Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை 6.5 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கையிருப்பாக வைத்திருக்க வேண்டும் என நிபுணர்கள் கருதுகின்றனர். கடந்த ஆண்டு நிதி நெருக்கடியின் உச்சக்கட்டத்தின் போது, இலங்கையின் கையிருப்பு சில நாட்களில் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாக இருந்தது மற்றும் எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நிதியை விடுவிக்க மத்திய வங்கி போராடியது. எவ்வாறாயினும், கடந்த சில மாதங்களில், நிலைமை கணிசமான அளவில் மேம்பட்டுள்ளதுடன், மார்ச் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்கள் 2.7 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதேவேளை, இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு மா…

  2. Published By: NANTHINI 10 APR, 2023 | 04:33 PM கொழும்பு, கெசல்வத்தை (வாழைத் தோட்டம்), டாம் வீதியில் 8.2 மில்லியன் ரூபாய் பணத்துடன் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணமானது உண்டியலின் ஊடான சட்டவிரோத பணப் பரிமாற்றத்தின் மூலம் சம்பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே விசேட அதிரடிப்படையினரால் இந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதான இருவரில் முக்கிய சந்தேக நபர் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என்றும், மற்றைய நபர் வெ…

  3. இலங்கையின் உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு மார்ச் மாதத்தில் 7.8 வீதத்தால் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு பெப்ரவரியில் தோராயமாக 28 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 30 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. அந்நிய கையிருப்பு சொத்துகளும் மார்ச் மாதத்தில் 21.3 சதவீதம் அதிகரித்துள்ளது. பெப்ரவரியில் 2,219 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் 2,691 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் காட்டுகின்றன. உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு கடந்த மாதம் 20.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இது மார்ச் மாதத்தில…

  4. Published By: T. SARANYA 10 APR, 2023 | 02:07 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) நாட்டில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்களை (ஸ்பா) ஒழுங்குபடுத்துவதற்கு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும், பாட நெறிகளை ஆரம்பிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுதேச மருத்துவ கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். நாட்டில் பல ஆயுர்வேத ஸ்பாக்கள் விபச்சார விடுதிகளாக இயங்கி வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "ஆயுர்வேத ஸ்பாக்கள், உள்ளூராட்சி மன்றங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். எனினும், அவை மேற்பார்வைக்கு உட்பட்டவை அல்ல. ஸ்பாக்களில் காணப்பட…

  5. சஹ்ரானின் மைத்துனர் கைது உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் முக்கியஸ்தர்களில் ஒருவராக கருதப்பட்டவரும் அவ்வியக்கத்தின் தலைவர் எனக்கூறப்பட்டவருமான சஹ்ரான் ஹாசிமின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்ட 3 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அதன்பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அவர், குளியாப்பிட்டிய கட்டுபொத்த பிரதேசத்தில் இருந்து நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் உள்ள அவரது மனைவின் பெற்றோரின் வீட்டுக்கு வருகைதந்து கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் அதிகார…

  6. சாவகச்சேரியில் லஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சன்மானம் - யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் Published By: DIGITAL DESK 5 சாவகச்சேரியில் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவர் லஞ்சமாக கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தினை பெற மறுத்து தன் கடமையை சரிவர புரிந்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்திற்கு சன்மானம் வழங்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்தார் நேற்றிரவு (07 ) யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமாக கடத்து செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர் கடமையில் இருந்த …

  7. முறையற்ற மணல் அகழ்வு தொடர்பில் சுமந்திரன் நடவடிக்கை யாழ். மாவட்டம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் மகேஸ்வரி நிதியம் மணல் அகழ்ந்த இடம்களை பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் நேற்று (09) நேரடியாக சென்று பார்வையிட்டார். அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் பல்வேறு முறையற்ற மணல் அகழ்வு தொடர்பாக கருத்து வெளியிட்டார். யாழ். மாவட்டம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் மகேஸ்வரி நிதியத்தால் 2010 ஆம் ஆண்டிலிருந்து 2015 ம் ஆண்டு வரை சுமார் பத்து இலட்சம் கியூப் மணல் மண்ணிற்க்கு அதிகமான மணல் மண் முறையற்ற விதத்தில் அகழப்பட்டு ஏற்றிச் செல…

  8. அமெரிக்காவின் யு.எஸ்.என்.எஸ் பிரன்சுவிக், என்ற கடற்படையின் போக்குவரத்து கப்பல் நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. இது, அமெரிக்க கடற்படை கட்டளையின் விரைவுப் போக்குவரத்துக் கப்பல் ஆகும். துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள், உள்-திரையரங்கு மற்றும் போக்குவரத்தை வழங்கும் திறன் கொண்ட இந்த கப்பலில் 1200 கடல் மைல் தூரத்திற்கு 600 தொன் உபகரணங்களை எடுத்துச் செல்ல முடியும். இதன் சராசரி வேகம் மணிக்கு 25 கடல் மைல்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பலுக்காக இந்த கப்பல் திருகோணமலைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/248655

