ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
இந்தியப் படையால் தொப்பிகலையை கைப்பற்ற முடியவில்லை என்பது தவறானது - மேஜர் ஜென்ரல் அசோக் மேத்தா இந்திய அமைதிப் படைக்காலத்தில் இந்திய இராணுவத்தால் தொப்பிகலையை கைப்பற்ற முடியவில்லை என்பது தவறானது என இந்திய அமைதிப்படையின் கிழக்கு மாகாண கட்டளை அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜென்ரல் அசோக் மேத்தா தெரிவித்துள்ளார் இந்திய அமைதிப்படை காலத்தில் தொப்பிக்கல பகுதியை கைப்பற்ற வேண்டிய அவசியம் தமக்கு இருக்கவில்லை என்றும் அது இராணுவ முக்கியத்துவம் மிக்க பிரதேசமல்ல என்றும் அசோக் மேத்தா குறிப்பிட்டுள்ளார் இந்திய இராணுவத்தின் 20 000 துருப்புகளால் கைப்பற்ற முடியாத தொப்பிக்கல பிரதேசத்தை தமது படைகள் கைப்பற்றியுள்ளதாக ஸ்ரீலங்காவின் படைத்துறை பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவும்…
-
- 1 reply
- 1k views
-
-
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் பழ. நெடுமாறன் நேரில் முறையீடு யாழ்ப்பாணத்தில் பட்டினியால் வாடும் ஈழத்தமிழர்களுக்காக தமிழக மக்கள் மனமுவந்து அளித்த உணவுப் பொருட்களும், மருந்துப் பொருட்களும் இந்திய அரசின் அலட்சியப் போக்கால் யாருக்கும் பயன்படாது வீணாகிக் கொண்டிருக்கும் செய்தியை ஜெனிவாவில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தலைவரிடம் பழ. நெடுமாறன் நேரில் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் முக்கிய வழித்தடத்தை சிங்கள அரசு மூடியதால் ஏறத்தாழ கடந்த ஓராண்டு காலமாக யாழ் மக்கள் பட்டினியாலும், மருந்துப் பொருட்கள் கிடைக்காமலும் அவதியுற்று வருகின்றனர். யாழ் மக்களின் துயர் துடைக்க தமிழீழ ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் தமிழகமெங்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட…
-
- 0 replies
- 1k views
-
-
இனப்பிரச்சினையில் நேரடியாக தலையிடுவதற்கு அமெரிக்கா ஆயத்தம் - சிங்கள தேசியவாதிகள் இலங்கையின் இனப்பிரச்சினையில் நேரடியாக தலையிடுவதற்கு அமெரிக்கா ஆயத்தமாகி வருவதாக சிங்கள தேசியவாதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர் ஆண்மையில் அமெரிக்க காங்கிரசின் 50 உறுப்பினர்கள் அமெரிக்க ஜனாதிபதியிடம் கூட்டாக இலங்கை விவாகரத்தில் தலையிடுமாறு விடுத்த கோரிக்கை ஒரு நாடகம் என்றம் அதனை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்சே நடத்தியிருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது ஜோர்ஜ் புஷ்சின் ஆலோசனைக்கு அமைவாகவே அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் 50 பேரும் கூடு;டாக அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் இதன் மூலம் இலங்கை விவகாரத்தில் தலையிடுமாறு தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக அனைத்துலகை நம்ப வைப்பதற்கு அம…
-
- 1 reply
- 851 views
-
-
செட்டிக்குளம் படுகொலையைச் செய்தது சிறிலங்கா இராணுவமே: கொல்லப்பட்டவரின் மனைவி கண்ணீர் சாட்சியம் வவுனியா செட்டிக்குளத்தில் நிகழ்ந்த மூவர் படுகொலைக்கு சிறிலங்கா இராணுவமே காரணம் என்று கொல்லப்பட்டோரில் ஒருவரின் மனைவி கண்ணீர் சாட்சியமளித்துள்ளார். வவுனியா மாவட்ட நீதிபதி மா.இளஞ்செழியனின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இந்த வழக்கின் விசாரணை நடந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையகம் (யு.என்.எச்.சி.ஆர்.) மற்றும் நோர்வே அகதிகளுக்கான பேரவை ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும், சிறிலங்கா இராணுவ அதிகாரிகளும் பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டிருந்தனர். படுகொலை செய்யப்பட்டோரில் ஒருவராகிய மாணிக்கம் ரமேஸ் என்பவரின் மனைவி அளித்த சாட்சியம்: எமது வீட்டிற…
-
- 0 replies
- 740 views
-
-
