ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பேட்டியொன்றின் போது தெரிவித்த கருத்திற்காக இலங்கைக்கான சீன தூதரகம் அவரை கடுமையாக சாடியுள்ளது. அமெரிக்க தூதுவரை இலங்கைக்கான சீன தூதரகம் கபடம் மிக்கவர் என விமர்சித்துள்ளது. இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான பிரிட்டனின் சமீபத்தைய தொலைகாட்சி நிகழ்ச்சியின் போது எங்களின் அமெரிக்க நண்பர் சீனா சீனா என்ற மந்திரத்தை ஓதினார்சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளிற்கு சீனா பாதிப்பை ஏற்படுத்துகின்றது என தெரிவித்தார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. தனது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் விரிவுரைகளிற்கு முன்னர் எங்களின் அமெரிக்க சகா சில கேள்விகளை கேட்டிருக்கவேண்டும்,- சர்வதேச நாணயநிதியத்தில் முக்கிய கொள்கை முடிவுகள் தொடர்பான வீட்…
-
- 1 reply
- 690 views
-
-
உயர்தர பரீட்சை திங்கள் ஆரம்பம் ; 331,709 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் By T. SARANYA 18 JAN, 2023 | 03:25 PM (எம்.மனோசித்ரா) கொவிட் தொற்று உள்ளிட்ட கடந்த வருடத்தில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக காலம் தாழ்த்தப்பட்டிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி , பெப்ரவரி 17 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் இடையறாத மின் சேவையை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை மின்சாரசபை சாதகமான பதிலை …
-
- 0 replies
- 354 views
- 1 follower
-
-
புலம்பெயர் இலங்கையர்களின் முதலீடுகளை எதிர்பார்க்கும் இலங்கை பங்கு சந்தை By DIGITAL DESK 5 17 JAN, 2023 | 12:41 PM ரொபட் அன்டனி புலம்பெயர் மக்கள் இலங்கையின் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக புலம்பெயர் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் சென்று அங்கு விசேட பிரச்சார கண்காட்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள விருக்கின்றோம் என்று கொழும்பு பங்குபரிவர்த்தனை நிறுவனத்தின் தலைவர் டில்ஷான் வீரசேகர தெரிவித்தார். மேலும் கொழும்பு பங்கு பரிவர்த்தனை தரவுகள் தற்போது மத்திய தர மையப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுவிட்டதாகவும் மக்கள் இலகுவாக தமது பங்குச்சந்தை கணக்குகளை …
-
- 0 replies
- 315 views
-
-
கொட்டாஞ்சேனையில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு கொழும்பு - கொட்டாஞ்சேனை ஆறாம் ஒழுங்கைப் பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மோட்டார்சைக்கிளில் வந்தவர்களே இந்த துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. காரில் பயணித்தவர் காயம் சம்பவத்தில் காரில் பயணித்த நபரொருவர் காயமடைந்துள்ளதுடன், அவர் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்துள்ளதுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர். கொட்டாஞ்சேனையில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு - தமிழ்வின் (tamilwin.com)
-
- 0 replies
- 602 views
-
-
பொங்கல் நாள் ஆர்ப்பாட்டமும் பிரதம அதிதிகளும் யாழ்ப்பாணத்தில் பொங்கல்நாளன்று ரணிலின் வருகையினை ஒட்டி காணாமலாக்கப்பட்ட இளைஞர் யுவதிகளின் பெற்றோரும் உறவினரும் பல்கலைக்கழக மாணவர்களோடு இணைந்து ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை நடத்தியிருந்தார்கள். எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது, எங்களது காணிகளை விட்டு வெளியேறு என்பனவே அவர்கள் முன்வைத்த கோஷங்களாக இருந்தன. ஆனால், இதனைத்தடுத்து நிறுத்திய பொலீஸார் மக்கள் மேல் நீர்த்தாரைப் பிரயோகம் நடத்தியதுடன், பேரணியையும் கலைத்தார்கள். இதே நாள், யாழ்ப்பாணத்தின் இன்னொரு பகுதியில், இதே மக்கள் கூட்டத்தின் இன்னொரு பகுதியினர் பொங்கல் நாளைச் சிறப்பாகக் கொண்டாடிக்கொண்டிருந்தனர். தலைவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் வருடாந்த பட்டமேற்றும் திருவிழா வ…
-
- 3 replies
- 802 views
-
-
இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவு – சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா தெரிவிப்பு- ரொய்ட்டர் By Rajeeban 18 Jan, 2023 | 09:01 AM இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக இந்தியா சர்வதேச நாணயநிதியத்திற்கு தெரிவித்துள்ளது என இந்த விடயங்கள் குறித்து நன்கறிந்த தரப்பொன்று தெரிவித்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து இலங்கை2.9 மில்லியன் கடன் உதவியை பெறுவதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. 1948 இல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரத்தை பெற்ற பின்னர் இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை நாட்டின் 2…
-