  9. லொத்தர் சபைக்கு வரலாற்றில் முதல் தடவையாக 3 பில்லியன் ரூபா இலாபத்தை பதிவு செய்ய முடிந்ததாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் அஜித் குணரத்ன கூறியுள்ளார். கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி லொத்தர் வெற்றியாளர்களுக்கான நிதி காசோலை வழங்கும் பிரதான வைபவத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கோவிட் தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் சவால்களால் நாட்டின் தனியார் மற்றும் அரச துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. எனினும் அதனை அச்சமின்றி எதிர்கொண்டு சிறந்த நிர்வாகத்துடன் தேசிய லொத்தர் சபை தனது இலக்குகளை எட்டியுள்ளது. தேசிய லொத்தர் சபை புதுப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் DLB என புதிய வர்த்தக…

  10. இலங்கையில் நாளாந்தம் 932.4 மெற்றிக் தொன் பிளாஸ்ரிக் கழிவுகள் சூழலுடன் கலப்பதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. அதில், 300.30 மெற்றிக் தொன் பிளாஸ்ரிக் சேகரிக்கப்படுவதாகவும், 632.12 பிளாஸ்ரிக் கழிவுகள் சூழலில் விடப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு சூழலில் வீசப்படுகின்ற 419.47 மெற்றிக் டன் பிளாஸ்ரிக், எரிக்கப்படும் நிலையில், 38.48 மெற்றிக் தொன் பிளாஸ்ரிக் கழிவுகள் மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. மீள்சுழற்சி செய்யும் பிரதான நிறுவனங்களுக்கு உரிய முறையில் குறித்த கழிவுப் பொருட்கள் சென்றடையவில்லை என சுற்றாடல் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச் சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்படுகின்றது. எனவே, மீள்சுழற்சி செய்…

  11. மாகாண சபைகளின் அரசியல் அதிகார சபைக்கு சொந்தமான 207 சொகுசு வாகனங்களை தற்போது யார் பயன்படுத்துகிறார்கள்? என்பது தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இது தொடர்பில் கணக்காய்வு கோருவதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ், உரிய சொகுசு வாகனங்களை யார் பயன்படுத்துகிறார்கள், என்னென்ன கடமைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பது தொடர்பான தகவல்களைக் கோருவதற்கு எம்பிக்கள் குழு தயாராகி வருகிறது. குறிப்பாக குறிப்பிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு வாகனங்கள் இல்லாத சூழ்நிலையில் இந்த விடயம் பாரதூரமானது என தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அரசாங…

  12. Published By: NANTHINI 09 APR, 2023 | 04:34 PM ஜப்பானில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி நிலையங்களை நிறுவுதல் மற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு அதிக வருமானம் ஈட்டக்கூடிய அதிக தொழில்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக ஜப்பானிய அரசாங்கத்துடன் இருதரப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, அந்நாட்டின் உயர்மட்ட இராஜதந்திரிகள் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்தபோதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். தாதியர் துறையில் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய…

  13. ‘வெடியரசன் கோட்டை’ பௌத்த தூபியாகிறதா? யாழ்ப்பாணம் நெடுந்தீவு மேற்குப் பகுதியில் சிதைவடைந்த நிலையில் காணப்படும் புராதன வெடியரசன் கோட்டைப் பாகங்களை பௌத்த தாதுகோபுரத்தின் எச்சங்களாக நிறுவுவதற்கான நடவடிக்கைகள் நெடுந்தீவில் முனைப்புடன் இடம்பெற்று வருகின்றன. இந்தக் கோட்டையின் வரலாற்றை திரிபுபடுத்தும் நோக்குடன் நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையிலும் கோட்டை காணப்படும் இடத்திலும் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தப் புராதன கோட்டையின் பாகங்கள் பௌத்த தாது கோபுரத்தின் எச்சங்கள் என திடீரென விளம்பரப் பலகைகள் முளைத்துள்ளன. இந்த விளம்பரத்தில் ‘ பல்வேறு தொல்பொருள் கலைப்…

  14. Published By: NANTHINI 08 APR, 2023 | 10:12 AM (எம்.மனோசித்ரா) திருகோணமலை கடற்பரப்பில் கடந்த 2019 ஏப்ரலில் 196.98 கிலோ ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 சந்தேக நபர்கள் மேல் மாகாண மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை கடந்த புதன்கிழமை (5)‍ விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழு, சந்தேக நபர்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என குறிப்பிட்டு தீர்ப்பை வெளியிட்டது. அத்தோடு இது குறித்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வழங்கிய அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எ…

