ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
வவுனியா - மன்னார் வீதியில் பயணிகள் பேரூந்து மீது படையினர் சூடு - ஒருவர் பலி, இருவர் படுகாயம் - பாண்டியன் Friday, 26 January 2007 10:25 வவுனியா - மன்னார் வீதியில் கண்டுவெட்டுவான் பகுதியில் வைத்து படையினர் மீது இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து அவ்வழியால் வந்த பயணிகள் பேரூந்து மீது படையினரால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேரூந்து மீதே படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். இதன்போது பயணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் இரு பயணிகள் படுகாயமடைந்துள்ளதாகவும் அத்தகவல் மேலும் தெரிவிக்கின்றது. இதேவேளை குறித்த பகுதியில் உள்ள காவல்துறை நில…
-
- 0 replies
- 747 views
-
-
[25 - January - 2007] [Font Size - A - A - A] வாழ்க்கைச் செலவு அதிகரிப்பையும் பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவதற்கான கொள்கைத்திட்டமொன்றை தயாரிப்பதற்கும் அதனை முன்னெடுப்பதற்குமான வழிவகைகளை உடனடியாக காணுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொருளாதாரக் கவுன்சில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றார். இவ்விடயத்தில் தீவிர ஈடுபாடு காட்ட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தி இருக்கின்றார். பொருளாதார நெருக்கடிமிக்க இன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதியின் இக்கருத்துக்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், ஜனாதிபதியின் இந்த முயற்சி வெற்றியளிக்கக் கூடியதாக அமையுமா என்பதையிட்டு சற்றுச் சிந்திக்க வேண்டியுள்ளது. அதிகாரிகளை அழைத்து வட்ட மேசை மகாநாடுகளை நடத்தி ஆராய்வதாலோ, திட்டங்கள் வகு…
-
- 0 replies
- 905 views
-
-
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு எதிராக பிக்குமார் நேற்று பேரணி, ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு. யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு அடுத்த மாதம் 22ஆம் திகதியுடன் ஐந்து வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் அந்த ஒப்பந்தத்தை அரசு உடனடி யாகக் கிழித்தெறிய வேண்டும் எனக்கோரி தேசிய பிக்குகள் முன்னணியினர் நேற்று கொழும்பில் பாதயாத்திரை ஒன்றை நடத்தினர், ஜனாதிபதி செயலகத்தில் மகஜர் ஒன் றையும் கையளித்தனர். தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவர் வண. தம்பர அமில தேரரின் தலைமையிலான இந்தப் பாதயாத்திரை பிற்பகல் இரண்டு மணிக்கு புறக்கோட்டை போதி மரத்தடிச் சந்தியில் ஆரம்பமாகி ஒல்கோட் மாவத்தையின் ஊடாக ஜனாதிபதிச் செய லகம் நோக்கிச் சென்றது. இருப்பினும் இவர்களை ஜனாதிபதி செயலகம் வரை செல்லவிடாது ப…
-
- 1 reply
- 873 views
-
-
விடுதலைப் புலிகளின் ஆயுத தளபாடங்களை அழித்தொழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது: கோத்தபாய. விடுதலைப் புலிகளின் கோட்டையான வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள அவர் களின் இராணுவ உடைமைகள் ஆயுத தள பாடங்கள் அழித்து ஒழிக்கப்படும். அவற்றை விட்டுவைத்தால் போர் இன்னும் பல வருடங்களுக்கு நீண்டு செல்லும். இவ்வாறு கடும் தொனியில் கூறியிருக்கிறார் பாதுகாப்பு அமைச்சின் செயலாள ரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ. விடுதலைப் புலிகளின் இராணுவ உடைமைகள் அவை எங்கிருந்தாலும் வடக்கில் என்ன, கிழக்கில் என்ன தெற்கில் என்ன நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவற்றை நாம் அழித்தே தீருவோம் கடற் புலிகளின் தளங்கள் இருக்கும் வரை, அவர்களிடம் ஆட்லறி தளங்கள் இருக்கும் வரை, விடுதலைப் புலிகள் எங்கு அழி…
