Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சவேந்திர சில்வா சரியாக கடமையை செய்யவில்லை- கர்ணகொட அறிக்கை! கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல் கோட்டகோகம போராட்டத் தளத்திற்குள் நுழைந்த பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர், அமைச்சர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதைத் தடுக்க முப்படைகளின் பாதுகாப்புப் பிரதானி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ,பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பல்வேறு நபர்களினால் பிரதிவாதிகளுக்கு எதிராக உரிய விசாரணை நடத்துமாறு கோரி அமைச்சர் பந்துல குணவர்தன, கோகில குணவர்தன, காமினி லொக்குகே உள்ளிட்ட 39 பேர் தாக்கல் செய்த மனுவை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டுள்ளது. மே 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நாடு முழுவதும…

  2. இருதரப்பு இராணுவ பயிற்சிகளை அதிகரிக்க இந்தியா - இலங்கை இடையே இணக்கம் Published By: DIGITAL DESK 5 25 FEB, 2023 | 04:41 PM (நமது நிருபர்) இந்தியாவும் இலங்கையும் இருதரப்பு இராணுவப் பயிற்சிகளை அதிகரிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் இரு தரப்பு அனுபவம் மற்றும் திறன்களை முழுமையாகப் பகிர்ந்துக்கொள்ள முடிவெடுத்துள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. புதுடில்லியில்இடம்பெற்ற 7ஆவது ஆண்டு இந்தியா-இலங்கை பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளும் தங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்தன. இதன்போதே, இருதரப்பு பயிற்சி…

  3. கீழ்த்தர அரசியல் வேண்டாம்: தமிழ் அரசியல்வாதிகளுக்கு நீதி அமைச்சர் எச்சரிக்கை தமிழ் அரசியல் கைதிகளை வைத்து தமிழ் அரசியல்வாதிகள் எவரும் அரசியல் நடத்தக்கூடாது என்று நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றோம், தமிழ் அரசியல்வாதிகளின் கீழ்த்தரமான அரசியல் செயற்பாடுகள் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரத்தில் தாக்கத்தைச் செலுத்தும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிறைச்சாலைகளில் இன்னும் 29 தமிழ் அரசியல் கைதிகளே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தண்டனை விதிக்கப்பட்டவர…

  4. ஜெனிவா கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்: இலங்கை தொடர்பிலும் அவதானம்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் நாளை (27) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் குழு கூட்டமும் அன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. மார்ச் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கூட்டத்தின் போது இலங்கை விவகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது. மார்ச் மாதம் 8 ஆம் திகதியும் 9 ஆம் திகதியும் இலங்கை தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. இம்முறை ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் தான் கலந்து கொள்ளவ…

  5. ஜனவரி - ஜூன் மாதம் வரை மனிதாபிமான உதவிகளை வழங்க 4.5 மில்லியன் டொலர் நிதி அவசியம் - உலக உணவுத்திட்டம் Published By: T. SARANYA 26 FEB, 2023 | 11:01 AM (நா.தனுஜா) உலக உணவுத்திட்டம் கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள 636,125 பேருக்கு அவசியமான உதவிகளை வழங்கியிருப்பதுடன், எதிர்வரும் ஜூன் மாதம் வரையான 6 மாதகாலத்திற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு 4.5 மில்லியன் டொலர் நிதி அவசியமென மதிப்பிட்டுள்ளது. தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டின் பொருளாதாரம் இன்னமும் மீட்சியடையாத நிலையில், அதன்விளைவாக உணவுப்பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அ…

  6. இராணுவ மருத்துவத் துறையில் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்படும் - ஜனாதிபதி Published By: DIGITAL DESK 5 25 FEB, 2023 | 05:02 PM உலகில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது இராணுவத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பிரிவுக்கு மேலதிகமாக சுகாதார அனர்த்தங்கள் ஏற்படும்போது, இராணுவ குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு தனியான பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் அதிகளவான மருந்துகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, சுகாதாரத் துறைக்கு அதிக…