துணை இராணுவக் குழுவினரிடம் உள்ளுராட்சி சபைகளை ஒப்படைப்பதற்காக புதிய சட்டத் திருத்தம். கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி சபைகளை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரிடம் ஒப்படைக்கும் வகையில் புதிய சட்ட திருத்தத்தை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இச்சட்டத் திருத்தத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் ஏற்கெனவே 9 உள்ளுராட்சி சபைகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களும் இரத்துச் செய்யப்பட உள்ளது. கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் அனுர பிரியதர்சன யாப்பா கூறியதாவது: உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பி…
-
- 1 reply
- 1.2k views
-
-
நோர்வேயை அழைக்கவேயில்லை - அழைக்கத் தேவையும் இல்லை: சிறிலங்கா அரசாங்கம். இலங்கை அமைதி முயற்சிகளை மீளத் தொடங்க நோர்வேயை சிறிலங்கா அரசாங்கம் அழைக்கவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் நேற்று புதன்கிழமை சிறிலங்கா பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல கூறியதாவது: அமைதி முயற்சிகளை மீளத் தொடங்குமாறு நோர்வேயை சிறிலங்கா அரசாங்கம் அழைக்கவில்லை. நோர்வேயை அழைக்க வேண்டிய தேவை சிறிலங்காவுக்கு தற்போது இல்லை. அமைதி முயற்சிகளைத் தொடங்குமாறு ஜோன் ஹன்சன் பௌயருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக வெளியான ஊடகச் செய்திகள் பொய்யானவை. இந்த நாட்டின் பகுதிகளில் இறைமையை தொடர்ந்தும் செலுத்துவதற்கான நடவடிக்கைக…
-
- 4 replies
- 1.8k views
-
-
எமது இனத்தின் பெருமையையும் வீரத்தையும் உலகறியச் செய்த நாள் "கரும்புலிகள் நாள்": சு.ப.தமிழ்ச்செல்வன் [வியாழக்கிழமை, 5 யூலை 2007, 15:52 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] எமது இனத்தின் பெருமையையும் வீரத்தையும் உலகறியச் செய்த மிக முக்கியமான ஒருநாள் "கரும்புலிகள் நாள்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற லெப். கேணல் சந்திரன் நினைவு சிறுவர் பூங்கா திறப்பு நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய சிறப்புரை: எமது குழந்தைகள் சிரித்து வாழவேண்டும். மகிழ்வோடு வாழ வேண்டும் என்பதற்காக தங்கள் உயிர்களை கொடுத்த அந்த உன்னதமானவர்களின் இந்த நாளில் நாம் இந்தப் பூங்காவை திறந்து…
-
- 5 replies
- 2k views
-
-
மன்னார் தம்பனையில் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: 10 இராணுவத்தினர் பலி. மன்னார் மாவட்டம் தம்பனைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் 10-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். மன்னார் தம்பனைப் பகுதியூடாக இன்று வியாழக்கிழமை காலை 6.15 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தினர் பின்தள எறிகணைச் சூட்டாதரவுடன் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டனர். இம் முன்னேற்ற முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய இரண்டு மணிநேர எதிர்த்தாக்குதலில் 10 க்கும் மேற்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் கிளைமோர்கள் - 08 உட்பட இராணுவத் தளபாடங்களும் தொலைத் தொடர்பு சாதனமும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப…
-
- 3 replies
- 1.5k views
-
-
கிழக்கு பஸ் டிப்போக்களுக்கு 32 புதிய பஸ்கள் வழங்கல் வீரகேசரி நாளேடு இலங்கை போக்குவரத்துச் சபையின் 25 டிப்போக்களை மாதிரி பஸ் டிப்போக்களாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் கிழக்கில் மூன்று பஸ் டிப்போக்களுக்கு 32 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. கிழக்கில் அம்பாறை, கந்தளாய், வாகரை ஆகிய மூன்று பஸ் டிப்போக்கள் இந்த மாதிரித்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு முறையே 15, 12, 5 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண செயலாற்றுகைப் பணிப்பாளர் எம்.என்.எச். நசீர் தெரிவித்தார். இம்மூன்று டிப்போக்களின் முன்னேற்றம் தொடர்பாக அவதானிக்கப்பட்டு வரும் அதேவேளை இவற்றுக்கு மேலும் பஸ்கள், ஆளணி ஆகியவை வழங்கப்பட்டு அபிவிருத்தி செய்…
-
- 2 replies
- 846 views
-
-
