Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரான்சில் அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்ட தமிழ்ச் சமூக செயற்பாட்டாளர் அருளானந்தம் சத்தியரூபன் தலைமையிலானோர் நாளை வெள்ளிக்கிழமை சிறையில் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்த உள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 447 views
  2. தமிழீழ தேசிய தொலைக்காட்சி செய்மதி மூலம் தனது ஒளிபரப்பை 2005 ஆரம்பித்த பொழுது மாமனிதர் சிவராம் டெயிலிமிரரிற்கு எழுதிய கட்டுரை. TV images: LTTE's next strategic dimension? -Daily Mirror - 30 March 2005 http://www.tamilnation.org/forum/sivaram/050330.htm அவரது கட்டுரை CNN effect ஓடு ஒப்பீடு செய்து அடுத்த கட்ட ஈழப்போரில் (4 இல்) இது ஒரு தந்திரோபாய பரிமாணத்தை (strategic dimension அய்) உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் அதை NTT effect ஆக பெயர் சூட்டி முடித்திருந்தார். CNN effect என்ற சொற்பதம் ஏன் உருவானது அது எங்கு எப்படியான தாக்கங்களை உருவாக்கியது என்று விக்கிபீடியாவில்: http://en.wikipedia.org/wiki/CNN_effect 2005 இல் நிழல் யுத்தம் என ஆரம்பித்து ம…

  3. தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட மருத்துவ அமைப்புக்களே மக்களை காக்கின்றன: வாமன் [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 07:57 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவ அமைப்புக்கள் மருத்துவ ரீதியில் மக்களை பாதுகாக்கும் செயற்பாடுகளில் முழுமையான பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றன என்று தமிழீழ சுகாதார சேவைகள் பணிப்பாளர் வாமன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா படையினரின் திட்டமிட்ட போர் நடவடிக்கை காரணமாக மக்களை அழிக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றது. பல லட்சகணக்கான மக்கள் இடம்பெயர்ந்து மிகக்குறுகிய இடத்தில் வாழ்ந்து வருகின்றனர். மக்களுக்கான சாதாரண அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை காணப்படுகிறன்றது. இதில் குறிப்…

    • 0 replies
    • 699 views
  4. மன்னார் - யாழ்ப்பாணம் ஏ 32 தரைவழிப் பாதை இன்னும் சில தினங்களில் திறக்கப்படவுள்ளது வீரகேசரி இணையம் 11/13/2008 5:23:54 PM - இருபது வருடங்களுக்குப் பின்னர் மன்னாருக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ஏ - 32 தரைவழிப் பாதை இன்னும் சில தினங்களில் முதல்முறையாகத் திறக்கப்படும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், மன்னாருக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் …

  5. விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் கையசைத்தால் தான் நாட்டில் நிம்மதி ஏற்படுமெனவும், அவர் பச்சைக் கொடி காட்டினால் தான் நாடு பாதுகாப்பாக இருக்குமென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சொலமன் சூ.சிறில் செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார். அத்துடன் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைப்பது என்பது வரலாற்றிலேயே சாத்தியமற்றதொன்று எனவும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பேசும்போதே சொலமன் சூ.சிறில் இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; அமெரிக்காவில் சிறுபான்மை கறுப்பினத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா அந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது இனத்துவ சமத்துவத்தின் அடையாளமா…

    • 2 replies
    • 1.5k views
  6. சிங்களத்தின் கறுப்புத்தந்தியில் ஆழமாக மாட்டுப்பட்டிருக்கும் இந்தியா http://tamilnet.com/art.html?catid=79&artid=27430

  7. இலங்கை ராணுவத்தினர் இரண்டு கரையோர கிராமங்களை கைப்பற்றியுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. டெவில்ஸ் பாய்ண்ட் மற்றும் வல்லைப்படு ஆகிய இரண்டு கிராமங்களுமே கைப்பற்றப்பட்டுள்லது. இதன் மூலம் ராணுவத்தினர் பூநகரியை நோக்கி முன்னேறக்கூடியதாக உள்ளது.... Sri Lankan troops take rebel villages: govt COLOMBO (AFP) – Sri Lankan troops on Thursday wrested control of two coastal villages from Tamil Tiger rebels after a series of pitched battles, the military said. The fishing settlements of Devil's Point and Vallaipadu on the island's northwestern shore were used by the rebels to smuggle arms from south India and launch attacks on troops, the military said in a stateme…

