ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143335 topics in this forum
-
197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் ஜனாதிபதியால் வழங்கி வைப்பு!! யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மீள்குடியேறவுள்ள 197 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் தலா 38,000 ரூபாய் காசோலைகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, யுத்தத்தின் போது பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்ட வடக்கில் உள்ள காணிகளை பூர்வீக மக்களிடம் மீள ஒப்படைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பலருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் காசோலைகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது. …
-
- 1 reply
- 456 views
-
-
மீண்டும் பிரதமராகின்றார் மஹிந்த ராஜபக்ஷ ?? இரண்டு முறை ஜனாதிபதியும் மூன்று முறை பிரதமருமாகவும் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 77 வயதான அவர் மீண்டும் பிரதமராக வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வினவியபோது, கட்சி எடுக்கும் முடிவு இறுதியானது என கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக வருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியறுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டில் வன்முறை மோதல்கள் மற்றும் அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில், கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்திருந்தார். இதேவேளை இந்த வார தொ…
-
- 1 reply
- 493 views
-
-
'யாழ்ப்பாண கலாசார நிலையம்' ஜனாதிபதியினால் திறந்து வைப்பு 'யாழ்ப்பாண கலாசார நிலையம்' ஜனாதிபதியினால் திறந்து வைப்பு. "கலாசாரம் என்பது நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியின் பாலம்" "வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்ப சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்" - 'யாழ்ப்பாண கலாசார நிலையம்' திறப்பு விழாவில் ஜனாதிபதி நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் கலாசாரம் என்பனவே அரசாங்கத்தின் கொள்கை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக புதிய எதிர்பார்புடன் அனைத்து இனத்தவர்களும் சகோதரத்துவத்துடன் கைகோர்த்து செயற்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட…
-
- 1 reply
- 378 views
-
-
கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்தினால் அமைதியின்மை ஏற்படும் – சரத் வீரசேகர எச்சரிக்கை கடுமையான நிபந்தனைகளுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது என சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் முன்வைக்கும் கடுமையான நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் சமூக கட்டமைப்பில் அமைதியின்மை நிலவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆகவே வங்குரோத்து தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வங்குரோத்து நிலை ஏற்பட்டபோது சீனா, இந்தியா ஆகிய நாடுகள் வழங்க தீர்மானித்திருந்த நிதியுதவிகளை இடைநிறுத்தபட்டன என்றும் சுட்டிக்காட்ட…
-
- 1 reply
- 726 views
-
-
13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைவாகவே எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன - வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா Published By: Nanthini 12 Feb, 2023 | 11:43 AM (நமது நிருபர்) மறுமலர்ச்சியை நோக்கி வட மாகாணத்தில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, அவ்விதமான அனைத்துச் செயற்பாடுகளும் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படுவதாகவும் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (11) நடைபெற்ற இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட யாழ். கலாசார நிலைய கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவா…
-
- 0 replies
- 266 views
-
-
Published By: Digital Desk 5 11 Feb, 2023 | 04:19 PM யாழ்ப்பாணம் மாநகரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பொலிஸார் தடை ஏற்படுத்தினர். அதனையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் அடக்குமுறையைப் பயன்படுத்த பொலிஸார் தடை ஏற்படுத்தியதுடன் சிலரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக இன்று (11) …
-
- 3 replies
- 568 views
-
-
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அல்ல என்பதால் சமஷ்டி, அல்லது 13ஐ முழுமையாக செயல்படுத்தும் பொலிஸ், காணி அதிகாரம் வழங்குதல் போன்ற முயற்சிகளை கைவிட்டு நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுபற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில் ஏற்பட்ட அரகலய போராட்டம் என்பது நாட்டின் இனப்பிரச்சினையை தீர்க்கும்படியான போராட்டம் அல்ல. மாறாக கோட்டாபயவின் கர்வமிக்க, ஆலோசனையற்ற பிழையான ஆட்சி காரண…
-
- 8 replies
- 498 views
-
-
கற்பிட்டியில் கரையொதுங்கிய 14 பைலட் திமிங்கலங்கள் ! கடலோர நகரமான புத்தளம் கற்பிட்டியில் கரையொதிங்கிய 14 பைலட் திமிங்கலங்களைக் காப்பாற்றும் பாரிய மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இன்று (சனிக்கிழமை) அதிகாலை பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இதில் மூன்று திமிங்கலங்கள் இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எஞ்சிய 11 திமிங்கலங்களை மீட்பதற்கான முயற்சிகள் இலங்கை கடற்படை, பொலிஸார் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2023/1323884
-
- 2 replies
- 582 views
-
-
