ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
இலங்கை விமானத்தில் மீண்டும் கோளாறு துபாய்க்கு புறப்பட்ட இலங்கை விமானத்தில் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை 06.27 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-225 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 256 பயணிகள் மற்றும் 14 பணியாளர்கள் இருந்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சுமார் ஒரு மணி 06 நிமிடங்களின் பின்னர் விமானத்தின் உள்ளே குறைந்த காற்றழுத்தம் காரணமாக மீண்டும் திரும்பி நேற்றிரவு 07.33 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதையடுத்துஇ விமானத்தில் இருந்த பயணிகள் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு அ…
-
- 1 reply
- 288 views
-
-
பாராளுமன்றில் IMF விவாதம்; எதிர்க்கட்சிகள் பங்கேற்காது மொழிப் பிரச்சினையை முன்வைத்து தப்பித்துக்கொள்ள முயற்சி அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கை தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்காதென பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவாதம் எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறுமென கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் மொழிமாற்றம் செய்யுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 524 views
-
-
Published By: DIGITAL DESK 5 22 APR, 2023 | 12:00 PM வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தினுள் புகுந்து ரௌடிகள் வர்த்தகரை தாக்கியதில் வர்த்தகர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை (21) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக மூவர் அடங்கிய ரௌடி கும்பல் ஒன்று சிறுநீர் கழித்துள்ளனர். இதன் காரணமாக குறித்த வர்த்தக நிலைய வர்த்தகர் இவ்விடத்தில் சிறுநீர் கழிக்காது அருகில் உள்ள பொது கழிப்பறைக்கு செல்லுங்கள் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரௌடி …
-
- 1 reply
- 676 views
- 1 follower
-
-
இலங்கை அரசியல்வாதிகள் முட்டாள்களாக செயற்படுகிறார்கள் ! கோட்டாவுக்கு பொது அறிவு இல்லை ! – ஜனக ரத்நாயக்க இலங்கையின் அரசியல்வாதிகளை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கடுமையாக விமர்சித்துள்ளார். அரசியல்வாதிகள் முட்டாள்களாக செயற்படுகிறார்கள் என்று அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். மின் கட்டண உயர்வை ஆதரிக்க மறுத்த தம்மை பதவி நீக்கம் செய்ய எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அழுத்தம் கொடுத்து வருகிறார். எனினும், தன்னை நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் தேவைப்படும் 113 பெரும்பான்மையை பெற முடியாது என்று ரத்நாயக்க சவால் விடுத்துள்ளார். மின்சாரத்தின் தேவை வெகுவாகக் கு…
-
- 1 reply
- 524 views
-
-
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவு! உலகத்தையே அதிர்வுக்குள்ளாக்கிய ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன்(வெள்ளிக்கிழமை) நான்கு வருடங்கள் கடந்துள்ளன. உலக வாழ் கிறிஸ்தவ மக்கள், சமாதானத்தின் இறைவனாம் இயேசு கிறிஸ்த்துவின் உயிர்ப்பை கொண்டாடிக் கொண்டிந்த, இன்று போன்றதொரு தினத்தில் தான் அந்தக் கொடியச் சம்பவம் நிகழ்த்தப்பட்டது. 8.45 மணி முதல் 9 மணிவரையான அந்த நேரப்பகுதிக்குள் இலங்கைத் தீவின் 8 இடங்கள் குண்டுச் சத்தங்களினால் அதிர்ந்தன. 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, கத்தோலிக்க – கிறிஸ்தவ தேவாலயங்களையும் நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் 269 பேர் க…
-
- 18 replies
- 1k views
-
-
22 APR, 2023 | 10:40 AM இலங்கை பொறுப்பான ஆட்சியாளர்கள் அற்ற நாடு என ஓமல்பே சோபிததேரர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் சம்பவம் இடம்பெற்று நான்குவருடங்களாகிவிட்டபோதிலும் அதற்கு பொறுப்பேற்க எவரும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு யார் காரணம் என்பதை கண்டறிவதற்கு தவறியுள்ளமை பௌத்த கோட்பாடுகளிற்கு எதிரான விடயம் என குறிப்பிட்டுள்ள ஓமல்பே சோபிததேரர் நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வது ஆட்சியாளர்களின் கடமை என புத்தர் போதித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/153458
-
- 3 replies
- 601 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 22 APR, 2023 | 01:49 PM யாழ்ப்பாணம், நல்லூர் அரசடி பகுதியில் போதை ஊசிகளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து போதை ஊசிகள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் , கைதான மூவரும் நகர் பகுதியில் பழக்கடைகளில் பழ விற்பனையில் ஈடுபடும் நபர்கள் எனவும் அவர்கள் மூவரும் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெ…