  7. யாழ்.ஊர்காவற்றுறையில் வயோதிப அக்கா, தங்கை உட்பட மூவர் சடலங்களாக மீட்பு யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதேசத்தில் இன்று இருவேறு இடங்களிலிருந்து மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வயோதிபச் சகோதரிகள் இருவர் எரிந்த நிலையில் இன்று முற்பகல் அவர்களது வீட்டுக்காணி ஒன்றிலிருந்து சடலங்களாகக் காணப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை புனித சூசையப்பர் ஆலயத்தை அண்மித்த பகுதியான சென் மேரிஸ் வீதியைச் சேர்ந்த மனுவேற்பிள்ளை அசலின் பௌலினா, யேசுதாசன் விக்ரோரியா ஆகிய இருவரும் எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அதேவேளை,ஊர்காவற்றுறை அக்கா தங்கை குளத்தில் ஆணொருவரின் சடலம் இனம் காணப்பட்டுள்ளளது. ஊர்காவற்றுறை – மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவரே சடலம…

  8. இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கை! இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹிம்ச்சல் – உத்தரகாண்ட் பகுதிகளில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பை நிச்சயம் பாதிக்கும் என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். இவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்தியாவில் நூற்றில் இருந்து …

    • 8 replies
    • 955 views
  9. அனலைதீவில் கனேடியரை வாளால் வெட்டி விட்டு பணத்தையும் பொருட்களையும் சூறையாடிய கும்பல்:நள்ளிரவில் அட்டகாசம் அனலைதீவில் தங்கியிருந்த கனேடியர் ஒருவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு பெருமளவு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. கனடாவிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன் அனலைதீவுக்கு வந்து அங்கிருக்கும் தமது பூர்வீக வீட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த குடும்பத்தினர் தங்கியிருந்த வீட்டுக்குள் நள்ளிரவு 12 மணியளவில் கதவை உடைத்து உட்புகுந்த நால்வர் கொண்ட கும்பல் வாளால் குடும்பத் தலைவரை வெட்டிக் காயப்படுத்தியதுடன் குடும்பத்தவர்களை மிரட்டியுள்ளது. பின்னர் வீட்டிலிருந்த 2 ஆயிரம் கனேடிய டொலர் மற்றும் ஆயிரம் அமெரிக்க டொலர், 2 கனேடிய கடவுச்சீட்டுகள் மற்றும் பெறுமதியான பொருட்…

  10. 85,000 மில்லியன் ரூபாய்க்கான திறைசேரி உண்டியல் ஏலம் ! 85,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான மற்றுமொரு திறைசேரி உண்டியல் ஏலம் எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அவை 91 நாட்களில் 45,000 மில்லியனுக்கும், 182 நாட்களில் 20,000 மில்லியனுக்கும், 364 நாட்களில் 20,000 மில்லியனுக்கும் ஏலம் விடப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. https://athavannews.com/2023/1325385

  11. ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சதீஸ்குமார் தொடர்ந்தும் சிறையில்! ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு அளிக்கப்பட தமிழ் அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமார் தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கு உதவினார் எனும் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட செல்லையா சதீஷ்குமாருக்கு கடந்த 1ஆம் திகதி ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டது. சதீஸ்குமாரின் நிலைமை தொடர்பில் கேட்ட போதே கோமகன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக செல்லையா சதீஸ்குமார் மேன…

  12. வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அலுவலகம் திறப்பு வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் இ.இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்துக்கான பூசை இடம்பெற்றதுடன் சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன், வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளரும் வடமா காண திறைசேரியின் பிரதம கணக்காளருமான ஜெயராஜா, உள்ளூ …

  13. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை இயக்குவதில் சிக்கல்; காரணம் என்ன? இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன குறிப்பிட்டார். கடந்த ஒரு வருடத்தில் மின்சார சபையின் 72 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர்களில் இருபத்தி இரண்டு பேர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பணி புரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை வழமையாக நடத்துவதற்கு 123 பொறியியலா…

  14. நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆய்வு செய்கிறது மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் குறித்து விசேட விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நிலைமை குறித்து விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்கள் தொழிற்சங்கம் மனுவை சமர்ப்பித்தது, தற்போதைய மருந்து தட்டுப்பாடு மனித உரிமை மீறல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். https:…