ஆட்களை கடத்தி கப்பமாக பெறப்பட்ட பணம் கரீபியன் தீவிலுள்ள வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது வீரகேசரி நாளேடு கடத்தல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிசாந்த கஜதீரவிடம் குற்றப்புலனாய்வு பொலிஸார் நேர்மையான முறையில் விசாரணை நடத்துவார்களா? என்பது தொடர்பில் எமக்கு நம்பிக்கையில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் செனவிரட்ன தெரிவித்தார். ஆட்களை கடத்தி கப்பமாக பெறப்பட்ட பணம் கரீபியன் தீவிலுள்ள வங்கிக் கணக்கொன்றில்தான் வைப்பிலிடப்பட்டுள்ளது. கப்பமாக பெறப்பட்ட பணத்தில் பெரும் பகுதி அரசின் உயர் அதிகாரியொருவரின் தனிப்பட்ட கணக்கில் தான் வைப்பிலிடப்பட்டுள்ளது. கடத்தல் தொடர்பில் கைதான கஜதீரவிடம் விசாரணை நடத்தும…
-
- 1 reply
- 1.1k views
-
-
மக்கள் பிரதிநிதிகளான எமக்கும் பல தேவைகள் உண்டுஇது குறித்து ஊடகங்கள் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை வீரகேசரி நாளேடு மக்கள் பிரதிநிதிகள் என்றாலும் எங்களுக்கும் தனிப்பட்ட தேவைகள் இருக்கின்றன. நாங்கள் உணவு உட்கொள்ளவேண்டும். முடிவளர்க்கவேண்டும். உடைஅணியவேண்டும். இவ்வாறு பல தேவைகள் உள்ளன. நாங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்னரும் சொகுசு வாகனங்களில் சென்றோம். அரசியலுக்கு வந்த பின்னரும் சொகுசு வாகனங்களை பயன்படுத்துகின்றோம். இவை குறித்து ஊடகங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்று ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார். ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை பொறுப்புடன் மேற்கொண்டால் குற்றவியல் சட்டமூலம் கொண்டுவரப்படவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படாது. ஊடகத்துறை அமை…
-
- 1 reply
- 990 views
-
-
வியாழன் 05-07-2007 17:37 மணி தமிழீழம் [செந்தமிழ்] அவலநிலை தொடருமானால் இலங்கையை மீளவும் கட்டியெழுப்ப 100 ஆண்டுகள் தேவை தற்போதைய அவலநிலை தொடருமானால் இலங்கையை மீள கட்டியெழுப்புவதற்று 100 ஆண்டுகள் தேவைப்படும் என மட்டக்களப்பு மாவட்ட தென்னிந்திய திருச்சபையின் முதல் எஸ்.ஜே.ஜெபநேசன் கருத்து வெளியிட்டுள்ளார் மட்டக்களப்பு மாவட்டம் சின்ன ஊறணி பகுதியில் உள்ள அமெரிக்க மிசனில் நேற்று நடைபெற்ற சமாதானத்தை ஏற்படுத்தும் வழிமுறைகள் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் கடந்த 10 வருடங்களில் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களை சோந்த மக்களில் 60 சதவீதமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் இவ்வாறான நிலை தொடருமானால் இலங்கையில்…
-
- 1 reply
- 988 views
-
-
இராணுவத்துக்கு 25 ஆயிரம் பேரை உடனடியாக திரட்ட நடவடிக்கை [05 - July - 2007] *நேர்முகப் பரீட்சை இடம்பெறுகிறது எம்.ஏ.எம்.நிலாம் இராணுவத்துக்கு உடனடியாக 25 ஆயிரம் பேரைச் சேர்த்துக் கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த இரண்டாம் திகதி முதல் நாடு முழுவதிலுமுள்ள இராணுவ முகாம்களில் நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க அறிவித்துள்ளார். இராணுவம் பெற்றுவரும் வெற்றிகளை உறுதி செய்து நாட்டில் அமைதியை நிலைநாட்டும் பொருட்டே இந்த ஆட்திரட்டல் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இம்மாதம் இரண்டாம் திகதியன்று 18 வயதைப்பூர்த்தி செய்த 24 வயதைத் தாண்டாத இளைஞர்களே இராணுவத்துக்குச் சேர்த்த…
-
- 4 replies
- 1.5k views
-
-
-
- 9 replies
- 1.8k views
-
-
கருணா குழுவினரை நிராயுதபாணியாக்குமாறு கோருவதா?: அமெரிக்காவுக்கு பெர்னாண்டோ புள்ளே கண்டனம். சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரான கருணா குழுவினரை நிராயுதபாணியாக்குமாறு அமெரிக்காவின் இராஜாங்க பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சர் விடுத்துள்ள கோரிக்கையானது பயங்கரவாதம் குறித்த அமெரிக்காவின் கொள்கையைக் கேள்விக்குறியாக்கி விட்டதாக சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கூறியதாவது: கருணா குழுவினர் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதைப் போன்றே விடுதலைப் புலிகளும் ஒரு பயங்கரவாத அமைப்பாகும். ஐக்கிய அமெரிக்காவின் பயங்கரவாத…