- 0 replies
- 463 views
-
-
கல்முனை மாநகர சபைக்காக வேட்புமனு தாக்கலுக்கு இடைக்கால தடை! எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கல்முனை மாநகர சபைக்காக வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படுவதை தடுக்கும் வகையில், உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏ.எம்.மொஹமட் சலீம் என்பவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த தடை உத்தரவு நாளை (19) வரை அமுலில் இருக்கும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. மனுவில் பிரதிவாதிக…
-
- 0 replies
- 154 views
-
-
யாழ் மாநகர சபையில் ஜனவரி 19ஆம் திகதி நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக இன்று இடம் பெற்ற கூட்டம் இணக்கமின்றி முடிவுக்கு வந்துள்ளது. யாழ் மாநகர சபையின் முதல்வர் தெரிவில் தமிழரசுக் கட்சிக்குள் பலத்த போட்டி JaffnaIllankai Tamil Arasu KachchiMavai SenathirajahS Shritharan in இலங் யாழ் மாநகர சபையில் முதல்வர் தெரிவு யாழ் மாநகர சபையில் ஜனவரி 19ஆம் திகதி நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக இன்று இடம் பெற்ற கூட்டம் இணக்கமின்றி முடிவுக்கு …
-
- 0 replies
- 980 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு மாவட்டத்திலும் வீணைச் சின்னத்தில் களம் இறங்குகிறது ஈ.பி.டி.பி! எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வீணை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தீர்மானித்துள்ளது. ஈ.பி.டி.பி. கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்களுக்கும், கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடகச் செயலாளரும், கிழக்கு பிராந்திய அமைப்பாளருமான ஸ்ராலினின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையில…
-
- 7 replies
- 883 views
-
-
அமெரிக்க கடற்படை மற்றும் Marine Corps என்பன இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப் படை என்பவற்றுடன் இணைந்து Cooperation Afloat Readiness and Training (CARAT)/Marine Exercise (MAREX) Sri Lanka 2023 எனும் கூட்டுப் பயிற்சி நடவடிக்கையினை (ஜன. 19 – 26, 2023) கொழும்பில் ஆரம்பிக்கவுள்ளன. CARAT/MAREX Sri Lanka என்பது பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கடல்சார் பங்காண்மைகளைப் பேணி வலுப்படுத்துதல் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் இணைந்து செயற்படும் திறன்களை அதிகரித்தல் ஆகிய நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டடுள்ள இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்புப் பயிற்சியாகும். இது அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஐந்தாவது CARAT/ MAREX பயிற்சி…
-
- 0 replies
- 427 views
-
-
யாழ்.பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடணத்தின் 22 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று (17) செவ்வாய்க்கிழமை நினைவு கூரப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், மாணவர்கள், இணைந்து பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி பொங்குதமிழ் பிரகடன நிறைவு நாளை நினைவு கூர்ந்திருந்தனர். இதன்போது பொங்குதமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது. இவ் எழுச்சி நிகழ்வில் வைத்து தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணைய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ் தேசியம் என்பவை அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பவை பொங்குதமிழ் பிரகடணமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ். பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ் | Virakesari.lk
-
- 0 replies
- 620 views
-
-
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பொங்கல் விழாவை இம்முறை சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கொண்டாடியுள்ளது. இராசபோசனம் என்ற பெயரில் இப்பொங்கல் விழா நேற்று திங்கட்கிழமை (16.01.2023) மல்லாகத்தில் இடம்பெற்றுள்ளது. கல்லாரை வளர்பிறை முன்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இவ்விழாவில் கலாநிதி பாலசிவகடாட்சத்தின் சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பும் ‘பயன் அறிந்து உண்க’ என்ற நூலும் வெளியிடப்பட்டது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசனின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிகத்துறைத் தலைவர் கலாநிதி ச.முகுந்தன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராகக் கவிஞர் சோ. பத்…
-
- 0 replies
- 602 views
-
-