-
- 1 reply
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகளை முறியடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் வாகரைப் படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பின் அது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த நடவடிக்கை மூலம் சனாதிபதி அரசியல் இலாபம் தேட முயன்றால் அது மிகவும் கண்டனத்திற்குரியதென்ற ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் கூற்றுக்கள் அரசியலில் அவர் இன்னமும் கற்றுக்குட்டி என்பதையே காட்டுகின்றது. 1971, 1988, 1989 காலப்பகுதியில் ஆயுதக்கிளர்ச்சிகளை நடத்தித் தமது கற்றுக்குட்டித்தனத்தால் தோல்வி கண்ட ஜே.வி.பி.யினர் அரசியலில் இன்னமும் அதே நிலையிலேயே உள்ளனர் என்பதையே ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் இக்கூற்றுக்கள் வெளிப்படுத்துபவையாகவுள்ளன. அவ்வாறு இல்லாதுவிடில் இராணுவ நடவடிக்கைகளை மகிந்த ராஜபக்ச அரசியல் அனுகூலத்திற்காகப…
-
- 0 replies
- 2k views
-
-
யாழ் நாவலர் வீதி பகுதியில் ஒரே இரவில் 8 வீடுகளில் ஆயுததாரிகள் கொள்ளை. யாழ்ப்பாணம் நாவலர் வீதிப்பகுதியில் ஒரே இரவில் 8 வீடுகளுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள், பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டுள்ளனர். நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு 3 மணிநேரத்துக்குள் 8 வீடுகளிலும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இரவு 8 மணியளவில் கைத்துப்பாக்கிகள், வாள்கள், கத்திகள் சகிதம் வீட்டு வளவுகளுக்குள் புகுந்த கோஷ்டியொன்று தாங்கள் இராணுவத்தினர் என்றும் சோதனையிட அனுமதிக்குமாறும் கோரியுள்ளனர். எனினும் வீட்டு உரிமையாளர்கள் கதவுகளை திறப்பதற்கு மறுப்புதெரிவித்துளளனர். -Tamilwin-
-
- 0 replies
- 597 views
-
-
யாழில் கடத்தப்பட்டவர் சடலமாக மீட்பு. நேற்று வியாழக்கிழமை காலை கோப்பாய் காவல்துறையினரால் புதன்கிழமை இணுவில் கிழக்கு பகுதியில் இனம்தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். குடும்பஸ்தரான இவர் வலிகாம் இணுவில் கிழக்கு இணுவில் அம்மன் கோவிலைச்சேர்ந்தவர் எனவும் இவரது உடலம் உரும்பிராய் கோவில் பகுதியில் கடத்தப்பட்ட பகுதியில் இருந்து 4 கிலோமீற்றர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடத்தி கொல்லப்பட்டவர் 32 அகவையுடைய நாகேந்திரம் ஆறுமுகதாசன் எனவும் இவர் உந்துருளி தரகர் வேலை செய்பவர் எனவும் அறியப்பட்டுள்ளது. இவரது உடலத்தை அவரது மனைவி இனம் காட்டியுள்ளதாகவும் அவர் திருமணமாகி ஒரு வருடமே பூர்த்தியாகியுள்ளதாகவும் குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் க…
-
- 0 replies
- 757 views
-
-