-
- 5 replies
- 1.7k views
-
-
அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபை காலத்தை வீணடிக்கும் முயற்சி: இணைத் தலைமை நாடுகளின் மாநாட்டில் கருத்து வெளியீடு இலங்கை இனப்பிரச்சினை தீர்வு குறித்து ஆராயும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபையின் தீர்வு யோசனைகள் தமிழர் தரப்பால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என இணைத்தலைமை நாடுகளின் மகாநாட்டில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கு பற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அபிலாசைகள் குறித்து தெளிவு படுத்துவதற்கு வாய்பளிக்கப்படாமை குறித்து அமெரிக்கா நோர்வே ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன விசனம் தெரிவித்துள்ளன. வடக்கு கிழக்கு மக்களின் அபிலாசைகளை உள்வாங்காத தீர்வு திட்டத்தை தமிழ் மக்களோ அல்லது விடுதலைப் பு…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ்நகரில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தலையாட்டிகள் முன் நிறுத்தப்பட்டு விசாரணை [05 - July - 2007] *நேற்று பிற்பகல் முதல் இரவு வரை தொடர்ந்தது யாழ் நகரில் மானிப்பாய் வீதிக்கு மேற்குப் பக்கமாக நேற்று புதன்கிழமை பிற்பகல் இராணுவத்தினர் பாரிய திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் ஒன்றை நடத்தியுள்ளனர். யாழ். மானிப்பாய் வீதியில், ஓட்டுமடம் சந்தியிலிருந்து அராலி வீதி,பொம்மைவெளி, நாவாந்துறை மற்றும் அதையண்டிய பகுதிகளும், வண்ணைச் சந்திக்கு மேற்குப் புறமாக ஐந்து சந்தி, சிவன்பண்ணை வீதி, வெள்ளாந்தெரு, கொட்டடி மற்றும் அதனையண்டிய பகுதிகளுமே சுற்றிவளைப்புத் தேடுதல்களுக்குள்ளாக்கப்பட்
-
- 1 reply
- 1.2k views
-
-
சுதந்திர கட்சியின் மக்கள் முன்னணியுடன் இணைந்து செயல்பட முடியாது என ஜே.வி.பி அறிவிப்பு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் முன்னணியுடன் இணைந்து செயல்பட முடியாது என ஜே.வி.பி அறிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் ஜே.வி.பியினருடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் முன்னணி இன்று காலை பேச்சுவார்தை நடத்தியது. இதன் போது ஜே.வி.பி ,ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவு ஆகியவற்றை ஒன்றிணைத்து அரசாங்கத்திற்கு எதிரான முன்னணி ஒன்றை தோற்றுவிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது. எனினும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து எந்த ஒரு அரசியல் வேலைத் திட்டதிலும் தமது கட்சி ஈடுபடாது என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க திட்ட…
-
- 0 replies
- 805 views
-
-
விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாக தோற்கடித்துவிட முடியாது: அமைச்சர் டியூ குணசேகர தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்தாலும்கூட அரசியல் ரீதியாக தோற்கடித்துவிட முடியாது என்று சிறிலங்காவின் அரசியல் யாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரும் கொம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளருமான டியூ குணசேகர தெரிவித்துள்ளார். சிறிலங்கா கொம்யூனிஸ்ட் கட்சியின் 64ஆம் ஆண்டையொட்டி நிகழ்வு கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் டியூ குணசேகர பேசியதாவது: ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள் நாட்டினது இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். பண்டாரநாயக்க காலத்தில் தொடங்கிய இனப்பிரச்சனையானது ஜே.ஆர். ஜயவர்த்தன ஆட்சிக்காலத்தில் இரத்தம் தோய்ந்ததாக மாறியது. 25 ஆண்ட…
-
- 2 replies
- 1.5k views
-
-