-
- 0 replies
- 433 views
- 1 follower
-
-
இலங்கை GSP+ வரிச் சலுகைகளை இழக்கும் அபாயம் ! உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவும், ஐரோப்பிய ஒன்றியமும், தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில், இலங்கை GSP ப்ளஸ் வரிச் சலுகைகளை இழக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் ஐரோப்பிய வெளிவிவகார நடவடிக்கை பிரிவின் உதவி நிர்வாக இயக்குனர் பவ்லா பம்பலோனி (Paola Pampaloni), புதிய யோசனைக்கு அதிருப்தியை வெளிப்படுத்தி, இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய சட்டமூலத்தின் உள்ளடக்கம் தொடர்பில் அமெரிக்கா தமது அதிருப்தியை வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க ஊட…
-
- 1 reply
- 392 views
-
-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய தலைவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தலைவராக பேராசிரியர் வணக்கத்துக்குரிய உதுராவல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (22) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் அவரது நியமனம் ஏகமனதாக வழங்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2023 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கட்சி அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் ஆரம்பமானது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுக்கு கட்சியின் செயலாளர் கடிதம் மூலம் தெரியப்படுத…
-
- 0 replies
- 383 views
-
-
யாழ். பண்ணையில் நாகபூசணி அம்மன் சிலை வைத்தவர்கள் இராணுவ புலனாய்வாளர்கள் - வேலன் சுவாமிகள் Published By: T. Saranya 22 Apr, 2023 | 11:36 AM யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் நாகபூசணி அம்மன் சிலையை வைத்ததன் பின்னணியில், இராணுவ புலனாய்வு பிரிவினர் உள்ளனர் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசியத்தை சிதைப்பதற்காக தம…
-
- 0 replies
- 671 views
-
-
செயற்கை நுண்ணறிவிற்காக பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு –முற்றிலும் புதிய கல்வி முறை – வருடாந்தம் பத்தாயிரம் பொறியியலாளர்கள் - ஜனாதிபதி கருத்து Published By: Rajeeban 22 Apr, 2023 | 11:53 AM செயற்கை நுண்ணறிவிற்காக அடுத்த வருடம் பில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடுசெய்வதாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தனியார் வர்த்தகர்கள் மத்தியில் உரையாற்றியவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். பில்லியன் ரூபாய் என்பது மிகச்சிறிய தொகை என தெரிவித்துள்ள ஜனாதிபதி அதேவேளை இந்த தொகையை எங்களால் செலவு செய்ய முடியுமா என்ற சந்தேகம் தனக்குள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எங…
-
- 0 replies
- 178 views
-
-
Published By: VISHNU 21 APR, 2023 | 03:52 PM தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழும் படுகொலை செய்யப்பட்ட கிளிபாதரின் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக நடைபெற்றது. 20.04.2008 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி வன்னிவிளாங்குளம் அம்பாள்புரம் 6 ம் கட்டை பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சேவியர் கருணாரட்ணம் (கிளி பாதர்) அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வவுனிக்குளம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இரங்கல் திருப…
-
- 4 replies
- 436 views
- 1 follower
-
-
வியட்நாமில் இருந்து 23 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர் வியட்நாமில் இருந்து நாடு கடத்தப்பட்ட 23 இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். நவம்பர் 2022 இல் வியட்நாம் கடற்பரப்பில் ஆபத்தில் இருந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கை பிரஜைகளின் ஒரு பகுதியாக இந்த குழு இருந்தது. 303 இலங்கை பிரஜைகளை ஏற்றிச் சென்ற வியட்நாம் நாட்டுக் கொடியுடன் மீன்பிடிக் கப்பல் ஒன்று 2022 நவம்பர் 7 ஆம் திகதி வியட்நாம் கடற்பரப்பில் விபத்துக்குள்ளானதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் நிலைகொண்டிருந்த கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (எம்ஆர்சிசி) பின்னர் வியட்நாமில் தற்காலிகமாக குடியேறியவர்களை மீட்டெடுப்ப…
-
- 1 reply
- 616 views
-
-