  15. கோட்டாவின் முடிவு எவ்வாறு அமைந்தது என்பதை ஜனாதிபதி ரணில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் - அநுர Published By: DIGITAL DESK 5 25 FEB, 2023 | 09:57 AM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர் அல்ல ஆகவே அவருக்கு தேர்தல்,மக்களின் நிலைப்பாடு தொடர்பில் அக்கறை இல்லை, தான் குறிப்பிடுவதே அரச சுற்றறிக்கை என்று சர்வாதிகாரமாக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முடிவு எவ்வாறு அமைந்தது என்பதை ஜனாதிபதி என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜனாதிபதியின் அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாட்டுக்கு நீதிமன்றத்தின் ஊடாக பதிலடி கொடுப்போம் என மக்கள் விடுதலை முன்னணியின…

  16. யாழ். பல்கலைக் கழகத்தில் நான்கு மாணவர்களுக்கு வகுப்புத் தடை Published By: T. SARANYA 25 FEB, 2023 | 11:09 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை உட்பட பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 22ஆம், 23 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலைவார நிகழ்வுகளின் போது, மூன்றாம் வருட மாணவர்களால், இரண்டாம் வருட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் சுதந்திரமான – முறை சார்ந்த விசாரணையை மேற்கொள்வதற்கு ஏதுவாக நான்கு பேருக்கும் உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் அறிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர் வதிவிடம…

  17. யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கண்களில் பாதிப்புக்களை எதிர்கொண்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். சாவகச்சேரி கைதடி பகுதியில் உள்ள சனசமூக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியிலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற இசை நிகழ்சியில் லேசர் கதிரொளிகள், புகைகள் (ஸ்மோக்) போன்றவை அளவுக்கு அதிகமாக பாவிக்கப்பட்டமையாலையே நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கண் எரிச்சல், கண் வீக்கம், தொடர்ச்சியாக கண்ணீர் வருதல் போன்ற பாதிப்புக்களுக்கு உள்ளவர்கள் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். சுமார் 50க்கும் மே…

    • 3 replies
    • 376 views
  18. மது போதையில் வந்த பொலிஸாரால் ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் - ரோஹினி குமாரி Published By: DIGITAL DESK 5 24 FEB, 2023 | 02:04 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஆசிரியர் இடமாற்றம் சம்பந்தமாக கல்வி அமைச்சில் நடந்த கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்த ஆசிரியர்கள் சிலர், மது போதையில் வந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போத…

  19. உக்ரைனிலிருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேறக் கோரும் ஐ.நா. தீர்மானம்: இலங்கை புறக்கணிப்பு! உக்ரைனிலிருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேறக் கோரி ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்திற்கு, இலங்கை உட்பட 32 நாடுகள் வாக்களிக்கவில்லை. ரஷ்யா தனது படைகளை உக்ரைனில் இருந்து விலக்கிக் கொள்ளவும், சண்டையை முடிவுக்குக் கொண்டுவரவும் கோரும் சிறப்புத் தீர்மானம், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 141 நாடுகள் ஆதரவளித்தும், 7 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்த நிலையில், இலங்கை, இந்தியா, சீனா, பாகிஸ்தான் உட்பட 32 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். எனினும், இந்த சிறப்புத் தீர்மானம், 141 நாடுகள் ஆதரவுடன் ஐக்கிய நாடுகளி…

    • 4 replies
    • 563 views
  20. கனடாவில் வதியும் யாழ்.பெண்மணியால் காணியற்றோருக்கு காணிகள் பகிர்ந்தளிப்பு புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்பவர் யாழ்ப்பாணத்தில் அவருக்குச் சொந்தமான காணியை காணியற்றோருக்கு பகிர்ந்தளித்துள்ளார். வேலணை – கரம்பொன் மேற்கை சொந்த இடமாகக் கொண்ட திருமதி வரதா சண்முகநாதன் என்பவரே தனக்குச் சொந்தமான காணியை 9 குடும்பங்களுக்கு தலா இரண்டு பரப்பு வீதம் பகிர்ந்தளித்துள்ளார். பகிர்ந்தளிக்கப்பட்டோருக்கான காணி உறுதி வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை மேலைக் கரம்பொன் முருகமூர்த்தி ஆலய மண்டபத்தில் அப்பகுதியின் கிராம சேவையாளர் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருமதி வரதா சண்முகநாதனை பின்பற்றி புலம் பெயர் நாடுகளி…

