Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கில் தேர்தல் வெற்றிக்காக வடக்கில் தேவைப்படும் இராணுவ வெற்றி -விதுரன்- வடக்கே கடும் மழைபெய்து வருவதால் கடந்தவாரம் அங்கு பாரிய மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை. கடும் மழையால் அனைத்து படை நடவடிக்கைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ள போதும் அங்கு தினமும் கடும் சமர் நடைபெறுவது போன்றும் விடுதலைப் புலிகளுக்கு பலத்த உயிர்ச் சேதங்கள் ஏற்படுவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த அரசும் படைத்தரப்பும் முயல்கின்றன. கடும் மழையைத் தொடர்ந்து அங்கு வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களை மேற்கொள்ள முடியாத நிலையில் படையினர் தொடர்ச்சியாக கடுமையான ஆட்லறிஷெல் தாக்குதலையும் மோட்டார் தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். இதேபோன்ற நிலையில்தான் வன்னிக் கள முனையில் விடுதலைப் புலிகளுமுள்…

  2. இலங்கைக்கு உதவும் விடயத்தில் இரட்டை வேடம் போடும் இந்தியா - இலங்கை விவகாரத்தில் இந்தியா இரட்டை வேடமிடுவதாக தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடந்தவாரம் மத்திய அரசு மீது குற்றச் சாட்டுக்களைத் தெரிவித்திருந்தனர். ஒரு புறத்தில் இலங்கைப் படைகளுக்கு பயிற்சிகளை வழங்கி, போருக்கு உதவியபடியே மறுபுறத்தில் இராணுவத்தீர்வு சாத்தியமற்றதெனத் தெரிவித்துவரும் நிலைப்பாடே தமிழக அரசியல்வாதிகள் இத்தகைய கேள்வியை எழுப்பக் காரணமாகும். இலங்கை இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு வார கால இந்தியப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது அவருக்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சகமான "சௌத்புளொக்'கில் செங்கம்பள வரவேற்புக் கொடுக்கப்பட்டது. அத்துடன் இந்தியாவின் பாதுகாப்பு உயர்…

  3. ஈழப்பிரச்சினையை கையிலெடுத்துள்ள இந்திய இடதுசாரிக் கட்சிகள்! கலைஞன்- இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இலங்கை அரசுக்கெதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள இந்திய இடதுசாரிக் கட்சிகள் அது தொடர்பில் கொடுத்து வரும் நெருக்கடிகள், அழுத்தங்களால் இந்திய மத்திய அரசு புதிய சிக்கல்களுக்கு முகங் கொடுக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினைகளால் மத்திய அரசை பாடாய்ப்படுத்தும் இந்த இடது சாரிகள் தற்போது மத்திய அரசுக்கு தீராத தலைவலியாய் இருக்கும் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களை கையிலெடுத்துள்ளதால் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸுக்கு அடுத்த அடி விழுந்துள்ளது. இலங்கைத்தமிழர் பிரச்சினை தொடர்பாக பல சந்தர்ப்பங்கள…

  4. தமிழ் மக்களை அடக்கி ஆள்வதற்கான ஆயுதமாக உணவை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்தி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 759 views
  5. சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுக்களுக்குத் திரும்பவேண்டும் என்று தென் ஆபிரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 625 views
  6. தமிழர் மீதான சிங்களவரின் அடக்குமுறை -- ஒரு பார்வை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 1 reply
    • 1.5k views
  7. தமிழ்த் தேசிய இனத்தின் தாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை அங்கீகரித்து அதன் அடிப்படையில் தீர்வு ஒன்றைக் காண்பதற்கும் உலகு எங்கும் உள்ள இடதுசாரி முற்போக்கு அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், கல்விமான்கள், முற்போக்கு ஊடகங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று 47 இடதுசாரி அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  8. சிறீலங்காவின் கொடிய பேரினவாதியும் அந்நாட்டின் பிரதம மந்திரியுமான ரட்னசிறி விக்கிரமநாயக்கா இஸ்ரேலில் படைத்துறை மற்றும் இராணுவ தொழில்நுட்ப உதவிகள் கேட்டல் உட்பட்ட பேச்சுக்கள் நடத்தச் சென்றுள்ளார்..! படத்தில் ரட்னசிறி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் Ehud Olmert. இஸ்ரேல் சிறீலங்கா படையினருக்கு நீண்டகாலமாகவே பயிற்சி மற்றும் உளவுத்தகவல்கள் வழங்குவதுடன் அமெரிக்காவின் அனுமதியோடு அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்கள் ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் கடற்படைக் கலங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் பரம எதிரியான ஈரானுடன் சிறீலங்காவின் நெருக்கம் தொடர்பில் அமெரிக்கா அதிர்ப்தி கொண்டிக்கும் நிலையில் இவ்விஜயம் நிகழ்ந்துள்ளது. அண்மையில் சிறீலங்கா சிரியாவில் தனது தூதரகத்தை திறந்த…

