ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
அரசாங்கத்துடன் இணைந்து காட்டிக்கொடுக்கும் அங்கஜன் : செ.கஜேந்திரன் காட்டம் இனப்படுகொலை செய்கின்ற சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து காட்டிக்கொடுக்கின்ற வேலைகளைச் செய்கின்ற அங்கஜன் இராமநாதன், தங்களை நோக்கி கேள்வி எழுப்புவதற்கு எந்தவிதமான அருகதையும் இல்லை எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். சுதந்திரத் தினத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு ஆடைகளைக் கிழித்து சிறைக்குச் சென்று ஒரு நாடகமாடியிருந்ததாக அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக ஊடகங்கள் நேற்றைய தினம் (16.02.2023) எழுப்பிய கேள்விக்கே செ.கஜேந்திரன் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார். இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த 30 வருடங்களாகக் காட்டிக்கொடுக்கின்ற…
-
- 2 replies
- 751 views
-
-
திருடப்பட்ட முச்சக்கர வண்டியினை விற்பனைக்கு எடுத்துச் சென்ற பொலிஸ் அதிகாரி கைது! திருடப்பட்ட முச்சக்கர வண்டியினை விற்பனைக்கு எடுத்துச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பயாகல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவில் சாரதியாக கடமையாற்றியவர் என களுத்துறை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, பெற்ற சம்பளம் கடனை அடைப்பதற்கு போதுமானதாக இல்லாத காரணத்தினால் இந்த திருட்டினை செய்ய தூண்டியதாக தெரித்துள்ளார். https://athavannews.com/2023/1324402
-
- 3 replies
- 741 views
-
-
இலங்கையில் மத அடிப்படைவாதம் வேகமாக வளர்ந்துவருகின்றது: அர்ஜீன் சம்பத்! இலங்கையில் மத அடிப்படைவாதம் வேகமாக வளர்ந்துவருவதாக தமிழக இந்துமக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார். வவுனியாவிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த அவர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தற்போதைய பொருளாதார சிக்கல்களில் இருந்து மீண்டெழுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பன்னாட்டு உதவிகள் இங்கே கிடைக்கப்பெறுகின்றது. இந்திய அரசும் பெரியளவில் இலங்கைக்கு உதவி வருகின்றது. குறிப்பாக வீதிகள், தொடரூந்து வீதிகள், வீட்டுத்திட்டம் அத்துடன் கடன்கள் என்று பி…
-
- 2 replies
- 714 views
-
-
இலங்கையில் கருத்துச்சுதந்திரம் மீதான முடக்கம் சிவில் சமூகங்களின் சுதந்திரத்தை பாதித்துள்ளது - சர்வதேச மன்னிப்புச்சபை Published By: VISHNU 17 FEB, 2023 | 01:21 PM (நா.தனுஜா) இலங்கை அரசாங்கம் கடந்த இருவருடகாலமாகக் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை மிகையாக முடக்கிவந்திருப்பதுடன் அதன்விளைவாக சிவில் சமூகங்களின் சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் எந்தவொரு சமூகத்திலும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பன இன்றியமையாதவையாகும். அவற்றுக்கு மதிப்பளிக்கப்பட்டு, பாதுகாக்கப்படும் அதேவேளை, அவை உரியவாறு பூர்த்திசெய்…
-
- 1 reply
- 911 views
- 1 follower
-
-
(எம்.மனோசித்ரா) உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குவது கடினமாகும் என்று என நிதி அமைச்சின் செயலாளர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக தேர்தலுக்கு நிதி வழங்குவது கடினமாகும் என நிதி அமைச்சின் செயலாளர் கூறியதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தியாவசிய சேவைகளை பேணுவதற்கு மாத்திரம் நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் எடுத்த நிர்வாக தீர்மானத்தையும் நிதி அமைச்சின் செயலாளர் ஆணைக்குழுவுக்கு சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று முற்பகல் அறிவித்தது. எதிர்வரும் 22, 23, 24 மற…
-
- 0 replies
- 129 views
-
-
(நா.தனுஜா) இலங்கையைப் பொறுத்தமட்டில் அடுத்த சில மாதங்கள் மிகமுக்கியமானவையாகும். அதன்படி இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுவந்த மனிதாபிமானத்தேவைகள் மற்றும் முன்னுரிமைக்குரிய விடயங்கள் தொடர்பான செயற்திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவிற்குவரும் நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான மனிதாபிமான செயற்திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டுவருவதாக மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கை முகங்கொடுத்திருக்கும் பல்பரிமாண நெருக்கடி தொடர்பில் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் வெளியிட்டுள்ள நிலைவர அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப…
-
- 0 replies
- 588 views
-
-