யாழில் ஒட்டுக்குழு முறியடிப்புப் பிரிவு துண்டுப் பிரசுரம். யாழ். குடாநாட்டில் ஒட்டுக்குழு முறியடிப்புப் பிரிவு துண்டுப் பிரசுரம் ஒன்றை இன்று வியாழக்கிழமை வெளியிட்டிருக்கின்றது. இத்துண்டுப் பிரசுரத்தில் யாழ்ப்பாணத்தில் ஒட்டுக்குழுக்கள் மற்றும் இராணுவப் புலனாய்வாளர்களுடன் இணைந்து இயங்குபவர்களுக்கு இறுதி எச்சரிக்கை பகிரங்கமாக விடுக்கப்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் கூடும் இடங்களில் துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளதுடன் அரச திணைக்களங்கள், பாடசாலைகள் மற்றும் பொது அமைப்புக்களுக்கும் ஒட்டுக்குழு முறியடிப்புப் பிரிவினர் துண்டுப் பிரசுரம் அனுப்பியிருக்கின்றனர். துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அன்பார்ந்த யாழ். குடாநாட்டு மக்களே!!! "மல…
-
- 4 replies
- 1.8k views
-
-
கிழக்கு முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள் கொழும்பில் கருணா குழுவுடன் பேச்சு கிழக்கில் அண்மைக் காலமாக இடம் பெற்ற தமிழ் முஸ்லிம்களுக்கு இடையி லான அசம்பாவிதங்களை அடுத்து அங்கு நிரந்தர நல்லுறவைக் கட்டியெழுப்பும் நோக்கில் 52 நிறுவனங்களின் கூட்டமைப் பான முஸ்லிம் கவுன்ஸில் கடந்த திங்கட் கிழமை கருணா அணியினரைச் சந்தித்துப் பேசியுள்ளது இச்சந்திப்பு திங்கட்கிழமை கொழும்பில் உள்ள கருணா அணியினரின் அலுவல கத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது தமிழ் முஸ்லிம் உறவைக் கட்டியெழுப்பும் நோக்கில் இரு தரப்பினராலும் எட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முஸ்லிம் கவுன்ஸிலின் சார்பில் அதன் தலைவர் என்.எம். அமீன், பொதுச் செய லாளர் எம்.டிஎம். ரிஷ்வி, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. ம…
-
- 3 replies
- 1.2k views
-
-
புலிகளின் இராணுவத் தளங்கள் அழித்து ஒழிக்கப்படும் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தேவைகளுக்கான சொத்துகள்,தளபாடங்கள் உட்பட புலிகளின் அனைத்து விதமான இராணுவக் கட்டமைப்புகளும் அழித்தொழிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கில் உள்ள புலிகளின் இராணுவ சொத்துகள் உட்பட கடற்புலித் தளங்களாகட்டும் ஆட்டிலறி தளங்களாகட்டும் அவை நாட்டின் வடக்கோ கிழக்கோ தெற்கோ எங்கிருப்பினும் முற்றாக அழிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளதுடன் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறும் தனித் தமிழீழம் என்பது இப்பொழுது ஒரு நகைச்சுவையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
-
- 0 replies
- 795 views
-
-
மன்னார் தாளுப்பாடு கடற்பரப்பில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் விடுதலைப்புலிகள் கடற்படையினரின் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இரு படகுகளில் வந்த விடுதலை புலிகள் தாளுப்பாடு கடற் படை முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கடற் படையினர் இத் தாக்குதலிற்கு பதில் தாக்குதல் நடத்தி முறியடித்துள்ளதாகவும் இதில் ஒரு கடற்படை வீரர் காயமடைந்துள்ளதாகவும் ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
-
- 0 replies
- 815 views
-
-
நேற்று மாலை 5.30 மணியளவில் ஜானகபுரத்திற்கும் கொக்குதொடுவாயிற்கும் இடைப்பட்ட காட்டுப்புறத்தில் இடம்பெற்ற துப்பாக்கி மோதலில் ஒருசிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடகமையம் தெரிவித்துள்ளது மணலாற்றுக்கும் திருகோணமலை வடக்கிற்கும் இடைப்பட்ட கரையோரப்பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் வேலை தொடங்கி விட்டதுபோலுள்ளது.