  15. - யாழ் அஸீம் - தலை­முறை தலை­மு­றை­யாக வடக்கு மண்ணில் வாழ்ந்த தமிழ்- முஸ்லிம் மக்­க­ளி­டையே வலு­வான பிணைப்­புக்­களும், உற­வு­களும் தொடர்ந்து வந்­தி­ருக்­கின்­றன. மத ரீதி­யாக மட்டும் இவர்கள் வேறு­பட்­டாலும் வேற்­று­மைக்குள் ஒற்­று­மையை காட்டும் பல அம்­சங்கள் இரு தரப்­பி­ன­ரி­டை­யேயும் காணப்­ப­டு­கின்­றன. திரு­ம­ணங்­களில் தாலி கட்­டுதல், மாலை­யி­டுதல், திரு­மணப் பந்­தி­முறை, சீதனம் போன்­றன யாழ் முஸ்லிம் மக்­க­ளிடம் காணப்­பட்ட, தமிழ் மக்­க­ளின் கலாச்­சாரப் பண்­பு­க­ளாகும். இத்­த­கைய நெருக்­க­மான உற­வு­களின் கார­ண­மா­கவே, தாயக மண்­ணி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட வேளை­யிலும், தமிழ் மக்கள் மீது எவ்­வித கசப்­பு­ணர்­வையும், பகை­மை­யையும் முஸ்­லிம்கள் கொண்­ட…

    • 3 replies
    • 849 views
  16. Published By: T. SARANYA 08 APR, 2023 | 04:09 PM (எம்.மனோசித்ரா) சீனா மற்றும் இலங்கைக்கிடையிலான பாரம்பரிய நட்பை வலுப்படுத்தல் மற்றும் பல்வேறு துறைசார் பரிமாற்றங்கள் குறித்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென் ஹொங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ் - சிங்கள சித்தரைப் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் நேற்று சனிக்கிழமை முன்னாள் பிரதமரை சீனத் தூதுவர் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின் போதே இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் பயங்கரவாத செயற்பாடுகள், போருக்குப் பின்னரான …

  17. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 'சிறைச்சாலை நூலகம்' ; நாளை அங்குரார்ப்பணம்! Published By: Nanthini 07 Apr, 2023 | 12:08 PM “ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன” எனும் கூற்றுக்கமைய யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் நாளை (8) சனிக்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தனது கற்றல், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி செயற்பாடுகளுக்கப்பால், தான் சார்ந்த சமூகத்தின் மேம்பாட்டுக…

  18. சித்திரை புதுவருடப் பிறப்பை முன்னிட்டு முல்லைத்தீவு கண்ணகி மாட்டுவண்டில் சவாரி சங்கத்தினர் இந்த படகுப் போட்டியை இன்று(08) ஏற்பாடு செய்திருந்தனர். நந்திக்கடலில் நடைபெற்ற படகுப் போட்டியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.சிவமோகன் ஆரம்பித்து வைத்தார். பந்தய தூரம் ஒரு கிலோ மீற்றர் நிர்ணயிக்கப்பட்டதுடன் நன்னீர் மீன்பிடி சங்கங்களை சேர்ந்த 10 படகுப் போட்டியாளர்கள் பங்குபற்றினர். முத்தையன் கட்டு நன்னீர் மீன்பிடி சங்கம் முதலிரண்டு இடங்களையும் வற்றாப்பளை மீன்பிடி சங்கம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. https://thinakkural.lk/article/248575

  19. Published By: NANTHINI 02 APR, 2023 | 03:50 PM (எம்.நியூட்டன்) யாழ். இருபாலையில் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லத்தை கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம் இணைந்து முற்றுகையிட்டதில் 13 சிறுவர்கள் இன்று (2) முற்பகல் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்படவுள்ளனர். யாழ்ப்பாணம், இருபாலை பகுதியில் கிறிஸ்தவ சபையொன்றினால் அனுமதியின்றி சிறுவர் இல்லம் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே முற்றுகையிடப்பட்டு, 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அந்த சிறுவர்கள் இல்லத்த…

  20. சர்வ தேசியவாதி க. பத்மநாபாவின் சிலை திறப்பு! By kugen ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எவ்)யின் ஸ்தாபகத் தலைவரும் அதன் முதலாவது செயலாளர் நாயகமுமான க.பத்மநாபாவின் திருவுருவச் சிலை 05.04.2023 புதன்கிழமை அன்று திரைநீக்கம் செய்யப்பட்டது. வவுனியா மணிக்கூண்டு கோபுரத்திற்கு எதிரில் தந்தை செல்வாவின் சிலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள க. பத்மநாபாவின் சிலையினை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் க. சுரேஷ் பிரேமச்சந்திரன்; திரைநீக்கம் செய்து திறந்துவைத்தார். இது குறித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் ந. சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் விபரம் வருமாறு: இலங்கையை ஆட்சி செய்த பிரித்தானிய ஏகாதிப…