  9. இக்கரும்புலிகள் சொல்லிச் சென்ற செய்தி:- கடற்கரும்புலி மேஜர் நிரஞ்சினி தனது கருத்தில் எமது அண்ணாவிற்கு தோளோடு தோளாக நின்று எவ்வளவுக்கு தங்களால் இயன்றளவு செய்யமுடியுமோ அவ்வளவுக்கு செய்து அண்ணாவின் காலப்பகுதிக்குள் தமிழீழத்தைப் பெற்றெடுக்கவேண்டும் என்றார். லெப்.கேணல் அன்புமாறன் தனது கருத்தில் எனது அன்பான மக்களுக்கு நீங்கள் இதைப்பார்க்கும் நேரம் நான் உங்களைவிட்டு நீண்டதூரம் வந்திருப்பன். அதாவது நான் வீரச்சாவடைந்திருப்பேன். மக்களுக்கு சொல்லிவிட்டுப் போகவிரும்புவது என்னவென்றால் கரும்புலிகளால் தகர்க்க ஏலாது என்று சொல்லி எதுவுமேயில்லை. கரும்புலிகள் தான் எங்கள் போராட்டப்பாதையில் தடையாக இருந்தவற்றையெல்லாம் தடைகளை நீக்கி தடைக்கற்களை உடைத்தெறிந்து காட்டியுள்ளனர். …

    • 15 replies
    • 5.8k views
  10. கொழும்பின் பார்வைகளும் கிழக்கின் தேர்தல்களும் 24.03.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் - ஆய்வு நிகழ்வு கலந்து கொண்டவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு தயாமோகன், தமிழீழ விடுதலைப்புலிகளின் புதுக்குடியிருப்புக் கோட்ட அரசியல் பொறுப்பாளர் திரு இளம்பருதி மற்றும் திரு வீரா. http://www.yarl.com/videoclips/view_video....c0ccd295cc484e5

  11. யாழ்ப்பாணத்தில் படையினரால் மக்கள் கட்டாயப்படுத்தி துப்புரவு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் Monday, 24 March 2008 இராணுவ வாகனங்களில் அழைத்துச்செல்லப்பட்ட இவர்கள், இராணுவ முகாம்களின் வெளிப்புறங்கள், மற்றும் 5 கிலோ மீற்றர் தொலைவைக்கொண்ட கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள சோதனை சாவடிகள் இதன் சுற்றுப்புற காணிகள் என்பவற்றை துப்புரவு செய்யுமாறு இந்த 600 பொதுமக்களும் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளனர். இந்த கட்டாய பணிகள் மாலை வரை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விபரங்களுக்கு http://www.ajeevan.ch/content/view/1289/1/

  12. வெள்ளவத்தையில் ரயில் மோதியதில் பதுளையை சேர்ந்த தமிழ் யுவதி பலி [24 - March - 2008] டிட்டோ குகன் கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ரயிலில் மோதுண்டு தமிழ் யுவதியொருவர் பலியாகியுள்ளார். வெள்ளவத்தை ரயில் நிலையத்திலிருந்து மிக குறுகிய தூரத்திலேயே மாலை 3.18 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றிருப்பதாக ரயில் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார். இளைஞர் ஒருவருடன் இந்த யுவதி கை கோர்த்தவாறு ரயில் பாதை வழியே நடந்து வந்து கொண்டிருந்த போதே பின்னால் வந்த ரயில் யுவதி மீது மோதியுள்ளது. சம்பவத்தின் போது யுவதி ரயில் பாதையிலும் இளைஞன் ரயில் பாதையை விட்டு சற்று வெளிப்புறமாகவும் இருவரும் கை கோர்த்த படி நடந்து வந்து கொண்டிருந்ததாக சம்பவத்தை நேர…

  13. மன்னாரில் நேற்று நடந்த மோதலில் 55 படையினர் பலியாகி 120 காயமடைந்ததாக புலிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் அரசு தரப்போ இரண்டு படையினர் உயிரிழந்ததாக அறிவித்திருந்தனர். புலிகள் தரப்பில் 52 பலியானதாக அறிவித்துள்ள அரசு புலிகளின் 11 உடலங்களையும் 7 துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளதாகக் கூறி வருகிறது. எனின் அரசின் தகவல் படி சண்டை இன்னும் உயிலங்குளத்தை அண்டிய பகுதியிலேயே நடந்து கொண்டிருப்பது தெரிகிறது..! http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25072