(எம்.மனோசித்ரா) சுதந்திர தினத்தை பிரம்மாண்டமாக கொண்டாடி எமது நாடு சிறப்பாகவுள்ளதாக வெளிநாட்டு தூதுவர்களிடமும், இராஜதந்திரிகளிடமும் காண்பித்துக்கொண்டிருக்கும் அதேவேளை, மறுபுறம் சர்வதேசத்திடம் யாசகம் கேட்டு சென்றுகொண்டிருக்கின்றோம். கடந்த 75 ஆண்டுகளாக இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகளே இதற்கு காரணமாகும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது இலங்கை பாரிய நெருக்கடி மிக்க நாடாக காணப்படுகிறது. கடந்த 75 ஆண்டுகளாக இடம்பெற்ற ஊழல் மோசடிகளால் இந்த நிலைமை ஏற்பட்டத…
-
- 3 replies
- 570 views
-
-
(இராஜதுரை ஹஷான்) சர்வதேச நாணய நிதியத்தின் பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது.கடுமையான நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் சமூக கட்டமைப்பில் அமைதியின்மை நிலவுவதுடன்,அரசியல் நெருக்கடி தீவிரமடையும். வங்குரோத்து தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கம் எடுத்த ஒருசில தீர்மானங்கள் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது.பொருளாதார பாதி…
-
- 2 replies
- 800 views
-
-
Feb, 2023 | 07:06 PM இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோரை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்தித்து கலந்துரையாடினார். குறித்த கலந்துரையடல் இன்று (பெப் 11) யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/147970
-
- 5 replies
- 826 views
-
-
பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று (11) தீர்வையற்ற கடை (Dutyfree) திறந்து வைக்கப்பட்டது. தீர்வையற்ற கடையினை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ பயணி ஒருவருடன் இணைந்து நாடா வெட்டி திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் வடபிராந்திய சுங்கத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் யாழ்ப்பாண பலாலி விமான நிலையத்தின் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். விரைவில் சென்னை- பலாலி இடையிலான விமான சேவை அதிகரிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திர சிறீ தெரிவித்தார். யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரி…
-
- 3 replies
- 705 views
-
-
இருக்கிற கடனையும், இனிப் பெறப்போகும் கடனையும் அடைக்கப் பத்து ஆண்டுகளுக்கு வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் - யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு! Published By: T. Saranya 11 Feb, 2023 | 10:09 AM வடக்கு மாகாணத்தில் அடுத்து வரும் பத்து ஆண்டுகளுக்கு விவசாயம், கடற்றொழில், சுற்றுலாத் துறைகளை மேம்படுத்துவதற்கும், நவீன தொழில் நுட்பத்தைப் பின்பற்றுவதற்கும் அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது. இன்று நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நிலையில் இருந்து நாங்கள் மீண்டெழ வேண்டுமென்றால் பத்து வருடத்துக்கான அபிவிருத்தித் திட்டம் அவசியமானதாகும் என்றும், நாங்கள் இது வரை பெற்ற கடன்களை மீளச் செலுத்த வேண்டியிருக்கிறத…
-
- 8 replies
- 459 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பு,அதிகார பகிர்வு தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை. சமஷ்டி தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து விட்டு தற்போது குட்டிக்கரணம் அடித்ததை போல் ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்கிறார். ஒற்றையாட்சிக்குள் அதிகார பகிர்வு என்பது சாத்தியமற்றது,சமஷ்டி முறைமையில் அர்த்தமுள்ள அதிகார பகிர்வை கோருகிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற ஜனாதிபதி முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகைய…
-
- 5 replies
- 728 views
-
-
Breaking news – இலங்கையின் சில பகுதிகளில் நிலநடுக்கம்! புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுதொடர்பான தகவலினை வெளியிட்டுள்ளது. இதனால் எந்த ஆபத்தும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1323770
-
- 22 replies
- 1.8k views
-
-
Feb, 2023 | 12:31 PM மஹவ முதல் ஓமந்தே வரையான ரயில் பாதையை புனரமைக்கும் திட்டத்துக்காக இறக்குமதி செய்யப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான இரும்புகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்களத்தின் நான்கு அதிகாரிகளின் சேவையை இடைநிறுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நடவடிக்கை எடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட நான்கு அதிகாரிகளும் திட்டத்தில் உயர் பதவியில் இருப்பவர்கள் என்றும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்களால் திருடப்பட்டதாக கூறப்படும் இரும்பின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். https:…
-
- 2 replies
- 470 views
-
-
வடக்கிற்கு புதிய பொருளாதார திட்டம்! நல்லிணக்கத்தின் ஊடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் பொருளாதார அபிவிருத்தியின் வேகம், மக்களின் மனப்பாங்கு மற்றும் அர்ப்பணிப்பிலேயே தங்கியுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். யுத்தத்திற்கு முன்னர் வடமாகாணம் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அந்த வலுவான பொருளாதாரத்தை வடக்கில் மீண்டும் ஏற்படுத்தத் தேவையான அபிவிருத்தி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். வடமாகாண பிரச்சினைகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று (10) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட…
-
- 2 replies
- 350 views
-
-
சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகம் முன்பாக பேரணி! யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக பேரணி ஆரம்பமாகியுள்ளது. தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையில் இந்த கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக இடம்பெறுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறித்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1323876