-
- 0 replies
- 785 views
-
-
குடாநாட்டு பாடசாலைகளை புறக்கணிக்க முடிவு: தமிழ் மாணவர் ஒன்றியம் அறிவிப்பு. கடத்தப்பட்ட வடமராட்சி மாணவர்களின் விடுதலையினை வலியுறுத்தி யாழ். குடாநாட்டு பாடசாலைகள் அனைத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் மாணவர்கள் குதிக்கும் நிலை தோன்றியுள்ளதாக தமிழ் மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. கடத்தப்பட்ட க.லதீஸ்வரன் உள்ளிட்ட வடமராட்சி பாடசாலை மாணவர்களான ப.தனஞ்சயன், மு.பரமானந்தம் ஆகியோரை விடுவிக்கக் கோரி வடமராட்சி மாணவர்கள் இவ்வாரம் பாடசாலை செல்லாது புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நடவடிக்கைக்கு மதிப்பளித்து சாதகமான சமிக்ஞையினை படைத்தரப்பினர் தெரிவிக்காதததால் அடுத்த வாரம் முதல் யாழ். குடாநாட்டு மாணவர்கள் தங்கள் பாடசாலை செயற்பாடுகளை முற்றாக நிறுத்தி கடத்தப்பட்ட ச…
-
- 2 replies
- 981 views
-
-
மஹிந்தவின் இறுதிப்போரை எதிர்கொள்ளும் விடுதலைப் புலிகள் -சி.இதயச்சந்திரன்- எவராலும் இலகுவில் அனுமானிக்க முடியாததொரு புதிய பரிமாண வடிவத்தை வெளித்தள்ளப்போகிறது நடைபெறவிருக்கும் இறுதி யுத்தம். எதிரியின் சமகால போரியல் உத்திகளை கூர்ந்து அவதானிக்குமொருவர், முன்னைய கால விடுதலைப் புலிகளின் போர்த் தந்திரங்களை முறியடிக்கும் தந்திர உபாயங்களை அரசு தற்போது பிரயோகிப்பதை உணர்ந்து கொள்வார். இருப்பினும் இனிவரும் யுத்த களத்தில் புலிகளால் மேற்கொள்ளப்படும் மரபு கெரில்லா போர் வழிமுறைகளைக் கற்று, அடுத்ததொரு யுத்தத்தினை எதிர்கொள்ள வேண்டிய அவசியமும் அரசுக்கு ஏற்படச் சாத்தியமில்லை. ஆயினும் வடக்கை இழந்தாலும், கிழக்கையாவது தக்க வைக்கும் கடைநிலை முடிவினை தமது மூல உபாயத்தில்…
-
- 15 replies
- 4.8k views
-
-
கிழக்கு மாகாணத்தில் தொப்பிகல வரையிலான பகுதிகளைக் கைப்பற்றும் வரை இராணுவ நடவடிக்கை தொடரும் என்று கிழக்கு மாகாண இராணுவ கட்ட ளைத் தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புலிகளால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளில் 20 சதவீதமானவற்றைப் படை யினர் மீட்டுள்ளனர். மட்டக்களப்பு திருகோணமலை நெடுஞ்சாலை மீளத்திறக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்காளர் பதிவேடுகளின் அடிப்படை யிலேயே மக்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். வாகரைப் பகுதியில் புலிகளால் கைவிடப்பட்ட முகாம் ஒன்றில…
-
- 2 replies
- 1.5k views
-
-
இந்திய தூதுவருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிகள் சந்திப்பு. திருகோணமலையில் அனல்மின் நிலையம் அமைப்பதற்கான இடம் இன்னமும் தெரிவு செய்யப்படவில்லை. அந்த விடயத்தில் இந்தியா அவதானமாகவே செயற்படும் என இந்தியத்தூதுவர் அலோக் பிரசாத் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிகளிடம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் சில பிரதேசங்களில் இருந்து இடம் பெயர்ந்த தமிழ் மக்களை மிள குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளில் இந்தியா கவனம் செலுத்தும் என்றும் அவர் கூட்டமைப்பு எம்பிகளிடம் உறுதியளித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிகள் இந்திய தூதுவர் அலோக் பிரசாத்தை கொழும்பிலுள்ள அவர் அது உத்தியோகப்பூர்வ இல்லட்தில் இன்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கூட்ட…
-
- 0 replies
- 1k views
-
-
பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் யாழில்? பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் இருவர் நேற்று யாழ் குடாநாட்டிற்கு இரகசிய விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இவர்களுடன் கடற்படை உயர்மட்ட குழுவினரும் நேற்று குடா நாட்டிற்கு விஜயம் செய்துள்ளனர். இக்குழுவினர் உலங்குவானூர்தி மூலம் குடாநாட்டின் கரையோரப் பகுதிகளை பார்வையிட்டுள்ளனர். தொடர்ந்து இக் குழுவினர் நேற்றும் இன்றும் காங்கேசன்துறைமுக கடற்படை தளத்தில் கடற்படை உயர் அதிகாரிகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டனா. இச்சந்திப்பின் போது விடுதலைப் புலிகளால் நடாத்தப்படும் கரும்புலித் தாக்குதல்களை கடலில் எவ்வாறு முறியடிப்பது தொடர்பாக பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் சிறிலங்கா கடற்படையினருக்கு விளக்கப்பயிற்சிகளை வழங்கியதாக காங்கேசன்துறைமுக கடற…
-
- 2 replies
- 1.7k views
-
-
மாத்தளைப்பகுதியில் 5 தமிழ்பொதுமக்கள் மீது தாக்குதல் அரசாங்கத்திற்கு சொந்தமான பேரூந்தல் பயணித்த ஐந்து மலையக மக்களை கடந்த திங்கட்கிழமை மாலை மாத்தளை உடத்தனாவ பகுதயில் வைத்து சிங்கள் காடையர்கள் தாக்கியள்ளார்கள். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் அப்பகுதியில் வாகரை படைநடவடிக்கையின்போது இறந்த இராணவத்தினரது இறுதிநிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்ததாகவும் பேரூந்தை வழிமறித்த காடையர்கள் தமிழ் மக்களை பேரூந்தில் இருந்து இறங்கச்சொல்லிய பின் அவர்களை தடிகளாலும் பொல்லுகளாலும் தாக்கியுள்ளார்கள். இதேவேளை அதற்கு அண்மையில் சிறீலங்கா படையினர் காவல்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும். இதன்போது குறைந்தது இரு பெண் பயணிகளாவது தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என ஊட…
-
- 0 replies
- 766 views
-
-
தெகிவளையில் 11 தமிழ் இளைஞர்கள் கைது நேற்று இரவு மற்றும் வியாழக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சிறீலங்கா காவல்துறையினரால் 11 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்கள
-
- 0 replies
- 926 views
-
-
எம்முடன் காதல் உறவாடி, ரணிலுடன் தேன்நிலவுக்கு சென்றுள்ள அரசாங்கமே இன்று நாட்டிலுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பாராளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த கிண்டல் செய்தார். தங்காலை நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற `அரசு எங்கே செல்கிறது' என்ற தலைப்பின் கீழ் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: இன்று நாட்டில், நீலம், பச்சை கலந்த அரசாங்கமே வேரூன்றியிருக்கிறது. அதனால், இன்று ஆட்சியில் முற்போக்குச் சக்திகளுக்கு இடமேயில்லை. இப்போதுள்ள நிலை மிகப் பயங்கரமானது. ஜே.வி.பி.யும், ஸ்ரீ.ல.சு.கட்சியும் அரசுடன் இணையவிருப்பதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மை அது அல்ல. இந்த அரசைப் பதவிக்குக் கொண்டு வர ஜே.வி.பி. திய…
-
- 1 reply
- 2.3k views
-
-
லிவர் பூல் கப்பலை தற்;போதைக்கு திருத்த முடியாது - நிபுணர்குழு தெரிவிப்பு. - பண்டார வன்னியன் Thursday, 25 January 2007 12:20 அண்மையில் சிறிலங்கா படையினருக்கான வழங்கல் பொருட்களை ஏற்றிச் சென்ற லிவர் பூல் கப்பல் வல்வெட்டித்துறைக்கும் பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு உட்பட்டது. இத்தாக்குதலில் இவ் கப்பல் கடும்சேதத்திற்கு உள்;ளாகியமை படையினருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இக் கப்பலில் படையினருக்கான உபகரணங்கள் எடுத்து வந்துள்ளமை குறித்து பருத்தித்துறை துறைமுக வட்டாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. இக்கப்பலில் 690 மெற்றிக் தொண் மா, 200 மெற்றிக் தொண் படையினருக்கான பொருட்களும் எடுத்து வரப்பட்டுள்ளன. இதில் படையினருக…