    • 8 replies
    • 1.2k views
  21. 10வயது சிறுமியை வன்புணர்வு - தமிழர் பகுதியில் அரங்கேறிய கொடூரம்! Vhg ஏப்ரல் 01, 2023 வவுனியா - தாண்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 10 வயது பாடசாலை மாணவியை கடந்த 4 வருடங்களாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டவர்கள் குறித்த சிறுமியின் உடன்பிறந்த சகோதரன் மற்றும் சிறிய தந்தையார் உள்ளிட்ட மூவர் என வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா-தாண்டிக்குளம் பகுதியில் வசிக்கும் 10 வயது மாணவி வவுனியா நகர்ப்புற பாடசாலை ஒன்றில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்று வருகின்றார். குறித்த மாணவி கடந்த புதன்கிழமை தனது வகுப்பு ச…

  22. Published By: RAJEEBAN 08 APR, 2023 | 02:19 PM ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் அடுத்தவருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறலாம் என்பது குறித்தும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க சூசகமாக சுட்டிக்காட்டியுள்ளார் சிறுபான்மை கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்தவாரம் இடம்பெற்ற சந்திப்பில் ரணில்விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். ரணில்விக்கிரமசிங்க தான் தேர்தலில் போட்டியிடக்கூடும் எனவும் அடுத்தவருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார். நாடு சில மாதங்களிற்கு முன்னர் ஒப்பிடுகையில் சிறந்த நிலையில் உள்ளது என தெரிவித்துள்ள ஜனாதிபதி பொருளாதாரம் ஸ்திரநிலைக்கு திரும்பியதும் நான் அரசியல் கட்சிகளு…

  23. வவுனியாவில் நாளை தமிழ் கட்சிகளின் ஒன்றுகூடல்!! வவுனியாவில் சமகால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் முகமாக வவுனியாவில் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளுக்கான ஒன்றுகூடல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. வவுனியாவில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அகில் இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் பதிய மாக்ஸிஸ லெனினிச கட்சி என்பனவும் கலந்துகொள்ளவுள்ளது. தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள், காணி ஆக்கிரமிப்புக்கள், தமிழர் பாரம்பரியங்களை அழிக்கும் செயற்பாடுகள் உட்பட அரசியல் தீர்வு விடயங்களில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான க…

  24. தமிழர் பகுதியில் பறிபோகும் பிள்ளையார் ஆலயம் - படைகளின் பிரசனத்துடன் குடியேறும் புத்தர்! Vhg ஏப்ரல் 07, 2023 இராணுவம் மற்றும் கடற்படை உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட திருகோணமலை - மூதூர் மலையடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணி நிறைவை எட்டியுள்ளது. இந்த நிலையில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பௌத்த விகாரையின் தேவைக்காக தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் 64ஆம் கட்டையிலுள்ள மலையடி பிள்ளையார் ஆலயம் அந்த வீதியால் பயணிக்கும் மக்களின் வழிபாட்டுத் தலமாகும். இந்த ஆலயப் பகுதிக்கு கடந்த 2021 டிசெம்பர் மாதம் பிக்குகள் க…

  25. நான்கு பிள்ளைகளுக்கு மேல் பெற்று, தமிழில் பெயர் வைக்கும் தம்பதியினருக்கு ஊக்க தொகை வழங்கும் செயற்திட்டத்தினை சைவ மகா சபை பங்குனி உத்தர நாளான நேற்றைய தினம் (05) புதன்கிழமை ஆரம்பித்துள்ளது. அந்நிலையில் சமய, சமூக, மது ஒழிப்பு செயற்பாட்டாளரான சாந்தை பண்டதரிப்பை சார்ந்த கடம்பன் அசுவினி தம்பதியினர் ஐந்தாவது குழந்தையான சிவாத்மிகலனை பெற்றெடுத்தமைக்காக ஊக்க தொகை மற்றும் சத்துமா என்பன சைவ மகா சபை தலைவர் சண்முகத்தினத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 5 வருடங்களிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் கொரோனா பொருளாதார நெருக்கடியால் சிறிது காலம் தடைப்பட்டு இருந்தது. இத்திட்டத்திற்கு பங்களிக்க விரும்பும் நல்லுள்ளங்கள் சைவ அறப்பணி நிதிய வங்கி கணக்கு ஊடா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.