-
- 1 reply
- 325 views
-
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய சிந்தனையும், ஆற்றலும், தூய கரங்களும் கொண்ட இளையோர்களைக் கொண்ட தனது வேட்பாளர்களை வெற்றிபெறச்செய்யும் முயற்சிக்கு முழுமையான ஆதரவினை வழங்குமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மிகுந்த நிதி நெருக்கடியின் மத்தியில் அநாவசியமான செலவுகளைத் தவிர்த்து எதிர்வரும் தேர்தலை முற்றுமுழுதாக மக்களை நம்பி எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், சில அவசியமான செலவுகளை செய்வதற்கான நிதி உதவிகளை முடிந்தளவு செய்துதவுமாறு நிலத்திலும் புலத்திலும் உள்ள மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள…
-
- 11 replies
- 555 views
-
-
இந்திய இணையமைச்சர் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் மன்னாருக்கு விஜயம் Published By: Nanthini 11 Feb, 2023 | 11:01 AM இலங்கைக்கு கடந்த 9ஆம் திகதி வியாழக்கிழமை வருகை தந்திருந்த இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் கு.அண்ணாமலை ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை (10) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டத்துக்கு விஜயம் செய்தனர். மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு வருகை தந்த இணையமைச்சர் எல்.முருகன், கு.அண்ணாமலை ஆகியோருடன் யாழ்ப்பாண இந்திய உதவித் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் மற்றும் ஜெயபாஸ்கரும் கலந்துக…
-
- 0 replies
- 532 views
-
-
இலங்கையையும் அரவணைத்து இந்தியா முன்னேற்றிச் செல்லும் - இந்திய அமைச்சர் எல்.முருகன் Published By: T. Saranya 11 Feb, 2023 | 12:50 PM (எம்.மனோசித்ரா) அபிவிருத்திக் குறிக்கோளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் இலங்கையையும் அரவணைத்து இந்தியா முன்னேற்றிச் செல்லும். அயல் நாட்டுக்கு முதலிடம் கொள்கைக்கு அமைய உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட இரு நாடுகளுக்குமிடையிலான படகு சேவைகளை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய இணை அமைச்சர் கலாநிதி எல்.முருகன் தெரிவித்தார். இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்.கலாசார நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க…
-
- 0 replies
- 494 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) இந்தியாவின் கடும் அழுத்தத்தினால் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் இருக்க போட்ட முடிச்சுக்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவிழ்க்க முயற்சிக்கிறார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜே.ஆர். ஜயவர்தனவின் மருமகனா என்பதை அவரது குடும்பத்தினர் ஆராய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்ய தனியார் பிரேரணையை கொண்டு வர வேண்டிய தேவை கிடையாது. 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமை ஒன்றாக இயற்றப்பட்டதால் சட்ட சிக்கல் காணப்படுகிறது. ஆகவே அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு வெளயீட்டு சட்டமூலத்தை கொண்டு வந்…
-
- 2 replies
- 259 views
-
-
இலங்கைக்கு கடன்! IMF இன் புதிய அறிவிப்பு! இலங்கை, அதன் இருதரப்புக் கடனாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் நிவாரண உறுதிமொழியைப் பொறுத்தே, 2.9 பில்லியன் டொலர் கடனுதவிக்கான தமது ஒப்புதல் அமையும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இலங்கை, உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்து நிதியுதவி உத்தரவாதங்களைப் பெறுவதுடன், உள்நாட்டுச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். போதுமான உத்தரவாதங்கள் பெறப்பட்டு, மீதமுள்ள தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டவுடன், இலங்கைக்கான கடன் ஏற்பாட்டை, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு ஒப்புதலுக்காக முன்வைக்க முடியும் என்று அவர் குறிப்பிட…
-
- 2 replies
- 426 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி வேட்பாளராகி வெற்றிபெறுவதை இலக்காகக் கொண்டே வடக்கு, கிழக்கில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்துக்களை கூறுகின்றார். ஆனால் எந்த வகையிலும் அவ்வாறான அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கு தாம் இடமளிக்க மாட்டோம் என சுயாதீன உறுப்பினரான அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற ஜனாதிபதியின் அரச கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்அங்கு மேலும் கூறுகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகம் தொடர்பில் பல்வேறு விடயங்களை கதைக்கின்றார். நீங்கள் கண்ணாடிக்கு முன்னால் நின்று பாருங்…
-
- 1 reply
- 376 views
-
-
பள்ளிவாசலை விடுவிக்க கோரி போராட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு செயல்படுபவர்கள் இன்னும் சில தினங்களில் சஹரானுக்கு சிலை வைக்க வேண்டும் என்றும் கூறுவார்கள் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். சஹ்ரான் அவமான சின்னம் பள்ளிவாசலை இடித்து தரை மட்டமாக்க வேண்டும் என்று கூறியவர்கள் இன்று பள்ளிவாசலை விடுவிக்க கோரி போராட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு செயல்படுபவர்கள் இன்னும் சில தினங்களில் சஹ்ரானுக்கு சிலை வைக்க வேண்டும் என்றும் கூறுவார்கள் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். இன்று (பெப் 10) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், க…
-
- 1 reply
- 195 views
-