  14. கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு போட்டியிடாது என அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான எஸ்.ஜெயானந்தமூர்த்தி அறிவித்திருக்கின்ற போதிலும், இவ்விடயத்தில் கூட்டமைப்பில் கருத்து முரண்பாடுகள் உருவாகியிருப்பதாகத் தெரியவருகின்றது. இந்தநிலையில் இத்தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ்க் கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் இன்று மாலை நடைபெறவிருக்கின்றது. இக்கூட்டத்திலேயே இத்தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பு எம்.பி.க்கள் மத்தியில் இரண்டு வேறுபாடான கருத்துக்கள் காணப்படுவதால் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட…

  15. கொழும்பிலிருந்து சென்ற கப்பல் கொல்கத்தா துறைமுகத்துடன் மோதியது [24 - March - 2008] கொழும்பு துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை மேற்கு வங்காளத் தலைநகர் கொல்கத்தா சென்ற கப்பலொன்று கொல்கத்தா துறைமுகத்தை மோதித் தகர்த்துள்ளது. இந்தக் கப்பல் தனது கட்டுப்பாட்டை இழந்த நிலையிலேயே துறைமுகத்துடன் மோதுண்டதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தால் எவருக்கும் எதுவித ஆபத்தும் ஏற்படாதபோதும் துறைமுகத்திற்கு பலத்த சேதமேற்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்திலிருந்து கொள்கலன்கள் மற்றும் கனரக கட்டுமானப் பொருட்களுடன் சென்ற கப்பலே இவ்வாறு துறைமுகத்துடன் மோதுண்டுள்ளது. கப்பலில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே கப்பல் கட்டுப்பாட்டை இழந்து சென்று …

    • 1 reply
    • 1.5k views
  16. திங்கள் 24-03-2008 15:56 மணி தமிழீழம் [மயூரன்] இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 13 அரச அதிகாரிகள் கைது ஸ்ரீலங்காவில் கடந்த இரண்டரை மாத காலப்பகுதியில் லஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 13 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக லஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபடுவதற்கு உடந்தையாக இருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் ஐந்து காவல்துறை உத்தியோகத்தர்கள், இரண்டு கிராம சேவை உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகாரி முதலியோர் கைதானவர்களில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை காவல்துறை திணைக்களத்திற்கு புதிதாக 40 ஜீப் வண்டிகளை கொள்வனவு செய்வது தொடர்பான விலை மனுக்கோரலை …

  17. வவுனியா பலாமேட்டையில் படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு. வவுனியா பலாமோட்டைப் பகுதியில் நேற்று மாலை சிறீலங்காப்படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டு படையினர் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டுள்ளார்

  18. மன்னார் களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மிதிவெடிகளில் சிக்கி மூன்று சிறிலங்காப் படையினர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 766 views
  19. தமது எதிர்ப்பு நாடுகளுடன் இலங்கை உறவுகொள்வது குறித்து அமரிக்கா விசனம் அமரிக்க எதிர்ப்பு நாடுகளுடன் இலங்கை கொண்டுள்ள உறவுகள் குறித்து அமரிக்கா தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை அண்மைக்காலமாக சீனா மற்றும் ஈரான் ரஸ்யா ஆகிய நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்தி வருகிறது. இந்தநிலையில் இதற்கு தமது எதிர்ப்பை அமரிக்கா ராஜதந்திர மட்டத்தின் ஊடக இலங்கைக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானிய ஜனாதிபதி மொஹமட் அஹமடிஜினாட் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு வருகைதத்தரவுள்ளார். இதன் போது அவர் உமாஓயா மின்சார திட்டம் உட்பட்ட ஈரான் உதவியளிக்கும் திட்டங்களை பார்வையிடவுள்ளார். இதற்கிடையில் சீனாவிடம் இருந்து இலங்கை ஒரு பில்லியன் டொலர்களை உ…