இந்திய நிறுவனங்களிடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் - ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் Published By: VISHNU 17 FEB, 2023 | 01:43 PM (நா.தனுஜா) இந்தியாவின் இரு தனியார் நிறுவனங்களிடமிருந்து மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைக்கு எதிராக ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது. ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் வியாழக்கிழமை (16) தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவில் இந்திய தனியார் நிறுவனங்களிடமிருந்து மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்யும் விவகாரத்துடன் …
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
நியாயமற்ற மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவேன் - பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் Published By: VISHNU 15 FEB, 2023 | 03:20 PM (இராஜதுரை ஹஷான்) ஆணைக்குழுவின் தலைவர் என்ற ரீதியில் எனது அனுமதி இல்லாமல் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் மின்கட்டணத்தை இன்று முதல் 65 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழவின் மூன்று உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள். நியாயமற்ற மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவேன் என இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 24 மணித்தியாலங்களும் தடை…
-
- 2 replies
- 540 views
- 1 follower
-
-
வருமான வரி அதிகரிப்பு விவகாரம்; -மார்ச் முதலாம் திகதி பாரிய தொழிற்சங்க போராட்டம் - தொழிற்சங்கங்கள் Published By: RAJEEBAN 17 FEB, 2023 | 02:52 PM வருமான வரி அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் உரிய பதில்களை வழங்காவிட்டால் மார்ச் முதலாம் திகதி நாடளாவிய ரீதியில் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. அதிக வருமானம் ஈட்டும் அரசாங்க ஊழியர்களை பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கங்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. பல்கலைகழக ஆசிரியர் சங்க கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். கல்வி சக்திவலு துறைமுகம் சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்களும் அ…
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
திருகோணமலையில் அமெரிக்க இராணுவதளமா? நிராகரித்தார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க அதிகாரி Published By: Rajeeban 17 Feb, 2023 | 10:14 AM திருகோணமலையில் அமெரிக்க இராணுவதளம் குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுவதை அமெரிக்காவின் பாதுகாப்பு விவகாரங்களிற்கான முதன்மை துணை உதவி செயலாளர் ஜெடிடியா பி ரோயல் நிராகரித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க அதிகாரி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோனை சந்தித்துள்ளார். திருகோணமலை தளம் குறித்து எதனையும் தெரிவிக்கவிரும்பவில்லை என…
-
- 0 replies
- 573 views
-
-
கிளிநொச்சி - கிராஞ்சி வலைப்பாடு நீர் விநியோகத் திட்டம் ஆரம்பம் Published By: Nanthini 17 Feb, 2023 | 09:57 AM கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி வலைப்பாடு நீர் விநியோகத் திட்டம் கடந்த 15ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 858 பயனாளிகளுக்கு உதவும் வகையில், உலக வங்கியின் 228.78 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த நீர் விநியோகத் திட்டமே பொது மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேச மக்கள் நீண்ட காலமாக குடிநீர் உட்பட நீர்த் தேவையினை பூர்த்தி செய்துகொள்வதில் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்துள்ளனர். …
-
- 0 replies
- 507 views
-
-
இலங்கை- இந்தியாவிற்கிடையில் மின்சார கட்டமைப்புகளை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்! இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மின்சார கட்டமைப்புகளை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு மாதங்களுக்குள் கையெழுத்திடப்படும் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மின்சார கட்டமைப்புகளை ஒன்றிணைக்கும் உடன்படிக்கையை எற்படுத்திக்கொண்டதன் பின்னர் செயலாக்க ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஒரு தசாப்தத்திற்கு முன்னதாக முன்மொழியப்பட்ட இந்த திட்டம் இதுவரை சிறிய அளவிலான முன்னேற்றத்தையே எட்டியுள…
-
- 4 replies
- 272 views
- 1 follower
-
-