Published By: DIGITAL DESK 5 22 APR, 2023 | 10:43 AM கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனையின் நுங்கு பருவகாலம் ஆரம்பமாகிவிட்டது. யாழ். செம்மணியில் வீதி, அரியாலை மற்றும் யாழ். நகர்மத்திய பகுதிகளிலும் நுங்கின் விற்பனை இன்று சூடுபிடித்து காணப்படுகிறது. அதிகரித்து காணப்படும் வெப்பநிலை காரணமாக உடல் சூட்டினை தணிப்பதற்காக இந்த நுங்கினை பல பயணிகள் எடுத்தும், உட்கொண்டும் வருகின்றனர் ஒரு நுங்கானது 100ரூபா முதல் 150ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. இதனை பலர் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. https://www.virakesari.lk/article/153460
-
- 0 replies
- 549 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 22 APR, 2023 | 10:55 AM (நா.தனுஜா) இலங்கை பொலிஸாரால் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு தீர்ப்பாயத்தின் 17 பேரங்கிய நீதியரசர் குழாம் இலங்கைக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியுள்ளது. சுவிஸ்லாந்துக்குத் தப்பிச்செல்வதற்கு முன்னதாக இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரொருவர் சுமார் ஒருமாதகாலமாக கிரிக்கெட் துடுப்புமட்டையால் தாக்கப்பட்டமை, மின்சாரத்தாக்குதல், வன்புணர்வு என்பன உள்ளடங்கலாகப் பொலிஸாரால் மிகுந்த சித்திரவதைகளுக்க…
-
- 1 reply
- 225 views
- 1 follower
-
-
கடும் வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு சுகாதார நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு சுகாதாரத் துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், அதிக உடற்பயிற்சி செய்பவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். அதிக வெப்பமான காலநிலையின் எதிர்மறையான உடல் விளைவுகளைக் குறைக்க எடுக்கக்கூடிய முக்கிய நடவடிக்கை, அதிக தண்ணீர் குடிப்பதாகும், மேலும் அதிக உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 2 முதல் 4 கிளாஸ் தண்ணீர் குடிப்பது பொருத்தமானது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. முடிந்தவரை வீட்டிற்குள் அல்…
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
21 APR, 2023 | 04:50 PM (இராஜதுரை ஹஷான்) பிறப்பு சான்றிதழ் பத்திரம் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதை அண்மித்த இலங்கையர்கள் அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறையான படிமுறை வழிமுறை தொடர்பான சுற்றறிக்கை சகல பிரதேச சபை பிரிவுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சேவையை பெற்றுக்கொள்ள தேவையுடைய நபர்கள் கிராம சேவகர் அலுவலரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளுமாறு ஆட்பதிவுத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பிறப்பு சான்றிதழ் பத்திரம் இல்லாத காரணத்தால் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளாத நபர் இந்…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
நாட்டில் வைத்தியர்கள் 1,320 பேருக்கு எதிர்வரும் 25 ஆம் திகதியில் இருந்து புதிதாக நியமனம் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கிணங்க இந்த வைத்தியர்கள் அன்றிலிருந்து நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளகளுக்கு இணைத்துக் கொள்ளப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவ்வைத்தியர்கள் பிரதானமாக பின்தங்கிய பிரதேச வைத்தியசாலைகளில் பணிபுரிவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் அனைத்து வைத்தியர்களின் எண்ணிக்கை 19,000 ஆகக் காணப்படுவதுடன், புதிய வைத்தியர்களின் நியமனத்துடன் அவர்கள் 20,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளனர். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண…
-
- 0 replies
- 470 views
- 1 follower
-
-
பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை எதிர்த்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் Published By: DIGITAL DESK 5 20 APR, 2023 | 02:31 PM பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை எதிர்த்து வவுனியாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (20) காலை முன்னெடுக்கப்பட்டது. வடக்கு - கிழக்கு பெண்கள் கூட்டால் வவுனியா பத்தினியார் மகிழங்குளம், முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. இதன்போது 'சிறுபான்மையினரை அடக்குவதற்காக புதிய சட்டத்தை உருவாக்காதீர், இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கு வழி விடுங்கள், இலங்கை அரசே பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்கதே' போன்ற வாசகங்கள் …
-
- 7 replies
- 829 views
- 1 follower
-