( எம்.நியூட்டன்) அரசாங்கத்தின் தன்னிச்சையான அசாதாரண வரித் திருத்தத்தை உடனடியாக நிறுத்தவலியுறுத்தியும் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை(17) நண்பகல் கூடியவர்களே போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், பல் மருத்துவத் துறை சார்ந்தவர்கள், சட்ட மருத்துவ அதிகாரிகள், வங்கிகளின் தொழிற்சங்க அதிகாரிகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் , இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அரசாங்கம் குறித்த பிரச்சினைகளுக்கான தீர்…
-
- 0 replies
- 430 views
-
-
யாழ்.பலாலி சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்தார் ஜனாதிபதி! யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்காக விஜயம் மேற்கொண்டுள்ளார். அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட விமானத்தின் மூலம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது ஜனாதிபதியினை முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர்,வடக்கு மாகாண ஆளுநர், கடற்தொழில் அமைச்சர் ஆகியோர் வரவேற்றிருந்தனர். https://athavannews.com/2023/1320215
-
- 14 replies
- 1.4k views
- 2 followers
-
-
மக்களாணை இல்லாத அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது : ஜி.எல் பீரிஸ் ! kugenJanuary 17, 2023 மக்களாணை இல்லாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேசம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஊடாக நாட்டு மக்களின் அரசியல் நிலைப்பாட்டை சர்வதேசம் அறிந்து கொள்ளும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் நேற்று (16) திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உள்ள…
-
- 4 replies
- 493 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கைப்பற்றிய ஈழ விடுதலை போராளிகள் - இனி என்னவாகும்? கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முழுமையாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் வசமாகியுள்ளது. மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படாத அரசியல் கட்சிகள் மற்றும் போராளிகள் அடங்கிய கூட்டணியாக செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிளவுபட்டு, தற்போது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் கூட்…
-
- 3 replies
- 827 views
- 1 follower
-
-
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக சிவபாலசுந்தரன் நியமனம் By VISHNU 17 JAN, 2023 | 11:02 AM யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை 16 ஆம் திகதி திங்கட்கிழமை அமைச்சரவை வழங்கியுள்ளது. இலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி, 2013 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலக செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளராக, மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராக கடமையாற்றி நிறைவாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார். https://www.virakesari.lk/arti…
-
- 0 replies
- 646 views
-
-
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்கின்ற தீர்வுக்கு இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்கும் என்பது சந்தேகம் -கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பேராசிரியர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் 13ஆம் திருத்தத்துக்கு அப்பால் சென்று, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்கின்ற தீர்வொன்றை வழங்குகின்ற விதத்தில் இந்தியா எந்தளவு அழுத்தங்களை பிரயோகிக்கும் என்பது கூட சந்தேகத்துக்கிடமான ஒன்றாகும்.ஏனெனில், 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா தெரிவிக்கின்றதே தவிர, அதற்கு அப்பால் செல்வது தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை என கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் 13…
-
- 0 replies
- 257 views
-
-
(எம்.நியூட்டன்) காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கலந்துரையாடலில் எமக்கு நம்பிக்கையில்லை இது தொடர்சியாக வெளிப்படுத்தப்படும் கருத்தாகவே இது உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுபணத்தை செலுத்திய பின்னர் ஊடவியலாளர்களின் கேள்விக்கு பதலளிக்கையிலே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , எந்த காலப்பகுதிக்குள் எங்கே எந்த இடங்களில் உள்ள காணிகள் விடுவிக்கப்படும் என கூறவில்லை மாறாக 108 ஏக்கர் காணி உடனடியாக விடுவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. உடனடியாக விடுவிக்கப்படலாம் என நீண்டகாலமாகவே கூறிவருகிறார்கள் ஆனால் இன்னும் விடுவிக்கப்படவில்லை, இதன் காரணமாகவே யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற…
-
- 4 replies
- 840 views
-
-
தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்? இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தற்போதைய உப தலைவராக உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா பதவியில் இருந்து விலக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் நாளைய தினம் (சனிக்கிழமை) மட்டக்களப்பில் நடைபெறவுள்ள மத்திய குழு கூட்டத்தின் போது பதவி விலகலை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அடுத்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு உட்பட ஏனைய மாவட்டங்களில் இளைஞர் சமுதாயத்துடன் ஒன்றித்து செயற்பட கூடிய ஒரு இளம் சிரேஷ்ட உப தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் எதிர்பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆகவே தமிழ் …
-
- 148 replies
- 10.4k views
-
-
யாழ். மேயர் வேட்பாளராக வித்தியாதரன்! – தமிழரசு தீர்மானம் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனைக் களமிறக்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. எனவே, வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னர் ‘காலைக்கதிர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பொறுப்பிலிருந்து அவர் விலகவுள்ளார் எனத் தெரியவருகின்றது. உதயன்’, ‘சுடர்ஒளி’ பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியரான ந.வித்தியாதரன், சமூக விடுதலைக்காக – சமூக நீதிக்காக – தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக எழுத்தாயுதம் ஏந்திப் போராடியவர். ஊடகத்துறையில் கோலோச்சி நின்றவர். தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச மட்டத்திலும் நன்கறியப்பட்டவர்.…
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
(இராஜதுரை ஹஷான்) எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் நாடு குறுகிய காலத்திற்குள் பிளவுப்படும். 13 ஆவது திருத்தத்தை முழுமைப்படுத்தினால் பிரிவினைவாத கொள்கையுடைய அரசியல் தலைவர்களின் நோக்கம் நிறைவேறுமே தவிர,தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள உண்மை பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது. வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்க தீர்வு காண 1957 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சமூக ஏழ்மை ஒழிப்பு சட்டத்தை முழுமையாக செயற்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ரணி…
-
- 0 replies
- 504 views
-
-
இலங்கையர்களின் நலனுக்கே இந்தியா அதிமுக்கியத்துவம் வழங்குகிறது - இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் By NANTHINI 16 JAN, 2023 | 04:19 PM (நா.தனுஜா) 'அயலகத்துக்கு முதலிடம்' என்ற கொள்கையின் பிரகாரம், இலங்கை மக்களின் நலனுக்கு இந்திய அரசாங்கம் அதிக முக்கியத்துவம் வழங்குகிறது. கடந்த ஆண்டு இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 4 பில்லியன் டொலர் பெறுமதியான நிதி, பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகள் அதனையே வெளிப்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேகப், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் பொருட்டு இலங்கையிலுள்ள இந்திய கட்டமைப்புக்களுடன் ஒன்றிணைந்து பணிய…
-
- 0 replies
- 272 views
- 1 follower
-
-
இலங்கையின் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து செயற்படத் தயார் - சீன சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சர் சென் ஸோ By VISHNU 16 JAN, 2023 | 08:54 PM (ஆர்.ராம்) சீனா, இலங்கையின் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து செயற்படத்தயாராக இருப்பதாகவும் வளரும் நாடுகள் சீனாவுடன் ஒத்துழைப்பதன் மூலம் பாரிய நன்மைகளை அடையலாம் எனவும் சீன சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சரும் சீனக் கம்னியூஸக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சென் ஸோ தெரிவித்தார். சீன கம்னியூஸக் கட்சியின் 20ஆவது மாநாடு தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று இன்று (16) திங்கட்கிழமை ஷங்கிரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமஅதிதியாக கலந்…
-
- 0 replies
- 559 views
- 1 follower
-
-
கிட்டு உள்ளிட்ட 10 மாவீரர்களின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் By VISHNU 16 JAN, 2023 | 05:18 PM கே.குமணன் கிட்டு உட்பட அவரோடு சேர்ந்து இதே நாளில் வீரமரணம் அடைந்த மாவீரர்கள் 10 பேரினதும் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் (இன்று 16) இடம்பெற்றுள்ளது. தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கிட்டு உட்பட ஏனைய மாவீரர்களின் திருவுருவ படத்துக்கு சுடர் ஏற்றி மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். …
-
- 3 replies
- 755 views
- 1 follower
-