    • 92 replies
    • 9.2k views
  8. http://www.keetru.com/literature/essays/ponnila.php குண்டுகள் ஆலங்கட்டி மழை போல் பொழிந்தாலும் நாங்கள் பாசிஸ்டுகளுக்கு ஒரு அடி நிலத்தைக் கூட கொடுக்க மாட்டோம். எங்களது தோழர்கள், ஆதரவாளர்களும் எங்களுக்குப் பின் நிற்கின்றனர். எங்களுக்குப் பின்வாங்குதல் என்பது கிடையவே கிடையாது. நான் வானத்தைப் பார்த்தேன்... அது எனது கண்களை வசியம் செயதது... நாங்கள் அனைவரும் சிற்பபாக சுடக் கூடியவர்கள், சுதந்திரமானவர்கள்... எங்களது ஒவ்வொரு தோட்டாவும் எதிரியை எழ விடாமல் செய்தது.. (ஜப்பானுக்கு எதிரான சீனப் புரட்சியின் போது கனேடிய புரட்சியாளரும் மருத்துவருமான தோழர் நார்மன் பெத்யூன் குழுவினரின் பாடல்கள்) ‘‘தமிழ்நாட்ல ஏன் சார் இப்படி’’ ‘‘இன்னும் ரெண்டு கில…

  9. கண்டி வீதியை வல்வளைக்க முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது முறியடிப்புத் தாக்குதல்: 45 படையினர் பலி 100 பேர் காயம் [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 12:19 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] பணிக்கன்குளம், கிழவன்குளம், பழைய முறிகண்டி பகுதிகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு மீது தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதல் நடத்தினர். இதில் 45 படையினர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். படையினரின் உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கண்டி வீதிக்கு மேற்காக இருந்து கண்டி வீதியை வல்வளைக்கும் நோக்கில் பணிக்கன்குளம், கிழவன்குள…

  10. அக்கராயன் முனைகளில் சிறிலங்கா படையினர் - விடுதலைப் புலிகள் மோதல்: 32 படையினர் பலி; 45 பேர் காயம் [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 12:38 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] அக்கராயனில் உள்ள முட்கொம்பன் மற்றும் கோணாவில் பகுதிகளில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் 32 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 45 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: முட்கொம்பன் பகுதியில் நேற்று புதன்கிழமை காலை முதல் மாலை வரை சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் 20 படையினர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர். இதேநேரம், அக்கராயன் கோ…

  11. இராணுவத்துடன் இணைந்து செயற்படும் ரி.எம்.வி.பியினருக்கு சிவில் சட்டம் தொடர்பில் போதிய அறிவில்லை – கருணா: http://www.globaltamilnews.net/tamil_news....=2129&cat=1 இராணுவத்துடன் இணைந்து செயற்படும் ரி.எம்.வி.பியினருக்கு சிவில் சட்டம் தொடர்பில் போதிய அறிவின்மை காரணமாக, சிவில் சட்டங்கள் தொடர்பில் புரிந்துணர்வுடன் செயற்படும் வகையில் அவர்களுக்கான செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு ரி.எம்.வி.பியின் தலைவர் கருணா , காவற்துறை மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். காவற்துறை மா அதிபரை நேற்று முன்தினம் (11) சந்தித்த போது கருணா இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். காவற்துறை தலைமையகத்தில் காவற்துறை மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண, காவற்துறை நிர்…

  12. பிரித்தானிய தமிழர் அமைப்பு ஒன்று நடத்த உள்ள கலாசார நிகழச்சியை தடைசெய்யுமாறு இலங்கை கோரிக்கை – சிங்கள நாளிதழ்: http://www.globaltamilnews.net/tamil_news....=2128&cat=1 பிரித்தானிய தமிழர் அமைப்பு ஒன்று எதிர்வரும் 26 ஆம் திகதி நடத்த உள்ள கலாசார நிகழச்சியை தடைசெய்யுமாறு இலங்கை அரசாங்கம் நேற்று (நவ 12) பிரித்தானிய அதிகாரிகளிடம் கோரிகை விடுத்துள்ளதாக சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் விழாவினை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2004 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதால், இந்தக் கலாசார நிகழ்ச்சியை நடத்துவது, …

  13. TMVPயைப் போல் தம்மை அடையாளப்படுத்தி விடுதலைப்புலிகள் கிழக்கு மாகாணத்திற்குள் ஊடுருவல் - புலனாய்வுத்துறை: http://www.globaltamilnews.net/tamil_news....=2125&cat=1 தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களைப் போல், தம்மை அடையாளப்படுத்தி கொண்டு பெருமளவிலான விடுதலைப்புலிகள் ஆயுதங்களுடன் கிழக்கு மாகாணத்திற்குள் ஊடுருவி இருப்பதை தாம் கண்டறிந்துள்ளதாக புலனாய்வுதுறையினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலி உறுப்பினர்கள், ரி.எம்.வி.பியின் உறுப்பினர்களாக அந்த கட்சிக்குள் இருப்பது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் என பாதுகாப்பு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். ரி.எம்.வி.பியின் தலைவர்கள் அடிக்கடி கொழும்புக்கு செல்வதால், அவர்களுடன் இந்த விடுத…