கிழக்கில் அரசின் சாதனைகள் இன்னும் எவ்வளவு காலத்துக்கு? பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார் இளந்திரையன் கிழக்கில் சாதிப் பதாக ஸ்ரீலங்கா சொல் லும் விடயம் எவ் வளவு காலம்தான் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப் போம். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இரா சையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட் டுத்தாபன வானொலியில் (ATBC) செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய ""செய்தி அலைகள்'' நிகழ்ச்சிக்கு அவர் அளித்த செவ்வியில் கூறியுள்ளதாவது: கிழக்குப் பகுதி என்பது ஒரு வித்தியா சமான தரையமைப்பைக் கொண்ட தனித் துவமான நிலம். கெரில்லா வகை போராளி களின் தாய்மடியாகும். கடந்த 25வருட காலமாக அங்கு எங்களுடைய படைகள் பல நடவடிக்கைகளைக் கரந்தடிப்படை யாக ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசாங்கத்தில் இணையாவிட்டால் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிழக்குக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும்: அமைச்சர் ஜெயராஜ் பகிரங்க எச்சரிக்கை "கிழக்கு விடுவிக்கப்பட்ட பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த ஐந்து தமிழர் விடுதலைக் கூட்டணி அமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு செல்வதில் சிக்கல் ஏற்படும்" என்று மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ செய்தி ஊடகத்தில் வெளியாகி உள்ள செய்தி விவரம்: தமிழர் விடுதலைக் கூட்டணியிலுள்ள சிலர் அரசாங்கத்தில் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் புலிகளின் அச்சுறுத்தலே இதற்குத் தடையாகவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர்…
-
- 0 replies
- 799 views
-
-
தொப்பிகலவை கைப்பற்றப்போன அரசாங்கம் இன்று தனக்குத்தானே தொப்பியை போட்டுள்ளது [05 - July - 2007] *ரவி கருணாநாயக்க எம்.பி. தெரிவிப்பு டிட்டோகுகன், ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் சமாதானம் மூலமே நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமென ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த போதும் யுத்தத்தின் மூலம் சமாதானத்தை கொண்டு வருவதாகக் கூறிய அரசாங்கம், இன்று சகலதையும் தவறவிட்ட நிலையில் மீண்டும் சமாதானப் பேச்சுகள் எனக் கூறி தடுமாறி வருவதாக ஐ.தே.க. வின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிதி அமைச்சின் கீழ்வரும் நிறுவனங்கள் தொடர்பான ஒழுங்குவிதிகள் மற்றும் விசேட கருத்திட்டங்கள் அமைச்சுக்கான…
-
- 0 replies
- 2k views
-
-
தவறுகளைத் தொடர்ந்து இழைத்து விபரீதங்களை வாங்கிக் கொள்வோர் இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான விவகாரத்தை இன்றுவரை கையாண்ட எல்லாத் தரப்புகளுமே தமது பொறுப்பற்ற போக்கினால் எழக்கூடிய விபரீத விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல், குறுகிய எண்ணப் போக்கில் இவ்விட யத்தை அணுகி, அதன் மூலம் அதனை மென்மேலும் சிக் கலாக்கியிருக்கின்றன என்பதே நிதர்சனம். இப்பிணக்கில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட சிங்களத் தலைமைகளில் இருந்து, அயல் வல்லாதிக்க சக்தியான இந்தியா முதற்கொண்டு, சர்வதேச சமூகம் வரை இத்தவ றுக்கு விதிவிலக்கல்ல என்பதே அனுபவப் பாடம். இவ்வாறு தவறுகளை இழைத்தோருக்கு காலம் கடந்து தான் அத்தவறுகள் விபரீத விளைவுகளை ஏற்படுத்தி மோசமான பட்டறிவை தந்த பின்னர்தான் அவற்றின் தா…
-
- 0 replies
- 1.2k views
-
-
Head of Scandinavian ceasefire monitoring team visits Tamil rebels http://news.monstersandcritics.com/southas...ts_Tamil_rebels
-
- 4 replies
- 1.7k views
-
-
புலனாய்வுப் பிரிவினரால் மரண அச்சுறுத்தல் பாதுகாப்பு வழங்க கோருகிறார் ஜயலத் எம்.பி. குற்றப்புலனாய்வு பிரிவினரால் தமக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட எம்.பி. டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவினர் தன்னை கைது செய்வதற்கு முற்படுவதாகவும் அது தனது சிறப்புரிமை மீறல் எனவும் ஜயலத் எம்.பி. சபையில் குற்றம் சாட்டினார். பாராளுமன்றம் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணிக்கு கூடியது. எம்.பி.க்களுக்கான வாய் மூல கேள்வி நேரம் முடிவடைந்த பின்னர் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்தபோதே அவர் …
-
- 1 reply
- 906 views
-