  20. தாயகக் கோட்பாட்டை சிதைக்கும் கிழக்குத் தேர்தல்கள் - சி.இதயச்சந்திரன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலிற்கான வேட்பு மனு, இந்த மாதம் 27ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 3 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. 2006ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தேர்தல் நடைபெறவுள்ளது. உள்ளூராட்சித் திருவிழா முடிவுற்ற கையோடு, மாகாணசபைத் தேர்தல் நாடகத்தை அரங்கேற்ற அரசாங்கம் காட்டும் அவசரத்திற்கு, இருவிதமான வியாக்கியானங்கள் முன்வைக்கப்படுகின்றன. இத்தேர்தல் மேற்கிலிருந்து நிதிபெறும் நோக்கமென ஒருசாராரும், இந்தியாவின் உறவினை இறுக்கமடையச் செய்வதற்கான நகர்வென்று இன்னொரு சாராரும் கணிப்பிடுகின்றனர். ஆனாலும், வடக்கு கிழக்கைப் பிரித்ததால், இந்திய இலங்கை ஒப…

  21. வடக்கில் முன்னெடுக்கபட்டகின்ற யுத்தம் தொடர்பான உண்மையான நிலைமைகள் மற்றும் யுத்த கள தகவல்களை தெற்கு மக்கள் தெரிந்து கொள்வதை அரசு தடுத்தது வருகின்றது. கண்ணுக்கெட்டிய தூரத்தல் இருப்பதாக தெரிவிக்கின்ற கிளிநொச்சியை பைப்பற்றி பிரபாகரனை அழிதொழிப்பதன் மூலமாக இந்த பிரச்சனைக்கு ஒரு போதும் தீர்வு காண முடியாது என்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான கோணல் ஜெய்லி பெர்னாண்டோ தெரிவித்தார். வடக்கில் நான்கு திசைகளிலும் நிலை கொண்டிருக்கின்ற படையினர் இராணுவகட்டுப்பாடற்ற பகுதிகளுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திவிட்டு பின்னர் தங்களது பழைய நிலைகளுக்கே திரும்பிவிடுகின்றனர். இவ்வாறான நோக்கமில்லாத யுத்தத்தின் மூலம் கிளிநொச்சியைக் கைப்பற்ற வேண்டுமாயின் இன்னும் 12 ஆண்டுகள் தேவைப்படும். நேற்று…

  22. பழ.நெடுமாறன், பெ.மணியரசன், பசுபதிபண்டியன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது தமிழர்களைப் படுகொலை செய்து வரும் சிங்களப் படைக்குத் துணைபோகும் இந்திய அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை மெமோரியல் மண்டபம் முன் நடைபெற இருந்தது. முதலில் காவல்துறையினர் இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியளித்திருந்தனர். இன்று காலை அவ்வனுமதியை, சில சமூக விரோத சக்திகளும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதால், தடை விதிப்பதாய் கூறி, தடை விதிக்கப்பட்டது. சென்னை மெமோரியல் மண்டபம் முன் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது, தனித்தனிக் குழுக்களாய் பழ.நெடுமாறன், பெ.மணியரசன், பசுபதிபண்டியன் அவ்விடம் வந்து சேர்ந்தனர். அப்பொழுது, காவல்துறையினர் தடையை …

    • 20 replies
    • 3.6k views
  23. மன்னார் பஸ்நிலையத்தில் பொலிஸார் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் 3/24/2008 12:17:38 PM வீரகேசரி இணையம் - மன்னார் பஸ்நிலையத்தில் காலை 10.30 மணிமுதல் 12.00 மணிவரை பொலிஸார் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர். இதன்போது அப்பகுதியால் சென்ற பொதுமக்கள் அனைவரும் பாரிய சோதனைக்களுக்கு உட்படுத்தப்பட்டனர். இதன் போது 4 பேர் தடுத்துவைக்கப்பட்டு , அவர்களின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுதலைசெய்யப்பட்டனர்.இதன் காரணமாக மக்களின் நடமாட்டம் சற்று குறைவாக காணப்பட்டதாகவும் . அங்கும் சென்ற வாகனங்களும் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட.பின்னர் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக எமது மன்னார் செய்தியாளர் தெரிவித்தா…

  24. திருக்கோவிலில் கிளைமோர் கண்டெடுப்பு 3/24/2008 12:26:33 PM இணையத்தள நிருபர் - திருக்கோவில் பகுதியில் கிளைமோர்க் குண்டொன்றை விசேட அதிரடிப்படையினர் கண்டெடுத்துள்ளனர். விசேட அதிரடிப்படையினரின் வீதிச் சோதனைச் சாவடிக்கு சற்று தூரத்தில் இக் குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 3 கிலோகிராம் நிறையுடைய இக் குண்டு சோதனைச் சாவடிக்கு அண்மித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் கார் ஒன்றில் செலுத்தியில் பொருத்தப்பட்டிருத்ததாக பொலிஸ் தரப்பு கூறுகிறது.

  25. மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரியளவிலான முன்னகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 55-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 120-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.