  14. இலங்கை திரும்பிய ஒரு வாரகாலத்தில் 5 முறை ரகசிய காவற்துறையினர் வாக்குமூலம் பெற முனைந்தனர் - சந்திரிக்கா: இலங்கை திரும்பிய ஒரு வாரகாலத்தில், ரகசிய காவற்துறையினர் தன்னை 5 முறை தொடர்பு கொண்டு, வாக்குமூலம் பெற்றுத் தருமாறு அழுத்தம் கொடுத்தாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க கூறியுள்ளார். வெளிநாட்டில் இருந்து தான் இலங்கை திரும்பும் போதெல்லாம் இப்படியான பல்வேறு வகையில் பாரிய மன அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முதல் தடவை தனது உத்தியோபூர்வ இல்லத்தில் இருந்த பாதுகாப்பு படையினர் அகற்றப்பட்டனர். இரண்டாவது முறை அங்கிருந்த பணியாளர்கள் அகற்றப்பட்டு, வீட்;டில் இருந்த பெறுமதியான வீட்டு பாவனை பொருட்கள் அகற்றப்பட்டன…

  15. சர்வதேசத்தை ஏமாற்றும் திட்டமே அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு [13 நவம்பர் 2008, வியாழக்கிழமை 7:25 மு.ப இலங்கை] அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கலந்துரையாடல் என்ற பெயரில் சர்வதேசத்துக்கு - குறிப்பாகத் தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவுக்கு - கொழும்பு அரசு ‘பூச்சாண்டி’ காட்டி வருவதை புட்டுப் புட்டு விமர்சித்து அம்பலப்படுத்தியிருக்கின்றா

  16. மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த புகையிரதம் தடம்புரண்டுள்ளது வீரகேசரி இணையம் 11/13/2008 10:12:02 AM - மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த சாகரிக்க எனப்படும் புகையிரதம் களுத்தறை கட்டுகுறுந்த பகுதியிலின்று காலை தடம்புரண்டுள்ளது. இதனால் பிரதான கரையோர புகையிரத சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  17. வீரகேசரி நாளேடு - இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் இராணுவ உதவிகள் நிறுத்தப்படுமானால் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு அது உதவியாக இருக்கும். எனவே, எந்தவித இராணுவ உதவிகளையும் இந்தியா இலங்கைக்கு வழங்கக் கூடாது. அத்துடன் இந்திய அரசாங்கம் எம்மீதான தடையை நீக்கு எமது இயக்கத்தை அங்கீகரிக்க வேண்டும். என்று விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்ட போதும் புலிகளான நாம் எப்போதும் போர் நிறுத்தத்திற்கு தயாராகவேயுள்ளோம். இன்றும் நாம் யுத்த நிறுத்தத்தைத் தொடரவே விரும்புகின்றோம் என்றும் அவர் சொன்னார். தமிழகத்திலிருந்த வெளிவரும் தமிழோசை நாழிதழுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே…

  18. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். சிவாஜிலிங்கம், என் சிறீகாந்தா ஆகியோர் டெல்லியில் இருந்து GTN ற்கு வழங்கிய விசேட செவ்விகள் - ஒலிவடிவில் இணைப்பு: http://www.globaltamilnews.net/tamil_news....=2112&cat=1 இவர்கள் விரும்பியவாறு தாமதித்து யுத்தநிறுத்தத்தை நடைமுறைப்படுத்த முனைந்தால் அது பலிக்காது. அத்துடன் அது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். அத்துடன் இவர்களின் நிகழ்ச்சி நிரலின் பின்னால் செல்லவோ, அவர்கள் விரும்பிய போது யுத்தநிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளவோ தமிழர்கள் வெறும் மடையர்கள் அல்ல என்பதனை வரலாறு நிரூபிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்;தருமான எம் சிவாஜிலிங்கம் ற்கு வழங…

  19. காலத்தின் தேவை கருதிய செயற்திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: கனடிய சங்கங்களின் கூட்டமைப்பு [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 03:54 மு.ப ஈழம்] [பா.பார்த்தீபன்] காலத்தின் தேவை கருதிய செயற்திட்டங்கள் விரைவுபடுத்தப்படும் என்று கனடிய சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த நவம்பர் 1 ஆம் நாள் சனிக்கிழமை, ரொறன்ரோ ஐயப்பன் கலாச்சார மண்டபத்தில் 75 ஊர்ச் சங்கங்கங்கள், பழைய மாணவர் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் என இணைந்து நடாத்திய புலத்தின் இணைவால் தளத்தில் உள்ள உறவுகளின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்ய நடத்திய "அரவணைப்போம்" நிகழ்வின் ஊடாக 35,750.00 கனடிய டொலர்கள் திரட்டப்பட்டு மக்கள…

