ஆனால், தற்போது புலிகளின் விமானப் படைத் தலைவராக இருக்கும் சார்லஸ் ஆண்டனியின் திறமைகளைப் பற்றிய செய்திகள் மட்டும் மெள்ள மெள்ளக் கசிந்து சிங்கள ராணுவத் தினரின் வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக, கடந்த 21-ம் தேதி இரவு சார்லஸ் ஆண்டனி மிகப் பெரிய விமானத் தாக்குதலை கொழும்பில் நடத்தப் போகிறார் என்று கிளம்பிய செய்தி, சிங்கள அரசையே கிடுகிடுக்க வைத்தது.விமானப் படையில் சகல சக்தி களையும் சார்லஸ் ஆண்டனியின் படையணியினர் பெற்றிருக்கிறார்கள் என்பதை உறுதியாக உணர்ந்து வ…
-
- 19 replies
- 9.8k views
-
-
இன்னும் இரு வாரங்களுக்குள் முல்லைத்தீவு முழுவதையும் இராணுவத்தினர் கைப்பற்றுவர் என்று பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தான். நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்றைய எம(ன)து மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிகரான எந்தவொரு அரசியல் தலைவர்களும் இலங்கையில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில் நேற்று நுவரெலியா புதிய நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த 1983 ஜூலை 2…
-
- 7 replies
- 2.6k views
-
-
மகிந்தவின் படை நடவடிக்கையை தடுப்பதில்லை என மன்மோகன் உறுதி - றொயிற்றர்ஸ் (reuters) திங்கள், 26 ஜனவரி 2009, 08:09 மணி தமிழீழம் [செய்தியாளர் தாயகன்] சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் படை நடவடிக்கையை தடுப்பதில்லை என்பதில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உறுதியாக இருப்பதாக, அனைத்துலக செய்தி ஊடகமான றொயிற்றர்ஸ் (reuters) தகவல் வெளியிட்டுள்ளது. "சிறீலங்காவால் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படுவார்களா?" என்ற தலைப்பில் வன்னியின் தற்போதைய நிலை பற்றியும், விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் C. Bryson Hull எழுதியுள்ள ஆய்வுப்பத்தியில், இலங்கை போர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு பற்றி அவர் அம்பலப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் எந்தவித அரசியல் அழுத்தம் எழுந்தாலும்…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஆன்மீகத் தலைவர் ரவி சங்கர் இலங்கை அகதிகளை சந்திக்க உள்ளார்: globaltamilnews.com வாழும் கலைப் பயிற்சி நிலையத்தின் தலைவரும், முன்னணி ஆன்மீகத் தலைவர்களில் ஒருவருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்றைய தினம் இலங்கை அகதிகளை சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மண்டபம் அகதி முகாமில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அண்மைக்காலமாக இலங்கை அகதிகள் பெருமளவில் தமிழகத்தில் சரணாகதியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் யுத்த நிலவரம், மற்றும் அகதிகளின் நிலைமை குறித்து நேரில் கண்டறியும் நோக்கில்; ஆன்மீகத் தலைவர் மண்டபத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.
-
- 1 reply
- 1.2k views
-
-
உதவி கேட்டு ஓலமிடும் மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவதிலிருந்து அகாசியையும் அவரது பரிவாரங்களையும் தடுப்பது எது ? தாம் புலிகளின் கடைசி நகரமான முல்லைத்தீவையும் கைப்பற்றி விட்டதாக கொழும்பிலுள்ள அரசு உரிமை கோரியிருக்கிறது. அந்த அரசாங்கத்தின் ராணுவத் தளபதியோ 95 வீதமான யுத்தம் முடிவடைந்து விட்டதாகக் கூறியிருக்கிறார். ஆகவே புலிகள் வெளியேறும் மக்களைத் தடுப்பதற்குக் கூடப் பலமில்லாதவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அதே மக்களோ மீண்டும் மீண்டும் ஒரு ஆக்கிரமிப்பு ராணுவத்தின் கைய்யில் அகப்பட்டு அடையவிருக்கும் மனிதப் பேரழிவு குறித்த நடுக்கங்களோடு மேலும் மேலும் புலிகளின் பகுதிக்குள் ஊடுருவித் தம்மை மறைத்துக்கொண்டிருக்கிறார்க
-
- 0 replies
- 1.3k views
-
-
வன்னியில் இடம்பெறும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி சேகரிக்கும் பணி இன்று (25) முஸ்லிம் பிரதேசமான காத்தான்குழயில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்,காத்தான்குடி உலமா சபை, காத்தான்குடி வர்த்தகர் சங்கம்,காத்தான்குடி நகரசபை, போன்ற அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தப் பணியை இன்று ஆரம்பித்து வைத்தன. http://www.tamilskynews.com/
-
- 12 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணம், அரியாலை, சாவகச்சேரி, மட்டுவில் பிரதேசங்களில் சிறிலங்கா படையினர் பாரிய சுற்றிளைப்பு தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 329 views
-
-
ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை கண்டித்தும் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 315 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் - சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய"மான - புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடு - உடையார்கட்டு ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை நடத்திய கண்மூடித்தனமான - அகோர பீரங்கித் தாக்குதலில் ஆகக் குறைந்தது 60 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 363 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் - சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய"மான - புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடு - உடையார்ட்டு ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட் கிழமை நடத்திய கண்மூடித்தனமான - அகோர பீரங்கித் தாக்குதலில் ஆகக் குறைந்தது 60 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 395 views