  21. வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை பிரபாகரனே அழித்தார் -நீதியமைச்சர் குற்றச்சாட்டு வடக்கு மாகாண மக்களின் விவசாயம் உள்ளிட்ட வளங்களை அரசாங்கம் அழிக்கவில்லை என்றும் பிரபாகரனே அனைத்தையும் அழித்தொழித்தார் என்றும் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ, தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிபரின் கட்டளை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை குறிப்பிட்டார். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பிரபாகரனே அழித்தார் வடக்கு மாகாண விவசாயத்தை, வளங்களை அரசாங்கம் இல்லாதொழிக்கவில்லை என்றும் பிரபாகரன், வடக்கு மாகாணத்தில் விவசாயத்துறையும், மக்களின் வாழ்க்கையையும் அழித்தொழித்தார் என்றும் தெரிவித்த அவர், காங்கேசன்துறை சீமெந்து…

  22. யாழிலுள்ள அரச காணிகளை பகிர்ந்தளிக்குமாறு காணியற்றோர் மக்கள் இயக்கம் கோரிக்கை Published By: DIGITAL DESK 5 24 FEB, 2023 | 04:25 PM யாழ்ப்பாணத்தில் காணியற்று வாழும் தமக்கு காணி வழங்க வேண்டும் என கோரி வடமாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ஆகியோரிடம் காணி அற்றோர் மக்கள் இயக்கம் மகஜர் கையளித்துள்ளது. நீண்ட காலமாக தாம் வாடகை வீடுகளில் வசித்து வருவதனால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதுடன் , தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளமையால் , பெருந்தொகை வாடகையை செலுத்த முடியாது தவித்து வருவதாகவும் , அதனால் யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச காணிகளை காணியற்ற தமக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என கோரி…

  23. இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளின் நிலைமைகள் மீளாய்வு செய்யப்படுகின்றன! ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவின் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளின் நிலைமைகள் மீளாய்வு செய்யப்படவுள்ளன. மனித உரிமைகள் குழுவின் 137வது அமர்வு எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மார்ச் 24 வரை நடைபெறுகின்றது. இதில் இலங்கை, பெரு, பனாமா, எகிப்து, சாம்பியா மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் அறிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்படவுள்ளன. 173 உறுப்பினர்கள் குழுவில் அடங்கும் இந்த 6 நாடுகளினதும் மதிப்பாய்வை, 18 சர்வதேச சுயாதீன நிபுணர்கள் மேற்கொள்ளவுள்ளனர். இதற்கமைய, மனித உரிமை மீறல்கள், பாலின அடிப்…

  24. இலங்கை இறுதிப் போரில் காணாமல் போனவர்கள் எங்கே? ராணுவம் பதிலளிக்க வவுனியா நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முழு விவரம் கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 11 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை இறுதி கட்ட போரில் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள், ராணுவத்தினர் வசம் இருக்கலாம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என்ற வகையில் வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட பொன்னம்பலம் கந்தசாமி (கந்தம்மான்), சின்னத்துரை சசிதரன் (எழிலன்) மற்றும் உருத்திமூர்த்தி (கொலம்பஸ்) ஆகியோர் தொடர்பிலான ஆட்கொணர்வு மனுக்களை அவர்களது மனைவிகள்…

  25. ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார் – சஜித் ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேசத்தில் இடம் பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேர்தலே இல்லை என அறிவித்து பைத்தியம் பிடித்தவர் போல் நடந்து கொள்கிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் இல்லை என்றால், இல்லாத தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்தது எவ்வாறு என தாம் கேள்வி எழுப்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். இந்நாட்டில் ஜனநாயகத்தை சீர்குலைத்து தேர்தலை நிறுத்துவதற்கு பிரதான ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.