மஹிந்தவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை பிழை – பஷில் மஹிந்தவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை பிழை எனவும், அவர்தான் இப்போதும் பிரதமராக இருந்திருக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கியது மொட்டுக் கட்சியினர் அல்லர் எனவும், போராட்டக்காரர்களே அவரைப் பிரதமராக்கினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள்தான் மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும், எதிர்க்கட்சியில் இருந்து ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் கோரினார்கள் எனவும் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்தவே பிரதமராக இருக்க வேண்டும் என்ற நிலைப்ப…
-
- 0 replies
- 539 views
-
-
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் மருந்துகள் திருடி விற்பனை செய்யப்பட்ட விவகாரம் – விசாரணைகள் ஆரம்பம்! மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட புற்றுநோய்க்கான மருந்து விற்பனை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணையின் பின்னர், சம்பவம் தொடர்பாக கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். இததற்கமைய நேற்று இரண்டு விசாரணைக் குழுக்கள் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தன. சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்குள் சமர்ப்பிக்க…
-
- 0 replies
- 118 views
-
-
மின்கட்டண அதிகரிப்பு : 31- 60 அலகிற்கான புதிய கட்டணம் 2,278 ரூபா - முழுமையான விபரம் Published By: T. SARANYA 16 FEB, 2023 | 05:52 PM (இராஜதுரை ஹஷான்) 24 மணித்தியாலங்களும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்கவும், மின்னுற்பத்திக்கான செலவுகளை முகாமைத்துவம் செய்யவும் இலங்கை மின்சார சபை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்கட்டணத்தை 66 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. நிறைவடைந்த 5 மாத காலப்பகுதிக்குள் இரு தடவைகள் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளன. 0-30 மின்னலகுக்கான கட்டணம் 753 ரூபாவாகவும்,31-60 அலகுக்கான புதிய கட்டணம் 2,278 ரூபாவாகவும், 90 மின்னலகுக்கான கட்டணம் 3,675 ரூபாவாகவும்,91-120 வரையான மின…
-
- 3 replies
- 241 views
- 1 follower
-
-
யாழில் குடும்பப்பெண் அடித்துக் கொலை : தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் கைது Published By: T. SARANYA 17 FEB, 2023 | 10:20 AM குடும்பப்பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்து தலைமறைவாகியிருந்த நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். சமூக பாகுபாட்டை சுட்டிக்காட்டி பேசியதனால் ஏற்பட்ட சடுதியான கோபத்தினால் பெண்ணை தாக்கியதாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கினார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் அத்தியடியில் 55 வயதுடைய தாய் 15 ஆம் திகதி இரவு அடித்து கொலை செய்யப்பட்டார். “கணவனை பிரிந்து வாழும் அவர் பெண் பிள்ளை ஒருவருடன் வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு வேலைகளுக…
-
- 0 replies
- 464 views
- 1 follower
-
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவும் பாரியாரும் சீனாவுக்குப் புறப்பட்டனர்! Published By: T. SARANYA 16 FEB, 2023 | 11:07 AM முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது மனைவி அயோமா ராஜபக்க்ஷவும் இன்று (பெ்ப 16) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சீனாவை நோக்கிச் சென்றனர். மலேஷியாவின் கோலாலம்பூர் நோக்கிச் செல்லும் இவர்கள் அங்கிருந்து சீனாவுக்குப் புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மலேஷியாவின் மலேஷியன் ஏர்லைன்ஸின் MH-178 விமானத்தில் இருவரும் இன்று அதிகாலை 12.25 மணிக்கு புறப்பட்டனர். https://www.virakesari.lk/article/148328
-
- 3 replies
- 548 views
- 1 follower
-
-
தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்பது படையினரின் கெடுபிடிக்கு பொதுமக்கள் உள்ளாகலாம் - அருட்தந்தை மா.சத்திவேல் Published By: T. Saranya 16 Feb, 2023 | 11:09 AM தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்ற கூற்று படையினரின் கெடுபிடிக்கு பொதுமக்கள் உள்ளாகலாம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "தமிழ் ஈழத்தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்" …
-
- 1 reply
- 608 views
-
-
யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தை தமிழ் மக்களிடமே வழங்க வேண்டும் - சி.வி.விக்கினேஸ்வரன் Published By: VISHNU 16 FEB, 2023 | 05:47 PM யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தை தமிழ் மக்களிடமே வழங்க வேண்டுமென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய அரசின் நிதி உதவியில் யாழில் அமைக்கப்பட்ட கலாசார நிலையம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ளதாவது.. யாழ்ப்பாண கலாச்சார மண்டபம் தமிழ் மக்களுக்கென்று இந்தியாவால் வழங்கப்பட்டது. ஆகவே அதனை பராமரிப்பது கலாச்சார …