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளை ஈ தாக்கத்தினால் சுமார் ஐந்தாயிரம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்னை பயிர் செய்கை சபையின் வடபிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 75 வீதமான தென்னைகளுக்கு கட்டுப்படுத்தல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வெள்ளை ஈ தாக்கமானது இந்த வருடம் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் – ஆஸ்பத்திரி வீதி பகுதியில் முதன்முறையாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அந்த நோய் தாக்கம் யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பரவியுள்ளது. தொடர்ச்சியாக இந்த வெள…
-
- 0 replies
- 473 views
- 1 follower
-
-
Published By: VISHNU 21 APR, 2023 | 05:39 PM (எம்.மனோசித்ரா) வருடத்திற்கு 12 இலட்சம் ரூபாவுக்கும் அதிக வருமானத்தைப் பெருபவர்கள் வருமான வரியை செலுத்துவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தேசிய வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய தேசிய வருமான வரி திணைக்களத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பதிவுப் பிரிவிற்கு நேரடியாக வருகை தந்து அல்லது இணையதளத்தின் ஊடாக தமது ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. www.ird.gov.lk என்ற இணைய தளத்திற்குள் பிரவேசித்து ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மாவட்ட தேசிய வருமான வரி திணைக்களத்தின் கிளைகளிலும் இவற்றை கையளிக்க …
-
- 0 replies
- 494 views
- 1 follower
-
-
முட்டைக்கு விலை நிர்ணயம் – அதிவிசேட வர்த்தமானி வெளியானது! முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிறையின் அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச சில்லறை விலையும் குறித்த வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோகிராம் வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 880 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 920 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வெள்ளை நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாயாகவும், சிவப்பு நிற முட்டை ஒன்றின் சில்லறை விலை 46 ரூபாயாகவும் காணப்படுகின்றது. ht…
-
- 2 replies
- 619 views
-
-
Published By: T. SARANYA 21 APR, 2023 | 10:55 AM மட்டக்களப்பில் விசேட தேவையுடைய இரு சிறுமிகளை கட்டிவைத்து சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மற்றும் மனித உரிமை ஆணைக் குழுவினர் குறித்த பராமரிப்பு நிலையத்துக்கு வியாழக்கிழமை (20) சென்று விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான பராமரிப்பு நிலையத்தில் 22 பெண்கள் 4 ஆண்கள் உட்பட 26 சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் அங்குள்ள ஒரு சிறுமியின் இரு கைகளை பின்பக்கமாவும் இரு கால்களையும் கயிற்றினால் கட்டி அறையில் வைக்கப்பட்ட காட்சியும், இன்னுமொரு …
-
- 3 replies
- 517 views
- 1 follower
-
-
Prednisolone சொட்டு மருந்தை பயன்படுத்த வேண்டாம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்துகளை உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்குமாறு சுகாதார அமைச்சு அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது. Prednisolone கண் சொட்டு மருந்துகளை மருத்துவமனைகளுக்கு வழங்குவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது. சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட மூன்று நோயாளிகள் Prednisolone பயன்படுத்தியதன் பின்னர் சில சிக்கல்களை எதிர்கொண்டதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய கண் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சைகளின் பின்னர் ஒரே ச…
-
- 2 replies
- 648 views
-
-
Published By: DIGITAL DESK 5 21 APR, 2023 | 11:59 AM வவுனியா வடக்கில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 1500 இற்கு மேற்பட்ட பப்பாசி மரங்களும், பயன்தரு ஏனைய மரங்களும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கடும் வெப்பத்திற்கு மத்தியில் வவுனியா வடக்கில் நேற்று (20) மாலை திடீரென கடும் காற்றுடன் மழை பெய்துள்ளது. இதன்போது, வவுனியா வடக்கு ஓடைவெளி கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் காய்த்து அறுவடைக்கு சில வாரங்களே இருந்த 1500 பப்பாசி மரங்கள் காற்றில் முறிந்து விழுந்து அழிவடைந்துள்ளன. அத்துடன், ஒலுமடு கிராம அலுவலர் பிரிவில் உள்ள விவசாயிகள் பலரின் வாழ்வாதாரமாக இருந்த பப்பாசி, வாழை, புகையி…
-
- 0 replies
- 583 views
- 1 follower
-