-
- 1 reply
- 1.4k views
-
-
அம்பாறை மாவட்ட ஆதரவாளர் ஒன்றியம் ஹக்கீமிடம் வலியுறுத்தல் பதவி ஆசை கொண்டு அலையும் சுயநல நோக்கம் கொண்டவர்களுக்காக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை எவருக்கும் அடகு வைக்க முற்பட வேண்டாமென்று அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் ஒன்றியம் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் வலியுறுத்திக் கேட்டிருக்கின்றது. வெளிச்சக்திகளதும் உட்சக்திகளதும் சவால்களுக்கு உறுதியுடன் நின்று தலைமைத்துவம் முகம் கொடுக்குமாறும் முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைமைத்துவத்தையும் பாதுகாக்க அதன் ஆதரவாளர்களைக் கூட்ட தயாராகவே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றியம் செவ்வாய்க்கிழமை தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவற்றைக் குறிப்பிட்டிருக…
-
- 0 replies
- 750 views
-
-
சிறுவர்களை படைக்கு சேர்ப்பதற்கு இராணுவம் உதவுவது குறித்து இலங்கை அரசாங்கம் அவசியம் விசாரணை நடத்த வேண்டும் அல்லது சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று நியூயோர்க்கை தளமாக கொண்டு செயற்படும் மனிதஉரிமைகள் அவதானிப்புக்குழு நேற்று புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது. விடுதலைப்புலிகள் சிறுவர்களை படைக்குப் பயன்படுத்துவதாக கண்டனம் தெரிவிக்கப்படும் அதேசமயம், சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பான குற்றப் பொறுப்பில் அரசாங்கத்திற்கு சம்பந்தமிருப்பதான குற்றச்சாட்டானது அரசின் பாசாங்குத்தனத்தைக் காட்டுவதாக உள்ளதாகவும் மனித உரிமை அவதானிப்புக் குழு சாடியுள்ளது. `காரணங்களை உருவாக்குவதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசின் மீதான குற்றப் பொறுப்பு குறித்து தீவிரமான ப…
-
- 0 replies
- 699 views
-
-
இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு நெருக்கடி: ஆதரவை வாபஸ் பெறுவதாக சிங்களர் கட்சி மிரட்டல் கொழும்பு,ஜன.25- இலங்கையில் அதிபர் ராஜபக்சே தலைமையில் ஆன சுதந்திரா கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சியான ரனில் விக்கரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து கட்சி தாவி வரும் சில எம்.பி.க் களுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்கவும் மந்திரி சபையை விரிவாக்கவும் அதிபர் ராஜபக்சே முடிவு செய்திருக்கிறார். இது ஆளும்சுதந்திரா கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அதிபர் சந்திரிகா, வெளியுறவுத் துறை மந்திரி மங்கள சமரவீரா ஆகியோர் தலைமையில் ஆளும் கட்சியினர் தனி கோஷ்டியாக செயல் படுகிறார்கள். இந்த எதிர்ப்பு கோஷ்டியில் 20 எம்.பிக்கள் உள்ளனர். ஆளும் கட்சி உடைய…
-
- 0 replies
- 934 views
-
-
சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு மத்திய வங்கியில் புதிய புலனாய்வு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது இந்த புலனாய்வு பிரிவு சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடுகள் அவர்களுக்கான நிதி பெறப்படும் முறை மற்றும் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றமை குறித்து ஆராயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த பிரிவு முதல் கட்டமாக 50 அரச சார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 685 views
-