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும் - ஜீவன் தொண்டமான் By NANTHINI 05 FEB, 2023 | 06:01 PM மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும். கட்சி, தொழிற்சங்க பேதங்களின்றி பயனாளிகளுக்கு உரிய வகையில் வீடுகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இ.தொ.கா கட்சியின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், சவாலை எதிர்கொள்ள வேண்டுமெனில் களத்தில் இறங்கியாக வேண்டும். நெருக்கடியை கண்டு பின்வாங்கி நிற்பது ஏற்புடையதல்ல. அதனால்தான் நெருக்கடியான சூழ…
-
- 1 reply
- 537 views
- 1 follower
-
-
அரச அச்சகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை – பெப்ரல் வாக்குச் சீட்டுகளை வழங்கத் தவறிய அரச அச்சகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் கண்காணிப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர். வாக்குச் சீட்டுகளை வழங்காமல் இருக்க அரச அச்சகம் அரசியலமைப்புக்கு முரணான தீர்மானத்தை எடுத்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவும் அரசாங்க அச்சகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாப்பான பொதிகள் இன்று புதன்கிழமை இலங்கை தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவிருந்தது. எனினும் வாக்க…
-
- 0 replies
- 489 views
-
-
மருத்துவர் சிவரூபனுக்கு அமோக வரவேற்பு ! பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்ட மருத்துவர் சிவரூபனுக்கு இன்று அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிளிநொச்சி – பளை பிரதேச வைத்தியசாலையில் கடமையிலிருந்தபோது 4ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் பளை பிரதேச பிரதேச மக்களாலும் மருத்துவமனை ஊழியர்களாலும் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்டார். அதனை தொடர்ந்துமருத்துவர் சிவரூபன் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். https://athavannews.com/2023/1324149
-
- 3 replies
- 720 views
-
-
நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மரண தண்டனை! பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட நான்கு உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை விதித்து ஹம்பாந்தோட்டை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு ஜூன் 28 சூதாட்ட நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவே இணைத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வவிசாரணை இன்று ஹம்பாந்தோட்டை உயர் நீதிமன்றத்திற்கு வந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. https://athavannews.com/2023/1324176
-
- 2 replies
- 683 views
-
-
பாதுகாப்பு சம்பவம் ஒன்றை தொடர்ந்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் இந்தியாவிற்கான விசா விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நிலையம் (ஐவிஎஸ் கொழும்பு) காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, விசா விண்ணப்பங்கள் தொடர்பில் திகதிகளை பெற்றிருந்த விண்ணப்பதாரிகள் மீண்டும் புதிய திகதிகளை பெற்றுக்கொள்வதற்காக ஐவிஎஸ் நிறுவனத்தை தொடர்புகொள்ளவேண்டும். அவசர விசா அல்லது தூதரக தேவைகள் உடையவர்கள் தொலைபேசி மூலம் இந்திய உயர்ஸ்தானிகரலாயத்தை தொடர்புகொள்ள முடியும். இதேவேளை, கொழும்பில் அமைந்துள்ள இந்திய வீசா நிறுவனத்தில் நேற்று செவ்வாய்கிழமை இரவு திருட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலையத்தில் காணப்பட்ட மடிக்கணனி உள்…
-
- 0 replies
- 315 views
-
-
மன்னாரில் அமைந்துள்ள பாடல் பெற்ற தளமான திருக்கேதீஸ்வரத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இவ்வருடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளவிருப்பதால் பல முக்கிய அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, பக்தர்கள் நீராடும் பாலாவி குளத்தில் முதலைகள் இருக்கலாம் என்ற அச்சம் காணப்படுவதால் இக்குளத்தை பரிசோதனை செய்து, பக்தர்கள் அச்சமின்றி நீராட வழிவகுக்குமாறு வனவிலங்கு பாதுகாப்பு இலாகா பகுதியினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சிவராத்திரி தினத்தன்று திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வுகள் தொடர்பில் கலந்தாலோசிப்பதற்காக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. அ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் திருக்கேதீஸ்வர ஆலய மண்ட…
-
- 0 replies
- 308 views
-