    • 0 replies
    • 743 views
  20. ஓமந்தை சோதனைச் சாவடியிலிருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தற்காலிகமாக விலகல் [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 03:54 மு.ப ஈழம்] [பி.கெளரி] வவுனியா மாவட்டத்தில் உள்ள ஓமந்தை சோதனைச் சாவடியிலிருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தற்காலிகமாக விலகியுள்ளது. இது தொடர்பில் செஞ்சிலுவைச் சங்கத்தின் தகவல் பிரிவு அதிகாரி சரசி விஜயரட்ன தெரிவித்துள்ளதாவது: ஓமந்தை சோதனைச் சாவடியில் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற சம்பவம் ஒன்றினைத் தொடர்ந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தனது பணிகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் எமது பணியாளர்கள் அங்கு நேற்று பணியில் ஈடுபடவில்லை. இன்று பணியில் ஈடுபடுவது தொடர்பாக அவர்கள் தற்போது வரை முடிவு செய்யவில்லை என்றார் அவர். …

    • 0 replies
    • 582 views
  21. நவீன ஆயுதங்கள் கொள்வனவு செய்ய சீனா செல்கிறார் கோத்தபாய [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 04:17 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியா சென்று கொழும்பு திரும்பியதும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வார் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா படைத்தரப்புக்கு தேவையான நவீன ஆயுதங்கள கொள்வனவு செய்வது குறித்து பேச்சு நடத்துவதற்காகவே கோத்தபாய ராஜபக்ச அங்கு செல்லவுள்ளதாக அறியமுடிகின்றது. குறிப்பாக புதிய கதுவீ (ராடர்) கருவிகளை பெறுவதும் அதனை இயக்குவதற்கு சீன தொழில்நுட்பவியலாளர்களை கொழும்புக்கு வரவழைப்பது தொடர்பான விடயங்கள் பேசப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.…

    • 0 replies
    • 584 views
  22. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தக வரிச்சலுகையை சிறிலங்கா அரசுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 465 views
  23. கொழும்பு: இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, தமிழ் திரையுலகத்தினருக்குப் போட்டியாக, சிங்கள நடிகர்கள் நாளை கொழும்புவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இலங்கையில், தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து, கடந்த மாதம் 19 ஆம் தேதி, ராமேஸ்வரத்தில் தமிழ் திரையுலக இயக்குநர்கள் கண்டனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினர். இதனையடுத்து, தென்இந்திய நடிகர் சங்க வளாகத்தில், நடிகர், நடிகையர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர். இதேபோல, சின்னத்திரை கலைஞர்களும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், தமிழ் திரையுலகத்தினருக்குப் போட்டியாக, இலங்கையில், அந்நாட்டு நடிகர், நடிகையர் போட்டி போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். கொழும்பு நகரில் உள்ள சுதந்திர தின மைதாணத்தில் இந்தப்…

  24. "யால வன கற்குகையில் 35 பேரடங்கிய விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணி" [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 03:55 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள யால காட்டு குகை ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 35 ஆண், பெண்கள் அடங்கிய கொமாண்டுா அணி தங்கியிருப்பதாக அவர்களிடம் பிடிபட்டு தப்பிவந்த பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். புத்தல, மினிப்புரகமவைச் சேர்ந்த திகலரட்ன என்பவேர காவல்துறையினரிடம் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சில நாட்களுக்கு முன்னர் நான் தேன் எடுப்பதற்காக யால காட்டுக்குள் சென்றேன். தேன் இருக்கும் இடங்களை தேடிச்சென்ற போது திடீரென அந்த இடத்துக்கு வந்த மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் என்னை…

    • 0 replies
    • 1.1k views
  25. இலங்கையில் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க மத்திய அரசு முன்வரவேண்டும் என்று தமிழகத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற பிள்ளையார் சுழி போட்டது, கடந்த அக்டோபர் 2-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம்தான். அதனைத் தொடர்ந்துதான் தி.மு.க. அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி மத்திய அரசை மிரட்டும் வகையில் தமிழக எம்.பி.க்களின் ராஜினாமா தீர்மானத்தை நிறைவேற்றியது. பின்னர் மத்திய அரசின் நடவடிக்கை திருப்தியளிப்பதாக இருக்கிறது என்று கருணாநிதி அறிவித்துவிட்டார். இந்நிலையில், ஈழத் தமிழர்களுக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட, அதன் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.