-
-
வடமேல் மாகாண சபை தேர்தல் - வன்முறை தொடர்கிறது: வடமேல் மாகாண சபைக்கு புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளரின் மனைவி உள்ளிட்ட 4 பேர் ஆளும் கட்சியின் வன்முறை குழுவினால் தாக்கப்பட்டு சிலாபம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆராச்சிக்கட்டு- ஆனவிழுந்தாவ என்ற பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. உடப்பு பிரதேசத்திற்கு தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடச் சென்ற இந்த ஐக்கிய தேசியக் கட்சியினரை, வாகனம் ஒன்றில் சென்ற குழுவினர் வழிமறித்து, துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி, ஐக்கிய தேசிய கட்சியினரை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து, தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் க…
-
- 1 reply
- 817 views
-
-
ஊடக ஒடுக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது: ரிவிர பத்திரிகையின் ஆசிரியர் உபாலி தென்னகோன் மீதான தாக்குதலை கண்டித்தும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஊடக ஒடுக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்தியில் இன்று (26) மதியம் 12 மணிக்கு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற உள்ளது. சுதந்திர ஊடக அமைப்பு உள்ளிட்ட 5 ஊடக அமைப்புகள் இதனை ஒழுங்கு செய்துள்ளன. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் தாக்கப்பட்டமை குறித்து உடனடியாக வினைத்திறனான விசாரணைகளை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதே இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய நோக்கம் என ஊடக…
-
- 1 reply
- 819 views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில், ஜப்பான் மேற்கொண்ட முயற்சிகள் பயன்தரவில்லை. இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த இராணுவ வெற்றிகள் மாத்திரம் போதுமானவையல்ல. எனவே, அரசியல் தீர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என ஜப்பான் விசேட தூதுவர் யசூசி அகாஷி தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு யுத்தத்தின் மூலம் தீர்வு காண்பது கடினமாகும். தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கும் விதத்தில் பாராளும ன்ற முறைக்குள் அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும். வன்னியில் இடம்பெயரும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். கடந்த 21 ஆம் திகதி இலங்கை வந்த ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி ஜனாதிபதி…
-
- 2 replies
- 884 views
-
-
கிழக்கு மாகாணம் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டு விட்டது. வடக்கும் படையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குக் கீழ் விரைவில் வந்துவிடும். இந்த நிலையில் எம் முன் பாரிய பொறுப்பு ஒன்று உள்ளது. இந்த இருமாகாணங்களிலும் கலாசார விழுமியங்களைப் பாதுகாக்கும் வேலைத் திட்டமொன்றை தயாரிப்பதே அந்தப் பாரிய பொறுப்பாகும். இவ்வாறு கூறுகிறார் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர்; மல்வத்தை பீட மகாநாயக்கத் தேரர் திப்பெட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரரை நேற்றுச் (25) சந்தித்த பின்னர் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதியின் சரியான வழிகாட்டலின் கீழ் எமது இராணுவத்தினர் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிட்டு அனைத்துப் பிரத…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஊடகவியலாளர்களை பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை – RSF: ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பாரிசை மையமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச எல்லைகளற்றோர் ஊடகவியலாளர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த படுகொலை செய்யப்பட்டதன் பின்னரும் ஊடகவியலாளர்களுக்கு போதியளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே ரிவிர பத்திரிகையின் பிரதம ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தும் வகையில் அரசாங்கம் ந…
-
- 0 replies
- 571 views
-
-
வன்னியில் வானூர்தி தாக்குதல்களாலும் பீரங்கித் தாக்குதல்களாலும் ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களாலும் தமிழ் மக்கள் நாளாந்தம் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் படுகொலை குறித்து கண்டனம் எதுவும் தெரிவிக்காமல் சிறிலங்கா அரசாங்கத்தை பாராட்டியிருப்பது பெரும் வேதனை அளிப்பதாகவுள்ளது என ஐப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கவலை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 750 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு தனி ஈழம் என்ற நிலைப்பாட்டை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நிர்பந்தம் செய்ய வேண்டும் என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 458 views
-